9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 9th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
2.
வாக்குரிமையின் பொருள்
தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
வாக்களிக்கும் உரிமை
பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
3.
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
வாட்டிகன்
5.
முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சிமுறை
சிறுகுழு ஆட்சி
நாடாளுமன்றம்
மக்களாட்சி
இவற்றில் எதுவுமில்லை
6.
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்
மார்க்கோ போலோ
ஃபாஹியான்
மெகஸ்தனிஸ்
செல்யூகஸ்
7.
மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.
புத்தர்
மகாவீரர்
லாவோட்சே
கன்ஃபூசியஸ்
8.
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
தனநந்தர்
சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
சிசுநாகர்
9.
பருவக்காற்று என்பது ______
நிலவும் காற்று
காலமுறைக் காற்றுகள்
தலக்காற்று
மேற்கண்ட எதுவுமில்லை
10.
_______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்
துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
துருவ உயர் அழுத்த மண்டலம்
11.
_______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.
சூரியன்
சந்திரன்
நட்சத்திரங்கள்
மேகங்கள்
12.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவம் நோக்கிச் செல்ல செல்ல வெப்பம்_________.
கூடுகிறது
மாற்றம் ஏதுமில்லை
குறைகிறது
நிலையாக இருக்கிறது
13.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு _________
12°C
13°C
14°C
15°C
14.
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?
ஆசியா
தக்காண பீடபூமி
குலு பள்ளத்தாக்கு
மெரினா கடற்கரை
15.
________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன
காற்று
பனியாறு
ஆறு
நிலத்தடி நீர்
16.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________
கடல் அலை அரித்தல்
ஆற்று நீர் அரித்தல்
பனியாறு அரித்தல்
காற்றின் படியவைத்தல்
17.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்
காற்றடி வண்டல்
பர்கான்
ஹமாடா
மணல் சிற்றலைகள்
18.
சிந்துவெளி மக்கள் ‘இழந்த மெழுகு செயல்முறை’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _________ ஆகும்
ஜாடி
மதகுரு அல்லது அரசன்
பறவை
நடனமாடும் பெண்
19.
எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்
எரிமலை வாய்
துவாரம்
பாறைக்குழம்புத் தேக்கம்
எரிமலைக் கூம்பு
20.
ஆதியில் கோண்டுவானா நிலப்பகுதி _____________ நோக்கி நகர்ந்தது.
வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
21.
பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _____________ .
புவிமேலோடு
கவசம்
கருவம்
மேற்கண்ட எதுவுமில்லை
22.
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.
கருவம்
வெளிக்கரு
கவசம்
மேலோடு
23.
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்
கருவம்
கவசம்
புவி மேலோடு
உட்கரு
24.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
நுண்கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
25.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
26.
கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
27.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.
28.
சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
29.
பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.
30.
மழைப்பொழிவின் வகைகள் யாவை?
31.
கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?
32.
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை
33.
புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
34.
அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?
35.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
36.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
37.
வரையறு – அ) மொரைன் ஆ) டிரம்லின் இ) எஸ்கர்
38.
ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக?
39.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.
40.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக
41.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
42.
சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
43.
மேகங்களின் வகைகளை விவரி.
44.
இந்தியாவில் மக்களாட்சிப் பற்றிய உங்களது கருத்து என்ன?
45.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு
46.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக
47.
வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக
48.
புவி அமைப்பை விவரி
49.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
50.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
51.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக
52.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக
1.
(a)
சமூகச் சமத்துவம்
2.
(c)
வாக்களிக்கும் உரிமை
3.
(c)
சோழர்கள்
4.
(d)
வாட்டிகன்
5.
(a)
சிறுகுழு ஆட்சி
6.
(c)
மெகஸ்தனிஸ்
7.
(b)
மகாவீரர்
8.
(c)
பிம்பிசாரர்
9.
(b)
காலமுறைக் காற்றுகள்
10.
(a)
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
11.
(a)
சூரியன்
12.
(c)
குறைகிறது
13.
(b)
13°C
14.
(b)
தக்காண பீடபூமி
15.
(b)
பனியாறு
16.
(a)
கடல் அலை அரித்தல்
17.
(a)
காற்றடி வண்டல்
18.
(c)
பறவை
19.
(a)
எரிமலை வாய்
20.
(a)
வடக்கு
21.
(b)
கவசம்
22.
(b)
வெளிக்கரு
23.
(c)
புவி மேலோடு
24.
(b)
பழங்கற்காலம்
25.
(b)
பிறைநிலப் பகுதி
26.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
27.
1. மக்களாட்சி முறையில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுகிறது.
2. குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுகின்றனர்.
3. குடிமக்கள் தனது கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
4. மக்கள் தமக்குரிய தலைமையை தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
28.
சுண்ணாம்பு பாறையில் கால்சியம் கார்பனேட் அதிக அளவில் உள்ளது. அது நீரில் கரையக்கூடியது. ஆகவே கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து விடுகிறது.
29.
காற்றின் செயல்பாடுகளான அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் பாலைவனம் பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணியாக காற்று விளங்குகிறது.
30.
(i) வெப்பச் சலன மழைப்பொழிவு (Conventional Rainfall)
(ii) சூறாவளி மழைப் பொழிவு(Cyclonic Rainfall (or) Front and Rain fall)
(iii) மலைத் தடுப்பு மழைப் பொழிவு Orographic Rainfall)
ஆகியன மழைபொழிவின் பல்வேறு வகைகள் ஆகும் .
31.
(i) வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும்.
(ii) இவை நிலவும்காற்று (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது.வியாபாரக்காற்றுகள்,(Trade Winds) 'மேலைக்காற்றுகள்'மற்றும் 'துருவகீழைக்காற்றுகள்' (Polar Easterfics) கோள் காற்றுகள் ஆகும்.
32.
(i) நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
(ii) கடல் மட்டத்திலிருந்து உயரம்
(iii) கடலிலிருந்து தூரம்
(iv) வீசும் காற்றின் தன்மை
(v) மலைகளின் இடையூறு
(vi) மேக மூட்டம்
(vii) கடல் நீரோட்டங்கள்
(viii) இயற்கைத் தாவரங்கள்
33.
(i) அசோகர் தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் தம்மம் குறித்த தனது செய்தியைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.
(ii) கி.மு. பொ.ஆ.மு. 250ல் மௌரியத் தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்த சமய மாநாடு நடைபெற்றது. பௌத்தத்தை மற்ற பகுதிகளில் பரப்ப வேண்டும், மக்களை பௌத்தத்திற்கு மாற்ற சமயப்பரப்பாளர்களை அனுப்ப வேண்டும் என்பது இந்த மாநாட்டின் முக்கியமான முடிவாகும்.
34.
(i) பிம்பிசாரரின் புதல்வரான அஜாதசத்ரு பொ.ஆ.மு. 493இல் தனது தந்தையைக் கொன்றுவிட்டு அரியணை ஏறினார்.
(ii) இராணுவ வெற்றிகளின் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையை இவரும் பின்பற்றினார்.
(iii) மகதத்தின் தலைநகரான ராஜகிருஹக் கோட்டையை வலுப்படுத்திய அதே வேளையில் கங்கைக்கரையில் பாடலிகிராமத்தில் மற்றொரு கோட்டையைக் கட்டினார்.
35.
(i) கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
ii) ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலை கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
(iii) மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
(iv) தங்கம், வெள்ளி, செம்பு,உள்ளிட்ட உலோகங்கள் இறக்குமதி ஆயின.
36.
(i) முதன் முதலாக, சங்க காலத்தில் தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
(ii) சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் மற்றொரு வகையான சான்று ஆகும்.
(iii) சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.
(iv) மேலும் பலவற்றை உருக்கி அவர்கள் அணிகலன்களும் செய்திருக்கலாம்.
37.
அ)மொரைன்: பனியாறுகளால் படியவைக்கப்படும் படிவுகளை மொரைன்கள் எனப்படுகின்றன.
ஆ)டிரம்லின்: கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் மரம்லின்கள் எனப்படுகின்றன.
இ)எஸ்கர்: பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைகற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது. இவ்வாறு படியவைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகளே எஸ்கர்கள் எனப்படுகின்றன.
38.
ஆற்றின் மூன்று நிலைகள்
| (i) இளநிலை(The upper Course) | V வடிவ பள்ளத்தாக்குகள்,மலையிடுக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள,துள்ளல்,குடக்குழிகள் |
| (ii) முதிர் நிலை (The Middle Course) | வண்டல் விசிறிகள், வெள்ளச் சமவெளிகள்,ஆற்று வளைவுகள்,குருட்டு ஆறுகள் |
| (iii) மூப்பு நிலை (The Lower Course) | டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள் |
39.
i.பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம் ஹமுராபியின் சட்டத் தொகுப்பாகும்.
ii.குடும்ப உரிமைகள், வணிகம். அடிமை முறை,வரிகள், கூலி போன்ற பல்வேறு வழக்குகள் குறித்து இதில் 282 பிரிவுகள் உள்ளன.
iii. இது பழைய சட்டங்களின் தொகுப்பாகும்.
iv.இது பழிக்கு பழி வாங்கும் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டது.
v."கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
40.
i.எகிப்தியர், கட்டடக் கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்பு உடையவர்கள்.
ii. எகிப்தில் காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், படைப்புகள், எகிப்தியர்களின் கலை ஆற்றலுக்கு சான்றாகும்.
பிரமிடு:
i.பாரோக்களின் சமாதிகளாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ii.கெய்ரோவிற்கு அருகில் உள்ள பிரமிடுகள், கிஸா பிரமிடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஸ்பிங்க்ஸ்:
i.உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று ஸ்பிங்க்ஸ்
ii.இவற்றின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம்.
41.
பெருங்கற்கால ஈமச் சின்னங்கள்:
1.டோல்மென் எனப்படும் கற்திட்டை,
2. சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்.
3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்,
4. தாழி.
5. பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்,
6. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
42.
இன்றைய நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு,நமது முன்னோர்களின் அறிவாற்றலால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும். தொல்பழங்கால மக்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .
எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றல்களால் அறிவையும்,புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் என்று சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
43.
உயரத்தின் அடிப்படையில் மேகங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.
அ) மேல்மட்டமேகங்கள் (High clouds) (6-20 கி.மீஉயரம் வரை)
ஆ) இடைமட்டமேகங்கள் (Middle clouds) (2.5-6 கிமீ உயரம் வரை)
இ கீழ்மட்டமேகங்கள் (Low clouds) (புவியின் மேற்பரப்பிலிருந்து 25 கி.மீ. உயரம் வரை)
மேகங்கள் அதன் வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்படுகின்றன.
அ) மேல்மட்ட மேகங்கள்:
கீற்று மேகங்கள் (Cirrus):
(i) வளிமண்டலத்தில் 8000 முதல் 12000 மீட்டர் உயரத்தில் மெல்லிய, வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் கீற்று மேகங்கள் எனப்படுகின்றன.
(ii) இது முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும். எனவே, இம்மேகங்கள் மழைப்பொழிவை தருவதில்லை.
கீற்றுத் திரள் மேகங்கள்(Cirro Cumulus):
கீற்றுத் திரள் மேகங்கள் வெண்மையான திட்டுக்களாகவோ, விரிப்பு போன்றோ, அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும். இவை பனிப்படிகங்களால் உண்டானவை ஆகும்.
கீற்றுப்படை மேகங்கள்(Cirro Stratus):
கீற்றுப்படை மேகங்கள் மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும். இது மிகச்சிறிய பனித்துகள்களை கொண்ட மேகமாகும்.
ஆ) இடைமட்ட மேகங்கள் (Middle Clouds):
இடைப்பட்ட படைமேகங்கள் (Alto Status):
சாம்பல் அல்லது நீல நிறத்தில் சீராக மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் இடைப்பட்ட படை மேகங்களாகும். இவை உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்டிருக்கும். இடைப்பட்ட திரள்மேகங்கள் ( Alto Cumulus):
தனித்தனியாக உள்ள மேகத்திரள்கள் ஒன்றுடனொன்று இணைந்து பல்வேறு வடிவங்களில் காணப்படும். இவை அலைத்திரள் அல்லது இணைக்கற்றைகள் போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும் ஆகையினால் இதனை 'செம்மறியாட்டுமேகங்கள்' (Sheep Clouds), அல்லது 'கம்பளிக்கற்றைமேகங்கள்' (Wool Pack Clouds) என்று அழைக்கப்படுகிறது.
கார்படை மேகங்கள்(Nimbo Stratus):
புவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கார்படை மேகங்கள் ஆகும். இவை மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடையது.
இ) கீழ்மட்ட மேகங்கள் (Low Clouds):
படைதிறல் மேகங்கள் (Strato Cumulus):
(i) சாம்பல் மற்றும் வெள்ளை நிற வட்டத்திட்டுக்கள் 2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரத்தில் சாம்பல் மற்றும் வெண்மை நிறத்தில் வட்டத்திட்டுகளாக காணப்படும். தாழ்மேகங்கள் 'படைத்திரள்மேகங்கள்' எனப்படுகின்றன.
(ii) பொதுவாக இம்மேகங்கள் தோன்றும்போது அப்பகுதியில் தெளிவான வானிலை காணப்படும்.
படைமேகங்கள் (Stratus):
மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் படைமேகங்கள் எனப்படும். இவை மழை அல்லது பனிப்பொழிவைத் தரும்.
திரள் மேகங்கள் (Cumulus):
தட்டையான அடிபாகமும், குவிமாடம் போன்ற மேல் தோற்றமும் கொண்டு 'காலிபிளவர்' போன்ற வடிவத்துடனும் காணப்படும். இது தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகமாகும்.
கார்திரள் மேகங்கள் (Cumulo - Nimbus):
(i) மிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன். இடியுடன் கூடிய மழைதரும் மேகங்கள் கார்திரள் மேகங்கள் எனப்படும்.
(ii) இவை பொதுவாக கனமழையையும் அதிக பனிப்பொழிவையும் சில நேரங்களில் கல்மாரி மழை மற்றும் சுழற்காற்றுடன் கூடிய மழையையும் தருகின்றன.
44.
இந்தியாவில் மக்களாட்சி:
1. இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடாகும்.
2. இந்தியாவின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்ட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது.
3. இது நாட்டிற்குத் தேவையான சட்டங்களை உருவாக்குகிறது.
4. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும். ஒப்புதல் அளிப்பதும் இந்தியாவிலுள்ள நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கியக் கூறுகளாகும்.
5. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும்.
6. இந்தியாவில் மக்களாட்சி ஐந்து முக்கியக் கெள்கைகளின் அடிப்படையில் இயங்குகிறது.
7. அவை இறையாண்மை, சமதர்மம், மதச் சார்பின்மை, மக்களாட்சி. மற்றும் குடியரசு.
8. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறான்.
9. சாதி, சமயம், இனம், பால், கல்வித்தகுதி என எவ்வித பாரபட்சமும் இன்றி சமமான வாக்குரிமையைப் பெற்றுள்ளனர்.
45.
அ) ஹரோகிளிபிக்ஸ்:
(i) எகிப்தியர்கள் தமது எழுத்து முறைக்காகப் புகழ்பெற்றவர்கள். இவர்களது எழுத்து ஹரோகிளிபிக் என்று அழைக்கப்படுகிறது.
(ii) இந்த எழுத்து வகை நினைவுச்சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் பயன்படுத்தப்பட்டது.
(iii) பொதுவான தகவல் தொடர்புக்கு ஹெரிடிக் எழுத்து பயன்படுத்தப்பட்டது. இது பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவமாகும்.
(iv) இது சுமார் கி.மு.(பொ.ஆ.மு) 3000ல் உருவாக்கப்பட்டது. இந்த எழுத்தைப் பயன்படுத்தி ஏராளமான புத்தகங்களும் பிரதிகளும் எழுதப்பட்டன.
ஆ) க்யூனிபார்ம்:
(i) சுமேரிய எழுத்து முறை கியூனிபார்ம் என்று அழைக்கப்படுகிறது.
(ii)எழுத்துகள் ஆப்பு வடிவில் இருப்பதால், இப்பெயர் இடப்பட்டது.
(iii) கி.மு.(பொ.ஆ.மு) காலகட்டத்தில் உருவான இம்முறை, உலகின் பழமையான எழுத்து முறைகளில் ஒன்றாகும்.
(iv) வணிகப் பரிமாற்றங்களுக்கும்,கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கும் இந்த எழுத்து முறையைச் சுமேரியர்கள் பயன்படுத்தினார்கள்.
(v) இந்த எழுத்துகள் எழுதப்பட்ட சுட்ட களிமன் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.
46.
சமண சமயம்:
(1) சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமானார் ஆவார்.
(ii) இவர் மூன்று ரத்தினம் எனப்படும் நல்லறிவு, நன்னம்பிக்கை மற்றும் நன்னடத்தையை போதித்தார்.
(iii) அகிம்சை மற்றும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தாமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) மகாவீரர் சாதிமுறையை ஏற்கவில்லை அனைத்து மதமும் சமம் என்றார்.
(vi) சமண சமயத்தின் இரு பிரிவுகள்
(i) திகம்பரர்கள் (திசையையே ஆடையாக உடுத்தியவர்கள்)
(ii) சுவேதாம்பரர்கள் (வெண்ணிற உடை உடுத்தியவர்கள்)
(vii) சமணர்கள் தங்கள் கொள்கைகளை வட்டார மொழிகளிலே போதித்தனர்.
(viii) சந்திரகுப்தர், மகேந்திரவர்ம பல்லவன் சமண சமயத்தை தழுவியவர்கள்.
புத்த சமயம்:
(i) புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர்.
(ii) இவரின் எண் வழிப்பாதை நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன் முயற்சி, நற்சிந்தனை மற்றும் நல்ல தியானம் ஆகும்.
(iii) அன்பை அகிம்சை வழியில் எல்லா உயிரினங்களும் வெளிப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) சாதிமுறையை ஏற்கவில்லை.
(vi) புத்த சமயம் மஹாயானம் மற்றும் ஹீனயானம் என்று இரு பிரிவுகளாக பிரிந்தது.
(vii) புத்தர், மக்கள் பேசும் பிராகிருத மொழியில் தனது போதனைகளை போதித்தார்.
(viii) அசோகர், கனிஷ்கர் புத்த சமயத்தை தழுவியவர்கள்.
47.
வானிலைச் சிதைவு:
வளிமண்டல நிகழ்வுகளேடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும் அழிதலுக்கும் உட்படுகின்றன. இச்செயல்பாடுகளையே வானிலைச்சிதைவு என அழைக்கிறோம்.
வானிலைச் சிதைவு மூன்று வகைப்படும்.
அ) இயற் சிதைவு
ஆ) வேதியியல் சிதைவு
இ உயிரினச் சிதைவு
அ) இயற் சிதைவு:
(i) இயற் சக்திகளால் பாறைகள் வேதியியல் மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற் சிதைவு எனப்படுகிறது.
(ii) பகல் நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன. இரவு நேரத்தில் அதிகக் குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன.
(iii) இத்தொடர்ச்சியான நிகழ்வின் காரணமாக பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன.
(iv) பாறை உரிதல், பாறைப் பிரிந்துடைதல் மற்றும் சிறுத்துகள்களாக சிதைவுறுதல் ஆகியன இயற் சிதைவின் வகைகளாகும்.
ஆ) வேதியியல் சிதைவு:
(i) பாறைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதலே வேதியியல் சிதைவு எனப்படுகிறது.
(ii) அதிக வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட நில நடுக்கோட்டுப் பகுதிகள், வெப்பமண்டலப்
பகுதிகள் மற்றும் மிதவெப்பமண்டல பகுதிகளில் வேதியியல் சிதைவுறுதல் அதிகமாக
நடைபெறுகிறது.
(iii) ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆகிய செயல்பாடுகளினால் வேதியியல் சிதைவு ஏற்படுகிறது.
(iv) ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் வேதியியல் சிதைவறுதலின் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.
இ) உயிரினச் சிதைவு:
(i) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.
(ii) மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.
48.
புவி அமைப்பு: புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம், கருவம் என மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. புவிமேலோடு (Crust):
(i) நாம் வாழும் புவியின் மேல் அடுக்கை புவிமேலோடு என்கிறோம்.
(ii) இது 5 முதல் 30 கி.மீ வரை பரவியுள்ளது.
(iii) புவிமேலோடு திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது.
(iv) கடலடி தளத்தை (Ocean Floor) விட கண்டப் பகுதியில் உள்ள புவி மேலோடானது அதிக தடிமன் உடையது.
(v) புவிமேலோடு (1) கண்ட மேலோடு (2) கடலடி மேலோடு என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
(vi) புவிமேலோட்டில் சிலிகா (Si) மற்றும் அலுமினியம் (AI) அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.
2. கவசம் (MANTLE):
(i) புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் எனப்படும்.
(ii) இதன் தடிமன் சுமார் 2900 கி.மீ.
(iii) இவ்வடுக்கில் சிலிகா (Si) மற்றும் மக்னீசியம் (Mg) அதிகமாகக் காணப்படுவதால் இவ்வடுக்கு சிமா (SIMA) என்று அழைக்கப்படுகிறது.
(iv) கவசத்தின் மேற்பகுதியில் உள்ள பாறைகள் திடமாகவும் கீழ்ப்பகுதி உருகியும் காணப்படும்.
(v) புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பு ‘மாக்மா என்று அழைக்கப்படுகிறது.
3) கருவம் (CORE):
(i) புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படுகிறது.
(ii) கருவத்தில் நிக்கலும் ( Ni ) இரும்பும் ( Fe ) அதிகமாகக் காணப்படுவதால் இவ்வடுக்கு நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது.
(iii) கருவம் இரண்டு அடுக்குகளை உடையது உட்கருவம் - திடநிலையிலும் வெளிகருவம் - திரவ நிலையிலும் உள்ளது. (iv) புவியின் கருவத்தில் அதிகமாக இரும்பு காணப்படுவதே புவியீர்ப்பு விசைக்குக் காரணமாகும்.
(iv) புவியின் கருவத்தில் அதிகமாக இரும்பு காணப்படுவதே புவியீர்ப்பு விசைக்குக் காரணமாகும்.
(v) புவி தன் அச்சில் சுழலும்போது திட நிலையில் உள்ள உட்கருவத்தின் மேல், திரவ நிலையில் உள்ள வெளிக்கருவம் சுழலுவதால், காந்தபுலம் உருவாகியது. (vi) காந்த திசைகாட்டும் கருவி செயல்பட இதுவே காரணமாகும்.
49.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
50.
51.
52.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி 'மக்களாட்சி' என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறினார்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards