11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
+1 First Revision Test Model
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
நீலநீர்க் கொள்கையுடன் தொடர்புடையவர் _______________
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
அல்போன்ஸோ டி அல்புகர்க்
நீனோ டா குன்கா
ஆன்டோனியோ டி நாரான்கா
2.
________ ஒரு ஜோதிட ஆய்வு நூலாகும்.
தஜிகநிலகந்தி
ரசகங்காதரா
மனுசரிதம்
ராஜாவலிபதகா
3.
வைதீக வேதப்பிரிவுகளுக்கும் சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைப் பற்றி குறிப்பிப்பிடுவது _____
இராமாயணம்
பாகவத புராணம்
திருத்தொண்டர்களின் புகழ்பாடும் தொகுப்புகள்
பால லீலா
4.
சரியான இணையை எடுத்து எழுதுக.
சாகாயா - கனிஷ்கர்
புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்
பாடலிபுத்திரம் - மீனாந்தம்
தட்சசீலம் - முதலாம் ஆசஸ்
5.
_____ என்ற நூலை கங்காதேவி எழுதினார்.
மனுசரித்ரா
ஆமுக்த மால்யதா
பாண்டுரங்க மகாத்மியம்
மதுரா விஜயம்
6.
தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________
சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்
வெளிர்கள் ஆட்சிக்கலாம்
பகல்வர் ஆட்சிக்கலாம்
களப்பிரகர் ஆட்சிக்கலாம்
7.
ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.
பிந்து சாரர்
பிம்பி சாரர்
சந்திர குப்தர்
அஜாகத் சத்ரு
8.
செல்வமிக்க நிலா உரிமையாளர்கள் _____ என்றழைக்கப்பட்டனர்.
தாசர்
கிரகபதி
கர்மகாரர்
கிரிஷாகா
9.
ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.
மாடு
நாய்
குதிரை
செம்மறி ஆடு
10.
குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன
ரோமானிய
கிரேக்க
குப்த
சாதவாகன
11.
சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க
| 1. ராமச்சந்திரா | 1. காகதீய |
| 2. கான்-இ-ஜஹான் | 2. பத்மாவத் |
| 3. மாலிக் முஹமத் ஜெய்சி | 3. மான் சிங் |
| 4. மன் மந்திர் | 4. தேவகிரி |
2, 1, 4, 3
1, 2, 3, 4
4, 1, 2, 3
3, 1, 2, 4
12.
__________படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பப்பகுதி சோழ மண்டலம் எனப்பப்படுகிறது
வைகை
காவிரி
கிருஷ்ணா
கோதாவரி
13.
………… சமணர்களால் நிறுவப்பட்ட ஒரு மத மையம்.
சரவணபெலகொலா
மதுரை
காஞ்சி
கழுகுமலை
14.
பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை _______என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
கிரகவர்மன்
தேவகுப்தர்
சசாங்கன்
புஷ்யபுத்திரர்
15.
கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக் குடைவரைக் குகைக் கோயில் இல்லை ?
உதயகிரி குகை (ஒடிசா )
அஜந்தா – எல்லோரா குகை (மகாராஷ்டிரா )
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )
பாக் (மத்தியப் பிரதேசம்)
16.
கரிகாலன் ________________ மகனாவார்
செங்கண்ணன்
கடுங்கோ
இளஞ்சேட்சென்னி
அதியமான்
17.
18.
பகவதிசூத்திரம் ஒரு _______________ நூலாகும்.
பெளத்தம்
சமணம்
ஆசீவகம்
வேதம்
19.
வேதப்பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
பிராமணங்கள்
சங்கிதைகள்
ஆரண்யகங்கள்
உபநிடதங்கள்
20.
எழுத்துகள் அறிமுகமாவதற்தற்கு முந்தைய காலகட்டம் ___________ எனப்படுகிறது.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
வரலாற்றுக்காலம்
பழங் கற்காலம்
புதிய கற்காலம்
21.
ஆங்கிலேயர் மதராஸில் தங்களது குடியேற்றத்தை எவ்வாறு நிறுவினர்?
22.
மக்களிடையே பக்தி இயக்கத் துறவிகள் எவ்வாறு புகழ் பெற்றனர்?
23.
இரண்டாம் சரபோஜி, சமய பரப்புகுழு மற்றும் காலனி ஆதிக்க அரசுக்கு எவ்வாறு முன்னோடியாகத் திகழ்ந்தார்?
24.
விஜயநகர அரசு யாரால் ஏற்படுத்தப்பட்டது? எதனால் அப்பெயர் வந்தது?
25.
“யவன” என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
26.
இஸ்லாமிய இசைஞர்கள் அறிமுகப்டுத்திய இசைக்கருவிகள்
27.
திருபுறம்பியம் போரைப் பற்றி நீ அறிந்தது என்ன?
28.
முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.
29.
இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
30.
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் யாவை?
31.
தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?
32.
வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு, எப்பொழுது மாறினர்?
33.
34.
அக்பரின் மதக் கொள்கை எவ்வா று ஔரங்க சீப்பின் மதக்கொள்கையிலிருந்து மாறுபட்டிருந்தது?
35.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
36.
பேஷ்வாக்கள் ஆட்சியின் வருவாயினங்கள் பற்றி எழுதுக.
37.
பின்வருவன குறித்து சிறு குறிப்பு வரைக.
(1) ஊரார் (2) சபையார் (3) நகரத்தார் (4) நாட்டார்
38.
பொ.ஆ. 1ஆம் நூற்றாண்டு தமிழ் அரசாட்சிகள் குறித்த விவரங்கள் தருக.
39.
தில்லி சுல்தானியத்தின் நிர்வாக அமைப்பு குறித்து விவரணை தருக
40.
ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
41.
சங்க கால வாணிகம் மற்றும் தொலைதூர வணிகத்தைப் பற்றி எழுதுக.
42.
43.
கீழ் மற்றும் இடைப்பழங்கற்காலப் பண்பாடுகளை ஒப்பிடுக.
44.
தமிழ்நாட்டின் பெருங்கற்கால அகழ்வாய்விடங்களைப் பற்றி விவாதிக்க.
45.
தென்னிந்திய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகள் யாவை?
46.
புதிய கற்கால புரட்சி - வரையறு:
47.
1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?
48.
சுவாமி விவேகானந்தர்
49.
50.
ஒப்பந்தக் கூலிமுறை
51.
சோழர் காலச் சமூகத்தின் படிநிலையைக் கூறுக
52.
”இரண்டு வணிகச் சுற்றுகளின் மையமாக முசிறி இருந்தது.” எவ்வாறு?
53.
இந்தியாவில் மகா அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கங்களைக் குறிப்பிடுக.
54.
தமிழகத்தில் வைணவத்தை பரவலாக்கியதில் ஆழ்வார்களின் பங்கு.
1.
(a)
பிரான்சிஸிஸ்கோ டி அல்மெய்டா
2.
(a)
தஜிகநிலகந்தி
3.
(c)
திருத்தொண்டர்களின் புகழ்பாடும் தொகுப்புகள்
4.
(d)
தட்சசீலம் - முதலாம் ஆசஸ்
5.
(d)
மதுரா விஜயம்
6.
(d)
களப்பிரகர் ஆட்சிக்கலாம்
7.
(b)
பிம்பி சாரர்
8.
(b)
கிரகபதி
9.
(c)
குதிரை
10.
(a)
ரோமானிய
11.
(d)
3, 1, 2, 4
12.
(b)
காவிரி
13.
(a)
சரவணபெலகொலா
14.
(a)
கிரகவர்மன்
15.
(c)
எலிபண்டா குகை (மகாராஷ்டிரா )
16.
(c)
இளஞ்சேட்சென்னி
17.
(b)
18.
(b)
சமணம்
19.
(b)
சங்கிதைகள்
20.
(a)
வரலாற்றுக்கு முந்தைய காலம்
21.
1. தமர்லா வேங்கடாத்திரிநாய்க்கர் என்பவரிடமிருந்து நிலத்தைப் பெற்ற ஆங்கிலேயர் அங்கு 1639ல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர்.
2. இவ்வாறாக ஆங்கிலேய வணிகத் தளங்கள் சென்னையில் நிறுவப்பட்டு காலப்போக்கில் வளர்ந்து, மதராஸ் அதன் மாகாணத் தலைநகரமானது.
22.
1. இடைக்காலத்தில் பக்தி இயக்கம் பெரும் வளர்ச்சி பெற்றது. கவிஞ்சர்களும் இறையடியார்களும் நாட்டின் பல பகுதிகளும் தோன்றினர்.
2. சடங்குகளையும் சாதிமுறையையும் அவர்கள் விமர்சனம் செய்தனர்.
3. சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தாமல் மக்களின் மொழியைப் பயன்படுத்தினர்.
4. அவர்களின் முற்போக்கான சிந்தனைகள் கருத்தைக் கவரும் மொழிநடையில் இசையோடு பாடப்பட்ட போது அவை மக்களிடையே பிரபலமாயின.
23.
1.சரபோஜி சமய பரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803 ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் முதலாவது நவீனப் பொது பள்ளிகளை நிறுவினார்.
2.ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு என தஞ்சாவூர் மற்றும் இதர அண்டை இடங்களில் இலவச தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை நிறுவியது சரபோஜியின் மிக முக்கியமான முன் முயற்சியாகும்.
3.மேன்மக்கள், வேத அறிஞ்ர்கள், ஆதரவற்றோர், ஏழைகள் ஆகிய அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன.
24.
(i) சங்கமரின் இரு புதல்வர்களான ஹரிஹரர், புக்கர் ஆகியோர் விஜயநகர அரசை ஏற்படுத்தினர்.
(ii) இதன் தலைநகர் துங்கபத்திரை ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்த ஹொய்சாள நகரமான ஹொசபட்னா (ஹம்பிக்கு அருகே) என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டது.
(iii) பின்னர் இத் தலைநகரம் வெற்றியின் நகரம் என்ற பொருளில் விஜயநகரம் எனப் புதிய பெயர் சூட்டப்பட்டது.
(iv) இதன் பின்னர் அவர்கள் தங்களை விஜயநகர அரசர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
25.
i) இந்தியா முழுவதும் கிரேக்கர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட யவன (அல்லது யோன) என்ற சொல்லை இப்பொழுதும் பாப்போம்.
ii) இச்சொல் பாரசீக மொழியில் கிரேக்கர்களை குறிக்கும். "யாயுனா" என்றும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.
iii) இந்தியாவில் இச்சொல்லானது கலப்பின மக்கள் உட்பட கிரேக்கத்தை பிறப்பிடமாக கொண்ட அனைவரையும் மேலும் பொனீசியர்களை கூடக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
26.
(i) ராப்ஸாரங்கி போன்ற இசைக்கருவிகளை இசுலாமியர் கொண்டு வந்தனர்.
(ii) இந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார்.
(iii) சுஸ்பி துறவி பிர் போதன் இக்காலத்தில் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார்.
(iv) ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ராக் தர்பன் என்ற இந்திய இந்திய சமஸ்கிருத நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்தனர்.
27.
(i) பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரனின் ஆட்சியின் போது (670-700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார்
(ii) முதலாம் பரமேஸ்வரன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியுடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார். இதன் விளைவாக தெற்கில் பல்லவருக்கும், பாண்டியருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன.
(iii) பொ.ஆ. 885ல் கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள திருபுறம்பியம் எனும் இடத்தில் பல்லவ மன்னன் அபராஜீத வர்மனுக்கும், பாண்டிய மன்னன் வரகுணனுக்குமிடையே இப்போர் நடைபெற்றது.
(iv) போரில் பல்லவ வெற்றிபெற்றார்
v) சில வருடங்கள் கழித்து நடந்த போரில் சோழர்கள் வெற்றிபெற்றனர். பல்லவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
28.
1. இரண்டாம் விக்ரமபாலரின் மகன் முதலாம் மகிபாலர்
2. பொது.ஆ. 1020 - 1025 ஆண்டுகளுக்கிடையில் தென் பகுதியை சேர்ந்த சோழ மன்னர் வட இந்தியாவிற்கு படையெடுத்து சென்றது மஹிபாலரின் காலத்தில் மிக முக்கியமான நிகழ்வாகும்
3. எனினும் மிக முக்கியமான படையெடுப்பு கங்கையை கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
4. முதலாம் மஹிபாலர் சாரநாத், நாளாந்த, புத்த கயா இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார்.
29.
(i) வாட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியன் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
(ii) சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iii) இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை.அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
(iv) தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் பண்டகமாக உள்ளது.
30.
1. வரலாற்றின் முந்தைய காலத்தைப்பற்றி அறிந்து கொள்வதற்கு எழுத்து வடிவிலான சான்றுகள் இல்லை.
2. தொல்லியல் ஆய்வின் மூலம் கிடைத்துள்ள நிலவியல் அடுக்குகள், கற்கருவிகள், மட்பாண்டஓடுகள், எலும்புக்கருவிகள், உலோகக் கருவிகள், பாறை ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் போன்றவைகள் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும் சான்றுகள் ஆகும்.
31.
பெளத்தம் தமிழ்நாட்டில் ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பரவியது.
தக்காணப் பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டு குறிப்புகள் இந்தியாவின் தென்பகுதிகளில் பெளத்தம் பரவியதை குறிப்பிடுகிறது.
காவிரிப்பட்டினத்தில் ஒரு பெளத்த வளாகம் இருந்ததை தொல்லியல் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமாவின் 'தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த பழியை சுருக்கமான வரலாறு' என்ற நூலில் பட்டினபாலையை ஆதாரமாகக் கொண்டு உயிர் பலியை எதிர்த்த வணிகள்கள் இருந்ததை குறிப்பிடுகின்றார். இதன் மூலம் தமிழ்நாட்டில் பெளத்தத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.
சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இரட்டைக்காப்பிய நூல்களில் ஒன்றான சீத்தலை சாத்தனாரால் எழுதப்பட்ட மணிமேகலை பெளத்த இலக்கியமாகும். குண்டலகேசியும் பெளத்த இலக்கியமாகும்.
நாளந்தா பல்கலைக்கழக அறிஞர் தின்னகர் தம்மபாலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள்.
சீனப் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் உள்ள அசோகரது ஸ்தூபிகளை பற்றி தனது பயண குறிப்பில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் பல்லவ மன்னர் 2ஆம் நரசிம்ம வர்மன் காலத்தில் ஒரு பெளத்த கோயில் கட்டப்பட்டுள்ளது.
பெ.மு.1006ல் முதலாம் இராஜராஜரின் ஆட்சி காலத்தில் ஸ்ரீவிஜய அரசன் மாற வர்மனால் சூளாமணி வர்ம எனப்படுகிற பெளத்த கோயிலைக் கட்டினார்.
இதன் மூலம் பெளத்த மதம் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
32.
1. வங்காளத்திலிருந்து தப்பியோடிய மீர்காசிம் முகலாய அரசர் இரண்டாம் ஷா ஆலம், அவத்தின் நவாபான சூஜா உத்தெளலா ஆகியவர்களோடு கூட்டு சேர்ந்தார். தங்கள் உள் விவகாரங்களில் வணிகக்குழு தலையிடுவதால் அவர்களும் மனக்குறையோடு இருந்தனர்.
2.இம்மூவரும் வணிக்குழுவுக்கு எதிராகப் போர் அறிவுப்புச் செய்தனர். 1764 இல் பக்சார் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் இம்மூவரும் வீரத்துடன் போரிட்டனர். வணிகக்குழுவின் படைகள் சிறப்பு வாய்ந்ததாக இருந்தமையால் அவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
3. பக்சார் போரில் ஆங்கிலேயர் பெற்ற வெற்றி 1765 இல் அலகாபாத் உடன்படிக்கைக்கு இட்டுச்சென்றது. ராபர்ட் கிளைவும் இரண்டாம் ஷாஆலமும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
4.இவ்வுடன்படிக்கையின் மூலம் வணிகக்குழு வங்களாம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் திவானி (நிலவரி வசூலிக்கும் உரிமை) உரிமையைப் பெற்றது.
5.மேலும் வங்காளத்திலிருந்த பர்த்தவான், மிட்னாபூர், சிட்டகாங் ஆகிய மூன்று மாவட்டங்களையும், கல்கத்தாவின் மீதான இறையாண்மையையும் பெற்றது.
6. ஆங்கிலேயர் வங்காளத்தின் ஆட்சியாளராக மாறினர்.
33.
34.
மாறுபட்ட மதக்கொள்கைகள்
| அக்பர் | ஒளரங்கசீப் |
| 1. இவர் பிற மதங்கள் தொடர்பான கோட்பாடுகளை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டவர். |
இவர் பிற மதங்கள் மீதான கோட்பாடுகளை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. |
| 2. அனைவருக்கும் அனுமதி என்னும் தத்துவத்தை பரப்புரை செய்தார் |
ஒளரங்கசீப் 'ஜிஸியா' வரியை மீண்டும் விதித்தார் |
| 3. அக்பர் இபாதத் கானா என்னும் வழிப்பாட்டுக் கூடத்தை நிறுவினார். |
புதிய கோவில்கள் கட்டப்படக்கூடாது என ஆணைகள் பிறப்பித்தார். |
| 4.இபாதத் கானாவில் கூடி ஆன்மீக விசயங்கள் குறித்து அனைத்து மதத்தினரும் விவாத்திக்க அனுமத்தித்தார். |
கோவில்கள் தொடர்பான ஒளரங்கசீப்பின் சட்டங்களும் பழமையானதாகவே இருந்தது. |
| 5. அக்பரின் உண்மையான நோக்கம் மதசார்பற்ற கோட்பாடுகளை பல்வேறு நம்பிக்கைகளை சார்ந்தவர்களுக்கு சமமான சகிப்புத்தன்மையும் மதிப்பையும் உருவாக்குவதாகும். |
பழைய கோவில்களில் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் அவருடைய மத நம்பிக்கைகளில் மட்டும் வேர் கொண்டு இருக்கவில்லை; மாறாக அரசியல் நிர்பந்தங்களும் அவை வேர்கொண்டிருந்தன. |
35.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
36.
1.நில வருவாய் தான் முக்கிய வருவாயாக இருந்தது.
2.நிலத்தின் உற்பத்தித்திறன் சார்ந்து வரிகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
3.சரியான புள்ளி விவரத்துடன் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டது.
4.செளத் மற்றும் சர்தேஷ்முகி ஆகியன இதர வருவாய் ஆதாரங்களாக இருந்தன.
5.சுங்கம், கலால் வரி, வனப் பொருட்களின் விற்பனை ஆகியன மூலமாகவும் வருவாய் கிடைத்தது.
6.தேஷ்முக்கு, தேஷ்பாண்டே வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
7.கிராம மக்கள் வைத்திருந்த நிலத்தின் மீதான வரி.
8.கிணற்றுப் பாசன வசதி கொண்ட நிலத்தின் மீதான வரி.
9.பிராமணர்கள் மற்றும் கிராம அதிகாரிகள் தவிர்த்து மற்றவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வீட்டு வரி.
10.எடைக் கற்கள் மற்றும் அளவைகளைச் சோதிப்பதற்காக வருடாந்திர கட்டண வரி.
11. விதவைகள் நிலவரி, நதிக்கரையோரங்களில் பூசணி விவசாயத்துக்கான வரி.
12. வாரிசு உரிமை வரி.
13.குதிரை விற்பதற்கான வரி மற்றும் பல.
14. மராத்திய அரசு நிதிச் சிக்கலிலிருந்த போது அனைத்து நில உடைமையாளருக்கும் வரி விதித்தது.
15. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக குர்ஜா பட்டி அல்லது தஸ்தி பட்டி வசூலிக்கப்பட்டது.
37.
(1) ஊரார்
1. வேளாண் குடியிருப்புகளால் நிறைந்த கிராமப்பகுதி ஊர் எனப்பட்டது. இங்குள்ள நில உடமையாளர்கள் 'ஊரார்' எனப்படும் நிர்வாகப் பிரதிநிதியாகச் செயல்பட்டனர்.
2. கோயில் நிர்வாகம், குளங்களை பராமரித்தல், குளத்து நீரை மக்களின் தேவைக்கு வழங்குதல் வரிவசூல், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு, அரசரின் கட்டளைகளை நிறைவேற்றுதல் போன்ற நிர்வாகப் பொறுப்புகளை இவர்கள் கவனித்தனர்.
(2) சபையார்
1. பிரம்மதேயம் எனப்படும் பிராமணர் குடியிருப்பின் மையமாக விளங்கிடும் கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்களை நிர்வாகிப்பது சபையின் முக்கிய பணியாகும்.
2. மேலும் கோயில் நிலங்களில் காணப்படும் குளங்களை பராமரித்தல் மற்றும் நதி, நீதி, நிர்வாகம் சார்ந்த பணிகளையும் சபையார் மேற்கொண்டனர்.
(3) நகரத்தார்
1. வணிகர்களின் குடியிருப்பு பகுதி நகரம் எனப்பட்டது. சிறந்த கைவினைஞர்கள் இங்கு வசித்தனர்.
2. இதன் பிரதிநிதிகள் 'நகரத்தார்' எனப்பட்டனர்.
3. கோவில்களுக்கு நிதி உதவி வழங்குவதிலும் அதன் நிர்வாகத்திலும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். உள்நாட்டு மற்றும் கடல் கடந்த வாணிபத்தில் பெரும் பங்கு வகித்தனர். பட்டு, பீங்கான், கற்பூரம், கிராம்பு, சந்தனக் கட்டை, ஏலக்காய் போன்றவை முக்கிய வாணிபம் பொருட்களாகும்.
(4) நாட்டார்
1. உள்ளாட்சி அமைப்பின் மிக முக்கிய பொறுப்பு வகித்தோர் 'நாட்டார்' ஆவர். அரச கட்டமைப்பின் அடிப்படை உறுப்புகளாக செயல்பட்டனர்.
2. அரசுக்கான நிதி, நீதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொண்டனர். வரி வசூலித்தல் முக்கியப் பொறுப்புகளாகும்.
3. மரியாதை செலுத்தும் வகையில் அரசுடையான் (நில உரிமையாளர்) அரையன் (வழி நடத்துவோர்) கிழவன் (தலைவர்) போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன.
38.
சாதவாகன ஆட்சி:
i) இந்தியாவின் வடபகுதியில் நிகழ்ந்து வந்த அரசியல் மாறுதல்களினால் தென்னிந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது. பொ.ஆ.முதல் நூற்றாண்டின் நவீன ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களை உள்ளடக்கிய தக்காண பகுதியில் சாதவாகன ஆட்சி நிறுவப்பட்டது.
ii) இது மௌரிய ஆட்சியயை போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட ஆட்சியாக அமையவில்லை. சாதவாகன மாகாண ஆட்சியாளர்கள் பலம் தன்னாட்சி உரிமை பெற்றிருந்தனர்.
மூவேந்தர்கள்:
வாடா இந்தியாவில் அமைந்த பரந்த பேரரசுகள் போல் அல்லாமல் தென்னிந்தியாவின் தமிழ் பகுதியில் சிற்றரசர்கள் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்டனர்.
i) மதுரையை தலைமையிடமாக கொண்டு பாண்டியர்கள்
ii) உறையூரை தலைமையிடமாகா கொண்டு சோழர்கள்
iii) வஞ்சியை தலைமையிடமாக கொண்டு சேரர்களும் ஆட்சி புரிந்தனர்.
மௌரியக் கால கல்வெட்டில்:
பொ.ஆ.மு மூன்றாம் நூற்றாண்டிலே மௌரிய அரசர்கள் தமிழக மூவேந்தர்களை பற்றிய செய்திகளை தங்கள் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளார்கள்.
அசோகரின் 2வது கல்வெட்டு ஆணியில் தனது பேரரசின் எல்லையில் அமைந்த அரசுகளை பற்றி கூறியுள்ளார்கள்
மூவேந்தர்கள் மட்டும் தென்னிந்தியாவை ஆண்டனர் என கூற இயலாது. சிறிய பகுதிகளை ஆட்சி புரிந்த ஏராளமான சிற்றரசர்களும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை. இந்த சிற்றரசர்கள் அந்த காலத்தில் வேளிர் என அழைக்கப்பட்டனர்.
39.
அரசும் சமூகமும்:
சுல்தானிய அரசு முறையானதோர் இசுலாமிய அரசாகக் கருதப்பட்டது. சுல்தான்கள் பலரும் கலிபாவின் தலைமையை ஏற்பதாக கூறினாலும் அவர்கள் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினார்.
நீதிமன்ற தலைவராக:
1. ராணுவத் தலைவர் என்ற வகையில் தலைமைத் தளபதியாக மன்னர் இருந்தனர்.
2. நீதி நிர்வாக தலைவர் என்ற வகையில் மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றமும் அவர்தான். சுல்தான்கள் தங்களை கடவுளின் பிரதிநிதியாகக் கருதினர்.
பேரரசு:
முகமது-பின்-துக்ளக் காலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளைத் தவிர காஷ்மீர் முதல் கேரளம் உள்பட இந்தியா முழுவதும் டில்லியின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டது.
வாரிசுரிமை:
வாரிசுரிமை வரையறுக்கப்படவில்லை. வாரிசுரிமை போட்டி வழக்கமாக நடந்தது.
வரி:
1. 'இக்தா' உரிமையாளர்கள் வரி வசூலித்தனர். குறிப்பிட்ட சில பகுதிகளை தங்களின் நேரடிக்கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக் கொண்டனர்.
2. உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது. இது விவசாயிகளை கிளர்ச்சி செய்ய வைத்தது.
முக்தி:
மாகாண ஆளுநர்கள் முக்தி எனப்பட்டனர்.
வாயுக்கள்:
1. தொடக்க காலத்தில் துருக்கியர்கள் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். மதத்திற்கு அப்பாற்பட்டு பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர்.
2. இசுலாமியர்களுக்கு நிகராக ராய், ராணா, நாகூர், ஷா, மஹதா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்பட்டது" என்ற பரணியின் குறிப்பிலிருந்து அறியப்படுகிறது. இது இசுலாமியர்களின் நிர்வாகச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும்.
40.
இராட்டிரகூட முதல் மன்னர் தந்தி கர்க்கர் இவருக்குப்பின் முதலாம் கிருஷ்ணர் மூன்றாம் கோவிந்தன் அமோகவர்ஷர் போன்ற சிறந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது கால இலக்கியம், கலை கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்ததாகும்.
இலக்கியம்:
இவர்களது காலத்தில் நிலையம் மேம்பட்டு இருந்தது.
i) முதலாம் அமோகவர்ஷன் "கவிராஜா மங்களம்" என்னும் கன்னட நூலை இயற்றினார். இது கன்னடத்தில் இயற்றப்பட்ட மொழியியல் நூலாகும்.
ii) ஜுனசேனர் என்பவர் சமணர்களின் ஆதிபுராணத்தை இயற்றினார்
iii) மூன்றாம் கிருஷ்ணர் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட
கவிச்சக்கரவத்தி பொன்னா
ஆதிகவிபம்பா
கவிச்சக்கரவர்த்தி ரன்னா
ஆகியோர்களை ஆதரித்தார்
கட்டிடகலை:
ராஷ்டிர கூடர்கள் கட்டிடக் கலைக்கும் சிற்பக்கலைக்கு வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா, எலிஃபண்டா குடைவரைக் கோயில்கள் இவர்களது கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
எல்லோரா:
i) எல்லோரா குடைவரைக் கோயில் சமண, பௌத்த மற்றும் இந்து மத சின்னங்களுக்கான கலை நுட்பத்தை கொண்டுள்ளது.
ii) இங்கு முதலாம் அமோக வர்ஷர் கட்டிய ஐந்து சமணக்குகைக் கோயில்கள் உள்ளன.
iii) மேலும் இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாச நாதர் கோயில் நம் கண்ணைக் கவரும் அமைப்பாகும்.
எலிபண்டா:
i) எலிபண்டாவின் பிரதானக் கோயில் எல்லோரா கோயிலை விட சிறந்ததாகும்
ii) இங்குள்ள "மகேஷுமூர்த்தியின்" மூன்று முகங்கள் கொண்ட 25 ஆதி உயரமுள்ள மார்பளவு சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
இது போன்று இன்னும் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இராஷ்டிரக் கூடர்கள் கட்டிடக் கலைக்கு செய்த தொண்டு அளவிட முடியாததாகும்.
41.
1. சங்க கால வணிகர்கள் பற்றிய சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. தமிழ் - பிராமி கல்வெட்டுகளில் வணிகத்தோடு தொடர்புடைய வணிகன், சாந்தன், நிகம போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன.
2. கைவினைத் தொழில்களான உலோகப் பாண்டம் செய்தல், மணி மற்றும் தங்க ஆபரணங்கள் செய்தல், மட்பாண்டம் செய்தல் போன்ற உருப்பத்தி நடவடிக்கைகள் குறித்த சான்றுகள் உள்ளன. மதுரைக் காஞ்சி பகல் நேரத்தில் நாளங்காடியிலும், இரவு நேரங்களில் அல்லங்காடியிலும் நடைபெற்ற வாணிபம் குறித்து கூறுகின்றது.
3. மட்பாண்டங்களின் மீது பொறிக்கப்பட்டுள்ள சில பெயர்கள், தமிழ்மொழி பேசாத ஏனைய மக்கள் பெரும்பாலும் வணிகர்கள், நகரங்களிலும், தொழில் மையங்களிலும் இருந்ததை தெரிவிக்கின்றன. தொலைதூர நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். உப்பு வணிகர்கள் உமணர் என அழைக்கப்பட்டனர். அவர்கள் மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பத்தோடு வாணிபத்தில் ஈடுபட்டனர். சாத்து எனும் சொல் இடம்விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கும்.
4. ரோமப் பேரரசு மற்றும் தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு வாணிபத் தொடர்புகள் இருந்ததை தொல்பொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. இந்தியா எளிதில் தொடர்புகொள்ள கூடிய பூகோள அமைப்பை பெற்றிருப்பதால் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள் எளிதில் ஏற்பட்டன. ரோமானியர்களால் கொண்டு வரப்பட்ட செல்வம், அயல்நாட்டு வணிகர்கள் வருகை போன்றவை குறித்த தொல்லியல் சான்றுகள் ஏராளமாய் கிடைத்துள்ளன.
5. எனவே சங்க காலத்திலும், அதைத் தொடர்ந்து வந்த காலத்திலும் உள்நாட்டு வாணிபமும், தொலைதூர வாணிகமும் சிறந்து விளங்கியதில் எவ்வித ஐயமும் இல்லை.
42.
43.
| கீழ்ப் பழங்கற்காலம் | இடைப் பழங்கற்காலம் |
| இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கி இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. | 3,85,000-40,000க்கு உட்பட்ட காலகட்டத்தில் நிலவியதாக கணக்கிடப்பட்டுள்ளது. |
| இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற வகையினர் வாழ்ந்துள்ளனர். | இக்கலக்கட்டத்துக்கும் ஹோமோ எரக்டஸ் வகையினர் வாழ்ந்துள்ளனர். |
| மத்திய இந்தியா, இந்தியாவின் தென் கிழக்குப்பகுதி, சென்னைக்கு அருகிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். | நர்மதை, கோதாவரி, கிருஸ்ணா, யமுனை உள்ளிட்ட ஆறுகளின் சமவெளிகளில் வாழ்ந்த இடங்கள் காணப்படுகின்றன. |
| வேட்டையாடியும், கிழக்கு கோட்டை, பலம் ஆகியவற்றை சேகரித்து வாழ்ந்துள்ளனர். | வேட்டை ஆடுபவர்களையம் உணவை சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர். |
| திறந்த வெளியிலும் ஆற்றுச்சமவெளிகளிலும், குகைகளிலும் வசித்தனர். | திறந்த வெளிகளிலும், குகைகளிலும், பாறை படுகைகளிலும் வசித்தனர். |
| கற்களைச் செதுக்கி கோடாரி, சிறுகோடாரி செதுக்கிகருவி, பிளக்கும் கருவி, துண்டாக்கும் கருவிகளை உருவாக்கினார். | இக்கருவிகள் சிறியதாயின. இக்கருவிகள் உற்பத்தியில் மூலக்கல்லை தயார் செய்யும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார். |
44.
ஆதிச்சநல்லூர், மையப்புள்ளி, கொடுமணல் ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஆய்வுகள் நடைபெற்றது.
ஆதிச்சநல்லூர்:
திருநெல்வேலியிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் 1876 ஆம் ஆண்டிரு ஜாஹார் என்பவர் அகழ்வாய்வை மேற்கொண்டனர். அன்றைய மாவட்ட ஆட்சியர் ஏ.ஜே.ஸ்டுவர்ட், மொழியியல் வல்லுநர் ராபர்ட் கால்டுவெல் ஆகியோரின் முயற்சியினால் அலக்ஸாண்டர் ரீ என்பவரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் தொடங்கின.
தாழிகள், மட்பாண்டங்கள், ஆணிகள், ஆயுதங்கள் உள்ளிட்ட இரும்பு கருவிகள், சில கல்மணிகள், ஒரு சில தங்க நகைகள், வீட்டு விலங்குகளின் வெண்கல பொம்மைகள், துணி, மரப்பொருள்களின் எச்சங்கள் ஆகியிவை அங்கு கிடைத்ததன் வாயிலாக பெருங்கற்கால மக்கள் வாழ்க்கை முறையைப் பற்றி நன்கு அறியலாம்.
பையம்பள்ளி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்காவைச் சேர்ந்த பையம்பள்ளி.
1906 ல் நடத்திய அகழ்வாய்யில் கருப்பு மற்றும் சிகப்பு நிற மட்பாண்டங்களை வெளிக்கொணர்ந்தது. ஈமத்தாழிகள் பெரும் எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இப்பண்பாட்டின் காலம் ரேடியோ கார்பன் பரிசோதனை மூலம் பொ.ஆ.மு.1000 என்று கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல்:
ஈரோட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் அவற்றின் வடகரையில் உள்ளது கொடுமணல்.
1980,1990 மற்றும் 2012ல் அகழ்வாய்வு நடைபெற்றது.
மட்பாண்டங்கள், ஆயுதங்கள்,கருவிகள்,, அணிகலன்கள், மணிகள் மற்றும் செம்மணிக்கற்கள் போன்றவை அகழ்ந்தெடுக்கப்பட்டன.
சிப்பிகள், வளையல்கள், உலைக்கள எச்சங்கள், சுளை சாம்பல், தமிழ் பிராமி பொறிப்புளைக் கொண்ட மட்பாண்டக் குவியல்கள் கிடைத்துள்ளன. ஈமக்குழிகள், தாழிகள், கற்படுக்கை புதைப்பும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு புதைகுழிக்கு அருகே காணப்படும் நடுகல் பெருங்கற்காலத்தை சேர்ந்ததா கணிக்கப்பட்டுள்ளது.
கொடுமணல் அகழ்வாயில் கிடைத்தவை சங்கத்தொகை நூல்கள் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
45.
இலக்கியச் சான்றுகள்:
1. சங்கநூல்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும்.
2. பொருளாதாரம், அரசாட்சிக் கலை ஆகியன குறித்து கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம்.
3. ஆந்திரர் / சாதவாகனர் வம்சாவளி வரலாற்றினைக் குறிப்பிடும் புராணங்கள்.
4. மகாவம்வம் முதலான பௌத்த வரலாற்று நூல்கள்.
5. சாதவாகன அரசர் ஹால பிராகிருத மொழியில் எழுதிய காதாசப்தசதி.
46.
தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாட்டு காலத்தில்
1. ஆறுகளின் மூலம் படியும் செழிப்பான மண் வேளாண்மையை மேம்படுத்தி, படிப்படியாக தானிய உற்பத்தியில் உபரியின் அளவை அதிகரித்தது.
2. பழம் பெரும் நாகரிகங்களின் தோற்றத்துக்கு உபரி உணவு உற்பத்தியே மிக முக்கிய காரணமாகும்.
3. பெரிய கிராமங்கள் தோன்றின.
4. மட்பாண்டங்கள் செய்யும் தொழில் வளர்ந்தது.
5. நிரந்தர இருப்பிடங்கள் கட்டப்பட்டன.
எனவே பண்பாட்டு வளர்ச்சிகள் மொத்தமான 'புதிய கற்காலப் புரட்சி' எனப்படுகின்றன.
47.
1857 ஆண்டு புரட்சியின் விளைவுகள்:
1858 -ஆம் ஆண்டு மகாராணியின் பேரரறிக்கையின் படி, இதுவரை ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழுவால் ஆட்சி செய்யப்பட்டு வந்த இந்தியா, இனிமேல் ஆங்கிலேயே முடியரசின் பெயரால் அரசு செயலாளர் மூலம் ஆளப்படும்.
வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும், இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும்.
கல்வி, பொதுப்பணித் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒழிக்கப்பட்டன.
1861 - இல் அமைக்கப்படும் சட்டமன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர்.
48.
(i) நரேந்திரநாத் தாத்தா எனும் இயற்பெயர் கொண்ட விவேகானந்தர் கல்கத்தாவில் வாழ்ந்தவர்.
(ii) தன்னுடைய குரு ராமகிருஷ்ண பரம்ஹம்சரின் பெயரிலேயே ஒரு அமைப்பை ஏற்படுத்தி சமூகத் தொண்டாற்றினார்.
(iii) 1893 -ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்று இந்து சமயத்தை உலகறியச் செய்தார்.
(iv) இவருடைய அமைப்பு பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள் அமைத்து சமூக சேவையாற்றியது.
49.
50.
(i) இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர் திட்டதிற்கு முற்றிலும் மாறான தண்டனைக்குரிய ஒப்பந்தமாகும்.
(ii) இம்முறையின்படி கூலி (ஒப்பந்த தொழிலாளரை அழைக்கும் முறை ) சிறைசாலை போன்ற சுழலில் பணி செய்ய வேண்டும்.
(iii) பணியில் அல்டசியம் காட்டினாலோ அல்லது பணி செய்ய மறுத்தாலோ , மிடுக்காக திரிந்தாலோ , உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தாலோ , ஒப்பந்த காலம் முடியும் முன் பணியை விட்டு விலகினாலோ கூலியை மறுக்கவோ அல்லது சிறை தண்டனை வழங்கவோ முடியும்.
(iv) ஒரு அர்ப்ப பிரச்சினைக்காகக்கூட சட்டச் சரத்துக்களை காட்டி தோட்ட உரிமையாளர் , தொழிலாளர்களின் சம்பளத்தை மறுக்கவோ அல்லது அவர்களை சிறையில் அடைக்கவோ செய்தனர்.
51.
(i) சோழர்கால சமூகப் படிநிலையை நிர்ணயிக்கும் காரணியாக விளங்கியது வேளாண்மை ஆகும்.
(ii) உயர்தகுதி நிலையில் இருந்தோர் 'பிரம்மதேயகிழவர்' என அழைக்கப்படும் நில உடமையாளர் ஆவர்.
(iii) வேளாண்மை கிராமங்களின் உடமையாளர்கள் அடுத்தபடி நிலையில் இருந்தனர்.
(iv) இவர்கள் இருவரிடமும் பணிபுரியும் குத்தகைகாரகள் உழுகுபடி எனப்பட்டனர்.
(v) அடிமட்ட உழைப்பாளிகளான 'சமூகப்படி' எனப்படுவோரும், பணிசெய் மக்கள் எனும் அடிமைகளும் கடை நிலையில் காணப்பட்டார்.
52.
i) சங்கத் பாடல்களின் படி முசிறி நகரம் இரண்டு வணிகச் சுற்றுகள் மையமாக இருந்துள்ளது.
ii) நாட்டின் உள்பகுதிகளிலிருந்து அரிசியை ஏற்றிவந்த படகுகள் திரும்பிச் செல்கையில் மீன்களை ஏற்றிச் சென்றன.
iii) இது அடிப்படையான நுகரவு பொருள்களின் வணிகத்தில் பண்டமாற்று முறை பின்பற்றப்பட்டதை சுட்டுகிறது.
iv) அதே நேரத்தில் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட கருமிளகு மூட்டைகள், கப்பலில் வந்த தங்கத்திற்கு பண்டமாற்று செய்துகொள்ளப்பட்டு பின் அத்தங்கம் படகுகளில் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
53.
i) அலெக்ஸ்சாண்டரின் படையெடுப்பு இந்தியர்களைக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் கிரேக்க சத்ரப்புகள் அமைவதற்கு இட்டுச்சென்றது.
ii) மேற்குலகிற்காக வணிகப் பெரு வலிகள் திறக்கப்பட்டன.
iii) இதனால் கிரேக்கர்களும் கைவினைக் கலைஞர்களும் இந்தியா வந்தனர்..
iv) இந்தியாவுக்கும் கிரேக்கத்திற்கும் இடையில் நேரடி தொடர்பு ஏற்பட இது உதவியது.
v) மெளரியர்களின் கீழ் வட இந்தியாவில் அரசியல் ஒருமைப்பாடு ஏற்பட்டது.
vi)பிற்காலத்தில் மகதம் பலம் வாய்ந்ததாக மாறி தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியது.
54.
(i) ஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினார்.
(ii) ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் நாலாயிரதிவ்யபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.
(iii) வைதீக இந்துக்களை ஒன்றிணைந்தார்.
(iv) பிராமணர் அல்லாதோரையும் ஆழ்வார்கள் வைணவத்தில் இணைத்துக் கொண்டனர்.
(v) வைதீக சடங்குகளும், நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டு வைணவம் தமிழகத்தில் பரவியது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards