12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை ?
2.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
3.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் எவ்வாறு ?
4.
'உரிமைத்தாகம்' என்னும் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் ............................ கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
5.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு ? விளக்குக.
6.
நிலையாமை குறித்துச் சவரி உரைக்கும் கருத்து யாது?
7.
‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது ?' என்ற இராமனின் கூற்று பின்வரும் பழமொழிகளுள் எதற்குப் பொருந்தும்?
அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும், ஆ) சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்
8.
எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
9.
தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?
10.
வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து - இடம். சுட்டிப் பொருள் விளக்குக.
11.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றுள் ஏற்புடைய தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?
12.
சலசல, வந்து வந்து, கலகல, விம்மிவிம்மி - இவற்றுள் இரட்டைக்கிளவித்தொடர்கள் எவை என எழுதி அவற்றைச் சொற்றொடரில் பயன்படுத்திக் காட்டுக.
13.
காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
14.
வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.
மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.
1.
சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்கே உரிமையுடையனவாயின.
2.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
3.
(i) பண்டைய விரிந்த குடும்பம், இன்றைய கூட்டுக் குடும்பம்.
(ii) சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.
(iii) கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் 'விரிந்த குடும்ப' முறையைக் காண இயலும்.
(iv) இன்று பெண்கள் திருமணத்திற்குப் பின், கணவனின் குடும்பத்தாருடன் வாழ்வதைக் காணலாம்.
(v) பொருளாதாரம், கல்வி, பணிநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் பெண்கள் உயர்ந்திருப்பினும் அவள், கணவன் குடும்பத்தினரைச் சார்ந்து வாழும் அமைப்பே இன்று காணப்படுகிறது.
(vi) கணவன் வீட்டில் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் வாழும் கூட்டுக் குடும்பநிலை, பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சி ஆகும்.
4.
பெற்றோர் போல் பேணி வளர்த்தனர் ; முத்தையன் தம்பி, வெள்ளைச்சாமி; அவன் இளமையிலேயே பெற்றோரை இழந்தான். எனினும், முத்தையனும் அவன் மனைவி மூக்கம்மாளும் வெள்ளைச்சாமியை அன்புடன் வளர்த்தனர்.
சொத்துப்பிரிவினை : முத்தையன் தன் தம்பி வெள்ளைச்சாமிக்குத் திருமணம் செய்து வைத்தான். வெள்ளைச்சாமி மனைவி தனிக்குடித்தனம் செல்லப் போர்க்கொடி தூக்கினாள். முத்தையன் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்தான். வெள்ளைச்சாமி மனைவி அடுத்துச் சொத்தைப் பிரிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினாள். முத்தையன், தந்தையின் நிலத்தில் பாதியையும், இரண்டு மாடுகளையும் தம்பிக்குக் கொடுத்தான்.
நிலத்தை இழந்தான், தம்பி : ஐந்து ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள், மேலத்தெரு வேலப்பன், முத்தையனைச் சந்தித்தான்; 'உன் தம்பி கந்துவட்டிக் கருப்பசாமிக்கு நிலத்தை எழுதிக் கொடுத்த விவரம் உனக்குத் தெரியுமா?” என்று அவன் கேட்டான்.
முத்தையனுக்குத் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. "ஐந்து வருடத்திற்கு முன் வாங்கிய 200 ரூபாய் கடன் இப்போது வட்டிக்கு மேல் வட்டியாய்க் குட்டி போட்டுப் பெருந்தொகை ஆனதால், தம்பியால் பணத்தைக் கொடுக்க முடியவில்லையாம். இப்போது நிலத்தைக் கருப்பசாமி எழுதி வாங்கிவிட்டானாம்" என்றான், வேலப்பன்.
செய்தி கேட்ட முத்தையனுக்குத் தலைசுற்றியது.
அண்ணனா கந்துவட்டிக்காரனா ? : முத்தையன் வெள்ளைச்சாமி வீட்டிற்குச் சென்றான். “கந்துவட்டிக்கு நிலத்தை இழந்தது உண்மையா? அன்றே நான் 200 ரூபாய் தருகிறேன் என்றேன். என்னிடம் வாங்கிக்கொள்ளாமல் கந்துவட்டிக்காரனிடம் சென்றாயே!" என்று வருத்தத்துடன் முத்தையன் கேட்டான்.
"நீ கடன் பத்திரம் எழுதிக் கொடுத்தால்தானே கொடுப்பேன் என்றாய்" என்று வெள்ளைச்சாமி கேட்டான். “ஆமாம், இன்று கந்துவட்டிக்காரனிடம் கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துத்தானே 200 ரூபாய் பெற்றாய்" என்று வெள்ளைச்சாமியிடம் முத்தையன் கேட்டான்.
“நீயும் கந்துவட்டிக்காரனும் ஒன்றா ? என் அண்ணனில்லையா?” என்று கன்னத்தில் அறைவது போலக் கேட்டான், வெள்ளைச்சாமி.
முத்தையனுக்கு அன்று மனைவி சொன்னது, காதில் கோவில்மணி போல் ஒலித்தது. “அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் இருக்கலாம். அதற்காகக் கூடப்பிறந்தவனிடம் கடன்பத்திரம் எழுதிக் கேட்கலாமா ? இது எனக்குச் சரியாகப் படவில்லை. 200 ரூபாய்தானே ! தம்பி திருப்பிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. செலவோடு செலவாய்ச் சேர்க்க வேண்டியதுதான். தண்ணீர் முட்டித் தண்ணீர் விலகுமா ?"
"மனைவியின் மந்திரச்சொல்லை உதறினோம். தம்பி என்னும் உறவை இழந்தோம். தகப்பன் தந்த சொத்தும் போனது' என்று புலம்பியபடி, தள்ளாடித் தள்ளாடி நடந்தான், முத்தையன்.
5.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு, சமூகம் என்னும் பரந்த அமைப்பாதல்.
(i) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
(ii) குடும்பம் என்பதில் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, சமூகம் என்னும் அமைப்புவரை விரிவடைகிறது.
(iii) குடும்பம், மனித சமூகத்தின் அடிப்படை அலகு.
(iv) குடும்பம் அமைய அடிப்படை, திருமணம்.
(v) ‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள், கூடி வாழ்தல். அது ‘அம்’ விகுதி பெற்றுக் ‘குடும்பம்’ என்றானது.
(vi) குடும்பம் பல கட்டங்களைக் கடக்கிறது; பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது.
(vii) குடும்பத்தின் தொடக்கம், திருமணம்; மணமக்கள் வாழும் வீடு, மணந்தகம். ‘திருமணம்’, ‘குடும்பம்’ என்னும் சொற்கள் தொல்காப்பியத்தில் இல்லை; திருக்குறளில் தான் காணப்படுகின்றன.
(viii) சங்க காலத்தில் தாயே குடும்ப முறைக்குத் தலைமையேற்றாள். அது தாய்வழிக் குடும்பமாய் அமைந்தது.
(ix) பதிற்றுப்பத்தில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை தாய்வழிக் குடும்பத்திற்குச் சான்றாகும்.
(x) சங்க இலக்கியங்களில் ‘இவள் மகன்' என்ற கூற்றே காணப்படுகிறது; 'இவன் மகன்' என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
(xi) சங்க காலத்தில், திருமணமான பெண், தாய்வீட்டிலேயே கணவனுடன் தொடர்ந்து வாழும் நடைமுறை இருந்தது. தாய்வழிச்சொத்து பெண்களையே சேர்ந்தது. சங்க காலத்திலேயே ஆண்வழிச் சமூக முறையும் வேர் ஊன்றிப் பரவியது. திருமணத்திற்குப் பின் பெண்கள், கணவன் இல்லத்திற்குச் சென்று வாழ்ந்தனர்.
(xii) ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' என்னும் குறுந்தொகைப்பாடல் பெண், தன் கணவனை முழுமையாய்ச் சார்ந்து வாழ்ந்தமையைக் கூறுகிறது.
(xiii) தனிக்குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோர் சேர்ந்து வாழும் நிலை. தனிக்குடும்பத்துடன் கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் நிலையே 'விரிந்த குடும்ப
முறை' எனப்பட்டது. இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்கள் மற்றும் சுற்றத்துடன் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன். குடும்பம் என்னும் அலகின் தொடர்ச்சியே இன்றைய சமூக அமைப்பாகும். இதனைக் கூட்டுக் குடும்பமும், தந்தைவழிக் குடும்ப அமைப்பும் கட்டமைக்கின்றன.
6.
(i) உலகிலுள்ள பொருள்கள்மீது நாம் கொள்ளும் பற்று நிலையாமை.
(ii) நிலையற்ற வாழ்வில் நீண்ட தவம் செய்து நிலையான இன்பத்தைப் பெற வேண்டும் என்று கூறினாள்.
7.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
8.
(i) எதிர்பாராத நிகழ்வுகளான ஆனந்தம், மனச்சோர்வு, அனுபவம், விழிப்புணர்வு ஆகியன மனிதர்களிடத்தில் தோன்றி மறையும்.
(ii) இவற்றை விருந்தினர் இல்லத்திற்கு வரும் விருந்தாளிகளாய் உருவகம் செய்கின்றார், ஜலாலுத்தீன் ரூமி.
9.
(i) தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதால், கடனின்றி நிம்மதியாய் வாழ்கிறோம். இந்த நிலையில் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்.
(ii) வீட்டிற்குத் தேவையான பால், செய்தித்தாள் போன்றவற்றைக் காலையில் வாங்கி வருவேன்.
(iii) காய்கறிகளை அரிந்து கொடுத்துச் சமையலுக்கு உதவுவேன்.
(iv) அப்பா துவைத்துத் தரும் துணிகளை உலர்த்துவேன்.
(v) மாலையில் பெற்றோர் அலுவலகத்திலிருந்து வருவதற்குள் பாலை காய்ச்சிக் கொடுத்து, தின்பண்டங்கள் கொடுத்துத் தம்பியைக் கவனமாய்ப் பார்த்துக்கொள்வேன்.
(vi) உலர்ந்த துணிகளை மடித்து வைப்பேன்.
(vii) இவ்வாறு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.
10.
இடம் : இவ்வடிகள், ஜலாலுத்தீன் ரூமி எழுதிய 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள் : விருந்தினர் இல்லத்திற்கு வருபவர்களை நல்லவரா கெட்டவரா என ஆராய்ந்து பார்த்து அனுமதிப்பதில்லை. அதுபோல, உன்னிடம் வருபவர் எவரானாலும் இன்முகத்துடன் வரவேற்று நன்றி செலுத்து. ஆண்டவன் ஏதோ ஒரு நல்வழியை உணர்த்துவதற்காக அவர் உன்னிடம் அனுப்பப்படுகிறார்.
11.
திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் - இவற்றுள் ஏற்புடைய தொடர் திருவளர்செல்வன் என்பதேயாகும். வினைத்தொகையாய் அமைந்துள்ள இச்சொற்றொடர் திரு வளர்ந்த செல்வன், திரு வளர்கின்ற செல்வன், திரு வளரும் செல்வன் என முக்காலத்திற்கும் செல்வம் கொண்டுள்ளவன் என்னும் சிறப்பான பொருளைத் தருகிறது.
12.
இவற்றுள் இரட்டைக்கிளவிகள் சலசல, கலகல ஆகியனவாகும்.
சலசல - ஆற்றில் நீர் ‘சலசல' என ஒலியெழுப்பிக்கொண்டு சென்றது.
கலகல - பெண்கள் ‘கலகல' என ஒலியெழுப்பச் சிரித்து மகிழ்ந்தனர்.
13.
பாணி, எருது என்று கருதி, 'நம் நிலத்தை உழும்' என்றாள்.
பாணி எருது என்று கருதி, நம் நிலத்தை உழும் என்றாள்.
14.
அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர்.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards