சுற்றுச்சூழல் வேதியியல் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 1 = 10
  1. பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?

    (a)

    காட்டுத் தீ

    (b)

    வெள்ளம்

    (c)

    அமில மழை 

    (d)

    பசுமைக்குடில் விளைவு

  2. போபால் வாயு துயரம் என்பது ________ இன் விளைவு ஆகும்.

    (a)

    வெப்ப மாசுபாடு

    (b)

    காற்று மாசுபாடு

    (c)

    கதிர்வீச்சு மாசுபாடு

    (d)

    நில மாசுபாடு

  3. நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக __________ ஐ கொண்டுள்ளது.

    (a)

    ஓசோன், SO2 மற்றும் ஹைட்ரோகார்பன்கள்

    (b)

    ஓசோன், PAN மற்றும் NO2

    (c)

    PAN, புகை மற்றும் SO2

    (d)

    ஹைட்ரோகார்பன்கள், SO2 மற்றும் CO2

  4. மழைநீரின் pH மதிப்பு

    (a)

    6.5

    (b)

    7.5

    (c)

    5.6

    (d)

    4.6

  5. ஓசோன் படல சிதைவு உருவாக்குவது

    (a)

    காட்டுத்தீ

    (b)

    தூர்ந்து போதல்

    (c)

    உயிர் பெருக்கம் 

    (d)

    உலக வெப்பமயமாதல்

  6. CO சூழலில் வாழ்தல் அபாயகரமானது , ஏனெனில்

    (a)

    உள்ளே உள்ள O2 உடன் சேர்ந்து CO2 ஐ உருவாக்குகிறது.

    (b)

    திசுக்களிலுள்ள கரிம பொருள்களை ஒடுக்குகிறது

    (c)

    ஹீமோகுளோபினுடன் இணைந்து அதை ஆக்சிஜன் உறிஞ்ச தகுதியற்றதாக ஆக்குகிறது.

    (d)

    இரத்தத்தை உலரவைக்கிறது 

  7. உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது

    (a)

    அதிகளவில் மாசுபட்டுள்ளது

    (b)

    குறைந்தளவு கரைந்த ஆக்ஸிஜன்

    (c)

    அதிகளவில் கரைந்த ஆக்ஸிஜன் உள்ளது

    (d)

    குறைந்த COD

  8. கூற்று (A): நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm ஐ விட அதிகமாக இருந்தால், அது அதிகளவில் மாசுபட்டிருக்கும்.
    காரணம்(R) : உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா  செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும்.

    (a)

    (b)

    ii

    (c)

    iii

    (d)

    iv 

  9. கூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.
    காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.

    (a)

    (b)

    ii 

    (c)

    iii 

    (d)

    iv  

  10. கூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது.
    காரணம் (R): அடிவெளிமண்டமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை

    (a)

    (b)

     ii

    (c)

    iii

    (d)

    iv  

  11. 10 x 2 = 20
  12. புமியின் வளிமண்டலத்திலிருந்து பசுமைக்குடில் வாயுக்கள் காணாமல் போனால் என்ன நிகழும்?

  13. பனிப்புகை வரையறு.

  14. எது பூமியின் பாதுகாப்புக் குடை என கருதப்படுகிறது? ஏன்?

  15. மக்கும் மாசுபடுத்திகள் மற்றும் மக்கா மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  16. பசுமை வேதியியல் என்றால் என்ன?

  17. பசுமைக்குடில் விளைவு எவ்வாறு உலக் வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்பதை விளக்குக.

  18. துகள் மாசுக்கள் என்றால் என்ன? ஏதேனும் மூன்றை விளக்குக.

  19. CFC மூலக்கூறுகள், அடுக்குமண்டலத்தில் ஓசோன் படல சிதைவை எவ்வாறு உண்டாக்குகின்றன என்பதை நிகழும் வினைகளின் அடிப்படையில் விளக்குக.

  20. அமில மழை எவ்வாறு உருவாகிறது? அதன் விளைவுகளை விளக்குக.

  21. மாசுபடுதலிருந்து நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க நீ பரிந்துரைக்கும் பல்வேறு வழிமுறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - சுற்றுச்சூழல் வேதியியல் Book Back Questions ( 11th Chemistry - Environmental Chemistry Book Back Questions )

Write your Comment