9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/12/2018
3rd Term Model Questions
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________ ஆகும்.
2.
ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ளாத, நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் ___________ மற்றும் ___________ஆகும்.
3.
பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.
4.
பன்னாட்டு வின்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்
5.
நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.
6.
சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?
7.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பாக்டீரியோ ஃபேஜ்கள்
8.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
9.
கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.
காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
10.
கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
11.
கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
12.
கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
13.
அதிர்வடையும் இசைக்கலவை ஒன்று ஏற்படுத்தும் அதிர்வுகளின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அரை அலைநீளம் எதைக் குறிக்கும்?

BD
AB
AE
DE
14.
நிலவேம்பின் இடு சொல்பெயர் _________
லூக்காஸ் ஆஸ்பெரா
ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
குரோட்டலே ரியா ஜன்சியா
கேஷியா பஸ்துலா
15.
சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________
நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு
நீரைச் சேமிப்பதற்கு
நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு
இவையனைத்தும்
16.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்படும் உறுப்பு _________
கல்லீரல்
நுரையீரல்
சிறுநீரகம்
மூளை
17.
கீழ்கண்டவற்றுள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது எது?
கார்பன் டைஆக்ஸைடு
கார்பன் மோனோக்ஸைடு
கால்சியம் கார்பனேட்
சோடியம் பைகார்பனேட்
18.
ஒரு பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்படும் காற்றானது மிதப்பு விசையை உண்டாக்குகிறது. இந்த மிதப்பு விசைபலூனின் எடையைவிட அதிகமாகும். எனவே பலூன் மேலெழும்புகிறது.
அ) பலூன் மேலெழும்பும் போது, அதன் அடர்த்தியில் என்ன மாற்றம் நடைபெறுகிறது?
ஆ) பலூன் மிதப்பதற்கான நிபந்தனைகள் யாவை ?
இ) மிதப்பு விசை _______________ ன் அடர்த்தியைப் பொறுத்தது.
19.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
20.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
21.
சுற்றுக்காலம் வரையறு
22.
கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

23.
மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
24.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
25.
யோகா நெகிழியாலான தண்ணீர் புட்டி வாங்க விரும்புகிறாள். அவள் கடையில் சென்று வாங்க முற்படும்போது, அங்கு ரெசின் குறியீடு 1, 2, 3 மற்றும் 7 எனக் குறிக்கப்பட்ட நான்கு வகையான நெகிழிப் புட்டிகளைக் காண்கிறாள். அவள் எந்தக் குறியீடு உடைய புட்டியை வாங்க வேண்டும்? ஏன்?
26.
ஒரு பனிக்கட்டியை ஒரு குவளை நீரிலும், ஒரு குவளை ஆல்கஹாலிலும் போடும் பொழுது என்ன நிகழ்கிறது என்பதை கவனித்து விவரி.
27.
அலைவுக் காலம்
28.
மீயொலி
29.
அழுத்தங்கள்
30.
LINUX
31.
Hardware
32.
DPT
33.
WHO
34.
காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.
35.
ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.
36.
கீழ்க்கண்டவற்றை வரையறு
அ ) மீன் வளர்ப்பு
ஆ) தேனீ வளர்ப்பு
இ ) மண்புழு வளர்ப்பு
ஈ ) கடலுயிரி வளர்ப்பு
உ ) மலரியில்
ஊ ) கலப்பு உரம்
எ ) கனியியல்
ஏ ) பொருந்துதல்
37.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
38.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
39.
சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.
40.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
41.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
42.
வாந்திபேதியினை ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பெயரென்ன ? இதைத்தடுக்கும் ஏதாவதொரு முறையைத் தருக.
43.
பூமியிலிருந்து 400 கிமீ தொலைவில் உள்ள, கோளின் சுழற்சிக் காலத்தைக் கணக்கிடவும்.
1.
( )
நின்ஹைட்ரின்
2.
( )
நைட்ரோசோமோனாஸ், நாஸ்டாக்
3.
( )
வளிமண்டல அழுத்தம்
4.
(a)
5.
(b)
6.
ஒரு பொருளானது காற்றில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லும்போது அலை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்வலைகள் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். இவ்வதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் இதர மாறுபாட்டின் காரணமாக கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை சூப்பர் சோனிக் வேகம் என அழைக்கின்றோம்.
7.
பாக்டீயாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாகும் வைரஸ்கள் பாக்டீரியாஃபேஜ்கள் எனப்படும். எ.கா: பாக்டீரியா அழிப்பு வைரஸ் (T4)
8.
காற்றை விட ஹீலியம் அடர்த்தி குறைவாக உள்ளதாலும் ஹீலியமானது அதிக மிதப்பு விசையை பெற்றுள்ளதாலும் ஹீலியம் பலூன் காற்றில் மிதக்கிறது.
9.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
10.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
11.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
12.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
13.
(a)
BD
14.
(b)
ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
15.
(d)
இவையனைத்தும்
16.
(a)
கல்லீரல்
17.
(b)
கார்பன் மோனோக்ஸைடு
18.
அ) பாலுன் மெலெழும்பும் போது காற்றின் அடர்த்தி குறைகிறது.
ஆ) பலூனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட காற்றின் எடையைக் காட்டிலும் பலூனின் எடை குறைவாக உள்ளபோது அது மிதக்கிறது.
இ) பாய்மத்தி
19.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
20.
i) குளிர்வித்தல்
ii) உலர்த்துதல்
iii) கலனில் அடைத்தல்
iv) வெற்றிட குளிர்வித்தல்
21.
புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக் காலம் எனப்படும்.

22.
இத்தாவரத்தின் பெயர் ஹைட்ரில்லா எனப்படும் வேலம்பாசி ஆகும். இதன் வேர்கள் சரியான வளர்ச்சி அடையவில்லை. நீரில் அமிழ்ந்திருக்கும் இச்செடியின் இலைகள் குறுகலாகவும் பல பிரிவுகளைக் கிளைத்தும் காணப்படுகின்றன.

23.
(i) மயக்கமூட்டிகள் என்பவை உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் ஆகும். இவற்றை உணர்வை இழக்கச் செய்யும் பகுதிகளைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
(ii) அவை 1. பொது மயக்கமூட்டிகள்
2. குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
24.
i) பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள் குறுகியகாலம் மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ii) இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன.
iii) இவ்வகை நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டுபணணுகின்றன. எனவே இவை ஆபத்தானவை.
25.
யோகா நெகிழிகுறியீடு 7 எனப் போடப்பட்டுள்ள நெகிழிப் புட்டியை வாங்க வேண்டும். ஏனெனில் இது பாதுகாப்பான நெகிழி ஆகும். எனவே நெகிழி குறியீடு 7 எனப் போடப்பட்டுள்ள நெகிழிப் புட்டியை வாங்க வேண்டும்.
26.
(i) பனிக்கட்டியினை குவளை நீரில் போடும் போது பனிக்கட்டி நீரில் மிதக்கிறது. ஏனெனில் நீரின் அடர்த்தியை விட பனிக்கட்டியின் அடர்த்தி குறைவு எனவே மிதக்கிறது.
(ii) பனிக்கட்டியினை குவளையில் உள்ள ஆல்கஹாலினுள் போடும்போது பனிக்கட்டி நீரில் மூழ்குகிறது. ஏனெனில் ஆல்கஹாலின் அடர்த்தியை விட பனிக்கட்டியின் அடர்த்தி அதிகம் எனவே மூழ்குகிறது.
நீரின் அடர்த்தி = 1 கி /செ.மீ3
பனிக்கட்டியின் அடர்த்தி = 0.917 கி / செ.மீ3
ஆல்கஹாலின் அடர்த்தி = 0.789கி / செ.மீ3
27.
விநாடி
28.
20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி
29.
காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி
30.
இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்
31.
RAM
32.
Diphtheria Pertussis Tetanus
டிப்தீரியா; பெர்டுசிஸ், டெட்டானஸ் (மூன்று நோய் தடுப்பு)
33.
World Health Organization
உலக சுகாதார நிறுவனம்
34.
தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும் .இது கழிவை அழித்து நலத்தை உருவாகும் தொழில்நுட்பம் என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
கலத்தல் (compounting ) : வைக்கோலுடன் மாட்டுச்சானம் , போன்ற பல வகையான கரிமப் பொருட்கள் மற்றும் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 500C வெப்ப நிலையில் ஒரு வாரத்திற்கு வைத்து பாதுகாக்கப்படுகிறது.
காளான் வித்து (spawn - ஸ்பான்) - ஸ்பான் என்பது காளான் விதையாகும் நோய்நுண்மை நீக்கப்பட்ட நிலையில் பூஞ்சை உடலங்களை தானியங்களில் வைத்து வளர்ப்பதன் மூலம் இது பெறப்படுகிறது.எவ்வாறு பெறப்பட்ட விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.
உறையிடுதல் (Casing) : விதை கலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றது.இது காளான் வளர்வதற்கு உதவிபுரிகின்ற்து.மேலும் இது ஈரப்பதத்தை வழங்கி , வெப்ப நிலையை சீராக்குகின்றது.
பொருத்துதல் (pinning): உடலானது சிறிய மொட்டுவிடத் தொடங்கி காளானாக வளர்கின்றது.குண்டுசி போல் காணப்படும் இந்த வெண்மையான மொட்டுக்களுக்கு ஊசிகள் என்று பெயர்.
அறுவடை செய்தல்: காளான்கள் 15 முதல் 230C வெப்பநிலையில் நன்றாக வளரும் இவைகள் ஒரு வாரத்தில் வளரக்கூடியவை.இது அறுவடை செய்யத் தேவையான வளர்ச்சி ஆகும்.மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.
பதப்படுத்துதல் : நிறம் மாறுதல் , எடை குறைதல் மற்றும் சுவை இழப்பு ஆகியன அறுவடைக் காலத்தில் காணப்படும் முக்கியப் பிரச்சினையாகும்.இவற்றைத் தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளைப் பயன்படுத்தலாம்.
i) குளிர்வித்தல் ii) உலர்த்துதல், iii) கலனில் அடைத்தல் iv) வெற்றிட குளிர்வித்தல் v) காமா கதிர்வீச்சு மற்றும் 150C வெப்பநிலையில் சேமித்தல்
.
35.
இசைக்கருவி:
குழல்பெருக்கி, ஒலிப்பெருக்கி, குழல்கள், நாதஸ்வரம், செனாய், தாரை போன்ற இசைக் கருவிகள் யாவும் ஒளியானது ஒரு குறிப்பிட்ட திசையில் பரவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளில் ஒரு குழாயினைத் தொடர்ந்து ஒரு கூம்பு வடிவ அமைப்பானது ஒலியைப் பெருக்கமடையச் செய்து கேட்பவரை நோக்கி முன்னேறிச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இதயத் துடிப்பளவி:
இதயத் துடிப்பளவி என்பது ஒரு மருத்துவக் கருவியாகும். இது உடலில் உண்டாகும் ஒலிகளைக் கேட்க உதவுகிறது. உடலில் தோன்றும் ஒலியானது, இக்கருவியில் உள்ள இணைப்புக் குழாயில் பலமுறை எதிரொலிப்படைந்து, மருத்துவரின் செவியை அடைகிறது.
36.
அ ) மீன் வளர்ப்பு : இது மீன்களை குளம், நீர்த்தேக்கம், ஏரிகள் , ஆறுகள் மற்றும் விளை நிலங்கள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யவைத்து வளர்த் தெடுக்கும் செயல்முறையாகும்.
ஆ) தேனீ வளர்ப்பு : தேனைப் பெறுவதற்காக தேனீக்களை வளர்க்கும் முறை தேனீ வளர்ப்பு எனப்படுகிறது
இ ) மண்புழு வளர்ப்பு : உயிரியல் கழிவுகளை மண்புழுக்கள் மூலம் ஊட்டச் சத்து மிகுந்த கரிம உரமாக மாற்றுவதே மண்புழு உரமாக்கல் எனப்படுகிறது.
ஈ ) கடலுயிரி வளர்ப்பு : கடற்கரை அருகில் , கடல் நீரில் மின்களையும் மார் நீர்வாழ் உயிரினங்களையும் வளர்ப்பது கடலுயிரி வளர்ப்பு எனப்படுகிறது.
உ) மலரியல் : மலர்களையும் அழகுத் தாவரங்களையும் மலர்ப் பண்ணையில் வளர்த்து சாகுபடி செய்வது மலரியல் எனப்படுகிறது.
ஊ) கலப்பு உரம் : பயிரக் கழிவுகள் , விலங்கு எச்சங்கள் , உணவுக் கழிவுகள் ஆகியவற்றை கட்டிப்படுத்த சுழலில் நுண்ணுயிரிகளால் இயற்கையான முறையில் சிதைவடையச் செய்து தயாரிக்கப்படுவது கலப்பு உரம் ஆகும்.
எ) கனியியல் : பழங்களில் உற்பத்திக் காலத்தை முறைப்படுத்தி உற்பத்திச் செலவைக் குறைத்து சரியான உற்பத்தி முறைகள் மூலம் தரமான கனிகளை விளைவிப்பது கனியியல் எனப்படும்.
ஏ) பொருத்துதல் : காளான்களின் உடலானது சிறிய மொட்டுவிடத் தொடங்கி குண்டுசி போல் காணப்படும் வெண்மையான மொட்டுகள் உருவாவது பொருத்துதல் எனப்படுகிறது.
37.
வட்ட வடிவமான சுற்றுப்பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளியில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவை உட்புறக்கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெளிப்புற சூரிய மண்டலத்தில் ஒப்பீட்டளவில் சூரியனை மெதுவாகச் சுற்றிவரும் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை வெளிப்புறக்கோள்கள் என அழைக்கப்படுகின்றன.
(i) புதன்:
சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். மற்ற எந்த கோள்களையும் விட சூரியனை இது வேகமாகச் சுற்றி வருகின்றது - இதன் சுற்றுக்காலம் 87.97 புவி நாள்களாகும். ஆனால், இது தன்னைத்தானே சுழல எடுத்துக் கொள்ளும் சுழற்சிக்காலம் மிக அதிகம். அதாவது, புதனில் ஒரு நாள் என்பது 58.65 புவி நாள்களாகும்.
(ii) வெள்ளி:
கிட்டத்தட்ட பூமியின் அளவையொத்த ஒரு சிறப்புக்கோள் வெள்ளி. நம் சூரியமண்டலத்தில் காண்ப்படும் கோள்களிலேயே அதிக வெப்பநிலை கொண்டது வெள்ளி ஆகும். நிலவிற்குப் பிறகு, வானத்தில் தெரியும் மிகப்பிரகாசமான வான்பொருள் இதுவே. இதில் ஒரு நாள் என்பது அதனுடைய ஒரு ஆண்டை விட நீண்டது. வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 புவி நாள்களாகவும் ஒரு ஆண்டு என்பது 224.7 புவி நாள்களாகவும், உள்ளது. மற்ற கோள்களைப்போல் அல்லாமல், இது எதிர்த் திசையில் சுழல்வதால், இங்கு சூரியன் மேற்கே தோன்றி கிழக்கே மறைகிறது. வெள்ளியை நாம் வெறும் கண்ணால் எளிதில் காணலாம். அது கிழக்கு அல்லது மேற்குத் திசையில் கீழ்வானத்தில் தெரியும்.
(iii) பூமி:
சூரிய மண்டலத்திலுள்ள. கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர் வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியானது, சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் 365.25 நாட்களாகவும், அதன் சுழற்சிக்காலம் 23.93 மணியாகவும் உள்ளது. பூமியின் சுழற்சி அச்சானது அதன் சுற்றுத்தளத்திற்கு செங்குத்தாக அமைந்திருப்பதில்லை. மாறாக, சற்று சாய்வுடன் உள்ளது. இவ்வாறு சாய்ந்துள்ளதால்தான், பூமியில் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப்பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதனால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
(iv) செவ்வாய்:
புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இங்கு ஒரு நாள் என்பது 24 மணி 37 நிமிடம் 22 விநாடியாகவும், ஒரு வருடம் என்பது 686.96 புவி நாள்கள், கிட்டத்தட்ட 687 நாள்களாகவும் உள்ளது.
(v) வியாழன்:
வியாழன் கோளானது, பெருங்கோள் என அழைக்கப்ப்டுகின்றது. கோள்களிலேயே மிகப்பெரியது இதுவே. இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும். மற்ற கோள்களையெல்லாம் விட மிக வேகமாக இது சுழல்வதால், வியாழனின் ஒரு நாள் என்பது 9 மணி 55 நிமிடங்கள் 30 வினாடிகளாக உள்ளது. அங்கு ஒரு வருடம் என்பது 11.862 புவி வருடங்கள் ஆகும்.
(vi) சனி:
வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரும் வாயுக்கோளாகும். இது மிக வேகமாக சுழல்கின்றது. சனியின் வருவதால் இதன் சுற்றுக்காலம் 59.46 புவி ஆண்டுகளாகவும் இருக்கின்றது. குறைந்தபட்சம் சனியின் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
(vii) யுரேனஸ்:
யுரேனஸ் கோளானது ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். இது சூரிய மண்டலத்தின் ஏழாவது கோள் ஆகும். இது மிகவும் சாய்ந்து சூழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் சுற்றுக்காலம் 84 புவி ஆண்டுகள் மற்றும் சுழற்சிக்காலம் 17.2 மணி நேரமாகும். இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
(viii) நெப்டியூன்:
இக்கோளானது பச்சை நிற விண்மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளுட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன . அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.
38.
மழைநீர் சேகரிப்பு தவிர , நீரை மறுசுழற்சி செய்வதும் நீரைப் பாதுகாப்பதற்கான முக்கியமான உத்தியாகும்.
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன் தரக்கூடிய நோக்கங்களுக்காக , மீண்டும் பயன்படுத்துவதே நீர் மறுசுழற்சி ஆகும்.விவசாயம் மற்றும் இயற்கைப் பாசனகள் , தொழிற்சாலைச் செயல்முறைகள் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் நிலத்தடி நீரின் அளவினை அதிகப்படுத்துதல் ஆகியவற்றின் இவை பயன்படுகின்றன.
நீர் மறுசுழற்சி நிலைகள்:
பழைய நீர்ச்சுத்திகரிப்பு முறைகள் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை உள்ளடக்கியவை ஆகும். இவற்றின் மூலம் திண்மங்கள், கரிமப் பொருள்கள் மற்றும் சத்துக்கள் ஆகியன கழிவு நீரிலிருந்து நிக்கப்படுகின்றன,கழிவு நீர்ச் சுத்திகரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகளை உள்ளடக்கியதாகும்.
முதல் நிலை சுத்திகரிப்பு:
முதல் நிலை சுத்திகரிப்பு என்பது கழிவுநிரை தற்காலியமாக தொட்டிகளில் சேர்த்து வைத்தல் ஆகும் இவ்வாறு செய்வதன் மூலம் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய், உயவுப் பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றன. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன.மீதி உள்ள நீர்மம் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு அனுப்பப்படுகின்றது.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பு : இதன் மூலம் கழிவு நீரில் கரைந்திருக்கும் மக்கும் (உயிரிகளால் சிதைவுறும்) கரிமப் பொருள்கள் நிக்கப்படுகின்றன.இச்செயல் முறை உயிர்வழி வாயுவின் (O2) முன்னிலையில் கற்று நுண்ணுயிரிகளால் நடத்தப்படுகிறது, (உயிரியல் ஆக்ஸீஜனேற்றம்) கழிவு நீரிலுள்ள நுண்ணுயிரிகள் வீழ்படிவதால் முறையின் மூலம் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதால் உயிரியல் திண்மங்களைப் பிரிந்தவுடன் மீதி உள்ள நீரானது மூன்றாம் கட்ட சுத்திகரிப்புத் தொட்டிக்கு திறந்துவிடப்படுகிறது.
மூன்றாம் நிலை சுத்திகரிப்பு:
மூன்றாம் நிலை அல்லது மேம்பட்ட சுத்திகரிப்பு என்பது கடைசி கட்ட கழிவுநீர் சுத்திகரிப்பாகும். நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதலை இது உள்ளடக்கியதாகும்.இந்நிலையில் கழிவுநீரில் உள்ள நுண்ணிய கூழ்மத்துகள்கள் வேதியில் முறையில் உறையச் செய்யும் பொருள்களான படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து , விழ்படிவாக்கப்பட்டுசுத்திகரிக்கப்படுகின்றன.
39.
அ. நோயின் பெயர் எய்ட்ஸ் (AIDS)
நோய்க்கான காரணம் ரெட்ரோ வைரஸ் ஆகும்.
ஆ. பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை
டி. லிம்போசைட்டுகள் ஆகும்.
இ. இந்தவைரஸானதுபாலியல் உறவு(பாதிக்கப்பட்ட நபரிடமிருந்துநல்ல ஆரோக்கியமானவருக்கு, இரத்தத்தினை வழங்குதல் (சோதிக்கப்படாத ரத்தத்தை பிறருக்கு வழங்குதல்), அறுவை சிகிச்சைக் கருவிகள் நோய்க் கிருமிகளுள்ள ஊசிகள், சிரிஞ்சுகள்), தாயிடமிருந்து சேய்க்கு (பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து வளரும் கருவுக்கு) பரவுதல் போன்ற வழிகளில் பரவுகின்றது.
பரவுதலை தடுத்தல் முறை
1. பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவு.
2. சோதிக்கப்பட்ட இரத்தத்தினை பிறருக்கு வழங்குதல்
3. கத்திகளையும், முகச்சவரம் செய்வதற்குரிய ரேசர்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளுதலை தவிர்த்தல்
40.
i) அமிலச்சாயங்கள்: இவை அமிலத் தன்மை கொண்டவை. மேலும், இவை விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளுக்கு சாயமேற்றுவதற்கு பயன்படுகின்றன. கம்பிளி மற்றும் பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற இவற்றைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்.
ii) காரச்சாயங்கள்: இவ்வகைச் சாயங்கள் காரத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இவை, தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.
iii) மறைமுக சாயம்: இவ்வகைச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை. எனவே, அவை முதலில் நிறமூன்றிகளுடன் (mordants) செயல்படுத்தப்பட வேண்டும். நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கப்படக்கூடிய பொருளாகும். இதன் விளைவாக லேக் எனப்படும் கரையாத கூட்டுப்பொருள் உருவாகின்றது. அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் போன்றவை நிறமூன்றிகளாக பயன்படுகின்றன. எ.கா: அலிசரின்.
iv) நேரடி சாயங்கள்: இவை பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சியை உடையன. இவை துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால், நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன. எ.கா: காங்கோ சிவப்பு.
v) தொட்டிச்சாயம்: இவை பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை. ஆனால், பட்டு மற்றும் கம்பிளி இழைகளுக்குப் பயன்படாது. இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும். இவற்றை செயல்படுத்த ஒரு பெரிய கலன் தேவைப்படுகிறது. இவை தொட்டி என்று அழைக்கப்படுகின்றன. எனவே, இவ்வகை சாயம் தொட்டிச்சாயம் என்றழைக்கப்படுகிறது. எ.கா: இண்டிகோ.
41.
1. அனோபிலஸ் கொசு - மலேரியா
2. ஏடிஸ் ஏஜிப்டி - சிக்கன்குனியா
42.
ரோட்டா வைரஸ் என்ற நுண்ணுயிரி வாந்தி பேதியினை ஏற்படுத்துகிறது.
சுற்றுப்புறம், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றைச் சுகாதாரமாக வைத்துக் கொள்வது இதைத் தடுக்கும் முறையாகும்.
43.
பூமியிலிருந்து கோள்களின் உயரம்(h) = 400 கி.மீ
= 400 \(\times\) 103 மீ
= 400000 மீ
புவியின் விட்டம் (R) = 6370 கி.மீ
= 6370 \(\times\) 103மீ
= 6370000 மீ
ஈர்ப்பியல் மாறிலி (G) = 6.67 \(\times\) 10-11 நி.மீ 2 கி.கி-2
புவியின் நிறை (M) = 5.972 \(\times\) 1024 கி.கி
செயற்கை கோளின் வேகம்
\((v) =\sqrt{\frac{G M}{(R\ +\ h)}} \\ (v) =\sqrt{\frac{6.67\ \times\ 10^{-11}\ \times\ 5.972\ \times\ 10^{24}}{6370000\ +\ 400000}} \\ =\sqrt{\frac{39.83\ \times\ 10^{13}}{6770\ \times\ 10^{3}}} \\ =\sqrt{5.8 \times 10^{7}} \)
\(=10^{3} \sqrt{58}\)
= 7620 மீ /வி
கோள்களின் சுழற்சிக்காலம்
\((T) =2 \pi \frac{(R+h)}{v} \\ =2 \times \frac{22}{7} \times \frac{6370000+400000}{7620} \\ =\frac{44}{7} \times \frac{6770000}{7620} \\ =\frac{297880000}{53340} \)
= 5584 வினாடிகள்
= 93 நிமிடம் (60 வினாடி = 1நிமிடம்)
கோள்களின் சுழற்சிக்காலம் (T) = 93 நிமிடம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards