11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
பிற்காலச் சோழரும் பாண்டியரும்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது
நாட்டார்
மாநகரம்
நகரத்தார்
ஊரார்
2.
கெடா __________________ இல் உள்ளது
மலேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்து
கம்போடியா
3.
முதலாம் இராஜராஜனும் முதலாம் இராஜேந்திரனும் இணைந்து ________ ஆண்டுகள் அரசை சோழ ஆட்சி செய்தார்கள்
3
2
5
4
4.
__________படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பப்பகுதி சோழ மண்டலம் எனப்பப்படுகிறது
வைகை
காவிரி
கிருஷ்ணா
கோதாவரி
5.
_____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
மூன்றான்றாம் குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜராஜன்
பராந்தகன்
6.
சோழர்களின் கடல் வாணிபத்தைப் பற்றி கூறுக.
7.
பாண்டிய அரசின் மீதான மாலிக் காபூரின் படையெடுப்பின் விளைவுகள் யாவை?
8.
தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக
9.
முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?
10.
சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்கள் எவை?
11.
தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?
12.
சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக
13.
சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?
14.
இராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?
15.
இராஜராஜ சோழனின் கடல்வழிப் படையெடுப்புகள் குறித்து குறிப்பு வரைக.
16.
பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
17.
1.
(b)
மாநகரம்
2.
(a)
மலேசியா
3.
(b)
2
4.
(b)
காவிரி
5.
(b)
முதலாம் இராஜேந்திரன்
6.
(i) சோழர்காலத்தில் கடல் வாணிபம் சிறப்புடையதாக இருந்திருக்கிறது.
(ii) இதற்குப் பயன்படுத்தப்பட்ட துறைமுகங்கள் முனைச்சந்தை, நாகப்பட்டினம், விசாகப்பட்டினம், கிருஷ்ணப்பட்டினம் ஆகியவை ஆகும்.
(iii) ஐநூற்றுவர் என்றும் வணிகக் குழுவின் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
(iv) சந்தனம், அகில், சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ரத்தினங்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஆகும்.
7.
மாலிக்கபூரின் மதுரை படையெடுப்பின் விளைவுகள்:
(i) பாண்டிய அரசின் ஆட்சிப் பொறுப்பு அரச குடும்ப உறுப்பினரால் தனித்தனியாகப் பிரித்துக் கொள்ளப்பட்டது.
(ii) மதுரையில் தில்லி சுல்தானியத்திற்கு கட்டுப்பட்ட ஓர் அரசு 1335 வரை இருந்தது.
(iii) மதுரையில் ஆட்சி செய்த ஆளுநர் ஜலாவுதீன் அஸன்ஷா டெல்லி சுல்தானுக்குப் கட்டுப்படாமல் 1325ல் மதுரை அரசராக தன்னை அறிவித்துக் கொண்டார்.
(iv) சொக்க நாதர் கோயில் இடிக்கப்பட்டு விலை மதிக்க முடியாத ஏராளமான பொருட்களை மாலிக் கபூர் எடுத்துச் சென்றார்.
8.
(i) சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக இறையனார் அகப்பொருள் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ii) 1. முதல் சங்கம் -தென்மதுரை
2. கிடைச்சங்கம்-கபாடபுரம்
3. கடைச்சங்கம் -மதுரை
ஆகிய மூன்று சங்கங்களையும் பாண்டியர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் தமிழை வளர்க்க செயல்படுத்தியதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
9.
(i) கங்கை கொண்ட சோழன்
(ii) கடாரம் கொண்டான்
(iii) பாண்டிச் சோழன்
(iv) முடிகொண்ட சோழன்
போன்ற பட்டங்களை முதலாம் ராஜேந்திரன் சூட்டிக் கொண்டான்.
10.
1. கலிங்கத்துப் பரணி
2. குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ்
3. மூவருலா
ஆகியவை சோழர் காலத்து இலக்கிய வடிவ வரலாற்று நூல்களாகும்.
11.
(i) பிள்ளையார்பட்டி
(ii) திருமயம்
(iii) குன்றக்குடி
(iv) திருச்செந்தூர்
(v) கழுகுமலை
(vi) கன்னியாகுமரி
(vii) சித்தன்னவாசல்
ஆகிய இடங்களில் தொடக்க காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட குடைவரை கோயில்கள் காணப்படுகிறது.
12.
(i) சோழர்கால சமூகப் படிநிலையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கியது வேளாண்மை ஆகும்.
(ii) உயர்தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேயகிழவர்' என அழைக்கப்படும் நில உடமையாளர் ஆவர்.
(iii) வேளாண்மை கிராமங்களின் உடமையாளர்கள் அடுத்தபடி நிலையில் இருந்தனர்.
(iv) இவர்கள் இருவரிடமும் பணிபுரியும் குத்தகைகாரகள் உழுகுபடி எனப்பட்டனர்.
(v) அடிமட்ட உழைப்பாளிகளான 'சமூகப்படி' எனப்படுவோரும், பணிசெய் மக்கள் எனும் அடிமைகளும் கடை நிலையில் காணப்பட்டார்.
13.
(i) சோழர் காலத்தில் வரிகள் பெரும்பாலும் பொருள்களாகவே வசூலிக்கப்பட்டன.
(ii) அதில் முக்கிய வரி குடிமைவரி ஆகும்.
(iii) மேலும் இறை காணி கடன், குறைகட்டின காணிகடன் கடமை போன்ற வரிகள் வசூலிக்கப்பட்டது.
(iv) விளை பொருளாக வசூலிக்கப்படுவது இறைகட்டின நெல்லு எனப்படும்.
(v) பாசனக் குளங்களை பழுதுபார்க்க வசூலிக்கப்படுவது ஏரி ஆயம் எனப்படும்.
14.
(i) இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீ விஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றார்.
(ii) இது தென்கிழக்கு நாடுகளில் செழித்து வளர்ந்த, கடற்படை கொண்ட ஒரு பகுதியாகும்.
(iii) இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) வும் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டன.
எனவே இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டார்.
15.
(i) சோழ அரசர்களில் சிறப்பானவர் முதலாம் இராஜராஜன் ஆவார்.
(ii) இவரது கடல் வழி படையெடுப்புகள் நாட்டின் எல்லையை விரிவுபடுத்த பெரிதும் உதவியது.
(iii) மேற்கு கடற்கரை சோழர் கட்டுப்பாட்டில் வந்தது.
(iv) இலங்கை வெற்றி மற்றும் மாலத்தீவுகளின் வெற்றி மிக முக்கியமானது.
16.
பாசன வசதிகள்:
(i) பாண்டிய அரசர்கள் பெருமளவில் பாசன வளங்களை மேம்படுத்திட ஏரிகளையும், வாய்க்கால்களையும் வெட்டினர்.
(ii) பாசன வேலைகள் மேற்பார்வையிடுதல், பராமரிப்புப்பணி ஆகியவற்றை பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகள்.
(iii) உள்ளூர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஏரிகள்:
(i) அரச குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாசுதேவப்பேரேரி, வீரபாண்டிய பேரேரி, ஸ்ரீ வல்லபப்பேரேரி, வீரபாண்டியபேரேரி போன்றவை உருவாக்கப்பட்டன.
(ii) பொது ஏரிகளுக்கு திருமால் ஏரி, கயன்ஏரி, காடன் ஏரி எனப் பெயரிடப்பட்டது.
(iii) ஆறுகளின் கரைகளில் நீர்பாசனத்திற்கான நீரை குளங்களுக்கு கொண்டு செல்ல கால்வாய்கள் வெளிப்பட்டன.
(iv) ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் வெட்டிய ஏரி இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.
பாசன தொழில்நுட்பம்:
(i) பாசனத்தொழில் நுட்பத்தில் பல்லவர் பாணியை பின்பற்றினார்.
(ii) ஏரிகரைகளை அமைக்கும்போது கரை மட்டத்தைச் சமமாக்க நூல் பயன்படுத்தினர்.
(iii) உட்பகுதிகளை வலுப்படுத்த கல் அடுக்குகளைப் பயன்படுத்தியமை இவர்களின் சிறந்த தொழில் நுட்பத்திற்கு சான்றாகும்.
(iv) வறட்சிப் பகுதியான இராமசாதபுரத்தில் பல ஏரிகள் வெட்டப்பட்டன.
(v) வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளின் இருகரைகளிலும் அவற்றின் நீரைப் பாசன குளங்களுக்கு கொண்டு செல்லும் கால்வாய்கள் வெட்டப்பட்டன.
(vi) பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.
வணிகர்களும், ஏரிவெட்டுதலும்:
(i) வணிகர்களும் பல பாசன ஏரிகளை வெட்டினார்கள்.
(ii) இருப்பைகுடி கிழவன் என்ற உள்ளூர் தலைவன் பல ஏரிகளை வெட்டியதுடன் பல ஏரிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
(iii) நில உரிமையாளர்கள் பூமிபுத்திரர் எனப்பட்டனர்.
(iv) இவர்களை நாட்டு மக்கள் என்று அழைப்பர். இவர்களின் சமுதாயக் குழசித்திர மேழி பெரியநாட்டார் என்று அழைக்கப்பட்டது.
17.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards