9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
GEO - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது?
காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.
கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேணாடம்.
2.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
தீ விபத்திலிருந்து தப்பிக்க "நில்! விழு! உருள்!
"விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்" என்பதுநிலநடுக்க தயார் நிலை.
"கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்" என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்.
3.
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.
114
112
115
118
4.
'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது எதற்கான ஒத்திகை?
தீ
நிலநடுக்கம்
சுனாமி
கலவரம்
5.
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.
காவலர்கள்
தீயணைப்புப் படையினர்
காப்பீட்டு முகவர்கள்
அவசர மருத்துவக் குழு
6.
நிலநடுக்கத்தின்போது வாகனத்தில் சிக்கிக் கொண்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
7.
சுனாமிக்குப் பிறகு என்ன செய்யவேண்டும்?
8.
பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
9.
பேரிடர் முதன்மை மீட்புக் குழு என்பவர் யாவர்?
10.
ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
11.
நிலநடுக்கத்தின்போது கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டடங்களிலிருந்து விலகியிருக்கவேண்டும். ஏன் ?
12.
நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?
13.
நிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்?
1.
(c)
கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
2.
(c)
"கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்" என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.
3.
(b)
112
4.
(b)
நிலநடுக்கம்
5.
(c)
காப்பீட்டு முகவர்கள்
6.
1. உடனடியாக வாகனத்தை நிறுத்த வேண்டும். வாகனத்தை கட்டிடத்திற்கு அருகிலோ, மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு அடியிலோ நிறுத்தக் கூடாது.
2. நிலநடுக்கம் நின்றவுடன் கவனமாகப் பாதைகளைக் கடந்து செல்ல வேண்டும். நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், சரிவுப் பாதைகள் போன்றவற்றைத் தவரிக்க வேண்டும்.
7.
1. ஆழிப் பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளை வானொலி அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. நமக்கு காயம் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து முதலுதவி பெறவேண்டும்.
3. காயமடைந்த அல்லது சிக்கிக்கொண்ட பிற நபர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
4. ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்கவேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுநர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்
5. சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள், முதியோர். ஊனமுற்றோர். போக்குவரத்து வசதியில்லாதவர்களுக்கு உதவி செய்திட வேண்டும்.
6. எரிவாயு கசிவை உணர்ந்தால் உடனடியாக சன்னல்களைத் திறந்துவிட்டு விட்டு அனைவரையும் வெளியேறச் செய்ய வேண்டும்.
8.
1. தயார் நிலை
2. மட்டுப்படுத்துதல்
3. மீட்பு
4. திட்டமிடல்
5. தடுத்தல்
6. புனர்வாழ்வு
7. மறுசீரமைப்பு
9.
1. காவலர்கள்
2. தீயணைப்புத் துறையினர்
3. அவசர மருத்துவக் குழுக்கள்
10.
1. நில நடுக்கம், கடலுக்கடியில் ஏற்படும் நிலச்சரிவு. எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப்பேரலையாகும்.
2. ஆழிப்பேரலையானது 10 - 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 800 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடியது.
3. இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கி உயிர்ச்சேதத்தையம் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
11.
கண்ணாடிப் பொருள்கள் உடைந்து சிதறிப் பறந்து விழுந்து உடலின் மீது கடுமையான காயங்களை ஏற்படுத்தும். இதனால் உயிரிழப்பு ஏற்படலாம்.
12.
அறையில் மூலையில் குத்துகாலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
13.
நிலநடுக்கத்கதால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதனால் மின்தூக்கி செயல் இழந்துவிடும். மின்தூக்கி நகரும் பாதை அடைக்கப்பட்டு கதவுகள் இறுக்கமாக மூடிக்கொள்வதால் நம்மால் அங்கிருந்து வெளியேற முடியாது. அதனால் நாம் படிக்கட்டை உபயோகப்படுத்த வேண்டும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards