11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
11th Full Test
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
அல்போன்ஸோ டி அல்புகர்க்
நீனோ டா குன்கா
ஆன்டோனியோ டி நாரான்கா
2.
அக்பரது நிதி நிர்வாகம் ______ நிர்வாக முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டது.
பாபர்
ஹீமாயூன்
ஷெர்ஷா
இப்ராஹிம் லோடி
3.
இராமானந்தரின் சீடர்______
சைதன்யர்
ரவிதாஸ்
குருநானக்
கபீர்
4.
கங்கை பகுதிகள் இருந்து தவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத் தைலம் ______
மிள்கு தைலம்
விளாமிச்சை தைலம்
தாளிச பத்ரி தைலம்
யூகலிப்டஸ் தைலம்
5.
ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக _____ இடம் பணி செய்தனர்.
காகதியர்
ஹொய்சாளர்
பீஜப்பூர் சுல்தான்
யாதவர்
6.
பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________
முசிறி
தொண்டி
புகார்
கொற்கை
7.
அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.
ஜான் மார்ஷல்
கபிஷா
மித்ரா
பாணினி
8.
கெளதமபுத்தரை சந்தித்த பேரரசர்
அசோகர்
அஜாதா சத்ரு
சந்திரகுப்தர்
பிந்துசாரர்
9.
ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.
மாடு
நாய்
குதிரை
செம்மறி ஆடு
10.
11.
8ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் ________ ஆவார்.
ஹஜ்ஜஜ்
முகமது-பின்-காஸிம்
ஜெய சிம்ஹ
தாகிர்
12.
முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது
நாட்டார்
மாநகரம்
நகரத்தார்
ஊரார்
13.
தேர்ந்தெடுத்துப் பொருத்துக.
| (1) சிம்மவிஷ்ணு | - சாளுக்கியா |
| (2) முதலாம் ஜெயசிம்மன் | - ராஷ்ட்டிரகூடர் |
| (3) முதலாம் ஆதித்தன் | - கப்பல் தளம் |
| (4) மாமல்லபுரம் | - சோழஅரசன் |
4, 3, 1, 2
4, 1, 2, 3
2, 1, 4, 3
4, 3, 2, 1
14.
15.
_______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்ரீகுப்தர்
16.
_____________ராஜசூய யாகத்தை நடத்தினார்
பெருநற்கிள்ளி
முதுகுடுமிப் பெருவழுதி
சிமுகா
அதியமான்
17.
_____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.
அர்த்தசாஸ்திரம்
இண்டிகா
ராஜதரங்கிணி
முத்ரராட்சசம்
18.
____________ வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.
இரும்பு
வெண்கலம்
செம்பு
பித்தளை
19.
மேல் கங்கைச்சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருபாஞ்சாலம்
கங்கைச்சமவெளி
சிந்துவெளி
விதேகா
20.
வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
செம்புக்காலம்
இரும்புக்காலம்
21.
“வணிக நிறுவனம்” (factory) என்றால் என்ன ? 16 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஐரோப்பிய வணிக நிறுவனங்கள் யாவை?
22.
முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவமாகக் கருதப்படுவது எது? அதன் வடிவமைப்பை விவரிக்கவும்.
23.
சிறு குறிப்பு வரை க. அ) செளத் ஆ) சர்தேஷ்முகி
24.
விஜயநகரைப் பற்றி அறிய உதவும் தொல்லியல் சான்றுகள் பற்றி எழுதுக.
25.
பின்வருவன குறித்து ஒரு பட்டியலைத் தயாரிக்கவும்.
அ) இந்தியாவிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
ஆ) ரோமிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்கள்
26.
துருக்கியப் படையெடுப்பின்போது வட இந்தியாவில் ஆட்சியிலிருந்த ரஜபுத்திர வம்சாவளிகள்
27.
சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட இரண்டு முக்கியமான இலக்கியங்களைக் குறிப்பிடுக.
28.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
29.
வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
30.
சிந்து நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கூறுக.
31.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
32.
1806 ஆண்டின் வேலூர் புரட்சிக்கா ன காரணங்களையும் போக்கினையும் விவரிக்கவும்
33.
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் வணிகம் செய்யும் உரிமையை எவ்வா று நிலை நாட்டியது?
34.
முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
35.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
36.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
37.
பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
(1) ஊரார் (2) சபையார் (3) நகரத்தார் (4) நாட்டார்
38.
பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.
39.
இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் திருப்புமுனையாக அமைந்தது எவ்வாறு?
40.
ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி
41.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
42.
சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
43.
44.
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.
45.
தமிழ் செவ்வியல் இலக்கியம் கூறு.
46.
புதிய கற்கால புரட்சி - வரையறு:
47.
1801ம் ஆண்டு கிளர்ச்சி பற்றி எழுதுக.
48.
வைகுண்ட சாமிகள்
49.
“வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹுமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து
இறந்தார்” – விவரிக்கவும்.
50.
இரட்டையாட்சி முறை
51.
இராஜேந்திர சோழன் ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?
52.
”முற்பட்ட கால ரோமாமானிய நாணயங்கள் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிகம் கிடைக்கின்றன.” ஏன்?
53.
கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக
54.
புகழ்பெற்ற சைவ மூவர்கள்.
1.
(a)
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
2.
(c)
ஷெர்ஷா
3.
(d)
கபீர்
4.
(b)
விளாமிச்சை தைலம்
5.
(b)
ஹொய்சாளர்
6.
(d)
கொற்கை
7.
(d)
பாணினி
8.
(b)
அஜாதா சத்ரு
9.
(c)
குதிரை
10.
(a)
11.
(d)
தாகிர்
12.
(b)
மாநகரம்
13.
(c)
2, 1, 4, 3
14.
(c)
15.
(b)
சமுத்திரகுப்தர்
16.
(a)
பெருநற்கிள்ளி
17.
(a)
அர்த்தசாஸ்திரம்
18.
(a)
இரும்பு
19.
(a)
குருபாஞ்சாலம்
20.
(a)
பழங் கற்காலம்
21.
1. வணிக நிறுவனம் (factory) என்பது அயல்நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக, வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடமாகும்.
ஐரோப்பிய வணிக நிறுவனங்கள்:
1. போர்த்துகீசிய கிழக்கிந்தியக் கம்பெனி.
2. டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
3. பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி
4. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி
5. டேனியக் கிழக்கிந்தியக் கம்பெனி.
22.
1. தாஜ்மஹால் முகலாயக் கட்டடக் கலையின் சிறப்புமிக்க வடிவமாகும்.
2. அது இந்தியப் பாரசீக இஸ்லாமியக் கட்டடக் கலைகளின் கூட்டுக் கலவையாகும்.
3. தலைவாயில், தோட்டம், மசூதி, கல்லறைமாடம் (மினார் என்றழைக்கப்படும் நான்கு கோபுரங்கள்)ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுத் தனித்தன்மை வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டது.
4. ஏனைய கட்டடங்கள் 1643 இல் முடிவடைந்தன. அலங்கார வேலைகள் குறைந்தபட்சம் 1647 வரை தொடர்ந்து நடைபெற்றன.
23.
அ) செளத் :
1. சிவாஜி தனது சாம்ராஜ்யத்தின் அண்டை பகுதிகளில் முகலாய மாகாணங்களிடமிருந்தும், பிஜப்பூர் சுல்தானிடமிருந்தும் வசூலித்த ஒரு வகை வரி செளத் எனப்படும்.
2. இது மாவட்டத்தின் வருவாயில் நான்கில் ஒரு பங்கு என வசூலிக்கப்பட்டது.
ஆ) சர்தேஷ்முகி :
1. தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார்.
2. மரபு வழியாகத் தனது நாட்டின் சர்தேஷ்முக்காக சிவாஜி விளங்கினார்.
3. தனது தகுதியின் காரணமாக கூடுதல் வருவாயில் 10% ஐ சர்தேஷ்முகி என்னும் வரி மூலம் பெற்றார்.
24.
(i) கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலுள்ள ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியிலுள்ள பல செப்புப் பட்டயங்கள் மேலதிகச் செய்திகளை வழங்குகின்றன.
(ii) கோவில்கள், அரண்மணைகள், கோட்டைகள், மசூதிகள் ஆகியவை வளமான தொல்லியல் சான்றுகளாக உள்ளன.
(iii) நாணயச் சன்றுகளும் அதிக அளவில் கிடைக்கின்றன.
25.
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்கள்
இந்தியாவிலிருந்து ரோமுக்கு மிளகு, முத்துகல், தந்தம், பட்டுத்துணி, விளாமிச்சை வேர் தைலம், தாளிசபத்திரி என்ற நறுமணப் பொருள், நீலக்கல், கோமேதகம், வைரம், ஆமை ஓடு மற்றும் பருத்தி துணிகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன
இறக்குமதி பொருட்கள்
ரோமிலிருந்து இந்தியாவிற்கு நாணயங்கள், புஸ்பராசக்கல், அஞ்சனம், பவழம் கச்சா கண்ணாடி, தாமிரம், தகரம், ஈயம், மது வகைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
26.
(i) துருக்கிய படையெடுப்பின் போது வட இந்தியாவில் பல ராஜபுத்திர அரசர்கள் ஆட்சிபுரிந்தனர்.
(ii) முக்கிய ராஜபுத்திர அரசுகளாக சௌகான், கடவாலா, பரமர் மற்றும் சந்தேலர்கள் இருந்தனர்.
(iii) இதில் விக்ரகராஜ், பிருத்திவிராஜ் போன்றோர் சிறந்தர்களாக திகழ்ந்தனர்.
(iv) பரமர் வம்சத்தில் போஜரும், கடவாலாவில் ஜெயசந்திராவும், சந்தேலர்களில் யாசோவர்மனும், கீர்த்திவர்மனும் வறுமையுடன் காணப்பட்டனர்.
27.
(i) கவிராஜமார்க்கம், பம்ப-பாரதம், விக்ரமாஜன விஜயம் ஆகியவை சாளுக்கியர் காலத்தில் கன்னடத்தில் எழுதப்பட்ட முக்கிய இலக்கண நூல்களாகும்.
(ii) இவற்றின் மூலம் சாளுக்கியரின் வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
28.
1. பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்.
2. சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்திர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடயாளத்தைப் பராபரிப்பதற்காக ஐந்து கிராமனைகளை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
3. அவரது ஆட்சியில் நாளாந்த பௌத்த மதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.
29.
(i) 'வித்' என்ற சொல்லிலிருந்து 'வேதம் என்ற சொல் பிறந்தது.
(ii) வேதங்கள் நான்கு -ரிக், யஜீர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
(iii) இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் வேத கால இலக்கியங்களாகும்.
30.
சிந்து நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
1. கால நிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தின் வீழ்ச்சி, தொடர் வறட்சியின் காரணங்களால் இந்நாகரீகம் வீழ்ச்சியுற்றது.
2. வெள்ளப்பெருக்கு, அவ்வப்போது ஏற்படும் நில நடுக்கம் போன்ற பேரிடர்களும் வீழ்ச்சிக்கு காரணமாயிற்று.
3. ஆசிரியர்கள் போன்ற அயலவர்களின் படையெடுப்பும் சிந்து நாகரீக வீழ்ச்சிக்கு காரணமியிருந்தது.
4. காலப்போக்கில் இம்மக்கள் சிந்து பகுதியிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இடம்பெயர்ந்தார்கள்.
5. இதன் காரணங்களைக் சிந்து நாகரீகமும் வீழ்ச்சியுற்றது.
31.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
32.
வேலூர் கலகத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை:
ஆங்கிலேயர் தங்கள் படைப்பிரிவில் சில மாற்றங்களை கொண்டு வந்தனர்.
சிப்பாய்கள் சாதி அல்லது மதத்தின் அடையாளமாகத் விதமான குறியீடுகளும் தடை செய்யப்பட்டன.
துணை ஜெனரல் அக்னியு சிப்பாய்களுக்கு ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகம் செய்தார்.
தலைப்பாகையின் மீதிருந்த ரிப்பன் மற்றும் குஞ்சம் சிப்பாய்களுக்கு அருவருப்பைத் தந்தது.
ஏனெனில் அது மிருகத்தோலில் செய்யப் பட்டிருந்தது.
வெறுப்பின் உச்சகட்டமாக சீருடையின் முன் பக்கத்தின் சிலுவை பொறிக்கப்பட்டிருந்தது.
மீசை, சாதி அடையாளங்கள், கடுக்கன் ஆகியவை அணியக் கூடாது என்று ஆணையிட்டனர். இது சிப்பாய்களை கோபமுறச் செய்தது.
புரட்சியின் போக்கு:
முதல் எதிர்ப்பு 1806 மே மாதத்தில் வேலூரில் 4 ஆம் ரெஜிமண்டிள் 2-ஆம் படைப் பிரிவினர் தலைப்பாகை அணிய மறுத்தனர்.
இந்தப் பிரச்சனையின் வீரர்கள் தண்டிக்கப்பட்டனர்.
இந்த புரட்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ஜமாலுதீன். இவர் திப்புவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரே வேலூர் கோட்டையிலுள்ள வீரர்களிடம் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஜூலை 10-ஆம் நாள் காலை 2 மணி அளவில் வீரர்கள் புரட்சிக்கு வித்திட்டனர்.
புரட்சியாளர்கள் ஒரே நேரத்தில் ஐரோப்பியர்கள், மற்றும் ஐரோப்பியர்கள் குடியிருப்புகள் என அனைத்தையும் தாக்கினர்.
இதில் 13 அதிகாரிகள் 82 கீழ் நிலை இராணுவ வீரர்கள் இறந்தனர். 91 - பேர் காயமடைந்தனர்.
கோட்டைக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த மேஜர் கோட்ஸ் கிளர்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு ஆற்காட்டிலிருந்த கில்லஸ்பிக்கு கடிதம் அனுப்பினார்.
வேலூர் கோட்டைக்கு காலை 9 மணிக்கு வந்தடைந்தார் கில்லஸ்பி.
பீரங்கியால் கோட்டைக் கதவு தகர்க்கப்பட்டு உள்ளே நுழைந்தனர். இதில் கில்லஸ்பி காயமடைந்தார்.
கில்லஸ்பியின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் புரட்சியாளர் சிலர் தப்பியோடினர்; சிலர் சரணடைந்தனர்.
பல கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இவ்வாறு வேலூர் புரட்சி ஒரு முடிவுக்கு வந்தாலும் அது 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டுச் சென்றது.
33.
1. 1639ல் சந்திரகிரியின் அரசர் சென்னையை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கொடுத்து அதில் கோட்டைக் கட்டிக் கொள்ளும் அனுமதி வழங்கினார் .
2.கட்டப்பட்ட கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இந்திய மண்ணில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் குழு முதன் முதலாகப் பெற்ற நிலப்பகுதி இதுவே.
3. சென்னையில் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் மீது 1645 ஆம் ஆண்டு கோல்கொண்டா அரசர் படையெடுத்து பாழ்படுத்தினார். 1687 இல் ஒளரங்கசீப் கோல்கொண்டவைக் கைப்பற்றிக் கம்பெனியின் பகுதிகளை முகலாய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.
4. ஆனால் ஆங்கிலேயருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உரிமைகள் தொடர்ந்தன. குறுகிய காலத்திற்குள் மசூலிப்பட்டினத்திற்கு மாற்றாகக் கம்பெனியின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியின் தலைமையிடாக சென்னை மாறியது.
5. அரசர் இரண்டாம் சார்லஸ் திருமணத்தின்போது மாண்கொடையாகப் பெற்ற பம்பாய் தீவு 1668 ல் கம்பெனிக்கு வழங்கப்பட்டது.
6.1683 ஆம் ஆண்டு பட்டயம் கம்பெனிக்குப் படைகளை உருவாக்கிக் கொள்ளவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றிலுள்ள நாடுகளுக்கு எதிராகப் போர் அறிவிப்புச் செய்யவும் அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளவும் உரிமை வழங்கியது.
7. 1684 இல் சென்னை ஒரு மாகாணமாக உருவானது. 1688 இல் சென்னை ஒரு மேயரையும், பத்து உறுப்பினர்கள் (Aldermen) அடங்கிய ஆலோசனைக் குழுவையும் கொண்ட நகராட்சி அரசைப் பெற்றிருந்தது.
8. 1693 இல் சென்னையைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களையும் 1702 இல் மேலும் ஐந்து கிராமங்களையும் 1702 இல் மேலும் ஐந்து கிராமங்களையும் பெற்றது.
34.
1. முகலாயர் காலத்தில் இந்தியாவில் கட்டடக் கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலககே கலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
2. கூண்டு வடிவிலான குமிழ்களைக் கொண்ட கவிகை மாடங்களாலும், ஒப்பனைகள் மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும், நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள ஸ்தூபி மாடங்களாலும், படங்கள் வரையப்பட்டு பதிக்கப்பட்ட ஓடுகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய வடிவங்களுக்கு முகாலயக் கட்டங்கள் பெயர் பெற்றவையாகும்.
3. சூர் வம்சத்து அரசர்கள், தில்லியில் புராணகிலா, பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் கட்டிய ஷெர்ஷா, இஸ்லாம் ஷா ஆகியோர் கண்களைக் கவரும் கட்டடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
4. அக்பர் ஆட்சிக் காலத்தில் ஹூமாயூனின் கல்லறை உயர்த்தப்பட்ட தளத்தின் மீது வைக்கப்பட்டது.
5. சுற்றிலும் தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
6. பாரசீகக் கட்டடக்கலை வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டு இந்தியக் கலைஞர்களால் கட்டப்பட்ட இக்கல்லறை எதிர்காலத்தில் பின்பற்றுவதற்கு முன்மாதிரியைத் திகழ்ந்தது.
7. மணற்கற்பாறைகளால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டை ரஜபுத்திர பாணிகளை இணைத்துக் கட்டப்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது.
8. பதேப்பூர் சிக்ரியின் மலைப்பூட்டும் வாயிற் பகுதியும், அக்பர் சிகப்புநிற மற்றும் பளிங்குக் கற்களால் கட்டிய புலந்தர்வாஸாவும் நேர்த்தியான கட்டடக்கலையில் முகலாயரின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.
9. தாஜ்மஹால், மோதிமசூதி, ஜும்மா மசூதி , செங்கோட்டை, பாதுஷாகி மசூதி, ரபீயா உத்தௌராணியின் பளிங்கிலான கல்லறையும் கட்டப்பட்டது முகலாயர் கால சிறப்பாகும்.
10. திவானி ஆம், திவானி காஸ், மோதி மஹால், ஹூரம்ஹால் போன்ற பிரமிப்பூட்டும் கட்டங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டடக்கலைத் திறன்களைப் பிரதிபலிக்கின்றன.
35.
(i) இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் வலியுறுத்தியது.
(ii) ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Rhuggee) சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும் கொலை செய்வதையும் வழக்கமாகத் கொண்டிருந்தவர்கள்)அழிக்கவும் சதி முறையை ஒழிக்கவும் , கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கப் பாடுபட்டார்.
(iii) கல்கத்தா மருத்தவக் கல்லூரியை 1835 இல் துவக்கினார்.இக்கல்லூரியின் மாண்வர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844 ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பபட்டர்கள்.
(iv) 1845 இல் பம்பாயில் கிராண்ட் மருத்தவக் கல்லூரி நிறுவப்பட்டது.தாம்சன் பொறியியல் கல்லூரி 1947 ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849 இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
(v) மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835 ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார்.அவர் கல்விக்குழுமத்தின் உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை.
(vii) மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்தால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
36.
1.நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2.நிலத்தின் உற்பத்தித்திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
3.சரியான புள்ளி விவரத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
4.செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக இருந்தன.
5.சுங்கம், கலால் வரி, வனப் பொருட்களின் விற்பனை ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
6.தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
7.கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
8.கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
9.பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி.
10.எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்காக வருடாந்திர கட்டண வரி.
11. விதவைகள் நிலவரி, நதிக்கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
12. வாரிசு உரிமை வரி.
13.குதிரை விற்பதற்கான வரி மற்றும் பல.
14. மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளருக்கும் வரி விதித்தது.
15. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது.
37.
(1) ஊரார்
1. வேளாண் குடியிருப்புகளால் நிறைந்த கிராமப்பகுதி ஊர் எனப்பட்டது. இங்குள்ள நில உடமையாளர்கள் 'ஊரார்' எனப்படும் நிர்வாகப் பிரதிநிதியாகச் செயல்பட்டனர்.
2. கோயில் நிர்வாகம், குளங்களை பராமரித்தல், குளத்து நீரை மக்களின் தேவைக்கு வழங்குதல் வரிவசூல், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, அரசரின் கட்டளைகளை நிறைவேற்றுதல் போன்ற நிர்வாகப் பொறுப்புகளை இவர்கள் கவனித்தனர்.
(2) சபையார்
1. பிரம்மதேயம் எனப்படும் பிராமணர் குடியிருப்பின் மையமாக விளங்கிடும் கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வாகிப்பது சபையின் முக்கிய பணியாகும்.
2. மேலும் கோயில் நிலங்களில் காணப்படும் குளங்களை பராமரித்தல் மற்றும் நதி, நீதி, நிர்வாகம் சார்ந்த பணிகளையும் சபையார் மேற்கொண்டனர்.
(3) நகரத்தார்
1. வணிகர்களின் குடியிருப்பு பகுதி நகரம் எனப்பட்டது. சிறந்த கைவினைஞர்கள் இங்கு வசித்தனர்.
2. இதன் பிரதிநிதிகள் 'நகரத்தார்' எனப்பட்டனர்.
3. கோவில்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும் அதன் நிர்வாகத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். உள்நாட்டு மற்றும் கடல் கடந்த வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தனர். பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம்பு, சந்தனக் கட்டை, ஏலக்காய் போன்றவை முக்கிய வாணிபம் பொருட்களாகும்.
(4) நாட்டார்
1. உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கிய பொறுப்பு வகித்தோர் 'நாட்டார்' ஆவர். அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக செயல்பட்டனர்.
2. அரசுக்கான நிதி, நீதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர். வரி வசூலித்தல் முக்கியப் பொறுப்புகளாகும்.
3. மரியாதை செலுத்தும் வகையில் அரசுடையான் (நில உரிமையாளர்) அரையன் (வழி நடத்துவோர்) கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
38.
சாதவாகன ஆட்சி:
i) இந்தியாவின் வடபகுதியில் நிகழ்ந்து வந்த அரசியல் மாறுதல்களினால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ.ஆ.முதல் நூற்றாண்டின் நவீன ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களை உள்ளடக்கிய தக்காண பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது.
ii) இது மௌரிய ஆட்சியயை போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சியாக அமையவில்லை. சாதவாகன மாகாண ஆட்சியாளர்கள் பலம் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தனர்.
மூவேந்தர்கள்:
வாடா இந்தியாவில் அமைந்த பரந்த பேரரசுகள் போல் அல்லாமல் தென்னிந்தியாவின் தமிழ் பகுதியில் சிற்றரசர்கள் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
i) மதுரையை தலைமையிடமாக கொண்டு பாண்டியர்கள்
ii) உறையூரை தலைமையிடமாகா கொண்டு சோழர்கள்
iii) வஞ்சியை தலைமையிடமாக கொண்டு சேரர்களும் ஆட்சி புரிந்தனர்.
மௌரியக் கால கல்வெட்டில்:
பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலே மௌரிய அரசர்கள் தமிழக மூவேந்தர்களை பற்றிய செய்திகளை தங்கள் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளார்கள்.
அசோகரின் 2வது கல்வெட்டு ஆணியில் தனது பேரரசின் எல்லையில் அமைந்த அரசுகளை பற்றி கூறியுள்ளார்கள்
மூவேந்தர்கள் மட்டும் தென்னிந்தியாவை ஆண்டனர் என கூற இயலாது. சிறிய பகுதிகளை ஆட்சி புரிந்த ஏராளமான சிற்றரசர்களும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை. இந்த சிற்றரசர்கள் அந்த காலத்தில் வேளிர் என அழைக்கப்பட்டனர்.
39.
கோரி முகமதுவின் வட இந்திய போர்களில் முக்கியமானது தரைன் போர்களாகும். தெற்கு ஆசிய இஸ்லாமிய ஆட்சி அமைய அடித்தள மிட்டவரும் இவரே.
முதல் தரைன் போர் 1191:
அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகானுக்கும் கோரி முகமதுவுக்கும் இடையே 1191ல் முதல் தரைன் போர் நடைபெற்றது. இதில் கோரி முகமது தோல்வியுற்றார். காயம் அடைந்த கோரி முகமதுவை ஒரு குதிரை வீரன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றான்.
இரண்டாம் தரைன் போர் 1192:
1. முதல் தரைன் போரில் தோல்வியுற்ற கோரி முகமது மீண்டும் பிருத்விராஜ் சௌகான் மீது 1192 2வது தரைன் போர் நிகழ்த்தினார்.
2. இம்முறை கோரியின் ஆற்றலை பிருதிவிராஜ் குறைத்து மதிப்பிட்டார். தனது அமைச்சர் சோமேஸ்வரனின் ஆலோசனையை நிராகரித்தார்.
3. சிறிய படைக்குழுவுக்குத் தலைமை தாங்கி 2வது தரைன் போரில் ஈடுபட்டார்.
4. 2வது தரைன் போரில் தோற்கடிக்கப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்.
5. இந்திய வரலாற்றின் திருப்பு 2வது தரைன் போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி பிருதிவிராஜிடமமே ஆட்சியை ஒப்படைத்தார்.ஆனால் ராஜதுரோகம் குற்றம் சாட்டி அவரைக் கொன்றார்.
6. தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப்பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.
இவ்வாறாக இரண்டாவது தரைன் போர் ராஜபுத்திர ஆட்சியின் வீழ்ச்சிக்கும் இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சிக்கும் வழிவகை செய்தது எனலாம்.
40.
வர்த்தன மரபின் மிகவும் புகழ் பெட்ரா மன்னராக இருந்தவர் ஹர்ஷவர்தனர் ஆவார். ஹர்ஷரின் தகப்பனார் பிரபாக வர்தனார். இறந்ததும் அவரது மூத்த மகன் இராஜ்யவர்தனர் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நினையில் கௌட அரசன் பூரங்கனால் இராஜ்யவர்தனர் நயவஞ்சமாக கொல்லப்பட்டார். பின்னர் ஹர்ஷவர்தனர் தனேஸ்வரத்தின் மன்னராக பொறுப்பேற்றார்.
பொ.ஆ.606ல் ஹர்ஷர் பதவி ஏற்றதும் தன்னுடைய சகோதரி விவகாரத்திலும் கவனம் செலுத்தினார் அவருடைய முதல் படையெடுப்பு தேவகுப்தனுக்கு எதிராக அமைந்தது.
தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டார். தீக்குளிக்கும் நிலையில் இருந்து தனது சகோதரியை காப்பற்றி அழைத்து வந்தார். பின் கன்னோசி அமைச்சர் பொன்னியின் அறிவுரைப்படி தன் தலைநகரை கன்னோசிக்கும் மாற்றினார்
பின் பேரரசு ஒன்றை உருவாகும் பொருட்டு பின்வரும் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது எதிர்த்து போரிடவோ வாய்ப்பினை அளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.
i) வங்கத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்
ii) வல்லபியை ஆண்ட மைத்ரகர்கள்
iii) புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள்
iv) தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி
v) சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒடிசா ஆகிய பகுதிகளை ஆண்ட அரசர்கள்
ஹெர்ஷரின் உடனடித் தேவை தன்னுடைய சகோதரனை கொன்ற சசாங்கனை பழிவாங்குவதாக இருந்தது.
ஹர்ஷருக்கும் சசாங்கத்துக்கும் இடையே நடந்த போர் குறித்து விவரங்கள் தெரியவில்லை. எனினும் சசாங்கன்இறந்த பிறகே கௌடப் பேரரசை ஹர்ஷர் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கவேண்டும் என தெரிகிறது..
ஹர்ஷர்க்கும் மைத்ரகர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகையை ஹர்ஷரின் மக்களுக்கும் துருவப்பட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவியேற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.
41.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
42.
மகாவீரர் மறைவிற்குப்பின் 500 ஆண்டுகள் கழித்து சுமார் பொ.ஆ. 79-82ல் சமணத்தில் திகம்பரர்கள் என இரு பிரிவுகள் தோன்றின.
திகம்பரர்கள்:
மகதம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டபோது பத்ரபாஹீ தலைமையில் சில சமணத் துறவிகள், தமது கடும் விரதங்களைத் தொடர்ந்து பின்பற்றுவதற்காகத் தெற்கு சென்றார்கள். அவர்கள் திகம்பரர்கள் (வெளியை ஆடையாக அணிந்தவர் அல்லது நிர்வாணமானவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உடைகள் ஏதுமின்றி இருந்தார்கள்)
ஸ்வேதாம்பரர்கள்:
ஸ்தூலபத்திரர் தலைமையில் மகதத்திலேயே இருந்தவர்கள் ஸ்வே தாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வெள்ளை ஆடையை உடுத்தினார்கள். இந்த பிரிவு மகதத்தில் சமணத்தைப் பலவீனப்படுத்தியது.
பாடலிபுத்திர மாநாடு:
பத்ரபாகு மரணமடைந்த பிறகு ஸ்தூலபுத்திரர் பாடலிபுத்திரத்தில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். 12 அங்கங்களைக் கொண்ட சமண நெறிமுறைகளை தொகுத்தது.
43.
44.
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்:
வட இந்தியாவில் செம்புக்கால பண்பாட்டுடன் தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன.
மட்பாண்டங்கள் :
பழுப்பு மஞ்சள் நிற பண்பாடுகளில் ஜாடிகள் கொள்கலன்கள், தட்டுகள், அகலமான கிண்ணங்கள் ஆகிய வகைகள் உள்ளன.
காலம்:
பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாட்டின் காலம் பொ.ஆ.மு. 2600 முதல் பொ.ஆ.மு. 1200 வரையாகும்.
செம்பு பொருட்குவியல் பண்பாடு:
ஆய்விடங்களில் செம்பினால் செய்யப்பட்ட உருவங்களும் ஏனைய பொருட்களும் அதிகம் கிடைப்பதால் இது செம்புப் பொருட்குவியல் பண்பாடு என்றும் அறியப்படுகிறது.
விளை பொருட்கள்;
நெல்லி, பார்லி, பட்டாணி மற்றும் காய் வகைகள் விளைவிக்கப்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
எருது, பசு, வெள்ளாடு, செம்மறியாடு, குதிரை, நாய், பன்றி ஆகியவற்றை வளர்த்து வந்தனர்.
வீடு:
மரதட்டிகளின்மேல் களிமண் பூசிக் கட்டப்பட்ட சுவர், மேல் கூரை கொண்ட வீடுகளில் வசித்தனர். சுட்ட களிமண்ணில் அணிகலன்கள் மற்றும் சுடுமண் உருவங்களையும் செய்தனர்.
இப்பண்பாடு ஒரு கிராமிய பண்பாடு ஆகும்.
45.
தமிழ்ச்செவ்வியல் இலக்கியத் தொகுப்பானது தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தமிழின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கவிதையியலைப் பற்றி மட்டும் பேசவில்லை. அக்காலத்து சமூகப் பண்பாட்டையும் பேசுகிறது.
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும்காப்பியங்களும் (பொ. ஆ. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை) இதற்கடுத்த காலச் சமூகப் பண்பாட்டுச் சூழலைச் சார்ந்தவையாகும்.
46.
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்
1. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
2. பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
3. பெரிய கிராமங்கள் தோன்றின.
4. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
5. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமான 'புதிய கற்காலப் புரட்சி' எனப்படுகின்றன.
47.
விஜயநகரப் பேரரசின் கீழ் இயங்கி வந்த பாளையக்காரர்களில் நெற்கட்டும்செவல் பகுதியின் புலித்தேவர், பாஞ்சாலங்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்க்கு கப்பம்கட்ட மறுக்கவே அவர்கள் மீது போர்தொடுத்து கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பாளையக்கார படை வீரர்கள்: கட்டபொம்மனின் தம்பி ஊமத்துரை, சிவகங்கையின் மருது சகோதர்கள் ஆகியோர் 1801 ம் ஆண்டு ஆங்கிலேயர்க்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
இதுவே 1801 ம் ஆண்டு கிளர்ச்சி ஆகும்.
48.
(i) கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் (சாமிதோப்பு) எனும் சிறிய ஊரில் 1809-ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். முத்துக்குட்டி எனும் இயற்பெயர் கொண்டவர்.
(ii) திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களை கற்றார்.
(iii) தனது போதனைகளில் சாதிமுறையையும், அதிக வரி வசூல் முறையையும் கண்டித்தார்.
(iv) ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகவும் பிரபலமான அவரை 'ஐயா வழி' என்ற நடைமுறையில் மக்கள் பின்பற்றினார்.
(v) சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளை இணைத்து சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
49.
1. கன்னோசி போரில் தோற்றுத் தப்பியோடிய ஹுமாயூன் பாரசீகப் படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்று காந்தகாரையும் காபூலையும் கைப்பற்றினார்.
2. பின்னர் ஹுமாயூன் மீண்டும் பேரரசர் ஆனார்.
3. ஆனால் மிக விரைவிலேயே தில்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இடறி விழுந்து ஹுமாயூன் இறந்து போனார்.
4. ஸ்டேன்லி லேன்பூலின் பொருள் பொதிந்த வார்த்தைகளில் செல்வதென்றால் வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்து ஹுமாயூன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்து இறந்தார்.
50.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி உண்மையான முழு அதிகாரத்தையும் தன் வசம் தக்க வைத்துக் கொண்டு வெற்று நிர்வாகச் சுமையை மட்டுமே நவாபிடம் விட்டு வைத்தது.இத்தகைய நிர்வாக '' இரட்டைஆட்சி முறையே '' ஆகும்
51.
(i) இராஜேந்திரனின் கடற்படை ஸ்ரீ விஜயா (தெற்கு சுமத்ரா) மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றார்.
(ii) இது தென்கிழக்கு நாடுகளில் செழித்து வளர்ந்த, கடற்படை கொண்ட ஒரு பகுதியாகும்.
(iii) இதே போன்று குறுநில மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த கெடா (கடாரம்) வும் ராஜேந்திரனால் தோற்கடிக்கப்பட்டன.
எனவே இராஜேந்திர சோழன் கடாரம் கொண்டான் என அழைக்கப்பட்டார்.
52.
i) மேற்கு கரையிலிருந்து ரோமானிய வணிகர்கள் நிலவழியே பாலக்காடு கணவாயை கடந்து கிழக்கேயுள்ள உற்பத்தி மையங்களுக்கு வந்தனர்.
ii) ஏரோட்டிலுள்ள கொடுமணல், படியூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் ரோம் நாட்டில் அதிக தேவையில் இருந்த நவரத்தின கல்லான கோமேதகம் கிடைக்கின்ற சுரங்ககளிருந்தன.
iii) மேலும் ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பும் எஃகும் ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன
iv) இதனால்தான் முறைப்பட காலத்திய ரோமானிய நாணயங்கள், கோயமுத்தூர், ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் கிடைப்பதை காண்கிறோம்.
53.
i) பொ.ஆ.மு. 6 ஆம் நூற்ராண்டிலிருந்து 3ம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கிய அரசியல் மாற்றங்களை கண்டது.
ii) கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்வதற்காக இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன.
iii) வெற்றி பெற்றவர் கங்கைச் சமவெளியில்முடியாட்சி தோன்றுவதற்கு காரணமாய்அமைந்தது.
iv) சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் என்ற உயர்ந்த பதவிகளால் அரசாட்சி செய்தனர்.
v) முடியாட்சி அரசுகளும் காசி முதலில் பலம் வாய்ந்ததாக இருந்தது.
vi) பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
54.
(i) 1. திருஞான சம்பந்தர், 2. அப்பர், 3. அந்தரர் ஆகியோர் புகழ்பெற்ற சைவ மூவர் ஆவார்.
(ii) முதல் ஏழு நூல்களில் உள்ள தேவாரப் பாடல்கள் இம்மூவரால் இயற்றப்பட்டது.
(iii) பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார் நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards