10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
ஆகாயப் போர்முறை
பதுங்குக் குழிப்போர்முறை
நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
கடற்படைப் போர்முறை
2.
"ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
லெனின்
மார்க்ஸ்
சன் யாட் சென்
மா சே துங்
3.
4.
எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?
டெல்வில்லி
ஆரஞ்சு நாடு
அடோவா
அல்ஜியர்ஸ்
5.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
6.
_____ ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
7.
லெனின் போல்ஷ்விக் அரசை நிறுவுவதற்கு முன்னர், தாராளவாதிகள், மிதவாதிகள், சோஷலிஸ்ட்டுகள் ஆகியோரின் புதியக் கூட்டணிக்கு _______ பிரதமராக தலைமை ஏற்றார்.
8.
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்______ ஆவார்.
9.
டானென்பர்க் போரில் _____ பேரிழப்புகளுக்கு உள்ளானது.
10.
பால்கனில் _____ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
11.
கண்ணாடி மாளிகை
12.
எம்டன்
13.
கமால் பாட்சா
14.
ஜிங்கோயிசம்
15.
பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை
16.
பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.
17.
ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.
18.
முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?
19.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
20.
மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
21.
22.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
23.
லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
24.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
1.
(b)
பதுங்குக் குழிப்போர்முறை
2.
(a)
லெனின்
3.
(b)
4.
(c)
அடோவா
5.
(a)
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
6.
( )
1925
7.
( )
கெரன்ஸ்கி
8.
( )
கிளமென்கோ
9.
( )
ரஷ்யா
10.
( )
மாசிடோனியா
11.
வெர்செய்ல்ஸ்
12.
சென்னை
13.
துருக்கி
14.
இங்கிலாந்து
15.
ரஷ்யாவும் ஜெர்மனியும்
16.
1. சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை அதனால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.
2. "கூட்டுப்பாதுகாப்பு" எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.
3. இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்தபோது, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன.
17.
1. ரஷ்யப் புரட்சி உலக மக்களின் கற்பனையைத் தூண்டியது.
2. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கப்பட்டன.
3. ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு காலனி நாடுகளை விடுதலைக்காகப் போராட ஊக்குவித்தது.
4. நிலச்சீர்த்திருத்தம், சமூகநலன், தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் போன்ற இன்றியமையாதவை குறித்த விவாதங்கள் உலகளவில் நடைபெறத் தொடங்கின.
18.
1. துருக்கி ஒருநாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சாவின் உன்னதமான பங்கு முக்கியமானதாகும்.
2. அவர் துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்து மாற்றியமைத்தார்.
19.
1. ஆரவாரமான நாட்டுப்பற்று - இங்கிலாந்து
2. அதிதீவிரப்பற்று - பிரான்ஸ்
3. வெறிகொண்ட நாட்டுப்பற்று - ஜெர்மனி
20.
மூவர் கூட்டு நாடுகள்: இங்கிலாந்து (பிரிட்டன்), பிரான்ஸ், ரஷ்யா
21.
22.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
1. 1920-1925 ஆகிய ஆண்டுகளிடையே பன்னாட்டுச் சங்கம் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைக்கப்பட்டது.
2. மூன்று பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சங்கம் வெற்றி பெற்றது.
3. 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டுத் தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
4. பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
5. அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது, அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
6. மூன்றாவது பிரச்சனை கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
7. விசாரணைக்குப் பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது.
8. 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
9. லொக்கர்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
10. இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக் குழுவில் ஜெர்மனிக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட்டது.
தோல்விக்கான காரணங்கள்:
(i) அரசியல் பிரச்சனைகளில் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவு அவசியமாயிற்று
(ii) சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை
(iii) சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்த போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன
23.
1. சோவியத்துகளில் மென்ஷ்விக்குகள் ஆதிக்கம் செலுத்த சிறுபான்மையினரான போல்ஷ்விக்குகள் அச்சமுற்றவர்களாகவும் முடிவெடுக்க இயலாதவர்களாகவும் இருந்தனர். லெனினின் வருகையால் இச்சூழ்நிலை மாறியது.
2. ரஷ்யப் புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
3. அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
4. போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் "ரொட்டி, அமைதி, நிலம்" எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
5. தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
i) நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்படவேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது.
ii) போரைத் தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
6. ஏமாற்றமடைந்த விவசாய ராணுவ வீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நில அபகரிப்பில் ஈடுபடலாயினர். இது பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.
7. அரசு "பிராவ்தா" -வை தடைசெய்து போல்ஷ்விக்குகளை கைது செய்தது.
8. டிராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார்.
9. அக்டோபர் திங்களில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டார்.
10. டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார். நவம்பர் 7ஆம் நாள் முக்கியமான அரசுக்கட்டிடங்கள்.
11. குளிர்கால அரண்மனை, பிரதம மந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை உட்பட அனைத்தும் ஆயுதம் ஏந்திய ஆலைத் தொழிலாளர்களாலும் புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன.
12. 1917 நவம்பர் 8ஆம் நாள் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப்பெயரிடப்பட்டது.
13. போரிலிருந்து விலகாமல் இருந்ததே தற்காலிக அரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என லெனின் நினைத்தார், எனவே உடனடியாக விலகினார்.
14. புதிய அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
15. 1918 இல் பிரெஸ்ட் - லிடோவஸ்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
24.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards