11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
2.
காவடிச்சிந்து என்பது யாது?
3.
4.
உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
5.
இனம், மொழி ஆகியன குறித்து இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
6.
பேச்சுமொழி, எழுத்துமொழியைக்காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது. ஏன்?
7.
மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரி.
8.
மொழிமுதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
9.
சு. வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து, தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது?
10.
எழுதினான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை ________ ஆகும்
த்
இன்
ட்
ச்
11.
பகுபத உறுப்புகளுள் இடம் பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்.
பகுதி, இடைநிலை, சாரியை.
பகுதி, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி.
12.
“இனிதென” - இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
தனிக்குறில் முன் ஒற்று உமிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
13.
காவடிச்சிந்துவிற்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன்
அண்ணாமலையார்
முருகன்
பாரதியார்
14.
கூற்று “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு,
கூற்று சரி, விளக்கம் தவறு.
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
கூற்று தவறு, விளக்கம் சரி.
கூற்றும் தவறு, விளக்கமும் தவறு.
15.
மண்ணுக்கு வளம் சேர்ப்பன -
மண்புழு
ஊடுபயிர்
இயற்கை உரங்கள்
இவை மூன்றும்
16.
மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
அன்னம், கிண்ணம்
டமாரம், இங்ஙனம்
ரூபாய், லட்சாதிபதி
றெக்கை, அங்ஙனம்
17.
கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்”
- அடி மோனையைத் தெரிவு செய்க,
கபாடபுரங்களை - காவுகொண்ட
காலத்தால் - கனிமங்கள்
கபாடபுரங்களை - காலத்தால்
காலத்தால் - சாகாத
18.
19.
தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச் சிந்து என்பதை விளக்குக.
20.
இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க.
1.
பூரிக்கோ
2.
(i) தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச்சிந்து ஆகும்.
(ii) முருகப்பெருமானுக்கு அவன் அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் போது அன்பர்களால் பாடப்படும் பாடல்கள், காவடிச்சிந்து ஆகும்.
(iii) இவை சிந்து என்னும் இசைப்பாடல்களால் ஆனவை. காவடிச்சிந்து என்னும் நூலில் 22 இசைப்பாடல்கள் உள்ளன.
3.
4.
உயிரெழுத்து : (து - த் + ௨) - இச்சொல்லில் 'உ' என்னும் உயிரெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
பன்னிரண்டு : (டு - ட் + ௨) - இச்சொல்லில் 'உ' என்னும் உயிரெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
திருக்குறள் : ள் - இச்சொல்லில் மெய்யெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
நாலடியார் : ர் - இச்சொல்லில் மெய்யெழுத்து ஈற்றில் அமைந்துள்ளது.
5.
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை,
(i) வேரில்லாத மரம்,
(ii) கூடில்லாத பறவை
என இனம், மொழி குறித்து இரசூல் கம்சதோவ் குறிப்பிடுகிறார்.
6.
எழுத்து மொழியில், எழுதுவதை மட்டுமே மனிதனின் கை செய்கிறது.
பேச்சுமொழியில், முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக்காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதாய் அமைந்துள்ளது.
எனவே, பேச்சுமொழி எழுத்துமொழியைக்காட்டிலும் மிகுந்த உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது.
7.
(i) மனித சமூகத்தின் ஆதிநிலமாய் விளங்குவது மலையே ஆகும். தமிழ் இலக்கியங்கள் மலை நிலத்தைக் குறிஞ்சி என்று குறிப்பிடுகின்றன.
(ii) “சேயோன் மேய மைவரை உலகம்” என்று தொல்காப்பியமும், “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” என்று திருமுருகாற்றுப்படையும் கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்திக் கூறுகின்றன.
(iii) பழங்குடி மக்கள், ஓடும் நீரையே குடிநீராய்ப் பயன்படுத்தும் இயல்புடையவர்கள். எனவே, அவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்தில் ஒடும் சிற்றாறுகள், ஓடைகளில் இருந்து நீரெடுத்துப் பருகினர்.
8.
பன்னிரண்டு உயிரெழுத்துகளும் ௧, ச, த, ந, ப, ம, வ, ய ஞ, ங ஆகிய பத்து உயிர் ஏறிய மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும். (எ-டு) : அணி, ஆடை, இலை, ஈகை, உரல், ஊசல், எடு, ஏடு, ஐயம், ஒன்று, ஓடம், ஒளவை.
(எ-டு) : கனி, காவல், கிளி, கீரை, குயில், கூடு, கெடு, கேடு, கை, கொடு, கோவில், கெளவை.
சங்கு, சால்பு, சிலை, சீற்றம், சுருள், சூழ்ச்சி, செறு, சேய், சையம் (பொருள்), சொல், சோறு, செளரியம் (வீரம்).
தளிர், தாழ்வு, திரு, தீமை, துன்பம், தூற்று, தெரு, தேவை, தையல், தொழில், தோகை, தெளவை
நன்றி, நாடு, நிழல், நீர், நுங்கு, நூல், நெகிழ்ச்சி, நேயம், நைதல், நொய்ம்மை, நோய், நெளவி (மான்).
பழம், பாவை, பிடி, பீர்க்கு, புதுமை, பூமி, பெருமை, பேழை, பைய, பொழில், போக்கு, பெளவம் (கடல்.
மண், மான், மின், மீன், முதுமை, மூன்று, மென்மை, மேன்மை, மையல், மொக்கு, மோழை, மெளவல் (அரும்பு),
உயிர் பன்னிரண்டும் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய மெய் பதினொன்றும், குற்றியலுகரம் ஒன்றுமாக இருபத்து நான்கு எழுத்துகள் தமிழில் மொழிக்கு ஈற்றில் வரும்.
உயிர் தனித்தும் மெய்யோடு சேர்ந்தும் மொழிக்கு ஈற்றில் வரும்.
(எ-டு) : ஆ, ஈ, ஊ, ஏ; ஐ, ஒ, ஒள. ௮, இ, ௨, ௭, ஒ. (உயிர் தனித்து ஈறாயின) விள, பலா, கரி, தீ, கடு, பூ, சே௭, தே, தை, நொ, போ, வெள - உயிர், மெய்யோடு சேர்ந்து ஈறாயின,. உறிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், தமிழ், வாள் - மெய் ஈறாயின. எஃகு - குற்றியலுகரம் ஈறாயிற்று.
9.
காலநேரம் கருதாது தமிழ்ப் பயிர் தழைத்தோங்க வியர்வை சிந்த உழைத்தவர், தமிழ்த்தாய் தன் திருவடிகளைத் தொழுத தமிழ்ப் பற்றாளர்,
தமிழ் வயலினை ஆழ அறிவால் உழுதவர்,
பயனளிக்கும் நல்ல கருத்துகளை விதைத்தவர், ஆகியோருக்கெல்லாம் நிறைமணிகளாகிய இலக்கியச் செல்வங்களைத் தந்தவள், தமிழ்த்தாய்.
அத்தகைய தமிழ்த்தாயைப் பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எனப் பாடத்தான் வேண்டும்,
எண்ணற்ற இலக்கிய வளங்களைக் கொண்டிருந்த கபாடபுரத்தைக் கடல் காவு கொண்டு விழுங்கிய பின்னும் நிலைத்து நிற்பவள், தமிழ்த்தாய்.
எதிர்ப்புக்காற்றைத் தாண்டி, தடுத்து நிற்கும் அலைகடல், நெருப்பாறு, மலைமுகடு போன்ற சக்திகளை வென்று, தமிழ் செல்லட்டும் என்னும் பாடலைப் பாடத்தான் வேண்டும்.
காலத்தால் அழியாத தொல் கனிமங்கள் தமிழ் பற்றிக் கூறும் உரமான செய்திகளையெல்லாம் சேர்த்துக்கொண்டு பாடத்தான் வேண்டும்.
இவ்வாறு சு. வில்வரத்தினம் குறிப்பிடுகிறார்.
10.
(b)
இன்
11.
(d)
பகுதி, விகுதி.
12.
(a)
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
13.
(b)
அண்ணாமலையார்
14.
(b)
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
15.
(d)
இவை மூன்றும்
16.
(a)
அன்னம், கிண்ணம்
17.
(c)
கபாடபுரங்களை - காலத்தால்
18.
19.
காவடி என்பது தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது. காவடி எடுத்துச் செல்வோர் அதைச் சுமையாக எண்ணாமல் பாடியவாறே செல்வதாகும்.
20.
ஆதியில் வாழ்ந்த நிலம் : தமிழன் தொடக்கத்தில் வாழ்ந்த நிலம், குறிஞ்சியாகும். குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாகும். எங்கும் இயற்கை அழகு குடிகொண்டிருக்கும் மலைப்பகுதியில் வாழ்ந்த தமிழன் நாளடைவில் முல்லை, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் சென்று பரவி வாழத் தொடங்கினான். அப்படி வாழ்வதற்கு முயன்ற தமிழன், தான் இருக்குமிடத்திற்குத் தன்னைச் சூழ அமைந்திருக்கும் இயற்கைச் சூழலைக் கருத்தில் கொண்டே பெயரிடத் தொடங்கினான்.
மலையால் பெயர் பெற்ற ஊர்கள் : பாண்டி நாட்டிலே மதுரைக்கு அருகே ஒரு மலையும், சோழநாட்டிலே ஒரு மலையும், தொண்டை நாட்டிலே ஒரு மலையும் அமைந்துள்ளன. அம்மலைகளைச் சார்ந்து ஊர்கள் அமைந்துள்ளன. எனவே, அவ்வூர் மக்கள் அம்மலைகளை மறவாமல், தம்மூர்களுக்கு முறையே யானை மலை, சுவாமி மலை, தணிகை மலை திருத்தணி எனப் பெயரிட்டுள்ளனர்.
கோடு என்பது மலையைக் குறிக்கும். அத்தகைய கோடு ஒன்று சேலம் மாவட்டத்தில் உள்ளது. அக்கோட்டினை ஒட்டி வாழ்கின்ற மக்கள், தம்மூருக்குத் “திருச்செங்கோடு” என்று பெயரிட்டுள்ளனர். அக்கோடு செந்நிறம் வாய்ந்ததால் அது செங்கோடாயிற்று.
சோலையால் பெயர் பெற்ற ஊர்! : திருக்குற்றால மலை அடிவாரத்தில் கண்கவரும் தண்ணறுஞ்சோலைகள் உள்ளன. அச்சோலைகளுக்கு நடுவே ஒர் களர் உள்ளது. அவ்வூர் மக்கள், தம்மூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்றுத் தம்மூருக்குப் 'பைம்பொழில்' என்று பெயரிட்டனர். அஃது இக்காலத்தில் 'பம்புளி' எனத் திரிந்து வழங்குகிறது.
மரங்களால் பெயர் பெற்ற ஊர்! : கெடில நதிக்குத் தென்கரையில் பாதிரி மரங்கள் நிறைந்த இடம் உள்ளது. அவ்விடத்தில் அம்மரங்கள் சூழ வாழ்ந்த மக்கள் தம்மூருக்குத் “திருப்பாதிரிப்புலியூர்” எனப் பெயரிட்டனர்.
பசுக்களால் பெயர் பெற்ற ஊர்! : முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்னும் பெயர் பெறும், திருத்தொண்டராகிய சண்டேசுவரர் பசுக்களை மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் உள்ளது. அங்குத் தங்கி வாழத் தொடங்கிய மக்கள், தம்மூருக்குத் *திருஆப்பாடி” எனப் பெயரிட்டனர்.
இவ்வாறு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பண்டைய மக்கள், அவ்வவ்விடத்துச் சிறப்பிற்கேற்பப் பெயரிட்டு வழங்கிய திறனை எண்ணி நெஞ்சம் விம்மிதம் கொள்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards