9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/02/2019
3rd Term Full Study Material
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?
கடல் நீர்
கண்ணாடி
உலர்ந்த காற்று
மனித இரத்தம்
2.
காளான்களின் தாவர உடலம் என்ப து _____________
காளான் விதை
மைசீலியம்
இலை
இவைகள் அனைத்தும்
3.
மண்புழுவின் தகவமைப் புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.
உணர் நீட்சி அல்லது துடுப்புக்களற்ற நீண்ட உடலமைப்பைக் கொண்ட து.
மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும் மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும்
குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தன்னைப் பா துகாத்துக்கொள்ள பகல் நேரத்தில் மண்ணில் பதுங்கிக் கொள்ளும்.
4.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு _________
கல்லீரல்
நுரையீரல்
சிறுநீரகம்
மூளை
5.
கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம்
புறவேற்றுமை வடிவம் மாற்றியம்
நான்கு இணைதிறன்
சங்கிலி தொடராக்கம்
இவை அனைத்தும்
6.
மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் _________ ஆகும்.
7.
பேக்கர்ஸ் ஈஸ்ட் என்பது __________ ஆகும்
8.
பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.
9.
புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது
10.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
11.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பாக்டீரியோ ஃபேஜ்கள்
12.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
13.
மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?
14.
SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக
15.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?
16.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
17.
புதிதாக பிறந்த குழந்தை முதல் 12 மாத வயது வரை உள்ள குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு திறனூட்ட அட்டவணையை பரிந்துரை செய்க. ஏன் இந்த அட்டவணையைப் பின்பற்றுவது அவசியமாகிறது?
18.
பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.
19.
கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.
20.
பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?
21.
கூற்று: விலங்குகளிலிருந்து உணவுப் பொருள் தயாரித்தல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
காரணம்: பால் செயல்முறைத் திட்டம் மற்றும் நீலப் புரட்சியால் உணவு தயாரித்தல் அதிகரித்துள்ளது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மே லும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
22.
கூற்று: எதிர் உயிர் பொருட்களை உட்கொள்வதால் டெங்கு நோயைக் குணமாக்க முடியும்.
காரணம்: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத்தடுக்கின்றன.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
23.
கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
24.
கூற்று: ஒரு கொள்கலனில் நிலையாக உள்ள திரவத்தின் பரப்பின் மீது புவிஈர்ப்பினால் செயல்படும் விசை எப்பொழுதும் கிடைத்தளத்தில் செயல்படும்.
காரணம்: நிலையாக உள்ள பாய்மத்தின் மீது செயல்படும் விசை பரப்பிற்கு குத்தாக இருக்கும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
25.
A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீ3 பருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
(பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)
26.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
27.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
28.
வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?
29.
கெப்ளரின் விதிளை வரையறு
30.
சுற்றுக்காலம் வரையறு
31.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
32.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
33.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
34.
அதிர்வெண்
35.
அலைவுக் காலம்
36.
வீச்சு
37.
Hardware
38.
Software
39.
HIV
40.
ORS
41.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
42.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக
1.
(b)
கண்ணாடி
2.
(b)
மைசீலியம்
3.
(c)
குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
4.
(a)
கல்லீரல்
5.
(c)
சங்கிலி தொடராக்கம்
6.
( )
மின்பகுப்புக்கலம்
7.
( )
ரொட்டிக்கலாளன் (Saccharomyces cerevisiae)
8.
( )
வளிமண்டல அழுத்தம்
9.
(b)
10.
(a)
11.
பாக்டீயாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாகும் வைரஸ்கள் பாக்டீரியாஃபேஜ்கள் எனப்படும். எ.கா: பாக்டீரியா அழிப்பு வைரஸ் (T4)
12.
காற்றை விட ஹீலியம் அடர்த்தி குறைவாக உள்ளதாலும் ஹீலியமானது அதிக மிதப்பு விசையை பெற்றுள்ளதாலும் ஹீலியம் பலூன் காற்றில் மிதக்கிறது.
13.
மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் : உயிரியல் முறையில் சிதை வடையக் கூடிய கரிமக் கழிவுகள் மண்புழு உரம் தயாரித்தலில் மிக முக்கியமான கரிம மூலங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
அவையாவன:
i) விவசாயக் கழிவுகள் (பயிர்க் கழிவுகள் , காய்கறிக் கழிவுகள் கரும்பின் கழிவுகள்
ii) பயிர்க் கழிவுகள் (நெல் , வைக்கோல் , தியிலைக் கழிவு , தனியா மற்றும் , கரும்பின் வகை கழிவு, அரசி ,உமி புகையிலைக் கழிவு , நார்க் கழிவு)
iii) இலைக் குப்பைகள்
iv) பழ மற்றும் காய்கறிக் கழிவுகள்
v) விலங்குக் கழிவுகள் (மாட்டுச் சாணம் , கோழி எச்சங்கள் , பன்றிக் கழிவுகள் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் கழிவுகள்)
சாண ஏரிவாயுக் கழிவுகள்.
14.
(i) சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலிகளைப் பரப்பக்கூடிய சாதனமும், மீயொலிகளை உணரக்கூடிய உணர்வியும் உள்ளன. அவை படகு மற்றும் கப்பல்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பரப்பியானது மீயொலிகளை உருவாக்கி பரப்புகிறது. இவ்வலைகள் நீருக்குள் பயணித்து, கடலின் அடித்தளத்தில் உள்ள பொருட்களின் மீது (அதாவது கடல் படுகை, மீன்களின் கூட்டம்) பட்டு எதிரொலிப்படைந்து மீண்டும் வரும் பொழுது உணர்வியினால் உணரப்படுகிறது. உணர்வியானது மீயொலிகளை மின்சார சைகைகளாக மாற்றமடையச் செய்கின்றது. அவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. நீரில் ஒலியின் திசைவேகம் மற்றும் பரப்பப்பட்ட ஒலிக்கும், பெறப்பட்ட எதிரொலிக்கும் இடையே உள்ள கால இடைவெளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, அதன் மூலம் நீருக்குள்ளிருந்து மீயொலி அலைகளை எதிரொலித்த, பொருளின் தொலைவைக் கணக்கிடலாம்.
(ii) பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை 't' எனவும், நீரின் வேகத்தை 'v' எனவும் கொண்டால், மீயொலியானது கடந்த தொலைவு 2d=vxt ஆகும். இவ்வாறு பொருள்களின் தொலைவைக் கண்டறியும் முறை எதிரொலி நெருக்கம் (echo-ranging) எனப்படும். கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர்முழ்கிக் கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றை இடம் கண்டறிவதற்கு இந்த முறையானது பயன்படுகின்றது.
15.
ஒரு செயற்கைகோளின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது. பூமிக்கு எந்த அளவிற்கு அருகில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகமான இருக்க வேண்டும். 200 கி.மீ தொலைவில் உள்ள செயற்கைக்கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கி.மீ/மணி வேகத்திற்கும் சற்று அதிகமாக வேகத்துடன் இயங்க வேண்டும்.

அவ்வாறு இயங்கும்போது அது 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும், புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால், இவ்வகை செயற்கைக்கோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர். சுற்றியக்கத் திசைவேகத்தை (v) பின்வரும் வாய்ப்பாட்டினக் கொண்டு கணக்கிடலாம்.
v = \(\frac {GM}{\sqrt {(R + h)}}\) இங்கு
G = ஈர்ப்பியல் மாறிலி = 6.67 \(\times\) 10-11 நிமீ 2.கிகி-2
M = புவியின் நிறை = 5.972 \(\times\) 1024 கிகி
R = புவியின் ஆரம் = 6371 கிமீ
h = புவிபரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்.
16.
மழைநீர் சேகரிப்பு தவிர , நீரை மறுசுழற்சி செய்வதும் நீரைப் பாதுகாப்பதற்கான முக்கியமான உத்தியாகும்.
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன் தரக்கூடிய நோக்கங்களுக்காக , மீண்டும் பயன்படுத்துவதே நீர் மறுசுழற்சி ஆகும்.விவசாயம் மற்றும் இயற்கைப் பாசனகள் , தொழிற்சாலைச் செயல்முறைகள் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் நிலத்தடி நீரின் அளவினை அதிகப்படுத்துதல் ஆகியவற்றின் இவை பயன்படுகின்றன.
நீர் மறுசுழற்சி நிலைகள்:
பழைய நீர்ச்சுத்திகரிப்பு முறைகள் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை உள்ளடக்கியவை ஆகும். இவற்றின் மூலம் திண்மங்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சத்துக்கள் ஆகியன கழிவு நீரிலிருந்து நிக்கப்படுகின்றன,கழிவு நீர்ச் சுத்திகரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளை உள்ளடக்கியதாகும்.
முதல் நிலை சுத்திகரிப்பு:
முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநிரை தற்காலியமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும் இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.மீதி உள்ள நீர்மம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு அனுப்பப்படுகின்றது.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பு : இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நிக்கப்படுகின்றன.இச்செயல் முறை உயிர்வழி வாயுவின் (O2) முன்னிலையில் கற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது, (உயிரியல் ஆக்ஸீஜனேற்றம்) கழிவு நீரிலுள்ள நுண்ணுயிரிகள் வீழ்படிவதால் முறையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் உயிரியல் திண்மங்களைப் பிரிந்தவுடன் மீதி உள்ள நீரானது மூன்றாம் கட்ட சுத்திகரிப்புத் தொட்டிக்கு திறந்துவிடப்படுகிறது.
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு:
மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும்.இந்நிலையில் கழிவுநீரில் உள்ள நுண்ணிய கூழ்மத்துகள்கள் வேதியில் முறையில் உறையச் செய்யும் பொருள்களான படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து , விழ்படிவாக்கப்பட்டுசுத்திகரிக்கப்படுகின்றன.
17.
| வயது | தடுப்பு மருந்து | மருந்தளவு |
| பிறந்த குழந்தை | பிசிஜி | 1 வது ஊட்டம் |
| 15 ஆம் நாளில் | வாய்வழியே போலியோ மருந்து | 1 வது ஊட்டம் |
| 6வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 10வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 14வது வாரம் | டிபிடீ மற்றும் போலியோ | 1 வது ஊட்டம் |
| 9-12 வது மாதங்கள் | தட்டம்மை | 1 வது ஊட்டம் |
இந்த அட்டவணையானது குழந்தைகள் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக எந்த வயது குழந்தைக்கு எந்த தடுப்பு மருந்தினை வழங்குதல் வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே இந்த அட்டவணையைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
18.
| உணவுச் சேர்க்கை வகைகள் |
செயல்பாடு | உதாரணம் |
| உணவு பதப்படுத்துதல் |
நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாக்கின்றன. |
வினிகர், சோடியம், பென்சோயேட், பென்சாயிக் அமிலம், சோடியம் நைட்ரைட் |
| நிறமிகள் | உணவிற்கு இனிய நிறத்தைக் கொடுக்கின்றன. |
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயனின், குர்குமின் |
| செயற்கை இனிப்பூட்டிகள் |
உணவில் இனிப்புச் சுவையை கூட்டுகின்றன |
சாக்கரீன், சைக்லமேட் |
| சுவையூட்டிகள் | உணவு வகைகளின் சுவையை மேம்ப்படுத்துகின்றன. |
மோனோசோடியம் குளுட்டமேட், கால்சியம் டைகுளுட்டமேட் |
| எதிர் ஆக்சிஜனேற்றிகள் |
ஆக்சிஜினேற்றத்தைத் தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. |
வைட்டமின் C, வைட்டமின் E, கரோட்டின் |
19.
ஆக்ஸிஜனேற்றம் (ஆக்ஸிஜனோடு வினை புரிதல்): உயர் வெப்பநிலையில் காரப்பனானது ஆக்ஸிஜனோடு வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றை வெப்பத்துடன் உருவாக்குகின்றனது. ஹைட்ரோ கார்பன் போன்ற கரிம கார்பன் சேர்மங்களும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆக்ஸைடுகளையும் நீராவியையும் உருவாக்குகின்றன. அவற்றோடு வெப்பமும் தீச்சுடரும் வெளிப்படும். இதற்கு எரிதல் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
2C(s) + O2(g) ➝ 2 CO(g) + வெப்பம்
C(s) + O2(g) ➝ CO2(g) + வெப்பம்
CH4(g) + 2O2(g) ➝ CO2(g) + 2H2O(g) வெப்பம்
நீராவியுடன் வினை: கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்ஸைடையும் ஹைட்ரஜனையும் தருகிறது. இந்த கலவைக்கு நீர் வாயு என்று பெயர்.
C(s) + H2O(g) ➝ CO(g) + H2(g)
கந்தகத்துடன் வேதி வினை: உயர்வெப்பநிலை கந்தகத்துடன் இணைந்து கார்பன் டைசல்ஃபைடை உருவாக்குகிறது.
C(s) + S(g) ➝ CS2(g)
உலகத்துடன் வேதி வினை: உயர் வெப்ப நிலையில் கார்பன் சில உலோகங்களுடன் வினைபுரிந்து அவற்றின் கார்பைடுகளை உருவாக்குகிறது.
W(s) + C(g) ➝ WC2(s)
20.
(i) ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவதோ அல்லது மிதப்பதோ, குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கபப்டுகிறது. திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
(ii) எடுத்துக்காட்டாக, நீரைவிட அடர்த்தி குறைவாக மரக்கட்டை நீரில் மிதக்கும். நீரை விட அதிக அடர்த்தி கொண்ட பொருள்கள், உதாரணமாக, கல்லானது நீரில் மூழ்கும்.
21.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
22.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
23.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
24.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
25.
அ) A மற்றும் B ஆகிய பொருள்களின் எடை காற்றல் சமமாக இருக்கும்.
ஆ) பொருள் A யின் அடர்த்தி (20செமீ3பருமன் உள்ள 4கி.கி ) அதிகம்.
இ) \(P=P\rho g\)
\(h=P/\rho g\)
\(h=\frac { 99960 }{ 13600\times 9.8 } =.75m\)
=750மி.மீ
26.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
27.
1) சமையலறை அல்லது உணவுத் தோட்டங்கள்
2) வணிகத் தோட்டங்கள்
3) செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்
28.
வெற்றிடத்தில் ஒலி பரவாது. பரவ ஊடகம் தேவை.
29.
முதல் விதி - நீள்வட்டங்களின் விதி
சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு, நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இரண்டாவது விதி - சமபரப்புகளின் விதி
கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு சம காலங்களில் சமபரப்புகளைக் கடக்கிறது.
மூன்றாவது விதி - ஒத்திசைவுகளின் விதி
எந்த இரு கோள்களுக்கும், சுற்றுக்காலங்களின் இருமடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.
30.
புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக் காலம் எனப்படும்.

31.
பள்ளி மற்றும் வீடுகளில் நீரைச் சேமித்தல்:
i) வாறல் குளிர்பான்களில் (Showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
ii) குறைவாக நீர் வரக்கூடிய குடிநீர்க்குழாய்களைப் (tap) பயன்படுத்திட வேண்டும்.
iii) மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
iv) குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரிசெய்தல்.
v) முடிந்தவரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.
vi) நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
32.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
33.
கார்பன் அலோகத் தன்மை வாய்ந்தது. எனவே இவை நீரில் கரைந்து அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
34.
ஹெர்ட்ஸ்
35.
விநாடி
36.
சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி
37.
RAM
38.
Geogebra
39.
Human immunodeficiency virus
மனித நோய் எதிர்ப்பு குறைவுபடுத்தும் வைரஸ்
40.
Oral rehydration solutions
வாய் வழி நீர்ப்போக்கு கரைசல்
41.
ரோட்டா வைரஸ் என்ற நுண்ணுயிரி வாந்தி பேதியினை ஏற்படுத்துகிறது.
சுற்றுப்புறம், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றைச் சுகாதாரமாக வைத்துக் கொள்வது இதைத் தடுக்கும் முறையாகும்.
42.
கக்குவான் இருமல், காசநோய்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards