11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
2.
சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------
மொக
ருத்ரதாமன்
அஸிஸ்
யசோவர்மன்
3.
அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------
செலியுகஸ் நிகேடர்
அன்டிகோனஸ்
அண்டியோகஸ்
டெமெட்ரியஸ்
4.
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.
5.
“சத்ரப்கள்” பற்றி நீவிர் அறிவது யாது?
6.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
7.
”இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது.” எவ்வாறு?
8.
டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.
9.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.
10.
மேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க அரசர்களின் எழுச்சி, வணிக, பண்பாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்தியது. விவரிக்கவும்
1.
(a)
2.
(b)
ருத்ரதாமன்
3.
(a)
செலியுகஸ் நிகேடர்
4.
i) வணிகம் பெருமளவு வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினார்.
ii) கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
iii) வெளிநாடுகளுடன் தரை வழியாகவும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
iv) இந்த வளர்ச்சியானது விரிவடைந்து வரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
v) எனவே வணிகம் விரிவடைந்து பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
5.
i) சாகர்களின் ஆட்சிக்காலத்தில் மாகாண ஆளுநர்கள் "சத்ரப்கள்" என்று அழைக்கப்பட்டனர்
ii) சத்ரப்கள் பலரும் தங்களை சுதந்திர அரசாக அறிவித்துக் கொண்டு தங்களுக்கு மஹாசத்ரபாகள் என்ற பட்ட பெயரை சூட்டிக் கொண்டனர்
iii) புகழ் பெற்ற சாக சத்ரப்களில் புகழ் பெற்றவர் "ருத்ரதாமன்" என்பவராவார்.
iv) இவர் சாதவாகனர்களையும் தோற்கடித்தார்.
6.
i) இந்தியா முழுவதும் கிரேக்கர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுதும் பாப்போம்.
ii) இச்சொல் பாரசீக மொழியில் கிரேக்கர்களை குறிக்கும். "யாயுனா" என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
iii) இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாக கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களை கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
7.
i) சங்கத் பாடல்களின் படி முசிறி நகரம் இரண்டு வணிகச் சுற்றுகள் மையமாக இருந்துள்ளது.
ii) நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றிவந்த படகுகள் திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன.
iii) இது அடிப்படையான நுகரவு பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதை சுட்டுகிறது.
iv) அதே நேரத்தில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்கு பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
8.
i) இந்தோ - கிரேக்க அரசர்களில் அறியப்பட்ட முதல் அரசர் டெமெட்ரியஸ் ஆவார்.
ii) இந்தோ - கிரேக்கர்கள் நேர்த்தி மிக நாணயங்களை வெளியிட்டனர்.
iii) இந்நாணயங்கள் அவர்களின் ஆட்சியை வேறுபடுத்தி காட்டுகின்ற அம்சங்களோடு வெளியிடப்பட்டன
iv) நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற அரசரின் உருவமும், பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
v) அரசர்கள் பலவிதமான தலைக்கவசங்களோடு இருப்பது தனிசிறப்பு.
vi) இந்நாணயங்கள் தனிமுக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசரின் தோற்றத்தை காட்டுகின்றன.
9.
ரோம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது.
மேலும் பொ.ஆ.மு.27ல் பேரரசர் அகஸ்டின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வக்குவிப்பும்:
ஐரோப்பாவிலும் வாடஆப்பிரிக்காவிலும் பெட்ரா வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும் செல்வா செழிப்பு மிக்க நகரமாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ் காலக்கணிப்பு:
பொ.ஆ.முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி "ஹிப்பாலஸ்" என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடிக் கடல் வழி:
ரோமானிய கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நேரடியாக பயணிக்க தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள் தவிர்த்தனர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆணுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஓரு கப்பல் என்று அதிகரித்தது.
இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் ஆதியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
10.
அலெக்சாண்டர் வடமேற்கு இந்தியாவின் மீதுபடையெடுத்து பஞ்சாப் பகுதியை கைப்பற்றியதிலிருந்து கிரேக்கர்களுடனான இந்திய தொடர்பு தொடங்கியது. அலெக்சாண்டருக்குப்பின் அவரது தளபதிகளில் ஒருவரான செல்யூகஸ் நிகேடர் இந்தியாவின் சிந்து பகுதி வரை ஆட்சி செய்தார்.
பின்னர் இந்தோ - கிரேக்க அரசர்களின் முக்கியமானவர்கள் "டெமெட்ரியஸ்", "மினான்ட்ர்", "ஆண்டியோல் சைடஸ்" போன்றோர் எழுச்சி பெற்றனர்.
நாணயங்கள்:
இந்தோ - கிரேக்க அரசர்களின் தனிச் சிறப்பு நேர்த்திமிக்க நாணயங்களை வெளியிடுவது ஆகும். மீனாள்டரின் நாணயங்கள் இந்தியாவில் உத்திரபிரதேசம் வரை கிடைத்துள்ளது. இதிலிருந்து இந்தோ - கிரேக்க உறவு எவ்விதம் இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைவுச் சின்னங்கள்:
பாடலிபுத்திரத்தில் உற்ற நினைவுச் சின்னங்கள் இந்தோ - கிரேக்க கலவை பிரதிபலிக்கின்றன. மேலும் மௌரிய பேரரசின் விரிவான நிர்வாக அமைப்பு கிரேக்கர்களுடைய நிர்வாக அமைப்பை ஒத்து இருந்தன.
மேற்கு இந்தியாவில் இந்தோ - கிரேக்க அரசாட்சிகள் தோன்றியது ஒரு மாறுபட்ட பண்பாட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியது. கட்டிடக்கலையின் தனித்தன்மை கொண்ட போக்கை ஏற்படுத்தியது.
அசோகர் காலம்:
அசோகர் காலத்தில் ஏற்பட்ட மௌரிய பேரரசின் விரிவாக்கம் ஆப்கானிஸ்தான் வரை இருந்தது. இதனால் மேற்கே எகிப்து வரை முறையான வாணிபம் நடைபெறுவதற்கு உதவி புரிந்தது.
தரைவழி வணிகமானது வடமேற்கு ஆப்கானில் வழியாக நடைபெற்றது.
ஏற்றுமதி:
இந்தியாவிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், முத்துக்கள், அவுரி, விளாமிச்சை, வேர்த்தைலம், தாளிசப்த்ரி மற்றும் அரியவகை மரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இவ்வாறாக இந்தோ - கிரேக்க வணிகம், பண்பாடு வலுப்படுத்தப்பட்டது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards