9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/01/2019
Economic Biology Full Material
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை ______.
லைக்கன்
ரைசோபியம்
மைக்கோரைசா
அசிட்டோபாக்டர்
2.
நிலவேம்பின் இடு சொல்பெயர் _________
லூக்காஸ் ஆஸ்பெரா
ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
குரோட்டலே ரியா ஜன்சியா
கேஷியா பஸ்துலா
3.
மெசானா என்ப து ஒரு _________ இனம்.
மாடு
எருமை
வெள்ளாடு
செம்மறி ஆடு
4.
தேனீ வளர்ப்பில் போதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
ஏபிஸ் டார்சோ ட்டா
ஏபிஸ் ப்ளோரா
ஏபிஸ் பெல்ல பெரா
ஏபிஸ் இண்டிகா
5.
கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
டார்ஸெட்
ஷகிவால்
சிவப்பு சிந்தி
6.
தேன் கூட்டில் காணப்படும் வேலைக்காரத் தேனீக்கள் எதிலிருந்து உருவாகின்றன?
கருவுறாத முட்டை
கருவுற்ற முட்டை
பார்த்தினோஜெனிஸிஸ்
ஆ மற்றும் இ
7.
பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?
ரோகு
கட்லா
மிரிகால்
சின்காரா
8.
பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு (தேனீக்கள்) இனம் அல்ல?
ஏபிஸ் மெல்லிபெரா
ஏபிஸ் டார்சோட்டா
ஏபிஸ் ப்ளோரா
ஏபிஸ் சிரானா
9.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
ஜெர்சி
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
ஷகிவால்
ப்ரெளன் சுவிஸ்
10.
மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது
பிஸ்ஸி கல்ச்சர்
செரிகல்ச்சர்
அக்வா கல்ச்சர்
மோனா கல்ச்சர்
11.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
12.
கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி.
13.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
14.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
15.
சிறு குறிப்பு வரைக .
அ) பசுமை வீட்டின் முக்கியத்துவம்
ஆ) உழவன் கைபேசி செயலி
இ) முக்கிய மலரியல் மண்டலங்கள்
ஈ) அஸோஸ்பை ரில்லம்
16.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
17.
உயிரி உரம் என்றால் என்ன? எடுத்துக்காட் டு தருக. ஏன் உயிரி உரம் மற்ற உரங்களை விடச் சிறந்தது?
18.
மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.
19.
மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?
20.
கீழ்க்கண்டவற்றை வே றுபடுத்துக
அ) அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
ஆ) மகரந்தம் மற்றும் தேன் ரசம்
இ) கூனி இறால் மற்றும் இறால்
ஈ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்
உ) தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு
21.
கீழ்க்கண்டவற்றை வரையறு
அ ) மீன் வளர்ப்பு
ஆ) தேனீ வளர்ப்பு
இ ) மண்புழு வளர்ப்பு
ஈ ) கடலுயிரி வளர்ப்பு
உ ) மலரியில்
ஊ ) கலப்பு உரம்
எ ) கனியியல்
ஏ ) பொருந்துதல்
22.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக
1.
(c)
மைக்கோரைசா
2.
(b)
ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
3.
(b)
எருமை
4.
(d)
ஏபிஸ் இண்டிகா
5.
(a)
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
6.
(a)
கருவுறாத முட்டை
7.
(d)
சின்காரா
8.
(a)
ஏபிஸ் மெல்லிபெரா
9.
(c)
ஷகிவால்
10.
(a)
பிஸ்ஸி கல்ச்சர்
11.
பசுமாடுகளும் எருமை மாடுகளும் இந்திய கால்நடைக்குள் அடங்கியுள்ளன.பால் உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காக அவை வளர்க்கப்படுகின்றன.அவை இரண்டு வித சிற்றினங்களாகக் காணப்படுகின்றன.அவையாவன .போஸ் இண்டிகஸ் (இந்திய பசுக்களும் , காளைகளும் மற்றும்)போஸ் புபாலிஸ் (எருமைகள் ). இந்தவகைக் கால் நடை விலங்கினங்கள் பாலிற்காகவும் , வயல் வேலைகளுக்காவும் வளர்க்கப்படுகின்றன.இவ்விலங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பால் உற்பத்தி இனங்கள் : பால் உற்பத்தி இனங்கள் பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.[பசுக்கள் (பால் சுரக்கும் பெண் இனம்) அதிகளவு பல தருபவையாகும் (கறவை விலங்குகள் )
இழுவை இனங்கள் : இவவகை இனமாடுகள் வேளாண்மைப் பயன்பாடுகளாகியா உழுதல், பாசனம் , வண்டியிழுத்தல்.அம்ரித்மகால் , காங்கேயம் , உம்பளச் சேரி, மாலவி , சிரி மற்றும் ஹல்லி கார் போன்ற இனங்கள் இவற்றில் அடங்கும் ,இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் , பசுக்கள் குறைந்தளவே பாலினைக் கொடுப்பவையாக இருக்கின்றன.
இரு பயன்களையும் தரும் இனங்கள் : இந்த வகை இனங்கள் பால் உற்பத்தியாகவும் பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காவும் பயன்படுகின்றன,இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால்விரும்பி வளர்க்கப்படுகின்ற்ன. ஏனெனில் இவைகளின் பசுக்கள் அதிகளவு பால் சுரப்பவையாக உள்ளன.இவற்றின் சிறப்பாக இழுவை வேலைகளை செய்பவையாகப் பயன்படுகின்றன.
12.
பால் உற்பத்தி செய்யும் கால்கடைகளுக்கு சமச்சீரான சரிவிகித உணவு அவசியமாகும்.இத்தீவனங்களில் அனைத்துவித தீவனப் பொருட்களும் அதாவது தாதுக்கள் வைட்டமின்கள், உயிர் எதிர்பொருள்கள் மற்றும் ஹார்மோன்கள் சரிவிகித அளவில் காணப்படுகின்றன.இவை விலங்குகளின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நோயிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கும் உறுதுணையாக உள்ளன.
பல உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு தினமும் கொடுக்க வேண்டிய தீவனத்தை சராசரி விகிதங்களாவன.
i) 15 முதல் 25 கி.கி தவிடு அல்லது சக்கை (உலர் புல் மற்றும் பசுந்தாள் தீவனம்)
ii) 4 முதல் 5 கி.கி தானியக் கலவை.
iii) 100 முதல் 150 லிட்டர் நீர்
13.
அ) இனப் பெருக்க குளம் :ஆரோக்கியமான , இனப்பெருக்கத்திற்கேற்ற , முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்களானவை சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றன. பெண் மீன்களால் வெளியிடப்பட்ட முட்டைகளானவை விந்துகள் மூலம் கருவுறுதல் அடைகின்றன.இந்த கருவுற்ற முட்டைகள் நீரின் மேற்பகுதியில் நுரைபோன்று கூட்டமாக மிதந்து காணப்படுகின்றன.
ஆ)குஞ்சு பொரிக்கும் குழிகள் : இனப் பெருக்கக் குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன. பொரிப்பங்கள் மற்றும் பொறுப்பு வலைத் தொட்டிகள் ஆகியவை இரண்டு வகையான மீன் பொரிக்கும் குழிகளாகும்.
இ) நாற்றங்கால் குளங்கள் : குஞ்சு பொரிக்கும் குழிகளில் பொரிக்கப்பட்ட இளம் மீன் குஞ்சுகளானவை 2முதல் 7 நாட்களுக்கு பிறகு , வளர்க்கும் குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகளானவை 60நாட்கள் வரை நாற்றங்கால் குளத்தில் சரியான அளவு உணவு கொடுக்கப்பட்டு 2 - 25 செ,மீ அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.
ஈ) வளர்க்கும் குளங்கள் : இளம் மீன்களை வளர்ப்பதற்கும் , வளர்க்கும் குளத்திற்கு மாற்றப்பட்டு மூன்று மாதம் வரை அதாவது 10 முதல் 15 செ.மீ நீளமுடைய மீனாக வளரும் வரை வளர்க்கப்படுகின்றன.இங்கு குளம் மீன்களானவை இளரிகளாக மாற்றமடைகின்றன.
இருப்புக் குளங்கள் : இவை வளர்ப்புகளம் அல்லது உற்பத்திக்குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன் இக்குளமானது கரிம மற்றும் கனிம உரங்கள் இடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
14.
மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் : உயிரியல் முறையில் சிதை வடையக் கூடிய கரிமக் கழிவுகள் மண்புழு உரம் தயாரித்தலில் மிக முக்கியமான கரிம மூலங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
அவையாவன:
i) விவசாயக் கழிவுகள் (பயிர்க் கழிவுகள் , காய்கறிக் கழிவுகள் கரும்பின் கழிவுகள்
ii) பயிர்க் கழிவுகள் (நெல் , வைக்கோல் , தியிலைக் கழிவு , தனியா மற்றும் , கரும்பின் வகை கழிவு, அரசி ,உமி புகையிலைக் கழிவு , நார்க் கழிவு)
iii) இலைக் குப்பைகள்
iv) பழ மற்றும் காய்கறிக் கழிவுகள்
v) விலங்குக் கழிவுகள் (மாட்டுச் சாணம் , கோழி எச்சங்கள் , பன்றிக் கழிவுகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் கழிவுகள்)
சாண ஏரிவாயுக் கழிவுகள்.
15.
அ) பசுமை வீட்டின் முக்கியத்துவம்:
1. நோயில்லாத் தாவரங்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்ய முடியும்.
2. பயிர்களுக்கு மிக்ககுறைந்த அளவு நீரே போதுமானதாகும்.
3. திறந்தவெளியில் பயிரிடப்படும் பயறுகளை விட இதன் மகசூல் அதிகமாகும்.
4. பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு இதில் குறைவு.
5. சாதகமற்ற சூழ்நிலைகலிருந்து இது தாவரங்களைப் பாதுகாக்கிறது. .
ஆ) உழவன் கைபேசி செயலி: தமிழநாடு அரசு உழவன் (விவசாயி )செயலி என்ற கைபேசி பயன்பாடுச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் அரசு வழங்கும் விவசாய மானியங்கள் , விவசாய உபகரணங்கள், பயிர்க் காப்பீட்டூத் தகவல்கள் மற்றும் காலநிலை ஆகியவை பற்றிய தகவல்களை பெறமுடியும். மேலும் அரசு மற்றும் தனியார் நிலையங்களில் உள்ள விதை மற்றும் உரங்களின் கையிருப்பைப் பற்றிய தகவல்களையும் இது வாங்குகின்றது.
இ) முக்கிய மலரியல் மண்டலங்கள்
| மண்டலங்கள் | மலர்கள் |
|---|---|
| ஓசூர் மண்டலம் | மல்லிகை, சாமந்தி, செண்பகப் பூ, ரோஜா |
| சென்னை மண்டலம் | மல்லிகை, மேரிகோல்டு, கனகாம்பரம் |
| மதுரை மண்டலம் | மல்லிகை, செண்பகப் பூ , வாசனைரோஜா ,அரளி , கனகாம்பரம் |
| திருச்சி மண்டலம் | மல்லிகை , ரோஜா , வாசனை ரோஜா |
| கோயம்புத்தூர் மண்டலம் | மல்லிகை , நிலசம்மங்கி , கோழிப்பு , வாசனைரோஜா |
| கன்னியாகுமரி மண்டலம் | மல்லிகை, வாசனை ரோஜா |
| மலைப்பிரதேச மண்டலம் | சாமந்தி , கனகாம்பரம். |
ஈ ) அஸோஸ்பை ரில்லம் : இவை வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை மேலும் இவை வளிமண்டல நைட்ரஜனை பயிர்த் தாவரங்களுக்கு வழங்குகின்றன. மக்காச்சோளம் , பார்லி , ஓட்ஸ் மாற்று சோளம் போன்ற தாவரங்களின் மீது நோய்தடுப்பு உரமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.இவைகள் தானியங்களில் 5 முதல் 20 சதவீதமும் சிறுதானியங்களில் 30 சதவீதமும் தீவனப் பயிர்களில் 50 சதவீதமும் தனியா உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன.
16.
தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும் .இது கழிவை அழித்து நலத்தை உருவாகும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
கலத்தல் (compounting ) : வைக்கோலுடன் மாட்டுச்சானம் , போன்ற பல வகையான கரிமப் பொருட்கள் மற்றும் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 500C வெப்ப நிலையில் ஒரு வாரத்திற்கு வைத்து பாதுகாக்கப்படுகிறது.
காளான் வித்து (spawn - ஸ்பான்) - ஸ்பான் என்பது காளான் விதையாகும் நோய்நுண்மை நீக்கப்பட்ட நிலையில் பூஞ்சை உடலங்களை தானியங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் இது பெறப்படுகிறது.எவ்வாறு பெறப்பட்ட விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
உறையிடுதல் (Casing) : விதை கலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றது.இது காளான் வளர்வதற்கு உதவிபுரிகின்ற்து.மேலும் இது ஈரப்பதத்தை வழங்கி , வெப்ப நிலையை சீராக்குகின்றது.
பொருத்துதல் (pinning): உடலானது சிறிய மொட்டுவிடத் தொடங்கி காளானாக வளர்கின்றது.குண்டுசி போல் காணப்படும் இந்த வெண்மையான மொட்டுக்களுக்கு ஊசிகள் என்று பெயர்.
அறுவடை செய்தல்: காளான்கள் 15 முதல் 230C வெப்பநிலையில் நன்றாக வளரும் இவைகள் ஒரு வாரத்தில் வளரக்கூடியவை.இது அறுவடை செய்யத் தேவையான வளர்ச்சி ஆகும்.மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
பதப்படுத்துதல் : நிறம் மாறுதல் , எடை குறைதல் மற்றும் சுவை இழப்பு ஆகியன அறுவடைக் காலத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினையாகும்.இவற்றைத் தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்.
i) குளிர்வித்தல் ii) உலர்த்துதல், iii) கலனில் அடைத்தல் iv) வெற்றிட குளிர்வித்தல் v) காமா கதிர்வீச்சு மற்றும் 150C வெப்பநிலையில் சேமித்தல்
.
17.
உயிரி உரங்கள் என்பவை நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள் ஆகும்.இவைகளை விதைகள் , தாவரங்களின் மேற்பரப்புகள் அல்லது மண் ஆகியவற்றால் பய்னபடுத்தம்போது , தவரா உட்பகுதயில் ரைசோபியம் முண்டுகளை உருவாக்கி ஓம்புயிரிகளுக்கான முதல் நிலை ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதன் மூலம் தாவர வளர்ச்சியைத் தூண்டுகின்றன.
.png)
ரைசோபியம்: இலைகள் மண் வாழ் பாக்டீரியம் ஆகும் இவை லெகூமின்ஸ் தாவரங்களின் வேர்களில் வேர்முண்டுகளை உருவாக்குவதற்காக கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றன.இந்த பாக்டீ ரியங்கள் வளிமண்டல நைட்ரஜெனை நிலைநிறுத்தி , அவற்றை அமோனியாக மாற்றி வழங்குகின்றன
.
அசோஸ்பைரில்லம் : இவை வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்தும் திறன் பெற்றவை.மேலும் அவற்றை பயிர்த் தாவரங்களுக்கு வழங்குகின்றன.மக்காச்சோளம் , பார்லி, ஓட்ஸ் மற்றும் சோளம் போன்ற தாவரங்களின் மிது நோய் தடுப்பு உரமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.இவைகள் தானியங்களில் 5 முதல் 20 சதவீதமும் , சிறு தனியாங்களில் 30 சதவீதம் , தீவனப் பயிர்களில் 50 சதவீதமும் தனியா உற்பத்தியை அதிகப்படுத்துகின்றன.
.png)
அசோட்டோபாக்டர்: இவை கோதுமை , நெல் மக்காச்சோளம் மற்றும் சோளம் ஆகியவற்றின் மகசூலை அதிகரிக்கின்றன.நிலைநிறுத்துவது மட்டுமின்றி பூஞ்சை எதிர்ப்பொருள் மற்றும் பாக்டீரிய எதிர்போலிகள் போன்ற கூட்டுப் பொருள்களையும் உற்பத்தி செய்து தாவரங்களுக்கு வழங்குகின்றன.
.png)
பூஞ்சை வேர்கள் (மைக்கோரைசா ) இவ்வகைப் பூஞ்சை வாஸ்குலார் தாவரங்களின் வேர்களுடன் கூட்டுயிர் வாழ்க்கையை மேற்கொள்கின்றன.இவை பாஸ்பரஸ் ஊட்டச் சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கின்றன. எ,கா எலுமிச்சை பப்பாளி ஆகியன.
.png)
அசோலா: அசோலா என்ற நிர்ப் பெரணியானது நீரின் மேல் தனித்து மிதக்குத் தன்மை கொண்டது.நீலப்பச்சை பாசியன (BGA) சையனோ பாக்டீரியாவான அனபினா வுடன் சேர்ந்து கூட்டுயிர் வாழ்க்கையை நடத்துகின்றது, இது ஒளிச்சேர்க்கை மூலம் பெறப்படும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது. என்வேர் இது மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை எனவும் அழைக்கப்படுகின்றது
18.
| வ.எண் | தமிழ் பெயர் | தாவரவியல் பெயர் | மருந்து | பயன்படும் பகுதிகள் | குணப்படுத்தும் நோய்கள் |
|---|---|---|---|---|---|
| 1 | கற்றாழை | அலோ விரா | ஆந்தராக்குயினோன் | இலைகள் | காயங்களை சரிபடுத்துதல்தோல் நோய், புற்றுநோய். |
| 2. | துளசி | ஆசியம் சாங்டம் | பயன்பாட்டு எண்ணெய் | இலைகள் | சளி, காய்ச்சல் தோல் சம்பத்தப்பட்ட நோய்கள் |
| 3. | நன்னாரி | ஹெமிடெஸ்மஸ் இன்ட்கஸ் | டெர்பீன் | வேர்கள் | பாக்டீரியத் தோற்று வயிற்றுப்போக்கு. |
| 4. | நிலவேம்பு | ஆன்ட்ரோரி கிராஹிஸ், பேனிகுளேட்டா | டெர்பினாய்டுகள் | அனைத்து பாகங்கள் | டெங்கு காய்ச்சல்,நீரிழவு நோய், சிக்கன குனியா. |
| 5. | வெப்பாலை | ரைட்டியா டிங்டோரியா | பிளவினாய்டுகள் |
மரப்பால் இலைகள் |
படர் தாமரை, வயிற்றுபோக்கு வீக்கம். |
| 6. | சின்கோனா மரம் | சின்கோனா அபிசினாலிஸ் | குயினைன் | மரப்பட்டைகள் | மலேரியா , நிமோனியா காய்ச்சல். |
| 7. | சிவன் அவல் பொறி | ரவுல்பியா செர்பன்ட்னா | ரிசெர்பைன் | வேர்கள் | இரத்த அழுத்தம் குறைய பாம்பின் விஷ முறிவுக்கு |
| 8. | தைலமரம் | யூக்கலிப்ட்ஸ் குளோலஸ் | யூக்கலிப்ட்ஸ் எண்ணெய் | இலைகள் | காய்ச்சல் தலைவலி |
| 9 | பப்பாளி | காரிகா பப்பாயா | பாப்பைன் | இலைகள் , விதைகள் | டெங்கு காய்ச்சல் |
| 10. | நித்திய கல்யாணி | கேத்தராந்தஸ், ரோலியஸ் | அல்கலாய்டுகள் | அணைத்து பகுதிகள் | இரத்தப் புற்றுநோய் (லுயுக்கேமியா ) |
19.
மண்ணற்ற சுழலில் நீரில் கரைந்துள்ள கனிம ஊட்டங்களை கொண்டு தாவரங்களை வளர்த்தல் மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்புமுறை எனப்படும்.இதற்கான கலன்கள் கண்ணாடி உலோகம் மற்றும் நெகிழி ஆகியவற்றால் ஆனவை,இம்முறையில் தனித்த தாவரங்களுக்கு சிறிய தொட்டிகளும் பெரிய அளவில் வளர்ப்பதற்கு பெரிய தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நுட்பமானது 1980 ல் ஜெர்மன் தாவரவியலாளர் ஜிலியஸ் வான் சாக்ஸ் என்பரால் விளக்கப்பட்டது.விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிக ரிதியாக உற்பத்தி செய்வதற்காக தேவையான ஊட்டச்சத்துகள் கரைந்துள்ள நீருக்குள் வேரானது முழ்கும் படி தாவரங்கள் மிதக்கவிடப்படுகின்றன. வேர்கள் நிறையும் ஊட்டசத்துக்களையும் உறிஞ்சகின்றன. அனால் இறுகப்பிடிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதில்லை .எனவே தாவரங்கள் மேற்புறத்தில் உறுதியாக இருக்கும்படி அவற்றை அமைக்கவேண்டும்.
முக்கியத்துவம்
i) ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.
ii) கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்
iii) பாலைவனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.
20.
அ ) அயல்நாட் டு இனம் மற்றும் பாரம்பரிய இனம் : அயல்நாட்டு இனங்கள் (போஸ் டாரஸ்) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெர்ஸி , ப்ரெளன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ப்ரெய்ஸ்யன் ஆகியவை அயல்நாட்டு இனங்களாகும் . உள்நாட்டு இனங்கள் பாரம்பரிய இனம் எனப்படுகின்றன. இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை.இவற்றுள் சாகிவால்,சிவப்பு சிந்தி , தியோனி மற்றும் கிர் ஆகியவை அடங்கும்.
ஆ ) மகரந்தம் மற்றும் தேன் ரசம் : மகரந்தம் என்பது பூவின் ஆண்பகுதியாகும் மகரந்தத் தூளானது மலர்கள் கருவுறுதலுக்கும் கனிகளை உருவாக்கவும் பயன்படுகிறது. தேனீக்கள் மலர்களில் தேனை உறிஞ்சும்போது மகரந்த தூள் அவற்றின் உடலில் ஒட்டிக் கொள்கிறது,இது அடுத்த மலரின் சூல்முடியில் விழுந்து அயல் மகிர்ந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
தேன் ரசம் என்பது தேனீக்களை கவர்வதற்காக பூக்கள் உற்பத்தி செய்யும் வழவழப்பான ஒரு திரவம் ஆகும்.தேனீக்கள் இவற்றை தேன்குடில் சேகரிக்கப்படுகின்றன.இந்தத் தேன்ரசம் பின்னர் தேனாக மாற்றம் அடைகிறது
இ) கூனி இறால் மற்றும் இறால் : கடலில் காணப்படும் கடல் இறால்கள் கூனி இறால்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. முதிர்ச்சியடைந்த கூனி இறால்கள் ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்கின்றன.இவற்றின் வளர்ச்சி நிலைகள் கழிமுகம் மற்றும் கடலோர நீர் நிலைகளில் காணப்படுகின்றன.
நண்ணீர் இறால்கள் : இவை ஆறுகள் மற்றும் ஏரிகளை வாழிடமாகக் கொண்டுள்ளன. பின்னர் இனப்பெருகத்திற்காக உவர்நிலைகளுக்கு இடம்பெயர்கின்றன.
ஈ) துடுப்பு ,மின் மற்றும் ஓடு மீன் : துடுபு மீன்களுக்கு நல்ல வளர்ச்சியடைந்த துடுப்புகள் உண்டு.இவை நீரில் நீந்திச் செல்லவும் மிதக்கவும் உதவுகின்றன.இந்தத் துடுப்பு மீன்கள் pisces எனப்படும் மீன் இனத்தைச் சேர்ந்தவை.இவற்றிற்கு நன்கு வளர்ச்சியடைந்த முதுகெலுமபுத் தொடர் உள்ளது.ஓடுமின் என்பன கணுக்காலிகள் .இனத்தைச் சேர்ந்தவை.இவற்றின் மிகச் சிறந்த சுவைக்காக இவை உணவில் பயன்படுத்தப்படுகின்றன.
உ) தொழுஉரம் மற்றும் வெள்ளாட்டு எரு:
அ) தொழுப்பண்ணை உரம் : இது கால்நடைகளின் சாணம், சிறுநீர் மற்றும் மாட்டுக் கொட்டங்களில் தரைமேல் இருக்கும் கழிவுகள் மற்றும் பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றின் கலவையாகும்.
ஆ) செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டுச் சாண உரங்கள் : இது தொழுப்பண்ணை உரத்தைக் காட்டிலும் அதிக சத்துகளைக் கொண்டதாகும் 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ் பென்டாக்சைடு , 2% பொட்டாசியம் ஆக்சைசு இது கொண்டுள்ளது.
21.
அ ) மீன் வளர்ப்பு : இது மீன்களை குளம், நீர்த்தேக்கம், ஏரிகள் , ஆறுகள் மற்றும் விளை நிலங்கள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யவைத்து வளர்த் தெடுக்கும் செயல்முறையாகும்.
ஆ) தேனீ வளர்ப்பு : தேனைப் பெறுவதற்காக தேனீக்களை வளர்க்கும் முறை தேனீ வளர்ப்பு எனப்படுகிறது
இ ) மண்புழு வளர்ப்பு : உயிரியல் கழிவுகளை மண்புழுக்கள் மூலம் ஊட்டச் சத்து மிகுந்த கரிம உரமாக மாற்றுவதே மண்புழு உரமாக்கல் எனப்படுகிறது.
ஈ ) கடலுயிரி வளர்ப்பு : கடற்கரை அருகில் , கடல் நீரில் மின்களையும் மார் நீர்வாழ் உயிரினங்களையும் வளர்ப்பது கடலுயிரி வளர்ப்பு எனப்படுகிறது.
உ) மலரியல் : மலர்களையும் அழகுத் தாவரங்களையும் மலர்ப் பண்ணையில் வளர்த்து சாகுபடி செய்வது மலரியல் எனப்படுகிறது.
ஊ) கலப்பு உரம் : பயிரக் கழிவுகள் , விலங்கு எச்சங்கள் , உணவுக் கழிவுகள் ஆகியவற்றை கட்டிப்படுத்த சுழலில் நுண்ணுயிரிகளால் இயற்கையான முறையில் சிதைவடையச் செய்து தயாரிக்கப்படுவது கலப்பு உரம் ஆகும்.
எ) கனியியல் : பழங்களில் உற்பத்திக் காலத்தை முறைப்படுத்தி உற்பத்திச் செலவைக் குறைத்து சரியான உற்பத்தி முறைகள் மூலம் தரமான கனிகளை விளைவிப்பது கனியியல் எனப்படும்.
ஏ) பொருத்துதல் : காளான்களின் உடலானது சிறிய மொட்டுவிடத் தொடங்கி குண்டுசி போல் காணப்படும் வெண்மையான மொட்டுகள் உருவாவது பொருத்துதல் எனப்படுகிறது.
22.
i) தேன் புரைத்தடுப்பானாகவும்,பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது,இது இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது
ii) இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
iii) ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவதில் பயன்படுகிறது.
iv) இருமல் , சளி , காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.
v) நாக்கு , வயிறு மற்றும் குடற்பண்புகளை குணப்படுத்த உதவுகிறது.
vi) இது செரிமானத்திற்கும் , பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards