11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____
காலிபங்கன்
லோத்தல்
பனவாலி
ரூபார்
2.
சிந்து நாகரிகம் ஏறத்தாழ _________ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது
பொ.ஆ.மு. 1800
பொ.ஆ.மு. 1900
பொ.ஆ.மு. 1950
பொ.ஆ.மு. 1955
3.
தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்
பொ.ஆ.மு. 3000-2600
பொ.ஆ.மு. 2600-1900
பொ.ஆ.மு. 1900-1700
பொ.ஆ.மு. 1700-1500
4.
________________ கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
க்யூனிபார்ம்
ஹைரோக்ளைபிக்ஸ்
தேவநாகரி
கரோஷ்டி
5.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
6.
நர்மதை மனிதன் குறிப்பு வரைக.
7.
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
8.
பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.
9.
இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.
10.
பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
11.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
12.
புதிய கற்கால புரட்சி - வரையறு:
13.
ஹரப்பா மக்களின் 'நம்பிக்கைகள்' குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
14.
ஹரப்பா பொருளாதாரத்துக்குப் பங்களித்த கைவினைத் தயாரிப்பு குறித்து எழுதுக.
15.
இடைக்கற்காலப் பண்பாடுகளின் குறிப்பிடத்தக்க பண்புகள் யாவை?
16.
இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
17.
18.
சிந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டு கீழ்க்கண்டவை குறித்துச் சிறுகுறிப்பு வரைக
அ) மட்பாண்டம் செய்தல் ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
இ) எடைக்கற்களும் அளவீடுகளும் ஈ) முத்திரைகளும் எழுத்துகளும்
19.
சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
20.
வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
1.
(b)
லோத்தல்
2.
(b)
பொ.ஆ.மு. 1900
3.
(a)
பொ.ஆ.மு. 3000-2600
4.
(a)
க்யூனிபார்ம்
5.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
6.
1. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதை படிவம் மத்திய பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
2. அது ஒரு மண்டை ஓட்டின் மேல் பகுதி.
3. இதை நர்மதை மனிதன் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
4. ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்த்ற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது.
7.
சிந்து நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
1. கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரீகம் வீழ்ச்சியுற்றது.
2. வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
3. ஆசிரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரீக வீழ்ச்சிக்கு காரணமியிருந்தது.
4. காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
5. இதன் காரணங்களைக் சிந்து நாகரீகமும் வீழ்ச்சியுற்றது.
8.
1. மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
2. குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
3. உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது.
4. இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
9.
1. இடைக்காலப் பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகிறது.
2. விலங்குகளை வேட்டையாடுதல், தாவர உணவுகளை சேகரித்தல், மீன் பிடித்தல் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்தன.
3. இக்கால மக்கள் நெருப்பைக் பயன்படுத்தினார். இறந்தோரைப் புகைத்தனர்.
4. உணவுக்காக விலங்குகளையும் தாவரங்களையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது.
10.
வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது. இது மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன
1. கீழ்ப்பழங்கற்காலம் 2. இடைப்பழங்கற்காலம் 3. மேல் பழங்கற்காலம்
11.
1. வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை.
2. தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்டஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.
12.
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்
1. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
2. பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
3. பெரிய கிராமங்கள் தோன்றின.
4. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
5. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமான 'புதிய கற்காலப் புரட்சி' எனப்படுகின்றன.
13.
1. ஹரப்பா மக்கள் இயற்கையை வழிபட்டார்கள், அரச மரத்தை வழிபட்டிருக்கிறார்கள்.
2. அங்கு கிடைத்த சுடுமண் உருவங்கள் தாய் தெய்வத்தை போல் உள்ளன.
3. காலிபங்கனில் வேள்வி பீடங்கள் காணப்பட்டுள்ளன.
4. ஹரப்பா மக்கள் இறந்தோரைப் புதைத்தனர். புதைப்பதற்கான நடைமுறைகள் விரிவாக இருந்தன.
5. இறந்த உடல்களை எரித்தற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
6. இறப்பிற்கு பின்னரான வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.
14.
1. ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினைத் தயாரிப்பு ஒரு முக்கியமான பகுதியாகும்.
2. மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினைச் செயல்பாடுகளாக இருந்தன.
3. கார்னிலியன்(மணி) ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்) ஸ்டீட்டைட் (நுரைக்கல்) ஆகியவற்றிலும்,
4. செம்பு, வெண்கலம், தங்கம் ஆகிய உலோகங்களிலும்
5. சங்கு, பீங்கான், சுடுமண் ஆகியவற்றிலும் அணிகலனைச் செய்தார்கள்.
6. இவைகள் எண்ணற்ற வடிவமைப்பிலும் வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டன.
7. இவை மெசப்பட்டோமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
15.
1. இடைக்கற்கால மக்கள் ஓரளவு நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசித்தனர்.
2. குகைகளிலும், திறந்த வெளிகளிலும் வசைத்தனர்.
3. இக்கால மக்கள், நெருப்பை பயன்படுத்தினர். இறந்தோரைப் புதைத்தார்கள்.
4. அவர்களுக்கு கலைத்திறன் இருந்ததை பிம்பிட்கா போன்ற இடங்களில் கிடைக்கும் சான்றுகளிருந்தும் அறியலாம்.
5. அவர்களின் நுண்கருவிகள் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாட உதவின.
6. மக்கள் பூக்களாலும் இலைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொண்டார்கள்.
16.
1. இந்தியாவில் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. கடற்கரைப்பகுதி, மணற்பாங்கான இடம், வடிநீர் பகுதி, வனப்பகுதி ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை மற்றும் மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி, என அனைத்து திணை சார் பகுதிகளிலும் இந்நாகரீகம் பரவியிருந்தது.
3. பீகாரில் பயிஸ்ரா, குஜராத்தில் லங்னஜ்,
4. உத்திரப்பிரதேசத்தில் பாகர் 2, சோபனி மண்டோ, சாராய் நகர் ராஜ் மகாதகா, தம் தமா
5. ஆந்திரத்தில் சன கன கல்லு, விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் கிப்பன ஹள்ளி ஆகிய இடங்கள் இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களாகும்.
6. ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, மும்பையின் கடற்கரைப்பகுதிகள்.
7. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கிழக்குப்பகுதி தேரிக்குன்றுகள் (செம்மறைக்குன்றுகள்) பகுதிகளும் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்களாகும்.
17.
18.
அ) மட்பாண்டம் செய்தல்
1. ஹரப்பா மக்கள் அன்றாடத் தேவைகளுக்குப் பலவகைப்பட்ட சுட்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினர்.
2. மட்பாண்டங்கள் அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம் பூசப்பட்டிருந்தன.
3. அகன்ற பாத்திரத்தை வைப்பதற்கேற்ற தாங்கி, நிரைச் சேர்த்து வைக்கும் கலர், துகளுடன் கூடிய கலன் கையில் ஏந்துவதற்கு ஏற்ப குறுகிய பிடியுடன் உள்ள கோப்பை.
4. நுனி சிறுத்தும் தாங்கும் பகுதி நன்கு அகன்றும் உள்ள கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளில் மட்பாண்டங்கள் காணப்படுகின்றன.
5. அவற்றில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் இவைகள், மீன் செதில்கள், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல் மாணலான கோடுகள் பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
6. ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் நன்கு சுடப்பட்டதாகவும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கின்றன.
ஆ) வணிகமும் பரிவர்த்தனையும்
ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் வணிகமும் பரிவர்த்தனையும் முக்கிய பங்கு வகித்தன.
1. ஹரப்பா மக்களுக்கு மெசபடோமியாவுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு இருந்தது. அவர்கள் இந்தியாவில் பிற பண்பாடுகளைச் சேர்ந்த மக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
2. சுமேரிய நாகரிகம் நிலவிய ஓமன் பஹ்ரைன், ஈராக், ஈரான் ஆகிய இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும் பொருள்களும் கிடைத்துள்ளன.
3. க்யூனிபார்ம் கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையான வணிகத் தொடர்ப்புகளைக் குறிப்பிடுகின்றன.
4. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனிலும், ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள்,தயக்கட்டைகள் மணிகள் மெசபடோமியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
5. கார்னிலியன், வைடூரியம், செம்பு, தங்கம், பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி ஆயின.
6. ஹரப்பா மக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளோடு தொடர்பு கொண்டு, மூலப்பொருள்களைப் பெற்று, அவற்றை மேலும் சில செய்முறைகளுக்கு உட்படுத்தி உற்பத்தியில் ஈடுபட்டார்கள்.
ஹரப்பா நாகரிக்கப்பகுதிகளில் கிடைக்கும் நிக்கல் பொருள்களும் மெசபடோமியாவுடன் இருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்.
இ) எடைக்கற்களும் அளவீடுகளும்
வணிக பரிவர்த்தனைக்கான ஹரப்பாவில் சரியான எடைக்கற்களும் அளவீடுகளும் பயன்படுத்தப்பட்டன.
1. ஹரப்பா நாகரிக்கப்பகுதியிலிருந்து படிகக் கல்லாலான, கன சதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன.
3. எடையின் விகிதம் இருமடங்காகும் படி 1:2:4:8:16:32 என பின்பற்றப்பட்டுள்ளது,
4. இம்முறை அணிகலன்களையும் உலோகங்களையும் எடைபோட பயன்பட்டிருக்கலாம்.
5. சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் =1.75 செ.மீ ஆகக் கொள்ளும் விகிதத்தில் அளவு கோலையும் பயன்படுத்திருக்கிறள்.
ஈ) முத்திரைகளும் எழுத்து முறையும்:
அ) முத்திரைகள்:
1. ஸ்டீட்டைட், செம்மண், சுடுமண், தந்தம் போன்றவற்றாலான முத்திரைகள் ஹரப்பா நாகரிக்கப் பகுதிகளில் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2. போக்குவரத்துக்கு உட்படும் பொருள்கள் மீது குறியீட்டு அடையாளப்படுத்துவதற்காக முத்திரைகள் பயன்பட்டிருக்கலாம்.
3. பொருள்களின் உரிமையாளரைக் குறிப்பதற்கு அவை பயன்பட்டிருக்கலாம்.
ஆ) எழுத்துமுறை:
1. ஹரப்பா எழுத்துமுறையை இன்று வரைக்கும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
2. 5000 த்துக்கும் மேற்பட்ட எழுத்துத் தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
3. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத் தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது. அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
19.
1. இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு . 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமான சிந்து நாகரிகம் எனப்படும்.
2. இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால் அது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
3. ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கால ஹரப்பா, முதிர்ச்சி அடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
4.ஒரு நகரப் பண்பாட்ற்க்கான கூறுகள் முதிர்ச்சி பெட்ரா ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
5. சிந்து சமவெளியை சுற்றிலும் அகழ்வாய்வு செய்து பல இடங்களில் நாகரீக அடையாளம் கிடைத்தாலும் முதன் முதலில் ஹரப்பா என்ற இடத்தில் இந்நாகரிக அடையாளம் கிடைத்தால் இது ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
20.
வரலாற்றின் முந்தைய காலத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை. இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்து கிடைத்துள்ள கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள் கலைப்பொருட்கள், உலோக கருவிகள் போன்ற தொல் பொருள் சான்றுகளின் அடிப்படையில் இக்கால வரலாற்றை அறிய முடிகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை
1. பழங்கற்காலம் 2. இடைக்கற்காலம் 3. புதியகற்காலம் 4. உலோகக்கலாம் என வகைப்படுத்தலாம்.
பழங்கற்காலம்:
இது 1. கீழ்பழங்கற்காலம் (60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை) 2. இடைப்பழங்கற்காலம்(பொ.ஆ.மு. 3,85,000-40,000) 3. மேல்பழங்கற்காலம் (பொ.ஆ.மு. 40,000-10,000)
1. பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் பெரும்பொழுது நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ளன.
2. பழங்கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும் உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடித் கொண்டனர். இவர்களை உணவு சேகரிப்போர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
3. பழங்கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து எதுவும் தெரியவில்லை.
இடைக்கற்காலம் :
1. இது பொ.ஆ.மு.10,000த்தில் தோன்றியது. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிய முடிகிறது.
2. உணவு சேகரிக்க, வேட்டையாட அதிகபட்சம் 5 செ.மீ நீளமுடைய நுண்கருவிகளை கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
3. வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினார். ஒரே இடத்தில் நீண்டகாலம் தங்கி வாழும் போக்கு வளர்த் தொடங்கியது.
4. பயிரிடுதல், கால்நடை வளர்த்தல் போன்ற தொழில்கள் ஆரம்பித்தன.
புதியகற்காலம்:
1. பொது ஆண்டுக்கு முன்பு 7000-5500 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
2. வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கருவிகளை பளபளப்பகுதல் சக்கரத்தின் மூலம் மட்பாண்டம் செய்தல் போன்றவை இக்கால பண்பாட்டின் புதிய கூறுகளாகும்.
3. கிராம சமுதாயங்களை உருவாக்கினர். புல்லால் ஆன குடிசைகளுக்குபதில் களிமண் கற்களால் ஆன குடிசைகள் அமைக்கப்பட்டன.
4. இறந்தோரை புதைத்தனர். பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
5. கோதுமை, பார்லி, நெல் தினை போன்றவை பயிரிடப்படுகின்றன.
உலோகக் கலாம்
1. இக்காலத்தில் செம்பும் வெண்கலமும் பயன்படுத்தப்படுகிறது. உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
2. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செப்புக்கற்கால பண்பாடு வளர்ச்சி அடைந்தன. ஹரப்பா பண்பாடு செம்புகற்கால பண்பாட்டின் ஒரு பகுதியே.
3. தமிழ்நாட்டில் பையம் பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பாலான பொருள்கள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
4. தென்னிந்தியாவில் செம்பு காலமும்- இரும்பு காலமும் சமகாலம். கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள், இரும்பு மண்வெட்டி, அரிவாள் சிறு ஆயுதங்கள் காணப்படுகின்றது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards