9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (9th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
சாலை பாதுகாப்புக் குறிகளை எழுதுக.
2.
விபத்தைத் தடுக்கும் வழிகள் யாவை?
3.
குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்
4.
இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
5.
இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக
6.
புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்
7.
நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?
8.
சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக்க.
9.
பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?
10.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.
11.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
12.
பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.
13.
இயற்கைப் பணம் என்றால் என்ன?
14.
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
15.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
16.
உயிர்கோளம் என்றால் என்ன?
17.
மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?
18.
கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?
19.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.
20.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக
21.
நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.
22.
சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
23.
கொள்ளை நோய் என்றால் என்ன?
24.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?
25.
மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?
26.
குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
27.
மனித உரிமை என்றால் என்ன?
28.
ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை.
29.
தீவிபத்தின்போது என்ன செய்யவேண்டும் என மூன்று வாக்கியங்களில் எழுது .
30.
நிலநடுக்கத்தின் போது கட்டடத்திற்குள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
1.
1. சாலை பாதுகாப்புக் குறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
2. நில்! கவனி! செல்!
3. கவனி! - கேள்!
4. சாலையில் ஓடாதீர்.
5. எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்.
6. வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்
7. வளைவில் சாலையைக் கடக்காதீர்
8. அவசரப்படாதீர்.
2.
1. சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு.
2. சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்.
3. தொழில் நுட்பம், வாகன வடிவமைப்பு மற்றும் சாலை கட்டமைப்பு.
4. இருக்கைப் பட்டை பயன்படுத்துதல்.
3.
குடியேற்றம்: ஓர் இடத்தில் குடியிருக்கும் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குடியேற்றம் ஆகும். இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக குடியேற்றங்களில் மக்கள் தொகை குறையும்.
குடியிறக்கம்: குடியிறக்கம் என்பது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது குடி இறக்கம் ஆகும். பிறப்பு மற்றும் குடி இறக்கம் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது.
4.
1. இந்தியாவிலும் தமிழகத்திலும் திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
2. இந்தியாவில் 70% பெண்கள். தமிழ்நாட்டில் 51% பெண்கள் திருமணத்திற்காகவே இடம் பெயர்ந்துள்ளனர்.
5.
1. வேலை
2. கல்வி
3. தொழில்
4. திருமணம்
5. வணிகம்
6.
1. புவிமாதிரி என்பது ஒரு முப்பரிமாண உருண்டை ஆகும். ஆனால் நிலவரைப்படம் என்பது இரு பரிமாண வடிவம் கொண்டது.
2. புவிமாதிரி பூமி முழுவதையும் காட்டுகிறது. ஆனால் நிலவரைபடம் பூமி முழுவதையும், அல்லது ஒரு பகுதியை மட்டும் காட்டக் கூடியது.
3. புவிமாதிரியானது விரிவான பட அமைப்புக் காட்டக் கூடியது. நிலவரைபடம் இடங்களைப் பற்றிய குறிப்பான தகவல்களைத் தரக்கூடியது.
7.
ஒரு நிலவரைபடத்தில் தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச்சட்டம்,
நிலவரைபடக் குறிப்பு மற்றும் முறைக்குறியீடுகள் ஆகிய கூறுகளைக் கொண்டிருக்கும்.
8.
| சிறு விவசாயிகள் | குறு விவசாயிகள் |
| ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வோர் சிறு விவசாயிகளாவர். |
ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பளவில் சாகுபடி செய்வோர் குறு விவசாயிகளாவர். |
| இவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு 26 விழுக்காடு ஆகும். |
இவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு 36 விழுக்காடு ஆகும். |
| சிறு விவசாயிகளின் எண்ணிக்கை குறு விவசாயிகளின் எண்ணிக்கையை விட குறை வாகும். |
தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் குறு விவசாயிகளாவர். |
| தமிழகத்தில் சிறு விவசாயிகள் 14 விழுக்காடு உள்ளனர். | குறு விவசாயிகளின் எண்ணிக்கை 78 விழுக்காடு ஆகும். |
9.
பயிர்களின் விளைச்சல் பயிரிடப்படும் பரப்பளவு மட்டுமின்றி பயிர்களின் உற்பத்தித் திறனையும் சார்ந்து இருக்கிறது.
10.
1. மக்களாட்சி முறையில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுகிறது.
2. குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுகின்றனர்.
3. குடிமக்கள் தனது கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
4. மக்கள் தமக்குரிய தலைமையை தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
11.
1. சர்வாதிகரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை நமக்கு இருக்காது. ஏனென்றால் சர்வாதிகாரி என்பவர் சகல அதிகாரங்கள் கொண்டுள்ளவராக இருப்பார்.
2. அத்தகைய நாட்டில் பொதுமக்களின் கருத்துக்கு எந்தவித முக்கியத்துவம் இருக்காது. அவர்களின் கருத்து மதிக்கப்படாது.
12.
காற்றின் செயல்பாடுகளான அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் பாலைவனம் பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணியாக காற்று விளங்குகிறது.
13.
1. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
2. இவை புராதனப் பணம் என்று அழைக்கப்பட்டன.
3. படிப்படியாகத் தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக ஏற்கப்பட்டன.
4. இதையொட்டி இந்த இரு உலோகங்கள் நாடுகளுக்கு இடையிலான பண்ட மாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையே இயற்கையான பணம் என்று அழைக்கப்பட்டன.
14.
1. நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
2. ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு நாகரிகங்களுக்கிடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
3. இவ்வாறு பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதில், பண்டமாற்றுப் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதில் பிரச்சனைகள் உருவாகின.
4. இப்பிரச்சனைகளுக்கு விடை காண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.
5. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் எனலாம்.
15.
(i) வெப்ப மண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
(ii)வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி.
(iii)பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி.
(iv)மிதவெப்பமண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி.
(v) தூந்திரப் பல்லுயிர்த்தொகுதி.
16.
உயிர்க்கோளம் (Biosphere) புவியின் நான்காவது கோளமாகும். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இக்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியதாகும். இது தாவர இனங்கள், விலங்கினங்கள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
17.
(i) நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள், புகை போன்றவற்றின்மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.
(ii) சில நேரங்களில் வெப்பக்காற்றும் ஈரப்பதம் நிறைந்தக் காற்றும் ஒன்றிணையும் போதும் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன.
(iii) வளிமண்டலத்தில் கண்களுக்கு புலப்படும்படியாக மிதந்து கொண்டிருக்கும் குளிர்ந்த நீர்த்திவலைகளே மேகங்களாகும்.
18.
(i) வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும்.
(ii) இவை நிலவும்காற்று (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது.வியாபாரக்காற்றுகள்,(Trade Winds) 'மேலைக்காற்றுகள்'மற்றும் 'துருவகீழைக்காற்றுகள்' (Polar Easterfics) கோள் காற்றுகள் ஆகும்.
19.
i.பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம் ஹமுராபியின் சட்டத் தொகுப்பாகும்.
ii.குடும்ப உரிமைகள், வணிகம். அடிமை முறை,வரிகள், கூலி போன்ற பல்வேறு வழக்குகள் குறித்து இதில் 282 பிரிவுகள் உள்ளன.
iii. இது பழைய சட்டங்களின் தொகுப்பாகும்.
iv.இது பழிக்கு பழி வாங்கும் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டது.
v."கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
20.
i.எகிப்தியர், கட்டடக் கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்பு உடையவர்கள்.
ii. எகிப்தில் காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், படைப்புகள், எகிப்தியர்களின் கலை ஆற்றலுக்கு சான்றாகும்.
பிரமிடு:
i.பாரோக்களின் சமாதிகளாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ii.கெய்ரோவிற்கு அருகில் உள்ள பிரமிடுகள், கிஸா பிரமிடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஸ்பிங்க்ஸ்:
i.உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று ஸ்பிங்க்ஸ்
ii.இவற்றின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம்.
21.
நீயாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டார்கள். குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.
22.
இன்றைய நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு,நமது முன்னோர்களின் அறிவாற்றலால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும். தொல்பழங்கால மக்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .
எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றல்களால் அறிவையும்,புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் என்று சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
23.
1. திடீரெனத் தோன்றும் போரினாலும். கொள்ளையர்களின் எதிர்பாராத் தாக்குதலாலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும்.
2. இதனைப்போன்று திடீரெனத் தோன்றும் நோய்களாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். இவ்வகை நோய்களை கொள்ளை நோய் என்பர்.
3. 14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 'பிளேக்" என்ற கொள்ளை நோயினால் 30 முதல் 60 சதவீதம் மக்கள் இறந்தனர்.
24.
1. பேரூராட்சி
2. நகராட்சி
3. மாநகராட்சி
25.
1. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்படுகிறது.
2. மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளால்ப் பிரிக்கப்படுகிறது.
3. பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
4. இவ்வுறுப்பினர்கள் தங்களில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
26.
1. குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கொண்ட தனிநபர்கள் என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்.
2. குழந்தைகள் கடத்தப்படுதல், விற்பனை செய்தல் நடைபெற ஏழ்மை, பாவினப்பாகுபாடு மற்றும் சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கியக் காரணங்களாகும்.
3. மேலும் குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல். பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக கடத்தல் அல்லது விற்பனை செய்யப்படுகின்றனர்.
4. எனவே இதுபோன்ற தொல்லைகளிலிருந்து பாதுகாக்க குழந்தைகள் மீது சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது.
27.
1. ஐ.நா.சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
2. இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்.
3. எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
28.
| ஒற்றையாட்சி முறை | கூட்டாட்சி முறை |
| ஒரேயொரு அரசு அல்லது துணைக் குழுக்கள் |
இரண்டு நிலையில் அரசாங்கம் |
| பெருபாலும் ஒரே குடியுரிமை | இரட்டைக் குடியுரிமை |
| துணைக் குழுக்கள் தன்னிச்சையாகச் செயல்பட இயலாது |
கூட்டாச்சியின் குழுக்கள் மத்திய அரசுக்கு உட்பட்டவை |
| அதிகாரப் பகிர்வு இல்லை | அதிகாரப் பகிர்வு |
| மையப்படுத்தப்பட்ட அதிகாரம் | அதிகாரப் பரவல் |
29.
1. கட்டடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
2. மற்றவர்களையும் உடனடியாக வெளியேறச் செய்யவேண்டும்.
3. தீ விபத்தின்போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
4. மின்தூக்கிகள் பழுதடைந்திருக்கலாம். எனவே அதைப் பயன்படுத்தக் கூடாது.
5. வீடு, பள்ளி, அடிக்கடி சென்று வருமிடம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் வழியைத் திட்டமிடுவேன்.
6. ஆழிப்பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காண்பேன்.
7. ஆழிப்பேரலையைப் பற்றி குடும்பத்துடன் கலந்துரையாடுவேன்.
8. கலந்துரையாடலின் மூலம் ஆழிப்பேரலையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வேன்.
30.
1. நிலநடுக்கத்தின் போது நான் கட்டடத்திற்குள் இருந்தால் மேசையின் அடியில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து மேசையின் காலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு. ஒரு கையால் தலையை மூடிக் கொள்ளவும். அறையில் எந்த மரச்சாமான்களும் இல்லையெனில், அறையின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக்கொள்ளவும்.
2. அறையின் மூலையில் மேசையின் அடியில் அல்லது கட்டினுக்கு அடியில் அமர்ந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்,
3. கண்ணாடிச் சன்னல். வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமான்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
4. நிலநடுக்கம் முடியும் வரை உள்ளே பாதுகாப்பாக இருக்கவும். அதன்பிறகு வெளியேறுவது பாதுகாப்பானது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards