11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/09/2019
ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
2.
பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கிரகவர்மன்
தேவகுப்தர்
சசாங்கன்
புஷ்யபுத்திரர்
3.
முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.
4.
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை ?
5.
ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.
6.
எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள்.
7.
ஹர்ஷருக்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு.
8.
ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
9.
பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
10.
ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.
1.
(c)
2.
(a)
கிரகவர்மன்
3.
1. இரண்டாம் விக்ரமபாலரின் மகன் முதலாம் மகிபாலர்
2. பொது.ஆ. 1020 - 1025 ஆண்டுகளுக்கிடையில் தென் பகுதியை சேர்ந்த சோழ மன்னர் வட இந்தியாவிற்கு படையெடுத்து சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும்
3. எனினும் மிக முக்கியமான படையெடுப்பு கங்கையை கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
4. முதலாம் மஹிபாலர் சாரநாத், நாளாந்த, புத்த கயா இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார்.
4.
ஹர்ஷரை பற்றிய அறிய உதவும் கல்வெட்டு சான்றுகள்
i) மதுபனி செப்புப் பட்டாயா குறிப்புகள்
ii) சோன் பட்டு செப்பு முத்திரை குறிப்புகள்
iii) பன்ஸ் கெரா செப்பு பட்டாயா குறிப்புகள்
iv) நாளாந்த களிமண் முத்திரை குறிப்புகள்
5.
i) ராஷ்டிர கூட ஆட்சிக்காலத்தில் சிவா வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்கு பெற்று விளங்கின.
ii) முதலாம் அமோக வர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர் சமண மதத்திற்கு ஆதரவு அளித்தனர்.
iii) இக்காலத்தினுள் "ஜீனசேனர்" சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினர். "குணபத்திரர்" சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார்.
இவ்வாறு ஆதரவை கொடுத்தனர்.
6.
எல்லோரா:
i) எல்லோராவில் நமது கருத்தைக் கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலாகும். எட்டாம் நூற்றாண்டின் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரே பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.
ii) தசாவதார பைரவர், கைலாசா மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன் விஷ்ணுவும் லஷ்மியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சார்ந்த சான்றுகளாகும்.
எலிஃபண்டாவின்:
i) எலிஃபண்டாவில் குகையில் உள்ள நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அர்த்த நாதஸ்வரர் மகேஷமூர்த்தி ஆகியோரது சிலைகள் புகழ்பெற்ற சிற்பங்களாகும்.
ii) இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவுச் சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
7.
i) ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவை கொண்டிருந்தார்.
ii) அவரது சமகால டான்ங் பேரரசர் டாய் சுங், பொ.ஆ 643 ஆம் ஆண்டிலும் அடுத்து 647ஆம் அண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தந்து தூதுழுவை அனுப்பினார்.
iii) இரண்டாவது முறை வந்த பொது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிவித்தார்
iv) ஹர்ஷருக்கு பிறகு ஆட்சியதிகாரம் தகுதியற்ற ஒரு நபரால் கைப்பற்றப்பட்டதை றிந்த சீனத் தூதர் அபகரித்த அரசனை அகற்றும் பொருட்டு படைதிரட்டு நேபாளத்திற்கும் அஸ்ஸாமிற்கும் விரைந்தார்.
v) பின்னர் அந்த அரசன் சிறைபிடிக்கப்பட்டு சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
8.
இராட்டிரகூட முதல் மன்னர் தந்தி கர்க்கர் இவருக்குப்பின் முதலாம் கிருஷ்ணர் மூன்றாம் கோவிந்தன் அமோகவர்ஷர் போன்ற சிறந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது கால இலக்கியம், கலை கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்ததாகும்.
இலக்கியம்:
இவர்களது காலத்தில் நிலையம் மேம்பட்டு இருந்தது.
i) முதலாம் அமோகவர்ஷன் "கவிராஜா மங்களம்" என்னும் கன்னட நூலை இயற்றினார். இது கன்னடத்தில் இயற்றப்பட்ட மொழியியல் நூலாகும்.
ii) ஜுனசேனர் என்பவர் சமணர்களின் ஆதிபுராணத்தை இயற்றினார்
iii) மூன்றாம் கிருஷ்ணர் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட
கவிச்சக்கரவத்தி பொன்னா
ஆதிகவிபம்பா
கவிச்சக்கரவர்த்தி ரன்னா
ஆகியோர்களை ஆதரித்தார்
கட்டிடகலை:
ராஷ்டிர கூடர்கள் கட்டிடக் கலைக்கும் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோயில்கள் இவர்களது கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
எல்லோரா:
i) எல்லோரா குடைவரைக் கோயில் சமண, பௌத்த மற்றும் இந்து மத சின்னங்களுக்கான கலை நுட்பத்தை கொண்டுள்ளது.
ii) இங்கு முதலாம் அமோக வர்ஷர் கட்டிய ஐந்து சமணக்குகைக் கோயில்கள் உள்ளன.
iii) மேலும் இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாச நாதர் கோயில் நம் கண்ணைக் கவரும் அமைப்பாகும்.
எலிபண்டா:
i) எலிபண்டாவின் பிரதானக் கோயில் எல்லோரா கோயிலை விட சிறந்ததாகும்
ii) இங்குள்ள "மகேஷுமூர்த்தியின்" மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவு சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
இது போன்று இன்னும் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இராஷ்டிரக் கூடர்கள் கட்டிடக் கலைக்கு செய்த தொண்டு அளவிட முடியாததாகும்.
9.
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பொ.ஆ.770-815)
தர்மபாலரும் பௌத்தமும்:
பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடலாயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த மையமாக உருவானது
சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் - ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடலாயத்தையும் காட்டினார்
ஹரிஷபத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
தேவபாலரும் பௌத்தமும்
பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்
சுவரணதீப் அரசன் பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடலாயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
இவரது ஆட்சியில் நாளாந்தா பௌத்தமதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானபிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்
பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்த மடலாயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
10.
சிவ வழிபாட்டிலிருந்து பௌத்தராக மாறுதல்:
ஹர்ஷர் சிவா வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார்
அனல் அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவினார்
பௌத்த மாதத்தில் மகாயானபிரியவை பின்பற்றினார். ஆனாலும் அவர் எல்லா மதங்களையும் ஆதரித்தவர்.
பௌத்த மாநாடுகள்:
ஹர்ஷர் பொ.ஆ 643ல் இரண்டு பௌத்த மதக்கூட்டங்களை கூட்டினார். முதலாவது கன்னோசியிலும் 2வது பிரயாகையிலும் கூட்டப்பட்டது.
கன்னோசியில் பௌத்த மாநாடு:
காமரூப அரசன் பாஸ்கரவர்மன் உட்பட 20 அரசர்கள் பங்கு கொண்டனர்.
பௌத்தம், சமணம், வேதம் கற்றோர் என பல மாநிலத்தை சேர்ந்த அறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
புத்தரின் மூன்று ஆதி உயர தங்கத்தாலான சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.
பிரயாகையில் பௌத்த மதக் கூட்டம்
ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் "மகாமோட்ச பரிஷத்" ந அழைக்கப்பட்ட மதக்கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார்
தான் சேகரித்த செல்வதை பௌத்த மதத்தினர் - வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார்
கூட்டம் நடந்த நான்கு நாட்களும் புத்ததுறவிகளுக்கு எண்ணற்ற பரிசு பொருட்களை வழகினார்.
யுவான் சுவாங்கின் கூற்று
ஹர்ஷர் காலத்தில் மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழக்கப்பட்டிருந்தது.
வேறுபட்ட மதங்களை பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது.
ஹர்ஷர் புத்த பிட்சுகளையம் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாக பாவித்து கொடைகளையும் சமமாக பகிர்ந்தளித்தார் என யுவன் சுவாங் பதிவு செய்துள்ளார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards