11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
Class 11 Revision Exam
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வழங்கல் வழியில் உள்ள முதல் இடைநிலையர் யார்?
மொத்த வியாபாரி
உற்பத்தியாளர்
சில்லறை வியாபாரி
வாடிக்கையாளர்
2.
அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது
அலுவல் சார்ந்த மூலதனம்
தனியார் மூலதனம்
வங்கி மூலதனம்
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?
ICICI
HSBC
SIDBI
IDBI
4.
ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்
அகற்றீட்டு முகவர்
அனுப்புகை முகவர்
கழிவு முகவர்
தன் பொறுப்பு முகவர்
5.
கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
6.
உற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது
வியாபாரம்
தொழிற்ச்சாலை வணிகம் வர்த்தகம்
உள்நாட்டு வியாபாரத்தின் நோக்கம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது
7.
சுங்க வரிகள் மற்றும் வாணிபம் மீதான பொது ஒப்பந்தம் கையெழுத்தான நாள்
30 அக்டோபர் 1947
29 அக்டோபர் 1947
28 அக்டோபர் 1947
26 அக்டோபர் 1947
8.
இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது
முழுவதும் வரி விதியிற்குட்பட்டது
முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது
வருமானம் கருதப் படுவதில்லை
மறைமுக வரி
9.
அரசு நிறுமத்தின் பங்கு முதலீடு.............க்குக் குறையாமல் அரசு பெற்றிருக்க வேண்டும்.
75%
60%
95%
51%
10.
உற்பத்தி துறையின் கீழ் ஒரு குறு நிறுவனத்தின் முதலிட்டூ உச்ச வரம்பு _______ லட்சத்திற்கு மிகக்கூடாது
10
20
25
50
11.
கூட்டாண்மை பதிவு
கட்டாயம்
விருப்பத்தின் பேரில்
அவசியமில்லை
இவற்றில் ஏதுமில்லை
12.
கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.
பங்காதாயம்
இலாபம்
வட்டி
இவை எதுவும் இல்லை
13.
பணியமர்த்தல், கடன் சேகரிப்பு, ஆலோசனை போன்ற முழுமையான சேவைகள் வழங்குவதற்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு நிபந்தனை _______ என்று அழைக்கப்படுகிறது.
முதிர்வு ஏட்டுக்கடன் தரகு வணிகம்
தேசிய ஏட்டுக்கடன் வணிகம்
அனைத்து சேவை ஏட்டுக்கடன் தரகு வணிகம்
துணை நாடாத ஏட்டுக்கடன் வணிகம்
14.
நெறிமுறைகளுக்கான தேவைகள் ______
உயர்மட்ட மேலாண்மை
நடுத்தர அளவிலான மேலாளர்கள்
மேலாண்மையில் இல்லாத தொழிலாளர்கள்
மேற்கண்ட அனைத்தும்
15.
16.
கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?
தன்னிச்சை ஒப்பந்தம்
நிபந்தனை ஒப்பந்தம்
ஈட்டுறுதி ஒப்பந்தம்
பகிர்ந்தளித்தல்
17.
மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
தொடர்வண்டி
சாலை
கடல்
விமானம்
18.
இளவருடன் செய்யும் ஒப்பந்தம்
செல்தகு ஒப்பந்தம்
செல்லாத ஒப்பந்தம்
தவிர்தகு ஒப்பந்தம்
மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்
19.
பண்டகக் காப்பகம் ______ தடையை நீக்குகிறது.
ஆள்சார்
காலத் தடை
இடர்ப்பாட்டு தடை
அறிவுத் தடை
20.
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
22.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.
23.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?
24.
உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்பு (RTGS) பற்றி ஒரு குறுகிய குறிப்பு எழுதுக.
25.
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
26.
பன்னாட்டு நிதியின் முக்கியத்துவம் யாது?
27.
அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?
28.
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
29.
தனியாள் வணிகத்தில் இரகசியத்தன்மை எப்படி காப்பாற்ற இயலும்?
30.
பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.
31.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
32.
மாறுபயன் என்றால் என்ன?
33.
பணிக்கு ஏற்ற தொகையைப் பெற கோரிக்கைவிடக் கூடிய சூழ்நிலைகள் யாவை?
34.
அகற்றீட்டு முகவர் யார்? அவர் ஏன் நியமிக்கப்படுகிறார்.
35.
தவணை முறை விற்பனை என்றால் என்ன?
36.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?
37.
திரு .விக்ரம் என்பவர் தான் நடத்தி வரும் பின்னலாடை தொழிற்சாலைக்குக் தேவையான பஞ்சினை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறார் .இது எவ்வகை வியாபாரத்திற்கு எடூத்துகாட்டு?
38.
சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?
39.
40.
பங்குதாரர்கள் என்று யாரை அழைக்கலாம்?
41.
நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.
42.
பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிகளை குறிப்பிடுக.
43.
சில்லறை வியாபாரிகளின் வகைகளை விவரி
44.
உலகளாவிய வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?
45.
சில்லறை வியாபாரிகளின் பணிகள் யாவை?
46.
மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக
47.
ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.
48.
பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?
49.
வருமான வரியின் ஐந்து சிறப்பு கூறுகளை விளக்கி எழுதுக.
50.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்கள் -வரையறை தருக
51.
வணிக வங்கிகளால் வழங்கப்படும் குறுகிய கால நிதி ஆதாரங்களை சுருக்கமாக விளக்குக
52.
வணிகத்திற்கு உருதுணையானவற்றைச் சுருக்கமாக விவரி
53.
தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?
54.
நிறைவேற்றுதல் அடிப்படையில் ஒப்பந்தத்தின் வகைகள் யாவை?
1.
(a)
மொத்த வியாபாரி
2.
(d)
அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம்
3.
(b)
HSBC
4.
(b)
அனுப்புகை முகவர்
5.
(c)
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
6.
(a)
வியாபாரம்
7.
(a)
30 அக்டோபர் 1947
8.
(b)
முழுவதும் வரி விளக்கிற்குட்பட்டது
9.
(d)
51%
10.
(c)
25
11.
(b)
விருப்பத்தின் பேரில்
12.
(c)
வட்டி
13.
(c)
அனைத்து சேவை ஏட்டுக்கடன் தரகு வணிகம்
14.
(d)
மேற்கண்ட அனைத்தும்
15.
(d)
16.
(a)
தன்னிச்சை ஒப்பந்தம்
17.
(d)
விமானம்
18.
(b)
செல்லாத ஒப்பந்தம்
19.
(b)
காலத் தடை
20.
(a)
போக்குவரத்து
21.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
22.
குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பல வங்கிகளும் மற்றும் நிதி நிறுவனங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றன. அவையாவன
(i) வணிக வங்கிகள்: பொதுத்துறை வங்கிகள் (எ.கா) பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, தனியார் துறை வங்கி (எ.கா) ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, சிட்டி யூனியன் பாங்க், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி
(ii) வட்டார ஊரக வங்கிகள்:(எ.கா) பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, வள்ளலார் கிராம வங்கி.
(iii) கூட்டுறவு வங்கிகள்:(எ.கா) தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கி (TNSC Bank) மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள்.
(iv) குறும நிதி நிறுவனங்கள்: (எ.கா) முத்ரா வங்கி
23.
வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்துப் பண்டமாற்று முறையிலிருந்து நாணயமுறை, அஞ்சல் வழி வணிகம், வாடகைக் கடன் கொள்முதல் முறை, தவணை விற்பனை முறை போன்ற பன்முகத் தன்மையில் உருமாறி வளர்ந்துள்ளது.
24.
(i) இது 2013 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் தொடக்கப்பட்டது.
(ii) பரிவர்த்தனைகள் உண்மையான நேரத்தின் அடிப்படையில் தீர்க்கப்டுகின்றன.
(iii) மற்ற தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் தொகுக்காமல் ஒரு வங்கிக்கும் மற்றொரு வங்கிக்கும் இடையே ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தீர்வாக காணப்படுகிறது.
(iv) RTGS வசதி வார நாட்களில் காலை 9.00 மணி முதல் 4.30 மணி வரையும் சனிக்கிழமைகளில் 2.00 மணி வரை கிடைக்கின்றன.
(v) RTGS பரிமாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வங்கி விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்படுவதில்லை.
(vi) RTGS பரிவர்த்தனைக்கான குறைந்தபட்ச வரம்பு ரூபாய் 2 லட்சம் ஆகும்.
25.
(i) உள்ளூர் தொழில்களுக்கு அபாயம் : பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி உள்நாட்டுத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது.
(ii) வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை மாற்றுதல்: வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு மாறுவதன் மூலம் இந்த நாடுகளின் தொழில் முன்னேற்றம் தடைபடும்.
(iii) ஏழை மக்களுக்கு நன்மையில்லை: பணக்காரர்களால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடிகிறது.
(iv) தனிமனித சுதந்திற்கு அபாயம்: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்காமல் தடை ஏற்படுகிறது.
(v) உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு: உள்நாட்டு மக்களுக்கு கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.
(vi) வலுவான தகுதி நிலையை தவறாக பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவு பொருளாதார நிறுவனங்கள் ஆகும்.
(vii) இயற்கை வளங்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு இயற்கை வளங்களை தன சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.
(viii) அயல் நாட்டின் சுயநல வளர்ச்சிப் போக்கு: பன்னாட்டு நிறுமங்களின் கலாச்சாரத்தால் உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
(ix) உள்நாட்டு தொழில், மற்றும் பொருளாதார முன்னேற்றம் புறக்கணிப்பு: உள்நாட்டு வணிகம் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
26.
(i) பன்னாட்டு நிதியில் பல்வேறு நாடுகளின் நாணய ஒப்பீட்டு மதிப்புக்களையும் மற்றும் அதன் மாற்று விகிதங்களையும் நிர்ணயிப்பதில் உதவி புரிகிறது.
(ii) இது பல்வேறு நாடுகளின் பணவீக்க வீதங்களை ஒப்பிட்டு, எந்த நாட்டுப் பாத்திரங்களில் முதலீடு செய்வது என்ற முடிவுகளை முதலீட்டாளர்கள் எடுக்க உதவுகிறது.
(iii) இது பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலைமைகளை அறிந்து கொள்வதற்கும் மற்றும், சந்தை நிலவரங்களை தெரிந்து கொள்வதற்கும் உதவுகிறது.
(iv) பன்னாட்டு நிதி அறிக்கை அமைப்பின் (IFRS) மூலம் பல்வேறு நாடுகளின் நிதி அறிக்கைகளை ஒப்பாய்வு செய்ய உதவுகிறது.
(v) இது பன்னாட்டு நிதி அமைப்புக்களின் அடிப்படை கட்டமைப்புகளைப் அறிந்து கொள்ளவும் மற்றும் அவற்றிடையே சீர்நிலையைப் பராமரிப்பதற்கும் உதவுகிறது.
(vi) பன்னாட்டுப் பணவியல் நிதியம், உலக வங்கி போன்ற நிதி அமைப்புகள், பல்வேறு நாடுகளிடையே எழும் நிதி சார்ந்த பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றை சுமுகமாக தீர்க்க உதவுகின்றன.
27.
ஒரு நிறுமம் இந்தியாவிற்கு அப்பால் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் தொழிலிடம் உள்ள நிறுமம் அயல்நாட்டு நிறுமம் எனப்படும். இந்தியாவில் நிருமத்தை அமைப்பதற்குப் பின்வரும் ஆவணங்களை கண்டிப்பாக 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவைகள்
(i) சாசனத்தின் சான்றிதழ் நகல் அல்லது கூட்டுருவாத்தின் சான்றிதழ் (அ) அமைப்பு முறையேடு மற்றும் சங்க நடைமுறை வழிகள் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
(ii) நிறுமம் பதிவு அலுவலகம் உள்ள இடம்
(iii) இயக்குநர் மற்றும் செயலரின் பட்டியல்.
(iv) இந்தியாவின் தலைமை வியாபார அலுவலகத்தின் முகவரி.
(v) நிறுமச் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கிய இந்திய குடிமகனின் பெயர் மற்றும் முகவரி.
28.
(i) பொருட்களின் தயாரிப்பு , வடிவமைப்பு,
(ii) தளவாட அமைவிடம், சந்தை மூலங்களை தெரிவுசெய்தல்,உற்பத்தி கட்டமைப்பு,
(iii) விநியோகஸ்தர் அல்லது வணிகர் வலையமைப்பு,வடிவமைப்பு,பண்டகசாலை அமைவிடம்,தளவாட வரைபடம் மற்றும் பெயர்ச்சி பங்கீட்டு வடிவமைப்பு,உற்பத்தி திட்டம்,
(iv) சரக்கிருப்பு மேலாண்மை,சரக்கிருப்பின் நிலைகள் போக்குவரத்து வகையைச் தேர்வு செய்தல் சரக்கை கப்பலில் ஈற்றுதலின் அளவு,
(v) வழித்தடத்தை முடிவு செய்தல் மேலும் போக்குவரத்து ஒப்பந்தவியல் தொகுப்பு மூலப் பொருளை கையாளுதல் ஆகும்.
29.
தனியாள் வணிகத்தில் அவர் ஒருவரே உரிமையாளராதலால் தனது தொழில் பற்றி ரகசியங்களை எளிதாக காப்பாற்றலாம்.
30.
(i) வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்பட்டு காப்பீடு வேளாண்மை காப்பீடு ஆகும்.
(ii) நெல்,கோதுமை,கரும்பு எண்ணெய் வித்துகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
31.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
32.
போலக்கின் இலக்கணம் (Definition of pollock): ஒருவரின் வாக்குறுதியை பெற மற்றவரால் அளிக்கப்படும் விலையே மறுபயனாகும். அவ்வாறு மதிப்பைப் பெரும் பொருட்டு செய்யப்பட்ட வாக்குறுதி செயல்படுத்த கூடியதாகும்.
33.
(i) ஒரு ஒப்பந்தம் செல்லாதது என கண்டுபிடிக்கப்படும் பொழுது.
(ii) கைமாறு கருதாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் ஏதேனும் செய்யப்படும் பொழுது.
(iii) ஒரு நபர் முழு ஒப்பந்தத்தையும்நிறைவேற்ற தவறுதல் அல்லது நிறைவேற்றாமல் விட்டு விடும் பொழுது.
(iv) ஒரு ஒப்பந்தம் பிரித்தளிக்ககூடியதாக இருந்தால்
(vi) ஒரு ஒப்பந்தம் மோசமாக நிறைவேற்றப்பட்டால்.
34.
(i) இறக்குமதி துறைமுகத்திலிருந்து சரக்கை அகற்றீடு செய்வதற்கு பல்வேறு சுங்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
(ii) பொதுவாக இறக்குமதியாளர் இந்த சுங்க நடைமுறைகளை தன்னால் பின்பற்ற முடியாத நிலையில் சரக்கை துறைமுகத்திலிருந்து வெளியே கொணர்வதற்கு அகற்றிவிட்டு வழங்குகிறார்.
(iii) இறக்குமதியாளர் இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு துறைமுகத்திலிருந்து வெளியே கொணர்வதற்கு எதுவாக அகற்றீட்டு முகவருக்கு அனுப்பி வைக்கிறார். அகற்றீட்டு முகவர் கழிவு அடிப்படையில் இப்பணியை செய்கிறார்.
35.
இம்முறையில் பொருள்களை வாங்கிய உடன் பொருளுக்குரிய பணத்தை உடனடியாக செலுத்தாமல் பல தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் முதல் தவணை செலுத்திய உடனேயே வாங்கியவர் பொருளின் உரிமையாளர் ஆகிறார். இதனை நீட்டிய செலுத்துகை முறை என்று கூறலாம்.
36.
மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017ன் கீழ் ஒரு மாநிலத்திற்குள்ளே அளிக்கபப்டும் சரக்குகள் மீது மத்திய அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரியாகும்.
37.
திரு. விக்ரம் என்பவர் தான் நடத்தி வரும் பின்னலாடைத் தொழிற்சாலைக்குத் தேவையான பஞ்சினை வெளிநாட்டிலிருந்து வாங்குவதால், இது இறக்குமதி வியாபாரம் ஆகும். உள்நாட்டு தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதே வியாபாரம் ஆகும்.
38.
(i) கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைத் தொழில்கள் பல நூற்றாண்டாக இருந்து வருகின்றன.
(ii) உலக வர்த்தகத்தில் சேவைத் தொழில்கள் 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
(iii) உலகப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த துறையாகச் சேவைத் துறை உருவாகியுள்ளது.
39.
40.
எவர் ஒருவர், சொந்த மூலதனம் கொண்டு ஒரு தொழிலைத் தொடங்கி அதில் ஏற்படும் இடர்களை ஏற்கின்றாரோ,அவரே தொழிலின் உரிமையாளர் ஆவார் அல்லது பங்குதாரர் ஆவார்.எவர் ஒருவர் நிறுமத்தின் பங்குகளை வாங்குகிறாரோ அவரும் பங்குதாரர் ஆவர்.
41.
(i) பல்வேறு இடங்களில் சாலைகள் இணைப்பதன் மூலம் நாட்டிலுள்ள பிரதான தேசிய வழியில் இணையாமல் தொலைதூரத்தில் உள்ள கிராப்புறங்களில் வாழும் பெரும்பாலான மக்களை இணைத்து அடிப்படை உள்கட்டமைப்புகளை வழங்கியது.
(ii) இந்திய சரக்கேற்றிகள் மற்றும் பேருந்துகள் சாலை போக்குவரத்தின் பரிணாம வளர்ச்சியின் வரவாக கிடைத்துள்ளன.
42.
பன்னாட்டு நாணய நிதியத்தின் செயல்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
(i) இது பன்னாட்டு அளவில் குறுகிய கால் கடன் நிறுவனமாக செயல்படுகிறது
(ii) இது பரிமாற்ற விகிதங்களில் சாதாரண சரிக்கட்டுதல்களை செய்வதற்கு உதவுகிறது
(iii) இது உறுப்பு நாடுகளின் நாணயங்களை தன்னகத்தே வைத்துள்ளது.அதிலிருந்த்து கடன் வாங்க கூடிய உறுப்பினர் நாடுகள் நாணய மதிப்பை பெற்று கொள்ளலாம்
(iv) நல்ல வலுவான பொருளாதார மற்றும் நிதிக்கொள்கையை பின்பற்றும் நாடுகளுக்கு பொருளாதார நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது
(v) உறுப்பு நாடுகளின் பயனுள்ள கொள்கைகளை வலுப்படுத்தவும் செயல்படுத்தவும் தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி அளிக்கிறது.வங்கியியல்,நிதி,நாணய மற்றும் பரிமாற்றக் கொள்கைகளை வடிவமைப்பதில் தொழில்நுட்ப உதவி வழங்கப்படுகிறது
(vi) உறுப்பினர் நாடுகளின் வாணிக சமநிலையில் ஏற்படும் சமமற்ற தன்மையை சரி செய்ய உதவுகிறது.
43.
சில்லறை வியாபாரிகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். சுற்றாடும் அல்லது சில்லறை வியாபாரிகள், நிலையிட பேரளவு சில்லறை வியாபார அமைப்புகள், இவற்றை ஒவ்வொன்றையும் மேலும் பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவையாவன:
(i) சுற்றாடும் /நடைபாதை வியாபாரிகள்: சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள், தெரு வியாபாரிகள், சந்தை வியாபாரிகள், இடம் பெயர் வியாபாரிகள்.
(ii) நிலையிட சிற்றளவு சில்லறை வியாபாரிகள்: தெருக்கடை வியாபாரிகள், பொதுப் பண்டக சாலைகள், குறிப்பிட்ட வகைப் பண்டக சாலைகள், சிறப்பு பண்டக சாலைகள், இரண்டம் தர பொருட்கள் விற்போர்.
(iii) நிலையிட பேரளவு சிலரை வியாபார அமைப்புகள்: துறைவாரிப் பண்டக சாலைகள் மடங்குக் கடைகள், சிறப்பங்காடிகள் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், வாடகைக் கொள்முதல் முறை மற்றும் தவணை விற்பனை முறை, அஞ்சல்வழி விற்பனை, தானியங்கி விற்பனை எந்திரங்கள், வணிக வளாகங்கள், தொலைத்தொடர்பு வழி சந்தை தளவிற்பனை.
44.
உலகளாவிய வைப்பு இரசீதின் சிறப்பம்சங்கள்:
(i) இது மற்ற மாற்றுமுறை சாதனங்களைப் போலவே தடையின்றி வியாபாரம் செய்யப்படும் மாற்றுமுறை பிணையமாகும்.
(ii) கடந்த மூன்றாண்டுகளாக வலுவான நிதிநிலையில் செயல்பட்டுவரும் நிறுமங்களுக்கு பன்னாட்டு உலகளாவிய வைப்பு இரசீதுகள் மூலம் நிதிச்சந்தையில் நுழைய அனுமதி தரப்படுகிறது. இருப்பினும் இவற்றைப்பெற நிறுமங்கள், அந்நிய முதலீடு முன்னேற்ற வாரியத்திடமும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
(iii) உலகளாவிய வைப்பு இரசீதுகள் அனைத்தும் நாட்டு முதலீட்ட்டாளருக்கும், அவர்கள் நாட்டு செலாவணியில் அல்லது பொதுவாக ஏற்கப்படும் செலாவணியில் வெளியிடப்படுகிறது.
(iv) உலகளாவிய வைப்பு இரசீதுகள் அந்தந்த நாட்டுப் பணமதிப்பில் குறிப்பிடப்பட்டாலும் அவற்றின் பங்கு மதிப்பு உள்நாட்டு பணமதிப்பு அடிப்படையிலேயே அமைந்திருக்கும்.
(v) உலகளாவிய வைப்பு இரசீதை வைத்திருப்பவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பங்கிற்கு உரிய பங்காதாயம் மற்றும் பங்கு மேலுதியம் பெற உரிமை பெற்றவராவார்.
(vi) முதலீட்டாளர் உலகளாவிய வைப்பு இரசீதை நேர்மைப்பங்குகளாக மாற்றி, உள்நாட்டு பாதுகாவலர் மூலம் விற்றுக்கொள்ளலாம். வெளியீடு நிகழ்ந்த பிறகு 45 நாட்கள் கழித்து இவ்வாறு செய்ய முடியும்.
(viii) உலகளாவிய வைப்பு இரசீதினை வழங்கும் நிறுமம், ஒரே தனிப்பட்ட அமைப்பின் மூலம் தனது அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்றுகிறது.
45.
சில்லறை வியாபாரியின் பணிகள் பின்வருமாறு:
(i) சில்லறை வியாபாரிகள் நுகர்வோரின் தேவையை, மதிப்பிட்டு பல்வேறு மொத்த வியாபாரிகளிடமிருந்து பல்வேறு வகையானபி பொருட்களை வாங்கி தமது கடைகளில் விற்பனைக்கு வைக்கின்றனர். ஒவ்வொரு மொத்த வியாபாரியிடமிருந்தும், அவரிடமுள்ள மிகச்சிறந்த பொருட்களை வாங்கி வைத்து அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி செய்கின்றனர். ஆகவே, அவர்கள் கொள்முதல் செய்தல், ஒன்று திரட்டல் ஆகிய இரட்டைப் பணிகளையும் செய்கின்றனர்.
(ii) மொத்தவியாபாரிகளிடமிருந்தும் பெற்ற பொருட்களை, சில்லறை வியாபாரிகள் தம் பண்டகக் காப்பில் விற்பனைக்கு தயார் நிலையில் சேமித்து வைக்கின்றனர்.
(iii) விற்பனை செய்தல்: சில்லறை வியாபாரி நுகர்வோர்களுக்கு அவரது தேவைகள், சுவை, விருப்பம், மற்றும் முன்னுரிமைக்கு ஏற்ப சிறு அளவுகளில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் விற்பனையின் அளவு அதிகரிக்கின்றது.
(iv) வகைப்படுத்துதல் மற்றும் கட்டுமம் செய்தல்: உற்பத்தியாளர் மற்றும் மொத்த வியாபாரிகளால் வகைப்படுத்தப்படாத பொருட்களை அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி, அவற்றை கட்டுமம் செய்கின்றனர்.
(v) இடர் ஏற்றுதல்: சில்லறை வியாபாரி நுகர்வோரின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி இருப்பு வைக்கிறார். இதனால் தீயினால் அழிவு, திருட்டு, தரக்குறைவு, கேட்டுப் போதல், மற்றும் விலை ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றால் ஏற்படும் இடர்களை எவர் ஏற்றுக் கொள்கிறார்.
(vi) போக்குவரத்து செய்தல்: சில்லறை வியாபாரி உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை தமது சில்லறை விற்பனையகங்களுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் போக்குவரத்துப் பணியினை மேற்கொள்கிறார்.
(vii) நிதியளிப்பு: சில சில்லறை வியாபாரிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் விற்பனை மூலம் நிதி வசதி அளிக்கின்றனர்.
(viii) இதர சேவைகள்: விற்பனைக்குப்பின் குறைபாடுகளுடைய பொருட்களை மாற்றித்தருதல் போன்ற பணிகளை இவர் செய்கிறார். மேலும் விற்பனைக்கு, பின் சேவை மற்றும் வீட்டுக்கே பொருட்களை கொண்டு சென்று விநியோகம் செய்தல் போன்ற பணிகளையும் அளிக்கிறார்.
46.
மூலதனக் கணக்கில் மூன்று இனங்கள் உள்ளன. தனியார் மூலதனம் (Private Capital), வங்கி மூலதனம்(Banking Capital),அலுவல் சார்ந்த மூலதனம் (Offical Capital)
தனியார் மூலதனம் : தனியார் மூலதனம் அயல்நாட்டு முதலீடுகள், நீண்ட காலக் கடன்கள் மற்றும் அயல்நாட்டு நாணய வாய்ப்பு ஆகியவற்றைக் உள்ளடக்கியது
வங்கி மூலதனம் ; அந்தியச் செலாவணியைக் கையாள அதிகாரம் கொண்ட வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளின் வெளிப்புற நிதி சார்ந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அளவு, வங்கி மூலதனத்தில் அடங்குகிறது
அலுவல்சார்ந்த மூலதனம்: அலுவல்சார்ந்த மூலதனத்தில் அயல்நாட்டு நாணயம், அரசிடம் உள்ள சிறப்பு எடுப்பு உரிமைகள் போன்ற வகைகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் சொத்துகள் போன்றவை அடங்குகின்றது
47.
பின்வருமான ஏற்றுமதி வணிகத்தின் நடைமுறைகளாகும்.
(i) வியாபார தகவல் வினவல்: ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரிடமிருந்தோ அல்லது அவரின் முகவரிடமிருந்தோ பொருட்களை இறக்குமதி செய்வதற்கான எழுத்து மூலமான விசாரணையைப் பெறுகிறார்.
(ii) சரக்காணை பெறுதல் மற்றும் ஏற்றுமதி ஆணையை உறுதிப்படுத்துதல்: இறக்குமதியாளர் வியாபார விசாரணைக்குப் பிறகு சரக்கை வாங்குவதற்கான சரக்கணையை தானோ அல்லது தனது முகவர் மூலமோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்கிறார்.
(iii) நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்தல்: அயல் நாட்டில் உள்ள இறக்குமதியாளரைப் பற்றியும் அவரின் பணம் செலுத்தும் திறன் பற்றியும் ஏற்றுமதியாளர் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவே அவர் இறக்குமதியாளரை நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்து தருமாறு கோருகிறார்.
(iv) ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறியீட்டு ஏன் பெறுதல் : ஏற்றுமதியாளர் குறியீட்டு எண் பெற அயல்நாட்டு வணிக பொது இயக்குநரின் மண்டல அலுவலகத்திற்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
(v) உறுப்பினர் சான்று பெறுதல்: ஏற்றுமதியாளர் அரசு வழங்கும் ஏற்றுமதி தொடர்பான சலுகைகளை பெற வேண்டுமெனில் ஏற்றுமதி வளர்ச்சிக் குழுவிடம் உறுப்பினர் சான்று பெற வேண்டும்.
(vi) பொருட்களை உற்பத்தி செய்தல்/கொள்முதல் செய்தல்/ கட்டுமம் செய்தல்: ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறிப்பிட்ட பொருட்களை தொழிற்சாலையிலிருந்தோ அல்லது சந்தையிலிருந்தோ தருவித்துக்கொள்ள வேண்டும். இறக்குமதியாளர் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்கள் கட்டுமம் செய்யப்பட வேண்டும்.
(vii) ஏற்றுமதி ஆய்வு சான்று: பொருட்கள் கட்டுமம் செய்யப்பட்ட பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு முகாமைக்கு விண்ணப்பித்து சான்று பெற வேண்டும்.
(vii) பொருட்களை காப்பீடு செய்தல்: ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்புவதற்கு முன் உரிய நிறுவனத்தில் காப்பீடு செய்ய வேண்டும்.
(ix) தோற்றுவாய் சான்றிதழ் : இறக்குமதி வணிக நடைமுறையில் தோற்றுவாய் சான்று மிக முக்கிய ஆவணமாகும். இச்சான்று ஏற்றுமதி செய்யப்படும் பொருள் குறிப்பிட்ட நாட்டில் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்ற உறுதி மொழியை விளம்புகிறது.
(x) வணிக தூதுவர் இடாப்பு : இறக்குமதியாகும் சரக்கின் மதிப்பு சரியானது தான் என்று சான்று பகரக்கூடிய ஆவணமே வாணிகத் தூதுவர் இடாப்பு ஆகும். இறக்குமதி நாடு சுங்க அதிகாரிகள் சரக்கு கட்டுமத்தை திறந்து பார்க்காமலே இடாப்பில் குறிப்பிட்ட மதிப்பின் அடிப்படையில் சுங்கத் தீர்வை விதிப்பர்.
(xi) அனுப்புகை முகவரி அமர்த்துதல் : ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு சான்று பெற்ற பிறகு சரக்கை அனுப்ப சுங்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். பொதுவாக இந்த அனுமதிபெறும் பணிக்காக தன் சார்பாக அனுப்புகை முகவரி நியமிக்கிறார்.
(xii) துறைமுகத்திற்கு சரக்கை அனுப்புதல் மற்றும் முகவருக்கு தகவல் தருதல்: ஏற்றுமதியாளர் சரக்கைத் துறைமுகத்திற்கு இரயில் அல்லது லாரி மூலம் அனுப்பி விட்டு, அதற்குரிய இரயில் ரசீது லாரி இரசீதை அனுப்புகை முகவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(xiii) அனுப்புகை முகவர் பின்பற்ற வேண்டிய சுங்க நடைமுறைகள்: துறைமுக நகரத்தில் சரக்கைப் பெற்றுக் கொள்ளுதல், கப்பலிடு ஆணை பெறுதல், கப்பல் வாடகை முறி ஏற்பாடு செய்தல்.
(xiv) சரக்கை அகற்றுதல் தொடர்பான சுங்க நடைமுறைகள்: துறைமுகக் கட்டணம் செலுத்துதல் சரக்கை அனுப்ப அனுமதி பெறுதல், கப்பல் தலைவர் இரசீது பெறுதல், கப்பல் தலைவர் இரசீது பெறுதல், கப்பல் இரசீது பெறுதல்.
(xv) வாணிக இடாப்பைத் தயாரித்தல் மற்றும் வங்கியில் ஆவணங்களை தாக்கல் செய்தல் : இறக்குமதியாளருடன் செய்து கொண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் தொடர்பாக வாணிக இடாப்பைத் தயாரிக்கிறார். அதன் பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தன்னுடைய வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்.
(xvi) பணம் செலுத்தப் பெறுதல்: மாற்றுச்சீட்டு மூலம் பணம் செலுத்தப் பெறல் (அ) செலுத்தகைக்குப் பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தல் (ஆ) ஏற்புக்குப் பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தல், வங்கி சான்று மூலம் பணம் செலுத்தப் பெறல்.
48.
நிலவியல் சிறப்பு தேர்ச்சி: உலக நாடுகள் அனைத்தும் தாங்கள் கொண்டுள்ள இயற்கை வளங்கள், மனித ஆற்றல், தொழில்நுட்பம், மூலதனம் ஆகியவை அடிப்படையில் வேறுபடுகின்றன. சில நாடுகளில் கனிம வளங்கள், நீர் மின்சக்தி, உலோக வளங்கள் போன்றவை அதிகமாகவும் வேறு சில நாடுகளில் முன்னேறிய உற்பத்தி தொழில்நுட்பம், திறமையான மக்கள் தொகை, மூலதன கருவிகள் ஆகியவை அதிகமாகவும் இருக்கும். எனவே, தன்னிடம் உபரியாக உள்ள வளங்களை மற்ற நாடுகளுக்கு கொடுத்து அங்கிருந்து பற்றாக்குறையான வளங்களைப் பெற்று கொள்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது.
(ii) வளங்களை தேவையான அளவிற்குப் பயன்படுத்துதல்: எந்த நாடு தன்னால் திறமையாக பொருட்களை தயாரிக்க இயலவில்லையோ அது மற்ற நாடுகளிலிருந்து அதாவது திறமையாக பொருட்களைத் தயாரிக்கக்கூடிய நாடுகளிலிருந்து உபரியாக உள்ள பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற கோட்பாட்டின்படிதான் பன்னாட்டு வணிகம் செயல்பட்டு வருகிறது. இது அந்நாட்டின் வளங்களை தேவையான அளவிற்கு பயன்படுத்த உதவுகிறது.
(iii) பொருளாதார வளர்ச்சி: வளரும் நாடுகள் இயந்திரம், தொழில்நுட்பம் மற்றும் கருவிகள் போன்றவற்றை இறக்குமதி செய்வதன் மூலமாக விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. எடுத்துக்காட்டாக சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த பொருளாதார வளர்ச்சியில் இருந்து அதிக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு பன்னாட்டு வணிகம் காரணமாக இருந்திருக்கும். வளர்ச்சி அடைந்த நாடுகளாகிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் கூட பன்னாட்டு வணிகத்தின் இறக்குமதி செய்து முடிவற்ற பொருட்களாக ஏற்றுமதி செய்து விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கும்.
(iv) வேலைவாய்ப்பை உருவாக்குதல்: வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு மற்றும் வளர்ச்சிக்கும் பன்னாட்டு வணிகம் உதவுவதால் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறது. மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் மூலம் நேரடி வேலைவாய்ப்பையும், அனுப்புகை மற்றும் அகற்றீட்டு முகவர்கள், தேவைக் குறிப்பீட்டகங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் புற ஒப்படைப்பு முகமைகள் போன்றவற்றிற்கும் மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.
(v) வாழ்க்கைத் தரம் மேம்படுதல்: உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத பல்வேறுவிதமான பொருட்கள் அல்லது சேவைகளை பன்னாட்டு வணிகத்தின் மூலம் மக்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்க முடிகிறது. நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(vi) விலை சமனிலைப்படுத்தல்: உலகச் சந்தையில் தினந்தோறும் விலை மாற்றம் அடையக்கூடிய பல்வேறு பொருட்களின் விலையை பன்னாட்டு வணிகம் சமப்படுத்துகிறது. எப்பொழுதெல்லாம் குறிப்பிட்டப் பொருட்களின் விலை உள் நாட்டில் உயருகிறதோ அப்பொழுது மற்ற நாடுகளிலிருந்து அப்பொருட்களை இறக்குமதி செய்து விலையைச் சமன் செய்கிறது. அதே போன்று குறிப்பிட்ட பொருள்களின் விலை குறையும் போதெல்லாம் அந்த பொருள்களை அதிக அளவில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் விலையை நிலைப்படுத்துகிறது. உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிக ஏற்றத்தாழ்வாக இல்லாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
(vii) அதிக இலாபத்திற்கான வாய்ப்பு: அதிகமாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொருட்களை பன்னாட்டு சந்தையில் பல்வேறு நாடுகளுக்கும் அதிக விலையில் விற்பனை செய்வதற்கு பன்னாட்டு வணிகம் உதவுகிறது. ஏதன் பயனாக அதிக இலாபத்தை ஈட்ட முடிகிறது.
(viii) முழுத் திறனையும் பயன்படுத்துதல்: பன்னாட்டு வணிகம் உலக நாடுகளில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அதிக அளவில் சரக்கு மற்றும் பொருட்களை உலகச் சந்தையில் விற்பதற்கு உதவி செய்கிறது. இதன் மூலம் அந்நிறுவனங்கள் தன்னுடைய இயந்திரம் மற்றும் தொழில் நுட்பத்தை முழுமையான அளவில் பயன்படுத்துகிறது.
(ix) பன்னாட்டு அமைதி: உலக நாடுகள் தனித்தனியே இயங்கினாலும் பன்னாட்டு வணிகத்தினால் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிறது. கலாச்சாரம், கருத்துகள் மற்றும் பரஸ்பர புரிந்துணருந்தல் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. பன்னாட்டு வணிகம் உலக மக்களிடையே கலாச்சார சமூக உறவுகளை வளர்க்க உதவுகிறது. ஒட்டு மொத்தமாக உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.
49.
வருமானங்கள் வருமான வரிச் சட்டத்தின்படி தனித்தனியாக கணக்கிடப்படும். இத்தலைப்புகளின் கீழ் பெறப்படும் வருமானத்தின் கூட்டுத் தொகையிலிருந்து நட்டங்கள் ஏதேனும் இருப்பின் அவை கழிக்கப்பட்டு கிடைக்கும் தொகையே முழு மொத்த வருமானம் என அழைக்கப்படுகிறது.
(i) சம்பள வருமானம்
(ii) வீட்டு சொத்திலிருந்து வருமானம்
(iii) வாணிகம் மற்றும் அலுவல் சார்ந்த தொழிலின் வருமானம்
(iv) மூலதன ஆதாயங்கள்
(v) ஏனைய ஆதாரங்களிலிருந்து வருமானம் முழு மொத்த வருமானம்.
50.
(i) குறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில்துறையில் ரூ 25. இலட்சத்திரகுள்ளும் சேவைத்தொழில் துறையில் ரூ 10 இலட்சத்திரகுள்ளும் முதலீடு செய்திருந்தால் அது குறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(ii) சிறு தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 25 இலட்சத்துக்கு மேல் 5 கோடிக்கு மிகாமல் சேவைத் தொழில் துறை உபகரணங்கலில் ரூ 10 இலட்சத்துக்கு மேல் ரூ 2 கோடிக்கு மிகாமல் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனம் என்று அழைக்கப்படும்
(iii ) நடுத்ததர தொழில் நிறுவனம் : ஒரு நிறுவனம் உற்பத்தி தொழில் துறையில் இயந்திரம் மற்றும் ஆலைகளில் ரூ 10 கோடிக்கு மிக்காமலும் சேவை தொழில் துறையில் உபகரணங்களில் ரூ 2 கோடிக்கு மேல் ரூ 5 கோடிக்கு மிகாமலும் முதலீடு செய்திருந்தால் அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனம் என்று அழைக்கப்டும்
51.
(i) கடன்களும் முன்பணங்களும் (Loan and Advances) : கடன் என்பது கடன் கோருபவரின் கடன் கணக்கில் ஒட்டு மொத்தக் கடன் தொகையையும் ஒரே வீச்சில் வரவு வைக்கப்பட்ட தொகையைக் குறிக்கும்.கடன் பெறுநர் அவ்வாறு வரவு வைக்கப்பட்ட தொகையை, அனைத்தையும் ஒட்டு மொத்தமாக பெற்று பயன்படுத்துகிறார்.கடன் பெற்ற தொகையை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தவணைகளில் திருப்புச் செலுத்துவார்.ஆனால் இந்தக் கடனுக்கான வட்டி, கடன் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து திருப்பி அடைக்கும் நாள் வரையிலான காலத்திற்கு மொத்தக் கடன் தொகையின் மீது கணக்கிடப்படும்.இவ்வகை கடன்கள் பிணையத்தை வைத்துக் கொண்டோ அல்லது பிணையம் இல்லாமலும் வழங்கப்படலாம்.கடன் மற்றும் முன்பணங்கள் வழக்கமாக நிலைவைப்பு ரசீது, சரக்குரிமை ஆவணங்கள், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் போன்ற ஒரு சில பிணையங்களை ஈடாக பெற்றுக்கொண்டு வழங்கப்படுகிறது.
(ii) வங்கிமேல்வரைப்பற்று (Bank Overdraft): வங்கி மேல்வரைப்பற்று என்பது வங்கியில் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டு ஒரு வாடிக்கையாளரின் வங்கி நடப்பு கணக்கில் வரவில் இருக்கும் தொகையை விட அதிகமான தொகையை எடுத்துப் பயனப்டுத்திக்கொள்ளும் ஓரி ஏற்பாடு ஆகும்.எவ்வளவு தொகை கடனாகப் பெறப்படுகிறதோ அதற்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது.ஒவ்வொரு வடிக்கையாளருக்கான உரிய மேல்வரைப்பற்றின் உச்ச வரம்பு அவரின் நடப்பு கணக்கில் சராசரியாக புழக்கத்திலுள்ள வரவிருப்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
(iii) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல் (Discounting the Bill of Exchange) : சரக்குகளை கடன் அடிப்படையில் விற்கும்போது,விற்பவர் வாங்குபவரின் பேரில் மாற்றுச்சீட்டை எழுதுகிறார்.மாற்றுச்சீட்டு சராசரியாக 15 நாள் முதல் அதிகபட்சம் 180 நாட்கள் வரையிலான காலத்திற்கு வரையப்படுகிறது.இந்நிலையில் சரக்கைக் கடனுக்கு விற்ற விற்பனையாளர் மாற்றுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு முன்பாக பணத்தைப் பெற முடியாத நிலையில், மாற்றுச் சீட்டை தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் தள்ளுபடி செய்து, பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்.மாற்றுச் சீட்டை தள்ளுபடி செய்தல் என்பது, அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாக வங்கிகளிடம் தள்ளுபடியில் விற்கப் பணம் பெரும் ஒரு நடவடிக்கையைக் குறிக்கிறது.
(iv) தூயக் கடன் / பிணையமற்ற கடன் (Clean Loan) : தூய / பிணையமற்ற கடன் என்பது எவ்விதமான பிணையங்களையும் ஈடாகப் பெறாமல் கடன் பெறுநரின் குணநலன்கள், திருப்புச் செலுத்தும் திறன் மற்றும் அவரின் செயல் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் தரப்படுவதாகும்.
(v) வணிகத்தாள் (Commercial paper) : வாக்குறுதித் தாளின் வடிவத்தில் எவ்விதப் பிணையமும் இல்லாமல் நிறுமங்களால் பங்குச் சந்தையில் வெளியிடப்படும்.ஓர் ஆவணத்திற்கு வணிகத்தாள் என்று பெயர்.கூட்டுப் பங்கு நிறுமங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் பதிவு பெற்ற முதன்மை முகவர்கள் (Primary Dealers) மற்றும் அனைத்திந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை வணிகத்தாளை வெளியிட தகுதி பெற்ற நிறுவனங்களாகும்.இவ்வகை வணிகத்தாள் முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.இவ்வகைத் தாள்கள் இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் விரிவு 45w ன் கீழ் வெளியிடப்படுகிறது.இது ஒரு குறுகிய கால நிதி திரட்டும் ஆவணமாக செயல்படுகிறது.குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 365 நாட்கள் தவணையில் முதிர்வடையுமாறு இவ்வகை பத்திரங்கள் வெளியிடப்படுகிறது.
52.
(i) போக்குவரத்து : உற்பத்தி செய்த பொருட்களை உற்பத்தி செய்த பகுதிலேயே அனைத்தையும் விற்பது அரிது. அவற்றை நாட்டின் (அல்லது) உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நுகர்வோருகளுக்குச் சென்று சேர்க்க வேண்டும்.
(ii) வங்கியில்: வங்கிகளின் உதவியின்றி எந்த தொழில் அமைப்பும் இயங்க முடியாத அளவிற்கு வங்கிச்சேவை மகத்துவம் பெற்று விளங்குகிறது. வங்கிகள் தொழில் அமைப்புகளிடம் உள்ள பணத்தை வைப்புகளாகப் பெறுவதுடன் தொழில் அமைப்புக்குத் தேவையான நிதியை பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் கிடைக்க வகை செய்கிறது. வங்கி நிதியின் மூலம் தொழில் அமைப்புகள் நில சொத்து வாங்குதல் சரக்கு கொள்முதல், இயந்திரம் வாங்குதல் இவ்வாறு நடைமுறை செலவுகளைச் செய்ய ஒரு தொழில் அமைப்பிற்கு குருதி ஓட்டமாக செயல்படுகிறது.
(iii) காப்பீடு: வியாபாரம் நடத்துவது என்பது முழுக்க முழுக்க இடர்பாடு செறிந்த செயலாகும். வியாபாரம் நிறுமங்கள் கேட்டார் என்ற கடலில் ஏப்போதும் நீந்திச் செல்லும் கப்பல் ஆகும். எல்லா தொழில் நிறுமங்களும், தீ, களவு, சூறாவளி, நிலா நடுக்கம், கடல் நடுக்கம், வெடிவிபத்து, இயந்திரக் கோளாறு போன்ற பலதரப்பட்ட இடர்பாட்டால் காப்பீடு செய்ய வேண்டிய அவசியமாகிறது.
(iv) பண்டகக் காப்பு செய்தல்: சாதாரணமாக பொருட்கள் யாவும் உற்பத்தி செய்யப்பட்ட உடனே விற்கப்படுவதில்லை மற்றும் நுகரப்படுவதில்லை. பொருட்கள் தேவைப்படும் நேரத்தில் அவை கிடைப்பதற்கு ஏற்றவாரு இருப்பு வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பண்ட காப்பகங்கள் தொடரில் நிறுவனங்களின் பொருட்களை சேமித்து வைக்க பேருதவி புரிகின்றது. பொருட்கள் கிடைக்கச் செய்வதால் விலை சீராக இருக்க வகை செய்யப்படுகிறது.
53.
பொருட்களை உற்பத்தி செய்தல்/திரட்டுதல்: மனித தேவையை பூர்த்தி செய்ய பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது ஒன்று திரட்டல் வேண்டும்.
விற்பனை அல்லது பரிமாற்றம்: தொழிலின் மிக முக்கிய தன்மை என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல் அல்லது பரிமாற்றம் செய்தல் ஆகும். தனிநபர் தன்னுடைய சுய தேவைக்காக துணி நெய்தல் அது தொழில் செயல்பாடு ஆகாது.
பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்புடையது :
பொருட்கள் உற்பத்தி செய்தல்/திரட்டுதல் என்பது நுகர்வு பொருட்களை துணி, பேனா, பிரஷ், பைகள் ஆகியவற்றையும் உற்பத்தி பொருட்களான இயந்திரம் சார்ந்ததாகும். சேவைகள் என்பது மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்குதல் போக்குவரத்து, வங்கி, காப்பீட்டு தொடர்புடையதாகும்.
ஒழுங்கு முறையில் தொடர்புடையது: தனிப்பட்ட முறையில் வாங்கி விற்பது என்பது தொழில் ஆகாது. தொழில் நடவடிக்கைகள் தொடர்ச்ச்சியாக நடைபெற வேண்டும்.
இலாப நோக்கம் : தொழிலின் மிக முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவது ஆகும். மனித இனம் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தினால் தொழில் எனலாம்.
இடர்பாட்டிற்கான கூறு: தொழில் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றதாகும். ஒரு வகையில் தன்னுடைய தொழிலை திறம்பட நிர்வாகம் செய்தாலும் இலாபம் என்பது மற்ற காரணிகளை சார்ந்து உள்ளது. அவையாவன, நுகர்வோர் விருப்பு, வெறுப்பு, மூலப்பொருள் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல் மின்சாரம் பற்றாக்குறை ஆகியன ஆகும். இதன் மூலம் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றது ஆகும்.
54.
நிறைவேறிய ஒப்பந்தம் (Executed contact): ஒபபந்தப்படி அவரவர்களின் கடைமையை முடிக்கும்போது அவ்வொப்பந்தம் நிறைவேறிய ஓப்பந்தமாகும்.உதாரணமாக வியாபாரி ஒருவர் ரொக்கத்திற்கு தொலைக்காட்சி ஒன்றை விற்கிறார் இதில் விற்பவர், வாங்குபவர் ஆகிய இருவரும் தங்கள் கடைமை நிறைவேற்றி உள்ளார்கள்.
நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தம் (executory contact) : ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரு நபரிகளிடையே கடமைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தமாகும்.எடுத்துக்காட்டு A என்பவர் B என்பவருக்கு ரூ 20,000க்கு கட்டில் ஒன்று செய்து தர ஒப்புக்கொள்கிறார்.எனினும் A இன்னும் கிட்டிலைத் தயார் செய்யவில்லை என்றும் B என்பவர் அதற்கான தொகையை செலுத்தவில்லை என்று வைத்துக்கொள்ளுவோம். அது நிறைவேற்றப்பட்ட வேண்டிய ஒப்பந்தமாகும்
ஒரு தலை ஒப்பந்தம் (Unilatral contact) : இதில் ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் ஒருவர் மட்டுமே தன வாக்குறுதி அல்லது கடமையை நிறைவேற்றிய பிறகு மற்றொரு நபர் தனது கடமையை நிறைவேற்றுகிறார். எடுத்துக்காட்டாக x என்பவர் பொருட்களை எடுத்துவருவதாக ரூ 10,000) y என்பவருக்கு தருவதாக
கூறுகின்றார். y என்பவர் பொருட்களை கொண்டு வந்த பிறகு x என்பவர் பணத்தை தருகிறார்.இதில் y பொருட்களை கொண்டு வரும் பொழுதே ஒப்பந்தம் உருவாகின்றது
இருதலை ஒப்பந்தம் (bilateral contact) : ஒப்பந்தம் ஒன்று உருவாகும் பொழுது இரு தரப்பினரும் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டியிருப்பின் அத்தகைய ஒப்பந்தம் இரு தலை ஒப்பந்தம் எனப்படுகிறது. எடுத்துக்காட்டக R என்பவர் ரூ10,00,000 மதிப்புள்ள மகிழ்வுந்தை விற்பனை செய்ய s க்கு வாக்குறுதி அளிக்கின்றார். S என்பவர் பதிலுக்கு பணம் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards