11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/01/2019
Plus One Book Back Important Questions
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
இராமலிங்க அடிகளார் பற்றி நீவிர் அறிவன யாவை?
2.
முதலாம் கர்நாடக ப் போருக்கான காரணங்கள் யாவை ?
3.
சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்
4.
5.
புரந்தர் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை ?
6.
மாகாணம் மற்றும் மாநிலம் – வேறுபடுத்துக.
7.
பக்தி இயக்கத்தில் ரவிதாஸின் பங்கினைப் பற்றி நீவிர் அறிவன யாவை ?
8.
விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?
9.
தமிழ்ச் சங்கம் குறித்து எழுதுக
10.
சோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?
11.
பெருகிவரும் வணிகத்திற்கும் வியாபாரத்துக்குமான வணிகர்களின் பங்களிப்பைப் விவரிக்கவும்.
12.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
13.
கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்
14.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
15.
அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.
16.
முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.
17.
மௌரிய அரசு பற்றி ஆய்வுக்கு உதவும் இலக்கியச் சான்றுகள் பற்றிச் சிறு குறிப்பு தருக.
18.
மகாபத்ம நந்தர் பற்றி குறிப்பு வரைக
19.
பண்டமாற்று முறையை விளக்கு
20.
'சார்வாகம்' குறித்து அறிந்ததைக் கூறுக.
21.
ரிக்வேதக் கடவுள்கள் குறித்து எழுதுக
22.
வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்.
23.
பெருங்குளம்: சிறு குறிப்பு வரைக.
24.
இடைக்கற்காலப் பண்பாடு குறிப்பு வரைக.
25.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
26.
நயங்கார முறை
27.
மூன்றாம் பானிபட் போரின் விளைவுகள்
28.
1565ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் கூறு?
29.
30.
பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது?யாரால் நிறுவப்பட்டது?
31.
சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக
32.
பரிமாற்றத்துக்கான ஒரு ஊடகமாகப் பணத்தின் முக்கியத்துவதை விவரிக்கவும்
33.
மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.
34.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
35.
கங்கைச் சமவெளி முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக
36.
37.
சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.
38.
பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.
39.
ஹர்ஷருடைய குற்ற வியல் நீதித்துறையின் முக்கியத்துவம்
40.
41.
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.
42.
43.
தொடக்ககால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
44.
சிந்து நாகரிகம் நிலவிய பகுதியின் எல்லைகளைக் குறிப்பிடுக.
45.
இந்தியாவின் இடைப் பழங்கற்காலத்தின் முக்கியக் கூறுகளை எழுதுக.
1.
(i) இராமலிங்க அடிகளார் சிதம்பரத்திற்கு அருகில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார்.
(ii) முறையாக கல்வி பெறாதவர், சொந்தமாக பாடல்களை இயற்றினார். அவையே 1867-ல் திருவருட்பா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
(iii) மதவெறியையும், பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம்செய்தார்.
(iv) சத்ய தர்ம சாலை ஒன்றை வடலூரில் நிறுவி ஏழைகளுக்கு உணவளித்தார்.
2.
முதலாம் கர்நாடகப் போருக்கான காரணங்கள்:
1. ஐரோப்பாவில் நடைபெற்ற அரசு வாரிசுரிமைப் போர் இந்தியாவிலும் எதிரொலித்தது. ஆஸ்திரிய அரசர் ஆறாம் சார்லஸ் 1740 இல் காலமானார்.
2. அவரைத் தொடர்ந்து அவருடைய மகள் மரிய தெரேசா அரசு பதவியை ஏற்றார். மரிய தெரேசாவின் உரிமையை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஜெர்மானிய மொழி பேசப்படும் பகுதிகளான பவேரியா, சாக்ஸனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு மரிய தெரேசாவுக்கு எதிராகக் கைகோர்த்தது.
3. பிரஷ்ய அரசர் இரண்டாம் பிரடெரிக் (பிரிஷ்யாவின் மகாபிரடெரிக் என அறியப்பட்டவர்) இப்புதிய அரசியல் சூழலைத் தனக்கு சாதகமாக்கி பிரான்சின் உதவியுடன் ஆஸ்திரிய நாட்டின் ஒரு பகுதியான சைலீசியாவைக் கைப்பற்றினார்.
4. இப்பிரச்ச்சனையில் இங்கிலாந்து பிரான்சிற்கு எதிராகவும் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாகவும் களம் கண்டது.
3.
i) சீக்கிய மதம்
1. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக் ஆவார்.
2. சீக்கிய மதம் ஒரு கடவுள் கோட்பாட்டை உடையது.
3. சீக்கியரின் புனித நூல் குறு கிரந்த சாகிப்.
4. "கடவுள் ஒருவரே" அக்கடவுள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பவர் எனச் சொல்கிறது இம்மதம்.
5. உருவ வழிப்பாட்டையும் மதச் சடங்குகளையும், சாதிமுறையைக் கண்டனம் செய்கிறது.
6. இரண்டு நூற்றாண்டுகளில், பத்து சீக்கிய மதம் பஞ்சாப் முழுவதும் விரிவடைந்து பெருவாரியான மக்களை ஈர்த்தது.
ii) சூபியிஸம்:
1. சூபியிஸம் என்பது இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன் வைக்கும் ஒரு மதக் கோட்பாடாகும்.
2. ஈரானில் உதயமான இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.
4.
5.
1.புரந்தர் உடன்படிக்கையின் படி சிவாஜிக்கு அவர் கைப்பற்றிய கோட்டைகளை வைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தது.
2. மன்சப்தாராகச் செயல்பட்டு பிஜப்பூரைக் கைப்பற்றி முகலாயருக்கு உதவ ஒப்புக் கொண்டார்.
6.
(i) கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமைய பெற்றிருக்கும் இடம் மாகாணம். ஆகும்.
(ii) அவ்விதத்தில் சென்னை , பம்பாய் , கல்கத்தா ஆகியவை மாகாணங்கால் ஆகும்.
(iii) பின்னர் இம் மாகாணங்களை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதால் மத்திய மாநிலம் ஒருங்கிணைத்த மாநிலம் போன்ற பிராந்தியங்கள் உருவாக்கப்பட்டன.
7.
(i ரவிதாஸ் இயற்றிய பக்திப்பாடல்கள் பக்தி இயக்கத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
(ii) சீக்கியரின் மதப்பாடல்களில் ரவிதாசரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
8.
(i) சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோர் விஜயநகர அரசை ஏற்படுத்தினர்.
(ii) இதன் தலைநகர் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டது.
(iii) பின்னர் இத் தலைநகரம் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது.
(iv) இதன் பின்னர் அவர்கள் தங்களை விஜயநகர அரசர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
9.
(i) சங்கம் என்ற சொல் கலைக்கழகம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக இறையனார் அகப்பொருள் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ii) 1. முதல் சங்கம் -தென்மதுரை
2. கிடைச்சங்கம்-கபாடபுரம்
3. கடைச்சங்கம் -மதுரை
ஆகிய மூன்று சங்கங்களையும் பாண்டியர்கள் வெவ்வேறு கால கட்டங்களில் தமிழை வளர்க்க செயல்படுத்தியதாக வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
10.
(i) முதலாம், இராஜராஜன் சிற்றரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து பல மண்டலங்களாக்கினார். இவை சோழ மண்டலங்கள் என அழைக்கப்பட்டன.
(ii) பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் படையெடுப்புகள் மூலம் கொண்டை நாடு, பாண்டிநாடு, தெற்குக் கர்நாடகத்தைச் சேர்ந்த கங்கைவாடி, மலைமண்டலம் என்ற சேரியும் ஆகிய பகுதிகள் உணர விரிவுபடுத்தினார்கள்.
(iii) கடல் கடந்த விரிவாக்கத்தின் போது, சோழர் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளைக் கட்டுப்படுத்தியும், அப்பகுதிகளை "மும்முடிச் சோழ மண்டலம்" என அழைத்தார்கள்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி. சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
11.
i) வணிகம் பெருமளவு வளர்ந்த நிலையில் வணிகர்கள் எண்ணிக்கையில் பெருகி சமுதாயத்தில் முக்கியமானோர் ஆயினார்.
ii) கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்ட வணிகர்கள்.
iii) வெளிநாடுகளுடன் தரை வழியாகவும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
iv) இந்த வளர்ச்சியானது விரிவடைந்து வரும் வணிக நடவடிக்கைகளுக்கு உதவியது.
v) எனவே வணிகம் விரிவடைந்து பொருளாதார உற்பத்தியின் அடித்தளத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
12.
i) இந்தியா முழுவதும் கிரேக்கர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுதும் பாப்போம்.
ii) இச்சொல் பாரசீக மொழியில் கிரேக்கர்களை குறிக்கும். "யாயுனா" என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
iii) இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாக கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களை கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
13.
(i) கஜினி முகமது இந்தியா வரும்போது கணிதவியலாளரும், தத்துவஞானியும் வானவியலருமான அல்-பெருனியை தன்னுடன் அழைத்து வந்தார்.
(ii) அல்பெருனி ஹிதாப் -இ-ஹிந்த் என்ற நூலை இயற்றினார்.
(iii) பாரசீக கவிஞரான பிர்தொளசி, ஷாநாமாவை இயற்றினார்.
(iv) மேலும் வரலாற்று அறிஞர் உத்பி, சிறந்த கல்வியாளர்கள் அன்சாரி, பைகாஹி போன்றோர் இவரால் ஆதரிக்கப்பட்டார்கள்.
14.
(i) பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
(ii) முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.
(iii) பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜீத வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
(iv) போரில் பல்லவ வெற்றிபெற்றார்
v) சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றிபெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
15.
i) மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
ii) அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை சாதனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
iii) இதனை பொறித்தவர் ஹரிசேனர்
iv) இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதபட்டது.
16.
1. இரண்டாம் விக்ரமபாலரின் மகன் முதலாம் மகிபாலர்
2. பொது.ஆ. 1020 - 1025 ஆண்டுகளுக்கிடையில் தென் பகுதியை சேர்ந்த சோழ மன்னர் வட இந்தியாவிற்கு படையெடுத்து சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும்
3. எனினும் மிக முக்கியமான படையெடுப்பு கங்கையை கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
4. முதலாம் மஹிபாலர் சாரநாத், நாளாந்த, புத்த கயா இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார்.
17.
i) கெளடில்யர்(சாணக்கியர்) எழுதிய அர்த்தசாஸ்திரம் மெளரியரின் அரசியல் நிர்வாகம் குறித்து தெளிவாக விளக்குகின்றது.
ii) மெகஸ்தனிஷ் எழுதிய இண்டிகா -சந்திரகுப்தரின் அரசு நிர்வாகத்தை பற்றி கூறுகிறது.
iii) விசாகத்தரின் முத்ராட்சம் என்ற நாடக நூல்.
iv) பிராமணங்கள் மற்றும் மகாவம்சம் போன்ற இலக்கியச் சான்றுகளும் உள்ளன.
18.
i) மகாபத்ம நந்தர் நந்தபேரரசின் முதல் அரசர்.
ii) சிசுநாக அரசரைகே கொன்று அரியணையைக் கைப்பற்றினார்.
iii) நந்தர்களின் கீழ் பேரரசு நன்கு விரிவடைந்தது.
iv) நந்தர்களின் செல்வமும், அதிகாரமும் எவர் காலத்தில் பெருகியது. எதிரிகளுக்கு அச்ச மூட்டுவதாக இருந்தது.
19.
பண்டமாற்று முறை என்பது தனக்கு தேவைக்கு போக அதிகமாக பொருளை பிறரிடம் கொடுத்துவிட்டு தன்னிடம் இல்லாத தனக்கு தேவையான பொருளை இதற்கு பதிலாக பெற்றுக்கொள்வது பண்டமாற்று முறை எனப்படும். வணிகத்தில் நாணயங்கள் பயன்படுத்தப்பட்டாலும் பண்டமாற்று முறையே அதிக அளவில் பழக்கத்திலிருந்தது.
20.
(i) இந்திய பொருள் முதல்வாதம் சிந்தனையாளர்கள் முதன்மையானவர் 'சார்வாகம்' ஆவார்.
(ii) எவர் ஒரு முறையான தத்துவ முறையை நிறுவினார்.
(iii) இவர் ஜயுறுவாதம் என்ற சிந்தனையை மேம்படுத்தினார். வேதங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.
(iv) அனுபவங்கள் வாயிலாகவே அறிவை பெறவும் முடியும் என நம்பினார்.
21.
(i) நிலம், நெருப்பு, காற்று, மழை, இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக் வேதகால மக்கள் வழிபட்டனர்.
(ii) பிருதிவி-பூமி, அக்னி -நெருப்பு, வாயு-காற்று, வருணன்-மழை, இந்திரன்-இடி மின்னல் ஆகிய கடவுளர்கள் ரிக் வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர்.
(iii) ஆதித்தி, உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபட்டனர்.
(iv) ஆலயங்களோ, சிலை வழிபாடோ, முந்தைய வேதகாலத்தில் இல்லை. வழிபாட்டின் போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன.
22.
(i) 'வித்' என்ற சொல்லிலிருந்து 'வேதம் என்ற சொல் பிறந்தது.
(ii) வேதங்கள் நான்கு -ரிக், யஜீர், சாம, அதர்வன. இதில் ரிக் வேதம் பழமையானது.
(iii) இது தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்ற சமய இலக்கியங்களும் வேத கால இலக்கியங்களாகும்.
23.
1. மொக்ஞ்சாதாரோவின் சிறப்புக்குரிய பொது இடம் முற்றத்துடன் கூடிய பெரிய குளியல் குளமாகும்.
2. குளத்தில் நான்கு பக்கங்களிலும் நடை பாதை மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
3. உடைகள் மாற்றும் அறைகள், மற்றும் தண்ணீர் உள்ளே வர, கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி இருந்தது.
4. இக்குளம் சடங்குகளின்போது குளிப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கலாம்.
24.
1. இடைக்காலப் பண்பாட்டோடு தொடர்புடைய இடங்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளில் காணப்படுகிறது.
2. விலங்குகளை வேட்டையாடுதல், தாவர உணவுகளை சேகரித்தல், மீன் பிடித்தல் இவர்களின் முக்கிய தொழிலாக இருந்தன.
3. இக்கால மக்கள் நெருப்பைக் பயன்படுத்தினார். இறந்தோரைப் புகைத்தனர்.
4. உணவுக்காக விலங்குகளையும் தாவரங்களையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருப்பது இடைக்கற்கால மக்களின் முக்கியமான பண்பாக இருந்தது.
25.
1. வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை.
2. தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்டஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.
26.
1.கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சிக் காலத்தில் நயங்காரா அமைப்பை உருவாக்கினார்.
2.இதன்படி தமிழகம் செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என மூன்று பிரிவாக நயங்காரக்களாக பிரிக்கப்பட்டது.
3.இந்த புதிய முறைப்படி துணைத் தலைவர்கள் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். பாளையக்காரர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
27.
1.மூன்றாம் பானிபட் போரின் காரணமாக மராட்டியரின் இராணுவம் முற்றிலுமாக அழிந்தது.
2.பேஷ்வாவின் மகன் விஸ்வாஸ்ராவ், சதாசிவராவ் மற்றும் எண்ணற்ற மராட்டிய தளபதிகள் கொல்லப்பட்டனர்.
3.போர்க்களத்தில் 28,000 பேரின் உடல்கள் கிடந்தன. ஹோல்கர் தப்பியோடினார்.
4.சிந்தியாவின் படைகள் ஹோல்கரை துரத்தியது. இந்தச் துயரச் செய்தியை கேட்டு பேஷ்வா அதிர்ச்சி அடைந்தார்.
5.இதயம் நலிவடைந்த பேஷ்வா 1761-ஜூனில் மரணமடைந்தார்.
6.பானிபட் போருக்குப் பிறகு அப்தலி இரண்டாம் ஷா ஆலத்தை தில்லியின் மன்னராக அங்கீகரித்தார்.
7. ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் கப்பம் கிடைத்தது.
28.
1. 1565 இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசு தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னர் ஆதிக்கம் செய்த மைய அரசு வலிமை குன்றியது.
2. விஜயநகரப் பேரரசின் அதிகாரத்தைப் பெயரளவிற்கு அங்கீகரித்த இந்த நாயக்க அரசுகள் நடைமுறையில் சுயாட்சி பெற்றவைகளாகச் செயல்பட்டன. அளவில் பெரிதான இந்நாயக்க அரசுகளோடு பல்வேறு பகுதிகள் உள்ளூர் ஆட்சியர்கள் வசமும் இருந்தன.
3. அவர்களில் முக்கியமானவர் இராமநாதபுரம் அரசின் சேதுபதி ஆவார். அவரும் தன்னைச் சுதந்திர அரசராக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினார்.
4. தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக செஞ்சி, மதுரை, தஞ்சாவூர் அரசுகள் பல போர்களைச் செய்தன. விஜயநகர்ப் பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.
29.
30.
(i) டில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றிய போது அவரின் தென்பகுதியின் மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களால் அறிவித்தனர்.
(ii) 1345இல் வடக்கு கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னை சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார்.
(iii) தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார்.
(iv) அவர் பாமன்ஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு பாமினி அரச வம்சத்தைத் தோற்றுவித்தார்.
31.
(i) சோழர்கால சமூகப் படிநிலையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கியது வேளாண்மை ஆகும்.
(ii) உயர்தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேயகிழவர்' என அழைக்கப்படும் நில உடமையாளர் ஆவர்.
(iii) வேளாண்மை கிராமங்களின் உடமையாளர்கள் அடுத்தபடி நிலையில் இருந்தனர்.
(iv) இவர்கள் இருவரிடமும் பணிபுரியும் குத்தகைகாரகள் உழுகுபடி எனப்பட்டனர்.
(v) அடிமட்ட உழைப்பாளிகளான 'சமூகப்படி' எனப்படுவோரும், பணிசெய் மக்கள் எனும் அடிமைகளும் கடை நிலையில் காணப்பட்டார்.
32.
i) நவீனத்துக்கு முந்தைய அனைத்துப் பொருளாதாரங்களும் பரிமாற்றத்துக்கு ஒரு முக்கியமான ஊடகமாக பண்டமாற்று முறை விளங்கியிருக்கிறது.
ii) அவர்கள் தங்களின் உப்பை பணத்துக்கு விற்காமல் ஏணைய பண்டங்களுகாவும் இதரத் தேவைகளுக்காவும் பண்டமாற்று செய்து கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம்.
iii) இருப்பினும் தரைவழி கடல்வழி வணிகம் ஆகியவற்றின் அளவும் கூடவே நகர அங்காடிகள் குறித்து இலக்கியத்திலுள்ள சித்தரிப்புகளில் பணம்தான் பரிமாற்றத்துக்கான முக்கிய ஊடகமாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன.
33.
i) நாடெங்கும் கிடைத்த பருத்தியைக் கொண்டு பருத்தி ஆடைகளுக்கான நூற்பிலும் நெசவிலும் ஈடுபட்டன.
ii) ஆடை வணிகம் அதிகம் நடைபெற்றது.
iii) சாதாரண மக்கள் பயன்படுத்திய முரட்டு ரகம் முதல் உயர்குடியினர் முதல் அரசக் குடும்பத்தினர் வரை பயன்படுத்திய மெல்லிய ரகம் வரை பல்வேறு ராகங்களில் பருத்தி துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
iv) காசி, வங்கம், காம்ரூபம், மதுரை போன்ற இடங்களில் சிறப்பான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
v) சீனா மற்றும் இலங்கை போன்ற இடங்களிலிருந்து துணி, கம்பளி, பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.
34.
i) மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
ii) அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
iii) போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
iv) இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருப்பதாக இருந்திருக்க வேண்டும்.
v) போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மெளரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.
35.
i) பொ.ஆ.மு. 6 ஆம் நூற்ராண்டிலிருந்து 3ம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கிய அரசியல் மாற்றங்களை கண்டது.
ii) கங்கைச் சமவெளியில் ஆட்சி செய்வதற்காக இனக் குழுக்களுக்குள் சண்டைகள் ஏற்பட்டன.
iii) வெற்றி பெற்றவர் கங்கைச் சமவெளியில்முடியாட்சி தோன்றுவதற்கு காரணமாய்அமைந்தது.
iv) சக்ரவர்த்தி அல்லது ஏக்ராட் என்ற உயர்ந்த பதவிகளால் அரசாட்சி செய்தனர்.
v) முடியாட்சி அரசுகளும் காசி முதலில் பலம் வாய்ந்ததாக இருந்தது.
vi) பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
36.
37.
(i) சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர்.
(ii) விஜயபத்திரிக்கா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.
(iii) அரசிகள் நிர்வாகத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை.
(iv) அவர்கள் பல கோயில்களை எழுப்பினார்கள். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர்.
(v) கோயில்களுக்கு கொடை வழங்கினர்.
(vi) ராஜசிம்மனின் அரசி ரங்க பதாகாவின் உருவம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.
38.
(i) பல்லவர்கால அரசியல் நிர்வாகப் பிரிவின் தலைவர் அரசர் ஆவார்.
(ii) அரசருக்கு உதவ 'மந்திரி மண்டல' என்ற அமைச்சர் குழு இருந்தது.
(iii) மாநில ஆளுநர்களுக்கு அமைச்சர் குழு ஆலோசனை வழங்கியது.
(iv) கிராமங்களில் கிராமமன்றங்கள் நிர்வாகம் செய்தன.
(v) ரகஸ்யதிகரா, கொடுக்காபிள்ளை, கோச அதீயஷா, தர்மாதிகாரி போன்றவர்கள் நிர்வாகத்தினை நடத்தும் மற்ற அதிகாரிகளாவார்.
(iv) மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர்.
39.
i) குற்றவியல் சட்டங்கள் கடுமையானதாக இருந்தன. இச்சக்கட்டங்கள் விசாரித்து நீதி வழங்க மீமாம்சகர்கள் எனப்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.
ii) நாடு கடத்தப்படுவதும், உடல் உறுப்புகள் வெட்டப்படுவதும் வழக்கமான தண்டனைகளாக இருந்தன.
iii) கடும் சோதனைகளின் அடிப்படையிலான வழக்கு விசாரணை நடைமுறையில் இருந்தது.
iv) சட்ட மீறல்களுக்கும் அரசனுக்கும் எதிராக சதி செய்வதற்கும் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
40.
41.
வேளாண், உபரி, கைத்தொழில், வணிக வளர்ச்சி பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை ஆகியவை கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற வழிவகுத்தது.
இது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என்று குறிப்பிடப்படுகிறது.
(1) ராஜகிருகம், சிராவஸ்தி, கெளசாம்பி, சம்பா போன்ற அரசியல் நிர்வாக மையங்கள்.
(2) உஜ்ஜைனி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள்.
(3) வைசாலி போன்ற புனித தலங்கள் உருவாயின.
42.
43.
இந்தியத் துணைக் கண்டத்தில், தொடக்க வேதகால ஆரியர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.
44.
சிந்து நாகரிகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக 1.5 மில்லியன் ச.கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளன.
எல்லைகள்:
1. மேற்கில் பாகிஸ்தான் ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டோர் குடியிருப்புகள்,
2. வடக்கில் ஷார்ட்டுகை(ஆப்கானிஸ்தான்)
3. கிழக்கில் ஆலம் புர்ஜிர் (உத்தரபிரதேசம்)
4. தெற்கில் தைமாபாத் (மஹாராஷ்டிரம்)
எனது சிந்து நாகரீகப்பகுதிகளின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
45.
1. இடைப்பழங்கற்கால மனிதர்கள் திறந்தவெளியிலும், குகைகளிலும், பாறைப்படுகைகளிலும் வசித்தார்கள்.
2. வேட்டையாடுபவர்களையும், உணவைச் சேகரிக்கப்படுபவர்களாகும் இருந்தார்கள்.
3. சிறிய கருவிகளை பயன்படுத்தினார். கோடாரியைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்தது.
4. கற்கருவிகள் உற்பத்தியில் செர்ட், ஜாஸ்பர், கால்சிடெனி, குவார்ட்ஸ் ஆகிய கற்களை மூலப்பொருள்களாக பயன்படுத்தினார்.
5. மரக்கட்டை, விலங்குத்தோல், ஆகியவற்றை கையாள்வதற்கு துளையிடும் கருவி மற்றும் சுரண்டும் கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தினார்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards