6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 25/12/2018
Term 3 Important Question
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
2.
தலநேரம் என்பது என்ன?
3.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.
4.
பேரிடர் – விளக்குக
5.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
6.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
7.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
8.
கிராம சபையின் முக்கியத்துவம் யாது?
9.
கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக
10.
கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?
11.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?
12.
பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.
13.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
14.
முக்கிய அட்சக் கோடுகள் யாவை? அவற்றின் இடையே காணப்படும் மண்டலங்கள் பற்றி விளக்குக?
15.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
16.
கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.
17.
புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.
18.
கரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக
1.
புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.
புவி மாதிரி மற்றும் நிலவரைப்படத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும்.
2.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
3.
| நிலச்சரிவு | பனிச்சரிவு |
| பாறைகள், பாறைச் சிதைவு மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது |
பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும். |
| இது மலைச் சரிவில் ஏற்படுகிறது |
இது 00 குறைவான வெப்பமுள்ள மலை உச்சிப் பகுதிகளில் நடைபெறுகிறது. |
4.
ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை விளைவிக்கும்படியான தொடர்ச்சியான இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது.
5.
ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். அவர் சிறந்த கவிஞர்களையும் தன்னைச் சூழ்ந்து இருக்கச் செய்தார். அவருடைய புகழ்பெற்ற நூல்கள் ரத்னாவளி, நாகநந்தா, புரியதர்சிகா ஆகியனவாகும். பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அவருடைய அவையை அலங்கரித்தனர்.
6.
கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே, இது முன்பிருந்த மரபான, பாறைக் குடைவரைக் கோவில்களின் அடித்த கட்டப் பரிணாம வளர்ச்சியாகும். கோபுரங்களோடும் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் இக்கோவில்கள் கட்டப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா (மகாராஷ்டிரா), பாக் (மத்திய பிரதேசம்), உதயகிரி (ஒடிசா) ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இக்காலப் பகுதிகளில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள், திராவிட பாணிக் கூறுகளை ஒத்திருக்கின்றன.
7.
பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் 'புகழ்வதாகும்'. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
8.
(i) இது ஒரு பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் நிரந்தர அமைப்பு
(ii) கிராம சபையே மக்களாட்சி அமைப்பின் ஆணிவேராகும்.
(iii) ஆண்டுக்கு நான்கு முறை கூடும். மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆசிரியர் போன்றோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
(iv) அப்போது மக்கள் தங்கள் தேவைகளையும் குறைகளையும் நேரடியாகச் சொல்லலாம்.
9.
1. வீட்டுவரி
2. தொழில் வரி
3. கடைகள் மீதான வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு
6. சொத்துரிமை மாற்றம் - குறிப்பிட்ட பங்கு
7. மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு
10.
1. ஊராட்சி மன்றத் தலைவர்
2. பகுதி உறுப்பினர்கள்
3. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்.
4. மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்.
11.
(i) மக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப் பணிகள் விருப்பப் பணிகள் என பகுக்கலாம்
(ii) இவையிரண்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன
12.
பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே பிரதிநிதித்துவ மக்களாட்சி என்று அழைக்கப்படுகிறது.
எ.கா - இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
13.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
14.
புவி தனது அச்சில் 23 \(\frac { 1 }{ 2 }\)0 சாய்ந்து நிலையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது. அவ்வாறு சுற்றி வரும்போது சூரியக்கதிர்கள் புவியில் விழுகின்ற கோணத்தின் அடிப்படையில், கீழ்க்கண்ட அட்சக்கோடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவைகள்,

00 அட்ச கோட்டிலிருந்து 23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'தாழ் அட்சக்கோடுகள் - லோ Latitudes எனவும்.
23 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு வரையிலும், 23 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'மத்திய அட்சக் கோடுகள்' Middle Lattitudes எனவும்.
66 \(\frac { 1 }{ 2 }\)0 வடக்கு முதல் 900 வடக்கு வரியிலும், 66 \(\frac { 1 }{ 2 }\)0 தெற்கு முதல் 900 தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் 'உயர் அட்சக்கோடுகள்' High Lattitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.
புவி சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் அடிப்படையில் பல மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இஃது அட்சக்கோடுகளின் அடிப்படையில் பல காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வெப்பமண்டலம் (Torrid Zone)
நிலநடுக்கோட்டிலிருந்து (00) வடக்கில் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரை மற்றும் தெற்கில் மகரரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) வரை சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. எனவே, இப்பகுதி 'வெப்பமண்டலம், என அழைக்கப்படுகிறது.
மித வெப்பமண்டலம் (Temperate Zone)
வட அரைக்கோளம் கடகரேகை (23 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) மகரரேகை முதல் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) அண்டார்டிக் வட்டம் வரைந்துள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி 'மித வெப்பமண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.
குளிர் மண்டலம் (Frigid Zone)
வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 வ) முதல் வடதுருவம் (900 வ) வரியிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66 \(\frac { 1 }{ 2 }\)0 தெ) முதல் தென்துருவம் (900 தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்து நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி "குளிர்மண்டலம்" என அழைக்கப்படுகிறது.
15.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
16.
கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பௌத்தப் பேரரசு. பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தகத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார். கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்த போதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதிரிப்பவராகவும் அதை தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார். கனிஷ்கர் பௌத்தத்தை அரச மதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேற்பாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார். இப்பேரவையில் தான் மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.
17.
பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையைப் புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார். மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார்.
18.
சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால வளவன் அல்லது கரிகாலன் ஆவார். அவர் தன்னை எதிர்த்த சேரர், பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றுரில் தோற்கடித்தார். அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார். வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார். பட்டினப்பாலை எனும் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல், கரிகாலனின் ஆட்சியில் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards