12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு
அறுப்பு, வரப்புகள்
அறுப்பு, வயிறுகள்
நொறுங்கல்கள், வாய்க்கால்
அறுப்பு, வாய்க்கால்
2.
___________ வேந்தன் சடாயு.
வானர்
கழுகு
மான்
வன
3.
‘பூமணி சிறுகதைகள்’ - என்னும் தொகுப்பில் உள்ள சிறுகதை _______________.
முதல்கல்
உரிமைத்தாகம்
அஞ்ஞாடி
கருவேலம்பூக்கள்
4.
இலங்கையை விட்டு வந்து இராமனிடம் அடைக்கலம் வேண்டியவன் _______________.
சுக்ரீவன்
குகன்
வீடணன்
சடாயு
5.
'கவிச்சக்கரவர்த்தி' என்று போற்றப்படுவர் _______________.
பூமணி
பக்தவத்சல பாரதி
நக்கீரர்
கம்பர்
6.
கம்பரது காலம் ____________.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
7.
கிட்கிந்தா காண்டத்தில் இராமனுடன் நட்பு கொள்பவன் _________________.
சடாயு
சபரி
வீடணன்
சுக்ரீவன்
8.
திவான் - ஈ - ஷம்ஸ் - ஈ - தப்ரீஸி என்ற புகழ்பெற்ற நூலைப் படைத்தவர் _______________.
பக்தவத்சல பாரதி
பூமணி
என். சத்தியமூர்த்தி
ஜலாலுத்தீன் ரூமி
9.
சீதையைச் சிறை எடுத்த இராவணனைத் தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் _______________.
வேடர் தலைவன் குகன்
எளிய முதியவள் சவரி
கிட்கிந்தை அரசன் சுக்ரீவன்
கழுகுவேந்தன் சடாயு
10.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது _______________.
தனிக்குடும்ப முறை
விரிந்த குடும்ப முறை
தாய்வழிச் சமூகமுறை
தந்தைவழிச் சமூக முறை
11.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை _________________.
அறவோர் துறவோர்
திருமணமும் குடும்பமும்
மன்றங்களும் அவைகளும்
நிதியமும் சுங்கமும்
12.
‘குடும்பம்’ என்னும் சொல் _______________ என்னும் நூலில் காணப்படுகிறது.
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
13.
மனித சமூகத்தின் அடிப்படை அலகு _______________.
ஆண்
பெண்
குடும்பம்
குலம்
14.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
15.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
16.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் எவ்வாறு ?
17.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
18.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
19.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) வருபவர் (ஆ)
20.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) நடத்து (ஆ)
21.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) நடத்து (ஆ)
22.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.
23.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
24.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக எழுதுக
சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
25.
பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடராக எழுதுக
மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
26.
Mini meals
27.
Checkout
1.
(b)
அறுப்பு, வயிறுகள்
2.
(b)
கழுகு
3.
(b)
உரிமைத்தாகம்
4.
(c)
வீடணன்
5.
(d)
கம்பர்
6.
(a)
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
7.
(d)
சுக்ரீவன்
8.
(d)
ஜலாலுத்தீன் ரூமி
9.
(d)
கழுகுவேந்தன் சடாயு
10.
(d)
தந்தைவழிச் சமூக முறை
11.
(b)
திருமணமும் குடும்பமும்
12.
(a)
திருக்குறள்
13.
(c)
குடும்பம்
14.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கே உரிமையுடையனவாயின.
15.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
16.
(i) பண்டைய விரிந்த குடும்பம், இன்றைய கூட்டுக் குடும்பம்.
(ii) சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.
(iii) கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் 'விரிந்த குடும்ப' முறையைக் காண இயலும்.
(iv) இன்று பெண்கள் திருமணத்திற்குப் பின், கணவனின் குடும்பத்தாருடன் வாழ்வதைக் காணலாம்.
(v) பொருளாதாரம், கல்வி, பணிநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் பெண்கள் உயர்ந்திருப்பினும் அவள், கணவன் குடும்பத்தினரைச் சார்ந்து வாழும் அமைப்பே இன்று காணப்படுகிறது.
(vi) கணவன் வீட்டில் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் வாழும் கூட்டுக் குடும்பநிலை, பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சி ஆகும்.
17.
(i) எதிர்பாராத நிகழ்வுகளான ஆனந்தம், மனச்சோர்வு, அனுபவம், விழிப்புணர்வு ஆகியன மனிதர்களிடத்தில் தோன்றி மறையும்.
(ii) இவற்றை விருந்தினர் இல்லத்திற்கு வரும் விருந்தாளிகளாய் உருவகம் செய்கின்றார், ஜலாலுத்தீன் ரூமி.
18.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
19.
(அ) வினையாலணையும் பெயர்
20.
(அ) வினையெச்சம்
21.
(அ) நடத்து - நட + த் + த் + உ
நட - பகுதி
த் - சந்தி
த் - இறந்த கால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
22.
மாணவர்கள் பெற்றோர்களைத் தம் நண்பர்களாய்ப் பாவித்து நட்புக்கொள்ள வேண்டும். தம் இன்பதுன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
23.
எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு, ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.
24.
சான்றோருக்கு மதிப்புக் கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.
25.
மாறனைப் பேச்சுத்திறனில் யார் வெல்ல முடியும் ?
26.
சிற்றுணவு
27.
வெளியேறுதல்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards