9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/01/2019
Class 9 SA Test 2018-2019
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?
34
20
15
0.2
2.
கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?
ஜெர்சி
ஹோல்ஸ்டீன் – பிரிஸன்
ஷகிவால்
ப்ரெளன் சுவிஸ்
3.
மண்புழுவின் தகவமைப் புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.
உணர் நீட்சி அல்லது துடுப்புக்களற்ற நீண்ட உடலமைப்பைக் கொண்ட து.
மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும் மண்புழுவின் ஒவ்வொரு கண்டத்திலும்
குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தன்னைப் பா துகாத்துக்கொள்ள பகல் நேரத்தில் மண்ணில் பதுங்கிக் கொள்ளும்.
4.
கீழ்காணும் நோய்களுள் எவை வைரஸ் நோய்கள் ஆகும்?
யானைக்கால்நோய், எய்ட்ஸ்
சாதாரண சளி, எய்ட்ஸ்
வயிற்றுப்போக்கு, சாதாரண சளி
டைபாய்டு, காசநோய்
5.
ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.
மாற்றியம்
புறவேற்றுமை வடிவம்
சங்கிலித் தொடராக்கம்
படிகமாக்கல்
6.
மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் _________ ஆகும்.
7.
காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.
8.
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.
9.
சனி மற்றும் யுரேனஸ் கோள்களுக்கிடையே உள்ள தொலைவு, பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தொலைவின் 10 மடங்குகள் ஆகும்.
10.
ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
11.
கீழ்க்கண்டவற்றை வே றுபடுத்துக
அ) அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
ஆ) மகரந்தம் மற்றும் தேன் ரசம்
இ) கூனி இறால் மற்றும் இறால்
ஈ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்
உ) தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு
12.
ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.
13.
பன்னாட்டு விண்வெளி மையத்தின் நன்மைகளை விவாதி.
14.
உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.
15.
மனிதனுக்கு டைபாய்டு ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் பெயரென்ன ? இக்கிருமி எவ்வாறு உடலினுள் செல்லும் பண்பைப் பெற்றுள்ள து? இதனைக்கண்டறியும் அறிகுறிகளையும், கடுமையான நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளையும் குறிப்பிடுக.
16.
பொருளின் அடர்த்தி எவ்வாறு அப்பொருள் நீரில் மூழ்குமா அல்லது மிதக்குமா என்பதைத் தீர்மானிக்கிறது?
17.
கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.
காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
18.
கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
19.
கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
காரணம்: அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
20.
கூற்று: நீரியல் தூக்கி பாஸ்கல் விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.
காரணம்: ஓரலகு பரப்பில் செயல்படும் செங்குத்து விசையே அழுத்தம் ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. ஆனால், காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
இ) கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
21.
A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீ3 பருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
(பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)
22.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
23.
200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் 300 செ.மீ3 எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.
24.
தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக
25.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
26.
‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.
27.
சூரிய மண்டலம் என்றால் என்ன ?
28.
நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?
29.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
30.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் ஆபத்தானவை ஏன்?
31.
ஓரு பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
32.
கார்பன் பெரும்பாலும் இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது, ஏன்?
33.
அதிர்வெண்
34.
அலைவுக் காலம்
35.
ஒலி
36.
Keyboard
37.
Hardware
38.
BCG
39.
HIV
40.
வீட்டு ஈயின் மூலம் பரப்பப்படும் ஏதேனும் ஒரு நோயின் பெயரினைத் தருக. அதனுடைய நோய் பரப்பும் நுண்கிருமியினைக் குறிப்பிடுக
41.
பெனிசிலின் என்ற நோய் எதிர் உயிர்பொருளை முதன் முதலில் கண்டறிந்த அறிவியலறிஞரின் பெயர் என்ன ? ஏதேனும் நோய் உயிர்பொருளின் பெயர்களை உன்னால் கூறமுடியுமா?
42.
சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?
43.
கீழ்காண்பவனவற்றை வரையறு
நோய்க்கிருமி
1.
(b)
20
2.
(c)
ஷகிவால்
3.
(c)
குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
4.
(c)
வயிற்றுப்போக்கு, சாதாரண சளி
5.
(a)
மாற்றியம்
6.
( )
மின்பகுப்புக்கலம்
7.
( )
விப்ரியே காலரே, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா
8.
( )
அடர்த்தி
9.
(a)
10.
(a)
11.
அ ) அயல்நாட் டு இனம் மற்றும் பாரம்பரிய இனம் : அயல்நாட்டு இனங்கள் (போஸ் டாரஸ்) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெர்ஸி , ப்ரெளன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ப்ரெய்ஸ்யன் ஆகியவை அயல்நாட்டு இனங்களாகும் . உள்நாட்டு இனங்கள் பாரம்பரிய இனம் எனப்படுகின்றன. இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை.இவற்றுள் சாகிவால்,சிவப்பு சிந்தி , தியோனி மற்றும் கிர் ஆகியவை அடங்கும்.
ஆ ) மகரந்தம் மற்றும் தேன் ரசம் : மகரந்தம் என்பது பூவின் ஆண்பகுதியாகும் மகரந்தத் தூளானது மலர்கள் கருவுறுதலுக்கும் கனிகளை உருவாக்கவும் பயன்படுகிறது. தேனீக்கள் மலர்களில் தேனை உறிஞ்சும்போது மகரந்த தூள் அவற்றின் உடலில் ஒட்டிக் கொள்கிறது,இது அடுத்த மலரின் சூல்முடியில் விழுந்து அயல் மகிர்ந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
தேன் ரசம் என்பது தேனீக்களை கவர்வதற்காக பூக்கள் உற்பத்தி செய்யும் வழவழப்பான ஒரு திரவம் ஆகும்.தேனீக்கள் இவற்றை தேன்குடில் சேகரிக்கப்படுகின்றன.இந்தத் தேன்ரசம் பின்னர் தேனாக மாற்றம் அடைகிறது
இ) கூனி இறால் மற்றும் இறால் : கடலில் காணப்படும் கடல் இறால்கள் கூனி இறால்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. முதிர்ச்சியடைந்த கூனி இறால்கள் ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்கின்றன.இவற்றின் வளர்ச்சி நிலைகள் கழிமுகம் மற்றும் கடலோர நீர் நிலைகளில் காணப்படுகின்றன.
நண்ணீர் இறால்கள் : இவை ஆறுகள் மற்றும் ஏரிகளை வாழிடமாகக் கொண்டுள்ளன. பின்னர் இனப்பெருகத்திற்காக உவர்நிலைகளுக்கு இடம்பெயர்கின்றன.
ஈ) துடுப்பு ,மின் மற்றும் ஓடு மீன் : துடுபு மீன்களுக்கு நல்ல வளர்ச்சியடைந்த துடுப்புகள் உண்டு.இவை நீரில் நீந்திச் செல்லவும் மிதக்கவும் உதவுகின்றன.இந்தத் துடுப்பு மீன்கள் pisces எனப்படும் மீன் இனத்தைச் சேர்ந்தவை.இவற்றிற்கு நன்கு வளர்ச்சியடைந்த முதுகெலுமபுத் தொடர் உள்ளது.ஓடுமின் என்பன கணுக்காலிகள் .இனத்தைச் சேர்ந்தவை.இவற்றின் மிகச் சிறந்த சுவைக்காக இவை உணவில் பயன்படுத்தப்படுகின்றன.
உ) தொழுஉரம் மற்றும் வெள்ளாட்டு எரு:
அ) தொழுப்பண்ணை உரம் : இது கால்நடைகளின் சாணம், சிறுநீர் மற்றும் மாட்டுக் கொட்டங்களில் தரைமேல் இருக்கும் கழிவுகள் மற்றும் பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றின் கலவையாகும்.
ஆ) செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டுச் சாண உரங்கள் : இது தொழுப்பண்ணை உரத்தைக் காட்டிலும் அதிக சத்துகளைக் கொண்டதாகும் 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ் பென்டாக்சைடு , 2% பொட்டாசியம் ஆக்சைசு இது கொண்டுள்ளது.
12.

ஒலி எதிரொலித்தல் விதிகள்:
(i) ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்கும்.
(ii) ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
(iii) படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு குழாய்களை எடுத்துக் கொள்க. காகிதத்தைப் பயனப்டுத்தியும் அவற்றை உண்டு பண்ணலாம். ஒரே மாதிரியான இரண்டு குழாய்களைச் செய்க. குழாயின் நீளம் தேவையான அளவு பெரியதாக இருக்க வேண்டும். அவற்றை ஒரு மேசையின் மீது படத்திலுள்ளவாறு அமைக்க வேண்டும். ஒரு குழாயின் ஒரு முனையில் நிறுத்துக்கடிகாரத்தை வைக்கவும். மற்றொரு குழாயின் மூலம் நிறுத்துக்கடிகாரத்தின் ஒலியினைக் கேட்ட முயற்சிக்கவும். குழாயின் நிலையை மாற்றி ஒளியானது தெளிவாகக் கேட்குமாறு செய்ய வேண்டும். இப்பொழுது படுகோனம் மற்றும் எதிரொலிப்புக் கோணம் ஆகியவற்றை அளக்கவும். அவற்றிக்கிடையேயான தொடர்பைக் கண்டறியவும். படுகோனத்தின் மதிப்பை சோதனையை மீண்டும் செய்யவும்.
13.
பன்னாட்டு விண்வெளி மையத்தில் பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் மேம்படுத்தப்பட்ட நீர் கொண்டு வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிக்கும் முறைகளைப் பெறலாம். தண்ணீர்த் தட்டுப்பாடு நிறைந்த இடங்களில் வாழும் மக்களுக்கு உயிர் காக்கும் வழிமுறையாக இது இருக்கக் கூடும். பன்னாட்டு விண்வெளி மையத்திற்காக (ISS) உருவாக்கப்பட்ட நீர் மீட்பு அமைப்பு (WRS) மற்றும் ஆக்சிஜன் உருவாக்கும் அமைப்பு (OGS) ஆகியவை, சுத்தமான குடிநீர் அங்கு இல்லை என்பதால், ஈராக் நாட்டிலுள்ள, மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தை காப்பாற்றி அவர்களை மீண்டும் அங்கு வாழ வழிவகை செய்துள்ளன.
கண்ணைத் தொடரும் தொழில்நுட்பம்:
நுண் ஈர்ப்பு நிலையில் ஆய்வுகளை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கண்ணைத் தொடரும் கருவி பல லேசர் அறுவை சிகிச்சைகளில் பயன்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நிபுணரின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தா வண்ணம், இந்தக் கருவியானது கண்ணின் நிலையைத் துல்லியமாகத் தொடர்கிறது. இயக்கக்குறைபாடு மற்றும் பேச்சில் குறைபாடுள்ளவர்களுக்கு இந்த கண்ணைத் தொடரும் தொழில்நுட்பமானது வெகுவாகப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, தீவிர இயக்கக் குறைபாடுள்ள ஒரு குழந்தை, அதன் கண் அசைவுகளை மட்டுமே வைத்து அன்றாட செயல்பாடுகளை செய்து கொண்டு யாரையும் சாந்திராத வாழ்க்கையை வாழ இயலும்.
தானியங்கி கைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள்:
அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை (எ.கா: மூளைக் கட்டிகள்) நீங்குவதற்கும் மிகத் துல்லியான முறையில் உடல்திசு ஆய்வு செய்வதற்கும் (biospy), பன்னாட்டு விண்வெளி மையத்தில் ஆராய்ச்சிக்குத் துணையாக இருப்பதற்காக விண்வெளி வீரர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட பெரும் தானியங்கி கைகள், அறுவை சிகிச்சை தானியங்கியாக (surgical robot) செயல்பட்டு புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன. இத்தகைய கருவிகளால் மிகத்துல்லியமான முறையில் உடல் திசு ஆய்வுகளைச் செய்ய முடியும் என்று இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
இவற்றை தவிரவும் இன்னும் பல வழிகளில் பன்னாட்டு விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நமக்கு பயனுள்ளதாய் அமைகின்றன. அவையாவன: மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குதல், மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, அணுக முடியாத பகுதிகளுக்குள் செல்வதற்கான மீயொலிக் கருவிகள் உள்ளிட்ட இன்னும் பல.
14.
ஆவியாதல்: ஆவியாதல் என்பது தண்ணீர் ஆவியாக மாறும் ஒரு வகையாகும்.இங்கு நீரானது கொதிநிலையை அடைவதற்கு முன் வாயுவாக மாற்றப்படுகிறது.பூமியின் மேற்பரப்பு பெருங்கடல்கள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
பதங்கமாதல் : பதங்கமாதல் என்பது திட நிலையில் இருந்து ஒருபொறுக்க திரவநிலையை அடையாமல் நேரடியாக வாயுநிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
நீராவிப்போக்கு (Transpiration) : தாவரங்களில் காணப்படும் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் (இலைத்துளை , பட்டைத்துளை முதலியன ) மூலம் தாவரங்கள் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு வெளியிடும் நிகழ்வு நீராவிப்போக்கு என அழைக்கப்படுகின்றன.
குளிர்வித்தல்: நீராவியாக உள்ள நீரை வாயுநிலைக்கு மற்றும் நிகழ்வு குளிர்வித்தல் என்று அழைக்கப்படுகிறது. இது நீராவிப்போக்கிற்கு எதிரான நிகல்வாகும்.உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாக காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகின்றது.இந்த நீர்த்திவலைகள் அருகருகே வரும்பொழுது மேகங்களும் பனிமூட்டங்களும் உருவாகின்றன.
மழைப் பொழிவு: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்றுசேர்ந்து பெரிய நீர்த்திவலைகளாக மாறி மழையாக பொழிகின்றன.தூறல் மழை , பனி , ஆலங்கட்டி மழை ஆகியன மழைப்பொழிவில் அடங்கும்.
தரைமேல் வழிந்தோடும் நீர்: மழைப்பொழிவு ஏற்பட்டவுடன் பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள் , ஆறுகள் , ஏரிகள் , குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.
ஊடுருவல்: மழை நீரானது வழிந்தோடியவுடன் சில பகுதி நீரானது மண்ணுள் உட்புகுகின்றது. இது மண்ணிற்குள் ஆழமாகச் சென்று நிலத்தடி நீரை அதிகரிக்கின்றது.
உள் வழிந்தோடல்: மழை நீரின் மற்றோரு பகுதியானது நுண்ணிய அல்லது உடைந்த பாறைகளின் உள்ளே பாய்ந்து செல்கின்றது.
15.
i . மனிதனுக்கு டைபாய்டு நோயினை உண்டாக்கும் நோய்க்கிருமியின் பெயர் சால்மோனெல்லா டைப்ஃபி என்ற பாக்டீரியா ஆகும்.
ii. இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் கழிவுகள் கலக்கப்பட்ட நீர் மற்றும் உணவினால் நோயானது பரப்பப்படுகிறது.
நோய் அறிகுறிகள்: அதிக காய்ச்சல், பலவீனம், அடிவயிற்றில் வலி, தலைவலி, பசியின்மை, நெஞ்சுப்பகுதி மற்றும் மேல்வயிற்றுப் பகுதியில் அரிப்பு போன்றவை.
பாதிக்கப்படும் உறுப்புகள் : பாதிக்கப்படும் உறுப்பு சிறுகுடல் ஆகும்.
16.
(i) ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவதோ அல்லது மிதப்பதோ, குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கபப்டுகிறது. திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
(ii) எடுத்துக்காட்டாக, நீரைவிட அடர்த்தி குறைவாக மரக்கட்டை நீரில் மிதக்கும். நீரை விட அதிக அடர்த்தி கொண்ட பொருள்கள், உதாரணமாக, கல்லானது நீரில் மூழ்கும்.
17.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
18.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
19.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
20.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
21.
அ) A மற்றும் B ஆகிய பொருள்களின் எடை காற்றல் சமமாக இருக்கும்.
ஆ) பொருள் A யின் அடர்த்தி (20செமீ3பருமன் உள்ள 4கி.கி ) அதிகம்.
இ) \(P=P\rho g\)
\(h=P/\rho g\)
\(h=\frac { 99960 }{ 13600\times 9.8 } =.75m\)
=750மி.மீ
22.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
23.
நீரின் அடர்த்தி (\(\rho\)) = 1000 கி.கி / மீ3
மரக்கட்டையின் பருமன் (v) = 300 செ.மீ3 = 300 \(\times\) 10-6 மீ3
மரக்கட்டையின் நிறை = 200 கி
= 200 x 0.0098 = 1. 96 N [ 1 கிராம் = 0. 0098 நியூட்டன்]
புவியீர்ப்பு முடுக்கம் (g) = 10 மீ / வி2
உந்து விசை = \(\rho\)gv
அடர்த்தி \(\rho\) = 
= 200/300 = 0.2/3 = 0.0667
\(\rho\) = 0.0667
U = \(\rho\)gv
= 0.0667 \(\times\) 3 \(\times\) 9.8
U = 1.96 N
நீரினால் ஏற்படும் உந்து விசை = 1.96 N
24.
i) தேன் புரைத்தடுப்பானாகவும்,பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும் பயன்படுகிறது,இது இரத்தத்தை தூய்மையாக்கப் பயன்படுகிறது
ii) இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.
iii) ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவதில் பயன்படுகிறது.
iv) இருமல் , சளி , காய்ச்சல் மற்றும் தொண்டை வறட்சியை நீக்கவும் பயன்படுகிறது.
v) நாக்கு , வயிறு மற்றும் குடற்பண்புகளை குணப்படுத்த உதவுகிறது.
vi) இது செரிமானத்திற்கும் , பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது
25.
இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் தாவரங்களின் பாதுகாப்பு போட்டி மற்றும் சிற்றினங்களின் உடதொடர்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள் , பிளவோனய்டுகள் மற்றும் பல.
26.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், சூரியனுக்கு அருகாமையிலும் உள்ளன. எனவே அவை உட்புற சூரிய மண்டத்தை அமைக்கின்றன. மேலும் அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்து உள்ளதால் அவை நிலம் சார் கோள்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில் ஒரே வடிவில் உருவானவை. மேலும் அவை எந்த அமைப்பில் உள்ளவை. இவற்றிற்கு வளையங்கள் இல்லை.
27.
சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் வான் பொருள்கள் அனைத்தும் சேர்ந்ததே சூரிய மண்டலமாகும். அதில் கோள்கள், வால் விண்மீன்கள், சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கும்.
28.
1) தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
2) நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்.
3) நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டிருத்தல்
4) நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.
29.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
30.
i) பயன்படுத்திய பின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள் குறுகியகாலம் மற்றும் நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ii) இவை கழிவுநீர்க் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி நீர் நிலைகளை பாதிக்கின்றன.
iii) இவ்வகை நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்நலக்கேட்டை உண்டுபணணுகின்றன. எனவே இவை ஆபத்தானவை.
31.
பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. எனவே அந்த பயிர் நிலமானது அமிலத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. எனவே. காரத்தன்மை வாய்ந்த அம்மோனியம் நைட்ரேட், கால்சியம் பாஸ்பேட், யூரியா போன்ற வேதியியல் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நிலமானது நடுநிலையாக இருக்கும். பயிர்கள் நன்றாக வளர்ச்சியடையும்.
32.
i) நாம் இருக்கும் இந்த உயிர்க்கோளத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனின் சேர்மங்களால் உருவானவை.
ii) நான் பயன்படுத்தும் அனைத்து வகையான படிக எரிபொருளும் ஹைட்ரோகார்பன் என்ற கார்பனின் சேர்மங்களால் உருவாக்கப்பட்டவை.
iii) உயிர்புவி வேதிச்சுழற்சியில் உயிர்க்கோளம், புவிக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிமண்டலத்துடன் கார்பனானது பரிமாறப்படுகிறது.
iv) நைட்ரஜன் மற்றும் நீர் சுழற்சியில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அனைத்து நிலைகளிலும் கார்பன் ஈடுபடுவதும் மேலும் இதில் நான்கு கட்டுறா எலக்ட்ரான்கள் இருப்பதாலும் இவை இணைந்த நிலையிலேயே கிடைக்கின்றது.
33.
ஹெர்ட்ஸ்
34.
விநாடி
35.
நெட்டைலைகள்
36.
உள்ளீட்டு கருவி
37.
RAM
38.
Bacillus Calmette–Guérin
பேசில்லஸ் கால்மெட் குய்ரின்
39.
Human immunodeficiency virus
மனித நோய் எதிர்ப்பு குறைவுபடுத்தும் வைரஸ்
40.
காலரா - விப்ரயோ காலரே
41.
அலெக்சாண்டர் ஃபிளமிங்
மற்ற எதிர் உயிர்ப்பொருள்கள்: ஸ்ட்ரெப்டோமைசின், எரித்ரோமைசின், பேசிட்ரோசின், செபலோஸ்ப்ராய்ன்
42.
ஒரு பொருளானது காற்றில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லும்போது அலை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்வலைகள் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். இவ்வதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் இதர மாறுபாட்டின் காரணமாக கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை சூப்பர் சோனிக் வேகம் என அழைக்கின்றோம்.
43.
நோயினை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகள் நோய்க்கிருமி எனப்படும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards