9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/01/2019
9-Std Mock SA Test
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
2.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
3.
மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
4.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
5.
கான்ஸ்டன்டைனின் முக்கிய பங்களிப்பை சுட்டிக் காட்டுக.
6.
இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
7.
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.
8.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
9.
உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.
10.
டாக்டர் பிஆர்.அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.
11.
குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?
12.
பருத்தி நெசவில் இந்தியர் பெற்றிருந்த இயற்கையான சாதகங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
13.
சவானா - தூந்திரா
14.
உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
15.
உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது
16.
அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
17.
இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.
18.
_________ கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது.
இலக்கியம்
அமைதி
இயற்பியல்
பொருளாதாரம்
19.
கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும் குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 3 சரி
2,3 மற்றும் 4 சரி
1,2 மற்றும் 3 சரி
20.
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி
தூந்திரா
டைகா
பாலைவனம்
பெருங்கடல்கள்
21.
சர்வதேச வணிகத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறை _________
அமெரிக்க டாலர்
பவுண்டு
22.
பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
மாலுமி ஹென்றி
லோபோ கோன்ஸால்வ்ஸ்
பார்த்தலோமியோ டயஸ்
கொலம்பஸ்
23.
தக்காண சுல்தானியங்கள் ____ஆல் கைப்பற்றப்பட்டன.
அலாவுதீன் கில்ஜி
அலாவுதீன் பாமன் ஷா
ஓளரங்கசசீப்
மாலிக்காபூர்
24.
_____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
டய்ம்யாஸ்
சோகன்
பியுஜிவாரா
தொகுகவா
25.
பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.
கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
26.
அ) விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
ஆ) சாளுவ அரச வம்சம் நீண்டகாலம் ஆட்சி செய்தது.
இ) விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானியத்துடன் சுமுகமான உறவுகளைக் கொண்டிருந்தனர்.
ஈ) ரஜபுத்திர அரசர்கள் பாரசீகத்திலிருந்தும் அராபியாவிலிருந்தும் குடிபெயர்பவர்களை ஈர்த்தன.
27.
(i) பட்டு வழித்தடம் ஹன் வம்ச ஆட்சியின்போது மூடப்பட்டது.
(ii) வேளாண் குடிமக்களின் எழுச்சி, ஏதேனிய குடியரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
(iii) விர்ஜில் எழுதிய 'ஆனெய்ட்' ரோம ஏகாதிபத்தியத்தைப் புகழ்வதாய் அமைந்தது.
(iv) ஸ்பார்ட்டகஸ், ஜூலியஸ் சிஸரைக் கொன்றார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iv) சரி
ஈ) (iii) சரி
28.
அதிக மழை
29.
உயர் ஓதம்
30.
கிரேட் பேரியர் ரீப்
31.
மரியானா அகழி
32.
ரியால்
33.
உப்பு
34.
ஏ.டி.எம்
35.
நாணய சுழற்சி
1.
1. நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
2. ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு நாகரிகங்களுக்கிடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
3. இவ்வாறு பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதில், பண்டமாற்றுப் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதில் பிரச்சனைகள் உருவாகின.
4. இப்பிரச்சனைகளுக்கு விடை காண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.
5. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் எனலாம்.
2.
(i) வெப்ப மண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
(ii)வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி.
(iii)பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி.
(iv)மிதவெப்பமண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி.
(v) தூந்திரப் பல்லுயிர்த்தொகுதி.
3.
(i) மறுமலர்ச்சியின் மிகமுக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு என்பது மனித நேயம் என்ற கருத்தாகும்,
(ii) தனிநபர் வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசிய வாதம் ஆகியவற்றை நோக்கிய ஒரு திட்டவட்டமான நகர்வை அது அடையாளப்படுத்தியது.
(iii) வட்டார மொழியில் எழுதுவது என்பது வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது.
(iv) திருச்சபையின் உலகியல் ரீதியான, ஊழல் மலிந்த நடைமுறைகளை விமர்சிப்பதில் மறுமலர்ச்சி ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியது,
(v) புதிய நிலவழிப்பாதைகளின் கண்டுபிடிப்பிலும் உலக வரைபடத்தை மாற்றியமைப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தது.
(vi) சாகசங்களுக்கான உத்வேகமும் அறிவுக்கான தாகமும் நெடிய கடற்பயணங்களை மேற்கொள்வதற்கு உந்துதலாக அமைந்தது
4.
(i) ஹன் பேரரசு மீண்டும் ஒருமுறை பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள், முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
(ii) வடபகுதியில் பண்பாட்டில் பின் தங்கிய ஆட்சியாளர்களின் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல். மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும் செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
5.
(i) ரோமானியப் பேரரசர்களில் ஒருவரான கான்ஸ்டன்டைன் கிறித்தவராக மாறினார்.
(ii) இதனால் கிறித்தவம் ரோமானியப் பேரரசின் அரசு மதமாயிற்று.
6.
திருச்சபையானது படிப்பறிவில்லா தனது உறுப்பினர்கள் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.
திருச்சபையிலிருந்து விலக்கிவைப்பது, மதவிலக்கு செய்வது எனும் இரண்டு கருவிகளைத் திருச்சபை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.
7.
1. பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது.
2. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
3. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
4. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது. 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது.
5. இது 1949 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது. அச்சடித்த பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது.
6. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
8.
| S.No | அடிப்படை உரிமைகள் | வாழ்க்கை அனுபவம் (சொந்த அனுபவத்தை எழுதவும்) |
| 1. | சமத்துவ உரிமை | நான் வாழும் இடத்தில் முழு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன். |
| 2. | சுதந்திர உரிமை | நான் மதுரையில் பிறந்தேன். இப்பொழுது சேலத்தில் வசிக்கிறேன். |
| 3. | சுரண்டனுக்கு எதிரான உரிமை | சிற்றுண்டி சாலை நடத்தும் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அவர் 14 வயது உடைய பையனுக்கோ பெண்ணுக்கோ வேலை கொடுத்தால் நான் சண்டையிடுவேன். |
| 4. | சமயம் மற்றும் மதத்ச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை |
நாங்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். ஆனாலும் நாங்கள் புனித ஆலயம், குருத்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்கிறோம். |
| 5. | சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமை | நான் இப்பொழுது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். வெளிநாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவோடும் இலட்சியத்தோடும் உள்ளேன். |
| 6. | அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை | எதிர்காலத்தில் நான் எனது தங்கை யாழினிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். |
9.
ரோமானிய மரபின்படி கி.மு. 509ல் எட்ரஸ்கன்கள் அகற்றப்பட்ட பின்னர் ரோமக் குடியரசை நிர்வகித்தவர்கள் பாட்ரீசியன் என்றழைக்கப்பட்ட செல்வந்த நிலப் பிரபுக்களாவர். செனட்டர்களும், கான்சல்களும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாதாரர். ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். பணம் படைத்தவர்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சி அதிகம் நடந்தன. ரோமானியர் ஆட்சி காலத்தில் அதிக அளவில் ஆடம்பர பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்த்திசை நாடுகளிலுருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்த வெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள், சந்தைகள், பெரிய நகரங்கள் ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்டன. அகஸ்டஸ்கி.மு 27ல் அரசரானார். அவர் தன்னைப் பேராசன் என அழைத்துக் கொண்டார். பணம் படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். சண்டைக்காட்சி வீரர்களை மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்ற வரையிலான கட்டாயச் சண்டைகளை மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்.
அகஸ்டஸில் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி என்பவர் அறிவியல் கலைச் கலைஞ்சயத்தை எழுதினார். அதனை அவர் "இயற்கை வரலாறு" என அழைத்தார். செனிக்கா என்பவர் அறிவியல் தொடர்பான களைக் களஞ்சியத்தை உருவாக்கினார். அவர் தன்னுடைய "ஓட்ஸ்" என்னும் நூலில் ஹேரெஸ், எப்பியூக்கியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்க வேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன் வாய்த்த கருத்துகளையும் இணைத்து புதிய தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு சிறந்த உரைநடையாளர் ஆவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவர். வெர்ஜில் எழுதிய ஏனெயிட் ரோமானிய ஏகாதிபதியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலங்கியை வளர்ச்சி அடைந்தது. மார்க்ஸ் அரிலியஸ் ஒரு தத்துவ அறிஞர் ஆவர். சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அமைத்து ஒரு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேராசர் இவரே ஆவர்.
10.
1. தொழிற்சாலையில் வேலைநேரம் குறைப்பு.
2. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
11.
ஐ.நா. சபை 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்று கொண்டது.
1. வாழ்வதற்கான உரிமை
2. குடும்பச் சுழலுக்கான உரிமை
3. கல்விக்கான உரிமை
4. சமூகப் பாதுகாப்பு உரிமை
5. பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
6. விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை
7. குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டளுக்கெதிரான உரிமை
12.
(i)பருத்தி இழை இரண்டு இயற்கையான சாதகங்களைப் பெற்றிருந்தது.
(ii) பெரும்பாலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பருத்தி பயிரிடப்பட்டதால், அடிப்படையான மூலப் பொருள் எளிதாகக் கிடைத்தது.
(iii) இரண்டாவதாக தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி பருத்தி இழைகளின் மேல் நிரந்தரமாக வர்ணம் ஏற்றும் தொழில்நுட்பம் இந்தியர்களுக்கு ஆரம்ப காலங்களிலேயே தெரிந்திருந்தது.
13.
| சவானா | தூந்திரா |
| சவானா பல்லுயிர்த் தொகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகின்றன. |
தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி ஆசியா, கனடா, ஐரோப்பா இவற்றின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ஆர்டிக். அண்டார்டிகா ஆகிய தொகுதியின் கீழ் வருகின்றன. |
| இங்கு பொதுவாக வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதோடு மிதமான மழைப்பொழிவையும் பெறுகிறது. எனவே இங்கு வளரும் புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் காணப்படுகின்றன. |
இங்கு குளிர்காலம் நீண்ட கடுங் குளிரையும். கோடை காலம் மிதமானகுளிரையும் கொண்டிருக்கும் இங்கு காணப்படும் மிகக் குறைந்த வெப்பநிலையின் காரணமாக குறுகியகால பருவத்தாவரங்கள் மட்டுமே இங்கு காணப்படும். |
| இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் கால்நடை மேய்த்தல் ஆகும். |
இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியனவாகும். |
14.
| உயர் ஓதம் | தாழ் ஓதம் |
| புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன. இவ்வுயரமான அலைகள் உயர் ஓதங்கள் எனப்படுகின்றன. | புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன. இவ்வுயரம் குறைவான அலைகள், தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன. |
15.
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இது தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்றச் சூழ்நிலைக் கொண்டுள்ளது.
16.
வங்காள விரிகுடாவில் அரபிக்கடலைக் காட்டிலும் நதிகள் அதிகளவில் கலக்கின்றன. அக்கடலில் கலக்கும் ஆறுகள் மூலம் அதிகளவு உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
17.
வெப்பமடைதலும், குளிர்தலும் நிலத்தைவிட கடலில் மெதுவாக நடைபெறும். வெப்பமண்டலப் பகுதிகளில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுகிறது. உவர்ப்பியத்தின் அளவு வெப்ப மண்டலப் பகுதியில் அதிகமாகவும், நிலக்கோடு மற்றும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன.
18.
(b)
அமைதி
19.
(d)
1,2 மற்றும் 3 சரி
20.
(a)
தூந்திரா
21.
(a)
அமெரிக்க டாலர்
22.
(b)
லோபோ கோன்ஸால்வ்ஸ்
23.
(c)
ஓளரங்கசசீப்
24.
(a)
டய்ம்யாஸ்
25.
(c)
ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
26.
அ)விஜயநகர அரசு நிறுவப்பட்டது, தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.
27.
ஈ) (iii) சரி
28.
கடலில் உவர்ப்பியம் குறைவு
29.
அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்
30.
ஆஸ்திரேலியா
31.
பசிபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி
32.
சவுதி அரேபியா
33.
பணத்தின் மாற்று
34.
தானியங்கி இயந்திரம்
35.
85%
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards