8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - வினைமுற்று Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - மயங்கொலிகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை -பட்டமரம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - இயற்கையை போற்றுவோம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 1 - தமிழ் இன்பம் - ஆழிக்கு இணை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2-ஈடில்லா இயற்கை - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2025
8ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கட்டபொம்மனின் முன்னோர்கள் _______ பகுதியைச் சார்ந்தவர்கள்.
2.
கிழக்குப்பகுதி பாளையங்கள் _______ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.
3.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் யாவர்?
4.
1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.
5.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்களை எழுதுக.
6.
பூலித்தேவரைப் பற்றி நீவிர் அறிந்ததை எழுதுக.
7.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
1. டெல்லி
2. லக்னோ
3. மீரட்
4. பாரக்பூர்
5. ஜான்சி
6. குவாலியர்
7. கான்பூர்
1.
( )
ஆந்திரா
2.
( )
கட்டபொம்மன்
3.
தென்னிந்திய புரட்சியில் பாளையக்கார கூட்டமைப்பின் தலைவர்கள் மருது பாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.
4.
1. வெல்லெஸ்ஸி பிரபுவின் துணை படைத்திட்டம் மற்றும் டல்ஹௌசி பிரபுவின் வாரிசு இழப்புக் கொள்கை இந்தியர்களிடையே ஒரு பயத்தையும் அமைதியின்மையும் ஏற்படுத்தியது.
2. இக்கொள்கையின் மூலம் சதாரா, நாக்பூர், ஜான்சி போன்ற அரசுகள் ஆங்கிலேயர்களால் இணைத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்தியர்கள் மன அமைதியை இழந்தனர்.
3. அயோத்தியை ஆங்கில அரசு இணைத்துக் கொண்டதைக் கண்டு இஸ்லாமியர்கள் மட்டுமன்றி மற்ற இந்திய அரசர்களும் ஆங்கில அரசின் மீது சினங்கொண்டனர்.
4. முகலாயர்கள் இரண்டாம் பகதூர் ஷாவிற்குப் பிறகு அவரது வாரிசுகள் தங்களது பரம்பரை அரண்மனை மற்றும் செங்கோட்டையை ஆங்கில அரசிடம் ஒப்படைக்க வற்புறுத்தப்பட்டனர்.
5. இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானாசாகிப்பிற்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதனால் மராத்தியர்கள் ஆங்கில அரசுக்கு எதிரிகளாக மாறினர்.
6. மேலும் முஸ்லீம்கள், ஆங்கில அரசின் போக்கில் அதிருப்தி கொண்டிருந்தனர். ஆங்கில ஆட்சியில் அவர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழந்து விட்டதாகக் கருதினர்.
மேற்கூறிய காரணங்களால் தலைவர்களிடையே ஒருமித்தக் குறிக்கோள் இல்லாததால் புரட்சி தோல்வியில் முடிந்தது.
5.
1857ஆம் ஆண்டு புரட்சியின் தோல்விக்கான காரணங்கள் :
1. சரியான ஒருங்கிணைப்பு, ஒழுக்கம் கட்டுப்பாடு, பொதுவான திட்டம். மையப்படுத்தப்பட்ட தலைமை நவீன ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை புரட்சியாளர்களிடையே இல்லை.
2. கலகத்தில் ஈடுபட்டவர்கள் ஆங்கில படைத்தளபதிகளுக்கு இணையானவர்களாக இல்லை. மேலும் இராணி லட்சுமிபாய் நானா சாகிப் மற்றும் தாந்தியா தோபே ஆகியோர் தைரியமானவர்கள். ஆனால் சிறந்த தளபதிகளாக இல்லை.
3. வங்காளம், பம்பாய், சென்னை, மேற்கு பஞ்சாப் மற்றும் இராஜபுதனம் ஆகிய பகுதிகள் புரட்சியில் கலந்து கொள்ளவில்லை.
4. நவீனக்கல்வி கற்ற இந்தியர்கள் ஆங்கில ஆட்சி மட்டும் இந்திய சமுதாயத்தை சீர்திருத்தி நவீனப்படுத்த முடியும் என நம்பினர். எனவே அவர்கள் புரட்சியை ஆதரிக்கவில்லை.
5. சீக்கியர்கள், ஆப்கானியர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆகியோர்களின் விசுவாசத்தை ஆங்கிலேயர் பெற்றனர். புரட்சியை அடக்குவதில் கூர்க்காப் படையினர் ஆங்கிலேயருக்கு உதவினர்.
6. ஆங்கிலேயர்கள் சிறந்த ஆயுதங்கள் சிறந்த தளபதிகள் மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருந்தனர்.
6.
பூலித்தேவர்:
1. இந்தியாவின் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தமிழ்நாட்டு முன்னோடியாக இருந்தவர் பூலித்தேவர் ஆவார். அவர் திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்.
2. அவரது ஆட்சிக்காலத்தில் ஆற்காட்டு நவாபான முகமது அலிக்கும் ஆங்கிலேயருக்கும் கப்பம் கட்ட மறுத்து அவர்களை எதிர்க்கத் தொடங்கினார்.
3. எனவே ஆற்காட்டு மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின.
4. ஆனால் கூட்டுப்படைகள் திருநெல்வேலியில் பூலித்தேவரால் தோற்கடிக்கப்பட்டன.
5. இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் பூலித்தேவரை ஆவார்.
6. இந்த வெற்றிக்குப் பிறகு பூலித்தேவர் நவாப் மற்றும் ஆங்கிலேயரை எதிர்க்க பாளையக்காரர்களின் கூட்டமைப்பை உருவாக்க முயன்றார்.
7. 1759ல் யூசுப்கான் தலைமையிலான ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைத் தாக்கின. அந்த நல்லூரில் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
8. 1761ல் ஆற்காடு நவாப்பின் படைகள் நெற்கட்டும் செவலைக் கைப்பற்றியது.
9. பூலித்தேவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து 1764ல் நெற்கட்டும் செவ்வலை மீண்டும் கைப்பற்றினார்.
10. பிறகு அவர் 1767ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னாளில் பூலித்தேவர் தப்பித்து தலைமறைவாக வாழ்ந்து தனது நோக்கம் நிறைவேறாமலேயே இறந்து போனார்.
11. இருந்தாலும் விடுதலைக்கான அவரது துணிச்சலான போராட்டம் தென்னிந்திய வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
7.

8th Standard Syllabus & Materials
8th Standard
TN 8th Tamil இயல் 3 - கல்வி கரையில - பாடறிந்து ஒழுகுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - பல்துறைக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 3-கல்வி கரையில - புத்தியைத் தீட்டு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW8th Standard
TN 8th Tamil இயல் 2 - ஈடில்லா இயற்கை - தமிழர் மருத்துவம் ( நேர்காணல்) Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 8th Standard Subjects
Tamilnadu Stateboard Standards