9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 II ( 9th Standard Social Science Tamil Medium Important Questions II 2019-2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
1948
1952
1957
1947
2.
வாக்குரிமையின் பொருள்
தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
வாக்களிக்கும் உரிமை
பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
3.
உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு
கனடா
இந்தியா
அமெரிக்க ஐக்கிய
சீனா நாடுகள்
4.
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
சிறுகுழு ஆட்சி
மதகுருமார்களின் ஆட்சி
மக்களாட்சி
தனிநபராட்சி
5.
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்
மார்க்கோ போலோ
ஃபாஹியான்
மெகஸ்தனிஸ்
செல்யூகஸ்
6.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது
மஹாஜனபதங்கள்
கனசங்கங்கள்
திராவிடம்
தட்சிணபதா
7.
_______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது
இடைப்பட்ட திரள் மேகங்கள்
இடைப்பட்ட படை மேகங்கள்
கார்படை மேகங்கள்
கீற்றுப்படை மேகங்கள்
8.
_______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்
துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
துருவ உயர் அழுத்த மண்டலம்
9.
_______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
சூரியன்
சந்திரன்
நட்சத்திரங்கள்
மேகங்கள்
10.
_______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
வெளியடுக்கு
அயன அடுக்கு
இடையடுக்கு
மீள் அடுக்கு
11.
வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.
கீழடுக்கு
மீள் அடுக்கு
வெளியடுக்கு
இடையடுக்கு
12.
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
புகளூர்
கிர்நார்
புலிமான்கோம்பை
மதுரை
13.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
ஆங்கிலம்
தேவநாகரி
தமிழ்-பிராமி
கிரந்தம்
14.
________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன
காற்று
பனியாறு
ஆறு
நிலத்தடி நீர்
15.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________
கடல் அலை அரித்தல்
ஆற்று நீர் அரித்தல்
பனியாறு அரித்தல்
காற்றின் படியவைத்தல்
16.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்
பனியாறு
காற்று
கடல்அலைகள்
நிலத்தடி நீர்
17.
________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்
துள்ளல்
வண்டல் விசிறி
டெல்டா
மலை இடுக்கு
18.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது
வானிலைச் சிதைவு
அரித்தல்
கடத்துதல்
படியவைத்தல்
19.
ஹரப்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை
தங்கம் மற்றும் யானை
குதிரை மற்றும் இரும்பு
ஆடு மற்றும் வெள்ளி
எருது மற்றும் பிளாட்டினம்
20.
சுமேரியரின் எழுத்துமுறை ______ ஆகும்
பிக்டோகிராபி
ஹைரோகிளிபிக்
சோனோகிராம்
க்யூனிபார்ம்
21.
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________
சர்கோபகஸ்
ஹைக்சோஸ்
மம்மியாக்கம்
பல கடவுளர்களை வணங்குதல்
22.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும்
மடிப்பு
பிளவு
மலை
புவிஅதிர்வு
23.
ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி _____________ நோக்கி நகர்ந்தது.
வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
24.
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்
கருவம்
கவசம்
புவி மேலோடு
உட்கரு
25.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
நுண்கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
26.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
ஹோமோ சேபியன்ஸ்
நியாண்டர்தால் மனிதன்
27.
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
பெருங்கற்காலம்
28.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
கொரில்லா
சிம்பன்ஸி
உராங் உட்டான்
பெருங்குரங்கு
29.
கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
30.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.
31.
மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
32.
மழைப் பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
33.
சிறு குறிப்பு வரைக.
அ) வியாபாரக்காற்றுகள்
ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்
34.
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை
35.
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
36.
அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?
37.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
38.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
39.
குறுட்டு ஆறு என்றால் என்ன?
40.
உயிரினச்சிதைவு என்றால் என்ன?
41.
சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.
42.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக
43.
நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.
44.
சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
45.
நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக
46.
இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?
47.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
48.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு
49.
நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி
50.
எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி
51.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
52.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
53.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக
54.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக
1.
(b)
1952
2.
(c)
வாக்களிக்கும் உரிமை
3.
(b)
இந்தியா
4.
(d)
தனிநபராட்சி
5.
(c)
மெகஸ்தனிஸ்
6.
(a)
மஹாஜனபதங்கள்
7.
(a)
இடைப்பட்ட திரள் மேகங்கள்
8.
(a)
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
9.
(a)
சூரியன்
10.
(c)
இடையடுக்கு
11.
(a)
கீழடுக்கு
12.
(a)
புகளூர்
13.
(c)
தமிழ்-பிராமி
14.
(b)
பனியாறு
15.
(a)
கடல் அலை அரித்தல்
16.
(d)
நிலத்தடி நீர்
17.
(c)
டெல்டா
18.
(a)
வானிலைச் சிதைவு
19.
(b)
குதிரை மற்றும் இரும்பு
20.
(d)
க்யூனிபார்ம்
21.
(c)
மம்மியாக்கம்
22.
(b)
பிளவு
23.
(a)
வடக்கு
24.
(c)
புவி மேலோடு
25.
(b)
பழங்கற்காலம்
26.
(c)
ஹோமோ சேபியன்ஸ்
27.
(c)
புதிய கற்காலம்
28.
(b)
சிம்பன்ஸி
29.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
30.
1. மக்களாட்சி முறையில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுகிறது.
2. குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுகின்றனர்.
3. குடிமக்கள் தனது கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
4. மக்கள் தமக்குரிய தலைமையை தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
31.
காரணம்: இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு படிவுகள் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு மூப்பு நிலையில் அகன்று காணப்படுகிறது.
32.
சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது. சாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை போன்றவை பொழிவின் வகைகளாகும்.
33.
வியாபாரக் காற்றுகள்:
(i) வட மற்றும் தென் அரைக் கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று 'வியாபாரக் காற்று' எனப்படும்.
(ii) இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும். அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.வியாபாரிகள் கடல் வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று 'வியாபாரக்காற்று' என அழைக்கப்படுகின்றது.
(iii) இக்காற்று பெருங்கடல்களில் பயணிக்கும்போது அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுகின்றன. மேலும் இக்காற்று மேற்கு நோக்கி நகரும் போது வறண்டு விடுவதால் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.
கர்ஜிக்கும் நாற்பது:
(i) மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென்அரைக்கோளங்களின் வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
(ii) இவை வட அரைக்கோளத்தில் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காகவும் வீசுகின்றன.
(iii) மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, இக்காற்றுகள் 40" "கர்ஜிக்கும் நாற்பதுகள்" எனவும் 50” அட்சங்களில் "சீறும் ஐம்பதுகள்" எனவும் 60" அட்சங்களில் கதறும் அறுபதுகள்" எனவும் அழைக்கப்படுகிறது
34.
(i) நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
(ii) கடல் மட்டத்திலிருந்து உயரம்
(iii) கடலிலிருந்து தூரம்
(iv) வீசும் காற்றின் தன்மை
(v) மலைகளின் இடையூறு
(vi) மேக மூட்டம்
(vii) கடல் நீரோட்டங்கள்
(viii) இயற்கைத் தாவரங்கள்
35.
(i) அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் தம்மம் குறித்த தனது செய்தியைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
(ii) கி.மு. பொ.ஆ.மு. 250ல் மௌரியத் தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாடு நடைபெற்றது. பௌத்தத்தை மற்ற பகுதிகளில் பரப்ப வேண்டும், மக்களை பௌத்தத்திற்கு மாற்ற சமயப்பரப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்பது இந்த மாநாட்டின் முக்கியமான முடிவாகும்.
36.
(i) பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு பொ.ஆ.மு. 493இல் தனது தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினார்.
(ii) இராணுவ வெற்றிகளின் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையை இவரும் பின்பற்றினார்.
(iii) மகதத்தின் தலைநகரான ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய அதே வேளையில் கங்கைக்கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்.
37.
(i) கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
ii) ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலை கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
(iii) மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
(iv) தங்கம், வெள்ளி, செம்பு,உள்ளிட்ட உலோகங்கள் இறக்குமதி ஆயின.
38.
(i) முதன் முதலாக, சங்க காலத்தில் தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
(ii) சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் மற்றொரு வகையான சான்று ஆகும்.
(iii) சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.
(iv) மேலும் பலவற்றை உருக்கி அவர்கள் அணிகலன்களும் செய்திருக்கலாம்.
39.
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.
40.
1. தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுத்லை உயிரினச் சிதைவு எனப்படும்.
41.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனபெருஞ்சுவர் வடக்கிலிருந்து ( மங்கோலியர்களிடமிருந்து ) வரும் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரும் முயற்சியாகும்.குவின் ஷி ஹீவாங் படையெடுப்புகளைத் தடுப்பதற்காக அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார்.
42.
i.எகிப்தியர், கட்டடக் கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்பு உடையவர்கள்.
ii. எகிப்தில் காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், படைப்புகள், எகிப்தியர்களின் கலை ஆற்றலுக்கு சான்றாகும்.
பிரமிடு:
i.பாரோக்களின் சமாதிகளாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ii.கெய்ரோவிற்கு அருகில் உள்ள பிரமிடுகள், கிஸா பிரமிடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஸ்பிங்க்ஸ்:
i.உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று ஸ்பிங்க்ஸ்
ii.இவற்றின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம்.
43.
நீயாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டார்கள். குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.
44.
இன்றைய நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு,நமது முன்னோர்களின் அறிவாற்றலால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும். தொல்பழங்கால மக்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .
எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றல்களால் அறிவையும்,புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் என்று சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
45.
வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும். இவை நிலவும்காற்று' அல்லது நிலையான காற்று (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது. 'வியாபாரக்காற்றுகள்' (Trade Winds) 'மேலைக்காற்றுகள் (westerlies) மற்றும் 'துருவகீழைக்காற்றுகள்' (Polar Easterlies) கோள் காற்றுகள்' ஆகும்.
அ) வியாபாரக்காற்றுகள்:
(i) வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று 'வியாபாரக்காற்று' எனப்படும்.
(ii) இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று 'வியாபாரக்காற்று' என அழைக்கப்படுகின்றது.
(iii) இக்காற்று பெருங்கடல்களில் பயணிக்கும்போது அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுகின்றன. மேலும் இக்காற்று மேற்கு நோக்கி நகரும் போது வறண்டுவிடுவதால் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.
ஆ) மேலைக்காற்றுகள்:
(i) மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென்அரைக்கோளங்களின் வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
(ii) இவை வட அரைக்கோளத்தில் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென்அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காகவும் வீசுகின்றன.
(iii) மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, இக்காற்றுகள் 40" "கர்ஜிக்கும் நாற்பதுகள்" எனவும் 50° அட்சங்களில் "சீறும் ஐம்பதுகள் எனவும் 60° அட்சங்களில் "கதறும் அறுபதுகள்" எனவும் அழைக்கப்படுகிறது.
இ) துருவ கீழைக்காற்றுகள்:
(i) துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் எனப்படுகின்றன.
(ii) இவை வடஅரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென்அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்தக் காற்றுகளாகும்
46.
இந்தியாவில் மக்களாட்சி:
1. இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடாகும்.
2. இந்தியாவின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்ட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.
3. இது நாட்டிற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குகிறது.
4. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும். ஒப்புதல் அளிப்பதும் இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கியக் கூறுகளாகும்.
5. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும்.
6. இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கியக் கெள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
7. அவை இறையாண்மை, சமதர்மம், மதச் சார்பின்மை, மக்களாட்சி. மற்றும் குடியரசு.
8. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறான்.
9. சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.
47.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
48.
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
1. மனிதத்தன்மை
2. நேர்மை
3. நன்னடத்தை
4. மெய்யறிவு
5. நம்பகத்தன்மை
(i) மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
(ii) ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
(iii) கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
(iv) குழந்தைகள் பெற்றோருக்கும், மனைவி கணவனுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், "உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், دو ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்' என்று தெளிவாக கூறினார்.
(v) 'ஒரு அரசுக்கு மூன்று விசயங்கள் அவசியமானவை, நாட்டில் போதுமான உணவு, இராணுவத் தளவாடங்கள் மற்றும் மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார்.
49.
நிலத்தடி நீரின் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்:
(i)டெர்ரா ரோஸா (இத்தாலிய மொழியில் செம்மண்) : சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களி உள்ள சுண்ணாம்பு மண் கரைந்து சிதைவுற்ற பின்னர் அதிலுள்ள எஞ்சிய செம்மண் இங் படியவைக்கப்படுவதால் இந்நிலத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. இம்மண் சிகப்பு நிறம காணப்படுவதற்கு அதிலுள்ள இரும்பு ஆக்ஸைடு காரணமாகும்.
(ii)லேப்பீஸ் : கரடு முரடாக உள்ள கண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடு போது நீண்ட அரிப்புக் குடைவுகள் ஏற்படுகின்றன. இக்குடைவுகளே லேப்பீஸ்கள் என் அழைக்கப்படுகின்றன.
iii) உறிஞ்சு துளைகள்: சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்க உறிஞ்சு துளைகள் எனப்படுகின்றன. இதன் சராசரி ஆழம் 3 முதல் 9 மீட்டர் வரை காணப்படு
iv) குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள் : குகைகளும், அடிநிலக் குகைகளும் சுண்ணாம் பிரதேசங்களில் நிலத்தடியில் காணப்படும் நிலத் தோற்றங்களாகும். கரியமில அமிலம் கண்ணாட பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது. இவை உருவத்திலு அளவிலும் வேறுபட்டுக் காணப்படும். அடிநிலைக் குகைகளின் தரைப்பகுதி சமமற்றுக் காணப்படு (உதாரணம்) மேற்கு பீஹாரிலுள்ள குப்ததாம்.
v) குகைகளிலும், அடிநிலக்குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் என அழைக்கப்படுகின்றன. ட்ரேவர்டைன், டூஃபா மற்றும் சொட்டுப்படிவுக ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.
vi) குகைகள், யுவாலாக்கள், போலின்கள், போல்ஜேக்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உலகின் பி பகுதிகளில் காணப்படும் சுண்ணாம்பு நிலப்பிரதேச நிலத்தோற்றங்கள் ஆகும்.
50.
எரிமலை செயல்படும் / வெடிக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
அ) செயல்படும் எரிமலை (Active Volcano )
ஆ உறங்கும் எரிமலை ( Dormart Volcano )
இ தணிந்த / செயலிழந்த எரிமலை ( Extinot Volcano )
அ) செயல்படும் எரிமலை:
நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் எனப்படுகின்றன (எ.கா) செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆ) உறங்கும் எரிமலை:
(i)நீண்ட காலமாக எரிமலைச் செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் எனப்படும்.
(ii) இவை திடீரென்று வெடிக்கும் தன்மையுடையது.
(iii) இவ்வாறான எரிமலைகள் வெடிக்கும் பொழுது அதிகமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. (எ.கா.) ஃபியூஜி எரிமலை - ஜப்பான்.
இ) தணிந்த / செயலிழந்த எரிமலை:
எந்தவித எரிமலைச் செயல்பாடுகளுமின்றி காணப்படும் எரிமலைகள் தணிந்த / செயலிழந்த எரிமலைகள் ஆகும். (எ.கா.) கிளிமஞ்சாரோ எரிமலை - தான்சானியா.
51.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
52.
53.
54.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி 'மக்களாட்சி' என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறினார்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards