10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
சோவியத் நாட்டின் பிளவு பற்றி குறிப்பு வரைக
2.
கியூபாவின் புரட்சி பற்றி எழுதுக
3.
பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்ரூமனின் வரையறை எழுதுக
4.
'டாக்டர் சன்யாட் சென்' பற்றி சிறு குறிப்பு வரைக.
5.
கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?
6.
மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
7.
மேற்கத்திய நாடுகளின் தேவையின் பொருட்டே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய் பிரச்சனையில் உறுதியானது – விளக்குக.
8.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
9.
கோமின்டாங்கும் 1928ஆம் ஆண்டு சீனாவில் எவ்வாறு நடுவண் அரசை ஏற்படுத்தினார்கள் என்பதை விளக்குக.
10.
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
1.
(i) உலக அரசியலில் 1970களிலும் 1980களில் முற்பகுதிகளிலும் சோவியத் நாடு மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தது.
(ii) எனினும் அதன் பொருளாதாரம் நலிவடையவும் முதலாம் உலக நாடுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமலும் தேங்கியது
(iii) 1980 களில் இறுதியில் சோவியத் நாடு இனவெறி கட்டவிழ்ப்பினாலும் பிராந்திய உணர்வின், புதிய தேசிய உணர்வின் பிறப்பிலும் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் சோவியத் நாட்டின் பிளவு ஏற்படலாயிற்று
2.
(i) ஐக்கிய அமெரிக்க நாடு மத்திய அமெரிக்காவிலும் (ஹோண்டுரஸ், எல் சல்வதோ, நிகரகுவா, பணாமா, க்வாத்தமாலா), கரீபியப் பகுதியிலும் (கியூபா, டோமினியக் குடியரசு, ஹைதி) கிழக்கு ஆசியாவிலும் (பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தெற்கு வியட்நாம், தாய்லாந்து) தனக்கு துணைக் கோள்களாகச் சுற்றிச் செயல்படும் நாடுகளைக் கொண்டிருந்தது
(ii) இந்நாடுகள் ராணுவ அதிகாரிகளாலும் பெரும் நிலச்சுவான்தார்களாலும் சில சூழ்நிலைகளில் பெரு முதலாளிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தன
(iii) இது இந்நாடுகளை அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதார உதவியைச் சார்ந்திருக்கும்படி செய்தது. 5 வருடங்களுக்குப் பிறகு கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் சேர்ந்து ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்
3.
(i) கிழக்கு ஐரோப்பாவில் நாஜிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து சோவியத் நாட்டில் விடுவிக்கப்பட்ட நாடுகளில், அந்நாடு 1948 முதல் பொதுவுடைமை அரசுகளை ஏற்படுத்தியிருந்தது
(ii) ஐக்கிய நாட்டின் குடியரசு தலைவரான ட்ரூமென் பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ஒரு வரைவை முன்மொழிந்தார்
(iii) சோவியத் நாடோ கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பொதுவுடைமை கருத்தை பரப்ப தீர்மானமாக இருந்தது
4.
(i) டாக்டர் சன்யாட் சென் 1866 ஆம் ஆண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் சான்டன் நகரத்தின் அருகே பிறந்தார்
(ii) இவர் 'சீனாவின் தந்தை' என அழைக்கப் பெற்றார் ஒரு கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பெற்றதோடு கிறிஸ்தவராக மாறினார். ஹாங்காங் நகரில் மருத்துவ பயிற்சி பெற்றார்
(iii) மஞ்சுக்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு அவ்வெழுச்சி தோற்றத்தால் அவர் நாடு திறந்து வாழும் நிலை ஏற்பட்டது இவர் 1866 முதல் 1925 வரை வாழ்ந்தார்
5.
1. கியூபாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த மக்களைக் கொண்ட ஒரு படை பே ஆஃப் பிக்ஸ் வளைகுடாவில் ஏப்ரல் 1961ல் இறக்கியது. அதே வேளையில் காஸ்ட்ரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கோடு அதன் விமான தளங்களை ஐக்கிய அமெரிக்க நாடுகள் குண்டு வீசித் தாக்கியது.
2. அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் கியூபாவைச் சுற்றிவளைத்தன. சோவியத் நாடு கியூபாவில் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை ரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
3. இறுதியாக சோவியத் நாட்டின் குடியரசுத்தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப் பெற உறுதியளித்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
6.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரங்கில் முதலாம் உலக நாடுகள் என்றும், சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
7.
சூயஸ் கால்வாய் சிக்கல்:
(i) எகிப்தில் 1952 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத் தலைவராக ஆக்கப்பட்டார். அவர் 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்
(ii) இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவு செய்தன.
(iii) இச்சூழலில் தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதிய இஸ்ரேல் தனது கப்பல் போக்குவரத்து வசதியாக அக்கபா வளைகுடாவை திறந்து விட்டதோடு அதன் மூலம் எகிப்தின் எல்லை மீறிய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது
8.
1. மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
2. இத்திட்டம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
9.
(i) கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங் - கை - ஷேக் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ - யென் - லாயும் மாசேதுங்கும் விளங்கினர்
(ii) பொதுவுடைமை வாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமை வாதிகளை முக்கிய பொறுப்புக்களிலிருந்து விடுவித்தார்
(iii) பொதுவுடைமைவாதிகளின் செல்வாக்கோ பெருக்கப் பெற்று அவர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் இராணுவத்தில் பெருமளவில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது
(vi) ஷியாங் - கை - ஷேக் சீனாவை படையெடுக்க துவங்கினார். காண்டனில் ஆரம்பித்த அவர் 1925 இன் இறுதியில் ஹான்கோ வரை பிடித்திருந்தார்
10.
1. மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் டோவேஜரின் மரணத்தோடு துவங்கியது.
2. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டனர்.
3. உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911 ஆம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மடங்குகளில் பரவியது.
4. மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards