9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/12/2018
Term 3 Slip Test Question
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________ ஆகும்.
2.
டைபாய்டு காய்ச்சல் _____________ ஆல் ஏற்படுத்தப்படுகிறது.
3.
திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.
4.
ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .
5.
இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப் பு விசையைத் தீர்மானிக்கிறது.
6.
காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?
7.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பாக்டீரியோ ஃபேஜ்கள்
8.
வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன ?
9.
பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.
10.
SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக
11.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?
12.
வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.
13.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
14.
டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?
15.
காற்றழுத்தமானியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.
16.
கூற்று: மீன் மற்றும் மேலும் சில நீர் வாழ் உயிரிகள் உணவாகப் பயன்படுகின்றன.
காரணம்: மீன் மற்றும் சில நீர் வாழ் உயிரிகள் ஊட்டச்சத்து மிகுந்தவை ஆகும்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
17.
கூற்று: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும் சுட்டிக்காட்டப்படுகிறது.
காரணம்: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏற்படுத்தி உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
18.
கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன் மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
காரணம்: அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர்விகிதத் தொடர்புடையது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
19.
கூற்று: உறங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெ த்தைகளின் மீது படுக்கும் போது உடலின் அதிகமான பரப்பு படுக்கையுடன் தொட்டுக் கொண்டிருக்கும்படி தயாரிக்கப்பட்டிருக்கும்.
காரணம்: இதனால் உடலின் மீது செயல்படும் அழுத்தம் குறைக்கப்பட்டு நிறைவான உறக்கம் கிடைக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண் டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் கார ணம் சரி.
20.
ஆர்மோனியத்தில் உண்டான இசைக்குறிப்பின் சுருதியைக் குறைக்கும் போது அதன் அலை நீளம்_________
முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அதிகரிக்கும்
21.
கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?
யூட்ரிலஸ் பெட்டிடா
யூட்ரிலஸ் ஜெனியா
பெரியோனிக்ஸ் எக்ஸ்காவட்டஸ்
லாம்பிட்டோ மாரிட்டி
22.
ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் _____என அழைக்கப்படுகின்றன.
உயிரியல் காரணங்கள்
உயிரற்ற காரணிகள்
உயிர்க்காரணிகள்
இயற்காரணிகள்
23.
மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.
குடலினை
நுரையீரலினை
கல்லீரலினை
நிணநீர் முனைகளை
24.
நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?
பாலிஸ்டைரீன்
பி.வி.சி
பாலிபுரோப்பலீன்
எல்.டி.பி.இ
25.
A மற்றும் B ஆகிய இரண் டு வெவ்வேறு பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றன. மேலும், அவை ஒரே அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன் எடை சமமாக இருக்குமா?
ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனையும், 9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீ3 பருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன் அடர்த்தி அதிகமா அல்ல து பொருள் B ன் அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி.
இ) பாதரசத் தம்பத் தின் எந்த செங்குத்து உயர ம் 99960 பாஸ்கல் அளவிலான அழுத்தத்தை உருவாக்கும்?
(பாதரசத் தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)
26.
சில மாணவர்கள் அருகிலுள்ள குளத்தைக்கடக்கும் பொழுது, நீரில் மூழ்கும் ஒரு மனிதன் உதவிவேண்டி அலறுவதைக்கேட்டனர். உடனே அவர்கள் அவ்வழியே சென்றவரை உதவிக்கு அழைத்தனர். அவர் காற்று நிரப்பப்பட்ட குழாய் ஒன்றை நீரினுள் வீசினார் . ரப்பர் குழாய் போடப்பட்டதால் அந்த மனிதன் காப்பாற்றப்பட்டான்.
அ) ஏன் அந்த வழிப்போக்கர் காற்று நிரப்பப்பட்ட ரப்பர் குழாயை, நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்தினார்?
ஆ) இங்கு பயன்படும் தத்துவத்தைக் கூறு.
இ) மாணவர்கள் மற்றும் வழிப்போக்கரின் எந்த குணங்கள் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்ற உதவியது என்பதை அடையாளம் காண்.
27.
காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.
28.
பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?
29.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
30.
தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?
31.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?
32.
டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?
33.
திசைவேகம்
34.
அலைவுக் காலம்
35.
ஒலி
36.
LINUX
37.
Hardware
38.
BCG
39.
WHO
40.
இரு சாதாரண கொசுக்கள் மற்றும் அவைகள் பரப்பும் நோய்களின் பெயர்களைத் தருக.
41.
சுவாச மண்டலத்தோடு தொடர்புடைய, அதிக நாட்கள் காணப்படும் நோய்களைப் பெயரிடுக
42.
750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா? (கொடுக்கப்பட்டுள்ளவை :g=10 மீ/வி, ஒலியின் வேகம்=340 மீ/வி)
1.
( )
நின்ஹைட்ரின்
2.
( )
சால்மோனெல்லா டைஃபி
3.
( )
அடர்த்தி
4.
(b)
5.
(a)
6.
ஒரு நொடிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் சூரியன் (9 lakh கிமீ/ம) பால்வெளியை ஒரு முறை சுற்றிவர 225 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலம்தான் காஸ்மிக் ஆண்டு எனப்படுகிறது.
7.
பாக்டீயாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாகும் வைரஸ்கள் பாக்டீரியாஃபேஜ்கள் எனப்படும். எ.கா: பாக்டீரியா அழிப்பு வைரஸ் (T4)
8.
வளிமண்டலத்தில் உள்ள காற்றானது இடத்தை அடைத்துக் கொள்ளும். மேலும் அதற்கு எடை உள்ளது என்பதால் காற்றின் அழுத்தத்தை ஏற்படுத்தும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம் எனப்படுகிறது.
9.
பசுமாடுகளும் எருமை மாடுகளும் இந்திய கால்நடைக்குள் அடங்கியுள்ளன.பால் உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காக அவை வளர்க்கப்படுகின்றன.அவை இரண்டு வித சிற்றினங்களாகக் காணப்படுகின்றன.அவையாவன .போஸ் இண்டிகஸ் (இந்திய பசுக்களும் , காளைகளும் மற்றும்)போஸ் புபாலிஸ் (எருமைகள் ). இந்தவகைக் கால் நடை விலங்கினங்கள் பாலிற்காகவும் , வயல் வேலைகளுக்காவும் வளர்க்கப்படுகின்றன.இவ்விலங்குகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பால் உற்பத்தி இனங்கள் : பால் உற்பத்தி இனங்கள் பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.[பசுக்கள் (பால் சுரக்கும் பெண் இனம்) அதிகளவு பல தருபவையாகும் (கறவை விலங்குகள் )
இழுவை இனங்கள் : இவவகை இனமாடுகள் வேளாண்மைப் பயன்பாடுகளாகியா உழுதல், பாசனம் , வண்டியிழுத்தல்.அம்ரித்மகால் , காங்கேயம் , உம்பளச் சேரி, மாலவி , சிரி மற்றும் ஹல்லி கார் போன்ற இனங்கள் இவற்றில் அடங்கும் ,இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் , பசுக்கள் குறைந்தளவே பாலினைக் கொடுப்பவையாக இருக்கின்றன.
இரு பயன்களையும் தரும் இனங்கள் : இந்த வகை இனங்கள் பால் உற்பத்தியாகவும் பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காவும் பயன்படுகின்றன,இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால்விரும்பி வளர்க்கப்படுகின்ற்ன. ஏனெனில் இவைகளின் பசுக்கள் அதிகளவு பால் சுரப்பவையாக உள்ளன.இவற்றின் சிறப்பாக இழுவை வேலைகளை செய்பவையாகப் பயன்படுகின்றன.
10.
(i) சோனார் (SONAR) என்ற சொல்லின் விரிவாக்கம் Sound Navigation And Ranging என்பதாகும். சோனார் என்ற கருவியானது மீயொலி அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம் ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது. இதில் மீயொலிகளைப் பரப்பக்கூடிய சாதனமும், மீயொலிகளை உணரக்கூடிய உணர்வியும் உள்ளன. அவை படகு மற்றும் கப்பல்களுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளன. பரப்பியானது மீயொலிகளை உருவாக்கி பரப்புகிறது. இவ்வலைகள் நீருக்குள் பயணித்து, கடலின் அடித்தளத்தில் உள்ள பொருட்களின் மீது (அதாவது கடல் படுகை, மீன்களின் கூட்டம்) பட்டு எதிரொலிப்படைந்து மீண்டும் வரும் பொழுது உணர்வியினால் உணரப்படுகிறது. உணர்வியானது மீயொலிகளை மின்சார சைகைகளாக மாற்றமடையச் செய்கின்றது. அவற்றிலிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. நீரில் ஒலியின் திசைவேகம் மற்றும் பரப்பப்பட்ட ஒலிக்கும், பெறப்பட்ட எதிரொலிக்கும் இடையே உள்ள கால இடைவெளி ஆகியவற்றைக் கணக்கிட்டு, அதன் மூலம் நீருக்குள்ளிருந்து மீயொலி அலைகளை எதிரொலித்த, பொருளின் தொலைவைக் கணக்கிடலாம்.
(ii) பரப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மீயொலி அலைகளுக்கு இடையேயான கால இடைவெளியை 't' எனவும், நீரின் வேகத்தை 'v' எனவும் கொண்டால், மீயொலியானது கடந்த தொலைவு 2d=vxt ஆகும். இவ்வாறு பொருள்களின் தொலைவைக் கண்டறியும் முறை எதிரொலி நெருக்கம் (echo-ranging) எனப்படும். கடலின் ஆழத்தை அறியவும், நீருக்கு அடியில் அமைந்துள்ள மலைகள், குன்றுகள், நீர்முழ்கிக் கப்பல்கள் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றை இடம் கண்டறிவதற்கு இந்த முறையானது பயன்படுகின்றது.
11.
ஒரு செயற்கைகோளின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது. பூமிக்கு எந்த அளவிற்கு அருகில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகமான இருக்க வேண்டும். 200 கி.மீ தொலைவில் உள்ள செயற்கைக்கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கி.மீ/மணி வேகத்திற்கும் சற்று அதிகமாக வேகத்துடன் இயங்க வேண்டும்.

அவ்வாறு இயங்கும்போது அது 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும், புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால், இவ்வகை செயற்கைக்கோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர். சுற்றியக்கத் திசைவேகத்தை (v) பின்வரும் வாய்ப்பாட்டினக் கொண்டு கணக்கிடலாம்.
v = \(\frac {GM}{\sqrt {(R + h)}}\) இங்கு
G = ஈர்ப்பியல் மாறிலி = 6.67 \(\times\) 10-11 நிமீ 2.கிகி-2
M = புவியின் நிறை = 5.972 \(\times\) 1024 கிகி
R = புவியின் ஆரம் = 6371 கிமீ
h = புவிபரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்.
12.
கார்பன் பல்வேறு வடிவங்களில் பூமியின் மீது கிடைக்கின்றது. கரி, வைரம் மற்றும் கிராபைட் போன்றவை கார்பனின் எளிய வடிவங்களாகும். கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்ஸைடு, கார்பனேட் உப்பு போன்றவை கார்பனின் கூட்டுப்பொருள்களாகும். அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்ற கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு, ஒளிச்சேர்க்கை மூலம் தவராங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக (கார்போஹைட்ரேட்டாக ) மாற்றமடைகிறது,இப்பொருளானது தாவரங்களிலிருந்து தவரா உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்கு கடத்தப்படுகின்றது. தாவரம் மற்றும் விலங்குகள் சுவாசித்தலின் போது கார்பனை டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இவ்வாறாக கார்பன் வளிமண்டலத்தை சென்றடைகிறது.எரிமலைச் செயல்கள் படிம ஏரிபொருள்களை எரித்தல், இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் ஆகிய செயல்கள் மூலமும் கார்பன் டை ஆக்சைடு மீண்டும் வளிமண்டலத்தை வந்தடைகின்றது.
13.
நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாகவும், உயிரின உரங்களாகவும் விவசாயத்துறையில் முக்கிய பங்களிக்கின்றன. இவை கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் கந்தகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களின் சுழற்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை உயிரியல் துப்புரவாளர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
(i) உயரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிர்கள்:
தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கம் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிர்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, இவைகள் உயரியக்கட்டுப்பாட்டுக் காரணிகள் உயிரி பூச்சிக்கொல்லி) என அழைக்கப்படுகின்றன. பேசிலஸ் துரின்சியென்சிஸ் (Bt) என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து 'படிம' புரதம் என்ற அழைக்கப்படும் புரதமானது உற்பத்தியாகிறது. இந்தப் புரதமானது பூச்சிகள் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மையுடையதாக இருந்து அவற்றைக் கொல்கிறது.
பேசில்லஸ் துரின்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. இதன்மூலம் பூச்சிகளின் இளம் உயிரியானது கொல்லப்படுகின்றது.
(ii) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:
நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் என அழைக்கப்படுகின்றது. பாக்டீரியா, சயனோபாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவைகள் உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும். தாவர ஊட்டச்சத்துக்களில் நைட்ரஜனும் மிக முக்கியமான ஒரு ஆதாரம் ஆகும். வளிமண்டலத்தில் வாயுவாகக் காணப்படும் நைட்ரஜனானது பயன்படுத்தப்படக்கூடிய விதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த மாற்றத்தினை நிகழ்த்துவதில் தனித்த நிலையில் வாழும் நுண்ணுயிரிகளோ அல்லது தாவரத்தோடு கூட்டுயிர் தொடர்பினைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளோ பெரும் பங்காற்றுகின்றன. எ.கா. நைட்ரோசோமோனாஸ் மற்றும் நாஸ்டாக் என்ற தனித்து வாழ்பவைகள், கூட்டுயிர் வாழ்க்கைமுறையுடைய ரைசோபியம், ஃப்ரோன்கியா, மைகோரைசா போன்றவைகள்.
தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்
மனிதனின் நலத்திளற்காக பல்வேறு மதிப்புமிக்க பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்வதில் நுண்ணுயிரிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
அ. நொதிக்கவைக்கப்பட்ட பானங்கள் தயாரித்தல்
நொதிக்க வைக்கப்பட்ட திராட்சை ரசங்கள் (வைன்) சாக்கரோமைசிஸ் செரிவியே (ஈஸ்ட்) என்ற உயிரியில் நொதியால் தானியங்கள் மற்றும் பழங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
ஆ. காஃபி விதைகள், தேயிலை மற்றும் புகையிலையை பதப்படுத்துதல்
காஃபி மற்றும் கோக்கோ தாவரத்தின் விதைகள், தேயிலைச்செடி மற்றும் புகையிலைச் செடியின் இலைகளை நொதிக்க வைத்து குடிநீர் சாறு தயாரிப்பதற்கு ஃபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.
இ. தயிர் தயாரித்தல்
லாக்டோபேசில்லஸ் சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன.
ஈ. கரிக அமிலங்கள், நொதிகள் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல்
ஆக்ஸாலிக் அமிலம், அசிடிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவைகள் ஆஸ்பர்ஜிலஸ் நைகர் என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன. லிப்பேஸ், இன வெர்டேஸ், புரோட்டியேஸ் மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் போன்ற நொதிகள் நுண்ணுயிரிகளிலிருந்து பெறப்படுகின்றன. ஈஸ்ட்கள் வைட்டமின் B கூட்டுப்பொருள்களை (காம்ப்ளக்ஸ்) அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.
14.
இது ஒரு வகை கால்வானிக் மின்கலம் ஆகும். இதில் துத்தநாக உலோகம் நேர்மின் முனையாகவும் தாமிர உலோகம் எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன. நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசல் நேர் மின்பகுளியாகவும், நீர்த்த தாமிர சல்பேட் கரைசல் எதிர் மின்பகுளியாகவும் செயல்படுகின்றன. தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு (KCI) கரைசல் உப்புப் பாலமாக செயல்படுகிறது. டேனியல் மின்கலத்தின் அமைப்பை கீழ்காணும் படம் விளக்குகிறது.

நேர்மின்முனையில் துத்தநாகம் ஆக்ஸிஜனேற்றமடைந்து அதன் எலக்ட்ரான்களை இழக்கின்றது.
Zn(s) ⟶ Zn2+ + 2e- (ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின் முனையில், மின்பகுளியில் உள்ள தாமிர அயனிகளானவை எலக்ட்ரானை எதிர்மின்வாயின் மேற்பரப்பிலிருந்து பெற்று தாமிரமாக ஒடுக்கமடைகின்றன.
Cu2+ ⟶ 2e- + Cu(s) (ஒடுக்கம்)
நிகர வினை: Zn(s) ⟶ Cu2+ ⟶ Zn2 + Cu(s)
டேனியல் மின்கலத்தின் திறன் 1.1V ஆகும்.
15.
வளிமண்டல அழுத்தத்தை அளக்க காற்றழுத்தமானி என்னும் கருவி பயன்படுகிறது. இத்தாலிய இயற்பியலாளர், டாரிசெல்லி என்பவர் முதன்முதலாக பாதரச காற்றழுத்தமானியை உருவாக்கினார். ஒரு முனை திறந்தும் ஓர் முனை மூடியும் உள்ள நீண்ட கண்ணாடிக்கு குழாயில் பாதரசம் நிரப்பப்பட்டு தலைகீழாக ஒரு கொள்கலனில் வைக்கப்பட்ட ஒரு அமைப்பை இது கொண்டுள்ளது. தலைகீழாகக் கவிழ்க்கும் போது, திறந்திருக்கும் முனையை கட்டை விரலால் மூடி, பாதரசம் உள்ள கொள்கலனில் கவிழ்க்க வேண்டும். காற்றழுத்தமானியில் உள்ள பாதரசம் வெளியில் உள்ள காற்றின் அழுத்தத்தை சமன்செய்து இயங்குகிறது. காற்றின் அழுத்தம் அதிகரிக்கும் போது, கொள்கலனில் உள்ள பாதரசம் கண்ணாடிக் குழாயினுள் தள்ளப்படுகிறது. காற்றின் அழுத்தம் குறையும் போது, குழாயினுள் உள்ள பாதரசம் வெளியேற்றப்படுகிறது. குழாயின் மூடிய முனைக்கு உள்ளே உள்ள பாதரசத்திற்கும் இடையே காற்று இல்லாமல் வெற்றிடமாக உள்ளது. வெற்றிடம் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்த இயலாது. ஆகையால் குழாயில் உள்ள பாதரசம் வளிமண்டலத்தின் அழுத்தத்தைத் துல்லியமாக வழங்குகிறது. இக்கருவியை ஆய்வகத்திலோ அல்லது வானிலை மையத்திலோ பயன்படுத்தலாம்.

16.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
17.
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
18.
இ) கூற்று சரி. ஆனால் கார ணம் தவறு.
19.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
20.
(d)
அதிகரிக்கும்
21.
(a)
யூட்ரிலஸ் பெட்டிடா
22.
(b)
உயிரற்ற காரணிகள்
23.
(b)
நுரையீரலினை
24.
(c)
பாலிபுரோப்பலீன்
25.
அ) A மற்றும் B ஆகிய பொருள்களின் எடை காற்றல் சமமாக இருக்கும்.
ஆ) பொருள் A யின் அடர்த்தி (20செமீ3பருமன் உள்ள 4கி.கி ) அதிகம்.
இ) \(P=P\rho g\)
\(h=P/\rho g\)
\(h=\frac { 99960 }{ 13600\times 9.8 } =.75m\)
=750மி.மீ
26.
அ) காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்படி அழுத்தப்பட்டாலும் நீரில் மூழ்கிவிடப்படாமல் மிதக்கும் தன்மையுடையது. நீரில் விழுந்தவர் அதைப் பற்றிக் கொண்டால், முக்கிவிடாமல் மிதந்து கரையை அடைந்து விடலாம். எனவே அந்த வழிப் போக்கர் காற்று நிரப்பட்ட ரப்பர் குழாயைப் பயன்படுத்தினார்
ஆ) காற்றின் அடர்த்தி நீரின் அடர்த்தியைக் காட்டிலும் குறைவு, எனவே காற்று நிரப்பட்ட ரப்பர் குழாய் எப்பொழுதும் நீரில் மிதக்கும்.
இ) சரியான நேரத்தில் மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் அருகில் உள்ளவரை உதவிக்கு அழைத்தனர். வழிப்போக்கர் காற்றடைத்த ரப்பர் குழாய் தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியல் கோட்பாட்டை அறிந்திருந்தார். இதனால் அந்த மனிதன் தண்ணீரில் மூழ்கி விடாமல் காப்பாற்றப்பட்டான்.
27.
i) குளிர்வித்தல்
ii) உலர்த்துதல்
iii) கலனில் அடைத்தல்
iv) வெற்றிட குளிர்வித்தல்
28.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர்வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால் தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது.
29.
பள்ளி மற்றும் வீடுகளில் நீரைச் சேமித்தல்:
i) வாறல் குளிர்பான்களில் (Showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
ii) குறைவாக நீர் வரக்கூடிய குடிநீர்க்குழாய்களைப் (tap) பயன்படுத்திட வேண்டும்.
iii) மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
iv) குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரிசெய்தல்.
v) முடிந்தவரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.
vi) நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
30.
தடயவியல் வேதியியலின் தொடர்புகள் கைரேகைப் பதிவு, உயிரியல் அளவீட்டியல் மற்றும் ஆல்கஹால் பரிசோதனை போன்றவைகளாகும்.
31.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் இரண்டு.
32.
PVC நெகிழியை எரிப்பதன் மூலம் டைஆக்சின்கள் உருவாகிறது. இது பாலிவினைல் குளோரைடு நெகிழியுடன் தொடர்புடையது. இந்த பாலிவினைல் குளோரைடுடன் காட்மியம் மற்றும் காரீயம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. மேலும் தாலேட்ஸ் என்ற வேதிப்பொருள் நமது ஹார்மோன்களைப் பாதிக்கின்றன. மேலும் இவற்றை எரிப்பதால் ஆக்சின்கள் என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள்களை வெளியிடுவது நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
33.
மீட்டர் / விநாடி
34.
விநாடி
35.
நெட்டைலைகள்
36.
இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள்
37.
RAM
38.
Bacillus Calmette–Guérin
பேசில்லஸ் கால்மெட் குய்ரின்
39.
World Health Organization
உலக சுகாதார நிறுவனம்
40.
1. அனோபிலஸ் கொசு - மலேரியா
2. ஏடிஸ் ஏஜிப்டி - சிக்கன்குனியா
41.
கக்குவான் இருமல், காசநோய்
42.
ஒலியின் திசைவேகம் = 340 மீ / வி
கோபுரத்தின் உயரம் = 750 மீ
கல் நகர்ந்த தொலைவு = 2 \(\times\) 750
= 1500 மீ
= 4.4 வினாடிகள்
4.4 வினாடிகளுக்குப் பின்னர் குளத்து நீரில் கல் விழுந்த ஒலியினை கேட்கலாம்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards