9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II - 2020 (9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Questions II 2020)
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
2.
வாக்குரிமையின் பொருள்
தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
வாக்களிக்கும் உரிமை
பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை
3.
கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
இந்தியா
பிரிட்டன்
கனடா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4.
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
நாடாளுமன்றம்
மக்கள்
அமைச்சர் அவை
குடியரசு தலைவர்
5.
எந்த நாட்டில் மக்களாட்சித் தோன்றியது?
இந்தியா
சுவிட்சர்லாந்து
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஏதென்ஸ்
6.
மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்
மார்க்கோ போலோ
ஃபாஹியான்
மெகஸ்தனிஸ்
செல்யூகஸ்
7.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது
மஹாஜனபதங்கள்
கனசங்கங்கள்
திராவிடம்
தட்சிணபதா
8.
_______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.
அழுத்தம்
காற்று
சூறாவளி
பனி
9.
பருவக்காற்று என்பது ______
நிலவும் காற்று
காலமுறைக் காற்றுகள்
தலக்காற்று
மேற்கண்ட எதுவுமில்லை
10.
_______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்
துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
துருவ உயர் அழுத்த மண்டலம்
11.
_______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
வெளியடுக்கு
அயன அடுக்கு
இடையடுக்கு
மீள் அடுக்கு
12.
வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.
கீழடுக்கு
மீள் அடுக்கு
வெளியடுக்கு
இடையடுக்கு
13.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாபாரிகளையும், குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?
தீபவம்சம்
அர்த்தசாஸ்திரம்
மகாவம்சம்
இண்டிகா
14.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
ஆங்கிலம்
தேவநாகரி
தமிழ்-பிராமி
கிரந்தம்
15.
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?
ஆசியா
தக்காண பீடபூமி
குலு பள்ளத்தாக்கு
மெரினா கடற்கரை
16.
________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன
காற்று
பனியாறு
ஆறு
நிலத்தடி நீர்
17.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்
காற்றடி வண்டல்
பர்கான்
ஹமாடா
மணல் சிற்றலைகள்
18.
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.
பதிவுகளால் நிரப்படுத்தல்
அரிப்பினால் சமப்படுத்துதல்
நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
ஏதுமில்லை
19.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது
வானிலைச் சிதைவு
அரித்தல்
கடத்துதல்
படியவைத்தல்
20.
கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
21.
ஹரப்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை
தங்கம் மற்றும் யானை
குதிரை மற்றும் இரும்பு
ஆடு மற்றும் வெள்ளி
எருது மற்றும் பிளாட்டினம்
22.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும்
மடிப்பு
பிளவு
மலை
புவிஅதிர்வு
23.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ___________ கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
கோண்டுவானா
லொரேசியா
பாந்தலாசா
பாஞ்சியா
24.
புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை _____________ என்று அழைக்கின்றோம்
கருவம்
கவசம்
புவி மேலோடு
உட்கரு
25.
கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை .
26.
வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
பெருங்கற்காலம்
27.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
கொரில்லா
சிம்பன்ஸி
உராங் உட்டான்
பெருங்குரங்கு
28.
கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
29.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.
30.
மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
31.
வளிமண்டல அழுத்தம் எவ்வாறு அளக்கப்படுகிறது?
32.
வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை – விளக்குக
33.
வெப்பத் தலைகீழ் மாற்றம் - சிறுகுறிப்பு வரைக
34.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.
35.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
36.
தமிழ் அரசர்கள் மௌரிய அரசின் அதிகாரத்துக்கு உட்படாமல் இருந்தார்கள் – இந்தக் கூற்றுக்கு உன் விளக்கம் என்ன?
37.
கடல் அலை அரிமேடை என்றால் என்ன?
38.
வானிலைச் சிதைவு – வரையறு.
39.
சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.
40.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.
41.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
42.
நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.
43.
வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக
44.
மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி
45.
ஹரோகிளிபிக்ஸ், க்யூனிபார்ம் – இவற்றை அவற்றின் முக்கியமான கூறுகளுடன் விளக்கு
46.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக
47.
பனியாறு என்றால் என்ன?
48.
புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
49.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
50.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
51.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக
52.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக
53.
இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.
1.
(a)
சமூகச் சமத்துவம்
2.
(c)
வாக்களிக்கும் உரிமை
3.
(d)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4.
(a)
நாடாளுமன்றம்
5.
(a)
இந்தியா
6.
(c)
மெகஸ்தனிஸ்
7.
(a)
மஹாஜனபதங்கள்
8.
(c)
சூறாவளி
9.
(b)
காலமுறைக் காற்றுகள்
10.
(a)
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
11.
(c)
இடையடுக்கு
12.
(a)
கீழடுக்கு
13.
(c)
மகாவம்சம்
14.
(c)
தமிழ்-பிராமி
15.
(b)
தக்காண பீடபூமி
16.
(b)
பனியாறு
17.
(a)
காற்றடி வண்டல்
18.
(c)
நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
19.
(a)
வானிலைச் சிதைவு
20.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை
21.
(b)
குதிரை மற்றும் இரும்பு
22.
(b)
பிளவு
23.
(a)
கோண்டுவானா
24.
(c)
புவி மேலோடு
25.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை .
26.
(c)
புதிய கற்காலம்
27.
(b)
சிம்பன்ஸி
28.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
29.
1. மக்களாட்சி முறையில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுகிறது.
2. குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுகின்றனர்.
3. குடிமக்கள் தனது கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
4. மக்கள் தமக்குரிய தலைமையை தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
30.
காரணம்: இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு படிவுகள் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு மூப்பு நிலையில் அகன்று காணப்படுகிறது.
31.
குறிப்பிட்ட பரப்பளவில் வாயுக்களின் எடை ஏற்படுத்தும் தாக்கமே வளிமண்டல அழுத்தம் எனப்படும். இது பாதரச காற்றழுத்தமானியில் அளக்கப்படுகிறது. இதனை அளக்க பயன்படுத்தும் அலகு 'மில்லிபார்' எனப்படும்.
32.
புவி வெப்பமடைய செய்தலில் பல்வேறு செயல்பாடுகள் உள்ளன. அவை கதிர்வீச்சு (Radiation), வெப்பக் கடத்தல் (Conduction), வெப்பச் சலனம்(Convection) மற்றும் வெப்பக்கிடை அசைவு (Advection) ஆகும்.
33.
ஓர் இடத்தின் உயரத்தை கடல் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம்.ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1°C வெப்பநிலை குறையும். இதனை வெப்பத் தலைகீழ் மாற்றம் (Normal Lapse Rate)என்று அழைக்கின்றோம்.இதனால் உயரமான பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது.
34.
மும்மணிகள் (திரி - ரத்னார் என்று அழைக்கப்படும். சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்
1.நன்னம்பிக்கை
2. நல்லறிவு
3. நன்னடத்தை
நன்னம்பிக்கை : மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்
நல்லறிவு : கடவுள் இல்லை, உலகம் படைத்தவன் இன்றியே இயங்கி வருகிறது. அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
நன்னடத்தை : இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது.
அவையாவன.
1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது.
2. நேர்மையுடன் இருப்பது
3.கருணை
4. உண்மையுடன் இருப்பது
5. பிறருடைய உடைமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது.
35.
(i) கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
ii) ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலை கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
(iii) மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
(iv) தங்கம், வெள்ளி, செம்பு,உள்ளிட்ட உலோகங்கள் இறக்குமதி ஆயின.
36.
தற்காலத்திய ஒடியா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுகள் தமிழகத்திலும் கேரளத்திலும் காணப்படவில்லை. எனவே மௌரியர்களின் மேலாட்சிக்கு உட்படாத சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தமிழக வேந்தர்கள் விளங்கினார்கள். இதை அசோகரின் கல்வெட்டுச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
37.
1. ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு அலை அரிமேடை தோன்றுகிறது.அலை அரிமேடை, பென்ச், திட்டு (Shelf), திடல் (Terrace), சமவெளி (Plain) எனவும் அழைக்கப்படுகின்றன.
38.
வளிமண்டல நிகழ்வோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும்(Disintegration), அழிதலுக்கும்(Decomposition) உட்படுகின்றன.
இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கிறோம்.
39.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனபெருஞ்சுவர் வடக்கிலிருந்து ( மங்கோலியர்களிடமிருந்து ) வரும் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரும் முயற்சியாகும்.குவின் ஷி ஹீவாங் படையெடுப்புகளைத் தடுப்பதற்காக அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார்.
40.
i.பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம் ஹமுராபியின் சட்டத் தொகுப்பாகும்.
ii.குடும்ப உரிமைகள், வணிகம். அடிமை முறை,வரிகள், கூலி போன்ற பல்வேறு வழக்குகள் குறித்து இதில் 282 பிரிவுகள் உள்ளன.
iii. இது பழைய சட்டங்களின் தொகுப்பாகும்.
iv.இது பழிக்கு பழி வாங்கும் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டது.
v."கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
41.
பெருங்கற்கால ஈமச் சின்னங்கள்:
1.டோல்மென் எனப்படும் கற்திட்டை,
2. சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்.
3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்,
4. தாழி.
5. பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்,
6. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
42.
நீயாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டார்கள். குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.
43.
வளிமண்டல அடுக்குகள்:
i) வளிமண்டலம் புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(ii) இவ்வளிமண்டலம் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றது. அவை வளிமண்டல கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு போன்றவை ஆகும்.
அ) வளிமண்டல கீழடுக்கு:
(i) இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும்.
(ii) இவ்வடுக்கு துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ உயர வரையிலும் காணப்படுகிறது.
(iii) இவ்வடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும்.
(iv) இவ்வடுக்கில்தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
ஆ) மீள்அடுக்கு:
(i) கீழடுக்கிற்கு மேல், மீள் அடுக்கு அமைந்துள்ளது.
(ii) இது வளிமண்டலத்தில் 50 கி.மீ. வரை பரவியுள்ளள்ளது.
(iii) இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது 'ஓசோனோஸ்பியர்' என்று அழைக்கப்படுகிறது.
(iv) இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கின்றது. இந்த அடுக்கு ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.
இ) இடையடுக்கு:
(i) இடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம்வரை காணப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை கூடுகின்றது
ii) புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான் புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
(iii) புவியை நோக்கி வரும் விண்கற்கள் இவ்வடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன.
ஈ) வெப்ப அடுக்கு:
(i) இடையடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு, வெப்ப அடுக்கு ஆகும். இது சுமார் 600 கி.மீ உயரம் வரை பரவிக் காணப்படுகிறது.
(ii) வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது 'ஹோமோஸ்பியர் (Homosphere) என அழைக்கப்படுகின்றது.
(iii) ஆனால் வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி 'ஹெட்ரோஸ்பியர்'(heterosphere) என அழைக்கப்படுகின்றது.
(iv) இவ்வடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உ) வெளியடுக்கு:
(i) வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வெளிஅடுக்கு என்று அழைக்கப்படுகிறது.
(ii) இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(iii) அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) என்ற விநோத ஒளிநிகழ்வுகள் இவ்வடுக்கில் நிகழ்கின்றன.
44.
தற்கால உலகில் மக்களாட்சி அரசாங்கம் தழைத்தோங்கி, அரசாங்கத்தின் மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக இருக்கிறது.
மக்களாட்சியானது இதுவரை கடுமையான சவாலையோ அல்லது போட்டியையோ எதிர்கொள்ளவில்லை.
கடந்த 100 ஆண்டுகளில் உலகெங்கிலும் மக்களாட்சி விரிவடைந்து வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் சவால்கள்:
1. கல்வியறிவின்மை
2. வறுமை
3. பாலினப் பாகுபாடு
4. பிராந்தியவாதம்
5. சாதி, வகுப்பு. சமயவாதம்
6. ஊழல்
7. அரசியல் குற்றமயமாதல்
8. அரசியல் வன்முறை
45.
அ) ஹரோகிளிபிக்ஸ்:
(i) எகிப்தியர்கள் தமது எழுத்து முறைக்காகப் புகழ்பெற்றவர்கள். இவர்களது எழுத்து ஹரோகிளிபிக் என்று அழைக்கப்படுகிறது.
(ii) இந்த எழுத்து வகை நினைவுச்சின்னங்களில் உள்ள முத்திரை மற்றும் இதர பொருட்களில் பயன்படுத்தப்பட்டது.
(iii) பொதுவான தகவல் தொடர்புக்கு ஹெரிடிக் எழுத்து பயன்படுத்தப்பட்டது. இது பிக்டோகிராம் எனப்படும் சித்திர எழுத்து வடிவமாகும்.
(iv) இது சுமார் கி.மு.(பொ.ஆ.மு) 3000ல் உருவாக்கப்பட்டது. இந்த எழுத்தைப் பயன்படுத்தி ஏராளமான புத்தகங்களும் பிரதிகளும் எழுதப்பட்டன.
ஆ) க்யூனிபார்ம்:
(i) சுமேரிய எழுத்து முறை கியூனிபார்ம் என்று அழைக்கப்படுகிறது.
(ii)எழுத்துகள் ஆப்பு வடிவில் இருப்பதால், இப்பெயர் இடப்பட்டது.
(iii) கி.மு.(பொ.ஆ.மு) காலகட்டத்தில் உருவான இம்முறை, உலகின் பழமையான எழுத்து முறைகளில் ஒன்றாகும்.
(iv) வணிகப் பரிமாற்றங்களுக்கும்,கடிதங்கள், கதைகள் எழுதுவதற்கும் இந்த எழுத்து முறையைச் சுமேரியர்கள் பயன்படுத்தினார்கள்.
(v) இந்த எழுத்துகள் எழுதப்பட்ட சுட்ட களிமன் பலகைகள் சுமேரிய நாகரிகம் பற்றி ஏராளமான தகவல்களைத் தருகின்றன.
46.
சமண சமயம்:
(1) சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமானார் ஆவார்.
(ii) இவர் மூன்று ரத்தினம் எனப்படும் நல்லறிவு, நன்னம்பிக்கை மற்றும் நன்னடத்தையை போதித்தார்.
(iii) அகிம்சை மற்றும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தாமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) மகாவீரர் சாதிமுறையை ஏற்கவில்லை அனைத்து மதமும் சமம் என்றார்.
(vi) சமண சமயத்தின் இரு பிரிவுகள்
(i) திகம்பரர்கள் (திசையையே ஆடையாக உடுத்தியவர்கள்)
(ii) சுவேதாம்பரர்கள் (வெண்ணிற உடை உடுத்தியவர்கள்)
(vii) சமணர்கள் தங்கள் கொள்கைகளை வட்டார மொழிகளிலே போதித்தனர்.
(viii) சந்திரகுப்தர், மகேந்திரவர்ம பல்லவன் சமண சமயத்தை தழுவியவர்கள்.
புத்த சமயம்:
(i) புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர்.
(ii) இவரின் எண் வழிப்பாதை நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன் முயற்சி, நற்சிந்தனை மற்றும் நல்ல தியானம் ஆகும்.
(iii) அன்பை அகிம்சை வழியில் எல்லா உயிரினங்களும் வெளிப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) சாதிமுறையை ஏற்கவில்லை.
(vi) புத்த சமயம் மஹாயானம் மற்றும் ஹீனயானம் என்று இரு பிரிவுகளாக பிரிந்தது.
(vii) புத்தர், மக்கள் பேசும் பிராகிருத மொழியில் தனது போதனைகளை போதித்தார்.
(viii) அசோகர், கனிஷ்கர் புத்த சமயத்தை தழுவியவர்கள்.
47.
பனியாறு:
(i) பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது.
(ii)பனிக்குவிந்து காணப்படும் இடம் பனிவயல் என அழைக்கப்படுகிறது.
(iii) உயரமான பகுதிகளிலும், உயர் அட்சங்களிலும் நிரந்தரமாக பனி மூடியிருக்கும் பகுதியின் எல்லைக்கோடே உறை பனிக்கோடு எனப்படுகிறது.
(iv) உயர் அட்சங்களுக்குச் செல்லச் செல்ல உறைபனிக் கோட்டின் எல்லைக்கோடு கடல் மட்டத்திற்கு அருகில் காணப்படும்.
(v) பனிக்கட்டிகள் பனித்துகள்களாக உருமாறுவதை இறுகிய பனிமணிகள் என்று அழைக்கின்றோம்.
(vi) இது மேலும் இறுகி திடமான பனிக்கட்டிகளாய் உருவாகின்றன.
48.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை உருவாக்குவதிலும், மறு உருவாக்கம் செய்வதிலும் இரண்டு முதன்மைச் செயல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை, அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகள் ஆகும்.
அ) அகச்செயல்முறைகள்:
(i) புவியின் உட்பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகளே 'அகச்செயல் முறைகள்' எனப்படுகின்றன.
(ii) இவ்விசைகள் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
(iii) புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவிமேலோட்டின் கீழ் காணப்படும் பொருள்கள் வெளித்தள்ளப்படுகின்றன. இச்செயல்பாட்டில் புவியின் உள்ளே உள்ள கதிர்வீச்சு முக்கியப் பங்காற்றுகின்றது.
ஆ) புவிப்புறச் செயல்முறைகள்
(i) இச்செயல் முறைகள் புவியில் உள்ள பொருள்களின் மீது அழுத்தத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருள்களின் மீது மாற்றத்தை உண்டாக்குகின்றன. இவை 'புவிப்புறச் செயல்முறைகள்' எனப்படுகின்றன.
(ii) புவியின் மேற்பரப்பில் செயல்படும் இயற்கைக் காரணிகளான ஆறுகள், பனியாறுகள், காற்று, அலைகள் போன்ற விசைகள் 'புவிப்புறச் செயல்முறை' காரணிகள் எனப்படுகின்றன. இக்காரணிகள் நிலத்தின் மேற்பரப்பினை அரித்து தாழ்நிலச் சமவெளிகளில் படிய வைத்து அவற்றை உயர்த்துகின்றன.
49.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
50.
51.
| நேரடி மக்களாட்சி | மறைமுக மக்களாட்சி |
|---|---|
| பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவு எடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். | பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே மறைமுக மக்களாட்சி என்றழைக்கப்படுகிறது. |
| (எ.கா.) பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து | (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து |
52.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி 'மக்களாட்சி' என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறினார்.
53.
1. இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்படுவற்கு முன் செம்பும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும் தான் பயன்பட்டு வந்தன. இவை விலை உயர்ந்தவை.
2. இவற்றின் கூர்முனை விரைவில் மழுங்கிப் போகும் என்பதால் வெண்கலத்தாலான ஆயுதங்களையோ, கலப்பை போன்ற கருவிகளையோ திறம்பட பயன்படுத்த முடியாது.
3. வெண்கலம், செம்புத் தாதுவைவிட இரும்புத் தாதுவளம் இயற்கையில் அபிரிமிதமாகக் கிடைக்கிறது.
4. மேலும் இரும்புக் கோடரி காடுகளைத் திருத்தவும், இரும்புக் கலப்பை இறுகிய நிலத்தைப் பிளக்கவும் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
5. பொ. ஆ. மு. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரும்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் அஸிரியப் பேரரசு வல்லமை பெற்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards