12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
2.
‘நகரம் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
3.
4.
5.
'பிறகொரு நாள் கோடை' இடம்பெற்ற நூல் ___________.
நீர்வெளி
மழைக்குப் பிறகும் மழை
அய்யப்ப மாதவன் கவிதைகள்
நானென்பது வேறொருவன்
6.
வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு ?
செய்யாமல் செய்த உதவி
பயன் தூக்கார் செய்த உதவி
தினைத்துணை நன்றி
செய்ந்நன்றி
7.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
8.
மா மேயல் மறப்ப - இத்தொடரில் உள்ள 'மா' என்பதன் பொருள் ______________.
பெரிய
மாமரம்
யாவை
விலங்கு
9.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல் _______________.
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
10.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது _________________.
சூரிய ஒளிக்கதிர்
மழை மேகங்கள்.
மழைத்துளிகள்.
நீர்நிலைகள்.
11.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
12.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
13.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
14.
புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரிய மேலாளருக்குக் கடிதம் எழுதுக.
15.
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
16.
நால்வகைப் பொருத்தங்கள் யாவை ?
17.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை ?
18.
"நெடுநல்வாடை" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'வையகம்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
19.
'அன்பும்' எனத் தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
20.
1.
இனநிரை - இனம் + நிரை
(i) 'மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும்' என்னும் விதிப்படி, 'ம' கரமெய் (ம்) கெட்டது. ன(ன் + அ) உயிர் ஈறாய் நின்றது.
(ii) வருமொழி முதலில் மெல்லின 'ந'கரம் வந்ததால் இயல்பாய்ப் புணர்ந்தது. இன + நிரை - இனநிரை.
2.
(i) தொடர்மழை பெய்துகொண்டிருந்த மழைக்காலம் அது.
(ii) மேகங்களை விலக்கிக்கொண்டு சூரியன் தோன்றியது.
(iii) அதுவரை மழைமேகத்தால் மறைப்புண்டிருந்த சூரியக்கதிர்களின் வெண்ணிற ஒளி எங்கும் பரவியது.
(iv) மழையால் இருள் சூழப்பட்ட நகரம், பட்டை தீட்டப்பட்ட வைரம் போல 'வெள்ளை வெளேர்’ என்று பளிச்சென்றிருந்தது.
3.
(b)
4.
(d)
5.
(c)
அய்யப்ப மாதவன் கவிதைகள்
6.
(a)
செய்யாமல் செய்த உதவி
7.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
8.
(d)
விலங்கு
9.
(c)
தொல்காப்பியம்
10.
(c)
மழைத்துளிகள்.
11.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
- இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல்நிறை அணி.
அணி விளக்கம் : பெயரையோ வினையையோ ஒரு வரிசைப்பட நிறுத்தி, அவற்றோடு தொடர்புள்ளவற்றைப் பின்னர் அவ்வரிசைப்படக் கூறுவது, நிரல்நிறை அணி.
பொருத்தம் : இல்வாழ்க்கையில் அன்பிருந்தால் பண்பு ஆகும்; அறன், பயனாகும். குறளில் 'அன்பு, அறம்' ஆகியவற்றை முதலடியில் வரிசைப்படுத்தி, அவற்றிற்கு ஏற்ப அடுத்த அடியில் பண்பு, பயன் ஆகிய சொற்களை அதே வரிசைப்படி அமைத்ததால் இது நிரல்நிறை அணியாகும்.
12.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
13.
காரணம் கருதாமல் செய்த உதவி
ஒருவர் நமக்கு எந்த உதவியும் செய்யாதிருக்கையில், அவருக்கு நாம் உதவுவது 'செய்யாமல் செய்த உதவி' எனப்படுகிறது.
அப்படிப்பட்ட உதவியைச் செய்தவருக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் ஈடாகாது.
காலத்தினால் செய்த நன்றி
ஆபத்துக்காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாய் இருக்கலாம்.
ஆனால், உரிய காலத்தில் செய்யப்பட்ட அந்த உதவியின் பயனை உணர்ந்தவர்கள் அஃது உலகத்தைவிடப் பெரிது எனப் போற்றுவர்.
பயன் தூக்கார் செய்த உதவி
ஒருவருக்கு உதவி செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பாராது உதவி செய்ய வேண்டும். அத்தகைய உதவியை ஆராய்ந்து பார்த்தால், அது கடலைவிடப் பெரியது ஆகும்.
பனைத்துணையாய்க் கொள்பவர்
ஒருவர் செய்த சிறிய உதவியைப் பெரியோர் பெரிதாய்க் கருதுவர்.
இதனையே வள்ளுவர், தினையளவான சிறிய உதவியைப் பனையளவாய்க் கருதுவர் என்றார்.
நல்லதைக் கொள்; அல்லாததை விடு !
ஒருவர் செய்த நன்றியை என்றுமே மறத்தல் கூடாது.
ஒருவர் செய்த தீமையை அன்றே மறத்தல் வேண்டும்.
செய்ந்நன்றி கொன்றவர்க்கு உய்வில்லை!
எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் அந்தப் பாவத்திலிருந்து நீங்க வழியுண்டு.
ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அப்பாவத்திலிருந்து நீங்க வழியில்லை.
14.
அனுப்புநர்
ந. மாரிமுத்து,
46, மீனாம்பிகை அடுக்குமாடிக் குடியிருப்பு,
மீனாட்சி நகர், முதல் தெரு,
பள்ளிக்கரணை,
சென்னை - 600 100.
பெறுநர்
தலைமைப் பொறியாளர்,
மின் வாரியம்,
பள்ளிக்கரணை,
சென்னை 600100.
பெருமதிப்பிற்குரியீர் !
வணக்கம்.
பொருள் : தெருவில் அறுந்து விழுந்த மின் இணைப்புகளைச் சரி செய்தல். அண்மையில் வீசிய கடும் புயலால் எங்கள் குடியிருப்புக்கு அருகில் மின் இணைப்புகள் அறுந்து விழுந்துள்ளன. அவற்றைக் கடக்க முயன்ற இரு நாய்கள் மின் தாக்கத்தால் இறந்துவிட்டன. இதனால் மக்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.
எனவே, தாங்கள் விரைந்து செயல்பட்டு, அறுந்த மின் இணைப்புகளைச் சரி செய்து மக்களைக் காத்திட வேண்டுகிறேன்.
பள்ளிக்கரணை,
சென்னை - 600 100,
30-11-2019.
இவண்
உண்மையுள்ள,
ந. மாரிமுத்து.
உறைமேல் முகவரி
தலைமைப் பொறியாளர்,
மின் வாரியம்,
பள்ளிக்கரணை,
சென்னை - 600 100.
15.
மழைக்கால வருணனை
பருவம் தவறாது பொழியும் மேகம், உலகம் குளிர்ச்சி அடையும்படி புது மழையினைப் பொழிந்தது.
மழைவெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலை உடைய கோவலர்கள் தம்முடைய எருதுகள், பசுக்கள், ஆடுகள் அனைத்தையும் மேட்டு நிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் பழகிய நிலத்தை விட்டு வந்ததற்கு வருந்தினர்.
அவர்கள் சூடியிருந்த காந்தள் மலர்களால் ஆன கண்ணியில் நீர்த்துளி வீழ்ந்து அலைத்தது.
குளிர் அவர்கள் உடலை வருத்தியது.
தீ மூட்டி, கையைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்து வெம்மை சேர்த்தனர்.
பற்கள் பறைபோல் கொட்ட, குளிரில் நடுங்கினர்.
விலங்குகள் மேய்தலை மறந்து ஒடுங்கின.
குரங்குகள் குளிரால் நடுங்கி வருந்தின.
மரத்தில் தங்கிய பறவைகள் நிலத்தில் விழுந்தன.
பசுக்கள், தம் கன்றுகள் பாலுண்ணுதலை விடும்படி உதைத்துத் தள்ளின.
அஃறிணையாகிய மலையினையும் குளிரச்செய்தது.
இவ்வாறு மழைக்கால வருணனையை நெடுநல்வாடை கூறுகிறது.
16.
எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று எழுவாயுடன் சேர்ந்து திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடையதாய் அமைகிறது.
17.
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன திணை, பால், எண், இடம்.
18.
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
19.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
20.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards