11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
ஜப்பான் அறிஞர் கூறிய ஐந்து விவசாய மந்திரங்கள் எவை?
3.
மழைக்கால மலர்கள் யாவை?
4.
5.
6.
ஐங்குறுநூற்றுப்பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்கள் ஆகியவற்றினை அட்டவணைப்படுத்துக.
7.
8.
9.
10.
தமிழகக் கோவில் யானைகளுக்கு வளப்புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசின் மூலம் செயல்படுத்தியவர் ___________.
வி. கிருஷ்ணமூர்த்தி
கி. கிருஷ்ணமூர்த்தி
ஜெயமோகன்
வேணுமேனன்
11.
இயற்கை வேளாண்மையால் புகழ் பெற்றவர் ___________.
அகத்தியன்
நமச்சிவாயம்
நம்மாழ்வார்
பெரியாழ்வார்
12.
யானை டாக்டர் என்னும் புதினத்தின் ஆசிரியர் ___________
எஸ். இராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சிவராமன்
சு. வேணுகோபால்
13.
ஐங்குறுநூறு - பிரித்து எழுதுக.
ஐர + குறு + நூறு
ஐங் + குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு
ஐந்து + நூறு
14.
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
கபிலர்
பெருந்தேவனார்
பேயனார்
அம்மூவனார்
15.
ஏழைகளின் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் மாம் எது?
பனைமரம்
வாழை மரம்
முருங்கை மரம்
தென்னை மரம்
16.
தமிழகத்தின் மாநில மரம் எது?
அரசமரம்
பனைமரம்
ஆலமரம்
வேப்பமரம்
17.
பிழையான தொடரைக் கண்டறிக.
பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றன.
ஏதிலிக் குருவிகள் என்பவை வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகள் ஆகும்.
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனைமூலம் அறிய முடியும்.
18.
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
(அ) மதிப்புக் கூட்டுப்பொருள்கள் (ஆ) நேரடிப்பொருள்கள்
அ - மட்டும் சரி
ஆ - மட்டும் சரி
இரண்டும் சரி
அ - தவறு, ஆ - சரி
19.
மண்ணுக்கு வளம் சேர்ப்பன -
மண்புழு
ஊடுபயிர்
இயற்கை உரங்கள்
இவை மூன்றும்
20.
ஐங்குறுநூற்றுப்பாடலில் வரும் முல்லைநில இயற்கை அழகை விவரிக்க.
21.
இயற்கை வேளாண்மை குறித்தும், ஏழைகளின் கற்பக விருட்சம் குறித்தும் எழுதுக.
22.
'யானை டாக்டர்' கதைவாயிலாய் இயற்கை, உயிரினப்பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.
1.
2.
உழப்படாத நிலம், இரசாயன உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல். இவையே ஜப்பான் நாட்டு அறிஞர் கூறிய ஐந்து விவசாய மந்திரங்கள்.
3.
1. காயா
2. தளவம்
3. முல்லை
4. நெய்தல்
5. கொன்றை
6. பிடவம்
ஆகியன மழைக்கால மலர்களாகும்.
4.
5.
6.
திணை - முல்லைத்திணை.
முதற்பொருள் : நிலம் - காடும் காடு சார்ந்த இடமும், சிறுபொழுது - மாலை; பெரும்பொழுது - கார்காலம்.
கருப்பொருள் : தெய்வம் - திருமால். மக்கள் - குறும்பொறை, நாடன், பறவை - காட்டுக்கோழி. மலர் - முல்லை. விலங்கு - மான், முயல். உணவு - வரகு, சாமை.
7.
8.
(a)
9.
(b)
10.
(a)
வி. கிருஷ்ணமூர்த்தி
11.
(c)
நம்மாழ்வார்
12.
(b)
ஜெயமோகன்
13.
(c)
ஐந்து + குறுமை + நூறு
14.
(b)
பெருந்தேவனார்
15.
(a)
பனைமரம்
16.
(b)
பனைமரம்
17.
(c)
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
18.
(a)
அ - மட்டும் சரி
19.
(d)
இவை மூன்றும்
20.
(i) கார்காலத் தொடக்கத்திலே முல்லை நிலத்தில் காயா, கொன்றை, நெய்தல், முல்லை, செம்முல்லை, பிடவம் ஆகிய மலர்கள் பூத்திருக்கின்றன.
(ii) பொருளீட்டுவதற்காக வெளியூர் சென்ற தலைவன், தான் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகிறான்.
(iii) தான் வருவதாய்க் கூறிச்சென்ற மழைக்கலாம் முடியும் முன்னே வந்துவிட்டதை உணா்த்த நினைக்கிறான்.
(iv) மலர்ந்திருந்த பூக்களைப் பார்த்து மகிழ்ந்து ஆட விரைந்து வருமாறு தலைவன் தன் தலைவியை அழைக்கிறான்.
21.
இயற்கை வேளாண்மை : இரசாயனக்கலப்பு இல்லாத வேளாண்மை முறையே “இயற்கை வேளாண்மை” எனப்படும்.
இரசாயன மருந்துகளால் நிலத்தில் ஏற்பட்ட நஞ்சினை அகற்ற, அறுவடை முடிந்த பிறகு வைக்கோலைச் சமமாய்ப் பரப்பி, மடியுமாறு செய்ய வேண்டும். மறுபருவம் வந்தவுடன் நிலத்தில் நீரைத் தேக்கி உழ வேண்டும்.
மேலும், உரச்செடிகளை வளர்த்து மடித்து உழச்செய்யலாம். நிலத்தில் கிடைக்கும் குப்பை கூளங்களை அந்நிலத்திற்கே உரமாய் அளிக்கலாம். மேற்கூறிய முறைகள் நிலத்திற்கு வளமை அளிக்கும்.
செழித்து வளர இயற்கை உரம் : மாட்டுச்சாணம், மாட்டுச்சிறுநீர் ஆகியவற்றினை வைக்கோலோடு கலந்து, மக்கச்செய்து தொழு உரத்தை உருவாக்க வேண்டும்.
அது நன்செய் நிலத்திற்குப் பயன் அளிக்கும். புன்செய் நிலத்திற்குக் காய்ந்த இலைச்சருகு, சாணத்தை எரிப்பதனால் கிட்டும் சாம்பல் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும்.
வேதிக்கலப்பில்லா மருந்து! : பூச்சிகளைக் கொல்ல வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை ஆகியவற்றை நன்கு இடிக்க வேண்டும். பின்பு, அதைக் கோமியத்திலே ஊற வைத்தல் வேண்டும்.
இதுவே வேதிக் கலப்பில்லாப் பூச்சிக்கொல்லி மருந்து ஆகும். _-
ஏழைகளின் கற்பக விருட்சம் : ஏழைகளின் கற்பக விருட்சம், பனை மரம் ஆகும்.
இது ஆழத்தில் நீர் மட்டம் குறையாதவாறு நீரைச் சேமித்து வைக்கும். அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையாது. மேலும், இது காற்றுத்தடுப்பானாய்ப் பயன்படுகிறது.
மதிப்புக்கூட்டுப் பொருள்கள் : பனைபரத்திலிருந்து கிட்டும் பதநீரையும், நுங்குவையும் மக்கள் விரும்பி உட்கொள்கின்றனர்.
வருவாயைப் பெருக்கும் நோக்கில் பதநீரை மதிப்புக்கூட்டுப் பொருள்களாய் மாற்றி விற்பனை செய்கின்றனர்.
அஃதாவது, பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றினை உருவாக்கி, விற்பனை செய்து, பெரும்பொருள் பெறுகின்றனர்.
22.
இயற்கைப் பாதுகாப்பு
ஒரு நாட்டின் வளம் காட்டுவளத்தினைப் பொறுத்தே அமையும் என்பர். காடு செழித்தால் நாடு செழிக்கும்.
அடர்ந்த காடுகளில் யானை, சிங்கம், புலி, மான் முதலான விலங்குகள் வாழ்கின்றன; பல்வேறு வகையான பறவைகளும் வாழ்கின்றன.
நோய் தீர்க்கும் மூலிகைகள், தேன் போன்றவற்றை நாம் காட்டிலிருந்தே பெறுகின்றோம். சந்தன மரம், தேக்கு மரம், மூங்கில் போன்றவை விளைவதும் காட்டில்தான். காட்டு மரங்கள் காற்றிலுள்ள தூசை அகற்றித் தூய்மைப்படுத்துகின்றன; தட்பவெப்ப நிலையைச் சமப்படுத்துகின்றன. காட்டிலுள்ள மரங்கள்தாம் மேகங்களைக் குளிர்வித்து மழையாகப் பெய்யச் செய்கின்றன.
இப்படிப் பல வகைகளில் நன்மை அளிக்கும் காட்டை மனிதன் தன் சுயநலத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறான்.
மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றுடன் ஆறுகளின் வளம் காத்து, இயற்கை வளங்கள் குறையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மாசுக்கட்டுப்பாடு, நெகிழிப்பைகளின் பயன்பாட்டைக் கைவிடுதல் போன்ற செயல்களால் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.
உயிரினப் பாதுகாப்பு
சுற்றுலா செல்வதாய்க் கூறிக்கொண்டு பலர் காட்டில் நுழைந்து, மதுவைக் குடித்துவிட்டு அலட்சியமாய் அதன் குப்பியைத் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர். உடைந்த அக்குப்பியின் பகுதிகள் யானையின் காலில் பதிந்து, நாளடைவில் அதன் உடற்பகுதியிலே தங்கிப் புண் ஏற்படச்செய்து அதற்குப் பெருந்துன்பம் இழைத்துவிடுகின்றன.
பாதுகாக்கப்பட்ட காடுகளில் வாழும் உயிரினங்களை வேட்டையாடுவதைத் தடுக்க அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
விலங்குகளைத் தந்தம், தோல், இறைச்சி போன்றவைகளுக்காக வேட்டையாடுவது தொடர்ந்தால் விலங்கு மற்றும் பறவை இனங்கள் அழிவை நோக்கிச் சென்றுவிடும்.
எனவே, அரசு உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விலங்கு மற்றும் பறவை இனங்களை காத்திட வேண்டும்.
நாழும் இயற்கை வளங்களை அழித்திடாமல் காத்திடுவோம். மழைவளம் பெருகிட, பொறுப்பினை உணர்ந்து செயல்படுவோம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards