9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions 2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
2.
உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு
கனடா
இந்தியா
அமெரிக்க ஐக்கிய
சீனா நாடுகள்
3.
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
4.
ஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இங்கிலாந்து
சோவியத் ரஷ்யா
இந்தியா
5.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
வாட்டிகன்
6.
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்
மார்க்கோ போலோ
ஃபாஹியான்
மெகஸ்தனிஸ்
செல்யூகஸ்
7.
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
தனநந்தர்
சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
சிசுநாகர்
8.
ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.
புத்தர்
லாவோட்சே
கன்ஃபூசியஸ்
ஜொராஸ்டர்
9.
காற்றின் செங்குத்து அசைவினை __________ என்று அழைக்கின்றோம்
காற்று
புயல்
காற்றோட்டம்
நகர்வு
10.
_______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.
அழுத்தம்
காற்று
சூறாவளி
பனி
11.
பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் _______________ என்று அழைக்கின்றோம்
உறைபனி
மூடுபனி
பனி
ஆலங்கட்டி
12.
பருவக்காற்று என்பது ______
நிலவும் காற்று
காலமுறைக் காற்றுகள்
தலக்காற்று
மேற்கண்ட எதுவுமில்லை
13.
_______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
சூரியன்
சந்திரன்
நட்சத்திரங்கள்
மேகங்கள்
14.
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
புகளூர்
கிர்நார்
புலிமான்கோம்பை
மதுரை
15.
________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்
துள்ளல்
வண்டல் விசிறி
டெல்டா
மலை இடுக்கு
16.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது
வானிலைச் சிதைவு
அரித்தல்
கடத்துதல்
படியவைத்தல்
17.
கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
18.
சுமேரியரின் எழுத்துமுறை ______ ஆகும்
பிக்டோகிராபி
ஹைரோகிளிபிக்
சோனோகிராம்
க்யூனிபார்ம்
19.
எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்
எரிமலை வாய்
துவாரம்
பாறைக்குழம்புத் தேக்கம்
எரிமலைக் கூம்பு
20.
புவித்தட்டுகளின் நகர்வு _____________ ஆற்றலை வெளிப்படுத்துகிறது
நீர் ஆற்றல்
வெப்ப ஆற்றல்
அலையாற்றல்
ஓத ஆற்றல்
21.
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _____________ .
புவிமேலோடு
கவசம்
கருவம்
மேற்கண்ட எதுவுமில்லை
22.
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்
கருவம்
கவசம்
புவி மேலோடு
உட்கரு
23.
கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை .
24.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
நுண்கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
25.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
26.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
ஹோமோ சேபியன்ஸ்
நியாண்டர்தால் மனிதன்
27.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
28.
மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
29.
பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.
30.
மழைப் பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
31.
சிறு குறிப்பு வரைக.
அ) வியாபாரக்காற்றுகள்
ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்
32.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ந்தும், வறட்சியாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?
33.
கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன?
34.
தமிழ் அரசர்கள் மௌரிய அரசின் அதிகாரத்துக்கு உட்படாமல் இருந்தார்கள் – இந்தக் கூற்றுக்கு உன் விளக்கம் என்ன?
35.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
36.
தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன
37.
கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?
38.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.
39.
சிகுராட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக
40.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
41.
நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.
42.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி
43.
இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிலைமைகளை விளக்குக
44.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
45.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக
46.
பனியாறு என்றால் என்ன?
47.
புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
48.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
49.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
50.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக
51.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக
52.
இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.
1.
(a)
சமூகச் சமத்துவம்
2.
(b)
இந்தியா
3.
(c)
சோழர்கள்
4.
(a)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
5.
(d)
வாட்டிகன்
6.
(c)
மெகஸ்தனிஸ்
7.
(c)
பிம்பிசாரர்
8.
(a)
புத்தர்
9.
(c)
காற்றோட்டம்
10.
(c)
சூறாவளி
11.
(c)
பனி
12.
(b)
காலமுறைக் காற்றுகள்
13.
(a)
சூரியன்
14.
(a)
புகளூர்
15.
(c)
டெல்டா
16.
(a)
வானிலைச் சிதைவு
17.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை
18.
(d)
க்யூனிபார்ம்
19.
(a)
எரிமலை வாய்
20.
(b)
வெப்ப ஆற்றல்
21.
(b)
கவசம்
22.
(c)
புவி மேலோடு
23.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை .
24.
(b)
பழங்கற்காலம்
25.
(b)
பிறைநிலப் பகுதி
26.
(c)
ஹோமோ சேபியன்ஸ்
27.
1. சர்வாதிகரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை நமக்கு இருக்காது. ஏனென்றால் சர்வாதிகாரி என்பவர் சகல அதிகாரங்கள் கொண்டுள்ளவராக இருப்பார்.
2. அத்தகைய நாட்டில் பொதுமக்களின் கருத்துக்கு எந்தவித முக்கியத்துவம் இருக்காது. அவர்களின் கருத்து மதிக்கப்படாது.
28.
காரணம்: இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு படிவுகள் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு மூப்பு நிலையில் அகன்று காணப்படுகிறது.
29.
காற்றின் செயல்பாடுகளான அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் பாலைவனம் பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணியாக காற்று விளங்குகிறது.
30.
சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது. சாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை போன்றவை பொழிவின் வகைகளாகும்.
31.
வியாபாரக் காற்றுகள்:
(i) வட மற்றும் தென் அரைக் கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று 'வியாபாரக் காற்று' எனப்படும்.
(ii) இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும். அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.வியாபாரிகள் கடல் வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று 'வியாபாரக்காற்று' என அழைக்கப்படுகின்றது.
(iii) இக்காற்று பெருங்கடல்களில் பயணிக்கும்போது அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுகின்றன. மேலும் இக்காற்று மேற்கு நோக்கி நகரும் போது வறண்டு விடுவதால் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.
கர்ஜிக்கும் நாற்பது:
(i) மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென்அரைக்கோளங்களின் வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
(ii) இவை வட அரைக்கோளத்தில் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காகவும் வீசுகின்றன.
(iii) மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, இக்காற்றுகள் 40" "கர்ஜிக்கும் நாற்பதுகள்" எனவும் 50” அட்சங்களில் "சீறும் ஐம்பதுகள்" எனவும் 60" அட்சங்களில் கதறும் அறுபதுகள்" எனவும் அழைக்கப்படுகிறது
32.
துருவ உயரழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த வறண்ட காற்றுகள் துருவக் கீழைக் காற்றுகள் எனப்படுகின்றன. இவை வட அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்த காற்றுகளாகும்.
33.
அசோகர் தனது கலிங்கக் கல்வெட்டு ஒன்றில் அவர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைப் பார்த்துத் தாம் அடைந்த மன வேதனையை பதிவு செய்துள்ளார். மற்றொரு கல்வெட்டில், தாம் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட பொறுத்துக்கொள்ள போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
34.
தற்காலத்திய ஒடியா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுகள் தமிழகத்திலும் கேரளத்திலும் காணப்படவில்லை. எனவே மௌரியர்களின் மேலாட்சிக்கு உட்படாத சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தமிழக வேந்தர்கள் விளங்கினார்கள். இதை அசோகரின் கல்வெட்டுச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
35.
(i) முதன் முதலாக, சங்க காலத்தில் தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
(ii) சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் மற்றொரு வகையான சான்று ஆகும்.
(iii) சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.
(iv) மேலும் பலவற்றை உருக்கி அவர்கள் அணிகலன்களும் செய்திருக்கலாம்.
36.
முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.
37.
கடற்குகை (Sea Cave) :
கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு தவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை கடல் குகைகள் எனப்படுகின்றன.
கடல் வளைவு (Sea Arch):
அருகருகிலுள்ள இரு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள் மேலும் அரிக்கப்படுவதால் அவை இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வளைவுகள் கடல் வளைவுகள் எனப்படுகின்றன.உதாரணம் - நீல் தீவு (அந்தமான் நிக்கோபார்).
38.
i.பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம் ஹமுராபியின் சட்டத் தொகுப்பாகும்.
ii.குடும்ப உரிமைகள், வணிகம். அடிமை முறை,வரிகள், கூலி போன்ற பல்வேறு வழக்குகள் குறித்து இதில் 282 பிரிவுகள் உள்ளன.
iii. இது பழைய சட்டங்களின் தொகுப்பாகும்.
iv.இது பழிக்கு பழி வாங்கும் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டது.
v."கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
39.
விடை சிகுராட்களின் முக்கிய பண்புகள்:
(i) சிகுராட் என்பது பண்டைய மெஸபடோமியாவில் (தற்போதைய ஈராக்) காணப்படும் பிரமிட் வடிவ நினைவிடங்கள் ஆகும்.
(ii) நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் எனப்படும் கோயில்கள் கட்டப்பட்டன.
(iii) அவை செங்குத்தான பிரமிடுகள் போல் காட்சியளித்தன.
(iv) உச்சிக்கு செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
(v) கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், ஆண் மற்றும் பெண் மதகுருமார்களின் கல்லறைகள், சடங்குகளுக்கான விருந்து அரங்குகள், தொழிற் கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள் அடங்கிய வளாகங்கள் இருந்தன.
40.
பெருங்கற்கால ஈமச் சின்னங்கள்:
1.டோல்மென் எனப்படும் கற்திட்டை,
2. சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்.
3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்,
4. தாழி.
5. பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்,
6. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
41.
நீயாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டார்கள். குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.
42.
(அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்குழல் வடிவத்தில் குவியும் காற்று ஆறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது.
(1) புவியின் கழற்சியினால் சூராவாணி வட அரைகோளத்தில் கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையிலும், தென் அரைகோளத்தில் கடிகாரத்திசையிலும் வீசுகிறது. குறாவளிகள் மூன்று வகைப்படும். அவைகள். வெப்பச்சூறாவளிகள் மிதவெப்பச்சூறாவர்கள் கூடுதல்வெப்பர்சூறாவளிகள்
அ) வெப்பச்சூறாவளிகள்!
(1) வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும்
Laari (Inter Tropical Cimvangenee Zones(ITCZ) Rzadkien.
(I) இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன.
(1) இலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பரிபிர்பெருங்கடலில் ஸ்டபூன்கள் |Typom) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லெண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் Hurricaner) என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேசியுஸ் (Ragnion) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி (Wity Wily) என்றும் அழைக்கப்படுகிறது.
(v) வெப்ப ாவளிகள் கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும். பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்
ஆ) மிதவெப்பக்சூராவளிகள்
(1) 35 முதல் 65" வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிகொற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன.
மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது
(iii) இச்ாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப் பகுதி வரை புரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று மேற்கத்திய இடையூறு காற்று (Wism Disturbance என்று அழைக்கப்படுகிறது.
இ) கூடுதல்வெப்பக்சூராவளிகள்:
அடுநல் வெப்பர் சூறாவளிகள் என்பது 30 முதல் 60 வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப் பகுதிகளில் வீசுகின்றன. இது 'மைய அட்ச சூறாவளிகr (Late Cyc என்றும் அழைக்கப்படுகின்றன
(II) இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mil முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிலையும் (Harry hall) இடியுடன் கூடிய மழைப்பொழிலையும் பனிப்பொழிலையும் ) மற்றும் சுழல் காற்றுகளையும்(Tomatoes) அளிக்கின்றன
43.
1. ஏழைகள் மற்றும் எழுத்தறிவற்றோருக்கு மக்களாட்சியின் பலன்கள் கிடைக்கச் செய்ய அதிகாரம் அளித்தல்.
2. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகாரத்தையும். பொதுச் சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்தாமல் இருத்தல்.
3. மக்களாட்சி முறையைப் பீடித்திருக்கும் சமூகத் தீமைகளையும், சமூகக் கொடுமைகளையும் ஒழித்தல்.
4. மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கப் பாரபட்சமற்ற, திறமை மிக்க ஊடகங்களின் தேவையை உணர்தல்.
5. பொது மக்களின் கருத்து வலுவாக இருத்தல்.
6. மக்களிடையே சகிப்புத்தன்மையும் மத நல்லிணக்கமும் நிலவுதல்.
7. அடிப்படை உரிமைகள் பற்றிய அறிவும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்படுத்துதல்,
8. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
9. வலுவான பொறுப்பு மிக்க எதிர்க் கட்சி இருத்தல்.
44.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
45.
சமண சமயம்:
(1) சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமானார் ஆவார்.
(ii) இவர் மூன்று ரத்தினம் எனப்படும் நல்லறிவு, நன்னம்பிக்கை மற்றும் நன்னடத்தையை போதித்தார்.
(iii) அகிம்சை மற்றும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தாமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) மகாவீரர் சாதிமுறையை ஏற்கவில்லை அனைத்து மதமும் சமம் என்றார்.
(vi) சமண சமயத்தின் இரு பிரிவுகள்
(i) திகம்பரர்கள் (திசையையே ஆடையாக உடுத்தியவர்கள்)
(ii) சுவேதாம்பரர்கள் (வெண்ணிற உடை உடுத்தியவர்கள்)
(vii) சமணர்கள் தங்கள் கொள்கைகளை வட்டார மொழிகளிலே போதித்தனர்.
(viii) சந்திரகுப்தர், மகேந்திரவர்ம பல்லவன் சமண சமயத்தை தழுவியவர்கள்.
புத்த சமயம்:
(i) புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர்.
(ii) இவரின் எண் வழிப்பாதை நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன் முயற்சி, நற்சிந்தனை மற்றும் நல்ல தியானம் ஆகும்.
(iii) அன்பை அகிம்சை வழியில் எல்லா உயிரினங்களும் வெளிப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) சாதிமுறையை ஏற்கவில்லை.
(vi) புத்த சமயம் மஹாயானம் மற்றும் ஹீனயானம் என்று இரு பிரிவுகளாக பிரிந்தது.
(vii) புத்தர், மக்கள் பேசும் பிராகிருத மொழியில் தனது போதனைகளை போதித்தார்.
(viii) அசோகர், கனிஷ்கர் புத்த சமயத்தை தழுவியவர்கள்.
46.
பனியாறு:
(i) பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது.
(ii)பனிக்குவிந்து காணப்படும் இடம் பனிவயல் என அழைக்கப்படுகிறது.
(iii) உயரமான பகுதிகளிலும், உயர் அட்சங்களிலும் நிரந்தரமாக பனி மூடியிருக்கும் பகுதியின் எல்லைக்கோடே உறை பனிக்கோடு எனப்படுகிறது.
(iv) உயர் அட்சங்களுக்குச் செல்லச் செல்ல உறைபனிக் கோட்டின் எல்லைக்கோடு கடல் மட்டத்திற்கு அருகில் காணப்படும்.
(v) பனிக்கட்டிகள் பனித்துகள்களாக உருமாறுவதை இறுகிய பனிமணிகள் என்று அழைக்கின்றோம்.
(vi) இது மேலும் இறுகி திடமான பனிக்கட்டிகளாய் உருவாகின்றன.
47.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை உருவாக்குவதிலும், மறு உருவாக்கம் செய்வதிலும் இரண்டு முதன்மைச் செயல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை, அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகள் ஆகும்.
அ) அகச்செயல்முறைகள்:
(i) புவியின் உட்பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகளே 'அகச்செயல் முறைகள்' எனப்படுகின்றன.
(ii) இவ்விசைகள் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
(iii) புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவிமேலோட்டின் கீழ் காணப்படும் பொருள்கள் வெளித்தள்ளப்படுகின்றன. இச்செயல்பாட்டில் புவியின் உள்ளே உள்ள கதிர்வீச்சு முக்கியப் பங்காற்றுகின்றது.
ஆ) புவிப்புறச் செயல்முறைகள்
(i) இச்செயல் முறைகள் புவியில் உள்ள பொருள்களின் மீது அழுத்தத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருள்களின் மீது மாற்றத்தை உண்டாக்குகின்றன. இவை 'புவிப்புறச் செயல்முறைகள்' எனப்படுகின்றன.
(ii) புவியின் மேற்பரப்பில் செயல்படும் இயற்கைக் காரணிகளான ஆறுகள், பனியாறுகள், காற்று, அலைகள் போன்ற விசைகள் 'புவிப்புறச் செயல்முறை' காரணிகள் எனப்படுகின்றன. இக்காரணிகள் நிலத்தின் மேற்பரப்பினை அரித்து தாழ்நிலச் சமவெளிகளில் படிய வைத்து அவற்றை உயர்த்துகின்றன.
48.
அ) விவசாயம் (அல்லது) வேளாண்மை:
1. இரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள்.
2.ஆடு மாடுகளையும் வளர்த்தார்கள்.
3.தினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் தான் பாசன நிருவாகம் மேம்பட்டது.
4.ஏனெனில் பல பெருங்கற்கால இடங்கள், நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன ஆற்றுப்படுகைகளில் பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது.
ஆ) மட்பாண்டங்கள்:
1.தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.
2.இரும்புக்கால, சங்ககால மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப்
பயன்படுத்தினார்கள்.
3.மட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டன.
4.கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.
இ) உலோகக் கருவிகள்:
1.பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
2.வாள், குறுவாள் போன்ற கருவிகள், கோடரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
3.இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.
4.இரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
5. வெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலான முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
49.
50.
| நேரடி மக்களாட்சி | மறைமுக மக்களாட்சி |
|---|---|
| பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவு எடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். | பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே மறைமுக மக்களாட்சி என்றழைக்கப்படுகிறது. |
| (எ.கா.) பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து | (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து |
51.
52.
1. இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்படுவற்கு முன் செம்பும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும் தான் பயன்பட்டு வந்தன. இவை விலை உயர்ந்தவை.
2. இவற்றின் கூர்முனை விரைவில் மழுங்கிப் போகும் என்பதால் வெண்கலத்தாலான ஆயுதங்களையோ, கலப்பை போன்ற கருவிகளையோ திறம்பட பயன்படுத்த முடியாது.
3. வெண்கலம், செம்புத் தாதுவைவிட இரும்புத் தாதுவளம் இயற்கையில் அபிரிமிதமாகக் கிடைக்கிறது.
4. மேலும் இரும்புக் கோடரி காடுகளைத் திருத்தவும், இரும்புக் கலப்பை இறுகிய நிலத்தைப் பிளக்கவும் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
5. பொ. ஆ. மு. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரும்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் அஸிரியப் பேரரசு வல்லமை பெற்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards