12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர் ?
2.
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள் இக்கவிதையின் அடி,
'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே ’ என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக
3.
'செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான், செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்' - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
4.
இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
5.
‘நகரம் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.
6.
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
7.
படத்திற்குப் பொருத்தமான பின்வரும் திருக்குறளின் விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்க.

சினம்என்னும் _________ கொல்லி இனம்என்னும்
ஏமப் _______ சுடும்.
8.
முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருள் யாவை?
9.
Generation
10.
Regions
11.
Knowledge of languages is the doorway to wisdom.
12.
நெடுநல்வாடையை இயற்றியவர்
கபிலர்
பரணர்
நக்கீரர்
மோசிகீரனார்
13.
‘முதல்கல்’ சிறுகதையின் ஆசிரியர்
புதுமைப்பித்தன்
உத்தமசோழன்
ஜானகிராமன்
சுஜாதா
14.
தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்
ஆலயம்
தொழிற்சாலை
பள்ளிக்கூடம்
இவற்றில் எதுவுமில்லை
15.
உற்சாகம் பீறிட சங்கீதம் இசைத்தவை ____________.
ஈரமான மரங்கள்
வீணை மீட்டும் விரல்கள்
கை ஏந்தி வாங்கிய துளிகள்
வெயில் கண்ட பறவைகள்
16.
'இளந்தமிழே' கவிதை, இடம்பெற்றுள்ள நூல் ___________
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
சூரிய நிழல்
நிலவுப்பூ
17.
| (அ) | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் | 1 | சேர்ந்தாரைக் கொல்லி |
| (ஆ) | பயன்தூக்கார் செய்த உதவி | 2 | ஞாலத்தின் மாணப் பெரிது |
| (இ) | சினம் | 3 | தெய்வத்துள் வைக்கப்படும் |
| (ஈ) | காலத்தினாற் செய்த நன்றி | 4 | நன்மை கடலிற் பெரிது |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
18.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
19.
பழங்காலத்து மூடரைக் கண்டு __________ குலுங்கச் சிரி.
உடல்
குடல்
வயிறு
மார்பு
20.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) வியர்வை வெள்ளம் (ஆ)
21.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) விளங்கி (ஆ)
22.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
அ) உடைத்தெழுந்த ஆ)
23.
"தன்னேர் இலாத தமிழ்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'ஓங்கலிடை' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
24.
'எந்நன்றி' எனத் தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
25.
'செய்யாமல்' எனத் தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
1.
(i) வாடைக்காலத்தில் கோவலர்கள், தம் நிரைகளைக் காக்க பழகிய நிலத்தைவிட்டு மேட்டு நிலத்தை அடைந்தனர்.
(ii) உடலில் பட்ட குளிரைப் போக்கக் கோவலர் பலர் ஒன்றுசேர்ந்தனர்.
(iii) தீயை மூட்டிச் சுற்றி அமர்ந்து, தீயில் கைகளைக் காயவைத்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டனர்.
(iv) எனினும், குளிர் நீங்காது, மேல்வாயும் கீழ்வாயும் நடுங்கி, பற்கள் பறையடிப்பன போல் மோதி ஒலி உண்டாக்கின.
2.
(i) உழவர்கள், முறையான ஏட்டுக்கல்வி பயிலாதவர்கள்.
(ii) இயற்கையே அவர்களின் பாடப்புத்தகம்; காணும் காட்சியே பாடம்.
(iii) காட்சிவழி கற்கின்ற அனுபவமே அவர்கள் பெறும் அறிவு.
(iv) உழவன் ஒருவன் புலர்காலைப் பொழுதில் நிலம் நோக்கிச் செல்கிறான்.
(v) வழியில் ஒரு மூங்கில் இலைமீது, வெண்ணிறப் பனித்துளி படிந்திருக்கிறது.
(vi) இப்பனித்துளி கதிரவன் தோன்றியதும், சூரியக்கதிர்களால் உறிஞ்சப்பட்டுவிடும் என உழவன் சிந்திக்கிறான்.
(vii) படித்தறியாத உழவன், எதுகை மோனையோடு பாடுகிறான்.
''மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே !
தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே !''
(viii) இதன் தொடர்ச்சியாய் அய்யப்பமாதவன் பாடல் அமைந்துள்ளது.
"நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்” என்கிறார்.
(ix) கதிரவன், தன் வெண்ணிறக் கதிர்களால், நீர்நிலைகளில் உள்ள நீரை உறிஞ்சி, ஆவியாய் மேலெழும்பச் செய்கிறான், என்கிறார் அய்யப்பமாதவன்.
(x) கவிஞர்களின் கவிவடிவமும் நிகழிடமும் வேறுபட்டாலும் கருத்து ஒருநிலைப்பட்டிருக்கும் கவிநயம் கண்டு மகிழ்வோம்.
3.
பகலெல்லாம் வெண்ணிற ஒளி வீசி வெப்பத்தைத் தருகிறான், கதிரவன்.
மாலையில் மேற்குத்திசையில், செந்நிற ஒளி பரப்பி வானத்தைச் செம்மை ஆக்குகிறான்.
அக்காட்சி, சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்த பூக்காடு போல இருப்பதாய் சிற்பி கூறுகிறார்.
4.
இனநிரை - இனம் + நிரை
(i) 'மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும்' என்னும் விதிப்படி, 'ம' கரமெய் (ம்) கெட்டது. ன(ன் + அ) உயிர் ஈறாய் நின்றது.
(ii) வருமொழி முதலில் மெல்லின 'ந'கரம் வந்ததால் இயல்பாய்ப் புணர்ந்தது. இன + நிரை - இனநிரை.
5.
(i) தொடர்மழை பெய்துகொண்டிருந்த மழைக்காலம் அது.
(ii) மேகங்களை விலக்கிக்கொண்டு சூரியன் தோன்றியது.
(iii) அதுவரை மழைமேகத்தால் மறைப்புண்டிருந்த சூரியக்கதிர்களின் வெண்ணிற ஒளி எங்கும் பரவியது.
(iv) மழையால் இருள் சூழப்பட்ட நகரம், பட்டை தீட்டப்பட்ட வைரம் போல 'வெள்ளை வெளேர்’ என்று பளிச்சென்றிருந்தது.
6.
பொன்னிறப் பூக்காடோ! : மேற்கில், மாலையில் மறையும் கதிரவன் செந்நிற ஒளியால் வானத்தைச் செந்நிறமாக்கியது. அது செந்நிறப் பூக்கள் பூத்த பூக்காடு போல் விளங்குகிறது.
வருந்தி உழைக்கும் பாட்டாளி ! : வருந்தி உழைப்பதால் தொழிலாளர்களின் கரங்களில் சிவப்பேறியுள்ளது; தோள்களில் முத்துமுத்தாய் வியர்வை தோன்றுகின்றது.
கவி பாட நீயே துணை ! : அந்திவானத்தின் செந்நிறக்காட்சி, உழைப்பாளர்களின் உழைப்பு ஆகியவற்றைப் பாடக் கிடைத்த செந்தமிழே எனக்குத் துணை.
சங்கத்தில் வீற்றிருந்த தமிழரசி ! : உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழ், பல நூல்கள் உருவாகக் காரணமாய் இருந்தது. சிறப்புமிக்க தமிழ், பாண்டியர் அமைத்த முச்சங்கங்களில் அரசியாய் கொலுவிருந்தது.
அந்த நாளும் வந்திடாதோ ! : மொழியைப் போற்றி வளர்த்த புலவர்களும், அவர்களுக்கு ஆதரவளித்த பாரி போன்ற வள்ளல்களும் வாழ்ந்தனர். அத்தகைய சிறப்புகள் மீண்டும் வரத் தமிழ்க்குயிலே கூவிடு.
சிங்கமே, தடைகளைத் தகர்த்திடு ! : சிங்கம் தன்னை அடைத்து வைத்திருக்கும் கூண்டினை உடைத்து வெளியேறும். அதுபோல், பொதிகை மலையில் தோன்றிய தமிழே, உன் வளர்ச்சிக்குத் தடையாய் இருப்பவற்றைத் தகர்த்திடு.
7.
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
8.
1. முடிந்தால் தரலாம் - இயன்றால் தரலாம்.
2. முடித்தால் தரலாம் - சொன்னபடி முடித்தால் தரலாம்
9.
தலைமுறையினர்.
10.
பகுதிகளில்
11.
பன்மொழி அறிவு என்பது ஞானவீட்டின் வாயில் ஆகும்.
12.
(c)
நக்கீரர்
13.
(b)
உத்தமசோழன்
14.
(c)
பள்ளிக்கூடம்
15.
(d)
வெயில் கண்ட பறவைகள்
16.
(d)
நிலவுப்பூ
17.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
18.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
19.
(b)
குடல்
20.
(அ) வியர்வை வெள்ளம் (வியர்வை ஆகிய வெள்ளம்), தமிழ்க்குயில் (தமிழாகிய குயில்) - உருவகங்கள்.
21.
(அ) விளங்கு + இ
விளங்கு – பகுதி; இ - வினையெச்ச விகுதி.
22.
அ) உடைத்தெழுந்த - உடைத்து + எழுந்த
i) 'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்' என்ற விதிப்படி
'உ'- நீங்கியது
து = த் + உ
= உடைத்த + தெழுந்த
ii) 'உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது
இயல்பே'
→ என்ற விதிப்படி
த் + எ = 'தெ' ஆனது
= உடைத்தெழுந்த
= என்று புணர்ந்தது
23.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
24.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.*
25.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.*
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards