10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
அன்பின் ஐந்திணைகள் யாவை?
2.
சரயு நதி எங்கெங்குச் சென்று உலாவியது?
3.
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
4.
"உறங்குகின்ற, கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்! காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்” - கும்பகருணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
5.
மருத நிலக் காட்சியை விளக்குக.
6.
'கடற்கரையில் உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் மலைப்பயிர்களும், நிலப்பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன' - காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும் பண்டைத்தமிழரின் திணைநிலைத்தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும், அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
7.
8.
9.
தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான் - இப்பாடலில் _________ அணி பயின்று வந்துள்ளது.
பிறிதுமொழிதல்
வஞ்சகப்புகழ்ச்சி
சொற்பொருள்
தற்குறிப்பேற்ற
10.
| அ | குறிஞ்சி | 1 | கடலும் கடல் சார்ந்த இடமும் |
| ஆ | முல்லை | 2 | வயலும் வயல் சார்ந்த இடமும் |
| இ | மருதம் | 3 | மலையும் மலை சார்ந்த இடமும் |
| ஈ | நெய்தல் | 4 | காடும் காடு சார்ந்த இடமும் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
11.
குளிர் காலத்தைப் பொழுதாய்க் கொண்ட நிலங்கள் __________ .
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
12.
தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது. (தனிச்சொற்றொடர்களாய் மாற்றுக)
13.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) கிடந்து
14.
__________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
15.
வானம் _______ தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
16.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'தண்டலை மயில்கள்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
17.
"திருக்குறள்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'செயற்கை' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
18.
1.
அன்பின் ஐந்திணைகள்
(i) குறிஞ்சி
(ii) முல்லை
(iii) மருதம்
(iv) நெய்தல்
(v) பாலை
2.
(i) சோலை
(ii) காடு
(iii) பொய்கை
(iv) குளம்
(v) பாக்குமரத்தோட்டம்
(vi) வயல்
ஆகிய இடங்களில் சென்று சரயு நதி உலாவியது.
3.
விடை: உழவர்கள் வயலில் உழுதனர்.
நெய்தற்பூவை பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
4.
(i) கும்பகருணனே எழுந்திரு, உடனே எழுந்திரு.
(ii) வில்லேந்திய இயம தூதர்களின் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக! உறங்குவாயாக! என்று கூறி எழுப்புகிறார்கள்.
5.
(i) குளிர்ந்த சோலைகளில் மயில் அழகுற ஆட
(ii) விரிந்த தாமரை மலர்கள் விளக்குகள் ஏற்றியது போல் தோன்ற
(iii) சூழும் மேகங்கள் மத்தள ஒலியாய் எழ
(iv) மலரும் குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காண
(v) நீர்நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய
(vi) மகர யாழின் தேன் ஒத்த இசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட
மருத நில காட்சி இருந்தது.
6.
(i) பண்டைத்தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதியை ஐவகை நிலங்களாய்ப் பிரித்தனர்.
(ii) அவற்றுள் குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை ஆகிய நிலங்கள் முறையே மலை, வயல்,
(iii) கடல், காடு ஆகிய பகுதிகளைக் குறித்தன.
(iv) அன்று நடைபெற்ற அந்நிலத்தொழில்களே இன்றும் நடைபெறுகின்றன.
(v) காலநிலைக்கேற்பச் சிறுசிறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
(vi) மருதநிலத்தில் உழவுத்தொழில் நடைபெறுகிறது. அத்தொழிலுக்கான பல பணிகளுக்கு இன்று இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(vii) நெய்தலில் அன்று கட்டுமரத்தில் சென்று மீன் பிடித்தனர். இன்று மோட்டார் படகுகளில் சென்று மீன் பிடிக்கின்றனர்.
(viii) இவ்வாறு நிலங்களுக்கேற்ற தொழில்களில் நவீனக்கருவிகள் பல பயன்படுத்தப்படுகின்றன.
7.
(c)
8.
(d)
9.
(b)
வஞ்சகப்புகழ்ச்சி
10.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
11.
(c)
குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
12.
ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.
13.
(அ) கிடந்து - கிட + த்(ந்) + த் + உ
கிட - பகுதி
த் - சந்தி(ந்) ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
14.
வெள்ளை
15.
கருக்கத்
16.
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ.
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையிளொடு மிளையானொடும் போனான்;
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்
17.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
18.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards