9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/01/2019
9-Std History Full Study Material
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
எத்தியோப்பியா இத்தாலியை ____________ தோற்கடித்தது.
அடோவா
டஹோமி
டோங்கிங்
டிரான்ஸ்வால்
2.
இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிக் கொண்ட முதல் ஐரோப்பிய நாட்டினர் ______________.
போர்த்துகீசியர்
பிரஞ்சுக்காரர்
டேனிஷார்
டச்சுக்காரர்
3.
இந்தோ-சீனாவில் _____ மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.
ஆனம்
டோங்கிங்
கம்போடியா
கொச்சின் - சீனா
4.
1896 இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.
நான்கு
ஐந்து
மூன்று
ஆறு
5.
கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தபட்டது?
கற்கரி
கரி
விறகு
காகிதம்
6.
எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது
உருட்டாலைகள்
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
ஸ்பின்னிங் மியூல்
இயந்திர நூற்புக் கருவி
7.
எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?
இங்கிலாந்து
ஜெர்மனி
பிரான்ஸ்
அமெரிக்கா
8.
கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?
சுதந்திர தினம்
உழவர் தினம்
உழைப்பாளர் தினம்
தியாகிகள் தினம்
9.
சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?
எப்.டி. ரூஸ்வெல்ட்
ஆண்ட்ரூ ஜேக்சன்
வின்ஸ்டன் சர்ச்சில்
உட்ரோ வில்சன்
10.
நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?
டி வெண்டெல்
டி ஹிண்டல்
டி ஆர்மன்
டி ரினால்ட்
11.
தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
எலியாஸ் ஹோவே
எலி- விட்னி
சாமுவேல் கிராம்டன்
ஹம்ப்ரி டேவி
12.
நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?
ஆர்க்ரைட்
சாமுவேல் கிராம்ப்டன்
ராபர்ட் ஃபுல்டன்
ஜேம்ஸ் வாட்
13.
________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதி போர் முடிவுக்கு வந்தது.
1776
1779
1781
1783
14.
பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________
ஜெரோண்டியர்
ஜேக்கோபியர்
குடியேறிகள்
அரச விசுவாசிகள்
15.
‘கான்டீட்’ என்ற நூல்________ஆல் எழுதப்பட்டது.
வால்டேர்
ரூசோ
மாண்டெஸ்கியூ
டாண்டன்
16.
பிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது
வெர்செயில்ஸ்
பாஸ்டைல் சிறைச்சாலை
பாரிஸ் கம்யூன்
ஸ்டேட்ஸ் ஜெனரல்
17.
________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.
டிரென்டன்
சாரடோகா
பென்சில் வேனியா
நியூயார்க்
18.
லஃபாயட், தாமஸ் ஜெபர்சன், மிரபு ஆகியோர் ____________ எழுதினர்.
சுதந்திர பிரகடனம்
பில்னிட்ஸ் பிரகடனம்
மனிதன் மற்றும் குடிமகன் உரிமைமைகள் பற்றிய பிரகடனம்
மனித உரிமை சாசனம்
19.
பிரெஞ்சுப் புரட்சியின் முன்னோடியாக, வாஷிங்டனுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர்_____ .
மிரபு
லஃபாயெட்
நெப்போலியன்
டான்டன்
20.
அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.
நியூயார்க்
பிலடெல்பியா
ஜேம்ஸ்டவுன்
ஆம்ஸ்டெர்டாம்
21.
தாயகக் கட்டணங்கங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.
22.
கர்னல் பென்னிகுயிக்.
23.
ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
24.
காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.
25.
பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?
26.
பிரெஞ்சு புரட்சியில் லஃபாயட்டின் பங்கினை எழுதுக
27.
பிரான்சின் மூன்று வர்க்கங்களின் அமைப்பு (Three Estates) பற்றி எழுதுக
28.
செப்டம்பர் படுககொலை பற்றி ஒரு குறிப்பு வரைக.
29.
பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?
30.
பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?
31.
குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?
32.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.
33.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
34.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
35.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.
36.
1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.
37.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
38.
தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.
39.
லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்னன்ன?
40.
ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.
41.
இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைளைக் கூறு.
1.
(a)
அடோவா
2.
(a)
போர்த்துகீசியர்
3.
(d)
கொச்சின் - சீனா
4.
(a)
நான்கு
5.
(b)
கரி
6.
(b)
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
7.
(b)
ஜெர்மனி
8.
(c)
உழைப்பாளர் தினம்
9.
(b)
ஆண்ட்ரூ ஜேக்சன்
10.
(a)
டி வெண்டெல்
11.
(a)
எலியாஸ் ஹோவே
12.
(c)
ராபர்ட் ஃபுல்டன்
13.
(d)
1783
14.
(a)
ஜெரோண்டியர்
15.
(a)
வால்டேர்
16.
(a)
வெர்செயில்ஸ்
17.
(b)
சாரடோகா
18.
(c)
மனிதன் மற்றும் குடிமகன் உரிமைமைகள் பற்றிய பிரகடனம்
19.
(b)
லஃபாயெட்
20.
(c)
ஜேம்ஸ்டவுன்
21.
தாயகக் கட்டணம் (Home Charges) என்ற பெயரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டிய லாபத்தில் பங்கு, வாங்கிய கடனின் மீதான வட்டி, ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு, அதிகாரிகளுக்கான ஓய்வூதியம், லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்திற்கான செலவுகள் இந்தியாவிற்கு வரும் அல்லது இந்தியாவிலிருந்து செல்லும் ஆங்கிலப் படைகளுக்கான போக்குவரத்துச் செலவு எனும் பெயரில் கம்பெனி பெருமளவுப் பணத்தை ஆண்டுதோறும் இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தது. இதற்கு தாயகக் கட்டணங்கள் என்று பெயர்.
22.
கர்னல் பென்னி குயிக்:
(i) பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளரும், குடிமைப் பணியாளரும், சென்னை மாகாணச சட்டமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார்.
(ii) மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார்.
(iii) ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான அளவுக்கு நிதியைப் பெற முடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார்.
(iv) அணை கட்டும் பணிகள் 1895-ல் முடிவுற்றன. பெரியார் அணையிலிருந்து கிடைக்கும் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
23.
(i) ஜூலு பூர்வக்குடிகள் தங்களின் போர்த் திறனுக்காகப் பெயர் பெற்றவர்கள்.
(ii) புகழ் பெற்ற போராளிகளான சாக்கா ஜூலு போன்றவர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டவர்கள். (iii) ஜூலு பகுதிகளைக் கைப்பற்றிய ஆங்கிலப் படைகள் அப்பகுதிகளைப் பதிமூன்று தலைமையுரிமைப் பகுதிகளாகப் பிரித்தனர். ஜூலுக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறவேயில்லை. அவர்கள் தென்னாப்பிரிக்காவில் இனப்பாகுபாட்டிற்கு எதிராக ஒரு நூற்றாண்டு காலம் போராட நேர்ந்தது.
24.
| S.No | காலனியாதிக்கம் | ஏகாதிபத்தியம் |
| 1. | காலனி என்னும் சொல் 'கலோனஸ்’ என்னும் லத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் 'விவசாயி' என்பதாகும். |
இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல் என்று பொருள். |
| 2. | காலனியாதிக்கம் என்பது மக்களை ஒரு புதிய இடத்தில் குடியேற்றுவது. குடியேறியவர்கள் நிரந்தரமாக தங்கி வாழ்வர். அங்கேயே |
ஒரு நாடு குடியேறுதல் மூலமாகவோ, இறையாண்மை செலுத்துதல் மூலமாகவோ, மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிகளிலோ வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கும். |
25.
(i) அரசால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடி தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை கலைந்து செல்வதில்லை என உறுதியேற்றதைத் தொடர்ந்து நெருக்கடி முற்றியது.
(ii) அரசர் இவர்களைக் கலைக்கப் படைகளைப் பயன்படுத்த முயன்றார். அவருடைய வீரர்களே அவரது ஆணைகளுக்குப் பணிய மறுத்தனர்.
(iii) இதனைத் தொடர்ந்து தனது நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் லூயி அயல்நாட்டுப் படைகளைத் தருவிப்பதற்கான சதி ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
(iv) இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 1789 ஜூலை 14இல் பாரிஸ் நகரில் கிளர்ச்சியில் இறங்கினர்.
(v) அவர்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர். இது பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி புரட்சியில் முக்கியத் திருப்பு முனையாகும்.
26.
(i) லஃபாயட் பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு தேசியப் பாதுகாவலர்கள் என்ற படைப்பிரிவுக்குத் தலைமையேற்றார்.
(ii) ஜெபர்சனின் உதவியோடு இவர் 'மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பற்றிய பிரகடனம்' என்பதை எழுதினார். இதைத் தேசியச் சட்டமன்றம் 1789 ஆகஸ்ட் 27இல் ஏற்றது.
27.
(i)மதகுருமார்கள் (சமயப் பணிகளுக்காகப் பணியமர்த்தப்பட்ட ஆண்களும், பெண்களும்)
(ii) பிரபுக்கள் மற்றும்
(iii) பொதுமக்கள் (வழக்கறிஞர்கள், பணம்படைத்த வர்த்தகர்கள், வணிகர்கள், வங்கியாளர்கள், செல்வராக இருந்த நிலவுடைமையாளர்கள்).
28.
(i) சுவிட்சர்லாந்து நாட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் அரச ஆதரவாளர்களை மாரட் என்பவரின் தலைமையில் வேட்டையாடினர்.
(ii) செப்டம்பர் மாதம் 2ஆம் நாள் தொடங்கி மூன்று நாட்களில் மாற்றுக் கருத்துடைய எதிரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,500 நபர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
(iii) பிரான்ஸ் நாட்டு வரலாற்றில் இது 'செப்டம்பர் படுகொலை' என அழைக்கப்படுகிறது.
29.
(i)விவசாயிகள் அரசுக்கு டெய்லே (நிலவரி), காபெல்லே (உப்பு வரி) போன்ற வரிகளைச் செலுத்தினர்.
(ii) மேலும் சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப் பணிகளுக்கு ‘கார்வி' எனப்படும் இலவச உழைப்பையும் வழங்கினர்.
30.
(i) இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் செயல்பட்ட மதச் சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகள், ரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளையும் நடைமுறைகளையும் ஏற்க மறுத்தனர்.
(ii) இவர்களே பியூரிட்டானியர் தூய நெறியாளர் எனப் பொருள்) என அறியப்பட்டனர்.
(iii) இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஸ்டூவர்ட் வம்ச அரசர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
(iv) இவ்வரசர்கள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் பெருவாரியான பியூரிட்டானியர் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியேறினர்.
31.
(i) குவேக்கர்கள் இங்கிலாந்தில் ஜார்ஜ் பாக்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட நண்பர்கள் குழாம் என்னும் கிறித்துவ மதக்குழுவின் உறுப்பினர் ஆவர்.
(ii) புனித ஆவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் சடங்குச் சம்பிரதாயங்களையும், சமயக் குருமார் அமைப்பையும் எதிர்த்தனர்.
(iii) இவர்கள் போருக்கு எதிராகவும், அமைதிக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பணிகளுக்காக நற்பெயர் பெற்றவர்களாவர்.
32.
ஆப்பிரிக்கா காலனியாதல் :
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன.
(ii) ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன.
(iii) 1875க்குப் பின்னர், ஐரோப்பியரின் ஊடுருவலும் குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது.
(iv) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.
(v) இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது.
(vi) 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
(vii) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது.
(viii) மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடாபுடைய பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது.
கனத்து
(ix) காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய இம்மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
(x) பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.
33.
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் :
(i) கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார்.
(ii) இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
(iii) இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார்.
(iv) ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் உருவாக்கப்பட்டனர்.
(v) நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர்.
(vi) விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
(vii) கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது.
(viii) வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.
(ix) ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
(x) இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார், அவரே வரி செலுத்துவார்.
(xi) நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.
xii) நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை ரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது, தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.
xiii) ஆங்கில அரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
xiv) விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.
ஆப்பிரிக்காவில் காலனி அசிங்
34.
இங்கிலாந்து தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் :
(i)18ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
(ii) நூற்பு நெசவுத் தொழில் ஆகியன இங்கிலாந்தில் பெரும் வளர்ச்சியடைந்தன.
(iii) வங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டு கரங்களில் சிக்கிப் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.
(iv) உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து தீர்வை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
(v) இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர். மேலும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை இந்தியச் சந்தைகளில் குவித்தனர்.
(vi) கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்துவிட்டது.
(vii) இந்திய நாடு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது.
(viii) 19ம் நூற்றாண்டில் முதல் கால் பகுதியில் டாக்கா மஸ்லின் துணி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது.
(ix) பிரிட்டன் துணி ஆலைகளில் உற்பத்தியான துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டது.
(x) எனவே இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்கள் ஆயினர்.
35.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கான காரணங்கள் :
i) இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர் 10வயதில் இருந்து ஜவுளி ஆலைகளில் பணியாற்றி ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார்.
(ii) அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றவுடன் இவர் 1789-ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாக குடியேறினார்.
(iii) ரோட்ஸ் தீவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மோசஸ் பிரௌனிடம் வேலைக்கு சேர்ந்து கொண்டதும் அவரது ஆலை 1793இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
(iv) இது அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை ஆகும்.
(v) 1800 வாக்கில், சிலேட்டரின் துணி ஆலையினைக் கண்டு மேலும் பலர் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர்.
(vi) அமெரிக்க அதிபர் ஆண்ட்ரு ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை’ என்று புகழ்ந்தார்.
(vii) ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகு போக்குவரத்தை தொடங்கினார்.
(viii) சாமுவேல் மோர்ஸ் தந்தியைக் கண்டுபிடித்ததும், எலியாஸ் ஹோவே தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
(ix) 1869-ல் கண்டங்களை இணைக்கும் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
(x) இரயில் போக்குவரத்து மக்கள், சரக்கு மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்வதற்கு பயன்பட்டது.
(xi) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்விளக்கு (1879) அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி கண்டுபிடித்தார் (1888). இப்புதிய கண்டுபிடிப்புகள், போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவை அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கு அடிகோலியது.
36.
பிரெஞ்சு தத்துவஞானிகளின் பங்களிப்பு :
(i) பிரெஞ்சு தத்துவஞானிகளான வால்டேர், மாண்டெஸ்கியூ, ரூசோ ஆகியோர் பிரான்ஸின் நிலைமைகளை விமர்சித்தனர்.
(ii) வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார்.
(iii) கான்டீட் (Candide) வால்டேரின் புகழ்பெற்ற நூலாகும்.
(iv) அவருடைய புகழ்பெற்ற மேற்கோள்கள் "முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்க முடியும்
(v) வால்டேரின் சமகாலத்தவரும் மகத்தான எழுத்தாளருமான ஜூன் ஜேக்ஸ் ரூசோ ஆவார்.
(vi) அவருடைய அரசியல் கருத்துக்கள் மக்கள் புதிய முடிவுகள் எடுப்பதில் பெரும்பங்கு வகித்தது.
(vii) பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை தயார் செய்ததில் இவரின் முக்கிய பங்கு வகித்தது.
(viii) இவர் எழுதிய நூல் "சமூக ஒப்பந்தம்” (Social Contract) அதில் அவரின் புகழ்பெற்ற கூற்று "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்' என்பதாகும்.
(ix) மாண்டெஸ்கியூவில் 'பாரசீக மடல்கள்', 'சட்டத்தின் சாரம்' என்னும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
(x) இவர் 'அதிகாரப் பிரிவினை' எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
(xi) எந்த ஒரு அரசின் அதனுடைய மூன்று உறுப்புகளான சட்டம் இயற்றுதல், சட்டத்தைச் செயல்படுத்துதல், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகக் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ்வரசில் தனிமனிதச் சுதந்திரம் சிறப்பாக பாதுகாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
37.
(i) 1774இல் குடியேற்ற நாடுகளின் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
(ii) குடியேற்றவாதிகள் விடுதலைப் பெறுவதற்காகப் போரை தொடங்கவில்லை. வரிவிதிப்பும், வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயரின் உரிமைக்கு எதிராக அவர்கள் செயல்பட்டனர்.
(iii) "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது.
(iv) பாஸ்டைன் துறைமுக நிகழ்வுகளால் கலக்கமடைந்த இங்கிலாந்து அரசு 'சகிக்க முடியாத சட்டங்கள்' எனும் சட்டத்தை இயற்றியது.
(v) அதில் இச்சட்டத்தை மீறும் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுவர் என கூறப்பட்டிருந்தது.
(vi) 1774ஆம் ஆண்டு மே மாதம் வெர்ஜீனியா சட்டமன்றத்தில் தாமஸ் ஜெபர்சன் 1774ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் உண்ணாவிரதம் மற்றும் வழிபாட்டுத் தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.
(vii) இதற்கு எதிர்வினையாக ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்தார்.
(viii) அதன் பின்பு உறுப்பினர்கள் கண்டங்களின் மாநாடு நடத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டது. - மற்ற குடியேற்ற உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்தனர்.
(ix) 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் முதல் கண்டங்களின் மாநாடு பிலடெல்பியாவில் கூடியது.
(x) குடியேற்றங்களின் பிரதிநிதிகள் தீர்மானங்களின் மீது வாக்களிக்க மாநாடு ஒப்புக்கொண்டது. அதன் சகிக்க முடியாத சட்டம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(xi) கண்டங்களின் மாநாடு அமெரிக்க மக்களின் உரிமை பிரகடனத்தை ஏற்றது.
38.
தொழிற்புரட்சியினால் மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையானான்.
(ii) ஆலைத் தொழிலாளிகள் இரக்கமின்றி முதலாளிகளால் சுரண்டப்பட்டனர்.
(iii) பெண்களும், சிறுவர்களும் குறைவான ஊதியத்தில் மற்றும் பாதுகாப்பில்லாத, அபாயகரமான இயந்திரங்களுக்கு அருகேயும் பணிபுரிய வேண்டியிருந்தது.
(iv) வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தீவிர பிரச்சனையாய் இருந்தது.
39.
1898இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார். தொடர்ந்து சொசைட்டெ ரெனால்ட் ஃபெரெர்ஸ் (ரெனால்ட் சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.
40.
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே மாதம் 4 ஆம் தேதி ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது.நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து அமைதியாகத் தொடங்கிய இக்கூட்டத்தில் காவல்துறை பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றது.ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
41.
தொழிற்புரட்சியின் வருகையைத் தொடர்ந்து, உலகின் தொழிற்பட்டறையாக இங்கிலாந்து மாறியது. வேளாண்மை உற்பத்தியில் பொதுவான வீழ்ச்சி காணப்பட்டது. இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர். மக்கள்தொகை அதிகரிப்பு, இடப்பெயர்ச்சி. நகரமயமாக்கம் ஆகியன முக்கிய காரணங்கள் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards