11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/03/2019
11th Public Exam March 2019 Important 5 Marks Questions
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை விளக்குக.
2.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
3.
மொத்த வருவாயை வரைபடத்துடன் விளக்குக.
4.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
5.
ஊரக வறுமைக்கான காரணங்களை விளக்குக.
6.
நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.
7.
அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?
8.
மனித மேம்பாட்டுகுறியீடு பற்றி விளக்குக.
9.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பெயர்களை எழுதுக.
10.
பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர்ச்சி பற்றி விவரி.
11.
பல்வகை அங்காடியின் இயல்புகள் ஓர் ஒப்பீடு விளக்குக.
12.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
13.
14.
தேவைச்சார்பு Pd=25-Q2 மற்றும் அளிப்புச்சார்பு Ps =2Q+1. ஆகியன தரப்பட்டுள்ளன. தூய போட்டி நிலவும்போது (அ) நுகர்வோர் உபரி மற்றும் (ஆ) உற்பத்தியாளர் உபரி ஆகியவற்றைக் காண்க. (Pd= தேவை விலை; Ps=அளிப்பு விலை)
15.
தமிழ்நாட்டின் பொதுதுத்துறை போக்குவரத்து முறையினை விளக்குக.
16.
17.
ரிகார்டோவின் வாரக் கோட்பாட்டை எடுத்துக்காட்டுடன் விவரி.
18.
வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் நோக்கங்களை விவரி?
19.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியப்பொருளாதாரம் பற்றி விவாதிக்க?
20.
ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.
21.
22.
காந்தியப் பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாக எழுதுக.
23.
இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.
24.
25.
26.
நிறைவு போட்டியின் இயல்புகள் விளக்குக.
27.
சம அளவு உற்பத்தி கோட்டின் பண்புகளை வரைபடத்துடன் விவரி
28.
குறுகிய காலச் செலவுக் கோடுகளை தகுந்த படத்துடன் விவரி
29.
30.
பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக
1.
1.அதிக மக்கள் தொகை:
1.மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா, சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக உள்ளது.
2.மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக உள்ளது.
3.மக்கள் தொகை அதிகரிப்பு ஒவ்வொரு 1000பேருக்கு 1.7 என்ற விகிதத்தில் அதிகரிக்கிறது.
4.ஆண்டு தோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.
2.ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை:
1.இந்திய பொருளாதாரத்தில் பொருளாதார ஏற்ற தாழ்வு நிலை நீடிக்கிறது.
2.அதிக அளவில் வருமானம் மற்றும் சொத்துக்களைப் பெற்றிருக்கும் 10% இந்தியர்களின் சொத்துக்கள் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
3.சமுதாயத்தில் மீதமுள்ள அதிக அளவு மக்களின் வறுமை நிலை அதிகரிப்பதற்கும், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வீதம் அதிகரிப்பதற்கும் காரணமாக அமைகிறது.
3.அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வு:
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருந்த போதும் அத்தியாவசியப் பண்டங்களும் விலை தொடர்ந்து உயர்கிறது.
4.உள் கட்டமைப்பு பலவீனம்:
கடந்த பத்து இருபது ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் படிப்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும் மின் ஆற்றல், போக்குவரத்து,பண்டங்கள், பாதுகாப்பு பெட்டகம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இன்றளவும் பற்றாக்குறையாக உள்ளது.
5.வேலைவாய்ப்பை உருவாக்க திறனற்ற நிலை:
அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வசதியை அதிகரிப்பது அவசியமாகிறது.
6.பழமையான தொழில் நுட்பம்:
வேளாண்மை மற்றும் சிறுதொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப நிலை இன்னும் பழமையானதாகவும் வழக்கொழிந்ததாகவும் உள்ளது.
2.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
3.
1.மொத்த வருவாய் (Total Revenue - TR) என்பது, ஒரு நிறுவனம் தன் உற்பத்தி பண்டங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் மொத்த வருமானமே, மொத்த வருவாய் எனப்படுகிறது.
2.விற்பனை செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையை அப்பண்டத்தின் விலையால் பெருக்கிக் கிடைப்பது மொத்த வருவாய் ஆகும்.
3.\(\boxed{TR = P \times Q}\) இதில் TR -மொத்த வருவாய்,P-விலை, Q-விற்பனை அளவு.
4.உதாரணம்: ஒரு நிறுவனம் 100 கைபேசியை 500 வீதம் விற்பனை செய்தால் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50000/-ஆகும்.
5.TR= 500 x 100
\(\boxed{\therefore TR=50000}\)
மாறாத விலையில் மொத்த வருவாய்
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 5 | 5 |
| 2 | 5 | 10 |
| 3 | 5 | 15 |
| 4 | 5 | 20 |
| 5 | 5 | 25 |
| 6 | 5 | 30 |

நிலையான விலை:
விலை Rs.5ஆக உள்ளபோது மொத்த வருவாய் போக்கினை மேற்கண்ட வரைபடம் விளக்குகிறது.
விலை குறைவு:
விலை குறையும் போது பண்டத்தின் விற்பனை அதிகரிக்கும் மொத்த வருவாயின் போக்கினை கீழ்கண்ட வரைபடம் விளக்குகிறது.
| விற்பனை அளவு (Q) Rs. | விலை (P) Rs. | மொத்த வருவாய் (TR) Rs. |
| 1 | 10 | 10 |
| 2 | 9 | 18 |
| 3 | 8 | 24 |
| 4 | 7 | 28 |
| 5 | 6 | 30 |
| 6 | 5 | 30 |
| 7 | 4 | 28 |
| 8 | 3 | 24 |
| 9 | 2 | 18 |
| 10 | 1 | 10 |

4.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
5.
(1) நிலங்கள் சரியாக பிரிக்கப்படாமை:
(i) ஊரக நிலப் பகுதிகள் ஒரு சிலரிடம் குவிந்து காணப்படுகிறது.
(ii) கிராம மக்கள் தங்கள் குடும்ப தேவைகளுக்காக அந்நிலங்களில் கூலிக்கு செய்கின்றனர்.
(2) பண்ணை சாராத தொழில்களில் வேலை வாய்ப்பின்மை:
அதிகரிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பண்ணை சாராத தொழில்கள் வளரவில்லை.
(3) பொதுத்துறைகளில் முதலீடு இன்மை:
மனித வளத்தை மேம்படுத்துவதற்கான முதலீடு நமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளது.
(4) பணவீக்கம்:
பொருட்களின் விலை அதிகரிப்பதால் ஊரக மக்களின் வாங்கும் சக்தி குறைந்த ஊரக வறுமைக்கு வழிவகுக்கிறது.
(5) குறைந்த உற்பத்தித் திறன்:
ஊரக தொழிலாளர்கள் மற்றும் பண்ணைகளின் குறைந்த உற்பத்தித்திறன், வறுமைக்கு காரணமாக அமைந்தது.
(6) வளர்ச்சியின் நன்மைகளில் உள்ள சமனற்ற நிலை:
பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நகர்புற பணக்காரர்களே அனுபவிப்பதால் சொத்துக்கள் அவர்களிடமே குவிந்து உள்ளது.
(7) குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதம்:
இந்திய பொருளாதார வளர்ச்சி பணக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
(8) பெரிய தொழிற்சாலைகளுக்கே முக்கியத்துவம்:
இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளில் செய்யப்படும் அதிக முதலீடு நகர்புறத்தின் நடுத்தர மற்றும் உயர் வருமான பிரிவினரின் தேவைகளையே பூர்த்தி செய்கிறது.
(9) சமூக குறைபாடுகள்:
சமுதாயத்தில் நிலவும் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் போன்றவை ஆக்கமற்ற உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
6.
நிலையான சமநிலை:
1. சமநிலை என்பது மாற்றமில்லா நிலையை அடைவது என்று ஸ்டிக்லர் குறிப்பிடுகிறார்.
2. நுகர்வோர் உச்ச மனநிலைவை பெருகின்றபோது சமநிலையடைகிறார்.
3.உற்பத்தியாளர் உச்ச இலாபம் பெறுகின்ற போது சமநிலையடைகிறார்.
4.உற்பத்தி காரணிகள் முழு வேலை வாய்ப்பையும்,உச்ச வெகுமதியையும் பெறும் போது சமநிலை அடைகின்றன.
5.எனவே, நிலையான சமநிலை என்பது நிலையான வேலை, அளவு,வருமானம்,தொழில்நுட்பம்,மக்கள் தொகை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.

வரைபட விளக்கம்:
1. X- அச்சு தேவை மற்றும் அளிப்பின் அளவையும்,
Y- அச்சு விலையையும் குறிக்கிறது.
2. DD-என்பது கீழ்நோக்கி சரியும் தேவைக்கோடு மற்றும்
SS-என்பது மேல்நோக்கி செல்லும் அளிப்பு கோடு ஆகும்.
3.OP-என்பது சமநிலை விலை.
4.OM-என்பது சமநிலை அளவு ஆகும்.
5.புள்ளி-E-ல் தேவை கோடும்,அளிப்புக் கோடும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்கிறது.
6.புள்ளி-E-ல் தேவையும், அளிப்பும் சமமாகி சமநிலை அடைகிறது.
7.
அளிப்பு நெகிழ்ச்சி ஐந்து வகைப்படும்:
1. மிகை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் (Es>1)
2. பொருளின் விலையின் ஒரு சதவீத மாற்றம் ஏற்படும்போது பொருளின் அளிப்பு ஒரு சதவீதத்தைவிட அதிக அளவு மாறுபடும்.
2. ஒருமை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாக அமையும் (Es=1)
2. விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்பட்டால் அளிப்பிலும் ஒரு சதவீதம் மாற்றமே ஏற்படும்.
3.குறைவான நெகிழ்ச்சி அளிப்பு:
1.அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாகவே
அமையும் (Es<1)
2.விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்படும்போது அளிப்பில் ஏற்படும் மாற்றம் ஒரு சதவீதத்தை விடக்குறைவாக இருக்கும்.
4.முற்றிலும் நெகிழ்ச்சியற்ற அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி புஜ்ஜிசியத்திற்கு சமமாக உள்ளது (Es=0)
2.விலையில் ஏற்படும் மாற்றம் அளிப்பின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
5.முழுமை நெகிழ்ச்சியுள்ள அளிப்பு:
1.அளிப்பு நெகிழ்ச்சி அளவு முடிவில்லாத நிலையில் இருக்கும் (Es=\(\alpha\))
2. விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அளிப்பில் அளவிட இயலாத மாற்றத்தை ஏற்படுத்தும்.





8.
(i) இதனை ஐக்கிய நாடுகள் முன்னேற்ற திட்டம் (UNDP) வெளியிட்டது.
(ii) இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் குறியீடு , கல்வித் குறியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது.
(1) வாழ்நாள் (ஆயுட்காலம் ) என்பது பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பின் மூலம் கணக்கிடப்படுகிறது.
(2) கல்வி அடைவுகள் .
(3) வாழ்க்கைத் தரமானது வாங்கும் சக்தியின் அடிப்படையிலானா தனிநபர் வருமானத்தைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
(iii) மனித மேம்பாட்டுக் குறியிட்டைக் கணக்கிடுவதற்கு முன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மதிப்புகள் ஒவ்வொரு குறியீட்டிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
9.
19 ஜூலை 1969 :
(1) அலகாபாத் வங்கி
(2) பாங்க் ஆப் பரோடா
(3) பாங்க் ஆப் மகாராஷ்டிரா
(4) கனரா வங்கி
(5) மத்திய வங்கி
(6) தேனா வங்கி
(7) இந்தியன் வங்கி
(8) இந்தியன் ஓவர்சிஸ் வங்கி
(9) பஞ்சாப் நேஷனல் வங்கி
(10) சிண்டிகேட் வங்கி
(11) யூனியன் வங்கி
(12) யுனைடெட் வங்கி
(13) யுகோ வங்கி
(14) பாங்க் ஆப் இந்தியா
(ii) 15 ஏப்ரல் 1980 :
(1) ஆந்திரா வங்கி
(2) கார்பரேஷன் வங்கி
(3) நியு பாங்க் ஆப் இந்தியா
(4) ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்
(5) பஞ்சாப் - சிந்து வங்கி
(6) விஜயா வங்கி
10.
(i) மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் சில பொருளாதாரக் குறியீடுகளில் சிறந்து விளங்குகிறது.
(ii) கேரளா கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது.
(iii) தமில்நாடானது சுகாதாரம், உயர்கல்வி, சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்றவற்றில் மிகச் சிறப்பாகவும் பிற மாநிலங்களைவிட மேலானதாகவும் உள்ளது.
(iv) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவதாக உள்ளது.
(v) புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது.
(vi) பிற மாநிலங்களை ஒப்பிடும்போது மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளது.
11.
| வ.எண் | இயல்புகள் | நிறைவுப் போட்டி | முற்றுரிமை | முற்றுரிமைப் போட்டி |
|---|---|---|---|---|
| 1. | உற்பத்தியாளர்கள்/விற்பனையாளர்கள் | எண்ணற்றவர்கள் | ஒருவர் மட்டுமே | அதிகம் |
| 2. | உற்பத்தியின் தன்மை | ஓரியல்பானவை முழுமையான பதிலீட்டு பண்டம் உண்டு |
தனித்துவமானவை (பதிலீட்டு பண்டம் இல்லை) |
பல்வேறு விதமான பண்டம் (நெருங்கிய பதிலீட்டு பண்டம்) |
| 3. | விலை மீது கட்டுப்பாடு | அங்காடி விலையை ஏற்பவர்கள் | விலையை நிர்ணயிப்பவர் | முத்திரை அங்கீகாரம் மூலம் ஓரளவு கட்டுப்பாடு. |
| 4. | உட்புகுதல் வெளியேறுதல் | தடையற்றது | தடையுள்ளது | எளிது. |
| 5. | இலாபம் | குறுகிய காலம் - மிகை இலாபம் நீண்ட காலம்-இயல்பு இலாபம். |
முற்றுரிமை இலாபம் | குறுகிய காலம் - அதிக இலாபம் நீண்ட காலம்-இயல்பு இலாபம். |
| 6. | அங்காடி பற்றி அறிதல் | முழுவதும் | முழுவதும் | எளிது |
| 7. | AR கோடு | பட்டைக்கோடு X - அச்சிற்கு இணையானது | கீழ் நோக்கியது.நெகிழ்ச்சி குறைவு | கீழ்நோக்கியது.அதிக நெகிழ்ச்சி உடையது. |
| 8. | விற்பனை அளவு | அதிகம் | நிறைவு போட்டி ஒப்பிடுகையில் குறைவு | கணிசம் |
| 9. | விலை | ஒரே மாதிரி விலை மற்றும் குறைவு | அதிகம் | மிதமான மற்றும் மாறுபட்ட விலைகள். |
| 10. | அங்காடி சக்தி | இல்லை | அதிகம் | சிறிது. |
12.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
13.
14.
அங்காடி சமநிலையில், Pd = Ps
25-Q2 = 2Q+1
0 = -25 + Q2 + 2Q+1
0 = -24 + Q2 + 2Q
Q2 + 2Q - 24 = 0
Q2 + 6Q - 4Q - 24 = 0
Q(Q + 6) -4(Q + 6) = 0
(Q + 6)(Q- 4) = 0
எனவே, Q=4 அல்லது Q=-6. Q மதிப்பு -6 ஆக பொருளாதாரத்தில் பொருளற்றது. எனவே Q=4 ஆக இருக்கும்போது,
Pd =25 -42=9;
Ps =2(4) + 1=9
நுகர்வோர் உபரி = \(\int _{ 0 }^{ 4 }{(25-Q^ 2)d Q-(9\times 4) } \)
\(={ \left[ 25Q-{Q^3\over3}\right] }_{0 }^{ 4 }-36\)
\(=[(25)(4)-{1\over3}{(4)}^{3}]-(0)-36\)
\(=[100-{64\over 3}]-(0)-36=42.67\)
உற்பத்தியாளர் உபரி Ps
\(P_s=(9\times4)-\int _{ 0 }^{ 4 }{ (2Q+1)dQ } \)
\(=36-{ [(Q^2+Q)]}_{ 0 }^{ 4}\)
= 36 - (16 + 4) = 16
15.
போக்குவரத்து:
(i) தமிழ்நாடு மிகச்சிறந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளைக் கொண்டது.
(ii) அதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கிறது.
(iii) நாட்டிலுள்ள நகரங்கள், கிராமப்புறங்கள் மற்றும் வேளாண் அங்காடிப் பகுதிகளை இணைக்கக்கூடிய தரமான சாலைப் போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
சாலை வசதி:
(i) மாநிலத்தில் 28 தேசிய நெடுஞ்சாலைகள் 5,036 கிமீ தொலைவினை இணைக்கிறது.
(ii) சென்னையிலுள்ள கோயம்பேடு மற்றும் ஈரோடு மத்தியப் பேருந்து நிலையங்கள் நம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மற்றும் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையங்களாகும்.
(iii) தமிழ்நாட்டின் மொத்த சாலை நீளம் 1,67,000 கிமீ ஆகும்.
(iv) இதில் 60,628 கி.மீ. தொலைவு தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
(v) சாலை போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரயில் போக்குவரத்து:
(i) தென்னக இரயில்வே தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளை உள்ளடக்கியது.
(ii) தமிழ்நாட்டில் உள்ள இருப்புப்பாதையின் மொத்த நீளம் 6693 கி.மீ. ஆகும்.
(iii) 690 இரயில் நிலையங்கள் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.
வான்வழிப்போக்குவரத்து:
(i) தமிழ்நாட்டில் நான்கு முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக சென்னை விளங்குகிறது.
(ii) சர்வதேச விமான நிலையங்கள், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
(iii) இத்துறையின் தொடர் வளர்ச்சியின் மூலம் பயணிகள் போக்குவரத்தும், சரக்கு போக்குவரத்தும் உன்னத வளர்ச்சி அடைந்துள்ளது.
16.
17.
வாரம் என்பது நிலத்தின் உண்மையானதும் அழிக்க முடியாததுமான சக்திகளை பயன்படுத்திக் கொள்வதற்காக நிலத்தின் விளைச்சலிருந்து ஒரு பகுதியை நில உரிமையாளருக்கு கொடுப்பதே ஆகும்.
டேவிட் ரிகார்டே விளக்கிய வாரக்கோட்பாடு தொன்மைக் கால வாரக் கோட் பாடாகும்.
அனுமானங்கள் :
(i) நிலம் வளத்தில் வேறுபட்டது.
(ii) வேளாண்மையில் குறைத்து செல் விளைவு விதி செயல்படுகிறது.
(iii) நிறைவுப் போட்டி நிலவுகிறது.
(iv) நீண்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டது.
(v) நிலம் உண்மையானதும் அழிக்கமுடியாத சக்திகளையும் கொண்டது.
(vi) அதிக வளமுள்ள நிலங்கள் முதலில் பயிர் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டுடன் இக்கோட்பாட்டின் விளக்கம் :
(i) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தீவில் குறிப்பிட்ட சில மக்கள் குடியேறுவதாக கொள்வோம்.
(ii) அங்கு மூன்று தரமுடைய நிலங்கள் உள்ளன.
(iii) A,B மற்றும் C, A என்பது மிகவும் வளம் பொருந்திய நிலம்.
(iv) A யுடன் ஒப்பிடும்போது B குறைந்த வளம் உடைய நிலம்.
(v) C என்பது மிகக் குறைந்த வளமுடைய நிலம்
(vi) நிலம் பயன்படுத்தப்பட்டால் அபரிமிதமாக இருப்பதால் அத்தகைய நிலம் இலவசமாக கிடைக்கிறது.அதுவரை வாரம் கிடையாது.
(vii) குறிப்பிட்ட அளவு உழைப்பாளரையும் மூலதனத்தையும் பயன்படுத்துவதால் 'A' தரம் உள்ள நிலத்தின் ஒரு ஏக்கருக்கு 40 மூட்டைகள் நெல் விளைகிறது.
(viii) அடுத்தடுத்த மற்றொரு சிறிய மக்கள் கூட்டம் அதே தீவில் குடியேறுவதாக கொள்வோம்.
(ix) சில காலத்திற்கு பிறகு B தர நிலத்தை பயிர் செய்ய பயன்படுத்துவார்கள்.
(x) வளம் குறைந்த 'B' தர நிலத்தின் 30 மூட்டைகள் நெல் விளைவிக்கப்படுகிறது.
(xi) A தர நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 10 மூட்டைகள் உபரியாக உள்ளது (40-30) இதை 'A' தர நிலத்திற்கான பொருளாதார வாரம் என அழைக்கிறோம்.
(xii) இன்னும் ஒரு சிறு மக்கள் கூட்டம் அதே தீவில் குடியேறுகிறது.
(xiii) "C" தர நிலத்தில் 20 மூட்டைகள் நெல் விளைவிக்கப்படுகிறது.
(xiv) 'A' தர நிலத்தின் உபரி தற்போது 20 மூட்டைகளாக அதிகரிக்கிறது (40-20) இது 'A' தர நிலத்தின் பொருளாதார வாரமாகும்.'B' தர நிலத்தின் பொருளாதார வாரமாகும்.
(xv) 'C' தர நிலத்தின் உற்பத்தி செலவு அதன் உற்பத்தி மதிப்பிற்கு சமமாக உள்ளது.எனவே அதற்கு எந்த ஒரு வாரமும் கிடைக்காது(20-20) எனவே 'C ' தர நிலங்களை "வாரமில்லா நிலம்" அல்லது இறுதி நிலை நிலம் என அழைக்கப்படுகிறது.
(xvi) வாரம் பெறக்கூடிய நிலத்தை உள் இறுதிநிலை நிலம் என்கிறோம்.
| நிலத்தின் தரம் | உற்பத்தி (மூட்டைகளில்) | உபரி(வாரம்) (மூட்டைகளில்) |
|---|---|---|
| A | 40 | 40-20=20 |
| B | 30 | 30-20=10 |
| C | 20 | 20-20=0 |
(i) X அச்சில் நிலத்திற்கான தரமும் Y அச்சில்ஏக்கருக்கான விளைச்சல் (மூட்டைகளும்) குறிப்பிடப்படுகிறது.
(ii) வரைபடத்தில் C தர நிலங்கள் வாரமில்லா நிலங்கள் எனப்படும்.
(iii) A மற்றும் B தர நிலங்கள் பெற்ற "இறுதிநிலை வாரமுள்ள நிலம்" (குறுக்கு வெட்டு நிலம் வரைபடத்தில் கோடிடப்பட்ட பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது)
குறைபாடுகள்:
(i) முதலில் வளம் பொருந்திய நிலம், பின்னர் வளம் குறைந்த நிலம் என்கிற வரிசை வரலாற்றின் அடிப்படையில் தவறானது.
(ii) இக்கோட்பாடு வாரமானது வாரம் விலையில் சேராது என குறிப்பிடப்படுகிறது.ஆனால் வாரமானது விலையுடன் சேர்ந்திருக்கும்.
18.
(i) அரசு 14 பெரிய வணிக வங்கிகளை ஜூலை 19,1969 அன்று தேசியமயமாக்கமுடிவு செய்தது.
(ii) 1980 ஆம் ஆண்டில் அரசு மேலும் 6 வணிக வங்கிகளை தேசியமயமாக்கிறது.
தேசியமயமாக்கலின் நோக்கங்கள்:
(i) பின்வரும் நோக்கங்களை அடைவதற்காக இந்திய அரசு வணிக வங்கிகளை தேசியமயமாக்கிறது
(ii) தேசிய மயமாக்கலின் முதன்மையான நோக்கம் சமூக நலத்தை அடைவதுயாகும்.
(iii) வேளாண்மை சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுவதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிதி தேவைபட்டது.
(iv) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் முற்றுரிமை கட்டுப்படுவதற்கும் சமூகத்தில் தேவையான பகுதிகளுக்கு இலகுவாக கடன் அளிப்பதற்கும் பேருதவியாக இருந்தன
(v) இந்தியாவில் ஏறத்தாழ 70% மக்கள் கிராமபுறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.கிராமப்புற மக்களிடைய வங்கி செயல்படுகளை ஊக்குவித்தல் மிகுந்த அவசியமாகிறது.
(vi) வங்கி வசதிகள் இல்லாத இடத்தில் வட்டாரங்களிடையே இருந்து ஏற்றத்தாழ்வுகளை குறைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உதவுகின்றன.
(vii) சுதந்தரத்திற்கு முன் இருந்து வங்கிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.தேசிய மயமாக்கப்பட்ட பிறகு கிராம புற மற்றும் நகர்புறங்களில் பல புதிய வங்கி கிளைகள் தொடங்கப்பட்டன.
(viii) தேசிய மயமாக்கப்பட்ட பின் வேளாண்துறை மற்றும் அதை சார்ந்த பிற துறைகளுக்கு தேவையான கடன்களை வங்கிகள் கொடுக்க ஆரம்பித்தன.
(ix) 1991 ஆம் ஆண்டின் புதிய தொழிரகொள்கைக்கு பிறகு இந்திய வங்கித்துறை பன்முகத் போட்டி திறமை உற்பத்தி திறன் போன்ற பல்வேறு முகங்களை எதிர்நோக்கி வருகிறது.
19.
பிரிட்டன் நாடு, இந்தியாவைக் காலனி ஆதிக்கத்தின் கீழ் 200 ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்து வந்தது.
காலனி ஆதிக்கம் சிதைப்பின் அடிப்படையில் முழு காலத்தையும் வரலாற்றுப் பொருளியல் வல்லுநர்கள் மூன்று கட்டங்களாக பிரித்தனர்.அவை
(i) வணிக மூலதனக் காலம்.
(ii) தொழில் மூலதனக் காலம்.
(iii) நிதி மூலதனக் காலம்.
(1) வணிக மூலதனக் காலம்.
(i)1757 லிருந்து 1813 வரையிலான காலம் வணிக மூலதன காலம் ஆகும்.
(ii) கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய நோக்கம் இந்திய மற்றும் கிழக்கிந்திய பொருட்களை ஒருவர் முற்றுரிமையாக வாணிபம் செய்து இலாபம் ஈட்டுவதேயாகும்.
(iii) பிரிட்டன் தொழில் மூலதனத்தை முன்னேற்ற இந்தியா ஒரு மிக முக்கியமான சுரண்டல் பிரதேசமாக கிழக்கிந்திய கம்பெனி கருதப்பட்டது.
(iv) 1750 மற்றும் 1760 களில் வங்காளமும் தென்னிந்தியாவும் கிழக்கிந்திய கம்பெனி அரசியல் நெருக்கடிக்கு உள்ளான போது முற்றுரிமை வணிகத்தின் (அல்லது) வாணிபத்தின் நோக்கம் நிறைவேறியது.
(v) எல்லாவற்றிற்கும் மேலாக இக்கம்பெனயின் அலுவலர்கள் அனைவரும் நேர்மையற்று , ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்
(2) தொழில் மூலதனக் காலம்.
(i)1813 முதல் 1858 வரையிலான காலம் தொழில் மூலதன காலமாகும்.
(ii) பிரிட்டிஷ் துணிமணிகளின் சந்தையாக இந்தியா விளங்கியது.
(iii) இந்தியாவிலிருந்து மலிவு விலையில் பெறப்பட்ட கச்சாப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு முழுமை பெற்ற பொருட்கள் இந்தியாவிற்கு அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டன.
(iv) இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் தூக்கி எறியப்பட்டன.
(3) நிதி மூலதனக் காலம்.
(i)19 ஆம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிருந்து சுதந்திரம் அடைந்தது வரையிலான காலம் மூன்றாவது கட்டமான நிதி மூலதன காலமாகும்.
(ii) இக்கால கட்டத்தில் வியாபார நிறுவனங்கள் செலவாணி, ஏற்றுமதி இறக்குமதி , நிறுவனங்கள் மாற்று வங்கிகள் மற்றும் சில மூலதன ஏற்றுமதிகளில் நிதி ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது.
(iii) இந்திய மூலதனத்தை கொள்ளையடித்து இந்தியாவில் இருப்ப பாதை சாலை வசதிகள் , அஞ்சலக துறை , பாசனம் , ஐரோப்பிய வங்கி முறை கல்வியில் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய பிரிட்டன் முடிவு செய்தது.
(iv) பிரிட்டன் இரயில்வே கட்டமைப்பு கொள்கையானது கற்பனை செயய் முடியாத பொருளாதார பயணில்லாக் கொள்கையாகும்
(v)1858 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.
20.
(1) ஊரக ஒரு நிறுவனம்:
கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு ஊரக சமுதாயத்தின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
(2) வேளாண்மையை சார்ந்திருத்தல்:
ஊரக பொருளாதாரம் இயற்கையையும் வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது.
(3) ஊரக மக்களின் வாழ்க்கை முறை:
ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொது பணிகளான கல்வி, வீடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது.
(4) மக்கள் தொகை அடர்த்தி:
ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகவும் வீடுகள் கிராமம் முழுக்க பரவிக் காணப்படுகிறது.
(5) வேலைவாய்ப்பு:
(i) வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
(ii) வேலையின்மை என்பது தொழிலாளர்கள், வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.
(6) வறுமை:
வறுமை என்பது அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலை.
(7) கடன் சுமைகள்:
(i) ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்க நிலை குறை ஊதிய வேலை, பருவகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும்.
(ii) ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டு செல்கின்றான்.
(8) ஊரக வருமானம்:
ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலைவாய்ப்புகளையோ தர இயலவில்லை.
(9) சார்ந்திருத்தல்:
ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்ய தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
(10) இரட்டைத் தன்மை:
எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டை தன்மை ஆகும்.
(11) ஏற்றத்தாழ்வு:
ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.
(12) குடிப்பெயர்ச்சி:
(i) ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்கலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
(ii) "இரட்டை நஞ்சாக்கல்" என சுமாசர் குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் சிறியது அழகு என்ற நூலில் விளக்குகிறார்.
21.
22.
காந்தியடிகள்:
1.காந்தியப் பொருளாதாரம் நன்னெறியை அடிப்படையாகக் கொண்டது.
2.காந்தி "ஒரு தேசத்தின் அல்லது ஒரு தனியாரின் தார்மீக ஒழுக்க நெறிகளை காயப்படுத்தினால் அந்த பொருளாதார நடவடிக்கையும் இழுக்கானது மேலும் அது பாவமானது "என எழுதுகிறார்.
காந்தியப் பொருளாதார சிந்தனை:
1.கிராமக் குடியரசு:
1.காந்தியடிகள் கிராமங்களில் தான் இந்தியா வாழ்வதாகக் கருதினார்.
2.தன்னிறைவு பெற்ற கிராமமாக முன்னேறுவதை அவர் விரும்பினார்.
3.அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்துதல் நகர்மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் ஆகியவற்றை எதிர்த்தார்.
2.இயந்திரங்கள்:
1.காந்தியடிகள் இயந்திரங்களை மிகப்பெரிய பாவம் என்று வர்ணித்தார்.
2.இயந்திரங்களின் தீமைகள் குறித்து விளக்க புத்தகங்கள் எழுதப்பட வேண்டும், அதன் தீமைகள் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.
3.இயந்திரங்கள் வரமல்ல, மாறாக நமக்கு சாபம் என்று நாம் உணர வேண்டும். இயந்திரத்தின் தீமைகளை நாம் பார்க்க வேண்டும். அவைகள் நம் இணக்கமான வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்றார்.
3.தொழில் மயம்:
தொழில் மயம் மனித இனத்தின் பெரும் சாபக்கேடு என்று காந்தி கருதினார்.
4.உற்பத்தி பரவலாக்கம்:
1.உற்பத்தி பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார்.
2. சிறிய அளவிலும் அல்லது வீடுகளிலேயே உற்பத்தி நடைபெற வேண்டுமென்றும் விரும்பினார்.
5.கிராம சர்வோதயா:
1."உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ,புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான் இருக்கிறது"என்று கூறினார்.
2.கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
6. உடல் உழைப்பு:
1.மனித உழைப்பின் மகத்துவம் உணர்ந்தவர் காந்தியடிகள்.
2.மனித உழைப்பு என்பதே உடல் உழைப்பு தான் என்று காந்தி உறுதிபடக் கூறினார்.
7.அறக்கட்டளைக் கோட்பாடு:
தற்போதைய முதலாளித்து முறையை மாற்றி சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே அறக்கட்டளைக் கோட்பாடு என்று கூறினார்.
7.உணவுப் பிரச்சனை:
1.உணவுப் பொருட்களின் மீதான எவ்விதக் கட்டுப்பாடுகளையும் காந்தி எதிர்த்தார். ஏனெனில் அது செயற்கைப் பற்றாக்குறையை உருவாக்கும் என்றார்.
2. தற்போது, உணவு தானியம், பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி போன்ற அதிக அளவு உற்பத்தி செய்து உலக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளன.
9.மக்கள் தொகை:
1. காந்தி செயற்கையான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை எதிர்த்தார்.
2.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு மற்றும் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினார்.
10.மதுவிலக்கு:
1. காந்தியடிகள் "மது நமக்கு எந்த விதத்திலும் துணை செய்வதில்லை மாறாக நோயைத் தருகிறது" என்றார் காந்தியடிகள்.
2."இந்தியா குடிகாரர்களின் நாடாக இருப்பதை விட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல்" என்றார்.
23.
1. இரும்புத் தாது:
1. இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது.
2. இரும்பு தாது 4630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத்தாது 10619 மில்லியன் இருப்பு உள்ளது.
3. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
2.நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1. பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3. மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக் கூடிய இடங்களாகும்.
3. அலுமினியத்தாது (பாக்சைட்):
1. பாக்சைட்- அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
4.மைக்கா:
1. மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் தனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2. இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்கா தான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
3. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
5. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1. இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், பாடர்பூர், நகர்க்காட்டிகா, காசிம்பூர்,பள்ளியரியா, ரூத்ராபூர், சிவசாகர், மார்ன்.
6.தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்சசூரில் ஹட்டி தங்க வயல் சுரங்கத்திலும், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
7. வைரம்:
1. UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2. அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னுல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது.
3.புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியுபடா பார்கர் மாவட்டம், மாத்தூர் கிருஷ்ணா பகுதி கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா பகுதி மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
24.
25.
26.
ஓரியல்பான பண்டங்கள் மற்றும் ஒரே மாதிரியான விலை:
வாங்கும் மற்றும் விற்கும் பண்டங்கள் ஒத்த தன்மையுடையவையாகவும் முற்றிலும் பதிலீட்டு பண்டங்களாகவும் இருக்கும்.
எண்ணற்ற விற்பவர் மற்றும் வாங்குபவர் இருப்பார்.உட்புகுதல் மற்றும் வெளியேறுதலில் தடையில்லை:
(i) குறுகிய காலத்தில் ஒரு திறமையான உற்பத்தியாளர் குறைந்த செலவில் உற்பத்தி செய்து மிக அதிக இலாபம் பெறுவார்.
(ii) இதனால் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாளர் தொழிற்சாலையில் நுழையவும்,வெளியேறவும் வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து செலவு இல்லை :
போக்குவரத்து செலவு இல்லாததால் ஒரே மாதிரியான விலை நிலவுகிறது.
உற்பத்தி காரணிகள் இடம் பெயரும்:
ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுவதற்கு முழு சுதந்திரம் பெற்றுள்ளதால் விலை சரி செய்யப்படுகிறது.
அங்காடி நிலை பற்றி அறிந்திருப்பார்:
அங்காடி மற்றும் பண்டத்தின் தரம் பற்றி வாங்குபவரும், விற்பவரும் நன்கு அறிவர்.
அரசின் தலையீடு இல்லை:
மூலப்பொருளின் அளிப்பு மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றில் அரசின் தலையீடு இல்லை.
27.
சம அளவு உற்பத்திக் கோட்டின் பண்புகள் :
1. சம உற்பத்திக் கோடு எதிர்மறைச் சரிவைக் கொண்டது.
2. தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்.
3. சம உற்பத்திக் கோடு ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது.
4. உயர் சம உற்பத்திக்கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது.
5. சம உற்பத்திக் கோடு X அச்சினையோ (அ) Y அச்சினையோ தொடாது.
சம உற்பத்திக்கு கோடுகள் எதிர்மறைச் சரிவைக் கொண்டது:
1. சம உற்பத்திக் கோடுகள் இடமிருந்து வளமாக மேலிருந்து கீழ்நோக்கி சரிந்து செல்கிறது.
2. சம உற்பத்திக் கோடு சரிவதற்கு காரணம் (MRTS) இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு வீதம் ஆகும்.
3. ஒரு காரணியை (K5) அதிகமாக பயன்படுத்தும் போது மற்றொரு காரணி (L2) குறைகிறது.

தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும்:
1. இறுதிநிலை பதிலீட்டு வீதம் அதிகரிக்கும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றுவாய் நோக்கி குழியாகவும் மற்றும் நிலையான இறுதிநிலை பதிலீட்டுவிதம் இருந்தால் நேர்கோடாகவும் அமையும்.
2. இது சம உற்பத்திக் கோட்டின் இயல்பினை பொறுத்தது.
3. குறைந்த அளவு உழைப்பின் அலகுகள் மூலதனத்திற்கு பதிலீடாக பயன்படுத்தப்படும் போது சம உற்பத்திக் கோடுகள் தோற்றூய் நோக்கி குவிந்து அமையும்

சம உற்பத்தி கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது:
1. IQ2சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள C என்ற புள்ளி அதிக உற்பத்தியையும், IQ1 சம உற்பத்தி வளைகோட்டில் உள்ள B என்ற புள்ளி குறைவான உற்பத்தியை குறிக்கிறது.
2.சமமற்ற இருவேறு புள்ளிகள் A என்ற புள்ளியில் சமமாகிவிட்டது என்பதாகும்.C=A, B=A என்றால் C=B அனால் C>B, இது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

உயர் சம உற்பத்திக் கோடு உயர் உற்பத்தி அளவை குறிக்கிறது:
1. சம உற்பத்திக் கோடுகள் உயரச் செல்ல செல்ல அதிக அளவு உற்பத்தியும், கீழே செல்ல செல்ல குறைந்த அளவு உற்பத்தியும் கொடுக்கும்.

2. IQ,
சம உற்பத்திக் கோடு X அச்சினையோ அல்லது Y அச்சினையோ தொடாது:
1. எந்த ஒரு சம உற்பத்திக்கோடு X அச்சின் மேலோ அல்லது Y அச்சின் மேலோ அமையாது.
2. IQ, ல் மூலதனம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3. IQ,வில் உழைப்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. மூலதனம் அல்லது உழைப்பை மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுத்துவது இயலாத செயல் என்று கருதப்படுகிறது.

28.
மொத்த மாறாச் செலவு (TFC):
1. மாறாத உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மொத்த மாறாச் செலவாகும்.
2. மொத்த மாறாச் செலவு உற்பத்தி அதிகரித்தாலும், குறைந்தாலும், புஜ்ஜியமாக இருந்தாலும் மாறுபடுவதில்லை.
மொத்த மாறும் செலவு (TVC):
1. மாறும் உற்பத்திக் காரணிகளுக்கு செய்யப்படும் அனைத்துச் செலவுகளில் கூடுதல் மாறும் செலவாகும்.
2.உற்பத்தி புஜ்ஜியமாக இருக்கும் போது மாறும் செலவு புஜ்ஜியமாக உள்ளது.
மொத்தச் செலவு(TC):
1. ஓர் உற்பத்தியில் ஏற்படுகின்ற பல்வேறு செலவுகளில் மொத்த கூடுதல் அந்நிறுவனத்தின் மொத்தச் செலவு எனப்படுகிறது.
2.

சராசரி மாறாச் செலவு (AFC):
1. சராசரி மாறாச் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறாச் செலவு என்பதாகும்.
2. சராசரி மாறாச் செலவு என்பது, மொத்த மாறாச் செலவை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AFC={TFC\over Q}}\)

சராசரி மாறும் செலவு (AVC):
1. சராசரி மாறும் செலவு என்பது உற்பத்தியின் ஒரு அலகிற்கான மாறும் செலவைக் குறிக்கும்.
2. மொத்த மாறும் செலவை உற்பத்தி செய்யப்பட்ட அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்க கிடைக்கும் ஈவு ஆகும்.
3.\(\boxed{AVC={TVC \over Q}}\)

4.AVC- வளைகோடு 'U'வடிவத்தில் இருக்கும்.
சராசரி செலவு(AC):
1.சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான ஓர் அலகு செலவு ஆகும்.
2. (அ) \(\boxed{AC=AFC+AVC}\)
\(\boxed{AC={TC\over Q}}\)

| Q in unit | TFC in (Rs) | TVC in (Rs) | TC(TFC+TVC) in (Rs) | ATC TC/Q(in Rs) | AFC (TFC / Q )in (Rs) | AVC (TVC / Q)in (Rs) | ATC (AFC+AVC)(in Rs) |
| 0 | 1000 | 0 | 1000 | 1000/0=\(\alpha\) | 0 | 0 | 0+0=0 |
| 1 | 1000 | 200 | 1200 | 1200/1=1200 | 1000 | 200 | 1000+200=1200 |
| 2 | 1000 | 300 | 1300 | 1300/2=650 | 500 | 150 | 500+150=650 |
| 3 | 1000 | 400 | 1400 | 1400/3=466 | 333 | 133 | 333+133=466 |
| 4 | 1000 | 600 | 1600 | 1600/4=400 | 250 | 150 | 250+150=400 |
| 5 | 1000 | 900 | 1900 | 1900/5=380 | 200 | 180 | 200+180=380 |
இறுதிநிலைச் செலவு (MC):
1.கூடுதலாக ஓர் அலகுப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படுகின்ற கூடுதல் இறுதிநிலைச் செலவு எனப்படும்.
2.\(\boxed{MC=\triangle TC / \triangle Q}\) (or) \(\boxed{MC= TC_n-TC_{n-1}}\)

29.
30.
1. ஆடம்ஸ்மித்தின் செல்வ இலக்கணம்:
1. பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என்று வரையறுத்துள்ளார்.
2. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தனது சுய நன்மைக்காகவும், இலாபத்தை முன்னேற்றவும் உழைக்கின்றான் என்று கூறுகிறார்.
2. நல இலக்கணம்: ஆல்ஃபிரட் மார்ஷல்:
1. பொருளியல் என்பது மனிதனின் அன்றாட நடவடிக்கையை படிப்பதும், பொருள்சார் நலனை அடைவதின் பொருட்டு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் செயல்பாட்டை குறித்து ஆராய்வதும் ஆகும்.
2. பொருளியல், ஒருபுறம் செல்வத்தை பற்றியும் மறுபுறம் மனிதனைப் பற்றியும் ஆராய்கிறது.
3. பற்றாக்குறை இலக்கணம்: இலயனல் இராபின்ஸ்:
1. பொருளியல் என்பது விருப்பங்களோடும் கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படக்கூடிய பற்றாக்குறையான சாதனங்களோடும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளைப் பற்றி படிக்கும் ஓர் அறிவியலே ஆகும்.
2. மனிதர்களின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்யும் வளங்களின் அளிப்புகள் பற்றாக்குறையாக உள்ளன என்பதை இந்த இலக்கணம் கூறுகிறது.
4. வளர்ச்சி இலக்கணம்: சாமுவேல்சன்:
பொருளியில் என்பது "மனிதனும், சமுதாயமும் பணத்தை பயன்படுத்தியோ அல்லது பயன்படுத்தாமலோ, மாற்று வழிகளில் பயன்படக்கூய பற்றாக்குறையான வளங்களைக் கொண்டு பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்து, அவற்றை தற்காலத்திலும், எதிர்காலத்திலும் மக்களுக்கிடையேயும் சமுதாயக் குழுக்களுக்கிடையேயும் நுகர்விற்காக எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை தெரிவு செய்யும் இயலாகும்".என வரையறை செய்கிறார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards