11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/02/2019
11th Third Revision Test Question Paper 2019
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
_______என்பது ஒருமை வடிவம் ஆகும்.
அணி (Matrix)
அணிகள் (Matrices)
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
2.
புதுப்பிக்கக்கூடிய வளங்களுக்கு எடுத்துக்காட்டு _________ஆகும்.
காற்று
காடுகள் மற்றும் கடல் வளங்கள்
நீர்மின் சக்தி மற்றும் காற்றாலை
மேற்கூறிய அனைத்தும்
3.
பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் ________.
ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் ஆடம்ஸ்மித்
ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் பேராசிரியர் ஹிக்ஸ்
ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் A.C.பிகு
ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் J.K.ஈஸ்டன்
4.
RRB-விரிவாக்கம் ______
வட்டார ஊரக வங்கிகள்
தேசிய ஊரக வங்கிகள்
இரண்டும்
எதுவுமில்லை
5.
அரசின் நிறுவனங்கள், அரசின் பணிகள் மற்றும் அரசின் இயந்திரங்களோடு சார்ந்த நிதி நடவடிக்கைகளே________அகும்.
நிதி நிர்வாகம்
பொது நிதி
அரசு
எதுவுமில்லை
6.
TP=______
\(TP\over N\)
AP x N
\({\triangle TP\over N}\)
TPn-TPn-1
7.
இடர்தாங்கும் இலாபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியயவர்____________.
F.B.ஹாலே
A.சும்பீட்டர்
J.B.கிளார்க்
H.நைட்
8.
______ இரு விற்பனையாளர் இருக்கும் அங்காடியாகும்.
முற்றுரிமை
இருவர் முற்றுரிமை
சில்லோர் முற்றுரிமை
நிறைகுறைப் போட்டி
9.
தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் ________________ பெரிய பொருளாதாரமாக உள்ளது.
முதல்
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
10.
மொத்த வருவாய்ச் சார்பின் முதல் வகையீடு ______________ ஆகும்.
சராசரி வருவாய்
இலாபம்
இறுதிநிலை வருவாய்
பூஜ்ஜியம்
11.
கீன்சின் வட்டிக் கோட்பாடு இவ்வாறு வழங்கப்படுகிறது.
துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு
நீர்மை விருப்பக் கோட்பாடு
கடன் நிதிக் கோட்பாடு
ஏஜியோ கோட்பாடு
12.
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்
தனியார் சமூக நலம்
சமூக நலம்
வருவாய் ஈட்ட
தொழில் முற்றுரிமை
13.
எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?
சண்டிகர்
பாண்டிச்சேரி
இலட்சத்தீவு
அந்தமான் நிக்கோபர் தீவுகள்
14.
எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு _____
குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
அதிக மக்கள் தொகை அடர்த்தி
குறைந்த இயற்கைவளம்
குறைந்த மனிதவளம்
15.
நிதித்துறை சீர்திருத்தங்கள் முக்கியமாக __________ துறைக்கானது.
காப்பீட்டுத் துறை
வங்கித்துறை
அ மற்றும் ஆ
போக்குவரத்துத் துறை
16.
முதன்மை உற்பத்திக் காரணிகளாவன
உழைப்பு மற்றும் தொழிலமைப்பு
உழைப்பு மற்றும் மூலதனம்
நிலம் மற்றும் மூலதனம்
நிலம் மற்றும் உழைப்பு
17.
கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்
ஒரு விற்பனையாளர்
சில விற்பனையாளர்
பண்டவேறுபாடு
உள்ளே நுழைய முடியாது
18.
ஒரு புத்தகம் ரூ.10 வீதம் 40 புத்தகங்களை விற்கிறார், எனில் அவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய்
100
200
300
400
19.
சமநோக்கு வலைகோட்டை முதன்முதலில் தோற்றுவித்தவர்.
ஹிக்ஸ்
ஆலன்
கீன்ஸ்
எட்ஜ்வொர்த்
20.
சமநிலை விலை என்பது அந்த விலையில்
எல்லாம் விற்கப்படுகிறது
வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
மிகைத்தேவை பூஜ்ஜியம்
21.
சமநோக்கு வளைகோடு என்றால் என்ன?
22.
பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
23.
நீர்மை விருப்பக் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?
24.
நிறைகுறைப் போட்டியை அறிமுகப்படுத்தியவர் யார்?
25.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் தாக்கம் பற்றி எழுதுக?
26.
தேவைச் சார்புச் சமன்பாடு x = 20-2p-p2 இல் p விலையையும் x அளவையும் குறிப்பிடும் என்றால் p = 2.5 என்ற மதிப்பில் தேவை நெகிழ்ச்சிகெழு மதிப்பு காண்
27.
மனித மேம்பாமேம்பாட்டுக் குறியீட்டெண் (HDI) மற்றும் வாழ்க்கைத் தரக்குறியீட்டெண் (PQLI)- ஆகியவற்றை வேறுபடுத்துக.
28.
தமிழ்நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் யாவை?
29.
முன்னேறிய பொருளாதாரத்தின் நான்கு இயல்புகளை கூறுக.
30.
பகுத்தாய்வு முறையின் பொருள் கூறுக
31.
Microsoft power point என்றால் என்ன? MS power point தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகளை விளக்குக.
32.
இந்தியாவின் இயற்கை வளங்களை விளக்குக.
33.
சமநோக்கு தொகுப்பு வரைபடம் உதவியுடன் நுகர்வோர் சமநிலையை விளக்குக.
34.
கடன் நிதிக் கோட்பாட்டினை அளிப்பின் நான்கு மூலங்களின் அடிப்படையில் விளக்குக.
35.
பணவியல் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களின் விளைவுகளை விரிவாக விளக்கவும்.
36.
Pd=1600 - x2, Ps = 2x2 + 400 ஆகியவை தேவை மற்றும் அளிப்பு சமன்பாடு எனில் சமநிலைப் புள்ளியில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரி மதிப்பு காண்.
37.
38.
பொருளாதார முன்னேற்றத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் பங்கினை விவரி?
39.
ஊரக பொருளாதாரத்தின் பண்புகள் விசித்திரமானவை: விவாதி.
40.
இந்தியக் கனிம வளங்களின் முக்கியத்துவத்தை விவரி.
41.
42.
43.
பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.
44.
பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு
45.
பொருளியல் கணித முறையில் பயன்படுத்தும் பல்வேறுவகையான சூத்திரம் யாவை?
46.
நிலையான பேரளவு பொருளாதாரம் விளக்குக.
47.
மார்ஷல் நல இலக்கண வரையறையில் சிறப்பம்சங்களை விவரி.
48.
மாறும் விகித விளைவு விதியின் எடுகோள்களை எழுதுக.
49.
இரண்டாவது பசுமை புரட்சிக்கான தேவைகள் யாவை?
50.
தமிழ்நாட்டின் உயர்கல்வி பற்றி குறிப்பு வரைக?
51.
பணத்தேவைக்கான நோக்கங்கள் யாவை?
52.
53.
தனியார் மயமாக்கலின் நன்மைகளை எவ்வாறு நியாயப்படுத்தலாம்?
54.
பணச் செலவு- உண்மைச் செலவு வேறுபாடுகளைக் கூறுக
1.
(a)
அணி (Matrix)
2.
(d)
மேற்கூறிய அனைத்தும்
3.
(c)
ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் A.C.பிகு
4.
(a)
வட்டார ஊரக வங்கிகள்
5.
(b)
பொது நிதி
6.
(b)
AP x N
7.
(a)
F.B.ஹாலே
8.
(b)
இருவர் முற்றுரிமை
9.
(c)
மூன்றாவது
10.
(c)
இறுதிநிலை வருவாய்
11.
(b)
நீர்மை விருப்பக் கோட்பாடு
12.
(b)
சமூக நலம்
13.
(b)
பாண்டிச்சேரி
14.
(a)
குறைந்த மக்கள் தொகை அடர்த்தி
15.
(c)
அ மற்றும் ஆ
16.
(d)
நிலம் மற்றும் உழைப்பு
17.
(c)
பண்டவேறுபாடு
18.
(d)
400
19.
(d)
எட்ஜ்வொர்த்
20.
(c)
தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்
21.
1.சமநோக்கு வளைகோட்டின் தொகுதி என்பது இரண்டு பண்டங்களுக்கான வெவ்வேறு நிலையான பயன்பாட்டை விளக்கும் பல சமநோக்கு வளைகோடுகளைக் கொண்டதாகும்.
2.மேலே உள்ள சமநோக்கு வளைகோடு அதிக அளவு திருப்தியையும், கீழே உள்ள சமநோக்கு வளைகோடு குறைந்த அளவு திருப்தியையும் குறிக்கின்றன.
22.
பொருளாதார சிக்கனங்கள் இரண்டு வகைப்படும் அவை,
1. அகச்சிக்கனங்கள்
2. புறச்சிக்கனங்கள்
23.
(i) குறிப்பிட்ட ஒரு காலத்திலேயே பல்வேறுபட்ட வட்டி விகிதம் சந்தையில் இருப்பதை இக்கோட்பாடு விளக்கத் தவறிவிட்டது.
(ii) குறுகிய கால வட்டி வீதம் பற்றி மட்டுமே இது விளக்குகிறது.
24.
நிறைகுறைப் போட்டி எனும் கருத்தை 1933-ல் இங்கிலாந்து நாட்டின் ஜோன்ராபின்சன் (John Robinson) மற்றும் அமெரிக்காவின் E.H.சேம்பர்லின் (Chamberlin) ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
25.
பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் தொழில்துறை மற்றும் சேவைத்துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
26.
\(\boxed{\eta d={p\over x}{dx\over dp}}\)
\({dx\over dp}=-2-2p\)
\(\eta d={-p\over 20-2p-p^2}(-2-2p)\)
\(={2p(1+p)\over 20-2p-p^2}\)
இதில் p=2.5எனில்,
\(={2(2.5)(1+2.5)\over 20-2(2.5)-(2.5)^2}\)
\(={5(3.5)\over 20-5-6.25}\)
\(={17.5 \over 15-6.25}\)

27.
| வ.எண் |
மனித மேம்பாட்டுக் குறியிட்டென்(HDI) |
வாழ்க்கைத் தரக்குறியீட்டென் (PQLI) |
|---|---|---|
| 1 | ஐக்கிய நாடுகள் முன்னேற திட்டம் (UNDP) வெளியிடப்பட்டது | ஒரு நாட்டின் வாழ்க்கைத்தரத்தினை அளவிடப் பயன்படுகிறது |
| 2 | இது எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் கூறியடூ, கல்விக்குரியீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் அமைக்கப்பட்டது | இதில் எதிர்பார்ப்பு ஆயட்காலம் , குழந்தை இறப்பு வீதம், மற்றும் எழுத்தறிவு வீதம் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தினார். |
| 3 | பாகிஸ்தானின் பொருளியல் அறிஞர் மஹாபூப் உள் ஹக் என்பவரும் இந்தியாவை சார்ந்த அமர்த்திய குமார் சென் என்பவரும் இக்கோட்பாட்டை மேம்படுத்தினர் | மோரிஸ் டி மோரிஸ் என்வரால் உருவாக்கப்பட்டது |
28.
எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை தமிழ்நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். நாகப்பட்டினம் நடுத்தர துறைமுகமாகும்.
29.
1.வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான, வளங்களை முழுமையாக பயன்படுத்துவதுமான நாடுகளைக் குறிக்கும்.
2. அதிக தலா வருவாயைக் கொண்டிருப்பது ஆகும்.
3. முழு வேலைவாய்ப்பு
4. தொழில் செறிவு
30.
பகுத்தாய்வு முறை என்பது முழுமை தொகுதியினை பற்றிய கருத்தின் அடிப்படையில் அதன் தனி அலகு ஒன்றினைப் பற்றி கருத்துக் கூறுவதாகும்.
31.
Microsoft power point
கணினி வாயிலாக தகவல்களை வழங்கிட உதவும் ஒரு மென்பொருள் ஆகும்.
(MS power point)தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகள்:
1.துவங்க (Start)செயலியை அமுக்கு
2.செயற்கட்டளை (Program)யை அமுக்கு
3.Microsoft power point ஐ தெரிவு செய்.
4.புதிய power point கோப்பானது திறக்கும்.
5.அதன் பிறகு தலைப்பு மற்றும் துணை தலைப்புகளை விரும்பினால் தட்டச்சு செய்யும்.
6.புதிய படிவம் ('New Slide')என்ற குறியீடு (Icon) அல்லது 'ctrl +m' என்ற பொத்தானை அழுக்குவதன் மூலம் புதிய படிமத்தை நுழைக்கலாம்.
7.பாடப்பொருள், அட்டவணையை உள்நுழைத்தல் போன்றவற்றை உள்ளடக்கமாக தர முடியும்.
8.வடிவமைப்பு 'Design' என்ற செயலி நழுமங்களை வடிவமைக்க உதவுகிறது.
9.நழுமக்காட்சி (slide show) என்ற செயலியை அமுக்குவதன் மூலம் ஒருவர் நழுமக்காட்சிகளை துவக்கத்திலிருந்தோ அல்லது தற்போதைய நழுமக்காட்சிலிருந்தோ இயக்க முடியும்.
முடிவுரை:
1. குறிப்பிட்ட தலைப்பிலான தகவல்களை புரிந்துகொண்டு நினைவில் வைப்பதற்குரிய குறிப்பு Power Point Presentation வசதிப்படுத்துகிறது.
2.கற்பித்தலில் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உயர்ந்த தரம் வாய்ந்த கல்வியினை வழங்கிட Power Point Presentation (PPP)உதவுகிறது.
32.
நம் நாட்டில் இயற்கையிலிருந்து பெறப்படும் வளங்கள் இயற்கை வளங்கள் ஆகும். அவை.
1.காடு
2. நீர்
3. கனிம வளங்கள்
4.ஆற்றல் சக்திகள் போன்றவை ஆகும்.
1.இந்தியா பெருவாரியான ஏழை மக்களை கொண்டுள்ளது.
2. இயற்கை நமக்கு பல்வேறு காலநிலை பாசனத்திற்கான பல்வேறு ஆறுகள், மின்சக்தி, அதிக கனிம வளங்கள்,காடுகள் மற்றும் பல்வேறு மண் வளங்களை அளிக்கிறது.
மண் வளம்:
1.இந்தியா மொத்த பரப்பளவில் 32.8 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்புடன் உலகில் ஏழாவது இடத்தை பெற்றுள்ளது.
2.உலக நிலப்பரப்பில் 2.42% ஆகும்.
வன வளம்:
1.2007ம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியாவில் காடுகள் 69.09 மில்லியன் ஹெக்டர் அதாவது மொத்த நிலப்பரப்பில் 21.02%ஆகும்.
2.இதில் 8.35 மில்லியன் ஹெக்டர் அடர்ந்த காடுகள்,ஓரளவு அடர்ந்த காடுகள் மற்றும் 28.84மில்லியன் ஹெக்டேர் காடுகள் பரந்த வெளி காடுகள்.
முக்கியமான கனிம வளங்கள்:
(அ) இரும்புத்தாது:
1.இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமதமாக காணப்படுகிறது.
2.இருப்பு தாது 4630மில்லியன் டன் மற்றும் (மேக்னடைட் )இரும்புத்தாது 10619 மில்லியன் டன் அளவிற்கு இரும்புத்தாது நமது நாட்டில் இருப்பு உள்ளது.
3.ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
(ஆ)நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1.பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3.மேற்கு வாங்காளம், பீகார், மத்திய பிரதேசம்,மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக்கூடிய இடங்களாகும்.
(இ)அலுமினியத்தாது(பாக்சைட்):
1.பாக்சைட் அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2.கிழக்கு கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதில் அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
(ஈ) மைக்கா:
1.மைக்கா ஒரு வெப்பத்தை தடுக்கும் கனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2.இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்காதான் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
3.பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
(உ)சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1.இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், படர்பூர், நாகர்காட்டிகா,காசிம்பூர் பள்ளியரியா, ருத்ராபூர் சிவசாகர் மார்ன் (அஸ்ஸாமின் அனேக இடங்கள்) காம்பே வளைகுடா, அங்கலேஸ்வர் மற்றும் காலோல் (குஜராத்தின் அனேக இடங்கள் ) ஆகியவை முக்கியமான எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களாகும்.
(ஊ) தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3.கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்ச்சூரில் ஹிட்டி தங்க வயல் சுரங்கத்திலும்ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
(எ)வைரம்:
1.UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2.அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும்,ஆந்திரபிரதேசத்தில் கர்னூல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுக்கையிலும் கிடைக்கிறது.
3. புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியூபடா மற்றும் பார்கர் மாவட்டம்,மாத்தூர் கிருஷ்ணா பகுதி, கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
(ஏ)ஆற்றல்:
நம் வாழ்க்கைக்கு தேவையான அங்கங்களில் ஒன்று மின் ஆற்றலாகும்.
33.
நுகர்வோர் சமநிலை:
1.நுகர்வார் தனது வருமானத்தின் முழுமையும் பண்டங்கள் வாங்க செலவிடுவதன் மூலம் அதிலிருந்து அதிகபட்ச திருப்தியைப் பெறுகின்ற புள்ளியே நுகர்வோர் சமநிலைப் புள்ளி ஆகும்.
2.சமநிலைக்கான நியதிகள்
\(\boxed{MRS_{xy}=P_x/P_y}\)

வரைபட விளக்கம்:
1.சமநோக்கு வளைகோட்டை அடி மட்டத்தில் வரவு செலவுக்கோடு தொடும் புள்ளியில் நுகர்வோர் சமநிலை அடைகிறார்.
2.AB என்ற வரவு செலவுக் கோடு IC3 என்னும் சமநோக்கு வளைகோட்டை T என்ற புள்ளியில் தொடுகிறது.
3.இந்த IC3 வளைகோடே அதிக அளவு திருப்தியைத் தரும் வளைகோடாகும்.
4.இந்த சமநிலைப் புள்ளியில் IC யின் சாய்வு (slope)MRSxy யைக் குறிக்கிறது.
5.வரவு செலவுக் கோட்டின் சாய்வு X மற்றும் Y ன் விலை விகிதத்தை குறிக்கிறது \(({P_x / P_y})\)
6.ஆகவே \(MRS_{xy}=({P_x / P_y})\)
34.
கீழ்க்கண்ட நான்கு மூலங்களின் அடிப்படையில் கடன் நிதியின் அளிப்பு அமைகிறது. அவை,
(i) சேமிப்பு (Savings)S
(ii) வங்கிக்கடன் (Bank Credit) BC
(iii) பதுக்கியதை மீட்டல் (Dishoarding) DH
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(i) சேமிப்பு (Savings) S
சேமிப்பிலிருந்து கடன்நிதிகள் பெறப்படுகின்ற சேமிப்பு இரு வகைப்படும். அவை,
(1) தனிநபர்களின் திட்டமிட்ட சேமிப்பு "Ex-ante" சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(எ.கா) LIC பிரிமியம்
(2) திட்டமிடப்படாத சேமிப்பை "Expost" பின்னால் சேமிப்பு என்று அழைக்கப்படுகிறது.
(ii) வங்கிக்கடன் (Bank Credit) Bc
வணிக வங்கிகள் கடன் உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு கடன் நிதிகளை அளிக்கின்றன.
(iii) பதுக்கியதை மீட்டல்(Dishoarding) DH
(1) பதுக்கிய பணத்தை வெளிக்கொணர்ந்து பயன்படுத்துவது கடன் நிதிகளின் அளிப்பின் மறறொரு மூலமாகும்.
(2) இந்தியாவில் 1991ல் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் துறைக்கு மாற்றியதால், தனியாரிடமிருந்து நிதி இடம்பெயர்ந்து.
(iv) முதலீடு செய்யாதிருத்தல் (Disinvestment) DI
(1) முதலீட்டிற்கு நேர் எதிரானதாகும்.
(2) உபகாரணங்கள் தேய்மானம் அடையும்போது அதற்குப் போதுமான நிதி ஒதுக்காமல் இருத்தல், முதலீடு செய்யாதிருத்தல் எனப்படும்.
முடிவுரை:
மேற்கூறிய நான்கு மூலங்களை கடன் நிதிகளின் அளிப்பு, வட்டி விகிதத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.
35.
(i) இச்சீர்திருத்தங்கள் வங்கியமைப்பை மிகுந்த திறனுடையதாய் மாற்ற முயற்சித்தன.
(ii) வட்டி வீதங்களில் காணப்பட்ட வேறுபாடுகளைக் களைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவைகளாவன,
ரொக்க இருப்பு வீதம்:
(i) 1991ஆம் ஆண்டு நரசிம்மம் குழு பரிந்துரைப்படி, சட்டரீதியான நீர்மை விகிதம் மற்றும் ரொக்க இருப்பு வீதம் குறைக்கப்பட்டது.
(ii) SLR விகிதத்தை 38.5% லிருந்து 25% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
(iii) CRR விகிதத்தையும் 4 ஆண்டுகளில் 3.5% ஆக குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வட்டி விகிதத் தளர்வு:
(i) வைப்புகளுக்கான வட்டி வீதம்.
(ii) வங்கிக் கடன்களுக்கான வட்டி போன்றவற்றை கட்டுப்படுத்தி வந்த இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தளர்த்தப்பட்டது.
(iii) பொதுத்துறை, தனியார்துறை மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கிடையேயான அதிகப்படியான போட்டியை சமாளிக்க நிர்வாகத்தில் இருந்த தடைகள் நீக்கப்பட்டன.
(iv) செயல்பாட்டிலிருக்கும் வங்கிகளின் வலையமைப்பை பரவலாக்க வங்கிக் கிளைகளுக்கான உரிமம் தளர்த்தப்பட்டது.
(v) புதிய கிளைகள் மற்றும் சிறப்புகிளைகளை திறக்க வங்கிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டன.
(vi) புதிய தனியார் துறை வங்கிகள் தொடங்குவதற்கு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
(vii) வாராக்கடன் மற்றும் சொத்து மதிப்பினை கணக்கிட புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
36.
Pd=1600-x2
Ps =2x2+100
\(\boxed { { P }_{ d }={ P }_{ s } } \)
⇒ 1600-x2=2x2+400
1600-x2-2x2=400
-3x2=400-1600
+3x2=+1200
\(x ^{2}= \pm \sqrt {400}\)
∴ x=20
x=20 எனில் p0x0= 1600-x02
=1600-(20)2
=1600-400
p0=1200
p0x0=1200x20
=24000
நுகர்வோர் உபரி (c.s)=\(\int_{0}^{x0}f(x)dx-p_{0}x_{0}\)
i) \(\int_{0}^{20}(1600-x^{2})dx-24,000\)
ii) \(|1600x-\frac{x^{3}}{3}|^{20}_{0}-24,000\)
=\(32000-\frac{8000}{3}-24000\)
=\(8000-\frac{8000}{3}\)
=\(\frac{24000-8000}{3}\)
உற்பத்தியாளர் உபரி (p.s)=P0x0 - \(\int^{x0}_{0}g(x)dx\)
=\(24000-\int^{20}_{0}(2x^{2}-400)dx\)
=\(24000-[\frac{2x^{3}}{3}+400x]^{20}_{0}\)
=24000-\([\frac{2(20)^{3}}{3}+400(20)]^{20}_{0}\)
=24000-\([\frac{2\times 8000}{3}+8000]\)
=24000-\(\frac{16000}{3}-8000\)
=16000-\(\frac{16000}{3}\)
=\(\frac{48000-16000}{3}\)
37.
38.
சிறு தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு ;
(i) சிறு தொழில்கள் அதிக தொழிலாளர்களைப் பயன்படுத்தும் துறையாக உள்ளன.
(ii) அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் துறையாக உள்ளது.
(iii) சிறுதொழில் உழைப்பு முதலீடு விகிதம் அதிகம்.
சிறுதொழில் சமமான மண்டல வளர்ச்சி:
(i) சிறு தொழில்கள் பெருபாலும் பின்தங்கிய பகுதிகளிலும் கிராமபுறப் பகுதிகளிலும் அமைவதால் இவற்றின் தாக்கம் பரந்துபட்ட வளர்ச்சியை அளிக்கிறது.
(ii) கிராம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சி வேற்றுமைகளை களைய உதவி செய்கிறது.
உள்ளூர் வளங்களை பயன்படுத்த சிறுதொழில் உதவி செய்கிறது:
(i) சிறு சேமிப்பு , தொழில் முனைவோர் திறமை போன்ற உள்ளூர் சார்ந்த வளங்கள் பயன்பாடற்று வீணாகாமல் அது வெளிப்படவும் , பலருக்கும் பயன்படவும் சிறு தொழில் காரணமாகிறது.
(ii) கைவினைப் பொருட்கள் தயாரிபோரின் பாரம்பரிய குடும்பத் திறன்களை வளர்ச்சியற சிறு தொழில் உதவுகிறது.
மூலதன பயன்பாடு முழுமை பெற சிறு தொழில் வழி வகிக்கிறது:
(i) சிறு தொழில் மூலதனத்தின் தேவை குறைவே இத்துறையில் செய்த முதலீட்டிற்கு காத்திறுப்புக் காலம் மிக குறைவாக இருக்குமாதலால் வருமானம் விரைவில் வர வாய்ப்பு உள்ளது.
(ii) அதிக வெளியிடு மூலதன விகிதத்தையும் அதிக வேலை வாய்ப்பு மூலதன விகிதத்தையும் நிலைப்படுத்தும் சக்தியாக சிறுதொழில் முறை உள்ளது.
சிறு தொழில் முறை ஏற்றுமதியை உருவாக்கிறது:
(i) சிறு தொழில்துறைக்கு அதிநவீன இயந்திரங்கள் தேவையில்லை.எனவே வெளிநாட்டிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்ய அவசியமில்லை.
(ii) இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் சிறு தொழில்கள் கணிசமான அந்நிய செலவாணியை ஈட்டுகிறது.
பெரிய அளவிலான தொழில்களுக்கு சிறு தொழில் நிறுவனங்களின் பங்கு:
(i) சிறு தொழில் நிறுவனங்கள் பெரிய தொழில்களின் வாழ்ச்சிக்கு ஆதரவு தருகின்றன.
(ii) பெரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைத்துள்ள சிறு தொழில் நிறுவனங்கள் தேவையான அனைத்து பாகங்களையும் தயாரித்து வழங்கி உதவுகின்றன.
சிறுதொழில் நிறுவனங்கள் நுகர்வோர் தேவைகளை நிறைவேற்றுகின்றனர்:
இந்தியாவில் நுகர்வோருக்கு தேவையான பல்வேறு பொருட்களை சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கின்றன
சிறுதொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை உருவாக்குகின்றன:
(i)சமூகத்தில் தொழில் முனைவோர் வர்க்கம் உருவாக சிறுதொழில் நிறுவனங்கள் உதவுகின்றன.
(ii) வேலை தேடுவோரை வேலை வாய்ப்பை வழங்குவோராக மாற்றுகின்றன.
(iii) மக்கள் சுயவேலை வாய்ப்பு மற்றும் தற்சார்பு நிலையை அடைய உதவுகின்றன.
39.
(1) ஊரக ஒரு நிறுவனம்:
கிராமம் என்பது முதன்மை நிறுவனமாக செயல்பட்டு ஊரக சமுதாயத்தின் அணைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
(2) வேளாண்மையை சார்ந்திருத்தல்:
ஊரக பொருளாதாரம் இயற்கையையும் வேளாண் நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது.
(3) ஊரக மக்களின் வாழ்க்கை முறை:
ஊரக மக்களின் வாழ்க்கை முறை மிக எளிமையானது. பொது பணிகளான கல்வி, வீடு, உடல்நலம் மற்றும் சுகாதாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, வங்கி செயல்பாடு, சாலைகள் மற்றும் அங்காடி வசதிகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கிறது.
(4) மக்கள் தொகை அடர்த்தி:
ஒரு சதுர கி.மீ. நிலப்பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை மக்கள் தொகை அடர்த்தி மிகவும் குறைவாகவும் வீடுகள் கிராமம் முழுக்க பரவிக் காணப்படுகிறது.
(5) வேலைவாய்ப்பு:
(i) வேலையின்மை, பருவகால வேலையின்மை மற்றும் குறை வேலையுடைமை ஆகியன கிராமப்புறங்களில் நிலவுகின்றன.
(ii) வேலையின்மை என்பது தொழிலாளர்கள், வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.
(6) வறுமை:
வறுமை என்பது அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலை.
(7) கடன் சுமைகள்:
(i) ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்கள் வறுமையும், குறைவேலையுடைமையும், விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்க நிலை குறை ஊதிய வேலை, பருவகால உற்பத்தி, குறைந்த அங்காடி வசதிகள் போன்றவைகளாகும்.
(ii) ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டு செல்கின்றான்.
(8) ஊரக வருமானம்:
ஊரக பொருளாதாரம் ஊரக மக்களுக்கு போதுமான வருமானத்தை ஈட்டித்தரும் வேலைவாய்ப்புகளையோ, சுய வேலைவாய்ப்புகளையோ தர இயலவில்லை.
(9) சார்ந்திருத்தல்:
ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் நகரத்தில் வேலை செய்ய தமது குடும்ப நபர்களின் வருவாய் மற்றும் சமூக நிதி உதவிகளையும் பெருமளவு சார்ந்துள்ளனர்.
(10) இரட்டைத் தன்மை:
எதிரிடையான இரண்டு அம்சங்கள் நிலவுவதே இரட்டை தன்மை ஆகும்.
(11) ஏற்றத்தாழ்வு:
ஊரக பகுதிகளில் வருமானம், சொத்து மற்றும் செல்வம் ஆகியவற்றின் பகிர்வு ஊரக மக்களிடையே ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது.
(12) குடிப்பெயர்ச்சி:
(i) ஊரக மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கிராமங்கலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
(ii) "இரட்டை நஞ்சாக்கல்" என சுமாசர் குறிப்பிடுகிறார். தற்போதைய வளர்ச்சி வகை முறை அபாயகரமானது என்று அவரின் சிறியது அழகு என்ற நூலில் விளக்குகிறார்.
40.
1. இரும்புத் தாது:
1. இந்தியாவில் உயர்தரமான இரும்புத்தாது அபரிமிதமாகக் காணப்படுகிறது.
2. இரும்பு தாது 4630 மில்லியன் டன் மற்றும் மேக்னடைட் இரும்புத்தாது 10619 மில்லியன் இருப்பு உள்ளது.
3. ஹேமடைட் இரும்புத்தாது அதிகமாக சத்தீஸ்கர்,ஜார்கண்ட், ஒடிசா, கோவா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
4.கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசங்களிலும் சில இடங்களில் இரும்புத்தாது காணப்படுகிறது.
2.நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி:
1. பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்கக் கூடிய கனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
2. சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்தபடியாக நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
3. மேற்கு வங்காளம், பீகார், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் முக்கிய நிலக்கரி கிடைக்கக் கூடிய இடங்களாகும்.
3. அலுமினியத்தாது (பாக்சைட்):
1. பாக்சைட்- அலுமினியம் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான தாது ஆகும்.
2. கிழக்குக் கடற்கரையில் ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு பாக்சைட் தாது செறிந்து காணப்படுகிறது.
4.மைக்கா:
1. மைகா ஒரு வெப்பத்தை தடுக்கும் தனிமம் மற்றும் அரிதிற் மின் கடத்தி ஆகும்.
2. இந்தியா மொத்த வியாபாரத்தில் 60% பாங்குடன் மைக்கா தான் உற்பத்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
3. பெக்மடைட் எனப்படும் மைக்கா வகை ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், மற்றும் ராஜஸ்தானில் கிடைக்கிறது.
5. சுத்திகரிக்கப்படாத எண்ணெய்:
1. இந்தியாவில் அஸ்ஸாம் மற்றும் குஜராத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
2.டிக்பாய், பாடர்பூர், நகர்க்காட்டிகா, காசிம்பூர்,பள்ளியரியா, ரூத்ராபூர், சிவசாகர், மார்ன்.
6.தங்கம்:
1.இந்தியா குறைந்த அளவே தங்க வளம் இருப்பு பெற்று விளங்குகிறது.
2.மூன்று முக்கிய தங்கச் சுரங்க பகுதிகள் உள்ளன.
3. கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் சுரங்கத்திலும், ரெய்சசூரில் ஹட்டி தங்க வயல் சுரங்கத்திலும், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராம்கிரி தங்க வயல் சுரங்கத்திலும் ஓரளவு தங்கம் கிடைக்கிறது.
7. வைரம்:
1. UNECE அறிக்கையின் படி நாடு முழுவதிலும் 4582 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
2. அதிகமாக மத்தியபிரதேசத்தின் பன்னாவிலும், ஆந்திரபிரதேசத்தில் கர்னுல் மாவட்டம் ராமல்ல கோட்டா போன்ற இடங்களிலும் கிருஷ்ணா நதியின் படுகையிலும் கிடைக்கிறது.
3.புதிதாக ராய்பூர் இம்பெர்லி சுரங்கம் ராஜ்பூர் மற்றும் சட்டீஸ்கரிலுள்ள பாஸ்டர் மாவட்டத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4.ஒடிஷாவின் நியுபடா பார்கர் மாவட்டம், மாத்தூர் கிருஷ்ணா பகுதி கர்நாடகாவின் ராய்ச்சூர், குல்பர்ஹா பகுதி மாவட்டத்தில் ரெய்சூர் ஆகிய சில வைரம் கிடைக்கக்கூடிய மற்ற இடங்களாகும்.
41.
42.

43.
1. ஒரு நிறுவனம் கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை எனில், அந்நிறுவனத்தின் AR மற்றும் MR மாறாமல் அதாவது AR=MR ஆக இருக்கும்.
2. ஒரு நிறுவனம், கூடுதலாக விற்கும் பண்டங்களின் விலையில் மாற்றம் இருக்கும் எனில் AR மற்றும் MR வெவ்வேறு அளவுகளாக இருக்கும்.
மாறாத விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. விலையில் மாற்றம் இல்லையினில், மற்றும் வளைகோடுகள் ஒன்றிணைந்து ஒரே கோடாக இருக்கும்.
2. நிறைவுப் போட்டியில் விலையில் மாற்றம் இருக்காது. எனவே AR மற்றும் MR வளைகோடுகள் X-அச்சுக்கு இணையாக ஒரு படுக்கைக் கோடாக இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகு | விலை P | மொத்த வருவாய்(TR) | சராசரி வருவாய்(AR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 5 | 5 | 5 | 5 |
| 2 | 5 | 10 | 5 | 5 |
| 3 | 5 | 15 | 5 | 5 |
| 4 | 5 | 20 | 5 | 5 |
| 5 | 5 | 25 | 5 | 5 |
| 6 | 5 | 30 | 5 | 5 |

மாறும் விலையில் AR மற்றும் MR வளைகோடுகள்:
1. ஒரு நிறுவனம் அதிக பண்டங்களை விற்க வேண்டுமெனில், விலை குறைவாக இருக்க வேண்டும்.
2.விலை குறையும் போது AR மற்றும் MRம் குறைந்து கொண்டே செல்லும்.
3. MR ஆனது ARஐ விட அதிகமாக குறைந்து கொண்டே செல்லும்.
4. MR வளைகோடானது AR வளைகோட்டிற்கு கீழே உள்ளது.
5. கீழ் நோக்கி சரிந்து செல்லும் வருவாய் கோடுகள் நேர்கோடுகளாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
6.சில சமயங்களில் வருவாய் கோடுகள் மையத்தை நோக்கி குவிவு வளைவாகவோ (அ) குழியான வளைவாகவோ இருக்கும்.
| விற்பனை செய்யப்பட்ட அலகுகள் (Q) | விலை (P) | மொத்த வருவாய்(TR) | இறுதிநிலை வருவாய் (MR) |
| 1 | 10 | 10 | 10 |
| 2 | 9 | 18 | 8 |
| 3 | 8 | 24 | 6 |
| 4 | 7 | 28 | 4 |
| 5 | 6 | 30 | 2 |
| 6 | 5 | 30 | 0 |
| 7 | 4 | 28 | -2 |
| 8 | 3 | 24 | -4 |
| 9 | 2 | 18 | -6 |
| 10 | 1 | 10 | -8 |

44.
பொருளியில், நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகிய உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
1. நுகர்வு:
1. மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
2. மனித விருப்பங்களின் இயல்புகளின் அடிப்படையில், நுகர்வோரின் நடத்தை குறைந்துசெல் பயன்பாடு, நுகர்வோரின் உபரி போன்ற பல விதிகள் விளக்கப்பட்டுள்ளன.
2.உற்பத்தி:
1. உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
2. நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு மேலும் உள்ளீடு, வெளியீடுகளுக்கிடையேயான உறவு ஆகியவையாகும்.
3. பரிமாற்றம்:
1. பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
2. உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் நுகர்வோரின் கைகளுக்கு கிடைக்கின்றபோதுதான் பரிமாற்றம் சாத்தியமாகிறது.
4.பகிர்வு:
1. பகிர்வு என்பது உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
2. பகிர்வு என்னும் பகுதி உற்பத்தி காரணிகளின் விலைகள் நிர்ணயிக்கப்படுவதை விளக்குகிறது.
45.
1. சாய்வு m=\({(y-y_1)\over(x-x_1)}\)
2.(y-y1)=m(x-x1) என்பது நேர்கோட்டின் சமன்பாடு
3.3 x 3 உடைய A என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு =|A|=a1(b2c3-b3c2)a2(b1c3-b3c1)+a3(b1c2-b2c3)
4.மாறிலியின் வகையீட்டு கெழு மதிப்பு பூஜ்யமாகும்.
5.xnன் வகையீடு nx(n-1)
6. ed= இறுதிநிலை சார்பு / சராசரிச் சார்பு
7. ed= \({-p\over x}{dx\over dp}\)
8.என்ற சார்பின் தொகையீடு \({x^{n+1}\over n+1}+c\)
9. நுகர்வோர் உபரி \((cs)=[\int^{x0}_{0}f(x)dx]-x_op_o\)
10. உற்பத்தியாளர் உபரி \((ps)=x_op_o \int^{xo}_{o}g(x)dx\)
46.
1.உலக நாடுகளில் இந்தியா ஒரு நிலைத்த பேரளவு பொருளாதார நாடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
2."நிலைத்த உறுதிவாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம்"என்று குறிப்பிடுகிறது.
3.பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2014-2015க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 8% ஆக இருக்கும் என நிர்ணயித்து இருந்தபோதிலும்.உண்மையான வளர்ச்சி அதைவிட சற்று குறைவாக 7.6%ஆக இருந்தது.
4.இதன் மூலம் இந்தியா ஒரு நிலையான பேரளவு பொருளாதாரம் வளர்ச்சியுடையது என நிரூபித்து வருகிறது.
47.
1.அனைத்து பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முதலும், முடிவுமாக செல்வமே என்று கருதப்படவில்லை மாறாக மனித நலத்தை மேம்படுத்த முயல்கிறான்.
2. பொருளியல் சாதாரண மனிதனின் நடத்தையைப் பற்றியதே, அவர்கள் சாதாரண அன்பினால் கட்டுப்பட்டவர்களேயன்றி,உச்ச பட்ச பணம் பெறுவதை நோக்கிச் செல்பவர்கள் அல்லர்.
3. பொருளியல் ஓர் சமூக அறிவியலாகும்.அது சமுதாயத்தில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றிய படிக்கிறது.
48.
1. ஒரே ஒரு உற்பத்திக் காரணியின் அளவு மட்டும் உயர்த்தப்படுகிறது. ஏனைய உற்பத்திக் காரணிகளின் அளவு மாறாமல் இருக்கிறது.
2. மாறும் உற்பத்திக் காரணிகள் ஒரே தன்மையுடையவை.
3. உற்பத்திப் பொருளானது பரும அலகுகளால் அளவிடப்படுகிறது.
4.தொழில்நுட்ப நிலையில் மாற்றம் இல்லை.
5.பொருளின் விலையில் மாற்றம் இல்லை.
49.
(i) ஒரு ஏக்கருக்கான உற்பத்தியை இரண்டு மடங்காகத் தரக்கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தல்
(ii) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை சந்தைப்படுத்த தனியார் துறையின் பங்களிப்பை உறுதி செய்தல்
(iii) பாசன வசதிகளைத் துரிதபடுத்துவதிலும் , நீர் ஆதாரங்களை நிர்வகிப்பதிலும் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
(iv) நதி நீர் இணைப்பின் மூலம் உபரி நீரை பற்றாக் குறையுள்ள பகுதிகளுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும்
50.
(i) உயர்கல்விக்கான மொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு தொடர்ந்து பிற மாநிலங்களைக் காட்டிலும் முதன்மை பெற்று முதலிடத்தில் உள்ளது.
(ii) தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை வீதமான (GER) 46.9% அனைத்து மாநிலங்களின் தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.
(iii) தமிழ்நாட்டில் 59 பல்கலைக் கழகங்களும், 40 மருத்துவ கல்லூரிகளும், 517 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.
(iv) 2260 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 447 பல்தொழில்நுட்ப கல்லூரிகளும், 20 பல் மருத்துவக்கல்லுரிகளும் உள்ளது.
(v) ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 4 இலட்சம் பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்பம் பயில்கின்ற மாணவர்கள் வெளியேறுகின்றனர்.
51.
கீன்ஸ் கூற்றுப்படி, நீர்மை விருப்பத்திற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அவை,
பரிமாற்ற நோக்கம்:
(i) மக்கள் அன்றாட பரிவர்த்தனைக்காக பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதன் விருப்பமே பரிமாற்ற நோக்கமாகும்.
(ii) இந்த நோக்கத்திற்காக பணம் சேமிக்கும் அளவு வருமான அளவைச் சார்ந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நோக்கம்:
(i) நோய்வாய்படுதல், விபத்து, தீப்பற்றுதல், திருட்டு போன்ற எதிர்பாராத செலவுகளை சந்திப்பதற்காக மக்கள் பணத்தை ரொக்கமாக வைத்திருப்பதற்கான இந்த நோக்கம் முன்னெச்சரிக்கை நோக்கம் எனப்படும்.
ஊக நோக்கம்:
(i) முதலீட்டு சந்தையில் பங்குகள் மற்றும் பத்திரங்களின் எதிர்கால விலை மாற்றத்திற்கேற்ப அதனுடைய நன்மைகளைப் பெற பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்க தேவையான பணத்தை மக்கள் ரொக்கமாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதுவே ஊக நோக்கமாகும்.
(ii) இந்த நோக்கத்திற்காக கையில் சேமிப்பாக வைத்திருக்கும் தொகையின் அளவு வட்டி விகிதத்தைப் பொறுத்து அமையும்.
(iv) (எ.கா) (Ms=450-100i) இங்கு நீர்மை விருப்பத்திற்கும் வட்டி விகிதத்திற்கும் எதிர்மறையான உறவாகும்.
52.
53.
(i) அரசின் நாட்டுடைமையாக்குதலின், அரசு முதலீடுகள் குறைப்பு.
(ii) இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை எளிதாகத் துவங்க இயலாத அளவுக்கட்டுப்பாடுகள் இருந்தன.
(iii) அரசு உரிமைக்கொள்கைகளைச் சற்றே தளர்த்துவது அவசியமாக இருந்தது.
(iv) பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறைக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கப்படவில்லை என்று கருதப்பட்டதால் தனியார்மயமாதல் அவசியமானது.
54.
| வ.எண் | உண்மைச் செலவு | பணச் செலவு |
| 1. | உண்மைச் செலவு என்பது அனைத்து காரணிகளின் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும், சங்கடங்கள், முயற்சிகள் மற்றும் தியாகங்களுக்காக அக்காரணிகளின் உடமையாளருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையாகும். | உற்பத்தி செலவுகள் பணத்தால் குறிப்பிட்டால் அது பணச் செலவு. |
| 2. | நிலத்தை பயன்படுத்துவதால் நிலச்சுவாந்தார் சந்திக்கும் பல்வேறு முயற்சிகளும், மற்றும் தியாகங்களும், முதலீட்டாளர் தங்கள் நுகர்வு மூலம் சேமித்தவற்றை முதலீடு செய்வதும், உழைப்பாளர் தங்கள், ஒய்வு நேரத்தை உற்பத்தியில் ஈடுபடுவதும் உண்மை செலவில் அடங்கும். | கச்சாப் பொருள்களுக்கான செலவுகள், உழைப்பதற்கான கூலி மற்றும் சம்பளம் கட்டிடங்களுக்கான வாடகை, மூலதனத்திற்கான வட்டி, எரிபொருள் மற்றும் மின் சக்திக்கான செலவு போக்குவரத்து செலவு மற்றும் உற்பத்தி சார்ந்த பிற செலவுகள் இதில் அடங்கும். |
| 3. | ஆடம் ஸ்மித் கருத்துப்படி உழைப்பாளர்களின் துன்பங்களும், தியாகங்களுமே உண்மையான செலவு என்று கூறுகிறார். | முதன்மைச் செலவு, நேரடிச் செலவு, பெயரளவுச் செலவு, கணக்கியல் செலவு, வெளிப்படையான செலவு, வெளிச் செல்லும் செலவு ஆகியவை பணச் செலவில் அடங்கும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards