11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/07/2019
பண்டைய இந்தியா - தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
மனித இனத்தின் மூதாதையர் முதலில் _______ தோன்றி பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றனர்.
அமெரிக்காவில்
ஆஸ்திரேலியாவில்
இந்தியாவில்
ஆப்ரிக்காவில்
2.
________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.
குவார்ட் சைட்
கிரிஸ்டல்
ரோரிசெர்ட்
ஜாஸ்பார்
3.
ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீதத்தையும் உணர்ந்து, அங்கு ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் ________.
சார்லஸ் மேசன்
அலெக்ஸாண்டர் ப்ரன்ஸ்
சர் ஜான் மார்ஷ்ல்
அலெக்சாண்டர் கன்னிங்காம்
4.
ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____
காலிபங்கன்
லோத்தல்
பனவாலி
ரூபார்
5.
செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______
பழைய கற்காலம்
புதிய கற்காலம்
இரும்புக்காலம்
இடைக்கற்காலம்
6.
மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.
பழைய கற்காலப்
புதிய கற்காலப்
இடைக்கற்காலப்
செம்புக்காலப்
7.
மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர்-1, பாகோர்-3 ஆகியவை ______________ நாகரிகம் நிலவிய இடங்கள்
கீழ்ப்பழங்கற்காலம்
இடைப்பழங்கற்காலம்
மேல்பழங்கற்காலம்
புதிய கற்காலம்
8.
9.
வரலாற்றின் பழமைமையான காலம்_________ ஆகும்.
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
செம்புக்காலம்
இரும்புக்காலம்
10.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
11.
நர்மதை மனிதன் குறிப்பு வரைக.
12.
ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.
13.
14.
பழங்கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
15.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
16.
ஹரப்பா மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் பற்றி கூறுக.
17.
புதிய கற்கால புரட்சி - வரையறு:
18.
இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களைக் குறிப்பிடுக.
19.
இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.
20.
21.
இந்தியா ஹரப்பா நகரிகக் காலத்தில் பல்வேறு பண்பாடுகளின் கலவையாக இருந்தது ஆராய்க.
22.
கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.
23.
வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
1.
(d)
ஆப்ரிக்காவில்
2.
(c)
ரோரிசெர்ட்
3.
(c)
சர் ஜான் மார்ஷ்ல்
4.
(b)
லோத்தல்
5.
(c)
இரும்புக்காலம்
6.
(b)
புதிய கற்காலப்
7.
(c)
மேல்பழங்கற்காலம்
8.
(b)
9.
(a)
பழங் கற்காலம்
10.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
11.
1. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஹோமினின் புதை படிவம் மத்திய பிரதேசத்திலுள்ள ஹோசங்காபாத் அருகேயுள்ள ஹத்னோராவில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
2. அது ஒரு மண்டை ஓட்டின் மேல் பகுதி.
3. இதை நர்மதை மனிதன் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
4. ஆர்க்கைக் ஹோமோ சேப்பியன்ஸ் என்னும் மனித இனம் வாழ்த்ற்கான அடையாளமாக இது கருதப்படுகிறது.
12.
1. மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
2. இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன் முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமா எரக்டஸ் ஆகும்.
3. இவர்கள் ஹோமோ சேப்பிபயன் ஸை போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
4. சில ஒலிகள், மற்றும் சைகைகளைச் சார்ந்த மொழியை பயன்படுத்தி இருக்கலாம்.
13.
14.
வரலாற்றில் மிகவும் தொன்மையான காலம் பழங்கற்காலம் எனப்படுகிறது. இது மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன
1. கீழ்ப்பழங்கற்காலம் 2. இடைப்பழங்கற்காலம் 3. மேல் பழங்கற்காலம்
15.
1. வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை.
2. தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்டஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.
16.
1. ஹரப்பா மக்களின் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
2. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டார்கள்.
3. வேளாண்மையில் கிடைத்த உபரி வருவாய் முக்கியமான பல செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கியது.
4. ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல் முறையைப் பின்பற்றினார்கள். பாசனத்துக்கு கால்வாய்களையும் கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
17.
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்
1. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
2. பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
3. பெரிய கிராமங்கள் தோன்றின.
4. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
5. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமான 'புதிய கற்காலப் புரட்சி' எனப்படுகின்றன.
18.
1. இந்தியாவில் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. கடற்கரைப்பகுதி, மணற்பாங்கான இடம், வடிநீர் பகுதி, வனப்பகுதி ஏரிப்பகுதி, பாறை மறைவிடம், மலை மற்றும் மலை சார்ந்த பகுதி, கழிமுகப்பகுதி, என அனைத்து திணை சார் பகுதிகளிலும் இந்நாகரீகம் பரவியிருந்தது.
3. பீகாரில் பயிஸ்ரா, குஜராத்தில் லங்னஜ்,
4. உத்திரப்பிரதேசத்தில் பாகர் 2, சோபனி மண்டோ, சாராய் நகர் ராஜ் மகாதகா, தம் தமா
5. ஆந்திரத்தில் சன கன கல்லு, விசாகப்பட்டினம், கர்நாடகத்தில் கிப்பன ஹள்ளி ஆகிய இடங்கள் இடைக்கற்கால நாகரிகம் நிலவிய இடங்களாகும்.
6. ராஜஸ்தானில் உள்ள பாகோர், தில்வாரா, மும்பையின் கடற்கரைப்பகுதிகள்.
7. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கிழக்குப்பகுதி தேரிக்குன்றுகள் (செம்மறைக்குன்றுகள்) பகுதிகளும் இடைக்கற்கால நாகரீகம் நிலவிய இடங்களாகும்.
19.
1. இடைப்பழங்கற்கால மனிதர்கள் திறந்தவெளியிலும், குகைகளிலும், பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள்.
2. வேட்டையாடுபவர்களையும், உணவைச் சேகரிக்கப்படுபவர்களாகும் இருந்தார்கள்.
3. சிறிய கருவிகளை பயன்படுத்தினார். கோடாரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
4. கற்கருவிகள் உற்பத்தியில் செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி, குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாக பயன்படுத்தினார்.
5. மரக்கட்டை, விலங்குத்தோல், ஆகியவற்றை கையாள்வதற்கு துளையிடும் கருவி மற்றும் சுரண்டும் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தினார்.
20.
21.
1. மேய்ச்சல் சுமூக மக்கள், வேளாண்மை செய்வோம், வேட்டையாடிகள் -உணவு சேகரிப்பவர்கள், வணிகர்கள் போன்ற பல குழுக்கள் சிந்து பகுதியில் வசித்தனர்.
2. இத்தகைய மக்கள் இக்கால கட்டத்தில் கன்னியாகுமரியிலிருந்து-காஷ்மீர் வரையிலும், குஜராத்திலிருந்து அருணாசலப்பிரதேசம் வரையிலும் பரவி இருக்கலாம்.
3. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து நாகரிகமும் செழிப்புற்றிருந்த பொது, பிற பகுதிகளில் பல்வேறு பண்பாடுகள் வளர்ந்து கொண்டிருந்தன.
4. இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும்(கேரளா) இலங்கையிலும் வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்ந்தனர்.
5. படகு போக்குவரத்து குறித்த அறிவுடன் இருந்த ஹரப்பா மக்கள் தென்னிந்தியாவுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை.
6. தென்னிந்தியாவின் வடபகுதி குறிப்பாக கர்நாடக, ஆந்திரப்பிரதேசம் ஆகியவை புதிய கற்கால பண்பாடுகளுடன் மேய்ச்சல் மற்றும் கலப்பைச் சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டு வந்தன.
7. புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் -கங்கைச்சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதியிலும், மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பரவி இருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் செம்பு கால பண்பாடு நிலவியது.
8. இவ்வாறு இந்தியா ஹரப்பா நாகரீக காலத்தில் பல்வேறு பண்பாடுகளில் கலவை நிலப்பகுதியாக விளங்கியது.
22.
| கீழ்ப் பழங்கற்காலம் | இடைப் பழங்கற்காலம் |
| இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. | 3,85,000-40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாக கணக்கிடப்பட்டுள்ளது. |
| இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர். | இக்கலக்கட்டத்துக்கும் ஹோமோ எரக்டஸ் வகையினர் வாழ்ந்துள்ளனர். |
| மத்திய இந்தியா, இந்தியாவின் தென் கிழக்குப்பகுதி, சென்னைக்கு அருகிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். | நர்மதை, கோதாவரி, கிருஸ்ணா, யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன. |
| வேட்டையாடியும், கிழக்கு கோட்டை, பலம் ஆகியவற்றை சேகரித்து வாழ்ந்துள்ளனர். | வேட்டை ஆடுபவர்களையம் உணவை சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர். |
| திறந்த வெளியிலும் ஆற்றுச்சமவெளிகளிலும், குகைகளிலும் வசித்தனர். | திறந்த வெளிகளிலும், குகைகளிலும், பாறை படுகைகளிலும் வசித்தனர். |
| கற்களைச் செதுக்கி கோடாரி, சிறுகோடாரி செதுக்கிகருவி, பிளக்கும் கருவி, துண்டாக்கும் கருவிகளை உருவாக்கினார். | இக்கருவிகள் சிறியதாயின. இக்கருவிகள் உற்பத்தியில் மூலக்கல்லை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார். |
23.
வரலாற்றின் முந்தைய காலத்தைக் குறித்து அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை. இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்து கிடைத்துள்ள கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள் கலைப்பொருட்கள், உலோக கருவிகள் போன்ற தொல் பொருள் சான்றுகளின் அடிப்படையில் இக்கால வரலாற்றை அறிய முடிகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை வரலாற்றுக்கு முந்தைய காலத்தை
1. பழங்கற்காலம் 2. இடைக்கற்காலம் 3. புதியகற்காலம் 4. உலோகக்கலாம் என வகைப்படுத்தலாம்.
பழங்கற்காலம்:
இது 1. கீழ்பழங்கற்காலம் (60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை) 2. இடைப்பழங்கற்காலம்(பொ.ஆ.மு. 3,85,000-40,000) 3. மேல்பழங்கற்காலம் (பொ.ஆ.மு. 40,000-10,000)
1. பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் பெரும்பொழுது நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ளன.
2. பழங்கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும் உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடித் கொண்டனர். இவர்களை உணவு சேகரிப்போர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
3. பழங்கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றம் குறித்து எதுவும் தெரியவில்லை.
இடைக்கற்காலம் :
1. இது பொ.ஆ.மு.10,000த்தில் தோன்றியது. பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அறிய முடிகிறது.
2. உணவு சேகரிக்க, வேட்டையாட அதிகபட்சம் 5 செ.மீ நீளமுடைய நுண்கருவிகளை கற்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
3. வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினார். ஒரே இடத்தில் நீண்டகாலம் தங்கி வாழும் போக்கு வளர்த் தொடங்கியது.
4. பயிரிடுதல், கால்நடை வளர்த்தல் போன்ற தொழில்கள் ஆரம்பித்தன.
புதியகற்காலம்:
1. பொது ஆண்டுக்கு முன்பு 7000-5500 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
2. வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கருவிகளை பளபளப்பகுதல் சக்கரத்தின் மூலம் மட்பாண்டம் செய்தல் போன்றவை இக்கால பண்பாட்டின் புதிய கூறுகளாகும்.
3. கிராம சமுதாயங்களை உருவாக்கினர். புல்லால் ஆன குடிசைகளுக்குபதில் களிமண் கற்களால் ஆன குடிசைகள் அமைக்கப்பட்டன.
4. இறந்தோரை புதைத்தனர். பருத்தி, கம்பளி ஆடைகளை அணிந்தனர்.
5. கோதுமை, பார்லி, நெல் தினை போன்றவை பயிரிடப்படுகின்றன.
உலோகக் கலாம்
1. இக்காலத்தில் செம்பும் வெண்கலமும் பயன்படுத்தப்படுகிறது. உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
2. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செப்புக்கற்கால பண்பாடு வளர்ச்சி அடைந்தன. ஹரப்பா பண்பாடு செம்புகற்கால பண்பாட்டின் ஒரு பகுதியே.
3. தமிழ்நாட்டில் பையம் பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பாலான பொருள்கள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
4. தென்னிந்தியாவில் செம்பு காலமும்- இரும்பு காலமும் சமகாலம். கல்லறைக் குழிகளில் கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள், இரும்பு மண்வெட்டி, அரிவாள் சிறு ஆயுதங்கள் காணப்படுகின்றது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards