9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஏழைமக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
வாழ்வாதாரத்திற்காக
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
சேவைக்காக
அனுபவத்தைப் பெறுவதற்காக
2.
1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?
பல்வந்ராய் மேத்தா குழு
அசோக் மேத்தா குழு
GVK ராவ் மேத்தா குழு
LM சிங்வி மேத்தா குழு
3.
எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?
இங்கிலாந்து
ஜெர்மனி
பிரான்ஸ்
அமெரிக்கா
4.
ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.
யென்
யுவான்
5.
அமெரிக்க கண்டம்_________என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிகோ வெஸ்புகி
கொலம்பஸ்
வாஸ்கோடகாமா
ஹெர்நாண்டோ கார்டஸ்
6.
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
இந்தியா
பாகிஸ்தான்
சீனா
பூடான்
7.
கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இங்கிலாந்து
கனடா
ரஷ்யா
8.
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.
புத்தர்
மகாவீரர்
லாவோட்சே
கன்ஃபூசியஸ்
9.
________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்
துள்ளல்
வண்டல் விசிறி
டெல்டா
மலை இடுக்கு
10.
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.
கருவம்
வெளிக்கரு
கவசம்
மேலோடு
11.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
நுண்கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
12.
சாலை பாதுகாப்புக் குறிகளை எழுதுக.
13.
நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?
14.
பசுமை குடில் விளைவு என்றால் என்ன?
15.
நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.
16.
பயிர்களின் விளைச்சல் எதனைச் சார்ந்து இருக்கிறது?
17.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
18.
மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
19.
அந்நியச் செலாவணி என்றால் என்ன?
20.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
21.
புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.
22.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ந்தும், வறட்சியாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?
23.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
24.
சிகுராட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக
25.
நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.
26.
மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
27.
தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக்க.
28.
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
29.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
30.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.
31.
தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?
32.
உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.
33.
சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.
34.
இந்தியாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக விவரிக்கவும்
35.
நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக
36.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
37.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா?
38.
நிலநடுக்கத்தின்போது வாகனத்தில் சிக்கிக் கொண்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
39.
போக்சா (POCSO) -வரையறு.
40.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக
41.
நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் மக்களாட்சி.
1.
(a)
வாழ்வாதாரத்திற்காக
2.
(c)
GVK ராவ் மேத்தா குழு
3.
(b)
ஜெர்மனி
4.
(a)
யென்
5.
(a)
அமெரிகோ வெஸ்புகி
6.
(c)
சீனா
7.
(b)
இங்கிலாந்து
8.
(b)
மகாவீரர்
9.
(c)
டெல்டா
10.
(b)
வெளிக்கரு
11.
(b)
பழங்கற்காலம்
12.
1. சாலை பாதுகாப்புக் குறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
2. நில்! கவனி! செல்!
3. கவனி! - கேள்!
4. சாலையில் ஓடாதீர்.
5. எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்.
6. வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்
7. வளைவில் சாலையைக் கடக்காதீர்
8. அவசரப்படாதீர்.
13.
அறையில் மூலையில் குத்துகாலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
14.
1. பசுமைக்குடில் வாயுக்களான கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன். நீர்மூகை கூறுகள், குளோரோ ஃபுளோரோ கார்பன், கார்பன் மோனாக்சைடு. ஒளிப்பட வேதியல் தனிமங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்றவை வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைக்கிறது.
2. இவை மேலும் வளி மண்டலத்தின் வெப்ப ஏற்புத்திறன் அதிகரிக்கவும் காரணமாகின்றன.
3. உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல், கடல் மட்டம் உயருதல். கடலோர நிலப்பகுதிகளைக் கடல் ஆட்கொள்ளுதல், பனிக்கட்டி உருகுதல் போன்றவை ஏற்படுகின்றன.
4. உலக வெப்பமயமாதல் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
15.
(i) சங்கிலி (Chain)
(ii) பட்டகக் காந்தவட்டை (Prismatic compass)
(iii) சமதள மேசை (Plane Table)
(iv) LDLLLDI60fl (Dumpy level)
(v) HL860 LDLLID (Abney level)
(vi) சாய்வுமானி (Clinometer)
(vii) தியோடலைட் (Theodalite)
(viii) மொத்த ஆய்வு நிலையம் (Total station)
(ix) உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை (GNSS) ஆகியவை ஆகும்.
16.
பயிர்களின் விளைச்சல் பயிரிடப்படும் பரப்பளவு மட்டுமின்றி பயிர்களின் உற்பத்தித் திறனையும் சார்ந்து இருக்கிறது.
17.
1. சர்வாதிகரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை நமக்கு இருக்காது. ஏனென்றால் சர்வாதிகாரி என்பவர் சகல அதிகாரங்கள் கொண்டுள்ளவராக இருப்பார்.
2. அத்தகைய நாட்டில் பொதுமக்களின் கருத்துக்கு எந்தவித முக்கியத்துவம் இருக்காது. அவர்களின் கருத்து மதிக்கப்படாது.
18.
காரணம்: இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு படிவுகள் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு மூப்பு நிலையில் அகன்று காணப்படுகிறது.
19.
1. நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது.
2. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
3. உள்நாட்டில், அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது.
4. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
5. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
20.
உயிரினப்பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும். இது காலநிலை. நிலத்தோற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
21.
1. புனித சோபியா ஆலயம் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகும்.
2. அக்கால ஐரோப்பாவின் மிக நேர்த்தியான கட்டடமான இத்தேவாலயம் அதன் புதுமையான கட்டடக்கலை நுணுக்கங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.
3. கான்ஸ்டான்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.
22.
துருவ உயரழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த வறண்ட காற்றுகள் துருவக் கீழைக் காற்றுகள் எனப்படுகின்றன. இவை வட அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்த காற்றுகளாகும்.
23.
(i) தொல்லியல் அகழாய்வுப் பணி என்பது பண்டைக்கால சமூகத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்படி ஓர் இடத்தை அகழ்ந்து, சான்றுகளாகக் கிடைத்த பொருள்களை முறையாக திரட்டி ஆராய்வதாகும்.
(ii) வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து சான்றுகள் கிடைத்துள்ளன.(எ.கா.) தமிழ்நாட்டின் அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிப்பூம்பட்டினம் முதலியன.
24.
விடை சிகுராட்களின் முக்கிய பண்புகள்:
(i) சிகுராட் என்பது பண்டைய மெஸபடோமியாவில் (தற்போதைய ஈராக்) காணப்படும் பிரமிட் வடிவ நினைவிடங்கள் ஆகும்.
(ii) நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் எனப்படும் கோயில்கள் கட்டப்பட்டன.
(iii) அவை செங்குத்தான பிரமிடுகள் போல் காட்சியளித்தன.
(iv) உச்சிக்கு செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
(v) கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், ஆண் மற்றும் பெண் மதகுருமார்களின் கல்லறைகள், சடங்குகளுக்கான விருந்து அரங்குகள், தொழிற் கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள் அடங்கிய வளாகங்கள் இருந்தன.
25.
நீயாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டார்கள். குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.
26.
மக்கள் தொகைப் பரவல்:
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகைப் பரவலாகும்.
உலகின் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.
காரணிகள்:
1. இயற்கை காரணிகள்
2. வரலாற்றுக் காரணிகள்'
3. பொருளாதாரக் காரணிகள்
இயற்கைக் காரணிகள்:
மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள். கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான இயற்கைக் காரணிகளாகும்.
வரலாற்றுக் காரணிகள்:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள். போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.
பொருளாதாரக் காரணிகள்:
கல்விக் கூடங்கள். வேலை வாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள். வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவலுக்கான பொருளாதாரக் காரணிகளாகும்.
27.
1. பிறப்பு இறப்பு மற்றும் இடம் பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
2. பெரும்பாலும் அனைவரும் அதிகமான நேரங்களில் ஓர் இடம் விட்டு இன்னொரு இடம் நகர்ந்து கொண்டே இருப்பதால் இடம் பெயர்தலைக் கணக்கிடுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
3. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.2 கோடியாகும்.
4. அவர்களில் 3.13 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
5. பொதுவாக இடப்பெயர்வு நகரப் பகுதிகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.
6. ஆனால் தமிழ்நாட்டில் மக்களின் நகர்வு நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
7. மேலும் தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்களில் மட்டுமே இடப்பெயர்வு மிக அதிக அளவு காணப்படுகிறது.
8. திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வுகளுமே பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
9. வியாபாரம், வணிகம், வேலை. கல்வி போன்ற காரணங்களுக்காகத் தமிழர்கள் பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
10. ஏழைகள் வாழ்வாதாரத்திற்காகவும். வசதி வாய்ப்பு உடைய மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இடம் பெயர்கின்றனர்.
11. அண்மைக் காலங்களில் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.
12. தமிழ்நாட்டின் மொத்த இடப் பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கும் 35% பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம் பெயர்ந்துள்ளனர்.
13. அதிக அளவிலான இடம்பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினை பிரதிபலிக்கிறது.
14. எனவே ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித் திட்டங்கள் அதிக அளவிலான இடம் பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
28.
1. நமது மக்களாட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளே அடிப்படையாகும்.
2. உள்ளாட்சி அமைப்புகளின் அரசமைப்பு நிலை, அவற்றின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியத் தத்தினை அளிக்கிறது.
3. இருப்பினும் அவற்றின் செயல்பாடுகளில் ஒரு சில நெருக்கடிகள் உள்ளன.
சிக்கல்களும் சவால்களும்:
1. உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
2. நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
3. உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன.
4. மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.
29.
இங்கிலாந்து தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் :
(i)18ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
(ii) நூற்பு நெசவுத் தொழில் ஆகியன இங்கிலாந்தில் பெரும் வளர்ச்சியடைந்தன.
(iii) வங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டு கரங்களில் சிக்கிப் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.
(iv) உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து தீர்வை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
(v) இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர். மேலும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை இந்தியச் சந்தைகளில் குவித்தனர்.
(vi) கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்துவிட்டது.
(vii) இந்திய நாடு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது.
(viii) 19ம் நூற்றாண்டில் முதல் கால் பகுதியில் டாக்கா மஸ்லின் துணி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது.
(ix) பிரிட்டன் துணி ஆலைகளில் உற்பத்தியான துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டது.
(x) எனவே இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்கள் ஆயினர்.
30.
மக்களாட்சியின் நிறைகள்:
1. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் மக்களுக்கான ஆட்சியாகும்.
2. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.
3. அனைத்து குடிமகன்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
4. அனைத்து மக்களுக்கான சம உரிமை வழங்கப்படுகிறது.
5. நாட்டின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களுக்கும் பலன் கிடைக்கிறது.
மக்களாட்சியின் குறைகள்:
1. தகுதியில்லாத தலைவர்கள் தமக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது.
2. திறமையில்லாத நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆட்சியும் குறையுள்ளதாக இருக்கும்.
3. லஞ்சம் மற்றும் ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சனை.
4. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் கூட்டாட்சியோ, குறை ஆயுள் ஆட்சியோ அமைய வாய்ப்புள்ளது.
5. எண்ணற்ற படித்தவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை.
31.
1. சமத்துவத்திற்கான உரிமை
2. பொது வேலைவாய்ப்பில் சமத்துவம்
3. அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை
4. வாழ்வாதார உரிமை
5. கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை இந்திய அரசியைைமப்பு உறுதி செய்கிறது.
6. பிரிவு 39பி. இருபாலாருக்கும் சமவேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.
7. தொழிற்சாலையில் வேலைநேரம் குறைப்பு
8. தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்
9. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்
10. தொழிலாளர் காப்பீட்டுக்கழகம்.
11. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.
32.
ரோமானிய மரபின்படி கி.மு. 509ல் எட்ரஸ்கன்கள் அகற்றப்பட்ட பின்னர் ரோமக் குடியரசை நிர்வகித்தவர்கள் பாட்ரீசியன் என்றழைக்கப்பட்ட செல்வந்த நிலப் பிரபுக்களாவர். செனட்டர்களும், கான்சல்களும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாதாரர். ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். பணம் படைத்தவர்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சி அதிகம் நடந்தன. ரோமானியர் ஆட்சி காலத்தில் அதிக அளவில் ஆடம்பர பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்த்திசை நாடுகளிலுருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்த வெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள், சந்தைகள், பெரிய நகரங்கள் ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்டன. அகஸ்டஸ்கி.மு 27ல் அரசரானார். அவர் தன்னைப் பேராசன் என அழைத்துக் கொண்டார். பணம் படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். சண்டைக்காட்சி வீரர்களை மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்ற வரையிலான கட்டாயச் சண்டைகளை மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்.
அகஸ்டஸில் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி என்பவர் அறிவியல் கலைச் கலைஞ்சயத்தை எழுதினார். அதனை அவர் "இயற்கை வரலாறு" என அழைத்தார். செனிக்கா என்பவர் அறிவியல் தொடர்பான களைக் களஞ்சியத்தை உருவாக்கினார். அவர் தன்னுடைய "ஓட்ஸ்" என்னும் நூலில் ஹேரெஸ், எப்பியூக்கியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்க வேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன் வாய்த்த கருத்துகளையும் இணைத்து புதிய தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு சிறந்த உரைநடையாளர் ஆவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவர். வெர்ஜில் எழுதிய ஏனெயிட் ரோமானிய ஏகாதிபதியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலங்கியை வளர்ச்சி அடைந்தது. மார்க்ஸ் அரிலியஸ் ஒரு தத்துவ அறிஞர் ஆவர். சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அமைத்து ஒரு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேராசர் இவரே ஆவர்.
33.
சோகுனேட்களின் ஆட்சி உருவாதல் :
(i) ஜப்பானில் தாரா, மினமோட்டா எனும் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற போரில் யோரிடோமோ என்பவர் வெற்றி பெற்றார்.
(ii) கி.பி. (பொ.ஆ.பி) 1192 இல் பேரரசர் இவருக்கு செய் - ய் -தாய் - சோகன் என்னும் பட்டத்தைச் சூட்டினார்.
(iii) இப்பட்டம் பரம்பரை பரம்பரையாக ஆட்சி நடத்தும் உரிமையைக் கொண்டிருந்தது.
(iv) காலப்போக்கில் சோகன் உண்மையான ஆட்சியாளரானார். இவ்வாறு சோகுனேட்டுகளின் ஆட்சி உருவானது.
எழுச்சி:
(i) யோரிடோமா தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினர். இதனால் முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
(ii) வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது. பேரரசர் ஓர் அலங்காரத் தலைமையாக மட்டுமே இருந்தார்.
(iii) நிலப்பிரபுத்துவ ராணுவத்தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப்பட்டது. மங்கோலியரை சோகாேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது.
(iv) இருந்தபோதிலும் இவ்வம்சத்தின் சரிவு தொடங்கியது. கி.பி. (பொ.ஆ) 1338-இல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது.
(v) சோகுாேட்டுகளில் வேறொரு பிரிவைச் சேர்ந்த 'அஷிக்காகா' சோகுனேட்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர்களின் ஆட்சி 235 ஆண்டுகள் நீடித்தது. இக்காலகட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது.
(vi) இறுதியில் மூவர் ஜப்பானை நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர். அவர்கள் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் அல்லது ஹிடயோஷி எனப்பட்ட விவசாயி, தொகுகவா இய்யாசு என்ற அக்காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபு ஆகியோராவர்.
(vii) 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பான் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.
34.
1. இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த 30 ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
2. காற்று, நீர் மாசுபாடு.கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைத் தீர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
3. இந்தியா குறைந்த வளங்களுடன் பொருளாதார மேம்பாட்டை அடைய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
4. நிலையற்ற காலநிலை குறைந்த வளங்கள் போன்றவற்றை எதிர்கொண்டு அணுகு முறைகளில் மாற்றம் கொண்டு. இந்தியா தனது பாதையில் சவால்களைச் சந்தித்து நிலையான மேம்பாட்டை அடைந்துள்ளது.
5. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி. நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
35.
வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும். இவை நிலவும்காற்று' அல்லது நிலையான காற்று (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது. 'வியாபாரக்காற்றுகள்' (Trade Winds) 'மேலைக்காற்றுகள் (westerlies) மற்றும் 'துருவகீழைக்காற்றுகள்' (Polar Easterlies) கோள் காற்றுகள்' ஆகும்.
அ) வியாபாரக்காற்றுகள்:
(i) வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று 'வியாபாரக்காற்று' எனப்படும்.
(ii) இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று 'வியாபாரக்காற்று' என அழைக்கப்படுகின்றது.
(iii) இக்காற்று பெருங்கடல்களில் பயணிக்கும்போது அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுகின்றன. மேலும் இக்காற்று மேற்கு நோக்கி நகரும் போது வறண்டுவிடுவதால் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.
ஆ) மேலைக்காற்றுகள்:
(i) மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென்அரைக்கோளங்களின் வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
(ii) இவை வட அரைக்கோளத்தில் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென்அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காகவும் வீசுகின்றன.
(iii) மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, இக்காற்றுகள் 40" "கர்ஜிக்கும் நாற்பதுகள்" எனவும் 50° அட்சங்களில் "சீறும் ஐம்பதுகள் எனவும் 60° அட்சங்களில் "கதறும் அறுபதுகள்" எனவும் அழைக்கப்படுகிறது.
இ) துருவ கீழைக்காற்றுகள்:
(i) துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் எனப்படுகின்றன.
(ii) இவை வடஅரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென்அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்தக் காற்றுகளாகும்
36.
(i) சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது,
(ii) இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர்.
(iii) இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள்,
(iv) வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.
மூவேந்தர்:
(i) சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.
(ii) அக்காலத்தில் பெரு நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் மூவேந்தரின் ஆளுகைக்கு கீழேயே இருந்தன.
சேரர்:
(i) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சி புரிந்தனர்.
(ii) தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டினங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன. (iii) சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
(iv) வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.
சோழர்:
(i) காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
(ii) காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் அவர்களுடைய துறைமுகம் ஆகும்.
(iii) சோழ மன்னர்களின் தலைச்சிறந்தவர் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்பெருக்கைப் பயன்படுத்தி பாசன வசதிகள் செய்து விவசாயம் தழைக்கச் செய்த பெருமைக்குரியவர்.
(iv) சோழர்களின் இலச்சினை புலி, அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.
பாண்டியர்:
(i) பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர்.
(ii) தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன.
(iii) பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.
வேளிர் / குடித்தலைமை:
(i) தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர்.
(ii) குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர்
(iii) வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
37.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
ஏனென்றால், நமது நில வரைபடத்தின் கூறுகள் இவற்றின் மூலம் தெளிவாக அளவிடப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் உலகளாவிய பயணம் செயற்கை கோள் மூலமே சாத்தியமாகியுள்ளது. உலக அமைவிட கண்டறியும் தொகுதி செயற்கை கோளின் மிக முக்கிய பயன்பாடாகும்.
38.
1. உடனடியாக வாகனத்தை நிறுத்த வேண்டும். வாகனத்தை கட்டிடத்திற்கு அருகிலோ, மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு அடியிலோ நிறுத்தக் கூடாது.
2. நிலநடுக்கம் நின்றவுடன் கவனமாகப் பாதைகளைக் கடந்து செல்ல வேண்டும். நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், சரிவுப் பாதைகள் போன்றவற்றைத் தவரிக்க வேண்டும்.
39.
1. போக்சா சட்டம் என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும்.
2. இது ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது
3. இது குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
4. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.
5. மேலும் பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவினை ஈடுகட்டும் வகையில் அபராதமும் இச்சட்டத்தின் படி விதிக்கப்படுகிறது.
40.
| நேரடி மக்களாட்சி | மறைமுக மக்களாட்சி |
|---|---|
| பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவு எடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். | பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே மறைமுக மக்களாட்சி என்றழைக்கப்படுகிறது. |
| (எ.கா.) பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து | (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து |
41.
| அதிபர் மக்களாட்சி முறை | நாடாளுமன்ற ஆட்சி முறை |
| குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் |
பெரும்பான்மை பெற்ற கட்டையின் தலைவர் பிரதம மந்திரியாவார் |
| அதிபரே அதிகாரம் படைத்தவர் | மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது. |
| அதிகாரப் பிரிவினை | அதிகாரப் பிரிவினை மையப்படுத்தப்படாமல் இருப்பது |
| சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள் | தனித்தனியாக சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள் |
| மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார். |
அரசின் தலைவர் -குடியரசுத் தலைவர் |
| அரசாங்கத்தின் தலைவரும் அதிபரே |
அரசாங்கத்தின் தலைவர் - பிரதம அமைச்சர் |
| தனிநபர் தலைமை | கூட்டுத் தலைமை |
| மகா சபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்க மாட்டார். |
கூட்டு மற்றும் தனித்தனியாக பொறுப்புகள். |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards