12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
புதுமைப்பித்தன்
பூமணி
உத்தமசோழன்
சுஜாதா
2.
கம்பராமாயணத்தை இயற்றியவர்
கம்பர்
சேக்கிழார்
ஒட்டக்கூத்தர்
அம்பிகாவதி
3.
பாறை உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்டவன் ___________.
இராமன்
இலக்குவன்
சுக்ரீவன்
குகன்
4.
வருபவர் எவராயினும் _______________ செலுத்து.
புதுவரவு
விருந்து
நன்றி
விழிப்புணர்வு
5.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை என். சத்தியமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ள தலைப்பு ___________________.
மஸ்னவி
கோல்மன் பார்க்ஸ்
தாகங் கொண்ட மீனொன்று
6.
ஜலாலுத்தீன் ரூமி ________________ நாட்டைச் சேர்ந்தவர்.
இந்தியா
அமெரிக்கா
எகிப்து
ஆப்கானிஸ்தான்
7.
‘துன்பு உளது எனின் அன்றோ, சுகம் உளது?' யார், யாரிடம் கூறியது?
குகன் இராமனிடம் கூறியது
பரதன் குகனிடம் கூறியது
இராமன் இலக்குவனிடம் கூறியது
இராமன், குகனிடம் கூறியது.
8.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
9.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது _______________.
தனிக்குடும்ப முறை
விரிந்த குடும்ப முறை
தாய்வழிச் சமூகமுறை
தந்தைவழிச் சமூக முறை
10.
கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ______________.
மணந்தகம்
பிறந்தகம்
வளர்ந்தகம்
புகுந்தகம்
11.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
12.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
13.
‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ?' என்ற இராமனின் கூற்று பின்வரும் பழமொழிகளுள் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும், ஆ) சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்
14.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
15.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
16.
குகனொடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினை விளக்கி எழுதுக.
17.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
18.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) வருபவர் (ஆ)
19.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
அ) விழிப்புணர்வு ஆ)
20.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) குவிந்து (ஆ)
21.
வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக.
என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறைமீதுதான்; அவர்கள் எல்லா
பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
22.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'துன்பு' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
1.
(b)
பூமணி
2.
(a)
கம்பர்
3.
(d)
குகன்
4.
(c)
நன்றி
5.
(d)
தாகங் கொண்ட மீனொன்று
6.
(d)
ஆப்கானிஸ்தான்
7.
(d)
இராமன், குகனிடம் கூறியது.
8.
(d)
இவை அனைத்தையும்.
9.
(d)
தந்தைவழிச் சமூக முறை
10.
(a)
மணந்தகம்
11.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கே உரிமையுடையனவாயின.
12.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
13.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
14.
(i) எதிர்பாராத நிகழ்வுகளான ஆனந்தம், மனச்சோர்வு, அனுபவம், விழிப்புணர்வு ஆகியன மனிதர்களிடத்தில் தோன்றி மறையும்.
(ii) இவற்றை விருந்தினர் இல்லத்திற்கு வரும் விருந்தாளிகளாய் உருவகம் செய்கின்றார், ஜலாலுத்தீன் ரூமி.
15.
(i) தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதால், கடனின்றி நிம்மதியாய் வாழ்கிறோம். இந்த நிலையில் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்.
(ii) வீட்டிற்குத் தேவையான பால், செய்தித்தாள் போன்றவற்றைக் காலையில் வாங்கி வருவேன்.
(iii) காய்கறிகளை அரிந்து கொடுத்துச் சமையலுக்கு உதவுவேன்.
(iv) அப்பா துவைத்துத் தரும் துணிகளை உலர்த்துவேன்.
(v) மாலையில் பெற்றோர் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் பாலை காய்ச்சிக் கொடுத்து, தின்பண்டங்கள் கொடுத்துத் தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன்.
(vi) உலர்ந்த துணிகளை மடித்து வைப்பேன்.
(vii) இவ்வாறு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.
16.
(i) இராமனுடன் பிறந்தவர்கள் பரதன், இலக்குவன், சத்துருக்கனன் ஆவர்.
(ii) சிற்றன்னையின் சூழ்ச்சியால் இராமன் காடு சென்றான்.
(iii) கங்கைக்கரையில் வேடர் குலத்தலைவன் குகன் இராமனைக் கண்டு வணங்கி, அன்பு செலுத்தினான்.
(iv) இராமன் அவனது அன்பைப் பாராட்டி, "உன்னைக் காண்பதற்குமுன் சகோதரர்கள் நாங்கள் நால்வராய் இருந்தோம்.
(v) "இனிமேல் நாம் ஐவரானோம்" என்று குகனிடம் கூறினான்.
(vi) சுக்கிரீவனைக் கண்டு, அவனின் பண்பு நலனைப் போற்றி அறுவரானோம் என்றான். இராமன்
(vii) அடுத்து இராவணனின் தம்பி வீடணனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு “"எழுவரானோம்''” என்றான், இராமன்.
17.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
18.
(அ) வினையாலணையும் பெயர்
19.
அ) விழிப்புணர்வு - விழிப்பு + உணர்வு
i) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்ற விதிப்படி.
'உ' நீங்கியது
பு = ப் + உ = விழிப் + ப் + உணர்வு
ii) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்ற விதிப்படி.
ப் + உ = 'பு' ஆனது
= விழிப்புணர்வு = என்று புணர்ந்தது.
20.
(அ) குவிந்து - குவி + த்(ந்) + த் + உ
குவி - பகுதி
த் - சந்தி, த் 'ந்' ஆனது விகாரம்
த் - இறந்த கால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி.
21.
என் நம்பிக்கை முழுவதுமே புதிய தலைமுறைமீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல் எதிர்கொண்டு தீர்ப்பார்கள்.
22.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும்
பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளம் ஒரு நால்வேம்
முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
ஐவர்கள் உளர் ஆனோம்*
குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை*
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards