11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
11th Std First Revision Test
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
அல்போன்ஸோ டி அல்புகர்க்
நீனோ டா குன்கா
ஆன்டோனியோ டி நாரான்கா
2.
பாதுஷா நாமா என்பது ________ ன் வாழ்க்கை வரலாறாகும்.
பாபர்
ஹீமாயூன்
ஷாஜகான்
அக்பர்
3.
அக்பரின் அரசவையில் " ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்" என்ற அறியப்பட்டவர் _________
சூர்தாஸ்
துக்காராம்
இராமானந்தர்
மீராபாய்
4.
கங்கை பகுதிகள் இருந்து தவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத் தைலம் ______
மிள்கு தைலம்
விளாமிச்சை தைலம்
தாளிச பத்ரி தைலம்
யூகலிப்டஸ் தைலம்
5.
_____ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.
முதலாம் தேவராயர்
இரண்டாம் தேவராயர்
கிருஷ்ணதேவராயர்
வீர நரசிம்மர்
6.
கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ________________
வசிஷ்டபுத்ர புலுமாவி
நாகபனா
கடம்பர்
யக்னஸ்ரீ சதகர்னி
7.
நந்தவம்சத்துக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள்______________.
மெளரியர்கள்
சிசுநாகர்கள்
ஹர்யாங்கர்கள்
குப்தர்கள்
8.
மகாவீரர் சமண மதத்தின் ________ வது தீர்த்தங்கரர்.
21
22
23
24
9.
________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.
குவார்ட் சைட்
கிரிஸ்டல்
ரோரிசெர்ட்
ஜாஸ்பார்
10.
குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன
ரோமானிய
கிரேக்க
குப்த
சாதவாகன
11.
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க
| 1. ராமச்சந்திரா | 1. காகதீய |
| 2. கான்-இ-ஜஹான் | 2. பத்மாவத் |
| 3. மாலிக் முஹமத் ஜெய்சி | 3. மான் சிங் |
| 4. மன் மந்திர் | 4. தேவகிரி |
2, 1, 4, 3
1, 2, 3, 4
4, 1, 2, 3
3, 1, 2, 4
12.
_____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.
மூன்றான்றாம் குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
முதலாம் இராஜராஜன்
பராந்தகன்
13.
காம்போஜம் என்பது நவீன ………………
அஸ்லாம்
சுமத்ரா
ஆனம்
கம்போடியா
14.
15.
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?
உதயகிரி குகை (ஒடிசா )
அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )
பாக் (மத்தியப் பிரதேசம்)
16.
17.
_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
18.
பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.
பெளத்தம்
சமணம்
ஆசீவகம்
வேதம்
19.
கீழ்காணும் இணைகளை கவனிக்கவும்.
| (i) சேனானி | படைத்தளபதி |
| (ii) கிராமணி | கிராமத்தலைவர் |
| (iii) பாலி | தன்னார்வத்தால் கொடுக்கப்பட்டது |
| (iv) புரோகிதர் | ஆளுநர் |
மேற்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i
ii
iii
iv
20.
மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்
கீழ்ப்பழங்கற்காலம்
இடைப்பழங்கற்காலம்
மேல்பழங்கற்காலம்
புதிய கற்காலம்
21.
“கார்டஸ் (Cartaz) முறை ” என்றால் என்ன ?
22.
முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.
23.
பேசின் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
24.
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
25.
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.
26.
இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்
27.
அனைவரையும் உள்ளடக்கிய மதமாக வைணவத்தை மாற்றிய ராமானுஜரின் பங்களிப்பைக் குறிப்பிடுக.
28.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின் மன்னரானார்?
29.
வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
30.
பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
31.
பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
32.
33.
34.
ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை எவ்வாறு முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?
35.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
36.
சிவாஜியின் இராணுவ அமைப்பு அவரது வெற்றிக்கு எவ்வாறு வழி வகுத்தது?
37.
கோயில் -ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக
38.
மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.
39.
கஜினி மாமுதுவையும் கோரி முகமதுவையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக
40.
பெளத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
41.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
42.
43.
'காஷ்மீர் பகுதியின் புதிய கற்காலப் பண்பாடு ஹரப்பா நாகரிகத்தின் காலத்தைச் சேர்ந்தது'.கூற்றை நிறுவுக.
44.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
45.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
46.
ஹரப்பா பண்பாட்டின் அரசியல் முறைகளை கூறுக.
47.
ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே கையெழுத்தான மதராஸ் உடன்படிக்கைக்கான சூழ்நிலை களை விளக்குக
48.
வைகுண்ட சாமிகள்
49.
தாராஷூகோ.
50.
சார்லஸ் உட் அறிக்கை
51.
இராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?
52.
”இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது.” எவ்வாறு?
53.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
54.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
1.
(a)
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
2.
(c)
ஷாஜகான்
3.
(a)
சூர்தாஸ்
4.
(b)
விளாமிச்சை தைலம்
5.
(b)
இரண்டாம் தேவராயர்
6.
(a)
வசிஷ்டபுத்ர புலுமாவி
7.
(b)
சிசுநாகர்கள்
8.
(d)
24
9.
(c)
ரோரிசெர்ட்
10.
(a)
ரோமானிய
11.
(d)
3, 1, 2, 4
12.
(b)
முதலாம் இராஜேந்திரன்
13.
(d)
கம்போடியா
14.
(c)
15.
(c)
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )
16.
(c)
17.
(a)
அர்த்தசாஸ்திரம்
18.
(b)
சமணம்
19.
(d)
iv
20.
(c)
மேல்பழங்கற்காலம்
21.
1. "கார்ட்ஸ்" என்பது போர்த்துகீசியர்கள் வணிகத்திற்கு வழங்கும் பாதுகாப்பு முறை ஆகும். அவர்கள் வழங்கும் பாதுகாப்பை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையெனில் வன்முறை மூலம் வணிகத்திற்கு இடையூறு செய்யப் போவதாக பயமுறுத்துவர்.
2. கார்ட்ஸ் முறையில் போர்த்துகீசியர் வணிகரிடமிருந்து பணம் பறித்தனர். கடற்கொள்ளையர்களுக்கு எதிராக தாங்கள் பாதுகாப்பு வழங்குவதாக கூறிக்கொண்டனர்.
22.
1. தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்.
2. அது இந்தியப் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும்.
3. தலைவாயில், தோட்டம், மசூதி, கல்லறைமாடம் (மினார் என்றழைக்கப்படும் நான்கு கோபுரங்கள்)ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது.
4. ஏனைய கட்டடங்கள் 1643 இல் முடிவடைந்தன. அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1647 வரை தொடர்ந்து நடைபெற்றன.
23.
1. 1802-இல் பேசின் ஒப்பந்தம் கையெழுத்தானது.
2. 2.6 மில்லியன் வருமானம் ஈட்டக் கூடிய நிலப் பகுதி ஆங்கிலேயருக்கு கொடுக்கப்பட உண்டும் என்பதே இதில் முக்கியமானது.
3. முன்னணியிலிருந்த மராத்திய அரசுகள் பல இந்த மோசமான ஒப்பந்தத்தை ஒதுக்கிதள்ளின.
24.
(i) கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல செப்புப் பட்டயங்கள் மேலதிகச் செய்திகளை வழங்குகின்றன.
(ii) கோவில்கள், அரண்மணைகள், கோட்டைகள், மசூதிகள் ஆகியவை வளமான தொல்லியல் சான்றுகளாக உள்ளன.
(iii) நாணயச் சன்றுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன.
25.
i) வணிகம் பெருமளவு வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினார்.
ii) கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
iii) வெளிநாடுகளுடன் தரை வழியாகவும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
iv) இந்த வளர்ச்சியானது விரிவடைந்து வரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
v) எனவே வணிகம் விரிவடைந்து பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
26.
(i) ராப்ஸாரங்கி போன்ற இசைக்கருவிகளை இசுலாமியர் கொண்டு வந்தனர்.
(ii) இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார்.
(iii) சுஸ்பி துறவி பிர் போதன் இக்காலத்தில் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார்.
(iv) ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக் தர்பன் என்ற இந்திய இந்திய சமஸ்கிருத நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்தனர்.
27.
(i) ஸ்ரீராமானுஜர், திருரங்கம் மடத்தின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோவிலையும், மடத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
(ii) ராமானுஜர் கோவில் சடங்குகளை மாற்றி அமைத்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர், சீர்திருத்தவாதி.
(iii) வைணவத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக்கொண்டார்.
(iv) ராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடம் பக்தி கோட்பாட்டை பரப்புவதில் ஆர்வம் கொண்டார்.
(v) கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரையும் ஆண்டிற்கு ஒரு முறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்.
இவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய மதமாகி வைணவத்தை மாற்றினார்.
28.
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்:
i) கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்
ii) தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரைகளின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
iii) ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தனேஸ்வரமும்ம் கன்னோசியும் ஒன்றாக இணைந்தன.
iv) பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரை கன்னோசிக்கு இடம் மாட்டிக்கொண்டார்.
29.
(i) 'வித்' என்ற சொல்லிலிருந்து 'வேதம் என்ற சொல் பிறந்தது.
(ii) வேதங்கள் நான்கு -ரிக், யஜீர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
(iii) இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் வேத கால இலக்கியங்களாகும்.
30.
வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது. இது மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன
1. கீழ்ப்பழங்கற்காலம் 2. இடைப்பழங்கற்காலம் 3. மேல் பழங்கற்காலம்
31.
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பெளத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பெளத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பெளத்த சங்கம்:
தலைமை தாங்கியவர் உபாலி. இடம். ராஜகிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும். ஆனாந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பெளத்த சங்கம்:
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பெளத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும் இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பெளத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோடரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பெளத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பெளத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
32.
33.
34.
1. ஒளரங்கசீப்பின் தக்காணக் கொள்கையானது வளர்ந்து வந்த மரத்தியரின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது.
2. ஷியா பிரிவைச் சேர்ந்த தக்காணச் சுல்தானியங்களானக் கோல்கொண்டா, புஜாப்பூர் ஆகியவற்றின் கிளர்ச்சிப் போக்கிற்கு அணை போடுவது.
3. தக்காணத்தைப் புகலிடமாகக் கொண்ட தனது மகன் இளவரசர் அக்பரின் கிளர்ச்சிகளை ஒடுக்குவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருந்தது.
4. ஒளரங்கசீப் 1682 இல் தக்காணம் வந்தார்.
5. 1707 இல் தனது மரணம் வரை தக்காணத்திலேயே தங்கியிருந்தார்.
6. பீஜப்பூரின் அடில்சாஹி வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் அடில்ஷா ஒளரங்கசீப்பின் பல படையெடுப்புகளை எதிர்த்து நின்றார்.
7. ஒளரங்கசீப் 1685 இல் தனது மகன் அசாம் ஷாவை அனுப்பி வைத்ததில் பயனேதுமில்லை.
8. பின்னர் மற்றொரு மகன் ஷா ஆலமை பீஜப்பூரைக் கைப்பற்ற அனுப்பி வைத்தார்.
9. ஷியா முஸ்லீமான பீஜப்பூர் சுல்தான் திறமையுடன் கோட்டையைப் பாதுகாத்தார்.ஆனால் ஒளரங்கசீப்பே நேரடியாகப் போர்க்களத்தில் இறங்கி இறுதிவரை போரிடும்படி தனது படைக்களுக்கு உற்சாகம் அளித்ததால் பீஜப்பூர் சுல்தான் தோல்வியடைந்தார் .
10. கோல்கொண்டா சுல்தான் அப்துல் ஹசன் 1687 இல் தோக்கடிக்கப்பட்டு கோல்கொண்டா கைப்பற்றப்பட்டது.
11. இவ்வாறாக ஒளரங்கசீப் தனது கடைசி காலகட்டங்கள் முழுவதையும் தக்கனத்தில் செலவிட்டதால் முகலாயரின் அழிவை அவருக்கு பின் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
35.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
36.
1. சிவாஜியின் நிலையான இராணுவத்தைக் கொண்டிருந்தார். ஜாகிர் வழங்குவதையும் மரபு வழியாகச் செய்யப்படும் நியமனங்களையும் அவர் ஊக்கப்படுத்தவில்லை. படை வீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது.
2.காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை , ஆயுதப்படை என இராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
3. கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரிய போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
4.ரெஜிமண்டுகள், பிரிகேடுகள் எனக் காலாப்படை பிரிக்கப்பட்டது. ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படைப்பிரிவுக்கு நாயக் (கார்ப்பரல்) தலைமை வகித்தார்.
5. ஒவ்வொரு படைப்பிரிவிலும் 25 குதிரைப் படை வீரர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையான தகுதியில் ஹவில்தார் தலைமையின் கீழ் செயல்பட்டனர். ஒரு ஜமால்தாரின் கீழ் ஐந்து ஹவில்தார் செயல்பட்டனர். பத்து ஜமால்தார்களின் தலைவராக ஒரு ஹஜாரி திகழ்ந்தார்.
6. சாரிநெளத் குதிரைப்படையின் தலைமைத் தளபதி ஆவார்.
7.ஒவ்வொரு குதிரைப் படையும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் பார்கிர்கள் என்றும், தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.
8.இது தவிர நீர் கொண்டு செல்லலும் குதிரைப் பரட்டை வீரர்களும், லாடம் கட்டுபவர்களும் இருந்தனர்.
37.
சோழர் காலத்தில் கோயில்கள் சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு நடவடிக்கைகளுக்கான மையங்களாகக் கோயில்கள் விளங்கின.
கோயில் நிர்வாகம்:
கோயிராமர் -கோயில் கணக்கு, தேவகன்னி, ஸ்ரீவைஷ்ணவர், கண்டேசர் மற்றும் பிறர் முதல் நிலை கோயில் அதிகாரிகள் ஆவார். கோயில் கணக்கு என்பவரால் அதன் வரவு, செலவுகள் நிர்வகிக்கப்பட்டது.
சமூகப்பணி:
கோயில்கள் சமூகத்திருவிழாக் கூடமாக மாறியது. சித்திரைத்திருவிழா, கார்த்திகை, ஐப்பசி விழா ஆகியவை கொண்டாடப்பட்டண. திருவிழாக்கள் இராஜ இராஜனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இராஜ இராஜ நாடகம் தஞ்சாவூர் கோயிலில் நடத்தப்பட்டது.
கல்விப்பணி:
கோயில்களில் பாடப்பட்ட வழிப்பாடல்கள் வாய்மொழி கல்வியை வளர்த்ததாக கூறப்படுகிறது.
வேதம், இசை, கலைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்தால் கோயில் ஒரு கல்வி நிறுவனமாகவும் விளங்கியது.
மக்களின் தொண்டு:
மேய்ச்சலை தொழிலாகக் கொண்டவர்கள் அணையா விளக்குக்கு கால்நடைகளை தானமாக வழங்கினார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் எண்ணெய் வழங்கி கோயில் அன்றாட நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்.
எண்ணெய் ஆட்டுபவர்கள் சங்கபாடியவர் என அழைக்கப்பட்டனர். பஞ்ச காலங்களில் கோயில்களில் தங்களை தாங்களே அடிமைகளாக உற்றுக்கொண்டனர்.
வங்கிகள்:
கடன் வழங்குதல், அறக்கொடைகளையும், நன் கொடிகளையும் வழங்குதல், பெறுதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுவதால் கோயில்கள் வங்கிகள் போன்று செயல்பட்டன.
மேற்கண்ட செய்திகளின் மூலம் கோவில்கள் வழிபாட்டுத்தலமாக மட்டும் அல்லாமல் சமூக நிறுவனமாகவும் விளங்கியது என்பது தெளிவாகிறது.
38.
ரோம் ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முக்கியமான வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான வாணிபத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பொ.ஆ.மு கடைசி நூற்றாண்டின் முடிவில் கிரேக்க அரசுகளை அகற்றி விட்டு மத்திய தரைக்கடல் உலகின் வல்லரசாக ரோம் எழுந்தது.
மேலும் பொ.ஆ.மு.27ல் பேரரசர் அகஸ்டின் கீழ் ஒரு பேரரசாக ரோம் உருவெடுத்தது.
வெற்றியும் செல்வக்குவிப்பும்:
ஐரோப்பாவிலும் வாடஆப்பிரிக்காவிலும் பெட்ரா வெற்றிகள் மூலம் குவிந்திருந்த மிகப் பெரிய செல்வங்களை ரோம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
இச்செல்வங்கள் ரோமின் புகழை உலகறியச் செய்தன அன்றைய காலகட்டத்தில் ரோம் தான் உலகிலேயே மிகப் பெரியதும் செல்வா செழிப்பு மிக்க நகரமாகும்.
குறிப்பாக தமிழ்நாட்டின் நறுமணப் பொருள்கள் மற்றும் அணிவகைகளின் தேவை ரோமுக்கு அவசியமாயிற்று. இந்த அவசியம் ஒரு பெரும் வணிக விரிவாக்கத்தை ஏற்படுத்தியது.
ஹிப்பாலஸ் காலக்கணிப்பு:
பொ.ஆ.முதலாம் நூற்றாண்டில் எகிப்தின் கடலோடி "ஹிப்பாலஸ்" என்பவர் அரபிக் கடலில் வீசும் பருவக்காற்றுகளின் காலத்தை கணித்தார். இந்தக் கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் மத்திய தரைக்கடல் வாணிபத்திற்கு உதவியது.
இதுவரை அரேபியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய தரைக்கடல் வாணிபம் மெல்ல மெல்ல ரோமாபுரியின் கைகளுக்கு மாறின.
மேலும் இதுவரை அரேபியருக்கு ஏகபோகமாய் இருந்த இரகசியங்கள் வெளியுலகத்திற்கு வெட்ட வெளிச்சமாயின.
நேரடிக் கடல் வழி:
ரோமானிய கப்பல்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை நோக்கி நேரடியாக பயணிக்க தொடங்கின. பயம் நிறைந்த கடல் வழிகளையும் தரை வழி வாணிபத்தையும் ரோமானியர்கள் தவிர்த்தனர்.
இதன்மூலம் அவர்களுக்கு பயணப்பாதுகாப்பு எட்டியது. இந்தியாவிற்கான நேரடி கடல் வழி திறப்பின் இறுதி விளைவாக இந்தியாவிற்கு வரும் ரோமானிய கப்பல்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஆணுக்கு 20 கப்பல்கள் என்பதிலிருந்து ஏறக்குறைய அன்றாடம் ஓரு கப்பல் என்று அதிகரித்தது.
இவ்வாறு மத்தியத் தரைக்கடல் உலகின் தனிப்பெரும் ஆதியாக ரோமானிய அரசு உருவெடுத்தது.
39.
| கஜினி முகமது | கோரி முகமது |
|---|---|
| 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கஜினியின் ஆட்சியாளர் | 1. ஆப்கானிஸ்தானிலுள்ள கோரியின் ஆட்சியாளர் |
| 2. கஜினியின் படையெடுப்புகள் கொள்ளை அடிக்கும் நோக்கம் கொண்டவை | 2. கோரிமுகமது தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். |
| 3. படைவீரர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள் | 3. அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| 4. சிறந்த போர்திறமை பெற்றவர். இந்தியாவில் போர் தொடுத்த 17 முறையும் வென்றார். | 4. குஜராத் போர், முதலாம் தரைன் போர் பயங்கர தோல்வியை சந்தித்தது. |
| 5. போரில் ஈடுபட்ட வீரர்கள் பிற மதத்தினரை வெட்டிக் கொல்வதன் மூலம் தனது மதப்பற்றினை வெளிப்படுத்தினார். | 5. ஜிகாத் என்னும் மதத்தின் பெயரால் போர் நடத்தினார். |
| 6. காவல் அரண்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. | 6. நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். |
| 7. படைவீரர்களுக்கு பயிற்சி அளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. | 7. ஏற்கனவே பயிற்சி பெற்ற படை வீரர்களாக இருந்தனர். |
| 8. இவரது கால முக்கிய படையெடுப்பு 1025ல் சோம்நாத் நகர கோயில்கள் படையெடுப்பு ஆகும். | 8. இவரது கால முக்கிய படையெடுப்புகள் 1வது, 2வது தரைன் படையெடுப்புகளாகும். |
| 9. இந்துக் கோயில்களைக் கொள்ளை அடித்தனர். | 9. இவர் முக்கிய நகரங்களையும், கோட்டைகளையும் தாக்கினர். |
| 10. கொள்ளை அடிப்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. புதிய அரசை உருவாக்க விரும்பவில்லை. | 10. கோரிமுகமது தான் வென்ற பகுதிகளை ஒருங்கிணைந்து புதிய அரசை உருவாக்க எண்ணினார். தனது விசுவாசமிக்க அடிமை குத்புதீன் ஐபக் தலைமையில் புதிய ஆட்சியினை உருவாக்கினார். |
40.
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர் அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பொ.ஆ.770-815)
தர்மபாலரும் பௌத்தமும்:
பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்
பீகாரில் பகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடலாயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த மையமாக உருவானது
சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் - ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடலாயத்தையும் காட்டினார்
ஹரிஷபத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.
தேவபாலரும் பௌத்தமும்
பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்
சுவரணதீப் அரசன் பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடலாயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
இவரது ஆட்சியில் நாளாந்தா பௌத்தமதக் கொள்கையை போதிக்கும் முதன்மையான மையமாக திகழ்ந்தது.
பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானபிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்
பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்த மடலாயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.
41.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
42.
43.
1. காஷ்மீர் பகுதியில் நிலவிய புதிய கற்காலப் பண்பாடும் ஹரப்பா நாகரீகமும் ஒரே சம காலத்தவையாகும்.
2. இக்கலக்கட்டத்தைச் சேர்ந்த முக்கியமான ஆய்விடமான பர்சாஹோம் சான்றாக உள்ளது.
3. முட்டை வடிவமுள்ள குழி வீடுகளில் வசித்தனர். புதிய கற்காலத்தில் காஷ்மீரில் வளர்ப்பு விலங்குகளாகச் செம்மறியும் வெள்ளாடும் இருந்தன.
4. பர்ஷாஹோமைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மக்களோடு வணிகத்தில் ஈடுபட்டனர்.
5. கோதுமை, பார்லி, பட்டாணி, பருப்பு ஆகியவற்றுக்கான விதைகள் அகழ்வாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்டன.
6. பருப்பு வகை பயன்பாடு அவர்களுக்கு மத்திய ஆசியாவுடன் இருந்த தொடர்பை கூறுகிறது. ஹரப்பா நாகரிகத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கருத முடிகிறது.
44.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
45.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
46.
1. மட்பாண்டங்கள், முத்திரைகள், எடைக்கற்கள், செங்கற்கள், ஆகியவற்றில் காணப்படும் சீரான தண்மை அரசியல் முறை செயல்பட்டதை உணர்த்துகிறது.
2. அதிகாரம் படைத்த ஆட்சி அமைப்பில் ஹரப்பா மற்றும் மொஹஞ்சாதாரோ நகர அரசுகளுக்கான ஆட்சி அமைப்பின் கீழ் இயங்கி இருக்கலாம்.
3. பண்பாட்டுப் பொருள்களிலும் அளவீடுகளிலும் காணப்படும் சீரான தன்மை ஹரப்பா சமூகம் உறுதியான மைய நிர்வாகத்தின் கீழ் இயங்கி இருக்க வேண்டும். என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
47.
ஹைதர் அலி தஞ்சாவூருக்கும், அங்கிருந்து கடலூருக்கும் படையெடுத்து முன்னேறிச் சென்றார்.
ஆங்கிலேயரின் மீதான இந்தத் தாக்குதலை ஹைதர் அலி நிறுத்த விரும்பவில்லை.
இருந்தபோதிலும், மராத்தியர் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் காரணமாக ஹைதர் ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார்.
இதுவே மதராஸ் (சென்னை) உடன்படிக்கைக்கான சூழ்நிலையாகும்.
48.
(i) கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் (சாமிதோப்பு) எனும் சிறிய ஊரில் 1809-ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். முத்துக்குட்டி எனும் இயற்பெயர் கொண்டவர்.
(ii) திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களை கற்றார்.
(iii) தனது போதனைகளில் சாதிமுறையையும், அதிக வரி வசூல் முறையையும் கண்டித்தார்.
(iv) ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகவும் பிரபலமான அவரை 'ஐயா வழி' என்ற நடைமுறையில் மக்கள் பின்பற்றினார்.
(v) சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளை இணைத்து சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
49.
1. தாராஷுகோ ஷாஜகானின் மூத்த மகன் ஆவார்.
2. தில்லி அரியணைக்கான வாரிசுரிமைப் போரில் ஒளரங்கசீப்பிடம் தோற்றுப்போன தாராஷுகோ தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டார்.
3. பல்வேறு பண்பாடுகளை உரையாடலுக்கு உட்படுத்திய அவர் இந்து மதத்திற்கும், இஸ்லாத்துக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதை கண்டறிந்தார்.
4. சம்ஸ்கிருத மொழியிலமைந்த உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
50.
(i) சார்லஸ் உட்டின் கல்வி அறிக்கை 1854 இல் ஆரம்ப கல்வி முதல் உயர்நிலைப் பள்ளியையும் கல்லூரி படிப்பையும் உள்ளடக்கிய ஒருவிரிவான வரைவாகும்.
(ii) பொதுக்கல்வி துறை துவங்கப்பட்டு மூன்று மாகாண தலைநகரங்களிலும் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
(iii) இதன் தொடர்ச்சியாக 1857 இல் சென்னை பல்கலைக்கழகமும் , பம்பாய் , கல்கத்தா பல்கலைக்கழகமும் தோற்றுவிக்கப்பட்டன.
(iv) டல்ஹெள சி தாய் மொழி கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தார்.
51.
(i) இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீ விஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றார்.
(ii) இது தென்கிழக்கு நாடுகளில் செழித்து வளர்ந்த, கடற்படை கொண்ட ஒரு பகுதியாகும்.
(iii) இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) வும் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டன.
எனவே இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டார்.
52.
i) சங்கத் பாடல்களின் படி முசிறி நகரம் இரண்டு வணிகச் சுற்றுகள் மையமாக இருந்துள்ளது.
ii) நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றிவந்த படகுகள் திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன.
iii) இது அடிப்படையான நுகரவு பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதை சுட்டுகிறது.
iv) அதே நேரத்தில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்கு பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
53.
i) அலெக்ஸ்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
ii) மேற்குலகிற்காக வணிகப் பெரு வலிகள் திறக்கப்பட்டன.
iii) இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்..
iv) இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
v) மெளரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
vi)பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
54.
(i) சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
(ii) விஜயபத்திரிக்கா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
(iii) அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
(iv) அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
(v) கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
(vi) ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards