11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் …………………
யூதிடெமஸ்
டெமெட்ரியஸ்
மினாண்டர்
ஆன்டியால்ஸைடஸ்
2.
………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.
சரவணபெலகொலா
மதுரை
காஞ்சி
கழுகுமலை
3.
4.
கரிகாலன் ________________ மகனாவார்
செங்கண்ணன்
கடுங்கோ
இளஞ்சேட்சென்னி
அதியமான்
5.
____________ வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
இரும்பு
வெண்கலம்
செம்பு
பித்தளை
6.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருபாஞ்சாலம்
கங்கைச்சமவெளி
சிந்துவெளி
விதேகா
7.
வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
செம்புக்காலம்
இரும்புக்காலம்
8.
தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக
9.
நாற்பதின்மர் அமைப்பு
10.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
11.
தமிழ்நாட்டின் பெளத்த வரலாற்றில் நாகப்பட்டினத்தின் முக்கியத்துவத்தை எழுதுக.
12.
பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.
13.
சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக
14.
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.
15.
விக்ரமசீலா பல்கலைக்கழகம் குறித்துச் சிறு குறிப்பு தருக
16.
17.
தமிழ்நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக.
18.
சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
19.
ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
20.
சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது?
21.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
1.
(c)
மினாண்டர்
2.
(a)
சரவணபெலகொலா
3.
(b)
4.
(c)
இளஞ்சேட்சென்னி
5.
(a)
இரும்பு
6.
(a)
குருபாஞ்சாலம்
7.
(a)
பழங் கற்காலம்
8.
(i) சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக இறையனார் அகப்பொருள் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ii) 1. முதல் சங்கம் -தென்மதுரை
2. கிடைச்சங்கம்-கபாடபுரம்
3. கடைச்சங்கம் -மதுரை
ஆகிய மூன்று சங்கங்களையும் பாண்டியர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் தமிழை வளர்க்க செயல்படுத்தியதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
9.
(i) டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
(ii) இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
(iii) கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
(iv) வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.
10.
மன்னர் நெடுஞ்செறலாதனின் மகன் சேரன் இரும்பொறையே ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறார். இவர் வெற்றியை (ஆடு) தனது கொள்கையாகக் (கோட்பாடு) கொண்டு பல வெற்றிகள் குறித்து வீறு பெற்ற மன்னனாக வாழ்ந்தார்.
11.
(i) பல்லவ அரசன் 2ஆம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் ஒரு சீன அரசரின் வேண்டுகோளுகிணங்க நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டது.
(ii) சீனத்துறவி வு-கிங் இந்த பெளத்த மடத்துக்கு வருகை தந்தார்.
(iii) பொ.ஆ. 1006ல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் ஒரு பெளத்த கோயிலை கட்டினார்.
(iv) அது சூளாமணி வர்ம விஹாரம் எனப்படுகிறது.
12.
1. மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
2. குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
3. உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது.
4. இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
13.
(i) சோழர்கால சமூகப் படிநிலையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கியது வேளாண்மை ஆகும்.
(ii) உயர்தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேயகிழவர்' என அழைக்கப்படும் நில உடமையாளர் ஆவர்.
(iii) வேளாண்மை கிராமங்களின் உடமையாளர்கள் அடுத்தபடி நிலையில் இருந்தனர்.
(iv) இவர்கள் இருவரிடமும் பணிபுரியும் குத்தகைகாரகள் உழுகுபடி எனப்பட்டனர்.
(v) அடிமட்ட உழைப்பாளிகளான 'சமூகப்படி' எனப்படுவோரும், பணிசெய் மக்கள் எனும் அடிமைகளும் கடை நிலையில் காணப்பட்டார்.
14.
(i) ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினார்.
(ii) ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்யபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
(iii) வைதீக இந்துக்களை ஒன்றிணைந்தார்.
(iv) பிராமணர் அல்லாதோரையும் ஆழ்வார்கள் வைணவத்தில் இணைத்துக் கொண்டனர்.
(v) வைதீக சடங்குகளும், நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு வைணவம் தமிழகத்தில் பரவியது.
15.
விக்ரமசீலா பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது.
பாலர் வம்சத்தை சேர்ந்த 'தர்மபாலர்' விக்ரமசீலா என்ற பௌத்த மடாலயத்தை நிறுவினார்.
இது பின்னாளில் விக்ரமசீலா பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.
தர்மபாலர் புத்த மதத்தின் பெரும ஆதரவாளராக இருந்த படியால், விக்ரமசீலாவில் பௌத்த கொள்கைகளையும் பண்பாட்டையும் போதிக்க வழி வகை செய்தார்.
இங்கு அதிஷா, சரகர், திலோபா போன்ற அறிஞர்கள் கல்வியைப் போதித்தனர்.
16.
17.
(i) பொ.ஆ. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து சமணம் தமிழ் நாட்டில் பரவியது.
(ii) மதுரை மற்றும் பிற இடங்களைச் சுற்றிலும் குன்றுகளில் சமணத்துறவிகள் தங்கியிருந்த கற்படுக்கைக்கைகளோடு கூடிய குகைகள் காணப்படுகின்றன.
(iii) தொடக்க காலத் தமிழ் இலக்கியத்தில் (நாலடியார், பழமொழி, சீவக சிந்தாமணி, யாப்பெருங்கல காரிகை, நீலகேசி சமணத்தின் வலுவான தாக்கத்தை உணர முடிகிறது.
(iv) பொ.ஆ.470ல் மதுரையில் வஜ்ரநந்தி என்பவரால் ஒரு திராவிட சமணச் சங்கம் நிறுவப்பட்டது.
(v) சமணம் தமிழ் நாட்டில் பரவியதால், பல சமணக் கோயில்களும் கட்டப்பட்டன.
(vi) காஞ்சிபுரம் அருகே அழகான மேற்கூரை ஓவியங்களுடன் உள்ள திருப்பருத்திக்குன்றம் கோயில் சமணக் கோயில்களில் ஒன்றாகும்.
18.
சிந்து நாகரிகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக 1.5 மில்லியன் ச.கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன.
எல்லைகள்:
1. மேற்கில் பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்,
2. வடக்கில் ஷார்ட்டுகை(ஆப்கானிஸ்தான்)
3. கிழக்கில் ஆலம் புர்ஜிர் (உத்தரபிரதேசம்)
4. தெற்கில் தைமாபாத் (மஹாராஷ்டிரம்)
எனது சிந்து நாகரீகப்பகுதிகளின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
19.
இராட்டிரகூட முதல் மன்னர் தந்தி கர்க்கர் இவருக்குப்பின் முதலாம் கிருஷ்ணர் மூன்றாம் கோவிந்தன் அமோகவர்ஷர் போன்ற சிறந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது கால இலக்கியம், கலை கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்ததாகும்.
இலக்கியம்:
இவர்களது காலத்தில் நிலையம் மேம்பட்டு இருந்தது.
i) முதலாம் அமோகவர்ஷன் "கவிராஜா மங்களம்" என்னும் கன்னட நூலை இயற்றினார். இது கன்னடத்தில் இயற்றப்பட்ட மொழியியல் நூலாகும்.
ii) ஜுனசேனர் என்பவர் சமணர்களின் ஆதிபுராணத்தை இயற்றினார்
iii) மூன்றாம் கிருஷ்ணர் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட
கவிச்சக்கரவத்தி பொன்னா
ஆதிகவிபம்பா
கவிச்சக்கரவர்த்தி ரன்னா
ஆகியோர்களை ஆதரித்தார்
கட்டிடகலை:
ராஷ்டிர கூடர்கள் கட்டிடக் கலைக்கும் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோயில்கள் இவர்களது கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
எல்லோரா:
i) எல்லோரா குடைவரைக் கோயில் சமண, பௌத்த மற்றும் இந்து மத சின்னங்களுக்கான கலை நுட்பத்தை கொண்டுள்ளது.
ii) இங்கு முதலாம் அமோக வர்ஷர் கட்டிய ஐந்து சமணக்குகைக் கோயில்கள் உள்ளன.
iii) மேலும் இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாச நாதர் கோயில் நம் கண்ணைக் கவரும் அமைப்பாகும்.
எலிபண்டா:
i) எலிபண்டாவின் பிரதானக் கோயில் எல்லோரா கோயிலை விட சிறந்ததாகும்
ii) இங்குள்ள "மகேஷுமூர்த்தியின்" மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவு சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
இது போன்று இன்னும் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இராஷ்டிரக் கூடர்கள் கட்டிடக் கலைக்கு செய்த தொண்டு அளவிட முடியாததாகும்.
20.
1. இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு . 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமான சிந்து நாகரிகம் எனப்படும்.
2. இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால் அது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
3. ஹரப்பா நாகரிகம் பல்வேறு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொடக்க கால ஹரப்பா, முதிர்ச்சி அடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
4.ஒரு நகரப் பண்பாட்ற்க்கான கூறுகள் முதிர்ச்சி பெட்ரா ஹரப்பாவின் காலத்தில் இருந்தது.
5. சிந்து சமவெளியை சுற்றிலும் அகழ்வாய்வு செய்து பல இடங்களில் நாகரீக அடையாளம் கிடைத்தாலும் முதன் முதலில் ஹரப்பா என்ற இடத்தில் இந்நாகரிக அடையாளம் கிடைத்தால் இது ஹரப்பா நாகரிகம் என அழைக்கப்படுகிறது.
21.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards