11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/03/2019
11th Public Exam March 2019 Model Question Paper
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
கூற்று (கூ) : மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையை போதித்தனர்.
காரணம் (கா): அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர்.
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
கூற்று தவறு, காரணம் தவறு
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
கூற்று தவறு, காரணம் சரி
2.
இரண்டாம் சார்லஸ் வரதட்சணையாகப் பெற்ற. ________________ ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
மதராஸ்
கல்கத்தா
பம்பாய்
தில்லி
3.
பாதுஷா நாமா என்பது ________ ன் வாழ்க்கை வரலாறாகும்.
பாபர்
ஹீமாயூன்
ஷாஜகான்
அக்பர்
4.
கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________
முதல் பௌத்த சங்கம்
2ஆம் பௌத்த சங்கம்
3ஆம் பௌத்த சங்கம்
4ஆம் பௌத்த சங்கம்
5.
ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக _____ இடம் பணி செய்தனர்.
காகதியர்
ஹொய்சாளர்
பீஜப்பூர் சுல்தான்
யாதவர்
6.
விஸ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர்_____________.
சாணக்கியர்
விசாகதத்தர்
சந்திரகுப்தர்
பிந்து சாரர்
7.
"சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________
கூரம் செப்பு பட்டயம்
ஐஹோல் கல்வெட்டு
அலகாபாத் கல்வெட்டு
பூலாங்குறிச்சி கல்வெட்டு
8.
இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பியவர் ________
அஜிதன்
சார்வாஹர்
சோழர்கள்
பல்லவர்கள்
9.
ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.
சார்லஸ் மேசன்
அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ்
சர் ஜான் மார்ஷ்ல்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
10.
11.
12.
_____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
மூன்றான்றாம் குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜராஜன்
பராந்தகன்
13.
தேர்ந்தெடுத்துப் பொருத்துக.
| (1) சிம்மவிஷ்ணு | - சாளுக்கியா |
| (2) முதலாம் ஜெயசிம்மன் | - ராஷ்ட்டிரகூடர் |
| (3) முதலாம் ஆதித்தன் | - கப்பல் தளம் |
| (4) மாமல்லபுரம் | - சோழஅரசன் |
4, 3, 1, 2
4, 1, 2, 3
2, 1, 4, 3
4, 3, 2, 1
14.
கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?
ஹர்ஷசரிதம்
பிரியதர்ஷிகா
அர்த்த சாஸ்திரா
விக்ரம ஊர்வசியம்
15.
_______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்
சாகுந்தலம்
ரகுவம்சம்
குமாரசம்பவம்
மேகதூதம்
16.
இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்
ஆந்திரா-கர்நாடகா
ஒடிசா
தக்காணப் பகுதி
பனவாசி
17.
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த _________
பிம்பிசார்
அஜாசத்ரு
அசோகர்
மகாபத்ம நந்தர்
18.
____________ வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
இரும்பு
வெண்கலம்
செம்பு
பித்தளை
19.
கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.
| (i) சேனானி | படைத்தளபதி |
| (ii) கிராமணி | கிராமத்தலைவர் |
| (iii) பாலி | தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது |
| (iv) புரோகிதர் | ஆளுநர் |
மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i
ii
iii
iv
20.
பர்சஹோம் _________ நிலவிய இடமாகும்
காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு
கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு
கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
தென்னிந்தியாவின் புதிய கற்ககாலப்பண்பாடு
21.
கைவினைப்பொருள்கள் உற்பத்தி பற்றி ஒரு குறிப்பு வரைக.
22.
முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.
23.
மராத்தியரின் இராணுவ வலிமைக்குக் கடைசி கட்டமாக இருந்தது எது?
24.
25.
சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?
26.
நாற்பதின்மர் அமைப்பு
27.
சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
28.
முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.
29.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக
30.
31.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
32.
இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிச் சுருங்கக் கூறுக.
33.
34.
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
35.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
36.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
37.
சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய, பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க
38.
39.
கஜினி மாமூதினுடை ய கொள்ளைத் தாக்குதல்கள் மதநோக்கில் என்பதைக் காட்டிலும் அதிக அரசியல் - பொருளாதாரத் தன்மை கொண்டவை – விளக்குக.
40.
ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.
41.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
42.
43.
'காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது'.கூற்றை நிறுவுக.
44.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
45.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
46.
புதிய கற்கால புரட்சி - வரையறு:
47.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
48.
வைகுண்ட சாமிகள்
49.
கர்கானா
50.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கை
51.
சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக
52.
டெமெட்ரியஸுடைய நாணயங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுக.
53.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
54.
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.
1.
(a)
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
2.
(c)
பம்பாய்
3.
(c)
ஷாஜகான்
4.
(b)
2ஆம் பௌத்த சங்கம்
5.
(b)
ஹொய்சாளர்
6.
(a)
சாணக்கியர்
7.
(d)
பூலாங்குறிச்சி கல்வெட்டு
8.
(c)
சோழர்கள்
9.
(c)
சர் ஜான் மார்ஷ்ல்
10.
(a)
11.
(a)
12.
(b)
முதலாம் இராஜேந்திரன்
13.
(c)
2, 1, 4, 3
14.
(b)
பிரியதர்ஷிகா
15.
(a)
சாகுந்தலம்
16.
(a)
ஆந்திரா-கர்நாடகா
17.
(a)
பிம்பிசார்
18.
(a)
இரும்பு
19.
(d)
iv
20.
(a)
காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு
21.
1. கைவினைப் பொருட்கள் உற்பத்தி நகர்ப்புறம், கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் நடைபெற்றது.
2. ஆடம்பரத் தொழில்கள் (எடுத்துக்காட்டாக உலோக வேலைகள்) நகரங்கள் சார்ந்தனவாக இருந்தன.
22.
1. தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்.
2. அது இந்தியப் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும்.
3. தலைவாயில், தோட்டம், மசூதி, கல்லறைமாடம் (மினார் என்றழைக்கப்படும் நான்கு கோபுரங்கள்)ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது.
4. ஏனைய கட்டடங்கள் 1643 இல் முடிவடைந்தன. அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1647 வரை தொடர்ந்து நடைபெற்றன.
23.
1.1761-ல் நடந்த மூன்றாம் பானிபட் யுத்தத்தில் மராத்தியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது.
2.போர்க்களத்தில் கிட்டத்தட்ட 25,000-க்கும் மேல் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
3.பின்னர் நடந்த ஆங்கிலேய மராத்தியப் போர்களில் மராத்தியரின் வலிமை முற்றிலுமாக குறைக்கப்பட்டது.
4. சிவாஜியின் வழித் தோன்றலான பிரதாப் சிங் ஒரு சிறிய பகுதிக்கு அரசராகும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
24.
25.
i) பொ.ஆ.மு. 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்து போரிட்டு அவரை தோற்கடித்தார்.
ii) இருப்பினும் இது அலெக்ஸாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதை போன்ற கொடூரமான தோல்வி அல்ல.
iii) மாறாக சந்திரகுப்தர் செலியுகஸுடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்
iv) சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்த செலியுகஸ், அதற்கு பதிலாக 500 போர் யானைகளை பெற்றுக்கொண்டார்.
26.
(i) டெல்லி சுல்தானியத்தின் அடிமை வம்சத்தின் நாற்பதின்மர் அமைப்பு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்தி நிலையில் செல்வாக்குடன் இருந்தது.
(ii) இவர்கள் நாட்டை விரிவுபடுத்துவதிலும், இந்துப்புரட்சியாளர்களை அடக்குவதிலும் சுல்தான்களுக்கு உதவி புரிந்தனர்.
(iii) கில்டுமிஷ் நாற்பதின்மர் குழுவிற்கு இராணுவத்திலும், நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகள் வழங்கியுள்ளனர்.
(iv) வாரிசு இழப்புகள் ஏற்படும் போது முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருந்தது. இவர்களின் அதிகார நிலை பால்பனின் ஆட்சியில் முடிவிற்கு வந்தது.
27.
(i) கவிராஜமார்க்கம், பம்ப-பாரதம், விக்ரமாஜன விஜயம் ஆகியவை சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கண நூல்களாகும்.
(ii) இவற்றின் மூலம் சாளுக்கியரின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
28.
1. இரண்டாம் விக்ரமபாலரின் மகன் முதலாம் மகிபாலர்
2. பொது.ஆ. 1020 - 1025 ஆண்டுகளுக்கிடையில் தென் பகுதியை சேர்ந்த சோழ மன்னர் வட இந்தியாவிற்கு படையெடுத்து சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும்
3. எனினும் மிக முக்கியமான படையெடுப்பு கங்கையை கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
4. முதலாம் மஹிபாலர் சாரநாத், நாளாந்த, புத்த கயா இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார்.
29.
(i) நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
(ii) பிருதிவி-பூமி, அக்னி -நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
(iii) ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபட்டனர்.
(iv) ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.
30.
31.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
32.
1. 1746-வாக்கில் துய்ப்ளே இந்திய பிரெஞ்ச் பகுதியான பாண்டிச்சேரியில் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2. தான் தலைமையேற்ற சிறிது காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அமைதியுடனேயே கையாண்டார்.
3. ஐரோப்பாவில் ஆங்கிலேயர்க்கும் பிரான்சுக்கும் போர் மூண்ட போது இங்கு அமைதி காக்கும் படி சென்னை ஆங்கிலேய ஆளுநர் டோர்கிடம் கேட்டுக் கொண்டார்.
4. இருந்தபோதிலும் 1746-48ல் நடந்த முதல் கர்நாடகப்போரில் பிரான்சு ஆங்கிலேயரை தோற்கடித்தது.
5. துய்ப்ளே இங்கு சில பகுதிகளை தனதாக்கி பிரான்சின் ஆதிக்கத்திற்கு துய்ப்ளே அடித்தளமிட்டார்.
33.
34.
1. முகலாயர் காலத்தில் இந்தியாவில் கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலககே கலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
2. கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனைகள் மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும், நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும், படங்கள் வரையப்பட்டு பதிக்கப்பட்ட ஓடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய வடிவங்களுக்கு முகாலயக் கட்டங்கள் பெயர் பெற்றவையாகும்.
3. சூர் வம்சத்து அரசர்கள், தில்லியில் புராணகிலா, பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் கட்டிய ஷெர்ஷா, இஸ்லாம் ஷா ஆகியோர் கண்களைக் கவரும் கட்டடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
4. அக்பர் ஆட்சிக் காலத்தில் ஹூமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது.
5. சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
6. பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட இக்கல்லறை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு முன்மாதிரியைத் திகழ்ந்தது.
7. மணற்கற்பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.
8. பதேப்பூர் சிக்ரியின் மலைப்பூட்டும் வாயிற் பகுதியும், அக்பர் சிகப்புநிற மற்றும் பளிங்குக் கற்களால் கட்டிய புலந்தர்வாஸாவும் நேர்த்தியான கட்டடக்கலையில் முகலாயரின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
9. தாஜ்மஹால், மோதிமசூதி, ஜும்மா மசூதி , செங்கோட்டை, பாதுஷாகி மசூதி, ரபீயா உத்தௌராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது முகலாயர் கால சிறப்பாகும்.
10. திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹூரம்ஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டடக்கலைத் திறன்களைப் பிரதிபலிக்கின்றன.
35.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
36.
1.நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2.நிலத்தின் உற்பத்தித்திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
3.சரியான புள்ளி விவரத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
4.செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக இருந்தன.
5.சுங்கம், கலால் வரி, வனப் பொருட்களின் விற்பனை ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
6.தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
7.கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
8.கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
9.பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி.
10.எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்காக வருடாந்திர கட்டண வரி.
11. விதவைகள் நிலவரி, நதிக்கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
12. வாரிசு உரிமை வரி.
13.குதிரை விற்பதற்கான வரி மற்றும் பல.
14. மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளருக்கும் வரி விதித்தது.
15. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது.
37.
(i) சோழர் ஆட்சிக்காலத்தில் சமூகம் பெரும் அளவில் வேளாண்மையைச் சார்ந்திருத்தமையால் சமூக மதிப்பையும், அதிகாரப்படி நிலைமையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணமாக வேளாண்மை விளங்கியது.
(ii) சமூகத்தில் உயர் தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேய கிழார்' எனப்படும் நில உரிமையாளர்கள் ஆவார்.
கிராமங்களின் உடைமையாளர்கள்:
(i) வேளாண்மை கிராமங்களின் உடைமையாளர்கள் அடுத்த படி நிலையில் இருந்தனர்.
(ii) அரசர்கள் தீவிர சைவர்கள். இராஜராஜனுக்கு 'சிவ பாத சேகரன்' எனப் பட்டப்பெயரே உண்டு.
(iii) சைவ சித்தானத்தின் அடிப்படையிலான "சிவஞானபோதம்" மெய்கண்டரால் எழுதப்பட்டது.
(iv) நம்பியாண்டார் நம்பி, சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்து வழங்கினார்.
(vi) கடவுளுக்குத் தொண்டு செய்ய பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டனர். அவர்களுக்கு இசையும், நடனமும் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பண்பாடு:
(i) கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்களாகத் திகழ்ந்தன. கலை, கட்டிடக்கலை, ஓவியம், கல்வி, மக்கள் தொண்டு சமூகப்பணி என பண்முக செயல்பாட்டுக்களமாக இவை விளங்கின.
(ii) தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற சோழர்கால கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்களாகத் திகழ்ந்தன,
பண்பாட்டு பரவல்:
(i) சோழர்களின் கடற்படை வாணிபத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீ விஜயா, கெடா (கடாரம்) பகுதிகளை வென்றதன் மூலம் சீன அரசுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்பட வழிவகுத்தது.
(ii) இவர்களின் கடல் கடந்த படையெடுப்புகளின் காரணமாக இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நமது தமிழ் பண்பாட்டின் இந்துமத வழிபாட்டின் தாக்கத்தினை அறிய முடிகிறது.
38.
39.
கஜினி முகமது:
1. 27வது வயதில் கஜினியின் பொறுப்பேற்ற கஜினி மாமுது 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சி காலத்தில் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார். இப்படையெடுப்பு மத ஆதிக்கம் என்பதை விட அரசியல் பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதேயாகும்.
வட இந்தியத் தாக்குதல்:
1. ஷாஹி அரசர் அனந்த பாலர் தோற்கடிக்கப்பட்டார். இந்து கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
2. கங்கைச் சமவெளியைக் கடந்து பஞ்சாப், கன்னோகி சென்றடைவதற்கு முன் மதுரா சூறையாடப்பட்டது.
3. 1025ல் குஜராத் கடற்கரையில் உள்ள சோம்நாத் கோயில் நகர படையெடுப்பாகும். ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்தனர்.
படையெடுப்பின் தன்மை
1. கஜினியின் இக்கொள்கைகளை மத ஆதிக்கம் சார்ந்தவை என்று கூறுவதை விட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டது என்பதே பொருந்தும்" என பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
2. கஜினி முகமதுவின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே, மேலும் கஜினி முகமது கொள்ளை அடித்தது. அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடு செய்யும் தேவையினால் ஏற்பட்டது.
வரலாற்றறிஞரின் கூற்று:
1. வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர் "இத்தகைய திடீர் ராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்பு வாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர் முறைகளிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையுமே அவை வெளிப்படுத்துகின்றன" என்கிறார்.
2. எனவே இவரது தாக்குதல்கள் மத ஆதிக்கம் என்பதைக் காட்டிலும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவையே என்றால் மிகையாகாது.
40.
சிவ வழிபாட்டிலிருந்து பௌத்தராக மாறுதல்:
ஹர்ஷர் சிவா வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார்
அனல் அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவினார்
பௌத்த மாதத்தில் மகாயானபிரியவை பின்பற்றினார். ஆனாலும் அவர் எல்லா மதங்களையும் ஆதரித்தவர்.
பௌத்த மாநாடுகள்:
ஹர்ஷர் பொ.ஆ 643ல் இரண்டு பௌத்த மதக்கூட்டங்களை கூட்டினார். முதலாவது கன்னோசியிலும் 2வது பிரயாகையிலும் கூட்டப்பட்டது.
கன்னோசியில் பௌத்த மாநாடு:
காமரூப அரசன் பாஸ்கரவர்மன் உட்பட 20 அரசர்கள் பங்கு கொண்டனர்.
பௌத்தம், சமணம், வேதம் கற்றோர் என பல மாநிலத்தை சேர்ந்த அறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
புத்தரின் மூன்று ஆதி உயர தங்கத்தாலான சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.
பிரயாகையில் பௌத்த மதக் கூட்டம்
ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் "மகாமோட்ச பரிஷத்" ந அழைக்கப்பட்ட மதக்கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார்
தான் சேகரித்த செல்வதை பௌத்த மதத்தினர் - வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்தளித்தார்
கூட்டம் நடந்த நான்கு நாட்களும் புத்ததுறவிகளுக்கு எண்ணற்ற பரிசு பொருட்களை வழகினார்.
யுவான் சுவாங்கின் கூற்று
ஹர்ஷர் காலத்தில் மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழக்கப்பட்டிருந்தது.
வேறுபட்ட மதங்களை பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது.
ஹர்ஷர் புத்த பிட்சுகளையம் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாக பாவித்து கொடைகளையும் சமமாக பகிர்ந்தளித்தார் என யுவன் சுவாங் பதிவு செய்துள்ளார்.
41.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
42.
43.
1. காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரீகமும் ஒரே சம காலத்தவையாகும்.
2. இக்கலக்கட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்விடமான பர்சாஹோம் சான்றாக உள்ளது.
3. முட்டை வடிவமுள்ள குழி வீடுகளில் வசித்தனர். புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன.
4. பர்ஷாஹோமைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டனர்.
5. கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகியவற்றுக்கான விதைகள் அகழ்வாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்டன.
6. பருப்பு வகை பயன்பாடு அவர்களுக்கு மத்திய ஆசியாவுடன் இருந்த தொடர்பை கூறுகிறது. ஹரப்பா நாகரிகத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருத முடிகிறது.
44.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
45.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
46.
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்
1. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
2. பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
3. பெரிய கிராமங்கள் தோன்றின.
4. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
5. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமான 'புதிய கற்காலப் புரட்சி' எனப்படுகின்றன.
47.
விஜயநகரப் பேரரசின் கீழ் இயங்கி வந்த பாளையக்காரர்களில் நெற்கட்டும்செவல் பகுதியின் புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்க்கு கப்பம்கட்ட மறுக்கவே அவர்கள் மீது போர்தொடுத்து கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாளையக்கார படை வீரர்கள்: கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சிவகங்கையின் மருது சகோதர்கள் ஆகியோர் 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுவே 1801 ம் ஆண்டு கிளர்ச்சி ஆகும்.
48.
(i) கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் (சாமிதோப்பு) எனும் சிறிய ஊரில் 1809-ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். முத்துக்குட்டி எனும் இயற்பெயர் கொண்டவர்.
(ii) திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களை கற்றார்.
(iii) தனது போதனைகளில் சாதிமுறையையும், அதிக வரி வசூல் முறையையும் கண்டித்தார்.
(iv) ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகவும் பிரபலமான அவரை 'ஐயா வழி' என்ற நடைமுறையில் மக்கள் பின்பற்றினார்.
(v) சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளை இணைத்து சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
49.
1. கர்கானா என்பவை தொழிற்கூடங்களாகும், கர்கானா என்னும் தொழிற்கூடங்களின் விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
2. அரச குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை அரண்மனையைச் சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன.
3. கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த ஆடம்பரப் பொருட்களை வர்த்தகர்கள் உள்ளூர மற்றும் தொலைதூரச் சந்தைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
50.
(i) இந்து சம்பரதாயங்களின் படி வாரிசு இல்லாத மன்னர் ஒரு ஆண் மகவை தத்து எடுக்க முடியும்.
(ii) அவ்வாறு தத்து எடுக்கப்பட்ட மகனுக்கு சொத்தின் முழு சுவிகாரம்உரிமை உண்டு.
(iii) ஆனால் டல் ஹெளசி பிரபு இம்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .
(iv) வாரிசு இல்லாத அரசை கம்பெனி இணைத்துக் கொள்ளும்.
(v) வாரிசு இழப்பு கொள்கையின் மூலம் முதலில் வீழ்ந்த அரசு சதாரா ஆகும்.
(vi) ஜான்சியின் அரசர் கங்காதரராவ் இறந்த மறுகணமே அவ்வரசு டல்ஹெளசியால் இணைக்கப்பட்டது.
51.
(i) சோழர்கால சமூகப் படிநிலையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கியது வேளாண்மை ஆகும்.
(ii) உயர்தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேயகிழவர்' என அழைக்கப்படும் நில உடமையாளர் ஆவர்.
(iii) வேளாண்மை கிராமங்களின் உடமையாளர்கள் அடுத்தபடி நிலையில் இருந்தனர்.
(iv) இவர்கள் இருவரிடமும் பணிபுரியும் குத்தகைகாரகள் உழுகுபடி எனப்பட்டனர்.
(v) அடிமட்ட உழைப்பாளிகளான 'சமூகப்படி' எனப்படுவோரும், பணிசெய் மக்கள் எனும் அடிமைகளும் கடை நிலையில் காணப்பட்டார்.
52.
i) இந்தோ - கிரேக்க அரசர்களில் அறியப்பட்ட முதல் அரசர் டெமெட்ரியஸ் ஆவார்.
ii) இந்தோ - கிரேக்கர்கள் நேர்த்தி மிக நாணயங்களை வெளியிட்டனர்.
iii) இந்நாணயங்கள் அவர்களின் ஆட்சியை வேறுபடுத்தி காட்டுகின்ற அம்சங்களோடு வெளியிடப்பட்டன
iv) நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிற அரசரின் உருவமும், பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.
v) அரசர்கள் பலவிதமான தலைக்கவசங்களோடு இருப்பது தனிசிறப்பு.
vi) இந்நாணயங்கள் தனிமுக மற்றும் உடல் கூறுகளையும் கொண்ட அரசரின் தோற்றத்தை காட்டுகின்றன.
53.
i) மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
ii) அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
iii) போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
iv) இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருப்பதாக இருந்திருக்க வேண்டும்.
v) போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மெளரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.
54.
(i) ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினார்.
(ii) ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்யபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
(iii) வைதீக இந்துக்களை ஒன்றிணைந்தார்.
(iv) பிராமணர் அல்லாதோரையும் ஆழ்வார்கள் வைணவத்தில் இணைத்துக் கொண்டனர்.
(v) வைதீக சடங்குகளும், நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு வைணவம் தமிழகத்தில் பரவியது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards