9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/12/2018
2nd Term Model Exam
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஆர்டிக் தூந்திர உணவு வலை பற்றி உனது சொந்த கருத்தை வரையறு.

2.
அந்நியச் செலாவணி என்றால் என்ன?
3.
கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
4.
'கொலம்பியப் பரிமாற்றம்' என்றால் என்ன?
5.
கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?
6.
ரோமானிய அடிமை முறையை பற்றி எழுதுக.
7.
சிலுவைப் போர்களின் தாக்கம்.
8.
அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?
9.
உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.
10.
குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
11.
போக்சா (POCSO) -வரையறு.
12.
பட்டு வளர்ப்பு என்றால் என்ன?
13.
சவானா - தூந்திரா
14.
கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்
15.
உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
16.
இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.
17.
வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
18.
ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _________
சமூக
பொருளாதார
அரசியல்
பண்பாடு
19.
பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______
அதிகரிக்கும்
குறையும்
ஒரே அளவாக இருக்கும்
மேற்கண்ட எதுவுமில்லை
20.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு
சூழ்நிலை மண்டலம்
பல்லுயிர்த் தொகுதி
சுற்றுச்சூழல்
இவற்றில் ஏதுவும் இல்லை
21.
ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.
யென்
யுவான்
22.
வில்லியம் ஹார்வி ______ கண்டுபிடித்தார்.
சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
பூமியே பிரபஞ்சத்தின் மையம்
புவியீர்ப்பு விசை
இரத்தத்தின் சுழற்சி
23.
கிருஷ்ணதேவராயர் _______ன் சமகாலத்தவர்.
பாபர்
ஹீமாயுன்
அக்பர்
ஷெர்ஷா
24.
_____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
டய்ம்யாஸ்
சோகன்
பியுஜிவாரா
தொகுகவா
25.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.
முதலாம் இன்னசென்ட்
ஹில்ட்பிராண்டு
முதலாம் லியோ
போன்டியஸ் பிலாத்து
26.
i) பேரழகும் கலைத்திறனும் மிக்க தங்கச் சிலைகளைச் சோழர்கள் வடித்தனர்.
ii) சோழர்களின் கட்டடக் கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டு. சிவனின் மறுவடிவமான நடராஜரின் பிரபஞ்ச நடனம்.
அ) i) சரி ii) தவறு
ஆ) i), ii) ஆகிய இரண்டும் சரி
இ) i), ii) ஆகிய இரண்டும் தவறு
ஈ) i) தவறு ii) சரி
27.
(i) ரோமப் பேரரசர் மார்க்ஸ் அரலியஸ் ஒரு கொடுங்கோலன்.
(ii) ரோமுலஸ் அரிலிஸ் ரோமானிய வரலாற்றில் மிகவும் மெச்சத்தக்க அரசர்.
(iii) பேபியஸ் ஒரு புகழ்பெற்ற ஒரு கார்த்தேஜியப் படைத்தலைவர் ஆவார்.
(iv) வரலாற்றாளராக, லிவியை விட, டாசிடஸ் மதிக்கத்தக்கவர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iii) சரி
ஈ) (iv) சரி
28.
கண்டச்சரிவு
29.
சர்கோசா கடல்
30.
கிரேட் பேரியர் ரீப்
31.
மரியானா அகழி
32.
ரியால்
33.
உப்பு
34.
ஏ.டி.எம்
35.
அமெரிக்க டாலர்
1.
ஆர்டிக் தூந்திர உணவு வலையில் அங்கு சூரிய சக்தியினால் புல்வெளி, ஆர்டிக் காட்டுமலர், சின்சென்ட் பாறைச் செடிகள் வளர்கின்றன.
புல்வெளியைச் சார்ந்து கஸ்தூரி மாடு, ஆர்டிக் முயல், எலி போன்ற விலங்குகள் வாழ்கின்றன. கலைமானைச் சார்ந்து ஓநாய், எலி, துருவக்கரடி வாழ்கின்றன. பருந்து ஆர்டிக் முயல், எலி போன்ற விலங்குகளைச் சார்ந்து இருக்கிறன்றது.
2.
1. நாடுகளுக்கு இடையிலான பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது.
2. இந்தியாவின் செலாவணி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது.
3. உள்நாட்டில், அன்னிய நாட்டுச் செலாவணி வெளிநாட்டுச் செலாவணி என அழைக்கப்படுகிறது.
4. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
5. இந்த மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உலக வணிகத்தின் பெரும்பகுதி அமெரிக்க டாலர் மதிப்பிலேயே நடைபெறுகிறது.
3.
(i) புவியின் சுழற்சி
(ii) வீசும் காற்று
(iii) கடல் நீரின் வெப்பம் மற்றும் உவர்ப்பியதில் உள்ள வேறுபாடு
4.
(i) அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும்.
(ii) இது கொலம்பியப் பரிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.
5.
(i) ரோம் மற்றும் கார்த்தேஜ் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற மூன்று போர்கள் பியூனிக் போர்கள் என அழைக்கப்படுகின்றன.
(ii) ஹன்னிபால் என்ற தளபதியை கார்த்தேஜ் பியூனிக் போருக்கு அனுப்பிவைத்தது. ரோமின் படையைத் தோற்கடித்த அவர் இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்.
(iii) ரோம் படைக்கு தலைமையேற்றிருந்த பாபியஸ், மனம் தளரவில்லை. இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் அவரைத் தோற்கடித்தார்.
(iv) ரோமானியப் படைகளால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார்.
6.
(i) ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். இதன்மூலம் பணம்படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை ரோம் உருவாக்கியது.
(ii) மிகப்பெரும் நிலப்பிரபுக்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினார்.
(iii) அடிமைகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. கி.மு.(பொ.ஆ.மு) முதலாம் நூற்றாண்டில் ரோமில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன்களாக இருந்தபோது 2 மில்லியன் அடிமைகள் இருந்தனர்.
7.
(i)சிலுவைப் போர்கள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது.
(ii) மத்திய தரைக்கடல் பகுதியில் வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாகத் தோன்றின.
(iii)வலிமைவாய்ந்த நிலப்பிரபுக்கள் அழிந்து போனது ஒருவகையில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெறுவதற்கு காரணமாயிற்று.
(iv) போப்பாண்டவரும் அவருடைய ஆட்சிமுறையும் தங்கள் செல்வாக்கையும் மரியாதையும் இழக்க நேர்ந்ததாகும்.
8.
அடிப்படைக் கடமைகள்:
1. அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விகிதத்தில் அமைந்துள்ளன.
2. 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
3. 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அவை 11 அடிப்படைக் கடமைகளைக் குறிக்கின்றன.
பள்ளி வளாகத்தில் அடிப்படைக் கடமைகள்:
1. பள்ளியின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பேன்.
2. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு உரிய மதிப்பளிப்பேன்.
3. சமய, மொழி. மண்டல அல்லது மாணவியர்களிடமும் சகோதரமனப்பான்மையுடன் பழகுவேன்.
4. பிரிவு-வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மாணவ மாணவிகளை இழிவு செய்யும் செயல்களில் ஈடுபட மாட்டேன்.
5. அறிவியல் உணர்வு. மனிதநேயம் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க பிற மாணவர்களுடன் இணைந்து செயல்படுவேன்.
6. பொதுச் சொத்தான பள்ளியின் சொத்துகளைப் பாதுகாக்கும் பொருட்டு வன்முறையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்.
7. நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட -தேசிய மாணவர் படை- யில் சேர்ந்து பயிற்சி பெறுவேன்.
8. பள்ளியின் புறச்சூழலைப் பாதுகாக்க "நாட்டுநலப் பணித்திட்டத்தில்' சேர்ந்து பணியாற்றுவேன்.
9. அனைத்து மாணவர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவேன்.
9.
ரோமானிய மரபின்படி கி.மு. 509ல் எட்ரஸ்கன்கள் அகற்றப்பட்ட பின்னர் ரோமக் குடியரசை நிர்வகித்தவர்கள் பாட்ரீசியன் என்றழைக்கப்பட்ட செல்வந்த நிலப் பிரபுக்களாவர். செனட்டர்களும், கான்சல்களும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாதாரர். ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். பணம் படைத்தவர்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சி அதிகம் நடந்தன. ரோமானியர் ஆட்சி காலத்தில் அதிக அளவில் ஆடம்பர பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்த்திசை நாடுகளிலுருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்த வெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள், சந்தைகள், பெரிய நகரங்கள் ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்டன. அகஸ்டஸ்கி.மு 27ல் அரசரானார். அவர் தன்னைப் பேராசன் என அழைத்துக் கொண்டார். பணம் படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். சண்டைக்காட்சி வீரர்களை மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்ற வரையிலான கட்டாயச் சண்டைகளை மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்.
அகஸ்டஸில் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி என்பவர் அறிவியல் கலைச் கலைஞ்சயத்தை எழுதினார். அதனை அவர் "இயற்கை வரலாறு" என அழைத்தார். செனிக்கா என்பவர் அறிவியல் தொடர்பான களைக் களஞ்சியத்தை உருவாக்கினார். அவர் தன்னுடைய "ஓட்ஸ்" என்னும் நூலில் ஹேரெஸ், எப்பியூக்கியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்க வேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன் வாய்த்த கருத்துகளையும் இணைத்து புதிய தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு சிறந்த உரைநடையாளர் ஆவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவர். வெர்ஜில் எழுதிய ஏனெயிட் ரோமானிய ஏகாதிபதியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலங்கியை வளர்ச்சி அடைந்தது. மார்க்ஸ் அரிலியஸ் ஒரு தத்துவ அறிஞர் ஆவர். சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அமைத்து ஒரு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேராசர் இவரே ஆவர்.
10.
1. குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கொண்ட தனிநபர்கள் என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்.
2. குழந்தைகள் கடத்தப்படுதல், விற்பனை செய்தல் நடைபெற ஏழ்மை, பாவினப்பாகுபாடு மற்றும் சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கியக் காரணங்களாகும்.
3. மேலும் குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல். பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக கடத்தல் அல்லது விற்பனை செய்யப்படுகின்றனர்.
4. எனவே இதுபோன்ற தொல்லைகளிலிருந்து பாதுகாக்க குழந்தைகள் மீது சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது.
11.
1. போக்சா சட்டம் என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும்.
2. இது ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது
3. இது குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
4. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.
5. மேலும் பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவினை ஈடுகட்டும் வகையில் அபராதமும் இச்சட்டத்தின் படி விதிக்கப்படுகிறது.
12.
(i) மல்பெரி பட்டுப்பூச்சிகளை வளர்த்துப் பட்டு உற்பத்தி செய்யும் முறை பட்டுவளர்ப்பு எனப்படும். இது பதினான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.
(ii) ஏழாம் நூற்றாண்டில் உலகிலேயே அதிக அளவிலான பட்டு உற்பத்தி செய்யும் பகுதியாக வங்காளம் திகழ்ந்துள்ளது.
13.
| சவானா | தூந்திரா |
| சவானா பல்லுயிர்த் தொகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகின்றன. |
தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி ஆசியா, கனடா, ஐரோப்பா இவற்றின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ஆர்டிக். அண்டார்டிகா ஆகிய தொகுதியின் கீழ் வருகின்றன. |
| இங்கு பொதுவாக வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதோடு மிதமான மழைப்பொழிவையும் பெறுகிறது. எனவே இங்கு வளரும் புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் காணப்படுகின்றன. |
இங்கு குளிர்காலம் நீண்ட கடுங் குளிரையும். கோடை காலம் மிதமானகுளிரையும் கொண்டிருக்கும் இங்கு காணப்படும் மிகக் குறைந்த வெப்பநிலையின் காரணமாக குறுகியகால பருவத்தாவரங்கள் மட்டுமே இங்கு காணப்படும். |
| இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் கால்நடை மேய்த்தல் ஆகும். |
இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியனவாகும். |
14.
| கடலடிச் சமவெளி | கடலடிப் பள்ளம் |
| ஆழ்கடல் சமவெளி அல்லது அபிசெல் சமவெளி என்பது ஆழ்கடலில் காணப்படும் கடலடிச் சமவெளி ஆகும். | பெருங்கடலின் மிக ஆழமான பகுதி கடலடிப் பள்ளம் அல்லது அகழி ஆகும். |
| இச்சமவெளிகள் ஆறுகளினால் கொண்டு வரப்பட்ட களிமண், மணல் மற்றும் வண்டல்களால் உருவாக்கப்பட்ட அடர்ந்த படிவுகளால் ஆனது. |
படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் 'V' வடிவத்தில் காணப்படுகின்றன. |
15.
சூழ்நிலை மண்டலத்தில் நமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். இவை நிலத்திலும், நீரிலும் காணப்படுகின்றன (எ.கா) தாவரங்கள், பாசி, பாக்டீரியா
16.
வெப்பமடைதலும், குளிர்தலும் நிலத்தைவிட கடலில் மெதுவாக நடைபெறும். வெப்பமண்டலப் பகுதிகளில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுகிறது. உவர்ப்பியத்தின் அளவு வெப்ப மண்டலப் பகுதியில் அதிகமாகவும், நிலக்கோடு மற்றும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன.
17.
வட அரைக்கோளத்தில் நில பகுதிகள் அதிகம் காணப்படுகிறது. எனவே அப்பகுதி நில அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகிறது.
தென் அரைக்கோளப் பகுதிகளில் நீரின் அளவு அதிகம் காணப்படுகிறது. அப்பகுதியில் அண்டார்டிகா கண்டம் பணியாலானது. அதனால் அப்பகுதி நீர் அரைக்கோளம் என்று அழைக்கப்படுகிறது.
18.
(c)
அரசியல்
19.
(b)
குறையும்
20.
(a)
சூழ்நிலை மண்டலம்
21.
(a)
யென்
22.
(d)
இரத்தத்தின் சுழற்சி
23.
(a)
பாபர்
24.
(a)
டய்ம்யாஸ்
25.
(d)
போன்டியஸ் பிலாத்து
26.
ஈ) i) தவறு ii) சரி
27.
ஈ) (iv) சரி
28.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
29.
வட அட்லாண்டிக் பெருங்கடல்
30.
ஆஸ்திரேலியா
31.
பசிபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி
32.
சவுதி அரேபியா
33.
பணத்தின் மாற்று
34.
தானியங்கி இயந்திரம்
35.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற பணம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards