9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/01/2019
3rd Term Important Five Mark Questions
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
புவன் (BHUVAN), அறிவியல் அறிஞர்கள், கொள்கை வகுப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக அதிக அளவில் பயன்படுகிறது என்பதை நியாயப்படுத்துக.
2.
உலக அமைவிடத் தொகுதியின்(GPS) பயங்களை விவரி?
3.
திசைகள்-தகுந்த படம் வரைந்து விளக்குக.
4.
நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.
5.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
6.
மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
7.
2015 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்க.
8.
தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக்க.
9.
இடப்பெயர்வின் முறைகளைப் பற்றி கலந்துரையாடுக;
10.
இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?
11.
தமிழகத்தில் விளையும் பயிர்களைப் பட்டியலிடுக.
12.
வேளாண் நீர் ஆதாரம் பற்றி ஆய்வு செய்க.
13.
வேளாண்மைக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
14.
தமிழகத்தின் நீர் ஆதாரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
15.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.
16.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
17.
உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்கள் மற்றும் சவால்கள் யாவை?
18.
1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?
19.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
20.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.
21.
அதிபர் மக்களாட்சி முறை பற்றிக் குறிப்பு வரைக. மேலும் அதிபர் மக்களாட்சி முறைக்கும் நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கும் உள்ள வேறுபாட்டினை எழுதுக.
22.
ஒற்றையாட்சி முறையின் நிறைகளை விவரி.
23.
1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.
24.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
25.
நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.
26.
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
1. ஒரு பெருநகரம்.
2. சதுர கி.மீ.-ரில் 7857 மக்கள் வாழும் ஒரு மாவட்டம்.
3. மன்னார் வளைகுடா.
4.பாக் நீர்ச் சந்தி.
27.
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
3. பாக் வளைகுடா.
4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
7. ஹாவாங்கோ ஆறு.
28.
நிலநடுக்கத்தின்போது கண்ணாடிச் சில்லுகளுடன் கூடிய கட்டடங்களிலிருந்து விலகியிருக்கவேண்டும். ஏன் ?
29.
நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?
30.
நிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்?
31.
நிலநடுக்கத்தின்போது மேசைக்கு அடியில் அமர்ந்து ஒரு கையால் தலையை மூடிக்கொண்டு மற்றோரு கையால் மேசையின் காலைப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது என்ன?
32.
உங்களை நிலவரைபடவியலாளராக (cartographer) நினைத்துக் கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக.
33.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை உன்னால் கற்பனை செய்ய இயலுமா?
1.
புவன்:
1. புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'புவி' என்று பொருள்.
2. இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தினால் (ISRO) 2009 ஆம் ஆண்டு இலவச இணையதளம் கணினி சார்ந்த பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.
3. இதன் மூலம் இந்திய தொலைநுண்ணுணர்வு செயற்கைக்கோளானது சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் பதிமங்களை ஆராய இயலும்.
4. இந்த செயற்கைக் கோள் படங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஏழு செயற்கைக்கோள்களின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் அடங்கும்.
5. புவன் மூலம் ஒருவர் விரும்பிய இடங்களையோ அல்லது உலகின் எந்தப்பகுதியையோ அட்ச. தீர்க்கப் பரவலைக் கொண்டு ஆராய்ந்து அறியலாம்.
புவனின் நன்மைகள்:
1. புவன் தனது முப்பரிமாண அமைவு மூலம், புவி உண்மையாகவே அண்டவெளியில் சுழல்வதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.
2. மாணவர்கள், அறிவியல் மற்றும் பல்வேறு இடங்களின் வரலாறு போன்ற பலவகையான பாடங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
3. இயற்கை வளங்கள். பேரிடர்கள் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவிப்பதில் மிகவும் உறுதுணையாக உள்ளது.
4. ஆட்சியாளர்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் உதவுகிறது.
2.
1. கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள். புல்டோசர்கள். கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியியங்கி பணபரிமாற்றக் கருவிகள் (ATM) என அனைத்திலும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுகிறது.
2. உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை (தூரம். வழி மற்றும் திசை) மிகத் துல்லியமாகத் தருவதாகும்.
3. இராணுவ போர்த்தேடல்கள் மற்றும் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது.
4. நம்பிக்கையான சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளது.
5. விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகால தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
6. வானிலை முன்னறிவிப்பு. நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியன உலக அமைவிட கண்டறியும் தொகுதிகள் உதவியுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.
3.
திசைகள் :
1. பொதுவாக வரைபடங்கள் வடதிசையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றன.
2. ஒரு நிலவரைபடத்தில் வடக்குத்திசை எப்போதும் புவியின் வடதுருவத்தை நோக்கியே உள்ளது.
3. நீ வடதுருவத்தைப் பார்த்து நின்றால் உனது வலக்கை கிழக்குத் திசையையும், இடக்கை மேற்கு திசையையும் உன் பின்புறம் தெற்குத் திசையையும் காட்டும்.
4. இவை அடிப்படைத் திசைகளாகும்.
5. பொதுவாக நிலவரைபடத்தின் மீது காணப்படும் அம்புமுனை வடக்குத் திசையைக் குறிப்பிடும்.
6. அடிப்படைத் திசைகளை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் வாக்கியம்.
4.
அளவை:
1. அளவை என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும். புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூர விகிதம் ஆகும்.
2. அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப்புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும்
3. அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன.
வகைகள்:
1. சொல்லளவை முறை
2. பிரதிபின்ன முறை
3. கோட்டளவை முறை
சொல்லளவை முறை:
1. நில வரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும்.
2. அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டருக்கு சமம்.
3. இது 1 செ.மீ = 10 கி.மீ என்று குறிக்கப்படுகிறது.
பிரதி பின்ன முறை:
1. இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்யைான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும்.
2. இது வழக்கமாக R.F என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
3. இது 1/100000 அல்லது 1:100000 என்று குறிப்பிடப்படுகிறது.
4. இதன் பொருள். நில வரைபடத்தில் ஓர் அலகு புவியில் 1,00,000 அலகுகளைக் குறிக்கிறது.
5. இந்த அலகு ஓர் அங்குலம் அல்லது ஒரு சென்டிமீட்டர் அல்லது வேறு எந்த கோட்டளவை அலகாகவும் இருக்கலாம்.
6. எனவே, விகிதம் அல்லது பின்னமுறையில் அளவை என்பது.
கோட்டளவை முறை:
1. நில வரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சமப்பிரிவுகளாக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதைக் கணக்கிடுவது நேர்கோட்டு அல்லது கோட்டளவை முறையாகும்.
2. இந்த அளவை முறையின் மூலம் நில வரைபடத்திலுள்ள தூரத்தை நேரடியாக அளக்க உதவுகிறது.
5.
கிராமக் குடியிருப்புகள்:
முதன்மைத் தொழில்களான வேளாண்மை, வனத்தொழில், கனிமத் தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகிறது.
இவை நிலைத்த நிரந்தரக் குடியிருப்புகளாகும்.
இவைகளின் தனித்தன்மை அதைச் சுற்றியிருக்கும் பரந்த பசுமையும் மாசற்ற சுற்றுச் சூழலும் ஆகும்.
கிராமக் குடியிருப்பு வகைகள்:
1. செவ்வகவடிவக் குடியிருப்புகள்
2. நேர்கோட்டுக் குடியிருப்புகள்
3. வட்டவடிவ அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள்
4. நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள்
6. T வடிவ. Y வடிவ, சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவ குடியிருப்புகள்
7. மூலக்கரு வடிவக் குடியிருப்புகள்
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள்:
சம வெளிப் பகுதிகளிலும் , பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும்.
இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் வெல்லும்.
2. நேர்க்கோட்டு குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப்பாதை ,ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.
3. வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள் குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன .
4. நட்சத்திர வகை குடியிருப்புகள்:
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது கப்பியிடப்படாத சாலை அமைப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன,
இவை நட்சத்திர வடிவத்தில் எல்லா திசைகளிலும் பரவிக் காணப்படும்.
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.
6. T வடிவ Y வடிவ சிலுவை வடிவ குறுக்கு வடிவக் குடியிருப்புகள் :
T வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும்.
Y வடிவக் குடியிருப்புகள் இரண்டு சாலைகள் காணப்படுகிறது.
குறுக்கு வடிவக் குடியிருப்புகள் நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படுகின்றன.
7. முலக்கரு வடிவக் குடியிருப்புகள் :
இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிய கூடியதாகவும் இருக்கும்.
கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ ஆழ்ந்து மசூதி , கோவில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள அமைந்திருக்கும்.
6.
மக்கள் தொகைப் பரவல்:
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகைப் பரவலாகும்.
உலகின் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.
காரணிகள்:
1. இயற்கை காரணிகள்
2. வரலாற்றுக் காரணிகள்'
3. பொருளாதாரக் காரணிகள்
இயற்கைக் காரணிகள்:
மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள். கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான இயற்கைக் காரணிகளாகும்.
வரலாற்றுக் காரணிகள்:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள். போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.
பொருளாதாரக் காரணிகள்:
கல்விக் கூடங்கள். வேலை வாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள். வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவலுக்கான பொருளாதாரக் காரணிகளாகும்.
7.
கல்வித்தகுதி:
1. பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் - 30%
2. 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் - 10%
3. தொழில் பயிற்சி பெற்றவர்கள் - 15%
4. பட்டப் படிப்பு படித்தவர்கள் - 11%
5. தொழிற்கல்வி முடித்தவர்கள் - 12%
6. முதுகலை பட்டதாரிகள் - 11%
தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதாரணமாகச் செய்யக் கூடிய வேலைகளிலும், நடுத்தரமான வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
8.
1. பிறப்பு இறப்பு மற்றும் இடம் பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
2. பெரும்பாலும் அனைவரும் அதிகமான நேரங்களில் ஓர் இடம் விட்டு இன்னொரு இடம் நகர்ந்து கொண்டே இருப்பதால் இடம் பெயர்தலைக் கணக்கிடுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
3. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.2 கோடியாகும்.
4. அவர்களில் 3.13 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
5. பொதுவாக இடப்பெயர்வு நகரப் பகுதிகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.
6. ஆனால் தமிழ்நாட்டில் மக்களின் நகர்வு நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
7. மேலும் தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்களில் மட்டுமே இடப்பெயர்வு மிக அதிக அளவு காணப்படுகிறது.
8. திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வுகளுமே பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
9. வியாபாரம், வணிகம், வேலை. கல்வி போன்ற காரணங்களுக்காகத் தமிழர்கள் பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
10. ஏழைகள் வாழ்வாதாரத்திற்காகவும். வசதி வாய்ப்பு உடைய மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இடம் பெயர்கின்றனர்.
11. அண்மைக் காலங்களில் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.
12. தமிழ்நாட்டின் மொத்த இடப் பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கும் 35% பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம் பெயர்ந்துள்ளனர்.
13. அதிக அளவிலான இடம்பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினை பிரதிபலிக்கிறது.
14. எனவே ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித் திட்டங்கள் அதிக அளவிலான இடம் பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
9.
மணி : மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுவது ஏன்?
ரவி : பிறப்பு, இறப்பு மற்றும் இடம் பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
மணி : இடப்பெயர்வு என்றால் என்ன?
ரவி : ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மனிதர்கள். விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெயரும் நிகழ்வு இடப்பெயர்வு ஆகும்.
மணி : மனிதர்கள் ஏன் இடம் பெயர்கின்றனர்?
ரவி : மனிதர்கள் வேலை. கல்வி, திருமண வாழ்வு மற்றும் பல காரணங்களுக்காக பெயர்கின்றனர்.
மணி : இடப்பெயர்வு எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
ரவி : பிறப்பிடம் அடிப்படையிலும் வாழிடம் அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.
மணி : தமிழ்நாட்டின் இடப்பெயர்வு பற்றி சற்று விளக்கமாக கூறுங்களேன்?
ரவி : 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடியாகும்
அவர்களில் 3.13 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்களாவர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களைவிட மக்களின் நகர்வு கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
பெண்களில் 53% என்றும் ஆண்களில் 23% என்றும் கணக்கிடப்பட்டுள்ளன.
மணி : பெண்களின் இடப்பெயர்வு அதிகமாக இருக்கக் காரணம் என்ன?
ரவி : திருமணமும் திருமணம் சார்ந்ததும் பெண்களின் இடப்பெயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
மணி : தமிழ்நாட்டில் எங்கு அதிக இடப்பெயர்வு நிகழ்கின்றது?
ரவி : சென்னை மாவட்டம்.
மணி : வெளிநாடுகளில் வாழ்வோர் பற்றி கூறுங்களேன்?
ரவி : தமிழ்நாட்டின் மொத்த இடப் பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
அவர்களில் 20% சிங்கப்பூரிலும் 18% ஐக்கிய அரபு எமிரேட்டிலும், 16% சவுதி அரேபியா மற்றும் 13% பேர் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் குடிபெயர்ந்துள்ளனர்.
மேலும் மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா. குவைத், கத்தார். ஓமன் ஆகிய நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர்.
மணி : உலகில் எந்த இரு நாடுகளுக்கிடையே இடப்பெயர்வு அதிகம் நிகழ்கிறது?
ரவி : மெக்ஸிகோ அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
மணி : தமிழ்நாட்டின் இடப்பெயர்தல் அளவை எவ்வாறு குறைக்கலாம்?
ரவி : ஏழ்மையை அகற்றுதல்.
வளர்ச்சித் திட்டங்கள்.
மற்றும் பாதுகாப்பு அளித்தல் மூலம் இடம் பெயர்தலைக் குறைக்கலாம்.
10.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இடம் பெயர்தல் சார்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இடம் பெயர்தலின் அளவை குறைத்தல்:
1. அதிக அளவிலான இடம் பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினைப் பிரதிபலிக்கிறது.
2. எனவே கிராமப்புறங்களின் மீது அரசின் கவனம் இருத்தல் வேண்டும்.
3. ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித் திட்டங்கள் அதிக அளவிலான இடம் பெயர்தலைக் குறைப்பதற்கு உதவியாக அமையும்.
இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல்:
1. பெரு நகரங்கள் நோக்கி குவியும் இடம் பெயர்தலைத் திசைமாற்றி அமைத்திடும் கொள்கைகள் நல்ல முடிவுகளாகும்.
2. நிலப்பரப்பு சார்ந்த குடிபெயர்தலால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்ப்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமான உத்திகளாக அமைகின்றன.
11.
1. நெல்
2. மக்காச் சோளம்
3. சோளம்
4. கம்பு
5. கேழ்வரகு
6. வரகு
7. தென்னை
8. சாமை
9. கரும்பு
10. வாழை
11. பருத்தி
12. வேர்க்கடலை
13. உளுந்து
14. துவரை
15. பாசிப்பயிறு
16. காப்பி
17. தேயிலை
12.
1. தமிழகத்தில் வற்றாத நதிகள் இல்லை.
2. தமிழகம் தனது தேவைக்கான நீரை வடகிழக்கு மற்றும் தேன்மேற்குப் பருவ மழைகளிலிருந்து பெறுகிறது.
3. தென்மேற்கு பருவமழைப் பொழிவு அபரிமிதமாக இருந்தால் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலுள்ள கர்நாடக அணைகள் நிரம்பி விட்டால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பெருகும்.
4. தமிழகத்திற்கு பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்கு பருவ மழையாகும்.
5. வடகிழக்குப் பருவமழை நீரை நீர்த்தேக்கங்களிலும், கண்மாய்கள் மற்றும் ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
6. தமிழக வேளாண்மைக்கான நீரை கால்வாய்கள், ஏரிகள், குளங்கள். கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவை வழங்குகின்றன.
7. தமிழக வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
8. இந்த ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
13.
1. தமிழக வேளாண்மை பெரும் அளவிற்கு நிலத்தடி நீரையே நம்பி இருக்கிறது.
2. நிலத்தடி நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்துவது பல இன்னல்களையும் உருவாக்கவல்லது.
3. நிலத்தடியிலிருந்து நீரை எடுக்கும் அளவும் மழைப் பொழிவின் போது நிலத்தடிக்குச் செல்லும் நீரின் அளவும் சமமாக இருந்தால் துன்பமில்லை.
4. மாறாக நிலத்தடி நீரை எடுக்கும் அளவு கூடக்கூட நீர்மட்டம் கீழே செல்லும். ஒன்று நீர் முற்றிலும் வற்றிப் போகலாம் அல்லது பாசனத்திற்கு உதவாத நீராக மாறவும் வாய்ப்புண்டு.
5. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது.
6. நீர் பயன்பாடு அளவைக் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களை இவ்வாரியம் வகைப்படுத்தியுள்ளது.
7. தமிழகத்தில் 139 ஒன்றியங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துகின்றன.
8. 136 ஒன்றியங்களில் மட்டுமே நிலத்தடி நீரின் அளவு குன்றாமலும் தரம் குறையாமலும் உள்ளன.
9. தமிழக வேளாண்மை நிலத்தடி நீரை நம்பியுள்ளதால், அதன் பயன்பாட்டைச் சீர் செய்வது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும்.
14.
1. தமிழகத்திற்குப் பெரும் நீர் ஆதாரமாக இருப்பது வடகிழக்குப் பருவமழையாகும்.
2. வடகிழக்குப் பருவமழை நீரை நீர் தேக்கங்களிலும், கண்மாய்கள் மற்றும் ஏரிகளிலும் தேக்கி வேளாண்மையை மேற்கொள்கின்றனர்.
3. தமிழக வேளாண்மைக்கான நீரை வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் வழங்குகின்றன.
4. தமிழகத்தில் 2,239 கால்வாய்கள், 7,985 சிறு ஏரிகள். 33,142 பெரிய ஏரிகள், 15 இலட்சம் திறந்தவெளி கிணறுகள் மற்றும் 3,54,000 ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
5. தமிழக வேளாண்மை பெருமளவிற்கு நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறது.
6. இந்த நீர் ஆதாரங்களைக் கொண்டே தமிழகத்தில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது.
15.
ஆப்பிரிக்கா காலனியாதல் :
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன.
(ii) ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன.
(iii) 1875க்குப் பின்னர், ஐரோப்பியரின் ஊடுருவலும் குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது.
(iv) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.
(v) இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது.
(vi) 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
(vii) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது.
(viii) மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடாபுடைய பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது.
கனத்து
(ix) காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய இம்மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
(x) பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.
16.
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் :
(i) கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார்.
(ii) இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
(iii) இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார்.
(iv) ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் உருவாக்கப்பட்டனர்.
(v) நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர்.
(vi) விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
(vii) கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது.
(viii) வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.
(ix) ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
(x) இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார், அவரே வரி செலுத்துவார்.
(xi) நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.
xii) நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை ரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது, தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.
xiii) ஆங்கில அரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
xiv) விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.
ஆப்பிரிக்காவில் காலனி அசிங்
17.
1. நமது மக்களாட்சிக்கு உள்ளாட்சி அமைப்புகளே அடிப்படையாகும்.
2. உள்ளாட்சி அமைப்புகளின் அரசமைப்பு நிலை, அவற்றின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியத் தத்தினை அளிக்கிறது.
3. இருப்பினும் அவற்றின் செயல்பாடுகளில் ஒரு சில நெருக்கடிகள் உள்ளன.
சிக்கல்களும் சவால்களும்:
1. உள்ளாட்சி அமைப்புகளின் பணிகள் மற்றும் அதிகாரங்களைப் பற்றிய தெளிவான வரையறையின்மை.
2. நிதி ஒதுக்கீடு மற்றும் தேவைகளின் மதிப்பீடு ஒத்துப்போவதில்லை.
3. உள்ளாட்சி அமைப்புகள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் சாதி, வகுப்பு மற்றும் சமயம் ஆகிய மூன்றும் முக்கியப் பங்காற்றுகின்றன.
4. மக்களாட்சியின் அடிப்படை நிலையிலுள்ள அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்பற்ற நிலை.
18.
1. ஊராட்சி மற்றும் நகராட்சிகள் 'உள்ளாட்சி அமைப்பு' நிறுவனங்களாகச் செயல்படும்.
2. வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் மற்றும் பகுதிக் குழுக்கள் இயங்குகின்றன.
3. வட்டாரம். மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன.
4. சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் இரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
5. நேரடித் தேர்தவின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுதல்.
6. பட்டியல் இனத்தவர் மற்றும் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தல்,
7. பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள் தொகை விகிதாச்சார
8. பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
9. ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம்.
10. ஆட்சி கலைக்கப்பட்டால் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.
19.
இங்கிலாந்து தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் :
(i)18ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
(ii) நூற்பு நெசவுத் தொழில் ஆகியன இங்கிலாந்தில் பெரும் வளர்ச்சியடைந்தன.
(iii) வங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டு கரங்களில் சிக்கிப் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.
(iv) உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து தீர்வை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
(v) இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர். மேலும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை இந்தியச் சந்தைகளில் குவித்தனர்.
(vi) கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்துவிட்டது.
(vii) இந்திய நாடு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது.
(viii) 19ம் நூற்றாண்டில் முதல் கால் பகுதியில் டாக்கா மஸ்லின் துணி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது.
(ix) பிரிட்டன் துணி ஆலைகளில் உற்பத்தியான துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டது.
(x) எனவே இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்கள் ஆயினர்.
20.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கான காரணங்கள் :
i) இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர் 10வயதில் இருந்து ஜவுளி ஆலைகளில் பணியாற்றி ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார்.
(ii) அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றவுடன் இவர் 1789-ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாக குடியேறினார்.
(iii) ரோட்ஸ் தீவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மோசஸ் பிரௌனிடம் வேலைக்கு சேர்ந்து கொண்டதும் அவரது ஆலை 1793இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
(iv) இது அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை ஆகும்.
(v) 1800 வாக்கில், சிலேட்டரின் துணி ஆலையினைக் கண்டு மேலும் பலர் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர்.
(vi) அமெரிக்க அதிபர் ஆண்ட்ரு ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை’ என்று புகழ்ந்தார்.
(vii) ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகு போக்குவரத்தை தொடங்கினார்.
(viii) சாமுவேல் மோர்ஸ் தந்தியைக் கண்டுபிடித்ததும், எலியாஸ் ஹோவே தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
(ix) 1869-ல் கண்டங்களை இணைக்கும் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
(x) இரயில் போக்குவரத்து மக்கள், சரக்கு மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்வதற்கு பயன்பட்டது.
(xi) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்விளக்கு (1879) அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி கண்டுபிடித்தார் (1888). இப்புதிய கண்டுபிடிப்புகள், போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவை அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கு அடிகோலியது.
21.
1. அதிபர் மக்களாட்சி முறை என்பது சட்டமன்றத்திற்கு பொறுப்பில்லாததாகவும் நாடாளுமன்றம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும், நிலைத்த நிர்வாகம் அற்றதாகவும், நிலைத்த நிவாக அமைப்பு உடையதாகவும் இருக்கும்.
2. அதிகாரப் பகிர்வு கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.
3. இவ்வரசு முறை அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா இலங்கை போன்ற நாடுகளில் உள்ளது.
| அதிபர் மக்களாட்சி முறை | நாடாளுமன்ற ஆட்சி முறை |
| 1. குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். | பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார். |
| 2. அதிபரே அதிகாரம் படைத்தவர் | மத்திய சட்டமன்ற அதிகாரம் படைத்தது |
| 3. அதிகாரப் பிரிவினை | அதிகாரப் பிரிவினை மைய்யப்படுத்தாமல் இருப்பது |
| 4. சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள் | தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள் |
| 5. மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார் | அரசின் தலைவர் - குடியரசுத் தலைவர் |
| 6. தனி நபர் தலைமை | கூட்டுத் தலைமை |
| 7. மாகாசபையின் செயல்களுக்கு அதிபர் பொறுப்பை ஏற்கமாட்டார் | கூட்டு மற்றும் தனித்தனியான பொறுப்புகள் |
| 8. பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் | ஐந்து ஆண்டுகள் |
22.
ஒற்றையாட்சி முறை :
ஒற்றை ஆட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
ஒற்றை ஆட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப்படுத்தபடுகின்றன.
1. சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
2. அதிகாரம் மற்றும் பொறுப்புகளுக்கு இடையில் மோதல்கள் இருப்பதில்லை.
3. ஒற்றை ஆட்சிமுறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
4. ஒற்றை ஆட்சிமுறை குறைந்த செலவுடையது
5. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்
6. ஒற்றுமை சீரான சட்டம், கொள்கை மற்றும் நிர்வாகத்தினை உள்ளடக்கியது.
23.
பிரெஞ்சு தத்துவஞானிகளின் பங்களிப்பு :
(i) பிரெஞ்சு தத்துவஞானிகளான வால்டேர், மாண்டெஸ்கியூ, ரூசோ ஆகியோர் பிரான்ஸின் நிலைமைகளை விமர்சித்தனர்.
(ii) வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார்.
(iii) கான்டீட் (Candide) வால்டேரின் புகழ்பெற்ற நூலாகும்.
(iv) அவருடைய புகழ்பெற்ற மேற்கோள்கள் "முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்க முடியும்
(v) வால்டேரின் சமகாலத்தவரும் மகத்தான எழுத்தாளருமான ஜூன் ஜேக்ஸ் ரூசோ ஆவார்.
(vi) அவருடைய அரசியல் கருத்துக்கள் மக்கள் புதிய முடிவுகள் எடுப்பதில் பெரும்பங்கு வகித்தது.
(vii) பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை தயார் செய்ததில் இவரின் முக்கிய பங்கு வகித்தது.
(viii) இவர் எழுதிய நூல் "சமூக ஒப்பந்தம்” (Social Contract) அதில் அவரின் புகழ்பெற்ற கூற்று "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்' என்பதாகும்.
(ix) மாண்டெஸ்கியூவில் 'பாரசீக மடல்கள்', 'சட்டத்தின் சாரம்' என்னும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
(x) இவர் 'அதிகாரப் பிரிவினை' எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
(xi) எந்த ஒரு அரசின் அதனுடைய மூன்று உறுப்புகளான சட்டம் இயற்றுதல், சட்டத்தைச் செயல்படுத்துதல், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகக் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ்வரசில் தனிமனிதச் சுதந்திரம் சிறப்பாக பாதுகாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
24.
(i) 1774இல் குடியேற்ற நாடுகளின் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
(ii) குடியேற்றவாதிகள் விடுதலைப் பெறுவதற்காகப் போரை தொடங்கவில்லை. வரிவிதிப்பும், வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயரின் உரிமைக்கு எதிராக அவர்கள் செயல்பட்டனர்.
(iii) "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது.
(iv) பாஸ்டைன் துறைமுக நிகழ்வுகளால் கலக்கமடைந்த இங்கிலாந்து அரசு 'சகிக்க முடியாத சட்டங்கள்' எனும் சட்டத்தை இயற்றியது.
(v) அதில் இச்சட்டத்தை மீறும் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுவர் என கூறப்பட்டிருந்தது.
(vi) 1774ஆம் ஆண்டு மே மாதம் வெர்ஜீனியா சட்டமன்றத்தில் தாமஸ் ஜெபர்சன் 1774ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் உண்ணாவிரதம் மற்றும் வழிபாட்டுத் தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.
(vii) இதற்கு எதிர்வினையாக ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்தார்.
(viii) அதன் பின்பு உறுப்பினர்கள் கண்டங்களின் மாநாடு நடத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டது. - மற்ற குடியேற்ற உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்தனர்.
(ix) 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் முதல் கண்டங்களின் மாநாடு பிலடெல்பியாவில் கூடியது.
(x) குடியேற்றங்களின் பிரதிநிதிகள் தீர்மானங்களின் மீது வாக்களிக்க மாநாடு ஒப்புக்கொண்டது. அதன் சகிக்க முடியாத சட்டம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(xi) கண்டங்களின் மாநாடு அமெரிக்க மக்களின் உரிமை பிரகடனத்தை ஏற்றது.
25.
அ) 13.067o வடக்கு , 80.238o கிழக்கு
ஆ) மதுரை
இ) கோயமுத்தூர்
ஈ) 8.08o வடக்கு மற்றும் 77.54o கிழக்கு.
26.
27.
28.
கண்ணாடிப் பொருள்கள் உடைந்து சிதறிப் பறந்து விழுந்து உடலின் மீது கடுமையான காயங்களை ஏற்படுத்தும். இதனால் உயிரிழப்பு ஏற்படலாம்.
29.
அறையில் மூலையில் குத்துகாலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
30.
நிலநடுக்கத்கதால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதனால் மின்தூக்கி செயல் இழந்துவிடும். மின்தூக்கி நகரும் பாதை அடைக்கப்பட்டு கதவுகள் இறுக்கமாக மூடிக்கொள்வதால் நம்மால் அங்கிருந்து வெளியேற முடியாது. அதனால் நாம் படிக்கட்டை உபயோகப்படுத்த வேண்டும்.
31.
1. நிலநடுக்கத்தின்போது பொருள்கள் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. கண்ணடி ஜன்னல், கதவுகள், மதில், மின்விளக்குகள் நம் மேலே விழ வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் நாம் மேஜைக்கு அடியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
2. நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அதிர்ச்சியால் நாம் உருண்டோடிய இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மேஜையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
3. பொருட்கள் தலையில் விழுந்து தலைக்காயம் ஏற்படாமல் இருக்க தலையைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
32.
33.
செயற்கைக்கோள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
ஏனென்றால், நமது நில வரைபடத்தின் கூறுகள் இவற்றின் மூலம் தெளிவாக அளவிடப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் உலகளாவிய பயணம் செயற்கை கோள் மூலமே சாத்தியமாகியுள்ளது. உலக அமைவிட கண்டறியும் தொகுதி செயற்கை கோளின் மிக முக்கிய பயன்பாடாகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards