11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/03/2020
11ஆம் வகுப்பு பொருளியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Economics All Chapter Five Marks Important Questions 2020)
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
14x1-2x2-2x3=0
20x1 - 4x2 + 2x3 = 16
12x1 + 6x2 - 4x3 = 14 என்ற சமன்பாடுகளின் தீர்வு காண்க.
2.
இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.
3.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
4.
மொத்த செலவு 100+Q3 எனில் AVC,AC, TFC,AFC மற்றும் TVC யை காண்க இதில் Q = 10.
5.
மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.
6.
சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.
7.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
8.
ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.
9.
ஊரக முன்னேற்றத்திற்கான தேவையை பற்றி விளக்குக.
10.
ஆடம் ஸ்மித்தின் செல்வ இலக்கணத்தை விளக்குக.
11.
நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.
12.
அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?
13.
உழைப்பின் சிறப்பியல்புகளை விளக்கு.
14.
மனித மேம்பாட்டுகுறியீடு பற்றி விளக்குக.
15.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் யாவை?
16.
இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாட்டை நிறைகுறைப் போட்டியின் அடிப்படையில் விளக்குக.
17.
தமிழ்நாட்டின் வங்கியியல் வளர்ச்சி பற்றி விவரி.
18.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
19.
பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி.
20.
பல்வகை அங்காடியின் இயல்புகள் ஓர் ஒப்பீடு விளக்குக.
21.
இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக.
22.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
23.
சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?
24.
பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
[பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].
25.
26.
திரு. அன்பு 2 பேனாக்கள், 3 பென்சில்கள் மற்றும் 1 நோட்டு புத்தகம் வாங்கினார். திரு.பரக்கத் 4 பேனாக்கள், 3 பென்சில்கள் மற்றும் 2 நோட்டு புத்தகங்கள் வாங்கினார். திரு. சார்லஸ் 2 பேனாக்கள், 5 பென்சில்கள் மற்றும் 3 நோட்டு புத்தகங்கள் வாங்கினார். அவர்கள் முறையே ரூ.32, ரூ.52 மற்றும் ரூ.60 செலவழித்துள்ளனர். எனில், ஒரு பேனா, ஒரு பென்சில் மற்றும் ஒரு நோட்டு புத்தகத்தின் விலையைக் காண்க.
27.
தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.
28.
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு வகையான ஆற்றல் வளங்களை விவரி.
29.
30.
கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.
31.
32.
வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?
33.
ஊரகக் கடன்களுக்கான காரணங்களை ஆராய்க.
34.
ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.
35.
2015-2020 ம் ஆண்டிற்கான ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையின் சிறப்பியல்புகளை விளக்குக.
36.
37.
இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.
38.
இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.
39.
40.
நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.
41.
42.
மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.
43.
பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.
44.
குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி
45.
தேவை நெகிழ்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
46.
47.
உற்பத்தி வாய்ப்பு வளைககோட்டைக் கொண்டு, பொருளாதாரத்தின் அடிப்படைப் பிரச்சனைகளை விவரி.
48.
1.
கொடுக்கப்பட்ட அணி வடிவம் பின்வருமாறு,
\(\begin{bmatrix} 14 & -2 & -2 \\ 20 & -4 & 2 \\ 12 & 6 & -4 \end{bmatrix}\begin{bmatrix} { x }_{ 1 } \\ { x }_{ 2 } \\ { x }_{ 3 } \end{bmatrix}=\begin{bmatrix} 0 \\ 16 \\ 14 \end{bmatrix}\)
\(\triangle =\begin{bmatrix} 14 & -2 & -2 \\ 20 & -4 & 2 \\ 12 & 6 & -4 \end{bmatrix}\)
= 14 (+ 16 -12) - (-2) (-80-24) + (-2) (120 + 48)
= 14 (4) + 2 (-104) -336
= 56 - 208 - 336
\(\triangle \)= -488
\(\triangle x _1 =\begin{vmatrix} 0 & -2 & -2 \\ 16 & -4 & 2 \\ 14 & 6 & -4 \end{vmatrix}\)
= 0 (+ 16 -12) - (-2) (-64 -28) + (-2) (96 + 56)
= 0 (4) + 2 (-92) -2 (152)
= 0 -184 - 304
=-488
\(\therefore \triangle x_ 1=-488\)
\(\triangle x _2 =\begin{vmatrix} 14 &0 & -2 \\ 20 & 16 & 2 \\ 12 & 14 & -4 \end{vmatrix}\)
= 14 (-64 -28) -0 (-80 -24) + (-2) (280 - 192)
= 14 (-92) 0 -2(88)
=-1288-176
\(\therefore \triangle x_2=1464\)
\(\triangle x _3 =\begin{vmatrix} 14 & -2 & 0 \\ 20 & -4 & 16 \\ 12 & +6 & 14 \end{vmatrix}\)
= 14 (-56 -96)-(-2) (280 - 192)0 (120 + 48)
= 14(-152)+2(88)+0(168)
= - 2128 + 176 + 0
= -1952

\(\therefore x_1=1,x_2=3,x_3=4\)
2.
1.அதிக மக்கள் தொகை:
1.மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக உள்ளது.
2.மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது.
3.மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000பேருக்கு 1.7 என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது.
4.ஆண்டு தோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.
2.ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை:
1.இந்திய பொருளாதாரத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வு நிலை நீடிக்கிறது.
2.அதிக அளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
3.சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வீதம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது.
3.அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்த போதும் அத்தியாவசியப் பண்டங்களும் விலை தொடர்ந்து உயர்கிறது.
4.உள் கட்டமைப்பு பலவீனம்:
கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து,பண்டங்கள், பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது.
5.வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை:
அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது.
6.பழமையான தொழில் நுட்பம்:
வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும் வழக்கொழிந்ததாகவும் உள்ளது.
3.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
4.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்த செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AFC=சராசரி மாறாச் செலவு
AC=சராசரி செலவு
\(\boxed{AC={TC\over Q}}\)
2. TC = 100 + Q3-மொத்த செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது.அவை மொத்த மாறாச் செலவு மற்றும் மொத்த மாறும் செலவு ஆகும்.
3.மொத்த மாறாச் செலவு (TFC)உற்பத்தி அதிகரித்தாலும்,குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே,
TC= 1O+Q3.
4.இங்கு மொத்த மாறாச் செலவு 100 ஆகும்.
TC 100 + Q3 Q = 10 எனில்
TC = 100 + (10)3 (10 x 10 x 10 = 1000)
= 100 + 1000
\(\boxed {\therefore TC=1100}\)மொத்த செலவு
TFC = 100, TC = 1100 எனில்
TVC= ?
TC= TFC+TVC
1100= 100 + TVC
1100 -100= TVC
\(\boxed {\therefore TVC=1000}\)மொத்த மாறும் செலவு
TVC =1000, TC = 1100, TFC = 100, Q = 10 எனில்
\(AFC={TFC\over Q}\)

\(\boxed {\therefore AFC=10}\)சராசரி மாறாச் செலவு
\(AVC={TVC\over Q}\)

\(\boxed {\therefore AVC=100}\) சராசரி மாறும் செலவு
\(AC={TC\over Q}\) (அ) AC=AFC+AVC
(அ) 110= 10+ 100
\( {\therefore AC=110}\) 110=110
AVC=சராசரி மாறும் செலவு =100
AFC=சராசரி மாறாச் செலவு =10
AC=சராசரி செலவு =110
TVC=மொத்த மாறும் செலவு =1000
TFC=மொத்த மாறாச் செலவு=100
TC=மொத்த செலவு=1100 ஆகும்.
5.
1.மொத்த வருவாய் (Total Revenue - TR) என்பது, ஒரு நிறுவனம் தன் உற்பத்தி பண்டங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் மொத்த வருமானமே, மொத்த வருவாய் எனப்படுகிறது.
2.விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையை அப்பண்டத்தின் விலையால் பெருக்கிக் கிடைப்பது மொத்த வருவாய் ஆகும்.
3.\(\boxed{TR = P \times Q}\) இதில் TR -மொத்த வருவாய்,P-விலை, Q-விற்பனை அளவு.
4.உதாரணம்: ஒரு நிறுவனம் 100 கைபேசியை 500 வீதம் விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50000/-ஆகும்.
5.TR= 500 x 100
\(\boxed{\therefore TR=50000}\)
மாறாத விலையில் மொத்த வருவாய்
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 5 | 5 |
| 2 | 5 | 10 |
| 3 | 5 | 15 |
| 4 | 5 | 20 |
| 5 | 5 | 25 |
| 6 | 5 | 30 |

நிலையான விலை:
விலை Rs.5ஆக உள்ளபோது மொத்த வருவாய் போக்கினை மேற்கண்ட வரைபடம் விளக்குகிறது.
விலை குறைவு:
விலை குறையும் போது பண்டத்தின் விற்பனை அதிகரிக்கும் மொத்த வருவாயின் போக்கினை கீழ்கண்ட வரைபடம் விளக்குகிறது.
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 10 | 10 |
| 2 | 9 | 18 |
| 3 | 8 | 24 |
| 4 | 7 | 28 |
| 5 | 6 | 30 |
| 6 | 5 | 30 |
| 7 | 4 | 28 |
| 8 | 3 | 24 |
| 9 | 2 | 18 |
| 10 | 1 | 10 |

6.
சமநோக்கு வளைகோட்டின் பண்புகள்:
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
2.சமநோக்கு வளைகோடுகள் குவிந்த நிலையில் அமையும்.
3.இரண்டு சமநோக்கு வளைக்கோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாது .
1.எல்லா சமநோக்கு வளைக்கோடுகளும் வலப்புறமாக கீழ்நோக்கிச் செல்லும்.
1.கீழ்நோக்கிச் சரிந்து செல்லும் சமநோக்கு வளைகோடு நுகர்வோர் X பண்டத்திற்கு பதிலாக Y பணத்தினை பதிலீட்டு பண்டமாக தெரிவுச் செய்கிறார்.
2.Y பண்டத்தை அதிகரித்து X பண்டத்தை குறைக்கிறார் எனவும் பொருள்படும்.
2.அனைத்து சமநோக்கு வளைகோடுகளும் தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
1.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)அதிகரிக்கும் போது சமநோக்கு வளைகோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாக காணப்படும்.
2.இறுதிநிலை பதிலீட்டு வீதம் (DMRS)குறைந்து கொண்டே செல்கிறது.

3.எந்த இரு சமநோக்கு வளைகோடுகளும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது.

1.மூன்றாவது எடுகோள் இரண்டு சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்ளாது என்பதாகும்.
2.இரண்டாவது சமநோக்கு வளைகோட்டில் (IC2)உள்ள புள்ளி A முதலாவது வளைகோட்டில் (IC1)உள்ள புள்ளி B யை விட அதிக மனநிறைவை நுகர்வோருக்குத் தருகிறது.
3.சமநோக்கு வளைகோடுகள் எப்போதும் ஒன்றை ஒன்று வெட்டுக் கொள்ளாது.
7.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
8.
(1) நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:
(i) ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடம் குவிந்து காணப்படுகிறது.
(ii) கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு செய்கின்றனர்.
(2) பண்ணை சாராத தொழில்களில் வேலை வாய்ப்பின்மை:
அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை.
(3) பொதுத்துறைகளில் முதலீடு இன்மை:
மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது.
(4) பணவீக்கம்:
பொருட்களின் விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்த ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
(5) குறைந்த உற்பத்தித் திறன்:
ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன், வறுமைக்கு காரணமாக அமைந்தது.
(6) வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை:
பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால் சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளது.
(7) குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்:
இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
(8) பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்:
இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது.
(9) சமூக குறைபாடுகள்:
சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
9.
(i) விவசாயம் மற்றும் விவசாயம் சாரா துறைகளில் ஊரக உண்மை வருமானம் உருவாக்கும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.
(ii) வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருமானம் உண்டாக்குதல், ஊரக தொழில் மயமாக்குதல், உடல்நல மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படுகின்றன.
(iii) கல்வி வசதி, வீடு வசதி மற்றும் பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொள்வதற்கு முயற்சிகள் தேவைப்படுகின்றன.
(iv) அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூகத் தேவைத் திட்டங்கள் மேம்படுத்துவதற்கு முதலீடுகளை அதிகரிக்க செய்தல் வேண்டும்.
(v) தற்போதுள்ள பிரச்சனையை தீர்க்க ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்கள் தீட்டுவதுடன் அதன் மூலம் நிலையான வளர்ச்சியினை பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும்.
(vi) வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் போது ஊரக பகுதி மக்களின் பிரச்சனைகளை அறிந்த நபர்களையோ அல்லது தலைவர்களையோ மற்றும் தொலைநோக்கு பார்வையுள்ள சிந்தனையாளர்களையோ கலந்தாலோசிக்க வேண்டும்.
10.
செல்வ இலக்கணம்:
1. ஆடம்ஸ்மித்(1723-1790)"நாடுகளின் செல்வத்தின் இயல்பும்,காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு"(1776)என்ற தனது நூலில் "பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என்று வரையறுத்துள்ளார்."
2.அவர் ஒரு நாட்டின் செல்வம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதிகரிக்கப்படுகிறது என்பதை விளக்குகின்றார்.
3.தனி மனிதர்கள் தங்கள் சுய இலாபத்தை முன்னேற்ற விரும்பி செயல்படும் போது,அவர்களை திரைக்குப் பின்னாலிருந்து 'ஒரு புலனாக உந்து சக்தி"வழி நடத்துகிறது என்கிறார்.
4. ஒவ்வொரு மனிதனும் சுய ஆர்வத்தால் தூண்டப்படுவதாக ஸ்மித் கூறகிறார்.
5.உற்பத்தி அளவினை அதிகரிக்க "வேலை பகுப்பு முறையை" அறிமுகப்படுத்துவதை ஆதரிக்கின்றார்.
6.சமுதாயம் மற்றும் நிறுவனங்களில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாக சிறந்த பொருட்கள் கிடைக்க உதவுகின்றன.
திறனாய்வு:
1.ஸ்மித்தைப் பொறுத்தவரை பொருளியல் என்பது 'செல்வத்தைத் திரட்டுதல்' மற்றும் 'செல்வத்தைச் செலவிடுதல்' சார்ந்த நடவடிக்கைகளாகும்.
2.பொருட்சார் செல்வம் என்ற ஒன்றிற்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் தரப்பட்டு முக்கிய பகுதியான 'மனித நலம்' அவரால் புறக்கணிக்கப்படுள்ளது.
3.மதம் மற்றும் ஆன்மீக மதிப்பீடுகள் மேலோங்கியிருந்த காலக் கட்டத்தில் ஸ்மித் தனது வரையறையை வழங்கியுள்ளார்
4.இரஸ்கின் மற்றும் கார்லைல் போன்றோர் நீதிநெறிக்கு புறம்பான சுயநலத்தை கற்றுதருவதாக பொருளியல் வர்ணிக்கப்படுவதால், பொருளியலை 'ஓர் இருண்ட அறிவியல்'எனக் கூறியுள்ளார்.
11.
நிலையான சமநிலை:
1. சமநிலை என்பது மாற்றமில்லா நிலையை அடைவது என்று ஸ்டிக்லர் குறிப்பிடுகிறார்.
2. நுகர்வோர் உச்ச மனநிலைவை பெருகின்றபோது சமநிலையடைகிறார்.
3.உற்பத்தியாளர் உச்ச இலாபம் பெறுகின்ற போது சமநிலையடைகிறார்.
4.உற்பத்தி காரணிகள் முழு வேலை வாய்ப்பையும்,உச்ச வெகுமதியையும் பெறும் போது சமநிலை அடைகின்றன.
5.எனவே, நிலையான சமநிலை என்பது நிலையான வேலை, அளவு,வருமானம்,தொழில்நுட்பம்,மக்கள் தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

வரைபட விளக்கம்:
1. X- அச்சு தேவை மற்றும் அளிப்பின் அளவையும்,
Y- அச்சு விலையையும் குறிக்கிறது.
2. DD-என்பது கீழ்நோக்கி சரியும் தேவைக்கோடு மற்றும்
SS-என்பது மேல்நோக்கி செல்லும் அளிப்பு கோடு ஆகும்.
3.OP-என்பது சமநிலை விலை.
4.OM-என்பது சமநிலை அளவு ஆகும்.
5.புள்ளி-E-ல் தேவை கோடும்,அளிப்புக் கோடும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கிறது.
6.புள்ளி-E-ல் தேவையும், அளிப்பும் சமமாகி சமநிலை அடைகிறது.
12.
அளிப்பு நெகிழ்ச்சி ஐந்து வகைப்படும்:
1. மிகை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் (Es>1)
2. பொருளின் விலையின் ஒரு சதவீத மாற்றம் ஏற்படும்போது பொருளின் அளிப்பு ஒரு சதவீதத்தைவிட அதிக அளவு மாறுபடும்.
2. ஒருமை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாக அமையும் (Es=1)
2. விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்பட்டால் அளிப்பிலும் ஒரு சதவீதம் மாற்றமே ஏற்படும்.
3.குறைவான நெகிழ்ச்சி அளிப்பு:
1.அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாகவே
அமையும் (Es<1)
2.விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்படும்போது அளிப்பில் ஏற்படும் மாற்றம் ஒரு சதவீதத்தை விடக்குறைவாக இருக்கும்.
4.முற்றிலும் நெகிழ்ச்சியற்ற அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி புஜ்ஜிசியத்திற்கு சமமாக உள்ளது (Es=0)
2.விலையில் ஏற்படும் மாற்றம் அளிப்பின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
5.முழுமை நெகிழ்ச்சியுள்ள அளிப்பு:
1.அளிப்பு நெகிழ்ச்சி அளவு முடிவில்லாத நிலையில் இருக்கும் (Es=\(\alpha\))
2. விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அளிப்பில் அளவிட இயலாத மாற்றத்தை ஏற்படுத்தும்.





13.
1. உழைப்பு அழியக்கூடியது.
2.உழைப்பை "உழைப்பாளரிடமிருந்து" பிரிக்க இயலாது.
3. உழைப்பு இடங்களுக்கிடையேயும், தொழில்களுக்கிடையேயும் மெதுவாக நகரக்கூடியது.
4. உழைப்பு இடம் பெயரக்கூடியது.
5.உழைப்பு செயல் உற்பத்திக் காரணியாகும்.
6. உழைப்பு என்பது பல வகைப்படும். இது உடலுழைப்பு மற்றும் அறிவு திறன் சார்ந்த உழைப்பு (ஆசிரியர்)
7.உழைப்பாளர் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் உள்ளார்.
8. உழைப்பின் அலகுகள் பலவகைப்பட்டவை.
9. கூலியானது உழைப்பாளரின் அளிப்பையும் திறனையும் பொருத்து அமையும்.
14.
(i) இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் (UNDP) வெளியிட்டது.
(ii) இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் குறியீடு , கல்வித் குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது.
(1) வாழ்நாள் (ஆயுட்காலம் ) என்பது பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது.
(2) கல்வி அடைவுகள் .
(3) வாழ்க்கைத் தரமானது வாங்கும் சக்தியின் அடிப்படையிலானா தனிநபர் வருமானத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
(iii) மனித மேம்பாட்டுக் குறியிட்டைக் கணக்கிடுவதற்கு முன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள் ஒவ்வொரு குறியீட்டிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
15.
(i)ஆங்கில ஆதிக்கம் இந்தியத் தொழில்களை முடக்கியது.
(ii) ஆங்கில பொருளாதார கொள்கைகள் இந்தியாவின் மூலதன ஆக்கத்தை குன்றச் செய்து தடுத்து நிறுத்தியது.
(iii) நம்மிடமிருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் ஆங்கிலேயரின் மூலதன முன்னேற்றத்திற்கும் நிதியுதவி செய்தன
(iv) இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் வேளாண்மையை சார்ந்து இருந்தபோது இந்திய வேளாண்மைத் தொழில் தேக்கமடைந்து நலிவுற்றது.
(v) இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் நவீன தொழில்துறை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க எவ்வித பங்களிப்பும் வழங்காமல் இந்தியாவின் கைவினைத் தொழில் நிறுவனங்கள் சரிவடைவதற்கும் காரணமாக இருந்தது.
(vi) ஆங்கில காலனி ஆதிக்கத்தால் தோட்டக்கலை, சுரங்கங்கள் , சணல் ஆலைகள் , வங்கிகள் மற்றும் கப்பல் போக்குவரத்து போன்ற துறைகளில் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.
16.
நிறைகுறைப் போட்டியில் இறுதிநிலை உற்பத்தித்திறன் கோட்பாடு:
நிறைகுறைப் போட்டியில் காரணியின் விலை தீர்மானம் விளக்கப்பட்டுள்ளது. இதனை கீழ்க்கண்ட வரைபடம் விளக்குகிறது.
வரைபட விளக்கம்:
(i) AFC என்பது காரணியின் சராசரி செலவுக்கோடு, காரணிகளை வழங்கப்பட்ட விலையை குறிக்கிறது.
(ii) AFC உயரும்போது MFC ஆனது AFC க்கு மேலே மேல்நோக்கிச் செல்லும் கோடாக அமைந்துள்ளது.
(iii) MFC என்பது காரணிகளுக்கு வழங்கப்பட்ட இறுதிநிலைச் செலவை குறிக்கிறது.
(iv) Q என்ற புள்ளியில் MFC யும், MRP யும் சமநிலையில் உள்ளது.
(v) இப்புள்ளியில் உற்பத்தியாளர் அதிகபட்ச இலாபத்தைப் பெறுகிறார்.
(vi) காரணிக்கு செய்த சராசரி செலவு NR மற்றும் சராசரி வருவாய் NQ ஆகும்.
(vii) ஒவ்வொரு அலகு காரணியும் RQ அளவுக்கு சுரண்டப்படுகிறது.
(viii) மொத்த காரணிகளின் எண்ணிக்கை ON க்கு சமம்.
(ix) உற்பத்தியாளர் காரணியை மொத்தமாக சுரண்டிய அளவு.
(கோடிடப்பட்ட பகுதி)
(x) எனவே நிறைகுறைப் போட்டியில் சமநிலையில் உற்பத்திக் காரணி சுரண்டப்படுகிறது.
17.
(i) தமிழ்நாட்டில் உள்ள மொத்த வங்கித் சேவையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 52% பகுக்களுடன் 5,337 கிளைகள் பணியாற்றுகின்றன.
(ii) தனியார் வணிக வங்கிகள் 30% (3,060 கிளைகள் ) பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 13% (1,364 கிளைகள்) ஆகும்.
(iii) வட்டார கிராமிய வங்கிகள் 5% (537 கிளைகள்) மற்றும் 2 அயல்நாட்டு வணிக வங்கிகளும் சேவையில் உள்ளன.
(iv) தமிழ்நாடு வங்கிகளின் மொத்த வைப்பு நிதியானது ஒவ்வொரு ஆண்டும் 14.32% உயர்கிறது.
கடன் வழங்கல்:
(i) முதன்மைத் துறைமுகங்களுக்கான கடன் தொகையானது 45.5%
(ii) வேளாண்மைத் துறைகளுக்கான கடன் வழங்கல் 18%
(iii) தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் இந்தியாவிலேயே அதிககடன் வைப்பு வீதமாக 119.15% விழுக்காட்டைக் கொண்டுள்ளது.
(v) இந்திய அளவில் இதன் வீதம் 77.5% மட்டுமே உள்ளது.
18.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
19.
(i) மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் சில பொருளாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்குகிறது.
(ii) கேரளா கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது.
(iii) தமில்நாடானது சுகாதாரம், உயர்கல்வி, சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்றவற்றில் மிகச் சிறப்பாகவும் பிற மாநிலங்களைவிட மேலானதாகவும் உள்ளது.
(iv) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவதாக உள்ளது.
(v) புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
(vi) பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது.
20.
| வ.எண் | இயல்புகள் | நிறைவுப் போட்டி | முற்றுரிமை | முற்றுரிமைப் போட்டி |
|---|---|---|---|---|
| 1. | உற்பத்தியாளர்கள்/விற்பனையாளர்கள் | எண்ணற்றவர்கள் | ஒருவர் மட்டுமே | அதிகம் |
| 2. | உற்பத்தியின் தன்மை | ஓரியல்பானவை முழுமையான பதிலீட்டு பண்டம் உண்டு |
தனித்துவமானவை (பதிலீட்டு பண்டம் இல்லை) |
பல்வேறு விதமான பண்டம் (நெருங்கிய பதிலீட்டு பண்டம்) |
| 3. | விலை மீது கட்டுப்பாடு | அங்காடி விலையை ஏற்பவர்கள் | விலையை நிர்ணயிப்பவர் | முத்திரை அங்கீகாரம் மூலம் ஓரளவு கட்டுப்பாடு. |
| 4. | உட்புகுதல் வெளியேறுதல் | தடையற்றது | தடையுள்ளது | எளிது. |
| 5. | இலாபம் | குறுகிய காலம் - மிகை இலாபம் நீண்ட காலம்-இயல்பு இலாபம். |
முற்றுரிமை இலாபம் | குறுகிய காலம் - அதிக இலாபம் நீண்ட காலம்-இயல்பு இலாபம். |
| 6. | அங்காடி பற்றி அறிதல் | முழுவதும் | முழுவதும் | எளிது |
| 7. | AR கோடு | பட்டைக்கோடு X - அச்சிற்கு இணையானது | கீழ் நோக்கியது.நெகிழ்ச்சி குறைவு | கீழ்நோக்கியது.அதிக நெகிழ்ச்சி உடையது. |
| 8. | விற்பனை அளவு | அதிகம் | நிறைவு போட்டி ஒப்பிடுகையில் குறைவு | கணிசம் |
| 9. | விலை | ஒரே மாதிரி விலை மற்றும் குறைவு | அதிகம் | மிதமான மற்றும் மாறுபட்ட விலைகள். |
| 10. | அங்காடி சக்தி | இல்லை | அதிகம் | சிறிது. |
21.
உள்ளூர் அங்காடி:
(i) ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம்.
(ii) உதாரணமாக,காய்கறி, பழங்கள்.
மாகாண அங்காடி:
(i) ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
(ii) உதாரணமாக, மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.
தேசிய அங்காடி:
(i) ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக,தேயிலை,காப்பித்தூள்,சிமெண்ட்,மின் சாதன பொருள்.
பன்னாட்டு அங்காடி:
(i) பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக.பெட்ரோல்,தங்கம் ஆகியன.
22.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
23.
இடுபொருள்களின் செலவு உயர்வு:
(i) விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும்.
(ii) தாராள மயமாக்குவதற்கு முன் மாநில அரசாங்கத்திடமிருந்தே விவசாயிகள் விதைகளை வாங்கின.
(iii) தாராள மயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்துவிடப்பட்டன.
(iv) கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு, மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன.
(v) இதன் விளைவாக, விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகின.
வேளாண்மை மானியக் குறைப்பு:
தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உரமானியத்தைக் குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன. மின் கட்டணங்களும் அதிகரித்தன ஆனால் விவசாயப் பொருட்களின் விலை உயரவில்லை.
இறக்குமதி சுங்க வரி குறைப்பு:
(i) உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டன.
(ii) மேலும் 1500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியும் நீக்கப்பட்டன.
(iii) இதன் விளைவாக, சந்தையில் பொருட்கள் குவிந்து, பருத்தி மற்றும் மிள்கு போன்ற பயிர்களின் விலை சரிந்தது.
கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல்:
(i) 1991 க்கு பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையின் பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்கு போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை.
(ii) விவசாயிகள் வட்டிக்காரரைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.
24.
(அ) (i) தேவைச்சார்பு என்பது Qt=f(Pt,Y,A,N,Pc)
(ii) தேவை தீர்மானிக்கும் காரணிகளானவன.
Y=குடும்பத்தின் சராசரி வருமானம்
A = பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு.
N = அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை
Pc= பதப்படுத்தப்பட்ட பாலின் விலை.
(ஆ) இம்மாறிகளில் சார்பற்ற மாறிகள் = A மற்றும் N.A என்பது விளம்பரச் செலவு N என்பது மக்களின் எண்ணிக்கை
(இ) குடும்பத்தின் சராசரி வருமானம் கூடும்பொழுது பதப்படுத்தப்படாத பாலின் தேவை அதிகரிக்கும்.
(ii) Pc- பதப்படத்தப்படாத பாலின் விளம்பரச் செலவு அதிகரித்தால் அப்பாலின் தேவை குறையும்.
(iii) அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பாலின் தேவை அதிகரிக்கும்.
(iv) பதப்படுத்தபட்ட பாலின் தேவை அதிகரித்தால் பதப்படுத்தப்படாத பாலின் தேவை குறையும்.
(v) ஆகையால் Qt=-a Pt+bY-cA+dN-e Pc) எனவே இதனை நேர்கோட்டு சார்பு எனலாம்.இங்கு சாய்வின் மதிப்பு எதிர்மறையாக இருப்பதால் இந்த சார்பு தேவைச் சார்பாக அமையும்.
25.
26.
x என்பது ஒரு பேனாவின் விலையையும் y என்பது ஒரு பென்சிலின் விலையையும் z என்பது ஒரு நோட்டு புத்தகத்தின் விலையையும் குறிப்பிடும் என்க.
சமன்பாட்டில்:
2x + 3y + 1z = 32,
4x + 3y + 2z = 52,
2x + 5y +3z = 60
அணி வடிவில்
\(\left[ \begin{matrix} 2 & 3 & 1 \\ 4 & 3 & 2 \\ 2 & 5 & 3 \end{matrix} \right] \left[ \begin{matrix} x \\ y \\ z \end{matrix} \right] =\left[ \begin{matrix} 32 \\ 52 \\ 60 \end{matrix} \right] \)
\(\Delta \)=2(9-10)-3(12-4)+1(20-6)
=2(-1)-3(8)+1(14)
=-2-24+14=-12
\(\Delta_x\) மதிப்பு காண,
\(\Delta_x\)=\(\left[ \begin{matrix} 32 & 3 & 1 \\ 52 & 3 & 2 \\ 60 & 5 & 3 \end{matrix} \right] \)
\(\Delta_x\)=32(9-10)-3(156-120)+1(260-180)
=32(-1)-3(36)+1(80)
=-32-108+80=-60
\(\Delta_y \)மதிப்பு காண,
\(\left[ \begin{matrix} 2 & 32 & 1 \\ 4 & 52 & 2 \\ 2 & 60 & 3 \end{matrix} \right] \)
\(\Delta_y \)=2(156-120)-32(12-4)+(240-104)
=2(36)-32(8)+1(36)
=72-256+136=-48
\(\Delta_z \)மதிப்பு காண,
\(\left[ \begin{matrix} 2 & 3 & 32 \\ 4 & 3 & 52 \\ 2 & 5 & 60 \end{matrix} \right] \)
\(\Delta_z \) =2(180-260)-3(240-104)+32(14)
=2(-80)-3(136)+32(14)
=-160-408+448=-120
x=\(\frac{-60}{-12}\)=5 ( ஒரு பேனாவின் விலை)
y=\(\frac{-48}{-12}\)=4 (ஒரு பென்சிலின் விலை )
z=\(\frac{-120}{-12}\)=10 (ஒரு நோட்டுப் புத்தகத்தின் விலை)
27.
போக்குவரத்து:
(i) தமிழ்நாடு மிகச்சிறந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளைக் கொண்டது.
(ii) அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது.
(iii) நாட்டிலுள்ள நகரங்கள், கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் அங்காடிப் பகுதிகளை இணைக்கக்கூடிய தரமான சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
சாலை வசதி:
(i) மாநிலத்தில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5,036 கிமீ தொலைவினை இணைக்கிறது.
(ii) சென்னையிலுள்ள கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையங்கள் நம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்களாகும்.
(iii) தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் 1,67,000 கிமீ ஆகும்.
(iv) இதில் 60,628 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
(v) சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரயில் போக்குவரத்து:
(i) தென்னக இரயில்வே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
(ii) தமிழ்நாட்டில் உள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம் 6693 கி.மீ. ஆகும்.
(iii) 690 இரயில் நிலையங்கள் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
வான்வழிப்போக்குவரத்து:
(i) தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக சென்னை விளங்குகிறது.
(ii) சர்வதேச விமான நிலையங்கள், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
(iii) இத்துறையின் தொடர் வளர்ச்சியின் மூலம் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது.
28.
மின் ஆற்றல்:
(i) மின் ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு பிற தென்மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.
(ii) முப்பந்தல் காற்றாலை மையம் கிராம மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது.
(iii) நாகர்கோயில் மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலையிலிருந்து இந்தியாவிற்கு 2% மின் தேவைகளை நிறைவு செய்கிறது.
அணுமின் ஆற்றல்:
கல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை தமிழ்நாட்டிலுள்ள முக்கிய அணுமின் நிலையங்களாகும்.
வெப்ப ஆற்றல்:
(i) தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெப்ப ஆற்றலில் அதிக அளவு அத்திப்பட்டு, எண்ணூர், மேட்டூர், நெய்வேலி ஆகிய இடங்களிலிருந்து பெறப்படுகிறது.
(ii) டீசலை அடிப்படையாகக்கொண்டு அனல்மின் உற்பத்தியில் 34% க்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.
புனல் மின்சாரம்:
(i) தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட புனல்மின் நிலையங்கள் உள்ளது.
(ii) குந்தா, மேட்டூர், மரவகாண்டி, பார்சன் வேலி ஆகியன முக்கியவையாகும்.
சூரிய சக்தி மின்சாரம்:
(i) தமிழ்நாடு சூரிய மின் உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக விளங்குகிறது.
(ii) தென்தமிழகம் சூரிய மின்சக்தி திட்டங்களைச் செயல்படுத்த உகந்த மண்டலமாக திகழ்கிறது.
காற்றாலை மின்சாரம்:
(i) இந்திய அளவில் தமிழ்நாடு அதிகஅளவு காற்றுவழி மின்சார தயாரிக்கும் கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாக உள்ளது.
(ii) கடற்கரை காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க ஏதுவான இடமாக திருநெல்வேலி , தூத்துக்குடியின் தெற்குப்பகுதி மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்கள் உள்ளன.
29.
30.
(i) கடன் நிதிக்கோட்பாடு, புதிய தொன்மைக்கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது
(ii) பொருளியல் வல்லுநர்கள் விக்செல் பெர்டில் ஓலின் வைனர் மற்றும் குன்னர் மிர்தால் ஆகியோர் மேம்படுத்தினார்.
(iii) கடன் அங்காடியில் கடன் நிதியின் தேவை மற்றும் அளிப்பின் சமநிலைப்புள்ளியில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் தேவை:
(i) முதலீட்டுத் தேவை
(ii) நுகர்வுத் தேவை
(iii) பதுக்குவதற்கான தேவை
கடன் நிதியின் அளிப்பு
(i) சேமிப்பு
(ii) வங்கிக்கடன்
(iii) பதுக்கியதை மீட்டல்
(iv) முதலீடு செய்யாதிருத்தல்
சமநிலை:
தேவை மற்றும் அளிப்பின் சமநிலையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
கடன் நிதிகளின் அளிப்பு =சேமிப்பு +வங்கிக்கடன்(BC)+பதுக்கியது மீட்டல் (DH)+முதலீடு செய்யாதிருத்தல்
=S+BC+DH+DI
கடன் நிதிகளின் தேவை =முதலீடு (I) +நுகர்வு (C) +பதுக்குதல்(H )
=I+C+H
வரைபட விளக்கம்:
(i) x அச்சில் கடன்நிதிகளின் தேவை மற்றும் அளிப்பு குறிக்கப்படுகின்றன. y அச்சில் வட்டி விகிதம் குறிக்கப்படுகிறது. IS கொடு மொத்த கடன் நிதிகளின் அளிப்பு கோடாகும். இது சேமிப்புக்கொடு (S) வங்கி கடன்கோடு(BC) பாதுக்காதிருத்தல் கோடு (DH) மற்றும் முதலீடு செய்யாதிருத்தல் கோடு(DI) ஆகியவற்றின் ஒட்டு மொத்தமே ஆகும்.
(ii) இந்த LD கோடு LS கோடும் E என்ற புள்ளியில் வெட்டி கொள்கின்றன.
(iii) இது சமநிலைப்புள்ளி ஆகும்.
(iv) இந்த புள்ளியில் வட்டி விகிதம் OR கடன் நிதிகளின் அளவு OM.
குறைபாடு:
(i) வட்டி வீதத்தினை நிர்ணயிக்கும் பல காரணிகள் இங்கு சேர்க்கப்பட்டு உள்ளன. ஆனாலும் சரியான செய்திப் பரவலின்மை, ஒழுக்கக் கோடுகள் போன்ற காரணிகள் இன்று மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
(ii) வருமான அளவை முன்கூட்டியே தெரியாமல் கடன்நிதிக்கோட்பாட்டை தீர்மானிக்க இயலாது.
(iii) உண்மை காரணிகளை சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றை பணம் சார்ந்த காரணியான வங்கிக்கடன் நீர்மை விருப்பம் ஆகியவற்றின் தொடர்புபடுத்துவது கடினம் .
31.
32.
(i) அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19,1969 அன்று தேசியமயமாக்கமுடிவு செய்தது.
(ii) 1980 ஆம் ஆண்டில் அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கிறது.
தேசியமயமாக்கலின் நோக்கங்கள்:
(i) பின்வரும் நோக்கங்களை அடைவதற்காக இந்திய அரசு வணிக வங்கிகளை தேசியமயமாக்கிறது
(ii) தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதுயாகும்.
(iii) வேளாண்மை சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுவதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிதி தேவைபட்டது.
(iv) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமை கட்டுப்படுவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாக கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன
(v) இந்தியாவில் ஏறத்தாழ 70% மக்கள் கிராமபுறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.கிராமப்புற மக்களிடைய வங்கி செயல்படுகளை ஊக்குவித்தல் மிகுந்த அவசியமாகிறது.
(vi) வங்கி வசதிகள் இல்லாத இடத்தில் வட்டாரங்களிடையே இருந்து ஏற்றத்தாழ்வுகளை குறைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உதவுகின்றன.
(vii) சுதந்தரத்திற்கு முன் இருந்து வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.தேசிய மயமாக்கப்பட்ட பிறகு கிராம புற மற்றும் நகர்புறங்களில் பல புதிய வங்கி கிளைகள் தொடங்கப்பட்டன.
(viii) தேசிய மயமாக்கப்பட்ட பின் வேளாண்துறை மற்றும் அதை சார்ந்த பிற துறைகளுக்கு தேவையான கடன்களை வங்கிகள் கொடுக்க ஆரம்பித்தன.
(ix) 1991 ஆம் ஆண்டின் புதிய தொழிரகொள்கைக்கு பிறகு இந்திய வங்கித்துறை பன்முகத் போட்டி திறமை உற்பத்தி திறன் போன்ற பல்வேறு முகங்களை எதிர்நோக்கி வருகிறது.
33.
ஊரகக் கடன் சுமை:
ஊரக கடன்சுமை என்பது கிராம மக்கள் குறிப்பிட்ட காலத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் கடனின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஊரகக் கடன்களுக்கான காரணங்கள்:
விவசாயிகளின் ஏழ்மை நிலை:
வறுமைக்கொடும் சுழலானது நுகர்விற்காகவும், விவசாயத் தொழிலை மேற்கொள்வதற்காகவும் மற்றும் குடும்ப விழாக்களுக்காகவும், விவசாயிகளின் கடன் பெறத் தூண்டுகிறது.
பருவமழை பொய்த்தல்:
(i) அடிக்கடி பருவமழை பொய்த்துப் போவது விவசாயிகளுக்கு சாபமாக அமைகிறது.
(ii) விவசாயம் எப்போதும் சிறக்கும், கடன்களை அடைக்கலாமென அவர்களால் கணிக்க முடியவில்லை.
வழக்குகள்:
(i) நிலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால், அதிக கடன் பெறுகிறார்கள்.
(ii) கல்வியறிவின்மையாலும், அறியாமையாலும் வழக்குகள் நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்படுகிறது.
வட்டிக்கு கடன் தருவோர் மற்றும் அதிக வட்டி வீதம்:
உள்ளூரில் வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் அதிக வட்டி வசூலித்தல் (ம) அசலுடன் வட்டியை சேர்த்து அதிகரித்துக்கொண்டே செல்வதால் விவசாயிகள் கடனிலேயே மூழ்கும் நிலை உளது.
34.
(1) ஊரக ஒரு நிறுவனம்:
கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு ஊரக சமுதாயத்தின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
(2) வேளாண்மையை சார்ந்திருத்தல்:
ஊரக பொருளாதாரம் இயற்கையையும் வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது.
(3) ஊரக மக்களின் வாழ்க்கை முறை:
ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொது பணிகளான கல்வி, வீடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது.
(4) மக்கள் தொகை அடர்த்தி:
ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகவும் வீடுகள் கிராமம் முழுக்க பரவிக் காணப்படுகிறது.
(5) வேலைவாய்ப்பு:
(i) வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
(ii) வேலையின்மை என்பது தொழிலாளர்கள், வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.
(6) வறுமை:
வறுமை என்பது அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலை.
(7) கடன் சுமைகள்:
(i) ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்க நிலை குறை ஊதிய வேலை, பருவகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும்.
(ii) ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டு செல்கின்றான்.
(8) ஊரக வருமானம்:
ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலைவாய்ப்புகளையோ தர இயலவில்லை.
(9) சார்ந்திருத்தல்:
ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்ய தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
(10) இரட்டைத் தன்மை:
எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டை தன்மை ஆகும்.
(11) ஏற்றத்தாழ்வு:
ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.
(12) குடிப்பெயர்ச்சி:
(i) ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்கலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
(ii) "இரட்டை நஞ்சாக்கல்" என சுமாசர் குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் சிறியது அழகு என்ற நூலில் விளக்குகிறார்.
35.
ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை (2015-2020):
ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்துதல், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் "இந்தியாவில் தயாரிப்பு" மற்றும் "மின்னணு இந்தியா" போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே இக்கொள்கையின் முதன்மையான நோக்கமாகும்.
சிறப்பியல்புகள்:
(i) ஏற்றுமதி உதவிகளை 25% அளவு குறைக்கவும் இந்தியப் பொருட்களை ஊக்குவிக்கவும் "இந்தியத் தயாரிப்பு" என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
(ii) ஏற்றுமதியாளர் / இறக்குமதியாளர் சுயவிவர ஆவணங்களின் அசல் நகல்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
(iii) டிஜிட்டல் இந்தியா முறைப்படி, வரிதாக்கல், முத்திரைத் தாள் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றிற்கான கைபேசி செயலி மற்றும் பட்டையக் கணக்காளர், கணக்குக் காசாளர் போன்றோரால் மின்னணு முறையில் கையொப்பமிட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றது.
(iv) பாதுகாப்பு ராணுவக்கிடங்கு விண்வெளி மற்றும் அணுசக்தி போன்றவை தொடர்பான ஏற்றுமதிக் கோரிக்கைகளுக்கு கால அளவு 24 மாதங்களாகும்.
(v) தற்போது உலக வர்த்தகத்தில் 3% ஆக இருக்கின்ற இந்தியாவின் பங்கை 2020 க்குள், ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை இருமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
36.
37.
1. இரும்புத் தாது:
1. இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது.
2. இரும்பு தாது 4630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத்தாது 10619 மில்லியன் இருப்பு உள்ளது.
3. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
2.நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1. பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3. மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக் கூடிய இடங்களாகும்.
3. அலுமினியத்தாது (பாக்சைட்):
1. பாக்சைட்- அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
4.மைக்கா:
1. மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் தனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2. இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்கா தான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
3. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
5. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1. இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், பாடர்பூர், நகர்க்காட்டிகா, காசிம்பூர்,பள்ளியரியா, ரூத்ராபூர், சிவசாகர், மார்ன்.
6.தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்சசூரில் ஹட்டி தங்க வயல் சுரங்கத்திலும், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
7. வைரம்:
1. UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2. அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னுல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது.
3.புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியுபடா பார்கர் மாவட்டம், மாத்தூர் கிருஷ்ணா பகுதி கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா பகுதி மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
38.
1. இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம்:
1. இந்தியப் பொருளாதாரம் கலப்பு பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2. தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரிய முறையில் செயல்படுவது. ஒரு புறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன.
2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:
1. இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
3. இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது.
3.வளர்ந்து வரும் சந்தை:
1. முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
2.இந்தியா குறைந்த முதலீட்டில் குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாந்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது.
4. வளர்ந்து வரும் பொருளாதாரம்:
விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.
5.வேகமாக வளரும் பொருளாதாரம்:
இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது.
6. வேகமாக வளரும் பணிகள் துறை:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும்.
7. பேரளவு உள்நாட்டு வளர்ச்சி:
நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதால் உள்நாட்டு நுகர்வு பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது.
8. நகரப் பகுதியின் விரைவான வளர்ச்சி:
பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும்.
9. நிலையான பேரளவு பொருளாதாரம்:
1. நாடுகளில் இந்திய ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம் "என்று குறிப்பிடுகிறது.
10. மக்கள்தொகை -பகுப்பு;
1. இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது.
2.இந்தியா அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
3.நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது.
4.வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் ஈர்க்கிறது.
39.
40.
ஓரியல்பான பண்டங்கள் மற்றும் ஒரே மாதிரியான விலை:
வாங்கும் மற்றும் விற்கும் பண்டங்கள் ஒத்த தன்மையுடையவையாகவும் முற்றிலும் பதிலீட்டு பண்டங்களாகவும் இருக்கும்.
எண்ணற்ற விற்பவர் மற்றும் வாங்குபவர் இருப்பார்.உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடையில்லை:
(i) குறுகிய காலத்தில் ஒரு திறமையான உற்பத்தியாளர் குறைந்த செலவில் உற்பத்தி செய்து மிக அதிக இலாபம் பெறுவார்.
(ii) இதனால் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாளர் தொழிற்சாலையில் நுழையவும்,வெளியேறவும் வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து செலவு இல்லை :
போக்குவரத்து செலவு இல்லாததால் ஒரே மாதிரியான விலை நிலவுகிறது.
உற்பத்தி காரணிகள் இடம் பெயரும்:
ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுவதற்கு முழு சுதந்திரம் பெற்றுள்ளதால் விலை சரி செய்யப்படுகிறது.
அங்காடி நிலை பற்றி அறிந்திருப்பார்:
அங்காடி மற்றும் பண்டத்தின் தரம் பற்றி வாங்குபவரும், விற்பவரும் நன்கு அறிவர்.
அரசின் தலையீடு இல்லை:
மூலப்பொருளின் அளிப்பு மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றில் அரசின் தலையீடு இல்லை.
41.

42.
மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.
1. மாறும் விகித விளைவு விதி:
ஒரே ஒரு உள்ளிட்டினை மட்டும் அதிகப்படுத்தி, பிற உள்ளீடுகளை மாற்றாமல், உற்பத்தியைப் பெருக்க முயன்றால் மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் உயர்ந்து பின்பு குறிப்பிட்ட புள்ளியில் நிலையான பின் குறைந்து செல்லும்.
2. இலக்கணம்:
ஸ்டிக்லரின் கூற்றுப்படி,"உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிற காரணிகளின் அளவு நிலையாக இருக்கும் போது, ஓர் உற்பத்திக் காரணி சம உயர்வாக அதிகரிக்கும் போது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு பிறகு உற்பத்தியின் அளவு குறையும், அதாவது இறுதிநிலை உற்பத்தி குறையும்."
3. எடுகோள்கள்:
1. ஒரே ஒரு உற்பத்திக் காரணியின் அளவு மட்டும் உயர்த்தப்பட்டு, ஏனைய உற்பத்திக் காரணிகளின் அளவு மாறாமல் இருக்கிறது.
2. மாறும் உற்பத்திக் காரணிகள் ஒரே தன்மையுடையவை.
3. உற்பத்திப் பொருளானது பரும அலகுகளால் அளவிடப்படுகிறது.
4. தொழில் நுட்ப நிலையில் மாற்றம் இல்லை.
5. பொருளின் விலையில் மாற்றம் இல்லை.
4. அட்டணை:
| மாறும் உள்ளீடுகளின் (L)அலகுகள் | மொத்த உற்பத்தி (TPL) | இறுதிநிலை உற்பத்தி | சராசரி உற்பத்தி | நிலைகள் |
| 1 2 3 |
2 6 12 |
2 4 6 |
2 3 4 |
I |
| 4 5 |
16 18 |
4 2 |
4 3.6 |
II |
| 6 7 |
18 16 |
0 -2 |
3 2.28 |
III |
1. அட்டவணையின்படி உற்பத்தி மூன்று நிலைகளை கொண்டது.
2. முதலில் அதிகரித்து, பின்பு நிலையாகி, பின்பு குறைகிறது.
3. முதலில் குறைந்த பின்பு பூஜ்ஜியமாகி பின்பு எதிர்கணய செல்கிறது.

வரைபட விளக்கம்:
உழைப்பாளர்களின் எண்ணிக்கை X-அச்சிலும், TP, AP மற்றும் MP Y-அச்சிலும் குறிக்கப்பட்டுள்ளன.
முதல் நிலை (I):
1. இறுதிநிலை உற்பத்தி (MP)3 உழைப்பாளர்களை பயன்படுத்தும் வரை அதிகரிக்கிறது.
2.MP>AP
3.மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் அதிகரிக்கிறது. இங்கு A-என்ற புள்ளி "வளைவு மாற்றப்புள்ளி" ஆகும்.
இரண்டாம் நிலை (II):
1. இறுதிநிலை உற்பத்தி குறைந்து 6-அலகு உழைப்பை பயன்படுத்தும் போது புஜ்ஜியமாகிறது.
2. நான்காவது உழைப்பை பயன்படுத்தும் போது MP-AP இதில் MP வளைகோடானதுAP வளைகோட்டைவிட கீழ் அமையும்.
3. TP குறைந்து செல் வீதத்தில் அதிகரிக்கும்.
மூன்றாம் நிலை(III):
1. 7அலகு உழைப்பாளர்களை பயன்படுத்தும் போது MP எதிர்கணியமாகிறது.
2. AP குறைந்து சென்றாலும் நேர்மறை மதிப்பாகவே இருக்கும்.1 அலகு உழைப்பு பயன்படுத்தும்போது TP குறையத் தொடங்கும்.
43.
1. ஒரு நிறுவனம் கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை எனில், அந்நிறுவனத்தின் AR மற்றும் MR மாறாமல் அதாவது AR=MR ஆக இருக்கும்.
2. ஒரு நிறுவனம், கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இருக்கும் எனில் AR மற்றும் MR வெவ்வேறு அளவுகளாக இருக்கும்.
மாறாத விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. விலையில் மாற்றம் இல்லையினில், மற்றும் வளைகோடுகள் ஒன்றிணைந்து ஒரே கோடாக இருக்கும்.
2. நிறைவுப் போட்டியில் விலையில் மாற்றம் இருக்காது. எனவே AR மற்றும் MR வளைகோடுகள் X-அச்சுக்கு இணையாக ஒரு படுக்கைக் கோடாக இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகு | விலை P | மொத்த வருவாய்(TR) | சராசரி வருவாய்(AR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 5 | 5 | 5 | 5 |
| 2 | 5 | 10 | 5 | 5 |
| 3 | 5 | 15 | 5 | 5 |
| 4 | 5 | 20 | 5 | 5 |
| 5 | 5 | 25 | 5 | 5 |
| 6 | 5 | 30 | 5 | 5 |

மாறும் விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. ஒரு நிறுவனம் அதிக பண்டங்களை விற்க வேண்டுமெனில், விலை குறைவாக இருக்க வேண்டும்.
2.விலை குறையும் போது AR மற்றும் MRம் குறைந்து கொண்டே செல்லும்.
3. MR ஆனது ARஐ விட அதிகமாக குறைந்து கொண்டே செல்லும்.
4. MR வளைகோடானது AR வளைகோட்டிற்கு கீழே உள்ளது.
5. கீழ் நோக்கி சரிந்து செல்லும் வருவாய் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
6.சில சமயங்களில் வருவாய் கோடுகள் மையத்தை நோக்கி குவிவு வளைவாகவோ (அ) குழியான வளைவாகவோ இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகுகள் (Q) | விலை (P) | மொத்த வருவாய்(TR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 10 | 10 | 10 |
| 2 | 9 | 18 | 8 |
| 3 | 8 | 24 | 6 |
| 4 | 7 | 28 | 4 |
| 5 | 6 | 30 | 2 |
| 6 | 5 | 30 | 0 |
| 7 | 4 | 28 | -2 |
| 8 | 3 | 24 | -4 |
| 9 | 2 | 18 | -6 |
| 10 | 1 | 10 | -8 |

44.
மொத்த மாறாச் செலவு (TFC):
1. மாறாத உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மொத்த மாறாச் செலவாகும்.
2. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும், குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறுபடுவதில்லை.
மொத்த மாறும் செலவு (TVC):
1. மாறும் உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மாறும் செலவாகும்.
2.உற்பத்தி புஜ்ஜியமாக இருக்கும் போது மாறும் செலவு புஜ்ஜியமாக உள்ளது.
மொத்தச் செலவு(TC):
1. ஓர் உற்பத்தியில் ஏற்படுகின்ற பல்வேறு செலவுகளில் மொத்த கூடுதல் அந்நிறுவனத்தின் மொத்தச் செலவு எனப்படுகிறது.
2.

சராசரி மாறாச் செலவு (AFC):
1. சராசரி மாறாச் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறாச் செலவு என்பதாகும்.
2. சராசரி மாறாச் செலவு என்பது, மொத்த மாறாச் செலவை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AFC={TFC\over Q}}\)

சராசரி மாறும் செலவு (AVC):
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2. மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC \over Q}}\)

4.AVC- வளைகோடு 'U'வடிவத்தில் இருக்கும்.
சராசரி செலவு(AC):
1.சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான ஓர் அலகு செலவு ஆகும்.
2. (அ) \(\boxed{AC=AFC+AVC}\)
\(\boxed{AC={TC\over Q}}\)

| Q in unit | TFC in (Rs) | TVC in (Rs) | TC(TFC+TVC) in (Rs) | ATC TC/Q(in Rs) | AFC (TFC / Q )in (Rs) | AVC (TVC / Q)in (Rs) | ATC (AFC+AVC)(in Rs) |
| 0 | 1000 | 0 | 1000 | 1000/0=\(\alpha\) | 0 | 0 | 0+0=0 |
| 1 | 1000 | 200 | 1200 | 1200/1=1200 | 1000 | 200 | 1000+200=1200 |
| 2 | 1000 | 300 | 1300 | 1300/2=650 | 500 | 150 | 500+150=650 |
| 3 | 1000 | 400 | 1400 | 1400/3=466 | 333 | 133 | 333+133=466 |
| 4 | 1000 | 600 | 1600 | 1600/4=400 | 250 | 150 | 250+150=400 |
| 5 | 1000 | 900 | 1900 | 1900/5=380 | 200 | 180 | 200+180=380 |
இறுதிநிலைச் செலவு (MC):
1.கூடுதலாக ஓர் அலகுப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படுகின்ற கூடுதல் இறுதிநிலைச் செலவு எனப்படும்.
2.\(\boxed{MC=\triangle TC / \triangle Q}\) (or) \(\boxed{MC= TC_n-TC_{n-1}}\)

45.
விலைத் தேவை நெகிழ்ச்சியை நான்கு வகைகளில் அளவிடலாம்.
1. விழுக்காட்டு முறை:
1. \(EP ={\triangle Q\over \triangle P}\times {P\over Q}\)
2. இதுவிகிதாசார முறை என்றும் அழைக்கப்படுகிறது.
3. விகிதாச்சார முறையில்
\(EP={\% \triangle Q\over \% \triangle P}\)
2. மொத்தத் செலவு முறை:
1. நுகர்வோரின் மொத்த் செலவில் ஏற்படும் மாற்றத்தையோ (அ) நிறுவனத்தின் மொத்த வருவாயின் ஏற்படும் மாற்றத்தையோ அளவிடுவதன் மூலம் தேவையானது நெகிழ்ச்சி உள்ளதா என்பதை எளிய முறையில் அறியமுடியும் என மார்ஷல் குறிப்பிடுகிறார்.
மொத்த வருவாய்= விலை x விற்பனை அளவு
TR= P x Q
மொத்த ஒதுக்கீட்டு முறை

விலைக்கும் மொத்தச் செலவிற்கும் எதிர்மறை உறவு இருக்குமெனில் இங்கு தேவை நெகிழ்ச்சியுள்ளதாக இருக்கும்.
3. புள்ளி முறை:
நேர் தேவைக் கோட்டில் குறிப்பிட்ட புள்ளியினுடைய வலப்பகுதியை இடப்பகுதியால் வகுக்க கிடைக்கும் விகிதத்தைக் கொண்டு புள்ளிமுறை அளவிடலாம்.



4. வில்முறை:
1. ஒரு தேவை வளைகோட்டின் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள பகுதியே வில் எனப்படும்.
2.\(EP={Q_1-Q_2 \over Q_1+Q_2}\div {P_1-P_2\over P_1 +P_2}\)
\({\triangle Q \over Q_1+Q_2}\div {\triangle P\over P_1+P_2}\downarrow \uparrow \)
\({\triangle Q \over Q_1+Q_2}\times { P_1+P_2 \over \triangle P}\)
\({\triangle Q \over Q_1+Q_2}\times { P_1+P_2 \over \triangle P}\)
\({\triangle Q \over \triangle P}\times { P_1+P_2 \over Q_1+Q_2 }\)
Q1=பண்டத்தின் முந்தைய அளவு
P1=பண்டத்தின் முந்தைய விலை
\(\triangle\)=மாற்றம்
Q2=புதிய அளவு
P2=புதிய விலை
46.



47.
1. உற்பத்தி வாய்ப்பு வளைகோடு:
இரு பொருள்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் எதை எவ்வளவு என்ற வினாவிற்கு பதில் தரும் வகையில் வடிவியல் சாதனம் மூலம் விளக்குவதே, உற்பத்தி வாய்ப்பு வளைகோடு எனப்படும்.
2. எடுகோள்கள்:
1. காலத்தில் மாற்றல் இல்லை,
2. உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் நிலையானது.
3. கொடுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இரு பண்டங்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.|
4. உற்பத்திக் காரணிகளின் அளவும், தரமும் கொடுக்கப்பட்டுள்ளன.
5. உற்பத்தியில் குறைந்துசெல் விதி நிலவுகிறது.
3. உற்பத்தி வாய்ப்பு அட்டவணை:
1. கீழ்காணும் அட்டவணையைப் பயன்படுத்தி ஓர் உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டை வரையலாம்.
| உற்பத்தி வாய்ப்புகள் | டன் கணக்கில் உணவு உற்பத்தியின் அளவு |
மோட்டார் வாகனத்தின் உற்பத்தி எண்ணிக்கை |
| I | 0 | 25 |
| II | 100 | 23 |
| III | 200 | 20 |
| IV | 300 | 15 |
| V | 400 | 8 |
| VI | 500 | 0 |
2. இந்த அட்டவணையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தில் அனைத்து வளங்களும் உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டால் அதிகபட்சம் 500 டன் உணவை உற்பத்தி செய்ய முடியும் என்பதை அறியலாம்.
3. உற்பத்தி வாய்ப்பு அட்டவணைக் கொண்டு உற்பத்தி வாய்ப்பு வளைகோடு வரையலாம்

4. வரைபட விளக்கம்:
1.X - அச்சில் உணவின் அளவும், Y- அச்சில் மோட்டார் வாகனத்தின் எண்ணிக்கையும் கட்டப்பட்டுள்ளது.
2. வெவ்வேறு ஆறு வகையான உற்பத்தி வாய்ப்புகளும் P1,P2,P3,P4,P5 மற்றும் P6என்ற புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளன.
3. அளிக்கப்பட்ட வளங்களையும், தொழில் நுட்பத்தையும் கொண்டு ஒரு சமுதாயமோ (அ)நிறுவனமோ உற்பத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய வரைபாதையை உற்பத்தி வளைகோடு காட்டுகிறது.
4. உற்பத்தி வாய்ப்பு வளைகோடில் உள்ள P7 போன்ற புள்ளியை சமுதாயத்தால் அடைய முடியும், ஆனால் அப்போது வளங்கள் முற்றிலுமாக பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும்.
5. உணவு உற்பத்தியின் அளவை நிலைபெறச் செய்து மோட்டார் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம் அல்லது ஒரே சமயத்தில் இரண்டின் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும்.
5.உற்பத்தி வாய்ப்பு வளைகோடு மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி இடம் பெயர்வதற்கான காரணங்களாவன.
1. உற்பத்தி சாதனங்களின் அளிப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும்,
2. தொழில் நுட்ப நிலையில் ஏற்படும் மாற்றம்.
3. வளங்களின் அளிப்பு அதிகரிப்பதாலும், தொழில்நுட்ப மேம்பாட்டினாலும், காலப்போக்கில் பொருளாதாரத்தின் உற்பத்தி ஆற்றல் அதிகரிக்கலாம்.
48.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards