11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
ஆல்காட் என்பவர் அயோத்திதாசரை _________ நாட்டுக்கு அழைத்துச் சென்று மீட்புவாதிகளை சந்திக்கச் செய்தார்.
இங்கிலாந்து
அமெரிக்கா
மலேசியா
இலங்கை
2.
______________என்ற இடத்தில் சிவாஜி கைப்பற்றியதன் மூலம் மராத்தியர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
ஜாவ்லி
ராஜகிரி
பிரதாப்கர்
சதாரா
3.
73- கிளர்ச்சியாளர்கள் ______ ஆம் ஆண்டு மலேசியாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
1801
1806
1804
1802
4.
குற்றப் பழங்குடியினர் சட்டம் ______ ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
1871
1771
1671
1673
5.
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் ______.
ஹென்றி லாரன்ஸ்
மேஜர் ஜெனரல் ஹோவ்லாக்
சர் ஹீயூக் வீலர்
ஜெனரல் நீல்
6.
கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.
| (i) | இந்திரன் | விடியலின் கடவுள் |
| (ii) | சூரியன் | புரந்தரா |
| (iii) | உஷா | இருளை |
| (iv) | மாருத் | வலிமையின் கடவுள் |
மேற்கண்டவற்றில் எந்த இணை சரியானது?
(i)
(ii)
(iii)
(iv)
7.
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ ஆய்வு நூல்கள் சமய மோதல்களை விளக்கவில்லை.
பக்தி இயக்கங்கள் மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன.
பக்தி இயக்கம், விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்தது.
தமிழ் இலக்கிய மரபின் முக்கிய பகுதியியாக பக்தி இயக்கப் பாடல்கள் இடம் பெறவில்லை.
8.
இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.
கோவா
டையூ
டாமன்
சூரத்
9.
10.
ஐஹால் கல்வெட்டை எழுதியவர் _________
சீத்தர்
ரவகீர்த்தி
மெய்கீர்த்தி
முதலாம் புலிகேசி
11.
_____ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
முதலாம் தேவராயர்
இரண்டாம் தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
வீர நரசிம்மர்
12.
_________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.
பிந்து சாரர்
அஜாத சத்ரு
மகாபத்ம நந்தர்
போரஸ்
13.
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________
தஞ்சாவூர்
காவிரிப்பபூப்பட்டினம்
உறையூர்
சாகர்கள்
14.
நாளந்தா பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ______
தம்மபாலா
சாமிபுத்தம்
ராமாணநதர்
புத்தர்
15.
கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது?
புத்தசரிதம் - அஸ்வகோஷர்
எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் - மெகஸ்தனிஸ்
அர்த்தசாஸ்திரம் - கெளடில்யர்
காமசூத்திரம் - வாத்சாயனர்
16.
பாலம் பவோலி கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது
சமஸ்கிருதம்
பாரசீக மொழி
அரபி
உருது
17.
__________படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பப்பகுதி சோழ மண்டலம் எனப்பப்படுகிறது
வைகை
காவிரி
கிருஷ்ணா
கோதாவரி
18.
19.
20.
தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்
பொ.ஆ.மு. 3000-2600
பொ.ஆ.மு. 2600-1900
பொ.ஆ.மு. 1900-1700
பொ.ஆ.மு. 1700-1500
21.
இந்தியாவை பற்றிய பாபாரின் கருத்து என்ன என்பதை விவரி.
22.
யுவான் - சுவாங் கன்னோசியை பற்றி கூறுவது யாது?
23.
குப்தர்கால இளகிய இலக்கணம் யாவை?
24.
நாமதேவர் எவ்வாறு பக்தி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்?
25.
காந்தார கலையை பற்றி கூறுக.
26.
குறிப்பு வரைக.பிந்துசாரர்
27.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?
28.
இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.
29.
யுவான் -சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?
30.
31.
சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.
32.
பிரேஞ்சுக்காரர் களுக்கு ஏற்பட்ட போட்டியும், போர்களும் பற்றி விரிவாக எழுதுக.
33.
இருப்புப் பாதையும் தபால் தந்தியும் விரிவான விடை தருக.
34.
குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.குப்தர்கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்:
35.
பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.
36.
பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.
37.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
38.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
39.
தமிழ் நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.
40.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.
41.
அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்
42.
வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?
43.
“சங்க கால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமை யுரிமையே ஆகும்”. இக்கூற்றை ஆதரித்தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு.
44.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
45.
இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூறுக.
46.
சிவாஜியின் கடைசி நாட்கள் பற்றி விவரி.
47.
காந்தாரக் கலையை பற்றி கூறுக?
48.
நாயக்க முறை.
49.
தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?
50.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
51.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
52.
53.
கிழார் - வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள் .
54.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.
1.
(d)
இலங்கை
2.
(a)
ஜாவ்லி
3.
(d)
1802
4.
(a)
1871
5.
(b)
மேஜர் ஜெனரல் ஹோவ்லாக்
6.
(d)
(iv)
7.
(b)
பக்தி இயக்கங்கள் மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன.
8.
(a)
கோவா
9.
(c)
10.
(b)
ரவகீர்த்தி
11.
(b)
இரண்டாம் தேவராயர்
12.
(b)
அஜாத சத்ரு
13.
(c)
உறையூர்
14.
(a)
தம்மபாலா
15.
(b)
எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் - மெகஸ்தனிஸ்
16.
(a)
சமஸ்கிருதம்
17.
(b)
காவிரி
18.
(c)
19.
(d)
20.
(a)
பொ.ஆ.மு. 3000-2600
21.
1.இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை எதுவெனில் இது ஒரு மிகப்பெரிய நாடு. பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது.
2. இங்குள்ள தொழிலாளர்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.
22.
1. கன்னோசியின் கம்பீரமான தோற்றம் அதன் மிகு கட்டிடங்களை அழகிய பூங்காக்கள், அறிய பொருள்களின் இருப்பிடமாக விளங்கிய அருங்காட்சியகம் ஆகியன குறித்து அவர் விவரித்துள்ளார்
2. அங்கு வாழ்ந்த மனிதர்களின் பொலிவான தோற்றம், அவர்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடைகள், கல்வி மற்றும் கலைகளின்பால் அவர்கள் கொண்டிருந்த நாட்டம் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்
3. யுவான் - சுவாங்கின் கூற்றுப்படி பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயிகளையும் கொண்டிருந்தன.
4.வசிப்பிட இல்லங்களும், மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்பு கலவையால் பூப்பட்டிருந்தன.
23.
i) குப்தர் சமஸ்கிருதத்தை அழுதாள் மொழியாக்கினார்கள்
ii) அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும், பட்டயங்களும் அம்மொழியில் தான் எழுதப்பட்டன.
iii) இக்காலகட்டம் தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்
iv) இக்கால கட்டம் குறிப்பாக அமரசிம்மரால் "அமரகோசம்" என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
v) வங்கத்தை சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் "சந்திரவியாகரணம்' என்ற இலக்கண நூலை படைத்தார்
24.
மகாராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தில் நரஸ் வாமணி என்னும் கிராமத்தில் தையல் கலைஞரின் மகனாகப் பிறந்த நாமதேவர், ஜனதேவர் எனும் துறவியினால் ஈர்க்கப்பட்டு பக்தி இயக்கத்தில் பங்கெடுத்தார்.
(ii) பந்தல்பூரிலுள்ள விட்டலா (விஷ்ணு) வின் மேல் பற்று கொண்ட நாமதேவர் தன் சீடர்களுடன் பெரும்பாலான நேரத்தை இறை வழிப்பாட்டிலும் தானே இயற்றிய பாடல்களை பாடுவதிலும் கழித்தார்.
25.
i) பண்பாட்டுத் தாக்கங்கள் சங்கமிக்குமிடத்தில் அமைந்துள்ள காந்தாராம் கிரேக்க மற்றும் ரோமானிய பண்பாடுகளின் செல்வாக்கு ரோமானியம் உட்பட்டது.பொ.ஆ. முதல் நூற்றாண்டில் காந்தாராக் கலை வடிவங்கள் வளர்ச்சியடைந்தன.
ii) குஷாணப் பேரரசுக் காலத்தில் ரோமுடனான அதன் தொடர்புகளினால் ரோமானியக் கலைநுட்பங்கள் இந்தியக் காலை நுட்பங்களோடு கலந்து, வடமேற்கு இந்தியா முழுதும் பின்பற்றப்பட்டன.
iii) ஆன்மநிலையில் - கண்கள் [பாதி மூடிய நிலையில் தியானத்திலிருந்து புத்தரை சித்தரித்ததற்காக காந்தாராகலை புகழ் பெற்றது.
26.
i) சந்திர குப்தரின் புதல்வர் பொ.ஆ.மு.297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆடசியில் அமர்ந்தார்.
ii) பிந்து சாரர் நல்ல திறமையான அரசர். மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.
27.
| (i) துன்பம் பற்றிய உண்மை | -பிறப்பு வயது, மரணம், விரும்பத்தக்கவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது. |
| (ii) துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை | -இன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்றவற்றிற் கான ஆசையே துன்பத்திற்கான காரணம் ஆகும். |
| (iii) துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்) |
-துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை |
| (iv) துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றிய பெரும் உண்மை. |
-எண் வழிப்பாதை (துக்க நிவாரண மார்க்கம்) |
28.
நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா,யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் இடைபழங்கற்கால நாகரீகங்கள் பரவி இருந்தன.
29.
சீனப்பயணி யுவான் சுவாங் தலைநகர் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தபோது காஞ்சி பற்றிய அவரது வருணனை குறிப்பிடத்தக்கது.
1. மிகப்பெரிய, அழகிய நகரான அது ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது எனக் கூறியுள்ளார்.
2. அங்கு நூறு புத்த சமய மடாலயங்கள் இருந்தன.
3. பத்தாயிரம் புத்த சமையத்துறவிகள் அவற்றில் வாழ்ந்தனர்.
4. கல்விக்குப் பெயர் பெற்றது காஞ்சி மாநகர்.
30.
31.
சோழர்கால உள்ளாட்சி தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.
பொ.ஆ.919 மற்றும் 921ல் கிடைத்த உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் சோழர் கால உள்ளாட்சி தேர்தல் முறையை அறிய முடிகிறது.
இவை ஒரு பிராமணக் குடியிருப்புகளை பணிகளை மேற்கொள்வதற்கு வெவ்வேறு குழுக்களை சேர்ந்த உறுப்பினரை தேர்வு செய்யும் முறையை தெரிவிக்கின்றன.
தேர்வு செய்யும் முறை:
i) கிராமம் 30 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
ii) ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
iii) தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்கினார்
iv) ஆவி பொதுப்பணிக்குழு, குளங்களுக்கான குழு, தோட்டங்களுக்கான குழு, பஞ்சநிவாரண குழு, தங்கம் தொடர்பான குழு ஆகியனவாகும்.
உறுப்பினாராகத் தகுதிகள்:
i) ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.
ii) போட்டியாளர் 35 வயதுக்கு மேலும் 75 வயதுக்கு கீழும் உள்ளவராக இருக்க வேண்டும்.
iii) சொத்தும், சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும்.
iv) வேதங்களிலும், பாஷ்யங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
குடவோலை முறை:
i) ஒரு பிரிவில் பி[ஒட்டியிடக்கூடிய அனைவருடைய பெயர்களில் தனித்தனிப் பனையோலைகளில் எழுதப்படும்.
ii) பின்னர் அவ்வோலை ஒரு பானையில் இடப்படும்
iii) சபையில் வயதில் மூத்தவர் ஒரு சிறுவனை அழைத்து பானையிலிருந்து ஓர் ஓலையை எடுக்கும்படி கூறுவர்.
iv) அந்த சிறுவன் எடுக்கும் ஓலையில் உள்ள பெயருக்கு உரியவரே உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
இவ்வாறு மேற்கண்ட செய்திகள் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
32.
1. புதுச்சேரியைத் தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரேஞ்சுக்காரர் மிகவும் சிரமப்பட்டனர்.
2. தங்களின் முக்கியப் போட்டியாளரான டச்சுக்காரர்களை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பிரான்சும் ஹாலந்தும் 1672 இலிருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன.
3. இந்தியாவில் பிரேஞ்சுக்காரர்களுக்குப் போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் இவை வங்காளத்திலிருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஆகவே 1693 இல் புதுச்சேரியை டச்சுக்காரர் எளிதாக கைப்பற்ற முடிந்தது.
4. புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது, 1697 இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுகாரருக்குத் தரப்பட்டது. இருந்தபோதிலும் 1699 இல் தான் அது பிரெஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
5. 1706 இல் பிரான்சிஸ் மார்ட்டின் இயற்கை எய்தும்வரை அதன் ஆளுநராக இருந்தார்.
6. பிரெஞ்சுக்காரர் மேற்கொண்ட பெருமுயற்ச்சியின் விளைவாக 1725 இல் மாகியையும், 1739 இல் காரைக்காலையும் பெற்றனர்.
7. வங்காளப் பகுதியில் காசிம் பஜார், சந்தன்நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவுப்படுத்துவதில் பிரெஞ்சுக்காரர் வெற்றி பெற்றனர். பியரி பெனாய்ட் டூமாஸ் என்பவர் (1668 - 1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார்.
8. இருந்தபோதிலும் தங்களைவிட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்துதல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
9. இறுதியில் தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர். பிரேஞ்சுக்காரரின் செல்வாக்கை புதுச்சேரி, காரைக்கால், மாகி சந்தன்நகர் ஆகிய இடங்களில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.
33.
(i) இருப்புப்பாதை அமைக்க முதல் கோரிக்கையை வைத்தது ஐரோப்பிய வியாபாரச் சமூகமே ஆகும்.இந்தியாவில் வெற்றிகரமாக இருப்புப்பாதை ப் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம்.
(ii) கிழக்கிந்தியக் கம்பெனி இயக்குனரர்களிடம் இருக்கவே செய்தது. இருப்புப்பாதைப் போக்குவரத்தின் மூலமாக பொருளாதாரச் சாதகங்கள் ஏற்படும் என்று டல் ஹெளசி வாதிட்டு அதை வலியுறுத்தினர்.
(iii) எனினும் 1857 பெருங்கிளர்ச்சிக்கு முன்பு வெறும் முந்நூறு மைல் தூரம் மட்டுமே இருப்புப்பாதை அமைக்கப்பட்டிருந்தது.
(iv) இந்தியாவிற்கும் லண்டனுக்குமிடையே தந்திப் போக்குவரத்தை உருவாக்க பல கோரிகைகள் வைக்கப்பட்டபோதும் தந்திப் போக்குவரத்து இந்தியாவில் 1854 ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
(v) 1857 ஆம் ஆண்டின் பெருங்கிளர்ச்சிக்கு பின் அதிமுக்கியத் தேவையென்ற நிலையை எட்டியது.லண்டனுக்கும் , கல்கத்தாவிற்கு மிடையே தொடர்புகொள்ள பல மாதங்கள் ஆன சூழல் மாறி இருபத்தியெட்டு நிமிடங்களில் தொடர்புகொள்ள தந்தி வழிசெய்தது.
(vi) ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமிடையே உள்ள தூரம் 1869 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 4000 மைல்களாகக் குறைந்தது.
(vii) லண்டனில் இந்திய அலுவலகத்தில் செயலாற்றி வந்த பிரிட்டிஷ் அரசின் செயல்தலைவேரோடு தொடர்பு தவிர்க்க முடியாததானது.
(viii) இதன்பின் கர்சன் நீங்கலாக மற்ற கவர்னர் ஜெனரல்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமைச் செயலகமாகத் திகழ்ந்த ' வெள்ளை மாளிகையைத் தொடர்பு கொள்ளாமல் முடிவெடுக்கத் தயங்கினார்கள்.
34.
1. இலக்கிய சான்றுகள்
2. கல்வெட்டுச் சான்றுகள்
3. நாணய ஆதாரங்கள்
இலக்கிய சான்றுகள்:
1. நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யானர் ஸ்மிருதிகள்
2. அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதி சாரம் என்ற தரும சாஸ்த்திரம்
(பொ.ஆ.400)
3. விசாகதத்தரின் தேவி சந்திர குப்தம், முத்ராராட்சகம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்கள் அளிக்கின்றன,
4. புத்த, சமண இலக்கியங்கள்
5. காளிதாசர் படைப்புகள்
6. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை வருகை தந்த சீனப்பயணி பாஹியான் குறிப்புகள்.
கல்வெட்டுச் சான்றுகள்:
1. மெஹரோலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
2. அலகாபாத் தூண் கல்வெட்டு: சமுத்திர குப்தரின் ஆட்சி, அவரது ஆளுமை, சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.இதனைப் பொறித்தவர் ஹரிசேனர் இது 33 வரிகளில் நாகரி வரி வடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
நாணய ஆதாரங்கள்:
1. குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
2. இந்தக் தங்க நாணயங்கள் குப்தா அரசர்களின் பட்டங்கள் குறித்தும் அவர்கள் நடத்திய வேதச் சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.
35.
(i) சாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமான கோயில்களை கட்டுவதற்கு வேசர கலைப்பாணியை பின்பற்றினர். ஐஹோலே, பாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமான கோயில்களை காணலாம்.
(ii) அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களை காணலாம். பாதாமி, அஜந்தா, குகைக் கோயில்களில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காண முடிகிறது. 2ம் புலிகேசி ஒரு பாரசீக தூது குழுவிற்கு வரவேற்பளிப்பது போன்று ஓவியத்தில் சித்திகரிக்கப்படுகின்றன.
சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம்:
முதல்நிலை:
ஐஹோலே மற்றும் பாதாமியில் முதனிலை கோயில்கள் உள்ளன. ஐஹோலேவில் உள்ள 70 கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.
கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.
1. லட்கான் கோயில் - சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ளது.
2. ஒரு யுத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கைக் கோயில்
3. ஹீச்சிமல்லி குடி கோயில்
4. மெகுதி என்ற இடத்தில் உள்ள சமண கோயில்
பாதமியிலுள்ள முக்தீஸ்வரர் கோயிலும், மேலகுட்டி சிவன் கோயிலும் கட்டிடக்கலைக்கும், அழகிற்கும் பெயர் பெற்றவை.
இரண்டாம் நிலை:
1. பட்டாடக்கல் என்ற இடத்தில் பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வடஇந்திய கலைப்பாணி, ஆறு திராவிட கலைப்பாணியில் அமைந்தவை.
2. வட இந்திய கலைப்பாணியில் அமைந்துள்ள பாபநாதர் கோவில் திராவிட கலைப்பாணியில் அமைந்த சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை.
3. இரண்டாம் விக்கிரமாதித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது.
4. காஞ்சியில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டது என்று கருதப்பட்டது.
36.
1.பாடலிபுத்திரம் மெளரியப் பேரரசின் மாபெரும் தலைநராகும். இது கங்கையின் சோன் நதியும் சங்கமமாகும் இடத்தில் ஒரு இணைநகரத்தின் வடிவில் இருந்த பெரிய செல்வமிக்க நகரம் என்று வர்ணிக்கப்படுகிறது.
2. இது 14 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது. வெளியே பாதுகாப்பிற்காக மரத்தாலான சுற்றுச்சுவர் இருந்தது. எதிரிகள் மீது அம்பு எய்வதற்காக இதில் ஆங்காங்கே ஓட்டைகள் இருந்தன. நகரத்திற்க 64 வாசல்கள் இருந்தன. 570 கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன.
3. சுவருக்கு வெளியே அகலமான, ஆழமான அகழி இருந்தது. அகழிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. பாதுகாப்பிற்காகவும் , கழிவுநீர் வடிகாலாகவும் அகழி பயன்பட்டது. நகரத்திற்குள் பல அழகிய அரண்மனைகள் இருந்தன.
4. அதன் மக்கள்தொகை மிகவும் அதிகம். நகரம் 30 பேர் கொண்ட ஒரு கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. அசோகர் இங்கு பல தூண்கள் கொண்ட அரங்கை நிர்மானித்து நகரத்தின் கம்பீரத்தை அதிகரித்தார்.
37.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
38.
காடு சார்ந்த பொருளாதாரம்:
1. முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும்.
2. காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது.
3. தச்சர், கப்பல்கட்டுவோர், மேல்பூச்சி சாயம் தயாரிப்போர் ஆகியோருக்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன.
4. நெசவு செய்வோர் உருளைகள் செய்வோர்க்குத் தேவையான பக்குவப்படுத்தப்படாத பட்டையை வழங்கியது.
5. இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருவாக்குவோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது.
வேளாண் சார்ந்த பொருளாதாரம்:
1. கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
2. வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம்.
3. அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது.
4. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
5. அவுரி முகலாய கால முக்கிய வணிகப் பயிராகும்.
நகைப்புறப் பொருளாதாரம்:
1. நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற்கூடங்களைச் சார்ந்திருந்தது.
2. பஞ்சடித்துப்பட்டை இடுபவர் நூல்நூற்போர்,நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப்பதிப்போர், சலவை செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
3. பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. வங்காளம் உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் முக்கிய மையமாக திகழ்ந்தது.
வர்த்தகமும் வாணிகமும்:
1. நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமைமிக்க சட்டம் ஒழுங்குப் பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
2. உபரி பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறுகளின் வழியாகவும், மாட்டு வண்டிகளும், ஒட்டக வண்டிகளும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
3. பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலை தூரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.
4. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
39.
வடஇந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரம்ம சமாஜமும், ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன. ஆனால் தமிழகம் தனக்கே உரித்தான சீர்திருத்த இயக்கங்களைச் சந்தித்தது.
வைகுண்ட சுவாமிகள் (1809-1851)
(i) இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் (சாமிதோப்பு) எனும் சிறிய ஊரில் 1809ல் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார்.முத்துக்குட்டி எனும் இயற்பெயர் கொண்டவர்.
(ii) திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களைச் கற்றார்.
(iii) தனது போதனைகளில் சாதிமுறையையும், அதிக வரிவசூல் முறையையும் கண்டித்தார்.
(iv) ஒடுக்கப்பட்ட மக்களிடேயே மிகவும் பிரபலமான அவர் " ஐயா வழி" என்ற நடைமுறையில் மக்கள் பின்பற்றினர்.
(v) சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளில் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தவர்.
(v) ஸ்ரீவைகுண்ட சாமிகள் வழிபாடு 1830 களில் நிறுவப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
(vi) அவருடைய போதனைகள் தொகுக்கப்பட்டு 'அகிலத்திரட்டு ' என்னும் வழிபாட்டு நூலக வெளி வந்தது.
(vi) 'நிழல் தாங்கல்' என்றழைக்கப்பட்ட அவர் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன.
இராமலிங்க அடிகள் (வள்ளலார்)1823-1874
(i) இராமலிங்க அடிகளார் சிதம்பரத்திற்கு அருகில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார்.
(ii) முறையாக கல்வி பெறா இவர் சொந்தமாக பாடல்களை இயற்றினார்.அவையே 1867-ல் திருவருட்பா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
(iii) மதவெறியையும், பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தார்.
(iv) அவர் சத்திய தர்மசாலை ஒன்றை வடலூரில் நிறுவி ஏழைகளுக்கு உணவளிக்கத் தொடங்கினார். முக்கியமாக 1860 களில் பஞ்சங்களும், கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதிமத வேறுபாடின்றி உணவளித்தார்.
(v) தன்னை பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞானசபை எனும் அமைப்பை நிறுவினார்.
(vi) அவருடைய எழுத்துக்கள் உலகளாவிய சிந்தனைகளைத் தூண்டி சைவ சமயத்துக்குள் இருக்கும் பிரிவினைகளை மதிப்பிழக்கச் செய்தது.
அயோத்திதாசப் பண்டிதரும்-பௌத்தமும்:
(i) பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டில் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டு விட்டது.
(ii) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர் பெறத் துவங்கியது.
(iii) 1867 ல் சீவகசிந்தாமணி, 1898ல் மணிமேகலை ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
(iv) இதை அச்சிட்டு வெளியிட்டவர் அயோத்திதாச பண்டிதராவார்.
(v) 1890 களில் ஆதிதிராவிடர்களுக்கிடையே இயக்கத்தைத் தொடங்கிய அவர் ஆதி திராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார்.
(vi) மக்கள் பௌத்த மதத்திற்கு மாறுவதை அவர் ஊக்குவித்தார்.
(vii) அவர் கொள்கையை வட தமிழகப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினர்.
(viii) இவ்வியக்கத்தில் சிங்காரவேலரும், லட்சுமி நரசுவும் முக்கியப் பங்கு வகித்தனர்.
(ix) அயோத்திதாச பண்டிதர் 1908 முதல் "ஒரு பைசாத் தமிழன்" என்ற பெயரில் வாரந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி தான் இயற்கை எய்தும் காலம் வரை நடத்தினார்.
(x) இவ்வாறு பல இயக்கங்கள் சமூக மூடநம்பிக்கையிலும், சீரற்ற பழக்க வழக்கங்களிலும் மூழ்கியிருந்த மக்களை ஒரு மாறுதலுக்கு உட்படுத்தியது என்றே சொல்லலாம்.
40.
ரோம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது.
மேலும் பொ.ஆ.மு.27ல் பேரரசர் அகஸ்டின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வக்குவிப்பும்:
ஐரோப்பாவிலும் வாடஆப்பிரிக்காவிலும் பெட்ரா வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும் செல்வா செழிப்பு மிக்க நகரமாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ் காலக்கணிப்பு:
பொ.ஆ.முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி "ஹிப்பாலஸ்" என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடிக் கடல் வழி:
ரோமானிய கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நேரடியாக பயணிக்க தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள் தவிர்த்தனர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆணுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஓரு கப்பல் என்று அதிகரித்தது.
இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் ஆதியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
41.
அலாவுதின் கில்ஜியின் பரந்த நிலப்பரப்புகளை வென்றதைத் தொடர்ந்து அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
நிர்வாக சீர்திருத்தங்கள்:
(i) பிரபுக்கள் குவித்து வைத்திருந்த செல்வம் பறிமுதல் செய்தார். பிரபுக்கள் சதிகள் எய்வதற்கான வாய்ப்பை தடுக்க எடுத்த முதல் நடவடிக்கை இது.
(ii) சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.
(iii) கிராம அலுவலர்கள் அனுபவித்து வந்த மரபுரிமைகளை பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களை தடைச் செய்தார்.
(iv) ஊழல் அரசு அலுவலர்களை கடுமையாகத் தண்டித்தார்.
சமூக சீர்திருத்தம்:
(i) உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டது.
(ii) இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது.
(iii) அலாவுதீன் விதித்த வரிசுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல.
(iv) தனது பேரரசின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
சந்தை சீர்திருத்தங்கள்:
(i) படை வீரர்களுக்கு ஊதியத்தை பணமாக கொடுத்த முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார் குறைந்த ஊதியமும் அளிக்கப்பட்டது.
(ii) அத்யாவசியப்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிக்கவும் ஒற்றர் முறையை பயன்படுத்தினார்.
(iii) கொடுக்கல், வாங்கல், பேரங்கள் அனைத்து விபரங்களையும் ஒற்றர் மூலம் அறிந்து கொண்டனர்.
(iv) அத்யாவசியப் பொருள்களின் விலை குறித்து அலுவலர்களும், ஒற்றர்களும் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
தண்டனை:
(i) விலை ஒழுங்கு முறை விதிகளை மீறுவோர் கடமையாக தண்டிக்கப்பட்டனர்.
(ii) ஏதேனும் எடைக்குறைவு கொண்டு பிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண்முன்னே வீசப்பட்டது.
இவ்வாறாக எளியோர் மீது வரியை குறைத்து செல்வந்தர்கள் மீது அதிக வரியை புகுத்தி, தவறுகளுக்கு தக்க தண்டனை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தினார்.
42.
ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் - சுவாங் தனது குறிப்புகளில் வட இந்தியாவின் நிலையையே குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்
1. சாதி அமைப்பு முறை
2. பெண்கள் நிலை
3. மக்களின் வாழ்க்கைமுறை
4. உணவுப் பழக்கங்கள்
5. கல்வி
1. சாதி அமைப்பு முறை:
இந்து சமூகத்தில் சாதி முறை வலுவாக காலூன்றியிருந்தது.
யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தில் நான்கு பிரிவினர்கள் தொழில்கள் முற்காலத்தில் இருந்தது போலவே தோன்றின.
மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
பல்வேறு சாதி அமைப்பு காணப்பட்ட போதிலும் சமுதாய பிரிவினர்களிடையே மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
2. பெண்கள் நிலை
பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை என யுவான் சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்
உடன்கட்டை ஏறும் வழக்கம். (சதி) இருந்திருக்கிறது. பிரபாகரவர்தனரின் மனைவி யசோமதிதேவி தன் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.
3. வாழ்க்கைமுறை
மக்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். பருத்தி பாட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர்.
மெல்லிய ஏக துணிகளை தயாரிக்கும் காலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள் பெண்கள் என இருசாராரும் தங்கம் வெள்ளி அணிகலனை பயன்படுத்தினார்.
மோதிரங்கள், கப்புகள், பதக்கங்கள் அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் அழகுசாதன பொருட்களை பயன்படுத்தினர்.
4. உணவுப் பழக்கங்கள்
இந்தியாவிலும் மரக்கறி உணவுப் பழக்கத்தை கொண்டிருந்ததாக யுவான் - சுவாங் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
உணவு தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
சில நேரங்களில் மீனும் ஆட்டிறைச்சியும் உண்டனர்.
5. கல்வி
மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது.
கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது
வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை
ஒழுக்கமும் அறிவுத் திறனும் கொண்ட சாதுக்களையும் பிட்சுகளையும் மக்கள் பெரிதும் மதித்தனர். யுவான் சுவாங் மேற்கண்டவாறு வட இந்தியாவின் நிலை குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
43.
சங்க கால சேர, சோழ, பாண்டிய அரசுகளின் அரசியல் அமைப்பைப் பொறுத்த மட்டிலும் அறிஞர்களிடையேபல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தொடக்க காலத்தைச் சேர்ந்ததும் பெருபான்மையோரால் ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்தும் யாதெனில் சங்ககாலச் சமுதாயமானது நன்கு கட்டமைக்கப்பட்ட அரசைக் கொண்ட ஒரு சமூகம் என்பதாகும்.
அ) தங்கள் கருத்துக்கு ஆதரவாக முன் வைக்கும் வாதங்கள் வருமாறு:
1. சமூகப் பிரிவினைகள் வெளிப்படவில்லை.
2. எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படாத நிலையிலிருந்து.
3. ஒரு அரசின் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் வேளாண் வளர்ச்சியும் வேளாண் உபரியும் நாசம் ஏற்படுத்தும் போர்களால் தடுக்கப்பட்டன.
4. வட இந்திய அரசுகளைப் போல வரி விதிப்பு இருந்ததாகச் சான்றுகள் இல்லை.
ஆ) மேற்கண்ட கருத்திற்கு எதிரானவர்கள் முன் வைக்கும் காரணங்கள்:
1. சங்க இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தோமேயானால் மருத நிலப்பகுதி வாழ் சமூகத்தில் வேற்றுமைகள் தோன்றிவிட்டதை அறியலாம்.
2. தங்கள் நிலத்தின் மீது மூவேந்தர் கொண்டிருந்த பற்றையும் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கையும் கிரேக்க - ரோமானிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
3. ஆட்சிப் பகுதிகளை விரிவுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட போர்களே புறத்திணை இலக்கியங்களின் முக்கியப்பாடு பொருளாக இருக்கின்றன.
4. வணிகப் பெறுவழிகளிலும், காவிரிப்பூம்பட்டிணம் துறைமுகத்திலும் வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.
5. பொ.ஆ.மு. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி, பொ. ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை வணிகம் மிகப்பெரும் பங்கை வகித்துள்ளது.
44.
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
மட்பாண்டங்கள் :
பழுப்பு மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுகள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.
செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.
விளை பொருட்கள்;
நெல்லி, பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.
வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.
45.
(i) இசுலாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள் அபகரிப்புகள் இருந்தாலும் இந்து மதத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான மனதுடன் காணப்பட்டனர்.
(ii) இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி தனது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார்.
(iii) 1325ல் முகமது -பின்-துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணையிட்டார்.
(iv) இவரே கூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.
(v) பரணி என்ற வரலாற்று ஆசிரியர் தனது நூலில் குறிப்பிடும் போது "பல கடவுள் வழிபாட்டாளர்களையும் இந்துக்களையும், மங்கோலியர்களையும், நாத்திகர்களையும், பஞ்சணையில் அமரவைத்து சகல மரியாதைகளையும் செய்கிறார்" என்று குறிப்பிடுகிறார்.
(vi) மேலும் "இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோயில்கள் கட்டிக் கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இசுலாமிய வேலையாட்கள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள்".
(vii) "இசுலாமியர்களுக்கு நிகராக வாய், ராணா, தாகூர், ஷா, மஹதா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்படுகின்றன" என்றும் பரணி எழுதுகிறார்.
இவைகள் இசுலாமியர் ஆட்சியின் சிறப்பு வாய்ந்த முக்கியத்துவம் ஆகும்.
46.
1.சிவாஜியின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியானவையாக இல்லை.
2.அவரது முத்த மகன் சாம்பாஜி அவரைக் கைவிட்டு முகலாய முகாமில் இணைந்தார்.
3.சாம்பாஜி திரும்பிய போது ஒளரங்கசீப்பால் சிறைபிடிக்கப்பட்டு பன்ஹாலா கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
4.அடுத்தடுத்த போர்கள் சிவாஜியின் உடல் நலத்தைப் பாதித்தன. அவர் தனது 53 வது வயதில் 1680 ஆம் ஆண்டு காலமானார்.
47.
i) சிலை வடிப்புக் காலையில் கிரேக்க தாக்கத்தின் காரணமாக இந்திய - கிரேக்க பாணியிலான கூறுகள் ஒன்றிமைந்து புதியமுறை உருவானது.
ii) இது காந்தாரக்கலை எனப்படுகிறது. இந்தோ கிரேக்க பாணியிலான சிற்பங்களும் கலையும் தோன்றுவதற்கு வழிவகுத்தது.
iii) தட்சசீலத்திலும் வடமேற்கு பகுதியிலும் செதுக்கப்பட்ட புத்தரின் சிலைகள் கிரேக்க மரபால் ஊக்கம் பெற்று, கண்ணியமான ஆடைகளில் தேவதூதர்களாலும் சிலைகளாலும் சூழப்பட்டுள்ளதாக அவரைக் காட்டுகின்றன.
48.
(i) நாயக்க என்னும் சொல் தெலுங்கு கன்னடப் பகுதிகளில் பதிமூன்றாம் நுற்றாண்டிலிருந்தே இராணுவத் தலைவர், அல்லது இராணுவ வீரர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
(ii) பதிமூன்றாம் நூற்றாண்டில் காகத்திய அரசில் ஒரு நாயக்கின் இராணுவ சேவைக்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட பகுதியின் வருவாயை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.
(iii) கல்வெட்டுகள் இம்முறையைத் தமிழில் நாயக்கட்டணம் எனவும், நாயக்தானம் என கன்னடத்திலும், நாயன்கரமு எனத் தெலுங்கிலும் குறிப்பிடுகின்றன.
(iv) இம்முறையானது கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர் ஆகியோரின் ஆட்சியின் போது நிறுவன வடிவம் பெற்றது.
(v) கிருஷ்ண தேவராயரைப் போன்ற வலிமையான அரசர்கள் இருந்தவரை இம்முறை சிறப்பாகச் செயல்பட்டது.
(vi) தலைக்கோட்டை போருக்குப் பின்னர் பெரும்பாலான நாயக்குள் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கினர்.
49.
(i) பிள்ளையார்பட்டி
(ii) திருமயம்
(iii) குன்றக்குடி
(iv) திருச்செந்தூர்
(v) கழுகுமலை
(vi) கன்னியாகுமரி
(vii) சித்தன்னவாசல்
ஆகிய இடங்களில் தொடக்க காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட குடைவரை கோயில்கள் காணப்படுகிறது.
50.
i) நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
ii) ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
iii) சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ராகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
iv) காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
v) சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்து துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
51.
(i) சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
(ii) விஜயபத்திரிக்கா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
(iii) அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
(iv) அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
(v) கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
(vi) ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
52.
53.
கிழார் என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவ்ர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர்.
வேளிர்:
வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.
54.
வேளாண், உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
(1) ராஜகிருகம், சிராவஸ்தி, கெளசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
(2) உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்.
(3) வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards