11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/12/2018
+1 Full Test ( Public Model )
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
ppp-ன் விரிவாக்கம் ________.
people per policy
Power Point Presentation
Programme point Presentation
Public Programme Presentation
2.
1000 ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் விகிதத்தை குறிப்பது ________.
பாலினம் விகிதம்
வாழ்நாள் எதிர்பார்ப்பு
எழுத்தறிவு விகிதம்
மக்கள் தொகை அடர்த்தி
3.
_________ பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.
மொத்த பயன்பாடு
இயல்பெண் பயன்பாடு
சராசரி பயன்பாடு
மேற்கூறிய அனைத்தும்
4.
ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது _______ ஆகும்.
10%
20%
15%
25%
5.
ஆய்க்கோஸ் (Oikos)என்றால் _________ என்று பொருள்படும்.
பாலிஸ்
நிர்வாகம்
இல்லங்கள்
மேற்கூறிய அனைத்தும்
6.
திறமை வாய்ந்த உழைப்பாளர் _________
மூலதனம்
நிலம்
தொழில் முனைவோர்
எதுவுமில்லை
7.
இந்திய உப்பு உற்பத்தியில் 30%மும், மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70% மும் _______________ ல் உற்பத்தியாகிறது.
கோயம்புத்தூர்
சேலம்
திருநெல்வேலி
தூத்துக்குடி
8.
கூலி _____________வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
9.
மிகக் குறுகிய கால அங்காடி ______ அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது.
நீண்ட காலம்
குறுகிய காலம்
அங்காடிக்காலம்
தொலைநோக்குக் காலம்
10.
ஒரு அணியின் அணிக்கோவை மதிப்பு \(\Delta \) = 0 என்றால் அச்சார்புகளுக்குதீர்வு _______________
உண்டு
கிடையாது
எண்ணிலி (infinity)
பூஜ்யம்
11.
எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்
பரிமாற்ற நோக்கம்
முன்னெச்சரிக்கை நோக்கம்
ஊக நோக்கம்
தனிப்பட்ட நோக்கம்
12.
முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு
1914
1814
1941
1841
13.
எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?
நெல்
கரும்பு
நிலக்கடலை
தேங்காய்
14.
கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.
முதலீட்டை திரும்பப் பெறுதல்
தேசியமயம் நீக்கல்
தொடர் நிறுவனமாக்கல்
இவை அனைத்தும்.
15.
16.
நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி
வளர்ந்து செல் விகித அளவு
குறைந்து செல் விகித அளவு
மாறா விகித அளவு
மாறும் விகித அளவு
17.
கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையாகையான அங்காடியில் விலை மிக அதிகமாக இருக்கும்?
நிறைவுப் போட்டி
முற்றுரிமை
இருமுக முற்றுரிமை
சில்லோர் முற்றுரிமை
18.
தனக்குச் சொந்தமான வளங்களை நிறுவனத்திற்கு செய்யும் செலவு ----------------
உண்மைச் செலவு
வெளியுறு செலவு
பணச் செலவு
உள்ளுறு செலவு
19.
20.
வளர்ச்சி இலக்கணம் என்பது
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
எண்ணற்ற வளங்கள் மற்றும் விருப்பங்களுக்கான பிரச்சனையாகும்
செல்வத்தை உற்பத்தி செய்வது மற்றும் பகிர்வது
மனிதர்களின் பருப்பொருள் சார்ந்த நலன்
21.
சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?
22.
அளிப்பு நெகிழ்ச்சியின் சூத்திரத்தை எழுதுக
23.
நீர்மை விருப்பக் கோட்பாட்டின் நோக்கங்கள் யாவை?
24.
நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்?
25.
எந்த நோக்கத்திற்காக பணம் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன?
26.
\(\int { 4xdx=4\frac { { x }^{ 1+1 } }{ 1+1 } +C } \)
27.
சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு வகையான நிலஉடைமை முறைகள் யாவை?
28.
பாரம்பரிய சுற்றுலா என்பது என்ன?
29.
இந்திய பொருளாதாரத்தின் ஏதேனும் ஒரு இயல்பினைக் கூறு.
30.
பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக
31.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
32.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
33.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
34.
இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக.
35.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
36.
பதப்படுத்தப்படாத பாலின் அங்காடியை ஆய்வு செய்யும் ஒரு ஆராச்சியாளர்கள் Qt = f (Pt,Y,A,N,Pc) என்ற சார்பினை எடுத்துக்கொண்டார்.இதில் Qt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை. Pt என்பது பதப்படுத்தப்படாத பாலின் தேவை.Y என்பது ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம்,A என்பது பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு,N என்பது அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் Pc என்பது பதப்படுத்தப்பட்ட பாலின் விலையையும் குறிக்கும் எனில்
அ) Qt=f(Pt,Y,A,N,Pc) என்பதை வார்த்தைகளால் விளக்குக.
ஆ) இம்மாதிரிகளின் சார்பற்ற மாறிலிகளைக் குறிப்பிடுக.
இ) இச்சார்பிற்கு குறிப்பிட்ட வடிவம் தருக.
[பொருளியல் அறிவைப் பயன்படுத்தி சார்பற்ற மாறிகளின் குணகம் நேரிடை அல்லது எதிரிடை எனக் குறிப்பிடுக].
37.
வகைக்கெழு கணித முறையைப் பயன்படுத்தி தேவையின் சமன்பாடு P = 60 − 0.2Q ஆக இருக்கும்போது
(i) P = 0
(ii) P=20
(iii) P = 40 என்றால் தேவை நெகிழ்ச்சிக் கெழு மதிப்பு காண்.
38.
தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.
39.
வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?
40.
ஊரக பொருளாதாரப் பிரச்சனைகளை ஆராய்க.
41.
இந்தியப் பொருளாதாரத்தின் வலுவான அம்சங்களை விவரி.
42.
சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி
43.
மொத்தச் செலவு = 10+Q3, Q = 5 எனில் AC, AVC, TFC, AFC ஆகியவற்றைக் கண்டுபிடி
44.
45.
p= 70 - 4x - x2 ஆகவும் தேவை Xo என்பது 6 எனவும் அமையுமெனில் நுகர்வோர் உபரி என்ன?
46.
'J.C குமரப்பா' குறிப்பு வரைக.
47.
பகுதிச் சமநிலைக்கும் பொதுச் சமநிலைக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
48.
மொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது?
49.
இந்தியாவின் கல்விக்கடன்கள் பற்றி விவரி.
50.
பசுமைப்புரட்சி - விளக்குக
51.
காத்திருத்தல் வட்டிக்கோட்பாட்டை எழுதுக
52.
SHG யின் பண்புகளைக் கூறுக
53.
புதிய வர்த்தகக் கொள்கையின் சாராம்சத்தை விளக்குக
54.
நீண்ட கால செலவு வளைகோட்டை தக்க வரைபடத்துடன் விளக்குக.
1.
(b)
Power Point Presentation
2.
(a)
பாலினம் விகிதம்
3.
(b)
இயல்பெண் பயன்பாடு
4.
(d)
25%
5.
(c)
இல்லங்கள்
6.
(c)
தொழில் முனைவோர்
7.
(d)
தூத்துக்குடி
8.
(d)
நான்கு
9.
(c)
அங்காடிக்காலம்
10.
(b)
கிடையாது
11.
(b)
முன்னெச்சரிக்கை நோக்கம்
12.
(a)
1914
13.
(a)
நெல்
14.
(d)
இவை அனைத்தும்.
15.
(b)
16.
(a)
வளர்ந்து செல் விகித அளவு
17.
(d)
சில்லோர் முற்றுரிமை
18.
(d)
உள்ளுறு செலவு
19.
(b)
20.
(a)
இயங்கு நிலை பொருளாதார கட்டமைப்பில் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சனை
21.
1.சமநோக்கு வளைகோட்டின் தொகுதி என்பது இரண்டு பண்டங்களுக்கான வெவ்வேறு நிலையான பயன்பாட்டை விளக்கும் பல சமநோக்கு வளைகோடுகளைக் கொண்டதாகும்.
2.மேலே உள்ள சமநோக்கு வளைகோடு அதிக அளவு திருப்தியையும், கீழே உள்ள சமநோக்கு வளைகோடு குறைந்த அளவு திருப்தியையும் குறிக்கின்றன.
22.
\(Es={\triangle Qs\over Qs}\div{\triangle P\over P}\)
\(Es={\triangle Qs\over Qs}\times{ P\over \triangle P}\)
\(\therefore \boxed {Es={\triangle Qs\over \triangle P}\times{ P\over Qs }}\)
Q=அளிப்பின் அளவு
P=விலை
\(\triangle\) =மாற்றம்
23.
24.
நிறைகுறைப் போட்டி எனும் கருத்தை 1933-ல் இங்கிலாந்து நாட்டின் ஜோன்ராபின்சன் (John Robinson) மற்றும் அமெரிக்காவின் E.H.சேம்பர்லின் (Chamberlin) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
25.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பபை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
26.
\(=4\frac { { x }^{ 2 } }{ 2 } +c\)
\(=2{ x }^{ 2 }+C\)
27.
சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் காணப்பட்ட மூன்று வகையான நிலஉடைமை முறைகளாவன:
(1) ஜமீன்தாரி முறை (அ) நிலச்சுவான்தாரா முறை
(2) மஹல்வாரி முறை (அ) இனவாரி முறை
(3 )இரயத்துவாரி முறை (அ) சொந்த சாகுபடி முறை
28.
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் (மதுரை), ஸ்ரீரங்கநாதா சுவாமி கோயில் (ஸ்ரீரங்கம்), பிரகதீஸ்வரர் ஆலயம் (தஞ்சாவூர்) மற்றும் மகாபலிபுர சிற்பகோயில்கள் ஆகியவை பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.
29.
இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு வேளாண்மையாகும்.
30.
1. வடிவப் பயன்பாடு
2. காலப் பயன்பாடு
31.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
32.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
33.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
34.
உள்ளூர் அங்காடி:
(i) ஒரு பொருள் அல்லது பணி உற்பத்தி செய்யப்படும் இடத்திலேயே பரிமாற்றம் செய்வதை உள்ளூர் அங்காடி என்கிறோம்.
(ii) உதாரணமாக,காய்கறி, பழங்கள்.
மாகாண அங்காடி:
(i) ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சில வகையான பொருள்கள் மற்றும் பணிகள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
(ii) உதாரணமாக, மாகாண அளவில் உள்ள செய்தித்தாள்கள்.
தேசிய அங்காடி:
(i) ஒரு நாடு முழுவதும் விற்கக்கூடிய மற்றும் வாங்கக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை கொண்ட சந்தையை தேசிய அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக,தேயிலை,காப்பித்தூள்,சிமெண்ட்,மின் சாதன பொருள்.
பன்னாட்டு அங்காடி:
(i) பல்வேறு நாடுகளுக்கிடையே விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் பணிகளை பன்னாட்டு அங்காடி எனக் கூறுவோம்.
(ii) உதாரணமாக.பெட்ரோல்,தங்கம் ஆகியன.
35.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
36.
(அ) (i) தேவைச்சார்பு என்பது Qt=f(Pt,Y,A,N,Pc)
(ii) தேவை தீர்மானிக்கும் காரணிகளானவன.
Y=குடும்பத்தின் சராசரி வருமானம்
A = பதப்படுத்தப்பட்ட பாலுக்கு செய்யப்படும் விளம்பரச் செலவு.
N = அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை
Pc= பதப்படுத்தப்பட்ட பாலின் விலை.
(ஆ) இம்மாறிகளில் சார்பற்ற மாறிகள் = A மற்றும் N.A என்பது விளம்பரச் செலவு N என்பது மக்களின் எண்ணிக்கை
(இ) குடும்பத்தின் சராசரி வருமானம் கூடும்பொழுது பதப்படுத்தப்படாத பாலின் தேவை அதிகரிக்கும்.
(ii) Pc- பதப்படத்தப்படாத பாலின் விளம்பரச் செலவு அதிகரித்தால் அப்பாலின் தேவை குறையும்.
(iii) அங்காடியிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பாலின் தேவை அதிகரிக்கும்.
(iv) பதப்படுத்தபட்ட பாலின் தேவை அதிகரித்தால் பதப்படுத்தப்படாத பாலின் தேவை குறையும்.
(v) ஆகையால் Qt=-a Pt+bY-cA+dN-e Pc) எனவே இதனை நேர்கோட்டு சார்பு எனலாம்.இங்கு சாய்வின் மதிப்பு எதிர்மறையாக இருப்பதால் இந்த சார்பு தேவைச் சார்பாக அமையும்.
37.
தேவை நெகிழ்ச்சிக் கெழு = η
\(ηd=\frac{dp}{dq}\)
p=60-0.2 Q
\(\frac{dp}{dq}= -0.2\)
\(\boxed { \eta d=\frac { -q }{ p } \frac { dp }{ dq } } \)
\(\eta d=\frac{+q}{60-2.0q}(+0.2)\)
=\(\frac{0.2q}{60-0.2q}\)
இதில் q=0 எனில்
\(= \frac{0.2(0)}{60-0.2(0)}=0\)
q=20 எனில்
\(\eta d=\frac{0.2(20)}{60-0.2(20)}\)
=\(\frac{4.0}{60-4}\)
\(\eta d=\frac{1}{14}\)
இதில் q=40 எனில்
\(\eta d=\frac{0.2(40)}{60-0.2(40)}\)
\(=\frac{8}{60-8}\)
\(\eta d=\frac{2}{13}\)
விடை :
| q | 0 | 20 | 40 |
| ባd | 0 | \(\frac{1}{14}\) | \(\frac{2}{13}\) |
38.
போக்குவரத்து:
(i) தமிழ்நாடு மிகச்சிறந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளைக் கொண்டது.
(ii) அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது.
(iii) நாட்டிலுள்ள நகரங்கள், கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் அங்காடிப் பகுதிகளை இணைக்கக்கூடிய தரமான சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
சாலை வசதி:
(i) மாநிலத்தில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5,036 கிமீ தொலைவினை இணைக்கிறது.
(ii) சென்னையிலுள்ள கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையங்கள் நம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்களாகும்.
(iii) தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் 1,67,000 கிமீ ஆகும்.
(iv) இதில் 60,628 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
(v) சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரயில் போக்குவரத்து:
(i) தென்னக இரயில்வே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
(ii) தமிழ்நாட்டில் உள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம் 6693 கி.மீ. ஆகும்.
(iii) 690 இரயில் நிலையங்கள் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
வான்வழிப்போக்குவரத்து:
(i) தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக சென்னை விளங்குகிறது.
(ii) சர்வதேச விமான நிலையங்கள், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
(iii) இத்துறையின் தொடர் வளர்ச்சியின் மூலம் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது.
39.
(i) அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19,1969 அன்று தேசியமயமாக்கமுடிவு செய்தது.
(ii) 1980 ஆம் ஆண்டில் அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கிறது.
தேசியமயமாக்கலின் நோக்கங்கள்:
(i) பின்வரும் நோக்கங்களை அடைவதற்காக இந்திய அரசு வணிக வங்கிகளை தேசியமயமாக்கிறது
(ii) தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதுயாகும்.
(iii) வேளாண்மை சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுவதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிதி தேவைபட்டது.
(iv) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமை கட்டுப்படுவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாக கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன
(v) இந்தியாவில் ஏறத்தாழ 70% மக்கள் கிராமபுறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.கிராமப்புற மக்களிடைய வங்கி செயல்படுகளை ஊக்குவித்தல் மிகுந்த அவசியமாகிறது.
(vi) வங்கி வசதிகள் இல்லாத இடத்தில் வட்டாரங்களிடையே இருந்து ஏற்றத்தாழ்வுகளை குறைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உதவுகின்றன.
(vii) சுதந்தரத்திற்கு முன் இருந்து வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.தேசிய மயமாக்கப்பட்ட பிறகு கிராம புற மற்றும் நகர்புறங்களில் பல புதிய வங்கி கிளைகள் தொடங்கப்பட்டன.
(viii) தேசிய மயமாக்கப்பட்ட பின் வேளாண்துறை மற்றும் அதை சார்ந்த பிற துறைகளுக்கு தேவையான கடன்களை வங்கிகள் கொடுக்க ஆரம்பித்தன.
(ix) 1991 ஆம் ஆண்டின் புதிய தொழிரகொள்கைக்கு பிறகு இந்திய வங்கித்துறை பன்முகத் போட்டி திறமை உற்பத்தி திறன் போன்ற பல்வேறு முகங்களை எதிர்நோக்கி வருகிறது.
40.

ஊரக பொருளாதாரப் பிரச்சனைகள்:
(1) மக்கள் தொடர்புடைய பிரச்சனை:
எழுத்தறிவின்மை போதிய தொழில்நுட்ப அறிவின்மை, நம்பிக்கை குறைவு, பற்றுகள் மற்றும் நம்பிக்கைகள் இவற்றை சார்ந்து வாழ்க்கைத்தரம் அமைத்தல் ஆகியன ஊரக மக்களின் பிரச்சனைகள்.
(2) வேளாண்மை சார்ந்த பிரச்சனைகள்:
(i) எதிர்பார்த்தல் அளவில் விழிப்புணர்வு, வேளாண் அறிவு, திறன் மற்றும் மனப்போக்கு போன்றவை இன்மை.
(ii) உள்ளீடுகள் கிடைக்கப்பெறாமை.
(iii) அங்காடிப்படுத்தும் வசதிகள் குறைவு.
(iv) பற்றாக்குறையாக பணியாளர்கள் மற்றும் சேவைகள்.
(v) பன்முக திறன் கொண்ட பணியாளர்கள் இன்மை.
(vi) நிலங்கள் துண்டாடப்பட்டு சிறிது சிறிதாக இருத்தல்.
(vii) பழமையான தொழில்நுட்ப முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை குறைவாக பயன்படுத்துதல்.
(viii) குறைவான அரசு முதலீடு மற்றும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம்செய்ய இயலாமை.
(3) உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள்:
ஊரக பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, நிறுவனங்கள், தகவல் தொடர்பு, மருத்துவ வசதி, வேலை வாய்ப்பு, பண்டக சேமிப்பு வசதி, வங்கி மற்றும் காப்பீடு போன்ற வசதிகள் போதுமானதாக இல்லை.
(4) பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள்:
அதிகச் செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை, நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள் குறைவான வருமானம், கடன் சுமை, நிலவுடைமை மற்றும் சொத்துகளில் உள்ள ஏற்றத் தாழ்வு ஆகியவை ஊரக பகுதிகளில் காணப்படும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளாக உளது.
(5) தலைமை சார்ந்த பிரச்சனைகள்:
(i) ஊரக பகுதிகளில் தலைமை தொடர்பான பிரச்சனைகள் உள்ளன.
(ii) தகுதியற்ற மற்றும் செயல்படாத நபர்கள் தலைமை பொறுப்பை வகிப்பு போன்றவை ஆகும்.
(6) நிர்வாகம் சார்ந்த பிரச்சனைகள்:
(i) அரசியல் தலையீடு ஊக்கமின்மை, ஆர்வமின்மை, குறைந்த கூலி, வரவு செலவுகளை சரிவர முறையாக பயன்படுத்தாமை.
(ii) கிராமப்புற வறுமை கிராமப்புற வேலையின்மை, கிராமப்புற தொழிற்சாலைகள், சிறு நிதி, ஊரக நலம் மற்றும் சுகாதாரம் மற்றும் ஊரக உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சனைகள் விரிவான விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
41.
1. இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்பு பொருளாதாரம்:
1. இந்தியப் பொருளாதாரம் கலப்பு பொருளாதாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2. தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரிய முறையில் செயல்படுவது. ஒரு புறம் மிக முக்கியமான அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் பொதுத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன.
2. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது:
1. இந்தியாவில் அதிகமானோர் வேளாண் தொழில் செய்து வருவதால் அது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
3. இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது.
3.வளர்ந்து வரும் சந்தை:
1. முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கிடையே இந்தியாவின் சந்தை பிற நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.
2.இந்தியா குறைந்த முதலீட்டில் குறைவான இடர்பாட்டு காரணிகளினால் அதிகமான வளர்ச்சி சாந்தியங்களைக் கொண்டுள்ளதால் நம் நாடு வேகமாக வளர்ந்து சந்தையாக மாறி இருக்கிறது.
4. வளர்ந்து வரும் பொருளாதாரம்:
விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் G20 நாடுகளில் இடம் பெற்றுள்ளது.
5.வேகமாக வளரும் பொருளாதாரம்:
இந்தியப் பொருளாதாரம் அதிக நிலையான வளர்ச்சியினை கொண்டது.
6. வேகமாக வளரும் பணிகள் துறை:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு பணிகள் துறையின் பங்களிப்பாகும்.
7. பேரளவு உள்நாட்டு வளர்ச்சி:
நமது நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதால் உள்நாட்டு நுகர்வு பொருட்களை வாங்குவது பெருமளவு அதிகரித்து இருக்கிறது.
8. நகரப் பகுதியின் விரைவான வளர்ச்சி:
பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளில் நகரமயமாதல் முக்கிய அறிகுறியாகும்.
9. நிலையான பேரளவு பொருளாதாரம்:
1. நாடுகளில் இந்திய ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம் "என்று குறிப்பிடுகிறது.
10. மக்கள்தொகை -பகுப்பு;
1. இந்திய மனித வளம் இளைஞர்களால் நிரம்பியுள்ளது.
2.இந்தியா அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
3.நாடு உச்ச வளர்ச்சி அடைவதற்கு மனிதவளம் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது.
4.வெளிநாட்டு முதலீட்டையும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் ஈர்க்கிறது.
42.
சம அளவு உற்பத்திக் கோட்டின் பண்புகள் :
1. சம உற்பத்திக் கோடு எதிர்மறைச் சரிவைக் கொண்டது.
2. தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
3. சம உற்பத்திக் கோடு ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
4. உயர் சம உற்பத்திக்கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது.
5. சம உற்பத்திக் கோடு X அச்சினையோ (அ) Y அச்சினையோ தொடாது.
சம உற்பத்திக்கு கோடுகள் எதிர்மறைச் சரிவைக் கொண்டது:
1. சம உற்பத்திக் கோடுகள் இடமிருந்து வளமாக மேலிருந்து கீழ்நோக்கி சரிந்து செல்கிறது.
2. சம உற்பத்திக் கோடு சரிவதற்கு காரணம் (MRTS) இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு வீதம் ஆகும்.
3. ஒரு காரணியை (K5) அதிகமாக பயன்படுத்தும் போது மற்றொரு காரணி (L2) குறைகிறது.

தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்:
1. இறுதிநிலை பதிலீட்டு வீதம் அதிகரிக்கும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாகவும் மற்றும் நிலையான இறுதிநிலை பதிலீட்டுவிதம் இருந்தால் நேர்கோடாகவும் அமையும்.
2. இது சம உற்பத்திக் கோட்டின் இயல்பினை பொறுத்தது.
3. குறைந்த அளவு உழைப்பின் அலகுகள் மூலதனத்திற்கு பதிலீடாக பயன்படுத்தப்படும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றூய் நோக்கி குவிந்து அமையும்

சம உற்பத்தி கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது:
1. IQ2சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள C என்ற புள்ளி அதிக உற்பத்தியையும், IQ1 சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள B என்ற புள்ளி குறைவான உற்பத்தியை குறிக்கிறது.
2.சமமற்ற இருவேறு புள்ளிகள் A என்ற புள்ளியில் சமமாகிவிட்டது என்பதாகும்.C=A, B=A என்றால் C=B அனால் C>B, இது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

உயர் சம உற்பத்திக் கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது:
1. சம உற்பத்திக் கோடுகள் உயரச் செல்ல செல்ல அதிக அளவு உற்பத்தியும், கீழே செல்ல செல்ல குறைந்த அளவு உற்பத்தியும் கொடுக்கும்.

2. IQ,
சம உற்பத்திக் கோடு X அச்சினையோ அல்லது Y அச்சினையோ தொடாது:
1. எந்த ஒரு சம உற்பத்திக்கோடு X அச்சின் மேலோ அல்லது Y அச்சின் மேலோ அமையாது.
2. IQ, ல் மூலதனம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3. IQ,வில் உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. மூலதனம் அல்லது உழைப்பை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுத்துவது இயலாத செயல் என்று கருதப்படுகிறது.

43.
1.\(\boxed{TC=TFC+TVC}\)
TC=மொத்தச் செலவு,
TFC=மொத்த மாறாச் செலவு,
TVC=மொத்த மாறும் செலவு
\(\boxed{AVC={TVC\over Q}}\)
\(\boxed{AFC={TFC\over Q}}\)
AVC=சராசரி மாறும் செலவு
Q=உற்பத்தி
AFC=சராசரி மாறாச் செலவு
AC= சராசரி செலவு
மொத்த செலவு =10+Q3,Q=5 எனில்
மொத்தச் செலவு =10+(5)3
=10+125

2. மொத்தச் செலவில் இரண்டு செலவுகள் உள்ளடங்கியுள்ளது. அவை,
3. மொத்த மாறும் செலவு மற்றும் மொத்த மாறாச் செலவு ஆகும்.
4. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும் குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறாது.
எனவே, TC=10+Q3
5. இங்கு மொத்த மாறாச் செலவு 10 ஆகும்
TC=135,TFC = 10 TVC =?
135 =10+TVC
135 - 10 = TVC
\(\boxed{\therefore 125= TVC}\) மொத்த மாறும் செலவு
TVC = 125, TC = 135, TFC = 10, Q = 5

\(\boxed{\therefore AVC=25}\) சராசரி மாறும் செலவு
\(AFC={TFC\over Q}\) TFC= 10, Q=5

\(\boxed{\therefore AFC=2}\) சராசரி மாறாச் செலவு
\(AC={TC\over Q}\) TC= 135, Q=5

\(\boxed{\therefore AC=27}\) சராசரி செலவு
AC = AFC+AVC
AC = 2 +25
\(\boxed{\therefore AC=27}\) ஆகும்.
44.
45.
தரப்பட்ட தேவைச்சார்பு,
p = 70- 4x-x2
x = 6 எனில்,
P = 70 -4 (6) - (6)2
= 70 - 24 - (36)
= 70 - 24 - 36
= 70- 60
p= 10
எனவே
cs=(தேவை வளைக்கோட்டின் 0முதல் 6 வரையிலான வளைக்கோட்டிற்கு கீழுள்ள பகுதியின் பரப்பு )-செவ்வகத்தின் பரப்பு (10 x 6=60)
Cs=\(\int ^6_0(70-4x-x^2)dx -(10 \times 6)\)
\(=[70x-4{x^2\over2}-{3^3\over 3}-60]\)

=420 -72-9-60
=420-141
= 279 அலகுகள்.
46.
1.ஜோசப் செல்லத்துரை குமரப்பா தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் 1892 ஜனவரி 4ல் பிறந்தார்.
2.குமரப்பாவின் அனைத்து பொருளாதார கருத்துகளையும் காந்தியம் என்பதன் அடிப்படையிலேயே அமைத்துக் கொண்டார்.மேலும் "காந்தியப் பொருளாதாரம்" என்ற கருத்தையே அவர் உருவாக்கினார்.
காந்தியப் பொருளாதாரம்:
1.J.C குமரப்பா, காந்தியின் கருத்தான கிராமத் தொழில்கள்,கிராமத் தொழில் வளர்ச்சி சங்கம் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார்.
2.குமரப்பா உப்பு சத்தியாக் கிரகத்தின் போது (young India)யங் இந்திய பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டே அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
3.அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை 1935ல் தோற்றுவித்தார்.
4.வெள்ளையனே நெளியேறு இயக்கத்தின் போது ஓராண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.
5.சிறையில் இருந்தபோது "நிலைத்த பொருளாதாரம் இயேசுவின் வழிமுறைகள் (1945)"மற்றும் "கிறிஸ்துவம் அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும் (1945)"ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதினார்.
47.
1.பகுதிச் சமநிலை:
1. ஒரேயொரு மாரியின் மூலம் கிடைக்ககூடிய சமநிலை பகுதிச் சமநிலை பகுதிச் சமநிலை எனப்படும்.
2.இது தனிச் சமநிலை என்றும் அழைக்கப்படுகிறது.
2.பொதுச் சமநிலை:
பொதுச் சமநிலை என்பது பொருளாதாரத்தில் செயல்படுகின்ற அனைத்து மாறிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு மொத்த பொருளாதாரத்திலும் சமநிலை ஏற்படுவதைக் குறிக்கின்றது.
48.
மொத்த உற்பத்திக்கும் (TP):
1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்திக் காரணிகளின் கலவையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்களின் அளவு மொத்த உற்பத்தியைக் குறிக்கும்.
2. இறுதிநிலை உற்பத்தியின் கூட்டுத்தொகையே மொத்த உற்பத்தி ஆகும்.
அதாவது TP=\(\sum\)MP
இதில் TP =மொத்த உற்பத்தி
MP=இறுதிநிலை உற்பத்தி
\(\sum\)=மொத்தம்
சராசரி உற்பத்தி (AP):
1. மொத்த உற்பத்தியை உற்பத்தி காரணிகளின் அலகுளால் வகுப்பதால் கிடைப்பது சராசரி உற்பத்தி ஆகும்.
2. ஓர் அலகு உற்பத்தி காரணியின் சராசரி உற்பத்தித்திறனே சராசரி உற்பத்தி ஆகும்.
3. கணித ரீதியாக \(\boxed{AP=TP/N}\)
இதில் AP=சராசரி உற்பத்தி
TP=மொத்த உற்பத்தி
N= மொத்த உள்ளீடுகளின் அலகு
49.
(i) 2013-14 லிருந்து 2015-16 வரை பொதுத்துறை வங்கிகள் முக்கியத் துறைக்கு வழங்கும் கடன்களில் 20.8 சதவீதத்தை கல்விக்கடனாக வழங்கியுள்ளது.
(ii) ஆந்திரபிரதேசம் 11.2 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் 10.2% மகாராஷ்டிரா மூன்றாமிடத்திலும் உள்ளது.
(iii) 18 மாநிலங்களில் மொத்த கடன்களில் 1.1 கடனையே கல்விக்கு அளித்துள்ளது.
(iv) தமிழ்நாட்டில் தான் இந்திய அளவில் பயனாளிகள் அதிகம் உள்ளனர்.
50.
(i) பசுமைப்புரட்சி என்பது வேளாண் துறை தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனையாக அமைந்தது
(ii) 1960 க்கு பிறகு பாரம்பரிய வேளாண் முறைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு புதிய தொழில் நுட்பத்தை வேளாண் முறைகள் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டன.
(iii) ஆரம்பமாகா 1960 -61 ல் ஏழு மாவட்டங்களில் ''வழிநடத்தும் திட்டம் புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சி எடுக்கப்பட்டது
(iv) அதிக விளைச்சல் தரும் ரகங்களைஉற்பத்தி செய்வதற்கான திட்டம் (HYVP)
51.
(i) அமெரிக்க பொருளியல் அறிஞர் J.B கிளார்க் 1900 ல் இக்கோட்பாட்டை எடுத்துரைத்தார்.
(ii) இக்கூற்றுப்படி, இலாபம் என்பது விலைக்கும் பனங்களின் உற்பத்திச் செலவிற்கும் உள்ள வேறுபாடே ஆகும்.
(iii) சமுதாயத்தில் ஏற்பட்ட இயங்குநிலை மாற்றங்களுக்கான வெகுமதியே இலாபம் ஆகும்.
(iv) கிளார்க் கருத்துப்படி, இயங்கா நிலையில் உள்ள சமுதாயத்தில் இலாபம் தோன்றாது. இந்நிலைச் சமுதாயத்தில் அனைத்தும் செயல்படாதிருக்கும். அங்கு எவ்வித மாற்றமும் ஏற்படாது.
(v) தற்காலத்தில் சமுதாயம் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு இயங்கக்கூடிய நிலையில் உள்ளது. கிளார்க்கின் கூற்றுப்படி, கீழ்க்கண்ட ஐந்து முக்கிய மாற்றங்களை இயங்கு சமுதாயத்தில் காணலாம்.
(1) மக்கள் தொகை பெருகும்
(2) மூலதன அளவு பெருகும்
(3) உற்பத்தி முறைகள் மேம்பாடு அடையும்
(4) தொழில் அமைப்பின் வகைகள் மாற்றமடையும்
(5) நுகர்வோரின் விருப்பங்கள் பெருகும்.
திறனாய்வு:
நவீன கோட்பாடுகளில் ஒன்றான இது குறுகிய காலத்தில் எதிர்பார்க்க முடியாத மாற்றங்களின் வேறுபாட்டைப் புறக்கணித்துவிட்டது.
52.
(i) சுய உதவிக் குழுவின் உறுப்பினர்கள் பொதுவாக ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் உள்ளவர்கள்.
(ii) சுய உதவிக் குழுக்கள் 10 முதல் 20 பெண் உறுப்பினர்களை கொண்டவை.
(iii) SHGs தமக்கென்று வடிவமைக்கப்பட்டச் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்டுள்ளன.
(iv) தொடர்ச்சியாக கூட்டம் நடத்துதல் மற்றும் முறையாக பதிவேடுகளை பராமரித்தல் சேமிப்பு மற்றும் கடன் வழங்குதல் ஆகிய ஒழுங்கினை அவை கடைபிடிக்கின்றன.
(v) SHG க்கள் முழு பங்கேற்பினை அளித்து அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுடன் தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்கின்றனர்.
53.
1991 முதல் செயல்பட்டு வரும் புதிய வர்த்தக கொள்கையின் முக்கிய அம்சங்களாவன.
சுதந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி:
(i) 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வர்த்தகக் கொள்கையின்படி ஏறத்தாழ அனைத்து இடைவினை மற்றும் மூலதனப்பண்டங்களுக்காண இறக்குமதி சுதந்திரமாக்கப்பட்டது.
(ii) 71 பொருட்கள் மட்டுமே தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளன.
சுங்கக் கட்டண அமைப்பு மற்றும் அளவுக் கட்டுப்பாடுகளை நீக்குதல்:
(i) செல்லையா குழு அறிக்கையானது இறக்குமதிக்கான தீர்வுகளை உச்ச அளவான 50% குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது.
(ii) 1991-92 ஆம் ஆண்டிற்கான நிதி, அறிக்கையில் இறக்குமதி வரி 300 சதவீதத்திலிருந்து 150% ஆக குறைக்கப்பட்டுள்ளது மற்றும் படிப்படியாக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
54.
நீண்டகாலச் செலவுக் கோடுகள்:
1. நீண்டகாலத்தில் அனைத்து உற்பத்திக் காரணிகளும் மாறக் கூடியவை.
2. நீண்டகாலத்தில் மாறாக்காரணி மற்றும் மாறாச் செலவுகள் இருக்க வாய்ப்பு இல்லை.
3. நீண்ட கால சராசரி செலவுக் கோடுகள்()என்பது நீண்டகால மொத்தச் செலவை மொத்த உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளால் வகுக்கப்படுவதால் பெறப்படும் செலவாகும்.

4. \(\boxed{LAC=LTC/ Q}\)
LAC =நீண்டகால சராசரி செலவு
LTC =நீண்டகால மொத்தச் செலவு
Q =உற்பத்தி அளவு
5.நீண்டகால சராசரி செலவு வளைகோடானது பல குறுகிய கால சராசரி செலவு வளை கோடுகளிலிருந்து பெறப்பட்டதாகும்.
6. குறுகியகால சராசரி செலவு வளைகோடுகளின் மிகத் தாழ்வான புள்ளிகளை ஒருங்கிணைத்து,நீண்ட கால சராசரி செலவு வளைகோடானது அமைந்துள்ளது.
7. நீண்டகால, சராசரி செலவு வளை கோடானது 'திட்ட வளைகோடு' அல்லது 'உரைவடிவ வளைகோடு' என்றும் அழைக்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards