11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/02/2019
+1 Public Exam March 2019 Model
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
பிரான்சிஸ் மார்ட்டின் என்பவர் ______________ ஐ பிரெஞ்சுக் குடியேற்றங்களின் கேந்திர மையமாக ஆக்கினர்.
மசூலிப்பட்டினம்
நாகப்பட்டினம்
கோவா
புதுச்சேரி
2.
இளவரசர் குஸ்ருவுடன் இணைந்து கலகத்தை தூண்டிவிட்டதற்காக ஐஹாங்கீரால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் _________.
குரு அர்ஜுன் தேவ்
குரு ஹர் கோபிந்த்
குரு தேஜ் பகதூர்
குரு ஹர் ராய்
3.
வைதீக வேதப்பிரிவுகளுக்கும் சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றி குறிப்பிப்பிடுவது _____
இராமாயணம்
பாகவத புராணம்
திருத்தொண்டர்களின் புகழ்பாடும் தொகுப்புகள்
பால லீலா
4.
புகழ்பெற்ற ஜீனாகத் பாறைக் கல்வெட்டில் போற்றப்பட்டுள்ள சாக சத்ரப் ______
ருத்ராமன்
ருத்ரமறன்
ருத்ரதாசன்
ருத்ரதாமன்
5.
_____ கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.
இராஜா கிருஷ்ண தேவ்
சுல்தான் குலிகுதுப்பான்
முகமது கவான்
பாமன் ஷா
6.
|மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________
பகல்
இரவு
மாலை
பகல் மற்றும் இரவு
7.
மகதத்தின் தலைநகரம்________________.
ராஜகிருகம்
உஜ்ஜயினி
கோசலகம்
கோசாம்பி
8.
பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் _____
திருச்சி
திருநெல்வேலி
மதுரை
திருவண்ணாமலை
9.
ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத் தொடர்_______ குறியீடுகளைக் கொண்டுள்ளது.
26
36
16
46
10.
வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.
அகழிகள்
மதகுகள்
அணைகள்
ஏரிகள்
11.
குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன
ரோமானிய
கிரேக்க
குப்த
சாதவாகன
12.
கஜினி மாமுது, இந்தியாவுக்குள் ______ முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்
15
17
18
19
13.
கீழ்க்கண்ட வற்றில் எது சரியாக இணைக்கப்பட வில்லை.
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
ரவிகீர்த்தி - இரண்டாம் புலிகேசி
விஷயம் - ராஷ்ட்டிரகூடர்
நம்மாழ்வார் - குருகூர்
14.
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு பெளத்த விகாரையைக் கட்டினார்.
இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்
மகிபாலர் கீதங்கள் வங்காளத் தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன.
கெளடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.
15.
16.
இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்
ஆந்திரா-கர்நாடகா
ஒடிசா
தக்காணப் பகுதி
பனவாசி
17.
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________
மகாபாபத்ம நந்தர்
தன நந்தர்
பிந்துசாரர்
பிம்பிசாரர்
18.
____________ வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
இரும்பு
வெண்கலம்
செம்பு
பித்தளை
19.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
பிராமணங்கள்
சங்கிதைகள்
ஆரண்யகங்கள்
உபநிடதங்கள்
20.
சிந்து நாகரிகம் ஏறத்தாழ _________ இலிருந்து வீழ்ச்சி அடைந்தது
பொ.ஆ.மு. 1800
பொ.ஆ.மு. 1900
பொ.ஆ.மு. 1950
பொ.ஆ.மு. 1955
21.
இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் யார்? அவர் அறிமுகப்படுத்திய கொள்கையை விளக்குக
22.
பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கத் தூண்டியது எது?
23.
சிவாஜிக்கும் அஃப்சல்கானுக்கும் இடையே நடைபெற்ற பூசலைப் பற்றி எழுதுக.
24.
பாமினி விஜயநகர அரசுகளுக்கிடையே பகைமை ஏற்பட்டதற்கான மூன்று முக்கியக் காரணங்கள் யாவை?
25.
சந்திரகுப்தருக்கும் செலியுகஸ் நிகேடருக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவு என்ன?
26.
கஜினியின் அரசராக மாமுது பதவி ஏற்றல்
27.
ஐஹொல் கல்வெட்டு குறித்துச் சிறு குறிப்பு வரைக.
28.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
29.
வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
30.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
31.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
32.
வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?
33.
34.
"வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி” – விளக்குக.
35.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
36.
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?
37.
சோழர் ஆட்சியில் நிலவிய சமூக, சமய, பண்பாட்டுச் சூழலைப் பதிவு செய்க
38.
பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.
39.
இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?
40.
வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?
41.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
42.
இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
43.
44.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .
45.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
46.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
47.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
48.
எம்.ஜி. ரானடே
49.
தாராஷூகோ.
50.
காரன்வாலிஸின் நீதித்துறை சீர்திருத்தம்.
51.
சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக
52.
மினாண்டர் குறித்து நீங்கள் அறிந்தவை யாது?
53.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
54.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
1.
(d)
புதுச்சேரி
2.
(a)
குரு அர்ஜுன் தேவ்
3.
(c)
திருத்தொண்டர்களின் புகழ்பாடும் தொகுப்புகள்
4.
(d)
ருத்ரதாமன்
5.
(a)
இராஜா கிருஷ்ண தேவ்
6.
(b)
இரவு
7.
(a)
ராஜகிருகம்
8.
(c)
மதுரை
9.
(a)
26
10.
(d)
ஏரிகள்
11.
(a)
ரோமானிய
12.
(b)
17
13.
(a)
மூன்றாம் கோவிந்தன் - வாதாபி
14.
(b)
இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்
15.
(d)
16.
(a)
ஆந்திரா-கர்நாடகா
17.
(b)
தன நந்தர்
18.
(a)
இரும்பு
19.
(b)
சங்கிதைகள்
20.
(b)
பொ.ஆ.மு. 1900
21.
1. இந்தியாவின் முதல் போர்த்துகீசிய ஆளுநர் பிரான்ஸிஸ்கோ டி அல்மெய்டா ஆவார்.
2. "நீல நீர்க் கொள்கை"யை அவர் அறிமுப் படுத்தினார். இக்கொள்கையின் மூலம் அவர் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து கப்பற்படையை வலுபடுத்தினார்.
22.
1. வரலாற்று ரீதியாக மத்திய ஆசிய நாடுகள் பட்டுப்பாதை வழியாக இந்தியாவோடு செய்த வர்த்தகம்.
2. பாபர் செல்ல விரும்பிய இடத்தைப் பற்றிய (இந்தியா) தகவல்களை வழங்கியது.
3. அவரின் முன்னோர் தைமூர் செய்ததை மீண்டும் செய்ய வேண்டும் என எண்ணினார்.
4. தில்லிசுல்தான் அரசியல் ரீதியாக வீழ்ச்சியுறுவதை கண்ட பாபர் இந்தியாவில் மீது படையெடுக்க தீர்மானித்தார்.
23.
1.பீஜப்பர் சுல்தான் சிவாஜியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். அதற்காக நியமிக்கப்பட்டவர் அஃப்சல்கான்.
2. அவர் "மையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை" சங்கிலி கட்டி இழுத்துக் கொண்டு வருவதாக அப்சல்கான் சூளுரைத்தார்.
3. மலைப்பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தால் சூழ்ச்சி மூலம் சிவாஜியை வீழ்த்த நினைத்த அப்சல் கான் தோல்வியை சந்தித்தார்.
24.
(i) இடங்களைக் கைப்பற்றுதல், கப்பம் வசூலித்தல், குதிரை வாணிகத்தின் மேலான கட்டுப்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட போட்டியே மோதல்களுக்கான முக்கியக் காரணங்களாகும்.
(ii) கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் மிக்க ரெய்ச்சூர் பகுதியை இணைத்துக் கொள்ளவும், மேலாதிக்கம் செலுத்தவும் இருவருமே விரும்பினர்.
(iii) சில வரலாற்று ஆய்வாளர்கள் இந்து விஜய நகரத்திற்கும், இஸ்லாமிய பாமினி அரசுகளுக்கு இடையே நிலவிய மதப் பகைமையே போர்களுக்கான அடிப்படைக் காரணமென்று கருதுகின்றனர்.
25.
i) பொ.ஆ.மு. 305 வாக்கில் சந்திரகுப்தர் செலியுகஸை எதிர்த்து போரிட்டு அவரை தோற்கடித்தார்.
ii) இருப்பினும் இது அலெக்ஸாண்டரின் ஏனைய ஆளுநர்களுக்கு ஏற்பட்டதை போன்ற கொடூரமான தோல்வி அல்ல.
iii) மாறாக சந்திரகுப்தர் செலியுகஸுடன் ஓர் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்
iv) சிந்து வரையிலும் தான் வெற்றி கொண்டிருந்த நிலப்பரப்பை ஒப்படைத்த செலியுகஸ், அதற்கு பதிலாக 500 போர் யானைகளை பெற்றுக்கொண்டார்.
26.
(i) இந்தியாவில் இசுலாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுப்படுத்த சபுக்தஜின் நடவடிக்கை எடுத்தார்.
(ii) ஆப்கன் அரசர் ஜெயபாலைத் தோற்கடித்து அங்கு தனது மூத்த மகன் மாமூதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.
(iii) 997ல் சபுக்தாஜின் இறந்தபோது மாமுது 7 குரசனில் இருந்ததால் இளையமகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார்.
(iv) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து ஏழு வயதில் கஜினியின் அரசராக மாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
(v) பிறகு தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்து ஏழு வயதில் கஜினியின் அரசராகமாமுது ஆட்சியில் அமர்ந்தார்.
27.
(i) ஐஹொலே கல்வெட்டு சாளுக்கிய மரபின் ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசியின் ஆட்சிகாலத்தைப் பற்றி விவரமாக கூறுகிறது.
(ii) இரண்டாம் புலிகேசியின் அவைப் புலவர் ரவி கீர்த்தி என்பவர் ஐஹொல் கல்வெட்டைத் தொகுத்தார்.
(iii) இரண்டாம் புலிகேசியின் ஐஹொல் கல்வெட்டின்படி ஹர்சரை புலிகேசி முறியடித்தார் என்பதை அறிகிறோம்.
28.
1. பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
2. சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடயாளத்தைப் பராபரிப்பதற்காக ஐந்து கிராமனைகளை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
3. அவரது ஆட்சியில் நாளாந்த பௌத்த மதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
29.
(i) 'வித்' என்ற சொல்லிலிருந்து 'வேதம் என்ற சொல் பிறந்தது.
(ii) வேதங்கள் நான்கு -ரிக், யஜீர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
(iii) இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் வேத கால இலக்கியங்களாகும்.
30.
1. வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை.
2. தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்டஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.
31.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
32.
1. வங்காளத்திலிருந்து தப்பியோடிய மீர்காசிம் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாபான சூஜா உத்தெளலா ஆகியவர்களோடு கூட்டு சேர்ந்தார். தங்கள் உள் விவகாரங்களில் வணிகக்குழு தலையிடுவதால் அவர்களும் மனக்குறையோடு இருந்தனர்.
2.இம்மூவரும் வணிக்குழுவுக்கு எதிராகப் போர் அறிவுப்புச் செய்தனர். 1764 இல் பக்சார் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் இம்மூவரும் வீரத்துடன் போரிட்டனர். வணிகக்குழுவின் படைகள் சிறப்பு வாய்ந்ததாக இருந்தமையால் அவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
3. பக்சார் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி 1765 இல் அலகாபாத் உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. ராபர்ட் கிளைவும் இரண்டாம் ஷாஆலமும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
4.இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்களாம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை) உரிமையைப் பெற்றது.
5.மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது.
6. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
33.
34.
1.ஷெர்ஷா தனது அரசை மையப்படுத்தப்பட்ட அரசாக மாற்றினார்.
2. நெகிழ்வுத் தன்மை கொண்ட வருவாய் முறையைப் பின்பற்றினார்.
3. நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு எவ்வாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
4. சில பகுதிகளில் ஜாகீர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டன.
5. வேறுபல இடங்களில் மொத்த வேளாண் விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு மட்டும் வாரியாக வசூலிக்கப்பட்டது.
6. ஷெர்ஷா விவசாயிகளிடம் கொண்டிருந்த அதே அக்கறையை வர்த்தகர்களிடமும் கொண்டிருந்தார்.
7. வணிகத்தை ஊக்குவிப்பதற்காக வணிக வரிகளை எளிமைப்படுத்தினார்.
வணிகமும், வர்த்தகமும்:
1. வணிகத்தையும் வர்க்கத்தையும் மேம்படுத்தும் பொருட்டு உறுதியான சாலை வசதி முறையை ஷெர்ஷா பராமரித்தார்.
2. பழைய சாலைகள் புதுப்பிக்கபட்டதோடு புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன.
3. அனைத்துச் சாலைகளிலும் 'சராய்' எனப்படும் சாத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்துதரப் பட்டன.
4. இவ்வேற்பாடுகள் விறுவிறுப்பான வணிகத்திற்கு உத்தரவாதம் அளித்தன.
5. ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன.
6. இத்தகைய சராய்கள் தங்களுக்கு அருகே நகரங்கள் உருவாவதையும் உறுதி செய்தன.
7. மிகவும் புகழப்படும் அக்பர், தோடர்மால் ஆகியோரின் நிதிநிர்வாக முறை பெருமளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையினை அடித்தளமாகக் கொண்டதாகும்.
35.
(i) இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் வலியுறுத்தியது.
(ii) ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Rhuggee) சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும் கொலை செய்வதையும் வழக்கமாகத் கொண்டிருந்தவர்கள்)அழிக்கவும் சதி முறையை ஒழிக்கவும் , கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கப் பாடுபட்டார்.
(iii) கல்கத்தா மருத்தவக் கல்லூரியை 1835 இல் துவக்கினார்.இக்கல்லூரியின் மாண்வர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844 ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பபட்டர்கள்.
(iv) 1845 இல் பம்பாயில் கிராண்ட் மருத்தவக் கல்லூரி நிறுவப்பட்டது.தாம்சன் பொறியியல் கல்லூரி 1947 ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849 இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
(v) மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835 ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார்.அவர் கல்விக்குழுமத்தின் உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை.
(vii) மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்தால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
36.
1. சிவாஜியின் நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகிர் வழங்குவதையும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது.
2.காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை , ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
3. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரிய போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
4.ரெஜிமண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாப்படை பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தார்.
5. ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப் படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்தார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.
6. சாரிநெளத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார்.
7.ஒவ்வொரு குதிரைப் படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பார்கிர்கள் என்றும், தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
8.இது தவிர நீர் கொண்டு செல்லலும் குதிரைப் பரட்டை வீரர்களும், லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
37.
(i) சோழர் ஆட்சிக்காலத்தில் சமூகம் பெரும் அளவில் வேளாண்மையைச் சார்ந்திருத்தமையால் சமூக மதிப்பையும், அதிகாரப்படி நிலைமையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணமாக வேளாண்மை விளங்கியது.
(ii) சமூகத்தில் உயர் தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேய கிழார்' எனப்படும் நில உரிமையாளர்கள் ஆவார்.
கிராமங்களின் உடைமையாளர்கள்:
(i) வேளாண்மை கிராமங்களின் உடைமையாளர்கள் அடுத்த படி நிலையில் இருந்தனர்.
(ii) அரசர்கள் தீவிர சைவர்கள். இராஜராஜனுக்கு 'சிவ பாத சேகரன்' எனப் பட்டப்பெயரே உண்டு.
(iii) சைவ சித்தானத்தின் அடிப்படையிலான "சிவஞானபோதம்" மெய்கண்டரால் எழுதப்பட்டது.
(iv) நம்பியாண்டார் நம்பி, சைவ சமய நூல்களை மீட்டெடுத்து திருமுறை என்ற பெயரில் தொகுத்து வழங்கினார்.
(vi) கடவுளுக்குத் தொண்டு செய்ய பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டனர். அவர்களுக்கு இசையும், நடனமும் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
பண்பாடு:
(i) கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்களாகத் திகழ்ந்தன. கலை, கட்டிடக்கலை, ஓவியம், கல்வி, மக்கள் தொண்டு சமூகப்பணி என பண்முக செயல்பாட்டுக்களமாக இவை விளங்கின.
(ii) தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற சோழர்கால கோயில்கள் சிறந்த பண்பாட்டு கூடங்களாகத் திகழ்ந்தன,
பண்பாட்டு பரவல்:
(i) சோழர்களின் கடற்படை வாணிபத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீ விஜயா, கெடா (கடாரம்) பகுதிகளை வென்றதன் மூலம் சீன அரசுகளுடன் வாணிபத் தொடர்பு ஏற்பட வழிவகுத்தது.
(ii) இவர்களின் கடல் கடந்த படையெடுப்புகளின் காரணமாக இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நமது தமிழ் பண்பாட்டின் இந்துமத வழிபாட்டின் தாக்கத்தினை அறிய முடிகிறது.
38.
சாதவாகன ஆட்சி:
i) இந்தியாவின் வடபகுதியில் நிகழ்ந்து வந்த அரசியல் மாறுதல்களினால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ.ஆ.முதல் நூற்றாண்டின் நவீன ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களை உள்ளடக்கிய தக்காண பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது.
ii) இது மௌரிய ஆட்சியயை போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சியாக அமையவில்லை. சாதவாகன மாகாண ஆட்சியாளர்கள் பலம் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தனர்.
மூவேந்தர்கள்:
வாடா இந்தியாவில் அமைந்த பரந்த பேரரசுகள் போல் அல்லாமல் தென்னிந்தியாவின் தமிழ் பகுதியில் சிற்றரசர்கள் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
i) மதுரையை தலைமையிடமாக கொண்டு பாண்டியர்கள்
ii) உறையூரை தலைமையிடமாகா கொண்டு சோழர்கள்
iii) வஞ்சியை தலைமையிடமாக கொண்டு சேரர்களும் ஆட்சி புரிந்தனர்.
மௌரியக் கால கல்வெட்டில்:
பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலே மௌரிய அரசர்கள் தமிழக மூவேந்தர்களை பற்றிய செய்திகளை தங்கள் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளார்கள்.
அசோகரின் 2வது கல்வெட்டு ஆணியில் தனது பேரரசின் எல்லையில் அமைந்த அரசுகளை பற்றி கூறியுள்ளார்கள்
மூவேந்தர்கள் மட்டும் தென்னிந்தியாவை ஆண்டனர் என கூற இயலாது. சிறிய பகுதிகளை ஆட்சி புரிந்த ஏராளமான சிற்றரசர்களும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை. இந்த சிற்றரசர்கள் அந்த காலத்தில் வேளிர் என அழைக்கப்பட்டனர்.
39.
கோரி முகமதுவின் வட இந்திய போர்களில் முக்கியமானது தரைன் போர்களாகும். தெற்கு ஆசிய இஸ்லாமிய ஆட்சி அமைய அடித்தள மிட்டவரும் இவரே.
முதல் தரைன் போர் 1191:
அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகானுக்கும் கோரி முகமதுவுக்கும் இடையே 1191ல் முதல் தரைன் போர் நடைபெற்றது. இதில் கோரி முகமது தோல்வியுற்றார். காயம் அடைந்த கோரி முகமதுவை ஒரு குதிரை வீரன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றான்.
இரண்டாம் தரைன் போர் 1192:
1. முதல் தரைன் போரில் தோல்வியுற்ற கோரி முகமது மீண்டும் பிருத்விராஜ் சௌகான் மீது 1192 2வது தரைன் போர் நிகழ்த்தினார்.
2. இம்முறை கோரியின் ஆற்றலை பிருதிவிராஜ் குறைத்து மதிப்பிட்டார். தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
3. சிறிய படைக்குழுவுக்குத் தலைமை தாங்கி 2வது தரைன் போரில் ஈடுபட்டார்.
4. 2வது தரைன் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
5. இந்திய வரலாற்றின் திருப்பு 2வது தரைன் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி பிருதிவிராஜிடமமே ஆட்சியை ஒப்படைத்தார்.ஆனால் ராஜதுரோகம் குற்றம் சாட்டி அவரைக் கொன்றார்.
6. தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப்பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.
இவ்வாறாக இரண்டாவது தரைன் போர் ராஜபுத்திர ஆட்சியின் வீழ்ச்சிக்கும் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சிக்கும் வழிவகை செய்தது எனலாம்.
40.
ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் - சுவாங் தனது குறிப்புகளில் வட இந்தியாவின் நிலையையே குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்
1. சாதி அமைப்பு முறை
2. பெண்கள் நிலை
3. மக்களின் வாழ்க்கைமுறை
4. உணவுப் பழக்கங்கள்
5. கல்வி
1. சாதி அமைப்பு முறை:
இந்து சமூகத்தில் சாதி முறை வலுவாக காலூன்றியிருந்தது.
யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தில் நான்கு பிரிவினர்கள் தொழில்கள் முற்காலத்தில் இருந்தது போலவே தோன்றின.
மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
பல்வேறு சாதி அமைப்பு காணப்பட்ட போதிலும் சமுதாய பிரிவினர்களிடையே மோதல்கள் எதுவும் நிகழவில்லை.
2. பெண்கள் நிலை
பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை என யுவான் சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்
உடன்கட்டை ஏறும் வழக்கம். (சதி) இருந்திருக்கிறது. பிரபாகரவர்தனரின் மனைவி யசோமதிதேவி தன் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.
3. வாழ்க்கைமுறை
மக்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தனர். பருத்தி பாட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர்.
மெல்லிய ஏக துணிகளை தயாரிக்கும் காலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள் பெண்கள் என இருசாராரும் தங்கம் வெள்ளி அணிகலனை பயன்படுத்தினார்.
மோதிரங்கள், கப்புகள், பதக்கங்கள் அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் அழகுசாதன பொருட்களை பயன்படுத்தினர்.
4. உணவுப் பழக்கங்கள்
இந்தியாவிலும் மரக்கறி உணவுப் பழக்கத்தை கொண்டிருந்ததாக யுவான் - சுவாங் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
உணவு தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
சில நேரங்களில் மீனும் ஆட்டிறைச்சியும் உண்டனர்.
5. கல்வி
மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது.
கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது
வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை
ஒழுக்கமும் அறிவுத் திறனும் கொண்ட சாதுக்களையும் பிட்சுகளையும் மக்கள் பெரிதும் மதித்தனர். யுவான் சுவாங் மேற்கண்டவாறு வட இந்தியாவின் நிலை குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
41.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
42.
இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:-
1. சமயப் பிரிவினை:
ஹீனயானா, மகாயானா, வஜ்ராயனா, தந்திராயனா, சகஜயானா ஆகிய பிரிவுகள் பெளத்தத்தின் உண்மைத் தன்மையை இழக்கச் செய்தன.
2. மொழி மாற்றம்:
பாலி, பிராஹிருதம் மொழியில் பரப்பப்பட்டு வந்த பெளத்தமதச் செய்திகள் கனிஷ்கரின் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழியில் எடுத்துச் செல்லப்பட்டன. இது பாமர மக்களுக்கும் பெளத்தத்திற்கும் இடையே இடைவெளி விழுந்தது.
3. அரசு ஆதரவை இழத்தல்:
ஹர்ஷவர்த்தனரின் காலத்துக்குப்பிறகு பெளத்தம் அரசு ஆதரவை இழந்தது. வேத மதம் அரசு ஆதரவை பெற்றது. பெளத்த சமயம் வீழ்ச்சிக்கு இது வழி வகுத்தது.
4. வட இந்தியாவில் பக்தி இயக்கம்:
பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளான ராமானந்தர் ஆகியோர் வேத மதத்தின் பெருமையை நிலை நாட்டினார். இதனால் பெளத்தமதவளர்ச்சி பாதித்தது.
5. ஹீணர்கள் படையெடுப்பு:
ஹீண ஆட்சியாளர்களான தோராமானர் மிகுரகுலர் ஆகியோர் பெளத்தர்களின் மீது வெறுப்புற்றனர். வடமேற்கு இந்தியாவில் பெளத்த மதத்தினரை அழித்தனர்.
6. இராஜபுத்திரர்களின் எதிர்ப்பு:
இராஜபுத்திர மன்னர்கள் வேத மதத்தின் தீவர ஆதரவாளர்கள். ஆதலால் பெளத்த மதத்தினரை துன்புறுத்துவதிலும், கொள்வதிலும் ஈடுபட்டனர். இத்துடன் பெளத்த மதம் காரணமாயிற்று.
7. அயலவர் படையெடுப்பு:
இறுதியாக அராபியர்கள், துருக்கியரின் படையெடுப்புகள் பெளத்த துறவிகளை இந்தியாவை விட்டு வெளியேற்றி நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்ல வைத்தனர்.
இதன் விளைவாக, பெளத்த மதம் இந்தியாவிலிருந்து மெல்ல மெல்ல மறைந்தது.
43.
44.
(i) வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
(ii) இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
(iii) ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார்களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
(iv) ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
(v) அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
(vi) நிலப்பரப்பின் மீதம், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
(vii) சாதாரணமாக மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.
நிர்வாகம்:
(i) வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
(ii) சபா என்பது மூத்தோர் அல்லது செல்வார்கள் பங்கேற்ற அமைப்பு.
(iii) சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இணைக்க குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
(iv) அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
(v) மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
(vi) சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். 'பலி' எனப்பட்ட வரைமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
(vii) நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர்களான குலபா அல்லது கிராமணி என்பவர்களுக்கு இவர் உதவி செய்வர். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.
45.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
46.
1. ஹரப்பா மக்களின் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
2. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
3. வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
4. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
47.
விஜயநகரப் பேரரசின் கீழ் இயங்கி வந்த பாளையக்காரர்களில் நெற்கட்டும்செவல் பகுதியின் புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்க்கு கப்பம்கட்ட மறுக்கவே அவர்கள் மீது போர்தொடுத்து கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாளையக்கார படை வீரர்கள்: கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சிவகங்கையின் மருது சகோதர்கள் ஆகியோர் 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுவே 1801 ம் ஆண்டு கிளர்ச்சி ஆகும்.
48.
(i) எம்.ஜி.ரானடே அவர்கள் பண்டித ராமபாயின் சமூக சீர்திருத்த இயக்கங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
(ii) ரமாபாய், ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்கள் இணைந்து ஆரியமகிளா சமாஜ் என்ற அமைப்பை நிறுவினர்.
(iii) இதில் 300 பெண்கள் வரை கல்வி கற்றனர்.
(iv) அதேபோல் விதவைகளுக்காக சாரதா சதன் (வீடற்றவர்களுக்கான இல்லம்) என்ற அமைப்பையும் அமைத்தனர்.
(v) இவ்வாறாக, ரானடே அவர்கள் சமூக நீதிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்க்காகவும் அரும்பாடுபட்டார்.
49.
1. தாராஷுகோ ஷாஜகானின் மூத்த மகன் ஆவார்.
2. தில்லி அரியணைக்கான வாரிசுரிமைப் போரில் ஒளரங்கசீப்பிடம் தோற்றுப்போன தாராஷுகோ தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டார்.
3. பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்திய அவர் இந்து மதத்திற்கும், இஸ்லாத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதை கண்டறிந்தார்.
4. சம்ஸ்கிருத மொழியிலமைந்த உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
50.
(i) வரி வசூலிக்கும் பொறுப்பை பொது நிர்வாகத்திலிருந்தும் நிதித் துறையிலிருந்தும் பிரித்தார்.
(ii) ஆட்சியாளர்களை (collectors ) வரிவசூலிக்கும் பணிக்கு மட்டுமே பணித்து அவர்களை நீதி வழங்கும் பொறுப்பிலிருந்து விடுவித்தார்.
(iii) குற்றவியல் உரிமையியல் நீதிமன்றங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டன.
(iv)கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.அவற்றின் கீழ் நான்கு பிராந்திய முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தா, தக்காணம், முர்சிதாபாத் , பாட்னா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.
51.
(i) சோழ அரசர்கள் கல்விப் புரவலர்களாக விளங்கினார்கள்.
(ii) அறக்கட்டளைகளை நிறுவி, சமஸ்கிருதக் கல்விக்குப் பெரும் ஆதரவளித்தார்கள். அப்போது எழுத்தறிவு பரவலாக இருந்தது என்பதைக் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
(iii) முதலாம் இராஜேந்திரன் தென் ஆற்காடு பகுதியில் உள்ள எண்ணாயிரத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவினார்.
(iv) மேலும் இரு சமஸ்கிருதக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 1048இல் புதுச்சேரிக்கு அருகிலுள்ள திருமுக்கூடலிலும் அமைந்தன.
(v) இந்த சமஸ்கிருத இலக்கணம், சமயம், தத்துவங்கள் ஆகியவை கற்றுத் தரப்பட்டன.
52.
i) மீனத்தார், மிலித்தா என்றும் அழைக்கப்படுகிறார்.
ii) அவர் புத்த சமயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்.
iii) புத்த சமய துறவி நாகபாணருடன் அவர் உரையாடியது மிலிந்த பின்ஹோ என்ற பாலி மொழி நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.
iv) மீனாந்தர் புத்த சமயத்தை தழுவினார்
v) கிரேக்க தூதரான ஹீலியோடோரஸ் வைணவ சமயத்தை தழுவியதோடு பெஸ் நகரில் கருடத்தூணையும் நிறுவினார்.
53.
i) மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
ii) அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
iii) போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
iv) இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருப்பதாக இருந்திருக்க வேண்டும்.
v) போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மெளரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.
54.
(i) சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
(ii) விஜயபத்திரிக்கா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
(iii) அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
(iv) அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
(v) கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
(vi) ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards