6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
VI- Std Term 3 Model Question
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
உருளைக்கிழங்கு
கேரட்
முள்ளங்கி
டர்னிப்
2.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
வாத்து
கிளி
ஓசனிச்சிட்டு
புறா
3.
உற்பத்தியாளர் எனப்படுபவை
விலங்குகள்
பறவைகள்
தாவரங்கள்
பாம்புகள்
4.
நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
குளம்
ஏரி
நதி
இவை அனைத்தும்.
5.
இயற்கை ஓட்டும்பொருள் _______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
புரதங்களில்
கொழுப்புகளில்
ஸ்டார்ச்சில்
வைட்டமின்களில்
6.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.
விரைவாக கெட்டித்தன்மையடைய
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
கடினமாக்க
கலவையை உருவாக்க
7.
வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.
வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.
அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.
வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.
அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
8.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
ஆவியாதல்
ஆவி சுருங்குதல்
மழை பொழிதல்
காய்ச்சி வடித்தல்
9.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
பயன்படுத்தப்படுவதால்
பாதுகாப்பாக வைத்திருப்பதால்
சுத்தியல் தட்டுவதால்
சுத்தப்படுத்துவதால்
10.
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.
இந்தியர்கள்
ஐரோப்பியர்கள்
சீனர்கள்
எகிப்தியர்கள்
11.
______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.
12.
நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.
13.
இயற்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.
14.
நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ கட்டப்படுகிறது.
15.
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.
16.
எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
17.
கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.
18.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்ததால் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
19.
புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.
20.
ஒரு கண்ணாடி குவளை/ முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்விர்கள்?
21.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
22.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
23.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
24.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
25.
ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிகழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். பண்புழு உரத்தின் நன்மைகளைப்பற்றி எடுத்துக்கூறவும்.
26.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
27.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
28.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
29.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
30.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
31.
ஏலக்காய்
32.
நார்தரும் தாவரம்
33.
புகை
34.
பீனால்
35.
மேகங்கள்
36.
வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?
37.
உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?
38.
மாசுபடுத்திகள் என்றால் என்ன?
39.
சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
40.
சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
41.
கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.
42.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?
43.
நாகரிகங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது.
44.
மாம்பழம் : கனி :: மக்காசோளம் : __________
1.
(a)
உருளைக்கிழங்கு
2.
(c)
ஓசனிச்சிட்டு
3.
(c)
தாவரங்கள்
4.
(d)
இவை அனைத்தும்.
5.
(c)
ஸ்டார்ச்சில்
6.
(b)
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
7.
(b)
அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.
8.
(d)
காய்ச்சி வடித்தல்
9.
(c)
சுத்தியல் தட்டுவதால்
10.
(c)
சீனர்கள்
11.
( )
பருத்தி
12.
( )
ஆபத்தான
13.
( )
ஸ்டார்ச்
14.
( )
நீரேற்று நிலையம்
15.
( )
காந்தக் கல்லை
16.
1. கரும்பு-தண்டு
2. அரிசி - விதை
3. கத்தரி - காய்
4. தக்காளி -கனி
5. கேரட்-வேர்
17.
1. டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் கொசுவினால் பரவுகிறது.
2. கழிவுகள் அதிகமானால் நீர் தேங்கும் வாய்ப்புள்ளதால் கொசு பெருக வாய்ப்புள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி நோய்கள் பரவ காரணமாகிறது.
18.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றினால் ஆறுகளும், கடலும் மாசடைந்து அந்நீரில் வாழும் உயிர்கள் இறக்க நேரிடும். ஆற்று நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் தொற்றும் ஆபத்து அதிகம். எனவே கழிவுநீரை மறுசுழற்சி செய்து கழிவுகளை நீக்கிய பின் நீர் நிலைகளில் வெளியேற்ற வேண்டும்.
19.
புவிப் பரப்பில் 71% நீர் நிறைந்திருந்தாலும் நன்னீர் அளவு 3% மட்டுமே. ஆனால் அந்நீரை உபயோகிக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
20.
ஒரு வலிமையான காந்தத்தை நீருள்ள முகவைக்கு மேலே வைத்தால் நீருக்குள் உள்ள குண்டுசிகள் அனைத்தும் மேலே வந்து காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.
21.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
22.
| உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் | உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் |
| இயற்கை காரணிகளான நீர் ஆக்ஸிஜன்,சூரியனின் புற ஊதாக்கதீர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும். | நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய மூலக்கூறுகளாக சிதைவுற முடியாத பொருள்கள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எனப்படும். |
| இக்கழிவுகள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. (எ.கா) காய்கறி மற்றும் பழக்கழிவுகள்,தோட்டக்கழிவுகள்,உணவுக் கழிவுகள் |
இக்கழிவுகளால் மண்ணின் வளம் கெடுகிறது. (எ.கா) நெகிழிப் பொருள்கள், உலோகங்கள்,அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் |
23.
செயல் - சோப்பு தயாரித்தல்.
தேவையான பொருள்கள்:
i) 35 மி.லி நீர்
ii) 10 மி.லி நீர் NaOH
iii) 60 மி.லி தேங்காய் எண்ணெய்
செயல்முறை:
1. சோப்பு தயாரிக்கக் கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்ளவும்.
2. கண்ணாடி குவளையில் நீர் நிரப்ப வேண்டும்.
3. அதனுடன் 10 கி NaOH சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
4. பின் 60 மிலி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
5. நன்கு உலரவைக்கும் போது, சோப்பு படிகமாகிறது.
24.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
25.
உயிரி கழிவிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல்:
படி 1 : தொட்டி தயார் செய்தல்.
மரப்பெட்டி அல்லது சிறிய குழி அமைத்து தொட்டி போன்று தயார் செய்யவேண்டும்.
படி 2 : படுக்கை தயார் செய்தல்.
மணல் அல்லது பழைய செய்தித்தாள்களை விரித்து படுக்கை தயார் செய்ய வேண்டும்.
படி 3 : மண்புழுக்களை இடுதல்.
ஈரப்பதமான படுக்கை சூழலில், மண்புழுக்களை இட வேண்டும்.
படி 4 : படுக்கைக்குக் கீழ் உணவுத் துணுக்குகளைப் புதைத்தல்.
பழங்கள் மற்றும் காய்கறிக் கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக்கி படுக்கைக்குக் கீழ் பரப்ப வேண்டும்.
படி 5 : படுக்கைக்கு மேல் உலர்ந்த நிலையில் செய்தித்தாள்கள் அல்லது விரிப்புகளை விரித்தல்.
இந்த விரிப்புகள் சரியான காலஇடைவெளியில் மாற்றப்பட வேண்டும்.
படி 6 : தொட்டியை மூடிப் பாதுகாத்தல்.
தொட்டியை பிளாஸ்டிக் கொண்டு காற்று புகும் இடைவெளியுடன் 3-4 வாரங்கள் மூடிப் பாதுகாக்க வேண்டும்.
மண்புழு உரத்தின் நன்மைகள்:
1. கரிமப் பொருள்களை மண்ணில் சேர்க்கிறது.
2. மண், நீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
3. களிமண் துகள்களை உடைத்து மண்வளத்தை அதிகரிக்கிறது.
4. விவசாயத்தை காக்கிறது.
26.
1. மழை நீரை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
2. கட்டிடங்களில் மேல்தளத்திலிருந்து விழும் மழை நீரை சேகரித்து குழாய் வழியாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் விடுதல்.
3. இத்தொட்டிகளில் கருங்கல், கரி, மணல் போன்றவை இடப்பட்டிருக்கும்.
4. மேலும் இத்தொட்டியிலிருந்து நேரடியாக நிலத்திற்குள் விட்டு நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்யலாம்.
5. இத்தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கிணற்றில் விட்டும் பயன்படுத்தலாம்.
27.
1. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
2. இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், குளங்களையும் கட்டினார்.
3. இத்திட்டத்தின் மூலம் இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்கு புத்துயிர் தந்தவர்.
4. 2001 ம் ஆண்டு ராமன் மகசேசே விருதையும். 2005ம் ஆண்டு ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றார்.
5. இவர் இந்தியாவின் 'ஜல் புருஷ்' (தண்ணீர் மனிதர்) என அழைக்கப்படுகிறார்.
28.
1. குடிநீர் என்பது மனிதன் குடிப்பதற்கும் உணவு சமைப்பதற்கும் பாதுகாப்பான நீராகும்.
2. உணவு செரிக்கவும், கழிவுப் பொருளை வெளியேற்றவும் நீர் அவசியம்.
3. மனித உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் தினமும் சராசரியாக 2 - 3 லிட்டர் குடிநீர் தேவை.
4. குடிநீரில் இயற்கையான கனிமங்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.
5. குடிநீர் என்பது சுத்தமானதாகவும் அபாயகரமான மாசுக்கள் மற்றும் கிருமிகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. தூய்மையான குடிநீரில் அமிலத்தன்மை இல்லாமல் pH அளவு சரியாக இருக்க வேண்டும்.
7. குடிநீர் இயற்கையான சுவையுடன் இருக்க வேண்டும்.
29.
மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. இவற்றின் வழியே மின்சாரம் பாயும்போது மட்டுமே காந்தத்தன்மை பெறுகின்றன. மின்சாரத்தின் திசை மாறும்போது இதன் துருவங்களும் மாறுகின்றன. தொடர்வண்டியின் அடியிலும், தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதன் காரணமாக இத்தொடர்வண்டிகள் தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் அந்தரத்தில் நிறுத்தப்படுகின்றன. காந்தத்தின் விலக்கு விசை மற்றும் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது. மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இத்தொடர்வண்டியில் உராய்வு விசை கிடையாது. அதனால் மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாகச் செல்லலாம்.
30.
1. ஒரு சட்டக காந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
2. காந்த முனையை மாற்றக் கூடாது.
3. இரும்பு ஊசியின் எந்த முனையில் இருந்து ஆரம்பித்தோமோ அதே முனையில் இருந்தே மீண்டும் மீண்டும் தேய்க்க வேண்டும்.
4. இதே போல் 30- 40 முறை தேய்க்க வேண்டும்.
5. இப்போது இரும்பு ஊசி காந்தத்தன்மையை பெற்றுள்ளதா என பார்க்க குண்டூசி அல்லது இரும்பு துகள்களை ஈர்க்கிறதா என பார்க்க வேண்டும். அது ஈர்க்கும்
6. இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் சில முறை தேய்த்தால் இரும்பு ஊசி காந்தத் தன்மையை பெறும்.
31.
நறுமணப் பொருள்
32.
சணல்
33.
காற்று மாசுபாடு
34.
C6H5OH
35.
நீராவி
36.
வன்கட்டை மென்கட்டையை விட உறுதி மிக்கதால் வேறுபடுகிறது.
37.
நமக்கு உணவு தரும் தாவரங்கள் உணவுத்தாவரங்கள் எனப்படும்.
38.
எந்தப் பொருள்கள் சுற்றுச் சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
39.
1. இயற்கை சூழ்நிலை மண்டலம்
2. செயற்கை சூழ்நிலை மண்டலம்
40.
சுண்ணாம்புக் கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகியன சிமெண்டின் மூலப்பொருள்களாகும்.
41.
யூரியா, சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்.
42.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட முகவையை மேசையில் வைக்கும் போது காற்றிலுள்ள நீராவி முகவையின் மீது பட்டு குளிர்ந்து நீராக மாறி பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும்.
43.
நகரங்களிலும், கிராமங்களிலும் பல்வேறு தேவைகளுக்கு கால்வாய்கள், குளங்கள், ஆறுகள், கிணறுகள், நீர்த்தேக்கங்கள், ஆழ்துணைக் கிணறுகள், நீர்த் தொட்டிகளிலிருந்து நீர் பெறப்படுகிறது.
44.
விதை
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards