திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _________ ஆகும்

    (a)

    பொ.ஆ.மு. 3000-2600

    (b)

    பொ.ஆ.மு. 2600-1900

    (c)

    பொ.ஆ.மு. 1900-1700

    (d)

    பொ.ஆ.மு. 1700-1500

  2. கீழ்க்காணும் இணைகளை கவனிக்கவும்.

    (i) இந்திரன்  விடியலின் கடவுள் 
    (ii) சூரியன்  புரந்தரா 
    (iii) உஷா  இருளை 
    (iv) மாருத்  வலிமையின் கடவுள் 

    மேற்கண்டவற்றில் எந்த இணை சரியானது?

    (a)

    (i)

    (b)

    (ii)

    (c)

    (iii)

    (d)

    (iv)

  3. நாளந்தா பல்கலைக் கழகத்திற்குத் தலைமை தாங்கிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ______ 

    (a)

    தம்மபாலா

    (b)

    சாமிபுத்தம்

    (c)

    ராமாணநதர்

    (d)

    புத்தர்

  4. _________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.

    (a)

    பிந்து சாரர்

    (b)

    அஜாத சத்ரு

    (c)

    மகாபத்ம நந்தர்

    (d)

    போரஸ்

  5. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________

    (a)

    தஞ்சாவூர் 

    (b)

    காவிரிப்பபூப்பட்டினம் 

    (c)

    உறையூர்

    (d)

    சாகர்கள்

  6. கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது?

    (a)

    புத்தசரிதம் - அஸ்வகோஷர்

    (b)

    எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் - மெகஸ்தனிஸ்

    (c)

    அர்த்தசாஸ்திரம் - கெளடில்யர்

    (d)

    காமசூத்திரம் - வாத்சாயனர்

  7. பொருத்துக

    இலக்கியப் படைப்பு எழுதியவர்
    1. சூரிய சித்தாந்தா தன்வந்திரி
    2. அமரகோஷா வராஹமிகிரா
    3.பிருஹத்சம்ஹிதா ஹரிசேனா 
    4.ஆயுர்வேதா அமரசிம்மா
    (a)

    4, 3, 1, 2

    (b)

    4, 1, 2, 3

    (c)

    4, 2, 1, 3

    (d)

    4, 3, 2, 1

  8.  _________________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்ப்பான அமைச்சர் ஆவார்

    (a)

    குந்தலா

    (b)

    பானு

    (c)

    அவந்தி

    (d)

    சர்வாகதா

  9. ஐஹால் கல்வெட்டை எழுதியவர் _________ 

    (a)

    சீத்தர்

    (b)

    ரவகீர்த்தி

    (c)

    மெய்கீர்த்தி

    (d)

    முதலாம் புலிகேசி

  10. பாலம் பவோலி  கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது

    (a)

    சமஸ்கிருதம்

    (b)

    பாரசீக மொழி

    (c)

    அரபி

    (d)

    உருது

  11. __________படுகையில் இருந்த சோழ அரசின் மையப்பப்பகுதி சோழ மண்டலம் எனப்பப்படுகிறது

    (a)

    வைகை

    (b)

    காவிரி

    (c)

    கிருஷ்ணா

    (d)

    கோதாவரி

  12. _____ சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.

    (a)

    முதலாம் தேவராயர்

    (b)

    இரண்டாம் தேவராயர்

    (c)

    கிருஷ்ணதேவராயர்

    (d)

    வீர நரசிம்மர்

  13. சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

    (a)

    சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ ஆய்வு நூல்கள் சமய மோதல்களை விளக்கவில்லை.

    (b)

    பக்தி இயக்கங்கள் மன்னர்களின் ஆதரவைப் பெற்றிருந்தன.

    (c)

    பக்தி இயக்கம், விழாக்கள், சடங்குகள் ஆகியவற்றை எதிர்த்தது.

    (d)

    தமிழ் இலக்கிய மரபின் முக்கிய பகுதியியாக பக்தி இயக்கப் பாடல்கள் இடம் பெறவில்லை.

  14. ________ தனது ஆட்சியின் போது ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார்.

    (a)

    அக்பர் 

    (b)

    ஐஹாங்கீர் 

    (c)

    ஷாஜகான் 

    (d)

    ஒளரங்கசீப் 

  15. ______________என்ற இடத்தில் சிவாஜி கைப்பற்றியதன் மூலம் மராத்தியர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

    (a)

    ஜாவ்லி

    (b)

    ராஜகிரி

    (c)

    பிரதாப்கர்

    (d)

    சதாரா

  16. இந்தியாவில் போர்த்துகீசியரின் அரசியல் தலைமையிடம் _______________ ஆகும்.

    (a)

    கோவா

    (b)

    டையூ

    (c)

    டாமன்

    (d)

    சூரத்

  17. குற்றப் பழங்குடியினர் சட்டம் ______ ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.        

    (a)

    1871

    (b)

    1771

    (c)

    1671

    (d)

    1673

  18. 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது நானா சாகேப்பின் படைகளைத் தோற்கடித்தவர் ______.

    (a)

    ஹென்றி லாரன்ஸ் 

    (b)

    மேஜர் ஜெனரல் ஹோவ்லாக் 

    (c)

    சர் ஹீயூக் வீலர் 

    (d)

    ஜெனரல் நீல் 

  19. 73- கிளர்ச்சியாளர்கள் ______ ஆம் ஆண்டு மலேசியாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 

    (a)

    1801

    (b)

    1806

    (c)

    1804

    (d)

    1802

  20. ஆல்காட் என்பவர் அயோத்திதாசரை _________ நாட்டுக்கு அழைத்துச் சென்று மீட்புவாதிகளை சந்திக்கச் செய்தார்.

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    மலேசியா 

    (d)

    இலங்கை 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. இடை பழங்கற்காலம் நாகரீகம் பரவியிருந்த இடங்களை கூறுக.

  23. தொடக்க வேதகாலத்தில் பெண்களின் நிலையைக் கோடிட்டுக்காட்டுக 

  24. புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?

  25. குறிப்பு வரைக.பிந்துசாரர்

  26. யுவான் -சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?

  27. காந்தார கலையை பற்றி கூறுக.

  28. குப்தர்கால இளகிய இலக்கணம் யாவை?

  29. யுவான் - சுவாங் கன்னோசியை பற்றி கூறுவது யாது?

  30. நாமதேவர் எவ்வாறு பக்தி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்?

  31. இந்தியாவை பற்றிய பாபாரின் கருத்து என்ன என்பதை விவரி.

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.

  34. மௌரியர் காலத்தில் பரந்த அளவில் நடந்த ஆடை வணிகம் பற்றி விவரி.

  35. கிழார் - வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள் .

  36. காந்தாரக் கலையை பற்றி கூறுக?

  37. குப்தப் பேரரசின் நிர்வாகப் பிரிவுகளைக் கூறுக.

  38. சாளுக்கியர் ஆட்சியில் அரசகுல மகளிரின் முக்கியத்துவம்.

  39. இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவத்தை கூறுக.

  40. தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?

  41. நாயக்க முறை.

  42. சிவாஜியின் கடைசி நாட்கள் பற்றி விவரி.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
  44. இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி.

  45. தமிழ்நாட்டில் பெளத்த மதத்தின் செல்வாக்கை மதிப்பிடுக?

  46. பாடலிபுத்திர நகர அமைப்பைப் பற்றிக் கூறுக.

  47. “சங்க கால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமை யுரிமையே ஆகும்”. இக்கூற்றை ஆதரித்தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு.

  48. மத்தியத் தரைக் கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோமானிய அரசுமேலெழுந்த விதத்தை விவரி.

  49. குப்தர் கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகளின் வகை யாவை? அவற்றை விளக்குக.குப்தர்கால வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்:

  50. வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை ?

  51. பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.

  52. அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்

  53. சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.

  54. முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.

  55. பிரேஞ்சுக்காரர் களுக்கு ஏற்பட்ட போட்டியும், போர்களும் பற்றி விரிவாக எழுதுக.

  56. இருப்புப் பாதையும்  தபால் தந்தியும்  விரிவான  விடை தருக.    

  57. தமிழ் நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th History - Revision Model Question Paper 2 )

Write your Comment