12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
2.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
3.
''மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
ஆ) பொதிகையில் தோன்றியது.
இ) வள்ளல்களைத் தந்தது.
க மட்டும் சரி
க, ஆ இரண்டும் சரி
இ மட்டும் சரி
க, இ இரண்டும் சரி
4.
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - இடம் கட்டிப் பொருள் விளக்கம் தருக.
5.
தாய்மொழிவழிக்கல்வியின் சிறப்புகள்.
எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் - இதனை வலியுறுத்தி பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
தாய்மொழிக் கல்வியின் தேவை - தாய்மொழிச் சிந்தனை - அறிஞர்களின் பார்வை கற்கும் திறன் பயன் - இன்றைய நிலை.
6.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.
- மொழி வரலாறு (மு. வரதராசனார்)
7.
பாரதியின் கடிதம் வாயிலாய் நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
8.
Archive
9.
If you want people to understand you, speak their language.
10.
இலக்கிய நயம் பாராட்டுக.
(மையக்கருத்துடன் ஏற்புடைய நயங்களை எழுதுக)
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக்கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள் கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
11.
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக
கிணற்றுத்தவளை போல
12.
கீழ்க்காணும் செயல்பாடுகளைச் சரி/தவறு எனப் பிரித்து, சரியெனில் காரணமும், தவறு எனில் மாற்றுவதற்குரிய செயலையும் குறிப்பிடுக.
13.
"செம்பரிதி".... எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சர்ப்பயாகம் ஈ) சூரிய நிழல்
1.
(c)
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
2.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
3.
(d)
க, இ இரண்டும் சரி
4.
இடம் : ‘ஓங்கலிடை' எனத் தொடங்கும் தண்டியலங்கார மேற்கோள் பாடலில் இடம் பெற்ற அடி இது.
பொருள் : சூரியனும் தமிழும், கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திலுள்ள இருளைப் போக்கும் தன்மை வாய்ந்தன.
விளக்கம் : சூரியன் உதயமாகி, மலையில் தோன்றி, உலகிலுள்ள புறஇருளைப் போக்குகிறது.
பொதியமலையில் தோன்றிய தமிழ், மக்களின் அகத்தில் உள்ள அறியாமை இருளைப் போக்குகின்றது.
5.
முன்னுரை : நாடோடிகளாய் வாழ்ந்த மக்கள், பின்பு ஓர் இடத்தில் சமுதாயமாய் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்தில் தோன்றியது, மொழி. மக்கள் சமயம், குலம், தொழில் முதலியவற்றால் வேறுபட்டாலும் பேசும் மொழியால் ஒன்றுபடுகின்றனர்.
தாய்மொழியின் தனிச்சிறப்பு : குழந்தை தன் தாயின் கருவில் இருக்கும் போதே, அவள் வழியாய்த் தன் ஊனிலும் உயிரிலும் உள்ளத்திலும் மொழியினைப் பெற்றுக்கொள்கிறது. ஆதலால், இது குழந்தையின் தாய்மொழி எனப்படுகிறது.
அறிவுக்கண் கொடுக்கும் ஆசான் : தாயே குழந்தைக்கு முதல் ஆசிரியர். தாயிடம் மழலை பேசும் குழந்தை பள்ளிக்கூடத்தில் மொழியின் ஒலி, வரி வடிவங்களைக் கற்கின்றது. கல்வியுடன் மெய்யறிவு பெறுவதற்கும் உரிய மொழி, தாய்மொழி.
சிந்தனை, மொழி இரட்டைக் குழந்தைகள் : சிந்தனையையும் அதனை வெளிப்படுத்தும் மொழியையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க இயலாது. சிந்தனையும் மொழியும் ஒருங்கே வளர்க்கப்பட வேண்டும். அதுவே மொழி வளர்ச்சிக்கு வழியாகும்.
உயர்தனிச் செம்மொழியே நம் தாய்மொழி! : தன் நாட்டின்கண் வழங்கும் பல மொழிகளுக்குத் தலைமை சான்ற உயர்மொழி; தனித்து இயங்கும் வல்லமை பெற்ற தனிமொழி; திருந்திய பண்பும் சிறந்த நாகரிகமும் பொருந்திய செம்மொழி, தமிழ். இதுவே நமது தாய்மொழி!
அறிவு வாயிலை அகலமாய்த் திறக்கும் ! : மொழியறிவு வளர வளர, இலக்கியச்சுவையுணர் ஆற்றலும், திறனாயும் பாங்கும் உண்டாகும்; இலக்கியப்பற்று, மொழிப்பற்று ஆகியவை உண்டாகும். கல்விக் கழகங்களை விட்டு நீங்கிய பிறகும் வாசிப்புத் தொடரும்.
அந்நியர் அகன்றனர்; அந்நிய மொழி தொடர்கிறது : நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம் அலுவலகப்பணியில் சேர ஆங்கிலம் கற்றனர். ஆங்கிலத்தை ஒரு பாடமாய்க் கற்றுத் தேர்ச்சி பெறுவது தவறன்று. அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்கும் மோகம் இன்று பெருகிவிட்டது. ஒரு மொழியைக் கற்பது தவறன்று; அதற்கு அடிமை ஆவதே அவலம்.
தாய்மொழிக்கல்வி பற்றிக் காந்தியடிகளின் கருத்து : தேசத்தந்தை காந்தியடிகள், “இந்திய மக்களுள் சிலர் தாய்மொழியை மறந்தனர். ஆங்கிலப்படிப்பின்மீது நமக்கு மோகம் ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலக் கல்வியால் நாம் ஆண்மை இழந்துவிட்டோம்; அறிவும் குன்றிவிட்டது; பேடிகளாகிவிட்டோம்” என்று வருத்தப்படுகிறார்.
தாய்மொழியால் முடியும் : ஆங்கிலேயரிடமிருந்து நாடு விடுதலை பெற்றது. ஆனால், ஆங்கில மொழியிடம் இருந்து சிலர் விடுதலை பெறவில்லை. கருத்தை வெளிப்படுத்த உதவும் தாய்மொழி, கல்வி கற்கவும் உதவும். அனைத்து வகையான பாடங்களையும் தாய்மொழியான தமிழ்மொழியில் கற்க இயலும்.
முடிவுரை : தமிழ்ப்பற்று மிக்கோர் அனைவரும் ஒன்றுபடுவோம்! அனைத்துக் கல்வித்துறையிலும் தமிழ்வழிக் கல்வியை நிறுவுவோம்! அன்னைத்தமிழ், பன்முகச்சிறப்புப் பெறட்டும்! தமிழ் அன்னை உயர்புகழ் பெற உழைப்போம்!.
6.
1. எது அரியதொரு கலை?
2. மொழி எத்தகைய அரிய கருவியாய் உள்ளது?
3. தாயின் வேட்கை, அவள் கொள்ளும் மகிழ்ச்சி ஆகியன குறித்து எழுதுக.
4. மன வளர்ச்சி, மொழி வளர்ச்சி ஆகியவை பற்றி ஆசிரியர் குறிப்பிடுவன யாவை?
5. மக்கள், மொழி ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவு நிலைபற்றிக் குறிப்பிடுக.
7.
முன்னுரை : புலவர்கள் இலக்கியங்களைப் படைத்து, அரசர்கள், வள்ளல்கள் ஆகியோரிடம் சென்று பாடிப் பொருள் பெற்று வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஒரு திருப்புமுனையாய்த் தோன்றியவர், பாரதி. ‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல்' என்னும் கொள்கையோடு வாழ்ந்தவர். அந்நியருக்கு எதிராக விடுதலை உணர்வூட்டும் பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார் பாரதி. அவன் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் வாயிலாய் அவரின் மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை அறிவோம்.
மொழிப்பற்று : "தமிழ்! தமிழ்! தமிழ்! என்று எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாய்க் கொள்க!” என்று கடிதத்தில் எழுதினார்.
பிற மொழிகளான இந்தி, மராட்டி போன்றவற்றையும் அறிவது நல்லது என்கிறார் காரணம், பிற மொழி பத்திரிகைகள் மூலம் புதுமைகளை அறியலாம் என்கிறார்.
அத்தகைய புதுமைகளைத் தமிழ்ப்பத்திரிகையில் சேர்க்கும்போது, தமிழில் புதுமை ஏறிக்கொண்டே போகும்.
கண்கள் இருந்தும் கற்க இயலாத அறியாமை மிக்க மக்களின் இழிநிலை போக்க விரும்பினார்.
"தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப்பள்ளிகள் மலிக; அங்கு நவீனக் கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க” என்று கடிதத்தில் குறிப்பிடுகிறார், பாரதி.
இசை, சிற்பம் ஆகியன தொடர்பான நூல்களும், இயற்கை, பூமி, வானம் ஆகியவைபற்றிய நூல்களும் மேலும் பலதுறை நூல்களும் தமிழில் தோன்றித் தமிழ்நாடெங்கும் மலிந்திட வேண்டும் என்கிறார், பாரதி.
சமூகப்பற்று : அன்றைய நாளில் ஆண்கள் பெண்களை அடிமைகளாய்க் கருதிச் செயல்பட்டனர். அதனைக் கண்டு கொதித்தார், பாரதி.
கடிதத்தில் பாரதி, “ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரு தலைகள். அவை ஒன்றிலொன்று தாழ்வு இல்லை. பெண்ணைத் தாழ்மை செய்தவன் கண்ணைக் குத்திக்கொண்டவன்” என்றார்.
அந்நியர் ஆட்சியில், தமிழ் மக்களிடையே அறியாமையும் அச்சமும் மேலோங்கி இருந்தன.
இதனைப் பாரதி, "நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக்கொண்டு பிழைத்திட முயற்சி பண்ணும் மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி” என்றார்.
முடிவுரை : பாரதியின் கடிதம் வாயிலாக அவரின் மொழிப்பற்று, சமூகப்பற்று விளங்குகிறது. எல்லாத் துறைகளிலும் தமிழன் சிறந்து விளங்கி, வையத்தலைமை கொள்ளும் மாண்பினைப் பெற வேண்டும் என்கிறார், பாரதி.
8.
காப்பகம்
9.
மக்கள் உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நீ, அவர்கள் மொழியில் பேச வேண்டும்.
10.
'கவியரசர்' என்று புகழ் பெற்றவர் கண்ணதாசன் அவர்கள். இவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசைப் பாடல்களை எழுதியவர். அரசவைக் கவிஞராய்ப் போற்றப்பட்டவர். இவர் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர்.
திரண்ட கருத்து
தலைவியாய் விளங்கும் தமிழரசியே! பாண்டியர்களைக் கொண்டு முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் மூன்று தமிழ்ச்சங்கங்கள் மதுரையில் அமைந்திடச் செய்தாய். அச்சங்கங்களில் அறிவிலும் வயதிலும் முதிர்ச்சி பெற்ற புலவர் பல நூறு பேரைப் பங்கு கொள்ளச் செய்தாய். அவர்களைக் கொண்டு, அளவற்ற பலவித உட்பொருள்களைக்கொண்டு இனிமை துலங்கிடும் கவிதைகளைப் படைத்திடுமாறு செய்தவளே! வாழ்க.
மையக்கருத்து
பாண்டியர்களைக்கொண்டு முச்சங்கங்கள் அமைக்கச் செய்து, பொருள்வளமும் சொல்நயமும் மிக்க பல நூறு பாடல்களைப் பல நூறு புலவர்களால் ஆக்கி அளித்திடச் செய்த தமிழரசி, வாழ்க!
தொடை நயம்
எதுகை : முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது, எதுகை.
முச்சங்கம், அச்சங்கம்
சொற்சங்க, அற்புதங்க - ‘ற்'
மோனை : முதல் எழுத்து ஒன்றி வருவது, மோனை.
முச்சங்கம், முதுபுலவர் - 'மு'
அச்சங்க, அளப்பரிய ‘அ’
சொற்சங்க, சுவைமிகுந்த - ‘சொ, சு’
அற்புதங்க, அமைத்த - 'அ'
இயைபுத்தொடை : அடிதொறும் ஈற்றுச்சீர் அல்லது ஈற்றசை அல்லது ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத்தொடை.
தமைக்கூட்டி, பொருள்கூட்டி, கவிகூட்டி, பெருமாட்டி - 'கூட்டி', 'ட்டி'.
சந்தம் : 'சந்தம்' என்பது இனிய இசை. இப்பாடலில் வல்லினமும் மெல்லினமும் இணைந்து ஓசை நயத்தைத் தருகின்றன.
அணி : தமிழின் பெருமையை உள்ளது உள்ளபடி கூறியதால், இயல்பு நவிற்சியணி.
11.
உலகத்தோடு ஒட்டி வாழாத சிலர், தாங்கள் உண்டு, தங்கள் குடும்பம் உண்டு எனக் கிணற்றுத்தவளை போல வாழ்கின்றனர்.
12.
| செயல்பாடு | சரி- காரணம் | தவறு - மாற்றம் |
| (எ-டு) : பொருள்களை எடுத்த இடத்தில் வைத்தல் |
பொருள்களைத் தேடாது எடுக்கலாம்; நேரம் வீணாகாது |
|
| பொது இடத்தில் எச்சில் துப்புதல். | தவறு. தூய்மை கெடும். கழிவுநீர் செல்லும் பாதையில் துப்ப வேண்டும் |
|
| வகுப்பில் காகிதங்களைக் கிழித்துப் போடுதல். |
தவறு. வகுப்பில் குப்பை சேரும். அதற்கான கூடையில் போட வேண்டும் |
|
| இருக்கை, மேசைகளில் கிறுக்குதல் |
தவறு. தாள்கள், கைகள், உடைகள் ஆகியவற்றில் ஒட்டும். கிறுக்குதல் கூடாது. |
13.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards